விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.39.0-wmf.23 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/4 250 26288 1437039 1436692 2022-08-06T10:42:42Z Harsha Padmanabhan 11454 /* மேம்படுத்த வேண்டியவை */ மெய்ப்புத்திருத்தம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Harsha Padmanabhan" /></noinclude> கோவை, இளஞ்சேரன் கவிதைகள் "கவிஞர்கோ"கோவை. இளஞ்சேரன் (துணை இயக்குநர், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) இயற்றிய கவிதைகள் 1, 2 தொகுதிகளின் பிணைப்புப் பதிப்பு<noinclude></noinclude> smhrdlrbae4bwxesp0140p4o2v4580s பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/6 250 26290 1437040 1436698 2022-08-06T10:45:22Z Harsha Padmanabhan 11454 /* மேம்படுத்த வேண்டியவை */ திருத்தம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Harsha Padmanabhan" /></noinclude> கோவை இளஞ்சேரன் கவிதைகள் *தோரண வாயில்*<noinclude></noinclude> lr3m4voleuqpdn2kmba3vx7ho6c57xm பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/7 250 26291 1437041 1436697 2022-08-06T10:48:39Z Harsha Padmanabhan 11454 /* மேம்படுத்த வேண்டியவை */ திருத்தம் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Harsha Padmanabhan" /></noinclude>தோரணத்தில்: 1. அணிந்துரை 2. அணிந்துரை 3. பெருமக்கள் துாவிய பாராட்டு மலர்கள் 4. பொருளடக்கம் 5. கவிதை சுரப்பது ஏன்? 6. திறனாய்வு முன்னுரை<noinclude></noinclude> 6ex72xll3505ynpm7g71t2h6v7awcd7 பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/41 250 48195 1437004 546092 2022-08-05T15:55:21Z 2401:4900:4DF7:E454:EC69:8671:E27D:FA96 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="2401:4900:4DF7:E454:EC69:8671:E27D:FA96" /></noinclude>உழுபடையும் பொருபடையும் 33 வர்களின் புல்லிய வார்த்தைகளைக் காதிலே வாங்கவே கூடாது. எருதுகளைப் பாதுகாத்து நிலத்தை வளப் படுத்தும் குடியானவர்களின் பாரத்தை நீதான் தாங்க வேண்டும். அவர்களால்தான் நாடு வள்ம் பெறு கிறது : படை பலம் பெறுகிறது : அரசன் புகழ் பெறுகிறான். இதனை நன்கு உணரவேண்டும். குடிகளின் குறையை உணர்ந்து நீ பாதுகாப்பா யானுல் பகைவர்கள் யாவரும் உன் பெயரைக் கேட்டாலே நடுங்குவார்கள். காணிக்கையுடன் வந்து உன் காலில் விழுவார்கள். இதற்கு வழி உன் குடிமக்களை நீயே நேரில் கண்டு குறை கேட்டுப் பாதுகாப்பதுதான்." அரசன் முகத்தில் சோகம் தேங்கியிருந்தது. புலவர் பேச்சை முடித்தார். அவன் ஒருவாறு புன்னகையை வருவித்துக் கொண்டான். 'புலவரே, வணக்கம். உங்கள் பொன்னுரை என்னை விழிப்படையச் செய்தது. உங்கள் குறிப்பை உணர்ந்துகொண்டேன். நான் குடிமக்களைப் புறக்கணித்தேன். இனி அப்படிச் செய்யேன். அவர்களை அரசாங்கக் கடனிலிருந்து விடுதலை செய்துவிட்டேன். இதை முரசறைந்து தெரிவித்துவிடுகிறேன். சோழநாடு வளம் பெறட்டும். உங்களைப் போன்ற புலவர்களால் அறிவு வளமும் பெருகட்டும் ' என்று தழுதழுத்த குரலோடு சொன்னான். பழஞ்செய்க்கடனிலிருந்து குடி மக்கள் விடுதலை பெற்றனர். கோள்சொல்லும் குண்டுணிகளாகிய அமைச்சரினின்றும் அரசனும் விடுதலை பெற்றான். இந்த இரண்டுக்கும் காரணமாயிருந்த புலவர் வெள்ளைக்குடி நாகனார் பெருஞ் சிறப்புப் பெற்றார், 3<noinclude></noinclude> euo9qfwn4zijxlbd4vnvshe6n4cqd6z 1437005 1437004 2022-08-05T16:01:54Z 2401:4900:4DF7:E454:EC69:8671:E27D:FA96 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="2401:4900:4DF7:E454:EC69:8671:E27D:FA96" /></noinclude>உழுபடையும் பொருபடையும் 33 வர்களின் புல்லிய வார்த்தைகளைக் காதிலே வாங்கவே கூடாது. எருதுகளைப் பாதுகாத்து நிலத்தை வளப் படுத்தும் குடியானவர்களின் பாரத்தை நீதான் தாங்க வேண்டும். அவர்களால்தான் நாடு வளம் பெறுகிறது : படை பலம் பெறுகிறது : அரசன் புகழ் பெறுகிறான். இதனை நன்கு உணரவேண்டும். குடிகளின் குறையை உணர்ந்து நீ பாதுகாப்பாயானால் பகைவர்கள் யாவரும் உன் பெயரைக் கேட்டாலே நடுங்குவார்கள். காணிக்கையுடன் வந்து உன் காலில் விழுவார்கள். இதற்கு வழி உன் குடிமக்களை நீயே நேரில் கண்டு குறை கேட்டுப் பாதுகாப்பதுதான்." அரசன் முகத்தில் சோகம் தேங்கியிருந்தது. புலவர் பேச்சை முடித்தார். அவன் ஒருவாறு புன்னகையை வருவித்துக் கொண்டான்."புலவரே,வணக்கம். உங்கள் பொன்னுரை என்னை விழிப்படையச் செய்தது. உங்கள் குறிப்பை உணர்ந்துகொண்டேன். நான் குடிமக்களைப் புறக்கணித்தேன். இனி அப்படிச் செய்யேன். அவர்களை அரசாங்கக் கடனிலிருந்து விடுதலை செய்துவிட்டேன். இதை முரசறைந்து தெரிவித்துவிடுகிறேன். சோழநாடு வளம் பெறட்டும். உங்களைப் போன்ற புலவர்களால் அறிவு வளமும் பெருகட்டும்" என்று தழுதழுத்த குரலோடு சொன்னான். பழஞ்செய்க்கடனிலிருந்து குடிமக்கள் விடுதலை பெற்றனர். கோள்சொல்லும் குண்டுணிகளாகிய அமைச்சரினின்றும் அரசனும் விடுதலை பெற்றான். இந்த இரண்டுக்கும் காரணமாயிருந்த புலவர் வெள்ளைக்குடி நாகனார் பெருஞ் சிறப்புப் பெற்றார். 3<noinclude></noinclude> e7ip9p8nx92gfckvjwcj9tee17fzymx 1437007 1437005 2022-08-05T16:04:07Z 2401:4900:4DF7:E454:EC69:8671:E27D:FA96 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="2401:4900:4DF7:E454:EC69:8671:E27D:FA96" /></noinclude>உழுபடையும் பொருபடையும் 33 வர்களின் புல்லிய வார்த்தைகளைக் காதிலே வாங்கவே கூடாது. எருதுகளைப் பாதுகாத்து நிலத்தை வளப் படுத்தும் குடியானவர்களின் பாரத்தை நீதான் தாங்க வேண்டும். அவர்களால்தான் நாடு வளம் பெறுகிறது : படை பலம் பெறுகிறது : அரசன் புகழ் பெறுகிறான். இதனை நன்கு உணரவேண்டும். குடிகளின் குறையை உணர்ந்து நீ பாதுகாப்பாயானால் பகைவர்கள் யாவரும் உன் பெயரைக் கேட்டாலே நடுங்குவார்கள். காணிக்கையுடன் வந்து உன் காலில் விழுவார்கள். இதற்கு வழி உன் குடிமக்களை நீயே நேரில் கண்டு குறை கேட்டுப் பாதுகாப்பதுதான்." அரசன் முகத்தில் சோகம் தேங்கியிருந்தது. புலவர் பேச்சை முடித்தார். அவன் ஒருவாறு புன்னகையை வருவித்துக்கொண்டான்."புலவரே,வணக்கம். உங்கள் பொன்னுரை என்னை விழிப்படையச் செய்தது. உங்கள் குறிப்பை உணர்ந்துகொண்டேன். நான் குடிமக்களைப் புறக்கணித்தேன். இனி அப்படிச் செய்யேன். அவர்களை அரசாங்கக் கடனிலிருந்து விடுதலை செய்துவிட்டேன். இதை முரசறைந்து தெரிவித்துவிடுகிறேன். சோழநாடு வளம் பெறட்டும். உங்களைப் போன்ற புலவர்களால் அறிவு வளமும் பெருகட்டும்" என்று தழுதழுத்த குரலோடு சொன்னான். பழஞ்செய்க்கடனிலிருந்து குடிமக்கள் விடுதலை பெற்றனர். கோள்சொல்லும் குண்டுணிகளாகிய அமைச்சரினின்றும் அரசனும் விடுதலை பெற்றான். இந்த இரண்டுக்கும் காரணமாயிருந்த புலவர் வெள்ளைக்குடி நாகனார் பெருஞ் சிறப்புப் பெற்றார். 3<noinclude></noinclude> krreqq4cnthp0y1eg670s654t7ank2m பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/3 250 102583 1436978 924508 2022-08-05T13:46:22Z 2401:4900:22C3:EC4:69BC:99B9:54E3:AFBA /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="2401:4900:22C3:EC4:69BC:99B9:54E3:AFBA" /></noinclude>முதற் பதிப்பு : செப்டம்பர், 1962 விலை ரூ. 6:30 சுதந்திர நிலைய வெளியீடு-11 மாருதி பிரஸ், 83, பீட்டர்ஸ் ரோடு, சென்னை-14.<noinclude></noinclude> hgl9utsw69bqhy980ohcjvoeynjj1jm பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/3 250 183649 1436988 922444 2022-08-05T15:14:50Z AishwaryaVasudevan 11453 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="AishwaryaVasudevan" /></noinclude>ஹாமீம் பிஸ்மில்லாஹி “தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம்' செய்கு தம்பிப் பாவலரின் ஷம்சுத்தாசீன் கோவை பதிப்பாசிரியர் வரலாற்று ஆய்வாளர் செ. திவான் எம்.ஏ., எம்ஃபில்., வெளியிடுவோர் - பதிப்புரிமை V.S.T.தமுஸ்தாசிம் தரகனார் அறக்கட்டளை மேலப்பாளையம்.<noinclude></noinclude> 0hn21pg76k8uf5oa48jqmkeg9ushc2t பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/24 250 270798 1436980 1411592 2022-08-05T13:55:22Z 2401:4900:22C3:EC4:69BC:99B9:54E3:AFBA proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="202.129.197.138" /></noinclude>சுரதாகவிதைகள் முகில் அலைகளை அடுக்கி வைத்து அனுப்புதல் போல, வானில் கலையாத நடைபி ரிக்கும் ஈரத்தின் பரப்பே!.......... மழை எண்ணெயில் குளித்த கூந்தல் இழையென நீண்டு பெய்யும் வெண்மழை நீரே! விண்ணின் வியர்வையே வாழ்க!_ * * * வீணையின் நரம்புபோல் வீழும் மழைநீர் தாவரங் கட்கெல்லாம் தாய்ப்பா லாகும்! * * * மேகத்தின் சிரிப்பை மின்னலாம்! அந்த மேகம் வழிக்கும் வியர்வையே மழையாம்! புல்லுக்கும் பூண்டுக்கும் மழையே புணர்ச்சிநீர்! எள்ளுக்கும் கொள்ளுக்கும் அதுவே வளர்ச்சிநீர்!<noinclude></noinclude> 5qfseprdzxiw8bviwxtmtidmge35hco பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/27 250 375331 1436996 836221 2022-08-05T15:43:22Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>1 குடிப்பிறப்பு செட்டிநாடு கலைக்கோவில் பல எழுப்பிக் கல்வியறிவு செழித்தோங்கச் செய்துவரும் நாடு. கடவுட் கோவில்களும் கணக்கின்றிக் கட்டுவித்துப் பக்தியுணர்வைப் பரப்பிவரும் நாடு. இலக்கியங்களிற் பேசப்படும் பண்டைத் தமிழ் நாகரிகம் பட்டுப்போகாது, இன்றும் தளிர் விட்டு, அரும்பு விட்டு மணம் பரப்பிக் கொண்டிருக்கும் மாண்புடைய நாடு. அயல் நாகரிகங்களையும் ஆவலோடு தமதாக்கிக் கொண்டு, அப்படியே ஆரத் தழுவி அகங்குளிரும் நாடு. பதிப்பகங்கள் பல நிறுவிப் பயனும் நயனும் தரத்தக்க பண்பட்ட நூல்களை வெளியிட்டு, நாடுயரத் தொண்டு செய்யும் நாகரிகப் புதுமை சேரும் நாடு. தொடங்குவது எதுவாகினும் பஞ்சாங்கத்தின் துணை யோடு நாள் பார்த்துக் கோள் பார்த்து நாடித் தொழில் செய்யும் பழைமை கூறும் நாடு.<noinclude>சீ.-2</noinclude> 17rvuiavknlwak6ihh71wecc1b7r5f8 1436998 1436996 2022-08-05T15:44:40Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>1 குடிப்பிறப்பு செட்டிநாடு கலைக்கோவில் பல எழுப்பிக் கல்வியறிவு செழித்தோங்கச் செய்துவரும் நாடு. கடவுட் கோவில்களும் கணக்கின்றிக் கட்டுவித்துப் பக்தியுணர்வைப் பரப்பிவரும் நாடு. இலக்கியங்களிற் பேசப்படும் பண்டைத் தமிழ் நாகரிகம் பட்டுப்போகாது, இன்றும் தளிர் விட்டு, அரும்பு விட்டு மணம் பரப்பிக் கொண்டிருக்கும் மாண்புடைய நாடு. அயல் நாகரிகங்களையும் ஆவலோடு தமதாக்கிக் கொண்டு, அப்படியே ஆரத் தழுவி அகங்குளிரும் நாடு. பதிப்பகங்கள் பல நிறுவிப் பயனும் நயனும் தரத்தக்க பண்பட்ட நூல்களை வெளியிட்டு, நாடுயரத் தொண்டு செய்யும் நாகரிகப் புதுமை சேரும் நாடு. தொடங்குவது எதுவாகினும் பஞ்சாங்கத்தின் துணை யோடு நாள் பார்த்துக் கோள் பார்த்து நாடித் தொழில் செய்யும் பழைமை கூறும் நாடு.<noinclude>சீ.-2</noinclude> cdxjr88vayr8ci5xlxqg0cyjz7glpan பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/28 250 375332 1437015 836222 2022-08-05T16:32:09Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />18 சீர்திருத்தச் செம்மல்</noinclude>அண்டை மாநிலத்தார் அயர்ந்து, வியந்து பாராட்டும் அளவிற்கு விருந்தோம்பல் பண்பிலே வீறுகொண்டு நிற்கும் நாடு. அறப்பணிகளா? பிற பொதுப்பணிகளா? எதுவாகினும் அளந்து பார்க்காது, அள்ளியள்ளி வழங்கி, ஆராப்புகழ் கொண்ட நாடு. கணக்கும் வழக்கும், இரு கண்களாகக் கருதிக் கடைப்பிடித் தொழுகும் நாடு. ஆம்; அதன் பெயர்தான் செட்டிநாடு. நகரத்தார் (செட்டி யார்) மிகுதியாக வாழ்வதால் அப்பெயர் பெற்றுச் சிறப்புற்று விளங்குகிறது அது. இந்தியாவில் மாநிலங்கள் பலவிருப்பினும், தமிழ் மாநிலம் ஒன்றுதான் ‘தமிழ்நாடு’ எனச் சிறப்புப் பெயர் பெற்றுத் திகழ்கிறது. அது போலவே தமிழ் நாட்டிற் பல்வேறினத்தார் மிக்கு வாழும் மாவட்டங்கள் பலவிருப்பினும், நகரத்தார் மிக்கு வாழும் பகுதி மட்டுமே ‘செட்டிநாடு’ எனச் சிறப்பித்துப் பேசப்படுகிறது. பல்வேறு சிறப்புகளுடன் ‘நாடு’ என்றழைக்கப்படும் சிறப்புங் கொண்டு மிளிர்கிறது இப்பகுதி. இத்தகு சிறப்பு வாய்ந்த செட்டிநாட்டில் கானாடு காத்தான் என்ற பெயர் கொண்ட சிற்றூர் ஒன்றுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு வருவோர், கானாடு காத்தான் என்ற இவ்வூரைக் கடந்துதான் வருதல் வேண்டும். இது சிற்றூராகினும், இந்தியா முழுமையும் தம் பெயர் விளங்கச் செய்த, வெள்ளையரசிடம் செல்வாக்<noinclude></noinclude> izeemqr8bh90njx4krqh3bteosvpjm1 பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/29 250 375333 1437016 836223 2022-08-05T16:35:49Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 19</noinclude> குப் பெற்றிருந்த செட்டி நாட்டரசர் அண்ணாமலையாரை ஈன்றெடுத்த பேரூரும் ஆகும். அவ்வூரில் வயி. சுப்பிரமணியன் செட்டியார் என்ற பெருமகனார் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பர்மாவிலும் மலேசியாவிலும் கடைகள் இருந்தன. செல்வச் செழிப்பு மிக்கவர். அவர், தம் இல்லக்கிழத்தியாகிய அழகம்மையாச்சி யுடன் ஊரார் போற்றும் வண்ணம் இல்லறம் நடத்தி வந்தார். இருவரும் அறவோர்ப் பேணல், விருந்தெதிர் கோடல் முதலிய இல்லறப் பாங்குகள் பொருந்தப் பத்தி நெறியறிந்து, அதனைக் கடைப்பிடித்து ஒழுகி வரும் நாளில் முதலில் ஒரு பெண் மகவை ஈன்றெடுத்தனர். அடுத்து ஓர் ஆண்மகவைப் பெற்றெடுக்கும் பேறு பெற்றனர். பின்னர் பெண்மக்கள் இருவரைப் பெற்றெடுத்தனர். இரண்டாவதாகப் பிறந்த அந்த ஆண் மகவுக்குச் சண்முகம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். மக்களைச் செல்வச் செழிப்புடன் வளர்த்து வந்தனர். அக்கால வழக்கப்படி திண்ணைப் பள்ளிக்கூடத்திற் சண்முகம் சேர்க்கப்பட்டார். தமிழ், நெடுங்கணக்கு, பிறைவாய் சுவடி, எண்சுவடி, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, நன்னெறி முதலியன கற்றுத் தேர்ந்தார். தமிழ் நெடுங்கணக்கை மணலிலேதான் முறை வைத்து எழுதிப் பழகுதல் வேண்டும். பின்னர் பனை யோலையில் எழுத்தாணியால் எழுதப் பழகுதல் வேண்டும். எழுத்துகள் முத்து முத்தாக இருக்கும்.<noinclude></noinclude> dtys6ougbj0ou9f4pnqj97l4s7ljj4z பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/30 250 375334 1437018 836225 2022-08-05T16:40:40Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />20 சீர்திருத்தச் செம்மல்</noinclude>எண்சுவடி முதலானவற்றை மனப்பாடம் செய்தல் வேண்டும். மனப்பாடம் செய்யும் பழக்கத்தால் அக்கால மாணவர்கள் நல்ல நினைவாற்றல் பெற்று விளங்கினர். இத்திண்ணைப் பள்ளியிற் சேர்க்கப்பட்ட நம் சண்முகம் எழுது வதிலும் மனப்பாடம் செய்வதிலும் சிறந்து விளங்கினார். ஆசிரியரால் பாராட்டப் பெறும் நன்மாணாக்கராகத் திகழ்ந்தார். குல வழக்கம் அக்காலச் செட்டி மக்களிடம் ஒரு வழக்கம் இருந்து வந்தது. ‘படிப்பதற்கென்று ஒரு சாதியிருக்கிறது. நம்குலத் தொழிலாகிய வட்டித் தொழில் செய்வது தான் நம் குல வழக்கம்’ என்று கருதித் திண்ணைப் பள்ளிக் கூடப் படிப் போடு நிறுத்திவிடுவர். சிறு பருவத்திலேயே இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா போன்ற கடல் கடந்த நாடுகளிலுள்ள வட்டிக் கடைகளுக்கு அனுப்பி வைப்பர். அக்குல வழக்கத்தின்படி நம் சண்முகத்தையும் திண்ணைப் பள்ளிப் படிப்போடு நிறுத்தி விட்டனர். திண்ணைப் பள்ளியளவில் சண்முகம் நிறுத்தப் பட்டாலும் சண்முகம் செட்டியார் என்றான பின்னர் ஆங்கிலத்தில் நன்கு பேசுமளவிற்கு ஆற்றல் பெற்றார். தமிழ் இலக்கியங்களிலும் ஈடுபாடு கொண்டு விளங்கினார். தன் முயற்சியாலும், சிங்கப்பூர் மலேசியா பகுதிகளில் வாழ்ந்து வந்தமையாலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் திறமை பெற்று விளங்கினார்.<noinclude></noinclude> r6c5d7q8l582ko2rtulq6cbw69biu24 பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/31 250 375335 1437019 836226 2022-08-05T16:49:36Z வா.அத்தீபா ஷப்ரீன் 11191 /* மேம்படுத்த வேண்டியவை */ பிழை இல்லை proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 21</noinclude>திருமணமும் குடும்பப் பொறுப்பும் செட்டிநாட்டு வழக்கப்படி சண்முகத்துக்குப் பத்தாம் வயதி லேயே இலக்குமி (லெட்சுமி) என்னும் குலமகளாரைத் திருமணம் செய்து வைத்தனர். இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும்போது, சண்முகம் 17 அல்லது 18 வயதுற்ற நிலையில், இவர் தம் தந்தையார் வயி. சுப்பிரமணியன் செட்டியார் திடீரென இயற்கையெய்தி விட்டார். அதனால் குடும்பப் பொறுப்பு சண்முகனார் கைக்கு வந்தது. ஆயினும் பொறுப்பேற்கத்தக்க பருவம் எய்திலர். இச்சமயத்தில் இவர் இளைஞராயிருந்தமையால் மலேயா முதலிய ஊர்களில் நடந்து வந்த வணிகத்திற் கூட்டு வைத்திருந்த வர்கள் இவரிடம் ஒரு தொகையைக் கொடுத்துப் பங்கைப் பிரித்துக் கொண்டனர். சண்முகத்துக்குப் பதினெட்டு வயதாயிற்று. தக்க பருவம் அடைந்து விட்டார். வெளிநாட்டில் நடத்தி வந்த வணிகத்தில் தமக்குச் சேரவேண்டிய பங்குத் தொகை சரியாக வந்து சேர வில்லை; நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை அறிந்து கொண்டார். தமது பதினெட்டாம் வயதில் வழக்குத் தொடர்ந்தார். அன்று தொடங்கிய வழக்கு, அவர்தம் இறுதிக் காலம் வரை தீராமல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. இந்தியாவில் தேவகோட்டை சென்னை, தில்லி முதலிய ஊர்களிலும், மலேயாவில் மலாக்காவிலும் சிங்கப்பூரிலும் வழக்குகள் நடைபெற்றுப் பின்னர் இலண்டன் “பிரிவிக் கவுன்சில்” வரை நீடித்து நடந்தன. ஆறிடங்களில் நடந்த வழக்குகளில் நான்கில் வெற்றித் தீர்ப்பு, ஒரே ஒருமுறை எதிர்த்தரப்புக்கு<noinclude></noinclude> 0zv6ej4divxjwm0sl1898if3zqfpcu0 1. சிவஞானபோதம்- சூத்திரம்- 01 இன் உரை 0 413824 1437036 1436928 2022-08-06T05:34:50Z Meykandan 544 /* பாஞ்சராத்திர மதமும் மறுப்பும் */ wikitext text/x-wiki ==மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்== ==1.பொது அதிகாரம்== ===பிரமாணவியல்=== ==சூத்திரம்-01 இன் மாபாடிய உரை== ===உரையாசிரியர்: மாதவச் சிவஞானயோகிகள்=== ==சூத்திரம்- 01== {{gap}}ஈண்டு வடமொழிச் சிவஞானபோதத்துள் கூறியவாறே '''பொது, உண்மை''' என்று இரண்டதிகாரமாகப் பகுத்துக்கொண்டு, '''பிரமாணம் இலக்கணம் சாதனம் பயன்''' என நான்கு திறத்தாற் பொருள் இயல்பு உரைப்பான் எடுத்துக்கொண்ட ஆசிரியர், அவற்றுள் முப்பொருளின் வைத்து, முதற்கண் '''பதி உண்மை'''க்குப் பிரமாணம் கூறும் முதற்சூத்திரத்துக்கு வார்த்திகமாகிய பொழிப்பு உரைப்பான் புகுந்து, சூத்திரத்தை மொழிபெயர்த்து அருளிச் செய்கின்றார்:- <poem> <b>அவனவ ளதுவெனு மவைமூ வினைமையிற்|| <b><font color="#FF8040">அவன் அவள் அது எனும் அவை மூ வினைமையின்</font></b> றோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதா|| <b><font color="#FF8040">தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்</font></b> மந்த மாதி யென்மனார் புலவர். || <b><font color="#FF8040">அந்தம் ஆதி என்மனார் புலவர். </font></b> </b></poem> - எனவரும். {{gap}}இங்ஙனம் பாடத்தை மொழிபெயர்த்துக்கொண்டு, என்பது சூத்திரம் எனக்காட்டி, இனி அதன் கருத்துரைக்கின்றார்:- {{gap}}'''என்பது சூத்திரம்; என்னுதலிற்றோவெனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாகவுடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நுதலிற்று''' -எனவரும். ===ஐவகை சங்காரம்:=== {{gap}}சங்காரம் ஐவகைப்படும்; அவற்றுள் முதலாவது, நிவிர்த்திகலையில் அடங்கிய தத்துவ புவனங்களின் சங்காரம்; இரண்டாவது,பிரதிட்டாகலையில் அடங்கிய தத்துவ புவனங்களின் சங்காரம்; மூன்றாவது, வித்தியாகலையில் அடங்கிய தத்துவ புவனங்களின் சங்காரம்; நான்காவது, சாத்திகலையில் அடங்கிய தத்துவ புவனங்களின் சங்காரம்; இறுதியது, சாந்தியதீதகலையில் அடங்கிய தத்துவ புவனங்களின் சங்காரம். {{gap}}அவற்றுள், ஈண்டைக்கு ஏற்புடையது இறுதிக்கண்ணதாகலின், ஈண்டுச் '''சங்காரகாரணன்''' என்றது, சுத்தமாயா புவனாந்தம் சங்கரிக்குஞ் சங்கார காரணனாகிய பரமசிவனை; அயன் மாலொடுங்கூடக் குணதத்துவத்தின் வைகிப் பிரகிருதிபுவனாந்தஞ் சங்கரிக்குங் குணிருத்திரனை அன்று என உணர்க. என்னை? அவன் பிரகிருதியின் மேற்பட்ட புவனங்கட்குச் சங்காரகாரணன் அன்மையானும், பரமசிவன் இலயம் போகம் அதிகாரம் என்னும் மூன்று அவத்தையினும் முறையே அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்று திருமேனி கொண்டு, சத்தன் உத்தியுத்தன் பிரவிருத்தன் எனவும், சிவன் சதாசிவன் மகேசன் எனவும் பெயர்பெற்று நிற்பன் என்றும், இங்ஙனம் தொழிலான் வேறுபட்டதன்றிப் பொருளான் வேறுபாடில்லை யென்றும், பசுவர்க்கத்திற் பிரளயாகலரில் பக்குவமுடையவன் சீகண்ட ருத்திரன் என்றுஞ் சைவ ஆகமங்கள் எல்லாம் ஓதுதலின், மகேசுர மூர்த்தி இறுவாயான திருமேனியே பரமசிவனுக்குச் சுதந்திர வடிவம், ஏனையவை அல்லவென்பது பெறப்படுதலானும் என்பது; இவ்வேறுபாடு உணர்தற்கன்றே பொதுப்படச் சங்காரகாரணனை என்றொழியாது '''சங்காரகாரணனாயுள்ள முதலையே''' என விதந்து ஓதியதூஉமென்க. {{gap}}இவ்வேறுபாடு உணராது மகாருத்திரனாகிய பரமசிவனைக் குணிருத்திரனாக வைத்து எண்ணுவோரை நோக்கி, {{block_center|<poem> “நம்மவ ரவரே, மூவரன் றேயெம் பிரானொடு மெண்ணிவிண் ணாண்டுமண்மேல் தேவரென் றேயிறு மாந்தென்ன பாவந் திரிதவரே”</poem>}} {{Right|<small>(திருவாசகம், திருச்சதகம், 4)</small>}} - என வாதவூரடிகள் இரங்கிக் கூறிய திருவாக்கும் அறிக. இன்னும், {{block_center|<poem>“தேவரில் ஒருவன் என்பர் திருவுருச் சிவனைத் தேவர் மூவராய் நின்றது ஓரார்”</poem>}} {{Right|<small>(சிவஞான சித்தியார், 1-ஆம் சூத்திரம், 49)</small>}} - எனவும், {{block_center|<poem>“தேவராயும் அசுரராயும் சித்தர்செழு மறைசேர் நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும் மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும் மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே”</poem>}} {{Right|<small>(சம்பந்தர் தேவாரம், திருமுதுகுன்றம், பழந்தக்கராகம், 1)</small>}} -எனவும், {{block_center|<poem>“வரியாய மலரானும் வையந் தன்னை யுரிதாய வளந்தானும் உள்ளு தற்குஅங்கு அரியானும் அறியாத கள்ளின் மேயான் பெரியான்என்(ற) அறிவார்கள் பேசு வோரே.”</poem>}} {{Right|<small>(சம்பந்தர் தேவாரம், திருக்கள்ளில், 9)</small>}} -எனவும், {{block_center|<poem>“மாவை உரித்ததள் கொண்டங்கம் அணிந்தவனை வஞ்சர் மனத்திறையு நெஞ்சணு காதவனை மூவருருத் தனதா மூல முதற்கருவை”</poem>}} {{Right|<small>(சுந்தரர் தேவாரம், திருக்கானப்பேர், 7)</small>}} -எனவும், {{block_center|<poem>“படைத்தளித் தழிப்ப மும்மூர்த்திக ளாயினை”</poem>}} {{Right|<small>(சம்பந்தர் தேவாரம், திருப்பிரமபுரம், திருவெழுகூற்றிருக்கை, 4)</small>}} -எனவும், {{block_center|<poem>“தேவர்கோ அறியாத தேவதேவன் செழும்பொழில்கள் பயந்துகாத்து அழிக்கும் மற்றை மூவர்கோ னாய்நின்ற முதல்வன்”</poem>}} {{Right|<small>(திருவாசகம், திருச்சதகம், 30)</small>}} -எனவும், {{block_center|<poem>“முந்து நடுவு முடிவு மாகிய மூவர் அறியாச் சிந்துரச் சேவடி யானை”</poem>}} {{Right|{{smaller|(திருவாசகம், குயிற்பத்து, 5.)}}}} - எனவும், {{block_center|<poem>“முந்திய முதனடு விறுதியு மானாய் மூவரு மறிகிலர்”</poem>}}{{Right|{{smaller|(திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி, 8.)}} }} - எனவும், {{block_center|<poem>“அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான் அரனாய் அழிப்பவனுத் தானே”</poem>}} {{Right|{{smaller|(திருக்கைலாய ஞானவுலா, 9.)}} }} - எனவும், {{block_center|<poem>“வீரனயனரி . . . . யாரு மறியா வகையெங்களீசர் பரிசுகளே”</poem>}} {{Right|{{smaller|(பொன்வண்ணத்தந்தாதி, 65.)}}}} -எனவும், வரும் திருவாக்குக்களானும் ஓர்ந்துணர்க. இதுவே சுருதி, மிருதி, புராணம், இதிகாசம் எல்லாவற்றிற்குங் கருத்தென்பது, சிவதத்துவ விவேகமுடையார் {{smaller|(13-ஆம் சுலோகம்)}} “குணாதீதன்” என்னுஞ் சுலோகத்திற் கடாவிடைகளான் விரித்துக்காட்டியவாற்றான் அறிக. {{gap}}இங்ஙனமாயினும், சீகண்டருத்திரன் அயன்மால்போலச் சகலரின்றிப் பிரளயாகலரிற் பக்குவம் உடையோனாய்க் கட்டுநீங்கி முத்திபெற்ற கடவுளாகலானும், பரமசிவனுக்குரிய எல்லாப் பெயர்களும் வடிவமுந் தொழிலும் பெற்றுடையவனாகலானும், சைவாகமங்களை அறிவுறுக்குங் குரவனாகலானும், அயன்மாலிருவர்க்கும் மேலாய்ச், சைவத்தின் எய்திச் சமயதீக்கை பெற்றோரால் வழிபடப்பபடும் கடவுளாயினான் என்க. {{gap}}இங்ஙனம் கருத்துரைத்துக் கண்ணழித்துரைப்பான் புகுந்து ஈண்டு முதற்கண் உரைவகையாமாறு உணர்த்துகின்றார்:- {{c|<b>இதன் பொழிப்பு உரைத்துக் கொள்க</b>}} -எனவரும். ===கண்ணழித்துரை:=== {{gap}}இச்சூத்திரத்தின் பிண்டப்பொருள் முன்னர்க் கண்ணழித்துரைக்கும் உரைபற்றி உரைத்துக்கொள்க என்றவாறு. எனவே, பொழிப்புரை இங்ஙனம் இருவகைப்படும். அவற்றுள், கண்ணழித்துரைக்கும் பொழிப்புரை மாத்திரையே யாம் ஈண்டு உரைக்கின்றாம். பிண்டமாகக் கொண்டு உரைக்கும் பொழிப்புரை இதுபற்றி உணர்ந்துகோடல் எளிதாம் ஆகலின், அஃது யாம் உரைக்கின்றலம் என மாணாக்கர்க்கு அறிவுறுத்தவாறாயிற்று. {{gap}}இங்ஙனம் பொழிப்புரை இருவகைப்படும் என்பது, {{block_center|<poem>“பொழிப்பெனப்படுவது பொருந்திய பொருளைப் பிண்டமாகக் கொண்டுரைப் பதுவே” {{smaller|(திவாகரம், ஒலிபற்றிய பெயர்த்தொகுதி, சூத்திரம்,90.)}}</poem>}}- எனவும், {{block_center|<poem>“பாடங் கண்ணழி வுதாரண மென்றிவை நாடிற் றிரிபில வாகுதல் பொழிப்பே” {{smaller|(தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம், நச்சினார்க்கினியருரை மேற்கோள், பக்கம், 12.)}}</poem>}} -எனவும் ஓதியவற்றான் அறிக. {{gap}}இஃது ஏனைச் சூத்திரங்களினும் உய்த்துரைத்தற் பொருட்டு முன்வைக்கப்பட்டது. பிண்டப்பொருளெனினும் பதப்பொருள் எனினும் ஒக்கும். {{gap}}'''உரைத்துக்கொள்க''' என்புழிக் ‘கொள்’ என்பது, தற்பொருட்டுப் பொருட்கண் வந்த விகுதியாய்ப், பகுதியோடியைதற்குரிய துச் சாரியை பெற்று உரைத்துக்கொள் என நின்றவழி, அதுவும் பகுதித்தன்மைப்பட்டு மேல்வரும் வியங்கோள் விகுதி ஏற்றுத் தற்பொருட்டுப் பொருள் இனிது விளங்குதற்பொருட்டு உரைக்க என்னும் பொருட்டாய்நின்றது. இது சூத்திரவிருத்தியுள் உரைத்தாம். {{smaller|தொல்காப்பிய சூத்திரவிருத்தி, 41, 42-ஆம் பக்கம்).}} ஆண்டுக் காண்க. {{gap}}இங்ஙனம் ஆசிரியர் ஆணைதந்தமையிற் கண்ணழித்துரை பற்றிச் சூத்திரத்திற்குப் பதப்பொருள் கூறுதும். <b><font color="#FF8040"></font></b> {{gap}}<poem><b>{{c|“அவன் அவள் அது எனும் அவை மூ வினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்”}}</b></poem> -என்பது, ஆண் பெண் அலி என்றாற் போலும் உலகத்தொகுதி, தோற்றம் நிலை இறுதி என்னும் முத்தொழில் உடைமையான், ஒருவனால் தோற்றப்பட்டு நின்று உள்ளதேயாம். அஃதேல் அஃது யாவனின் உளதாம் எனின், தான் ஒடுங்குதற்கு நிலைக்களமான கடவுளினின்றும் உளதாம். ஒடுங்கியவாறே ஒழியாது மீள உளதாவது எதனால் எனின், சகசமான ஆணவமலந் தீர்ந்து ஒடுங்காமையான் உளதாம். இங்ஙனமாகலின், சங்காரத் தொழிலைச் செய்யுங் கடவுளே முதற்கடவுள் என்று கூறுவர் அறிவுடையோர் என்றவாறு. {{gap}}'''எனும்''' என்பது இடைச்சொல்லடியாய்ப் பிறந்த பெயரெச்சமாய், இவ்வாறு என்னும் பொருள்குறித்து நின்றது. வடமொழிச் சூத்திரத்தில் “ஆதி” என்றதும் அப்பொருட்டு. '''அவை''' என்பது தொகுதி; அஃறிணைப் பன்மைச் சுட்டுப் பெயரெனக் கொள்ளின், '''உள''' எனப் பிரித்துப் பயனிலையாக்கித் '''தாம்''' என்பது அசையாகக் கொள்க. '''வினைமை''' - வினையுடைமை. உடைமை - உடைத்தாந்தன்மை. {{gap}}அவ்வக்காலத்தன்றி மூவினையும் ஒருகாலத்துப்படுதல் கண்டிலம் என்பாரை நோக்கித் தன்மையின் வைத்து ஓதினார். {{gap}}'''தோற்றிய''' எனப் பிறவினை வாய்பாட்டான் ஓதுதலின், அதற்குரிய வினைமுதல் வருவித்து உரைக்கப்பட்டது.. '''தோற்றிய''' என்புழிப் படுசொல் தொக்குநின்றது, “இல்வாழ்வான் என்பான்” {{smaller|திருக்குறள், 5-ஆம் அதிகாரம், இல்வாழ்க்கை, 1.)}}என்புழிப்போல. திதிப் படும் உலகத்தைத் '''திதி''' எனவும், அந்தத்தைச் செய்யும் கடவுளை '''அந்தம்''' எனவும் உபசரித்தார். {{gap}}காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், '''தோற்றிய திதியே யொடுங்கி உளதாம்''' என உலகின்மேல் வைத்துக் கூறினார். '''சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம்''' என்றதும் இக்கருத்தே பற்றி என்க. “தோற்றுவான் ஒருவன் உளன்; அவன் ஒடுக்கி உளதாக்குவன்” எனக் கடவுளின் மேல் வைத்து ஓதிய வடமொழிச் சூத்திரத்திற்கும் தாற்பரியம் இதுவே எனக் கொள்க. {{gap}} '''ஏ'''காரம் தேற்றம். '''ஒடுங்கி''' என்பது பெயர். '''ஒடுங்கி''' என்புழி இன்னுருபும், '''மலத்து''' என்புழி ஆன் உருபுந் தொக்கு நின்றன. '''ஆம்''' என்பதனை முன்னும் கூட்டுக. '''என்மனார்''' என்பது, செய்யுண்முடிபாயதோர் ஆரீற்று முற்றுச்சொல். மன் எதிர்கால இடைநிலை. அது “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே” {{smaller|(தொல்காப்பியம், சொல்லதிகாரம், கிளவியாக்கம், 1.)}} என்னும் சூத்திரத்துச் '''சேனாவரையர்''' உரையானும் அறிக. {{gap}}ஈண்டுப் '''புலவர்''' என்றது அளவையின் இயல்பு உணர்ந்தோரை. ===அதிகரணம்=== {{gap}} இதனுள் '''அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின்''' என்பது ஓர் அதிகரணம்; <b>தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்</b> என்பது ஓர் அதிகரணம்; <b>அந்தமாதி</b> என்பது ஓர் அதிகரணம்; ஆக மூன்று அதிகரணத்தது இச்சூத்திரம் என்று உணர்க. இம்மூன்றும் ஒன்றற்கொன்று முறையே ஏதுவும் பயனுமாய் ஒரு பொருள்மேல் வருதலின், ஒரு சூத்திரத்தாற் கூறினார். வருஞ்சூத்திரங்களினும் இவ்வாறே கண்டுகொள்க. {{gap}}தன்னாற் கூறப்படும் <sup>¶</sup>பொருளும், அதன்கண் ஐயப்பாடும், அதற்குப் பிறர்கூறும் பக்கமும், அதனை மறுத்துக் கூறும் சித்தாந்தத் துணிபும், இயைபும் என்னும் இவற்றிற்கு நிலைக்களம் ஈண்டு அதிகரணம் எனப்படும். இவற்றுள் இயைபு, நூலியைபும் அதிகாரவியைபும், ஓத்து இயைபும், பாதவியைபும், அதிகரணவியைபும் என ஐவகைப்படும். அவையெல்லாம் ஆண்டாண்டுக் காட்டுதும். <sup>¶</sup>{{smaller|இவற்றை வடநூலார் முறையே விடயம், சம்சயம், பூர்வபக்கம், சித்தாந்த நிர்ணயம், சங்கதி என்பர்; சீகண்டபாடியம் முதலதிகரண ஆரம்பத்தினும் காண்க.}} {{rule|10em|align=}} {{center|{{X-larger|<b>முதல் அதிகரணம்</b>}}}} ===முதல் அதிகரணம்=== {{gap}}இம் முதல் அதிகரணத்தாற் கூறப்படும் பொருளாவது, மேற் கருத்தாவின் உண்மை சாதித்தற் பொருட்டு உலகிற்கு முத்தொழில் உண்மை சாதித்தலாம். {{gap}} அதற்கு அவை உளவோ இலவோ என்று இரட்டுறத் தோன்றும் ஐயப்பாடு. {{gap}} ஈண்டு மீமாஞ்சை நூலாரும், உலகாயத நூலாரும், உலகம் தோன்றுதலும் அழிதலும் இன்றி என்றும் இவ்வாறே நிலைபெறுவதாகலின், உலகம் காரியப் பொருள் ஆதல் இல்லை எனவும், எனவே இதுகொண்டு கருத்தாவின் உண்மை சாதித்தல் “முயல் கோடுடைத்து, ஆன் வயிற்றுப் பிறத்தலான்” என்பதனோடு ஒக்கும் எனவும் கூறுவர். {{gap}}அவருள் மீமாஞ்சை நூலார் கூறும் மாறாவது:- உலகம் தோன்றி நின்று அழியும் என்பது காட்சி அளவையாற் பெறப்படுவதும் அன்று; அவிநாபாவம் ஆகிய ஏதுக் காணாமையின், வழியளவையாற் பெறப்படுவதும் அன்று; வேதத்துள் கூறப்படுதலாற் பெறுதும் எனின், வேதத்தில் “நடாத்துக,” “நிறுவுக,” “செய்க,” என்றாற்போலத் தொழிற்படுத்தும் வாக்கியங்களே சொற்பொருள் உணரும் வேட்கையாளர்க்கு அங்ஙனம் ஏவுவோர் சொற்கேட்டு இயற்றும் தொழிலானே அவ்வச் சொற் பொருள் உணர நிற்றலிற் பிரமாணமாம்; அவ்வாறன்றிப் பொருள் இயல்பு கூறும் வாக்கியங்களாற் சொற்பொருள் உணரப்படாமையின் அவை பிரமாணம் ஆகாவாயினும், தொழிற்படுத்தும் வாக்கியங்கட்கு யாதானும் ஒருவாற்றான் உபகாரம் ஆதலுடைமையான் உபசரித்துப் பிரமாணமெனக் கொள்ளப்படும் ஆகலான், அது பற்றி உரையளவையாற் பெறப்படும் என்பதும் இன்று; ஆகலான், உலகிற்கு முத்தொழில் உண்மை பெறப்படாது என்பதாம். {{gap}}இவ்வாறு ஆசங்கை நிகழ்ந்தவழி, அதனை நீக்குதற்குக் கண்ணழித்து எடுத்துக்கொண்ட மேற்கோள்:- {{gap}}<b>ஈண்டு, உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்து என்றது</b> எனவரும். {{gap}}'''ஈண்டு''' என்றது, இவ்வதிகரணம் மூன்றனுள்வைத்து முதற்கண் என்பதாம். {{gap}} அவயவப் பகுப்பு உடைமையான் முத்தொழில் உடைமை துணியப்படும் என்று உணர்த்துவார் '''ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம்''' எனச் சூத்திரத்தின் ஓதியவாறே உடம்பொடுபுணர்த்து ஓதினார். எனவே, “உலகம் தோன்றி நின்று அழியும், அவன் அவள் அது என்று இவ்வாறு பகுக்கப்படும் அவயவப் பகுப்பு உடைமையின், ஆடைபோலும்” என்னும் அநுமானத்தானே மூவினையுடைமை துணியப்படும் என்பதாயிற்று. {{gap}}சொற்பொருள் உணர்ச்சி, தொழிற்படுத்தும் சொன்மாத்திரையானே துணியப்படும் என்னும் வரையறை இன்றித், தாய் தந்தை முதலியோர் இச்சொற்கு இதுபொருள், இச்சொற்கு இதுபொருள்எனத் தெரிவித்தலானும், நிகண்டு நூல் முதலியவற்றானும் துணியப்படும் ஆகலின், அதுபற்றிப் பொருளியல்பு கூறும் வாக்கியங்கள் பிரமாணம் அல்ல என்றல் பொருந்தாமையின், உரையளவையே பிரமாணமென்று ஓத அமையும்; அமையுமாயினும், அவர் மதமே பற்றி அவரை மறுத்தற் பொருட்டு மூவினையுடைமையும் வழியளவையாற் சாதித்தார். {{gap}}ஈண்டு அவயவம் என்றது, ஆடையின் ஏகதேசமாய்த் தனித்தனிப் பிரிக்கப்படும் நூல்போல ஒரு பொருளின் ஏகதேசமாய்த் தனித்தனி பிரிக்கப்படும் தகுதியுடையவற்றை. நிலம் மலை கடல் முதலியவற்றில் ஏகதேசமாகிய மண் சிலை நீர் முதலியன தொடுதல் போழ்தல் முகத்தல் முதலிய தொழில்களானே தனித்தனி பிரித்தற்குரியவாமாறு காண்க. கலை ஆணவமலத்தின் ஏகதேசத்தை நீக்கிக் கிரியையை எழுப்பும் எனவும், பரமசிவன் சுத்தமாயையின் ஏகதேசத்தைக் கலக்கிச் சுத்த தத்துவங்களைத் தோற்றுவிப்பன் எனவும், அநந்த தேவன் அசுத்த மாயையின் ஏகதேசத்தைக் கலக்கிக் கலை முதலியவற்றைத் தோற்றுவிப்பன் எனவும் வழங்குவது பற்றி அவயவம் எனப்படா; வேறு வேறு பிரித்தற்கு உரியன அன்மையின். இவற்றை நீக்குதற்கன்றே ஒருபொருளின் ஏகதேசம் என்றொழியாது, வேறுவேறு பிரித்தற்குரியன அவயவம் என்றதூஉம் என்க. {{gap}}இங்ஙனமாயினும், தார்க்கிகர் மதத்திற் பரமாணுக்கள் அவயவம் உடையன அல்லவாகலான் அவை தோன்றி நின்று அழியும் என்பது பெறப்படாமையின், அவயவமுடைமை காரியப்பாட்டிற்கு ஏதுவென்றல் யாண்டும் செல்லாதால் எனின், - அற்றன்று; அவன் என்றும், அவள் என்றும், அது என்றும் இவ்வாறு சடமுமாய்ப் பலவுமாய் உரைக்கப்படுவனவெல்லாம் தோன்றிநின்று அழியும் என்பது கருத்தாகக் கொள்க. {{gap}} “இன்னுழை கதிரின் துன்னணு”<sup>★</sup>க்களே பரமாணுக்களாம். அவற்றை மும்மையணுவெனக் கொண்டு அவற்றினும் நுண்ணியவாய்க் கட்புலன் ஆகாதன உள என்றற்குப் பிரமாணம் இன்மையின், பரமாணுக்களும் அவயவம் உடையனவேயாம். அல்லவெனக் கொள்ளினும், அவை சடமுமாய்ப் பலவுமாகலாற் தோன்றி நின்று அழிவனவேயாம் என்க. ஆணவமலம் சடமாயினும் பலவன்று; ஆன்மாக்கள் பலவாயினும் சடமல்ல; ஆகலான் அவற்றின்கட் செல்லாமை அறிக. <sup>★</sup> {{smaller|திருவாசகம், திருவண்டப்பகுதி, 5.}} {{gap}}இங்ஙனமாயினும், மாயை சுத்தமாயை அசுத்தமாயை என இரண்டாய்ச் சடமும் ஆகலான் அவை காரியப்பொருள் ஆவான் செல்லும். அவை தனித்தனி ஒன்றேயாம் எனில் குடம் முதலியனவும் தனித்தனி ஒன்றேயாகலாற் பலவாதல் யாண்டையது என்பதாய் முடியுமாலோவெனின், - அற்றன்று, அவன் என்றும், அவள் என்றும், அது என்றும் இவ்வாறு சுட்டியறியப்படுவன எல்லாம் தோன்றி நின்று அழியும் என்பதே சித்தாந்த முடிபு எனக் கொள்க.இது விளங்குதற் பொருட்டன்றே ஆண் பெண் அலி என்றாதல், ஒருவன் ஒருத்தி ஒன்று என்றாதல் ஓதாது, '''அவன் அவள் அது''' எனச் சுட்டுப் பெயர்களான் ஓதியதூஉம் என்க. இதற்கிதுவே பொருளாதல் உணர்த்துதற்கன்றே '''ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம்''' என உரைசெய்து எடுத்துக்கொண்டதூஉம் என்க. “அசத்தாம் சுட்டி உணர்பொருளான எல்லாம்”<sup>❖</sup> (<sup>({{smaller|❖சிவஞான சித்தி. 6-ஆம் சூ. 2}})</sup>, “அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி,”<sup>★</sup> (<sup>★{{smaller|சிவப்பிரகாசம், உண்மை.5).}}</sup> என்னுந் திருவாக்குக்களானும் இதுவே இதற்குச் சிறந்த ஏதுவாதல் கண்டுகொள்க. {{gap}}அற்றேல், “அவனே தானே”<sup>1</sup> எனவும், “அவன்இவனாய் நின்ற முறை”<sup>2</sup> எனவும், “அவன் இவன் ஆனது”<sup>3</sup> எனவும், “அது நானானேன் என்று பாவிக்கச் சொல்லுவது”<sup>4</sup> எனவும், கூறுமாற்றால் நித்தப் பொருள்களும் சுட்டியறியப்படுமலோவெனின், - அற்றன்று; அவை அங்ஙனம் பொதுமையிற் சுட்டியறியப் படுமாயினும் அநுபவநிலையிற் சுட்டி அறியப்படாவென்பது, “உரையுணர் விறந்து நின்று உணர்வதோர் உணர்வே”<sup>5</sup> எனவும், “அறிவிறந்தங் கறிந்திடீர்”<sup> <sup>6</sup> எனவும், “பாவனை யிறந்து நின்று-பாவிக்கப் படுவதாகும்”<sup>7</sup> எனவும், “ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும் - கேட்பான் புகின் அளவில்லை கிளக்க வேண்டா”<sup>8</sup> எனவும், “ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் - சோதிக்க வேண்டா”<sup>9</sup> எனவும், ஓதுவனவற்றான் அறிக. {{smaller|<b>[அடிக்குறிப்பு:</b>}}{{smaller|<sup>1. சிவஞான போதம், 10-ஆம் சூ. </sup>/ <sup> 2. சிவஞான சித்தி, 10-ஆம் சூ. 1; </sup>/ <sup>3. திருவுந்தியார், 40;</sup>/ <sup>4. சிவஞான சித்தி, 6-ஆம் சூ. 7;</sup>/ <sup>5. திருவாசகம், கோயில் திருப்பதிகம், 3; </sup>/ <sup>6. சிவஞான சித்தி. 9-ஆம் சூ. 3;</sup>/ <sup>7. சிவஞான சித்தி. 6-ஆம் சூ. 7; </sup>/ <sup>8. சம்பந்தர் தேவாரம், பொது. 4;</sup>/ <sup>9. சம்பந்தர் தேவாரம், பொது. 5.]</sup>}} {{gap}}பிரபஞ்சம் அவ்வாறன்றிச் சிறப்பியல்புபற்றி அநுபவமாய் உண்மையாற் சுட்டப்படும் என்னும் கருத்தானன்றே, '''ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம்'''என்று ஒழியாது, '''உளதாய்''' என விசேடித்ததூஉம் என்க. நித்தப்பொருள் சுட்டியறியப்படாது என்பது ஆறாம் சூத்திரத்திற் காண்க. {{gap}}இங்ஙனம் வழியளவையானே உலகம் தோன்றி நின்று அழியும் எனச் சாதித்து மீமாஞ்சை நூலாரை மறுத்தவழி, உலகாயத நூலார் காட்சியளவே ஒன்றே பிரமாணம் அன்றி வழியளவை முதலியன பிரமாணம்அல்ல ஆகலான் அவற்றாற் சாதிப்பன பொருள்படாவாம் என்பர். வழியளவையின்றாயின், மேல்வரும் பயனைக் குறித்து முயற்சி செய்வார் இல்லையாதல் வேண்டும். “இம்மையின் முயற்சியாலே யிருநிதி யீட்”<sup>☎</sup>டப்படும் என்பதே அவர் கொள்கையாகலான் வழியளவையும்(<sup>☎. சிவஞானசித்தி. 2-ஆம் சூத்திரம், 7.)</sup>, அதுபற்றி உரையளவையும் பிரமாணம் எனக் காட்டியவழி, அவரும் அதனானே மறுக்கப்படுவாராயினும், அவர் மதமே பற்றி அவரை மறுத்தற்பொருட்டுத் தோன்றியழிதல் கண்கூடாகக் காட்டுவார், வேறுமோர் ஏதுக் கூறுகின்றார்:- {{center|{{larger|<b>தோற்றமும் ஈறும் உள்ளதன் பாலே கிடத்தலின்</b>}}}} எனவரும். {{gap}}ஈண்டு'''உள்ளது''' என்றது, திதியினை. '''கிடத்தல்''' - அதனோடு உடனிகழ்தல். அஃது எங்ஙனமெனின், - ஏதுவை வலியுறுத்துதற்கு எடுத்துக்காட்டுவது உதாரணம் என்று அறிக. ===வார்த்திகப் பொழிப்பு:=== {{gap}}வார்த்திகப் பொழிப்பாவது உரைச்செய்யுளானும் பாச்செய்யுளானும் செய்யப்படும் என்னும் வடமொழி மதம்பற்றிக் கருத்துரையும் மேற்கோளும் ஏதுவும் உரைச்செய்யுளான் உரைத்து, உதாரணம் பாச்செய்யுளான் உரைக்கின்றார்:- {{block_center|<poem><b>பூதாதி ஈறு முதலுந் துணையாகப் பேதாய் திதியாகும் பெற்றிமையின் - ஓதாரோ ஒன்றொன்றிற் றோன்றி யுளதாய் இறக்கண்டும் அன்றென்றும் உண்டென்ன ஆய்ந்து</b></poem>}} - எனவரும். {{gap}}ஈறும் முதலும் துணைக்காரணமாகக் கொண்டே திதி நிகழும். அற்றாயினும் ஒன்று தோன்ற ஒன்று நிற்ப ஒன்று அழிவதன்றி, ஒருங்கே தோன்றி ஒருங்கே நின்று ஒருங்கே அழியக் கண்டிலமால் எனின், - ஒவ்வொரு கால விசேடத்திற் சாதிபற்றி ஒருங்கே தோன்றி ஒருங்கே நின்று ஒருங்கே அழிவதனைக் காண்டலால், என்றாயினும் அதற்குரிய காலம்வரும் என்று உலகத்திற்கும் அங்ஙனம் உண்டாதல் உண்டென்று அக்காட்சிபற்றி அறியப்படும் என்பதாம். {{gap}}'''பூதாதி''' - அன்மொழித்தொகை. பூதாதிக்கு என நான்கன் உருபு விரித்து உரைக்க. '''ஆகும்''' என்பது முற்றுவினை; '''பெற்றிமை''' என்றது ஈண்டுச் சாதியை. ஓகாரம் - எதிர்மறை. '''ஒன்றொன்றின்''' என்பது, “ஒன்றொன்றாப் பார்த்துணர்வது உள்ளமே” என்புழிப்போல அடுக்குமொழி. '''கண்டும்''' என்னும் உம்மை சிறப்பு. '''பெற்றிமையின் ஒன்றொன்றிற் றோன்றி யுளதாய் இறுத'''லாவது, “பயில்வித் தெல்லாங்-காரிடமதனிற் காட்டும் அங்குரங் கழியும் வேனில்” என்றது பற்றி உணர்ந்து கொள்க. இங்ஙனம் சொற்பிரபஞ்சம், பொருட் பிரபஞ்சம் என்னும் இரண்டனுள் பொருட்பிரபஞ்சந் தோன்றி நின்று அழியும் என்பது ஏதுக்களாற் சாதிக்கப்பட்டது. {{gap}}இனி இரட்டுறமொழிதலான், '''அவன்அவள்''' என்பதனாற் பெறப்படும் உயர்திணையும், '''அது''' என்பதனாற் பெறப்படும் அஃறிணையும் என்னும், இருதிணைப் பகுதித்தாய சொற்பிரபஞ்சம், இங்ஙனம் அவயவப் பகுப்புடைமையானும், சடமுமாய்ப் பலவும் ஆகலானும், சுட்டிஅறியப்படுதலானும், திதியின்பாற் ஏனையிரண்டும் காணப்படுதலானும் தோன்றி நின்று அழிதல் உடைத்து எனவும் பொருள் உரைத்துக்கொள்க. {{gap}}அற்றேல், வேதம் நித்தியம் என்னுஞ் சுருதிகளோடு முரணும்பிறவெனின், - முரணாது; நித்தனாகிய பரமசிவனாற் செய்யப்பட்டமையானும், இறுதிக்காலத்துப் பரமசிவனித்து ஒடுங்கிய வேதம் படைப்புக்காலத்து முன்போலவே தோன்றுதலானும் நித்தம் என்று உபசரித்துக் கூறப்படும் ஆதலின், சிவாகமங்களை நித்தம் என்பதும் இக்கருத்தேபற்றி என்க. அங்ஙனம் அல்லாக்கால், <sup>¶</sup>வேதம் “பரமசிவனாற் செய்யப்பட்டது” என்னும் சுருதிகளோடும், <sup>✽</sup>“அட்டாதச வித்தைக்கும் முதற்கருத்தாவாகிய சூல பாணி” என்றற் றொடக்கத்துப் புராணவசனங்களோடும், ஈண்டுக் கூறும் வழியளவையோடும் முரணுமாறு அறிக. <sup>¶</sup><small>பிருகதாரணியகம், அத்.2, பிராம்மணம் 4; சுவேதாசுவதரம், அத். 6.</small> <sup>✽</sup><small>சைவபுராணம், வாயுசங்கிதை, பூர்வபாகம், முதலாம் அத்தியாயம்.</small> {{gap}}வித்தை பதினெட்டாவன: - இருக்கு முதலிய வேதம் '''நான்கும்''' சிக்கை, கற்பசூத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம் என்னும் அங்கம் '''ஆறும்''', புராணம் நியாயநூல் மீமாஞ்சை மிருதி என்னும் உபாங்கம் '''நான்கும்''', ஆயுள்வேதம், வில் வேதம், காந்தருவ வேதம், அருத்தநூல் என்னும் இருக்கு முதலியவற்றிற்கு உபவேதம் '''நான்கும்''' என இவை. {{gap}}இவற்றுள், வேதம் நான்கும் பிரமகாண்டமும், பிரம ஞானத்திற்கு நிமித்தமான கருமகாண்டமும் உணர்த்துவனவாம். சிவாகமங்களும் பிரமகாண்டமாய் அடங்கும் என்க. {{gap}}வேதங்களை எடுத்தல் படுத்தல் முதலிய இசைவேறுபாட்டான் உச்சரிக்குமாறு உணர்த்துவது சிக்கை. {{gap}}வேதங்களிற் கூறும் கருமங்களை அநுட்டிக்குமுறைமை உணர்த்துவது கற்பசூத்திரம். (ஆசுவலாயநீயம், போதாயநீயம் முதலியன). {{gap}}வேதங்களின் எழுத்துச் சொற்பொருள் இயல்பு உணர்த்துவது வியாகரணம். {{gap}}வேதங்களின் சொற்பொருள் உணர்விப்பது நிருத்தம். {{gap}}வேத மந்திரங்களிற் காயத்திரி முதலிய சந்தங்களின் பெயரும் அவற்றிற்கு எழுத்து இனைத்தென்றலும் உணர்த்துவது சந்தோவிசிதி. {{gap}}வேதத்திற் சொல்லப்படும் கருமங்கள் செய்தற்குரிய காலவிசேடங்களை உணர்த்துவது சோதிடம். இங்ஙனமாகலின் இவை ஆறும் வேதத்திற்கு அங்கம் எனப்பட்டன. {{gap}}பரமசிவன் உலகத்தைப் படைக்குமாறு முதலாயின கூறும் வேத வாக்கியப் பொருள்களை வலியுறுத்து விரித்துணர்த்துவது புராணம். இதிகாசமும் ஈண்டு அடங்கும். {{gap}}வேதப்பொருளை நிச்சயித்தற்கு அநுகூலமான பிரமாண முதலியவற்றை உணர்த்துவது நியாயநூல். {{gap}}வேதப்பொருளின் தாற்பரியம் உணர்தற்கு அநுகூலமான நியாயங்களை ஆராய்ச்சி செய்து உணர்த்துவது மீமாஞ்சை. அது பூருவ மீமாஞ்சை, உத்தரமீமாஞ்சை என்று இருவகைப்படும். அவற்றுள், முன்னையது மீமாஞ்சை எனவும், வேதம் எனவும், பின்னையது வேதாந்தம் எனவும் வழங்கப்படும். {{gap}}அவ்வவ்வருணங்கட்கும் நிலைக்கும் உரிய தருமங்களை உணர்த்துவது மிருதிநூல். புராணம் முதலிய நான்கும் வேதத்திற்கு உபாங்கம் எனப்படும். {{gap}}எல்லாம் அநுட்டித்தற்குச் சாதனமான யாக்கையை நோயின்றி நிலைபெறச் செய்வது ஆயுள்வேதம். {{gap}}பகைவரான் நலிவின்றி உலகம் காத்தற்கு வேண்டப்படும் படைக்கலம் பயிறலை உணர்த்துவது வில்வேதம். {{gap}}எல்லாக் கடவுளர்க்கும் உவகை வரச்செய்யும் இசை முதலியவற்றை உணர்விப்பது காந்தருவ வேதம். {{gap}}இம்மைக்கும் மறுமைக்கும் ஏதுவாகிய பொருள்களை ஈட்டும் உபாயம் உணர்விப்பது அருத்தநூல். இவை நான்கும் உபவேதம் எனப்படும் என்று உணர்க. {{center|{{larger|<b>முதல் அதிகரணம் முடிந்தது</b>}}}} {{center|{{X-larger|<b>இரண்டாம் அதிகரணம்</b>}}}} ===கருத்தா உண்மை=== {{gap}}முதல் அதிகரணத்திற் பிரபஞ்சம் நித்தியம் எனக்கொண்ட மீமாஞ்சை நூலாரையும், உலகாயத நூலாரையும் மறுத்துச், சொல்லும் பொருளும் என்று இருவகைப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி, திதி, நாசம் உடைத்து எனக் கருத்தாவின் உண்மை சாதித்தற்கு ஓதிய ஏதுவை ஏதுக்களாற் சாதித்தவழி, ஏது உண்டு; சாத்தியம் இல்லையெனப் பிணங்கும் புத்தர் முதலியோரை மறுத்துப் பொதுவகையானும் சிறப்புவகையானும் கருத்தாவுண்மை சாதித்தற்கு எழுந்தது இரண்டாம் அதிகரணம். அதிகரண இயைபும் இதனானே விளங்கும். {{gap}}'''இனி''' என்றது அதிகரண இயைபு உணர்த்துதற்பொருட்டு முன்வரும் அதிகரணங்களினும் இவ்வாறே கண்டுகொள்க. {{gap}}<b>இனி ஒடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தி இல்லை என்றது</b> எனவரும். {{gap}}சூத்திரத்தின் '''ஒடுங்கி'''என உலகவினைமேல் வைத்து ஓதினமையின், அதற்கேற்ப ஈண்டும் ஒடுக்கின என்னாது '''ஒடுங்கின''' உல உலகவினைமேல் வைத்து உரைத்தார். சங்காரகருத்தாவைச் '''சங்காரம்''' என்று உபசரித்தார். '''அல்லதுஇல்லை''' என எதிர்மறைமுகத்தாற் கூறினார், ஏனைக் கடவுளரிற் செல்லாமை அறிவுறுத்தற்பொருட்டு. {{gap}}அற்றேல், உலகம் ஓரிடத்து ஒடுங்கி நின்று மீள உளதாம் என்றது என்னை? உள்ளதாயின் உண்டாக வேண்டுவது இல்லை ஆகலான், இல்லது உண்டாம்; உள்ளது அழியும்; இல்லவை தோன்றுங்கால் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழிவனவற்றுள், முற்கணத்தின் நின்று அழியும் பொருள் பிற்கணத்திற் றோன்றும் பொருட்குச் சார்பாகலின், அவை அவ்வச் சார்பிலே வித்தின் கேட்டின் அங்குரம்போல் தோன்றும்; இதற்கு ஒரு கருத்தா வேண்டுவது இல்லைஎனப் புத்தர் கூறுவர். அதனை மறுத்து மேற்கோளைச் சாதித்தற்கு எழுந்த ஏது:- {{gap}}<b>{{center|இல்லதற்குத் தோற்றம் இன்மையின்}}</b> என வரும். {{gap}}அற்றேல், உள்ளதற்கு உண்டாக வேண்டுவது என்னை என்றற் றொடக்கத்து ஆசங்கைகளை நீக்கி ஏதுவை வலியுறுத்துதற்கு எடுத்துக்காட்டும் உதாரணம்:- {{block_center|<poem><b>இலயித்த தன்னிலில யித்ததாம லத்தா லிலயித்த வாறுளதா வேண்டும்<sup>1</sup></b></poem>}} எனவரும். [{{smaller|<sup>1</sup>இலயித்த தன்னில் இலயித்ததாம் மலத்தால்/ இலயித்தவாறு உளதா வேண்டும்}}] {{gap}}உள்ளதற்கு உண்டாக வேண்டுவது என்னை என்னும் ஆசங்கையை நீக்குதற்கு '''இலயித்தது இலயித்த தன்னில் ஆம்''' என்றும், அற்றேல், இலயித்தது இலயித்தவாறே ஒழியாது மீள உண்டாக வேண்டா, வேண்டுமாயின் முன் இலயித்தலின்றி நிலைபெறவே அமையும் என்னும் ஆசங்கையை நீக்குதற்கு '''மலத்தால்''' என்றும், நசித்தலேயன்றி ஒடுங்கிநின்று மீள உண்டாம் என்றற்குப் பிரமாணம் என்னை என்பாரை நோக்கி '''இலயித்தவாறு உளதா வேண்டும்''' என்றும் கூறினார். இலயித்தவாறன்றி உளதாகாது என்னும் நியமம் இல்லையாயின், நெற் கமுகாய் நீளாது நெல்லாயே நீளுதற்கு ஏதுவென்னை என்னும் தருக்க முகத்தானே அஃது அறியப்படும் என்பதாம். {{center|<b>சற்காரிய வாதம்</b>}} {{gap}}உற்பத்திக்கு முன்னும் காரியம் உள்ளதென்று கொள்ளாக்கால், முயலின்கட் கோடு தோன்றாதவாறு போல, மண் முதலியவற்றிற் குடம் முதலியன தோன்றாது ஒழிதல் வேண்டும். {{gap}}அற்றேல், முன்னும் காரியம் உளதாயிற் காரகமுயற்சிகளாற் பயன் என்னையெனின், -கூவன் முதலியவற்றின் முயற்சிகளாற் புனல் வெளிப்படுமாறு போலக் காரியம் வெளிப்படுதல் பயன் என்க. அற்றேல், ஈரிடத்தினும் ஒப்பக் காரியம் உள்ளனவாயிற் கூவன் முதலியவற்றின் மண்தொடுதல் முதலிய முயற்சிகளாற் புனல் வெளிப்பட்டது என்னும் உணர்வு நிகழ்ச்சி போல, மண் முதலியவற்றினும் குடம் வெளிப்பட்டது என்னும் உணர்வு நிகழ்தல் வேண்டும். அங்ஙனமன்றி மண்ணிற் குடம் உண்டாயிற்று என்றும், கூவலிற் புனல் வெளிப்பட்டது என்றும் வெவ்வேறாய் உணர்வு நிகழ்தல் பொருந்தாதால் எனின், - அற்றன்று; முன்னர்த் தூலவடிவிற்றாய் நின்று பின் வெளிப்பட்டதன்கண் வெளிப்பட்டது என்னும் உணர்வும், முன்னர்ச் சூக்குமவடிவிற்றாய்நின்று பின்னர்த் தூலவடிவிற்றாய் வெளிப்பட்டதன்கண் உண்டாயிற்று என்னும் உணர்வும் நிகழ்தல் பொருந்தும் என்க. {{gap}}இன்னும், காரணமாய் நின்ற அவத்தையான்அன்றி வேற்றுப் பொருளால் தடைப்பட்டு வெளிப்பட்டதன்கண் வெளிப்பட்டது என்னும் உணர்வு நிகழும். காரணமாய் நின்ற அவத்தை மாத்திரையானே தடைப்பட்டுநின்று வெளிப்பட்டதன்கண் உண்டாயிற்று என்னும் உணர்வு நிகழும். கூவன் முதலியவற்றிற் புனல், அவத்தையன்றி வேற்றுப் பொருளாகிய மண்ணே தடைசெய்து நிற்றலின், ஆண்டு வெளிப்பட்டது என்று வழங்கப்படும். அல்லுழிக் குடம் முதலியவற்றை மண்முதலியனவாய் நின்ற சூக்குமாவத்தையே தடைசெய்து நிற்றலின், ஆண்டுத் தோன்றினவென்று வழங்கப்படும் என்பது. குயவன் முதலியோர் முயற்சிக்கு முன்னும் மண் முதலியவற்றின்கட் குடம் முதலியன உளவெனக் கொள்ளின் அப்பொழுது காணப்படுக என்பதூஉம் இதனானே மறுக்கப்பட்டது; மண்முதலியனவாய் நின்ற அவத்தையானே மறைபட்டு நிற்கும்எனக் கோடலின். {{gap}}அற்றேல், கூவன் முதலியவற்றிற் புனன் முதலியன உண்மை பிரமாணத்தான் அறியப்படுதலின், ஆண்டு வெளிப்படாமைக்குக் காரணம் வேற்றுப்பொருளால் தடைப்பட்டு நிற்றல் என்பது பெறுதும். ஈண்டு அத்தன்மைத்தாகிய பிரமாணம் இன்மையின், மண் முதலியனவாய் நின்ற காரணாவத்தையே தடைசெய்து நிற்கும் என்பது பொருந்தாது; அவை இல்லையாகலிற் காணப்படவில்லை என்பதே பொருத்தம்உடைத்து எனின், -அற்றன்று; “குடம் மண்ணின்கண் முன்னும் உள்ளது; ஆண்டுத் தோன்றுதலின், யாது யாண்டில்லை அஃது ஆண்டுத் தோன்றாது; வெண்மணலில் தைலமும், முயிலின் சென்னியில் கோடும் போலும்” என்னும் அநுமானப் பிரமாணத்தானே முன்னும் குடம் முதலியன உண்மை ஒருதலையான் துணியப்படுதலின், அது வெளிப்படாமைக்குக் காரணம், மண் முதலிய காரணாவத்தையான் தடைப்பட்டு நிற்றலே என்பது பெறுதும் ஆகலின். {{gap}}அற்றேல், இங்ஙனம் சற்காரிய வாதத்தின் வெளிப்படுதற்கு முன்னும் உளது எனக் கோடலின், வேறு வேறு நிகழும் காரக முயற்சிகள் பயனிலவாய் முடியும் பிறவெனின், - முடியா; சூக்கும வடிவினவாய் உள்ளவை தூலரூபமாய் வெளிப்படுதல் பொருட்டு அவ்வவற்றிற்கு உரிய காரண முயற்சிகள் ஒருதலையான் வேண்டப்படும் ஆகலின். அல்லதூஉம், காரணத்தோடு இயைபுடைத்தாய்அன்றிக் காரியம் பிறவாமையின், முன்னும் காரியம் ஒருதலையான் உள்ளது என்று உணரப்படும். காரணத்தோடு இயைபு வேண்டாவாயின், எல்லாக் காரணத்தும் எல்லாக் காரியமும் தோன்றாமைக்கு ஏதுவென்னை என்க. அவ்வச் சத்தியுடையவற்றில் தோன்றுமெனின், சத்தியும் காரியத்தோடு இயைபுடைத்தாய் அன்றித் தோற்றுவியாது; தோற்றுவிக்கும் எனின், முற்கூறிய குற்றம் ஒழியாமை அறிக. இது ஞானாமிர்த நூலினும் கூறப்பட்டது:- {{block_center|<poem> “தந்து முதல காரகம் ஐந்துறக் கோடல் ஆடை இன்றெனின் ஆடை உளதேல் காரகம் என்னை என்ன வளையாக் காரகம் அசத்துற் பத்திக் குண்டே யாக வாயிடை யாவினும் தண்டா தியாரும் தாம்வேண் டியமன் கண்டோ ராயின் மன்ற கண்டிலம் அன்ன தாயின் அதினஃது உண்டென என்னை நியமம் இதின்உளது இவ்வலி என்னிற் சித்த சாதன மன்னோ அன்றெனிற் காரகக் குழுவும் வென்றி தாரா தோடு மோட வேரிசை யெல்லா முடையு முடைய நல்லோய் சொல்லே யாகு நிற்க வல்லே யுற்பா திக்கும் வலியுண் டில்லைச் சத்தி ரூப மாகிக் கரும மென்றிடின் விசேட நின்ற தொன்றிடைக் கண்டில மொன்றும் வென்றியோ டொன்றக் காரக மதற்குப் பேரிசை நியம மாகத் தோற்று விக்குஞ் சீரிசை வலியந் நுவய வெதிரே கத்து மொலிகெழு முரூடி யானுங் கலிகொள வறிய லாகு மவ்வெளிப் படுதல் ஒலிகெழு தோற்றம் அதனாற் கலிகெழு தந்துமுதல காரகம் வந்தி லாமையிற் புடமடி மறைத்த தடமலிந் தகன்ற வேம முதல தாமினி தகற்றத் தூமடி விளங்கு மியாங்கு மாமரு கடமிக மறைந்த படங்கட மகற்ற விடமிக விளங்கி யாங்கு வடிவுற வெல்லாக் காரக முறினு முயற்கோடு இல்ல தில்ல தாகலின் வல்லே கலைமுதன் மாயையி னிவண நிலைமலி புடைய நினையுங் காலே.<sup>1</sup>”</poem>}} {{Right|<sup>1</sup><small>ஞானாமிர்தம், 15.</small>}} {{gap}}இதனானே இல்லதும் உள்ளதும் அல்லாத பொருள் தோன்றும் என்னும் சூனியவாதிகளையும், இல்லதும் உள்ளதுமான பொருள் தோன்றும் என்னும் அநேகாந்த வாதிகளையும் மறுத்தவாறாயிற்று என்க. ====பாஞ்ச ராத்திரிகள்==== {{gap}}இங்ஙனம்'''இல்லதற்குத் தோற்றம் இன்மை'''யின் என்னும் ஏதுவானே புத்தர் முதலியோரை மறுத்துச் சற்காரியவாதத்தான்'''ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தியில்லை''' என்னும் மேற்கோளைச் சாதித்தவழிப், பாஞ்சராத்திரிகள் முதற்காரணத்தோடு இயைபுடைத்தாய்க் காரியந்தோன்றி அதன்கண் ஒடுங்கும் என்பதே பொருத்தம் உடைத்து ஆகலின், உலகிற்கு முதற்காரணம் மூலப்பகுதியாகலான் மூலப்பகுதி வாசுதேவனே ஆகலின், வாசுதேவன்பால் நின்றும் தோன்றி விரிந்த உலகம் ஆண்டு ஒடுங்கும் என்பதே பொருத்தம் உடைத்து; பரமசிவன் நிமித்தகாரண மாத்திரையேயன்றி, முதற்காரணம் என நும்மனோர் கொள்ளாமையின், நிமித்தகாரணத்தில் ஒடுங்கும் என்றல் பொருந்தாது என்பர். அதனை மறுத்து மேற்கோளிற் போந்த குறிப்பேதுவை வலியுறுத்துதற்கு எடுத்துக்காட்டும் உதாரணம் {{block_center|<poem><b>. . . . இலயித்த(து) அத்திதியில் என்னின் அழியா தவைஅழிவது அத்திதியும் ஆதியுமாம் அங்கு.</b></poem>}} -எனவரும். {{gap}}சித்தாகிய வாசுதேவனைச் சடமாகிய மூலப்பகுதி என்று நீ கொள்ளினும், மூலப்பகுதிக்குக் கீழ்உள்ள ஏகதேச மாத்திரையேயன்றி, அதன்மேலுள்ள புவனங்களும் உளப்பட முற்றும் ஆண்டு ஒடுங்காது என்பார் '''அழியாதவை''' எனவும்,முற்றும் ஒடுங்கும் இடம் இதுவென்பார் '''அழிவது அத்திதியும் ஆதியுமாம் அங்கு''' எனவும் கூறினார். {{gap}} {{block_center|<poem>“செய்யுட்கள் ஓசை சிதையுங்கால் ஈரளபும் ஐயப்பா டின்றி அமையுமாம் - மைதீர்ஒற்(று) இன்றியும் செய்யுட்கெடின் ஒற்றை உண்டாக்கு குன்றுமேல் ஒற்றளபும் கொள்.”<sup>※</sup></poem>}} {{Right|<sup>※ </sup>{{smaller|“நீட்டம் வேண்டின்” என்னும் தொல்காப்பிய எழுத்ததிகாரச் சூத்திரத்து நச்சினார்க்கினியர் உரை மேற்கோள்.}}}} -என்பது போலவே, இவ்வெண்பாவினை இருதொடராக்கி வேறுவைத்து உரைத்து இங்ஙனம் இருவகை அதிகரணப் பொருள் தருமாறு கண்டு கொள்க. ஈண்டு '''இலயித்த''' எனவும், '''தன்னிலில''' எனவும், '''யித்ததாம''' எனவும், '''லத்தா''' எனவும் வகையுளியாக வைத்துச் சீர்செய்து வெண்டளை சிதையாது தளையறுத்துக் கொள்க. அன்றி இதனை வெண்டுறைப் பாற்படுத்தினும் இழுக்காது. {{gap}} '''இலயித்த தன்னிலில யித்தது''' என்புழி, '''இலயித்தது''' என்பது ஏதுப் பொருண்மை உணர நின்ற பெயர். '''இலயித்தது''' எனச் சற்காரியவாதம் கூறவே இலயித்த அவத்தையின் அவ்வக்காரிய சதிகள் எல்லாம் உடைய சமூகமாய்ச் சூக்குமமாய் நிற்பது ஒன்றுண்டு; அதுவே முதற்காரணம் எனப்படும் எனப் பிரபஞ்சத்திற்கு முதற்காரணமாகிய மாயையது உண்மையும் பெறப்பட்டது. '''அவை''' என்றது மாயாகாரியத் தொகுதியை. '''அழியாது''' '''அழிவது''' என்னும் ஒருமைகளோடு இயையாமை அறிக. '''ஆமங்கு''' என்பது பெயரெச்ச முடிபு. இரணிய கருப்ப மதத்தையும் மறுத்தற் பொருட்டுப் படைப்புக் கடவுளையும் உடன் கூறினார்; கூறவே, இவரோடு ஒருங்கு எண்ணப்படும் சங்காரக் கடவுளும் இவரோடு தோன்றி அழிவன் எனப் பாசுபதர் முதலியோரையும் இதனானே மறுத்தவாறாயிற்று. இம்மூவரையும் தோற்றுவிக்கும் காரணக் கடவுள், மகா சங்கார காரணனாகிய பரமசிவன் என்பது அதர்வசிகை உபநிடதம் முதலியவற்றுட் காண்க. {{gap}}நிவர்த்தி முதலிய பஞ்சகலைகட்கும் அதிதெய்வமான பிரமன் முதலிய ஐவருள், பிரகிருதிமாயைகாறும் வியாபித்து நிற்கும் பிரதிட்டாகலைக்கு மாயோன் அதிதெய்வமாகலின் அப்பிரகிருதி மாயைக்கு அபிமான தேவதை என்னும் ஒற்றுமைபற்றிப் பிரகிருதிமாயையே வாசுதேவன் எனவும், அதன் காரியம் அவன்வடிவு எனவும், உபசரித்துக் கூறப்படும். அவ்வாறன்றிச் சித்தாகிய வாசுதேவனைச் சடமாகிய பிரகிருதியென்றற்குப் பிரமாணம் இன்மையானும், ஒற்றுமைபற்றிக் கொள்ளினும் பிரகிருதிக்கு மேலும் தத்துவங்கள் உண்மை <sup>★</sup>முன்னர்க்காட்டுதும் ஆகலின் அவை ஆண்டு ஒடுங்குதல் கூடாமையின், திதிக்கடவுளே முழுவதும் சங்கரிக்குமாயின், திதிக்கடவுள் சங்காரக்கடவுள் படைப்புக்கடவுள் என்னும் பகுப்பு ஏலாமையானும், சங்காரக்கடவுள் முழுவதும் சங்கரித்தவழித் தானொருவனே நின்றமையிற் புனருற்பத்தி அவன்கண் நின்றே ஆகற்பாலது என்பது பொருத்தமுடைமையானும், பிரமன் முதலிய மூவரையும், <sup>†</sup>சாக்கிரமூர்த்தி சொப்பனமூர்த்தி சுழுத்திமூர்த்தியெனக் கூறிப் <sup>‡</sup>பரமசிவனைத் துரியமூர்த்தியென உபநிடதங்கள் எல்லாம் மூவரின் வேறாக வைத்துக் கூறுதலானும், இவ்வாறு ஏனையோரைக் கூறாமையானும், சங்காரகாரணனாய் உள்ள முதல்வனே முதல்வன்; உலகமுழுவதும் அவன்பால் ஒடுங்கி அவன் இடத்தினின்றே தோன்றும் என்பது போந்தவாறு அறிக. நிமித்தகாரணனாகிய முதல்வன் உலகிற்கு முதற்காரணம் அல்லனாயினும், முதற்காரணமாகிய மாயைக்கு ஆதாரமாய் நிற்றலின், உலகம் ஆண்டு ஒடுங்கி ஆண்டுநின்று தோன்றுதல் அமையும் என்பது '''வித்துண்டாமூலம்''' எனவருகின்ற வெண்பாவிற் காட்டுதும் ஆகலின், அதுபற்றி ஆசங்கையின்மை உணர்க. <sup>★{{smaller|இரண்டாம் சூத்திரம், இரண்டாம் அதிகரணம்}}</sup> <sup>†{{smaller|பிரம்மோபநிசத், பரப்பிரம்மோபநிசத்}}</sup> <sup>‡{{smaller|பஸ்மஜாபாலோபநிசத், பஞ்சப் பிரம்மோபநிசத்}}</sup> {{gap}}இன்னும், {{block_center|<poem>“உயர்கா யத்திரிக்(கு) உரிப்பொருள் ஆகலின் தசரதன் மதலை தாபித்(து) ஏத்தலிற் கண்ணன் கயிலையின் நண்ணிநின்(று) இரப்பப் புகழ்ச்சியின் அமைந்த மகப்பே(று) உதவலின் தனாது விழியுடன் ஒராயிரம் கமலப் புதுமலர் கொண்(டு)அரி பூசனை ஆற்றலின் ஆங்கவற்(கு) இரங்கி ஆழியீந்(து) அருடலின் ஐங்கணைக் கிழவனை அழல்விருந்(து) ஆக்கலின் அமைப்பரும் கடுவிடம் அமுதுசெய் திடுதலின் தென்திசைத் தலைவனைச் செகுத்துயிர் பருகலின் அவுணர் முப்புரம் அழியவில் வாங்கலின் தக்கன் வேள்வி தகர்த்தருள் செய்தலின் தனஞ்செயன் தனக்குத் தன்படை வழங்கலின் மானுட மடங்கல் வலிதபக் கோறலின் மாயோன் மகடூஉ ஆகிய காலைத் தடமுலை திளைத்துச் சாத்தனைத் தருதலின் ஆழ்கடல் வரைப்பின் ஆன்றோர் அனேகர் அன்புமீ தூர அருச்சனை ஆற்றலின் நான்கிரு செல்வமும் ஆங்கவர்க்(கு)அருடலின் ஐயிரு பிறப்பினும் அரிஅருச் சித்தலின் இருவரும் அன்னமும் ஏனமும் ஆகி அடிமுடி தேட அழற்பிழம்(பு) ஆகலிற் பிறப்பிறப் பாதி உயிர்க்குணம் இன்மையிற் கங்கைசூழ் கிடந்த காசிமால் வரைப்பிற் பொய்புகல் வியாதன் கைதம் பித்தலின் முப்புரம் இறுப்புழி முகுந்தப் புத்தேள் மால்விடை யாகி ஞாலமொடு தாங்கலின் அயன்சிர மாலை அளவில அணிதலின் ஞானமும் வீடும் பேணினர்க்(கு) உதவலிற் பசுபதிப் பெயரிய தனிமுதற் கடவுள் உம்பர்கள் எவர்க்கும் உயர்ந்தோன் என்பது தெளிப இயல்புணர்ந் தோரே.” </poem>}} -என்று இங்ஙனம் அரதத்தாசாரியர் கூறிய இவ் இருபத்திரண்டு ஏதுக்களானும், பரமசிவனே பரம்பொருள் என்பது தெளியப்படுதலின், அவனே முழுவதும் ஒடுக்கி உளதாக்கும் சருவகாரணன் என்பது உணர்ந்து கொள்க. இவற்றை நாத்திகம் பேசி மறுத்துப் பாஞ்சராத்திரிகள் செய்த கிரந்தத்திற்கு மூலவசனம் இல்லையென்று ஒழிக. ====பாஞ்சராத்திர மதமும் மறுப்பும்==== {{gap}}இன்னும் பாஞ்சராத்திரிகள் சிவபுராணம் தாமதபுராணம் ஆகலின், சாத்துவிக இராசத புராணமாகிய இரண்டு புராணங்களோடும் முரணியவழிப் பிரமாணம் ஆகா எனவும், நான்முகனுடைய ஒவ்வொருநாள் கற்பம் எனப் பெயர்பெறும், அவற்றுள், ஒரு கற்பத்திற் பிரமன் சாத்துவிக குணத்தான் மேற்பட்டிருப்பன், ஒரு கற்பத்திற் தாமத குணத்தான் மேற்பட்டிருப்பன், ஒரு கற்பத்தில் முக்குணங்களின் சங்கீரணத்தான் {{smaller|(சங்கீரணம்=கலப்பு)}} மேற்பட்டிருப்பன் ஆகலின் அவ்வக் கற்பங்களின் அவ்வக் குணங்களையுடைய கடவுளர் புராணம் அவனால் விரித்துக் கூறப்பட்டனவாகலின், அவற்றுள், தாமத குணத்தினையுடைய சிவன் பெருமை கூறிய புராணம் தாமதபுராணம் என்பது துணியப்படும் எனவும்; இதற்கு மூலவசனம் மச்சபுராணத்திற் காணப்பட்டது எனவும் பிதற்றுவர். அது பகுத்தறிவில்லார் கூற்றேயாம் என மறுக்க. என்னை? அவ்வக் கற்பங்களின் அவ்வக் குணங்களான் மேற்பட்டிருப்பன் நான்முகக் கடவுள்என மச்சபுராணத்திற் கூறாமையின்; ஒவ்வொரு கற்பங்களின் ஒவ்வொரு குணம் மேற்பட்டு நிகழும் என்றது மாத்திரையே பற்றி, நான்முகனும் அவ்வக் குணங்களான் மேற்பட்டிருப்பன் என்றல் பொருந்தாமையின்; கார், கூதிர், பனி முதலியவற்றுள் ஒவ்வொன்று ஒவ்வொரு காலத்தின் மிக்கு நிகழ்தலும், அதுபற்றி அவ்வக் காலங்களும் அவ்வப் பெயர் பெறுதலும், கார் கூதிர் முதலியனபற்றிச் செழிப்பனவாகிய பூவும் புள்ளும் முதலாயின அவ்வக் காலங்களின் மிக்குத் தோன்றுதலும், அதுபற்றிக் காப்பியங்களின் அவற்றை வருணித்தலும் போலச், சாத்துவிக முதலிய குணங்களின் ஒவ்வொன்று ஒவ்வொரு கற்பத்தின் மிக்கு நிகழ்தலும், அதுபற்றி அவ்வக் கற்பங்களும் அவ்வப் பெயர் பெறுதலும், அவ்வக் கற்பங்களின் அவ்வக் குணமுடைய கடவுளர் மேன்மை மிக்குத் தோன்றுதலும், அங்ஙனம் மிக்குத் தோன்றுதல் பற்றி அவ்வவர் புராணங்களின் அவ்வவர் மேன்மை கூறுதலும் பொருந்துமாறு உணர்க. {{gap}}அற்றேல், இங்ஙனம் கற்பங்களைப் பகுத்தோதிய மச்சபுராண வசனத்திற்குப் பயன் வேறின்மையின், அது பயனில்கூற்றாய் முடியுமாலோவெனின்,- அற்றன்று; புராணங்கள் ஒன்றற்கொன்று மாறுபடக் கூறுதலின், இவற்றுள் யாது பிரமாணம், யாது அப்பிரமாணம் என்னும் ஆசங்கையை நீக்கி, அவ்வக் குணமுடைய கற்பங்களின் அவ்வக் குணமூர்த்திகளின் மேன்மை மிக்குத் தோன்றுதல்பற்றி அவ்வப் புராணங்கள் அவ்வாறு கூறுதலிற் கற்ப வேறுபாடுபற்றி எல்லாப் புராணங்களும் பிரமாணமேயாம் என்று உணர்த்துதற்கு எழுந்ததாகலின், அதுவே பயன் என்க. {{gap}}அற்றேல், மச்சபுராணத்திற் கற்பங்களின் இயல்பு வகுத்தோதிய வசனம்பற்றிக் கோடற்கு ஓர் இயைபு இல்லையாயினும், தாமத குணமுடைய உருத்திரன் மேன்மை கூறுதல்பற்றிப் பிரமனும் தாமத குணம்உடையன் என்னாமோவெனின், - என்னாம்; அங்ஙனம் கொள்வுழித், தாமத குணமுடைய அரக்கர் பெருமை ஆண்டாண்டுக் கூறுதல்பற்றி வியாசர் முதலியோரையும் தாமத குணமுடையர் என வேண்டுதலின். இதுவும் குணமூர்த்திகளை நோக்கிக் கூறியது. துரியமூர்த்தியாகிய பரமசிவன் முக்குணம்கடந்தவன் ஆதலின், அவ்விறைவன் பெருமை எல்லாக் கற்பத்தும் ஒப்ப நிகழ்தலின், ஆண்டு ஆசங்கையின்மை உணர்க. {{gap}}இனிச் சங்கார உருத்திரனும் சங்கரித்தல் தொழிலின் பொருட்டுத் தாமதகுணத்தை மேற்கொண்டது அல்லது, இயல்பாக உடையன் அல்லன் என்க; தாமத குணத்தின் காரியமாகிய துயில், மயக்கம், வஞ்சனை முதலியன அவன்கண் இன்மையின். மாயோனுக்குச் சாத்துவிக குணம் கூறியது, காத்தல் தொழில் மாத்திரைக்கே எனக் கொள்க. இன்னோரன்னவை எல்லாம் “பிரமதருக்கத்தவம்” என்னும் வடநூலுள் விரித்துக் காட்டியவாற்றான் அறிக. இதனானே, வைணவம் நாரதீயம் கருடம் பாகவதம் பாற்மம் வராகம் என்னும் ஆறும் '''சாத்துவிக புராணம்''' எனவும், பிரமம், பிரமாண்டம், பிரமகைவர்த்தம், மார்க்கண்டேயம், பவுடிகம், வாமனம் என்னும் ஆறும் '''இராசதபுராணம்''' எனவும், இலிங்கம், சைவம், ஆக்கினேயம், காந்தம், கூர்மம், மச்சம் என்னும் ஆறும் '''தாமதபுராணம்''' எனவும் பகுத்துக்கூறுதல் பொருந்தாமை அறிக. என்னை? புராணங்கள் எல்லாம் பரமசிவன் அருளிச்செய்யப் பெற்று, நான்முகனால் ஒருங்கே விரித்துக் கூறப்பட்டனவன்றி, அவ்வக் கற்பங்களின் அவ்வப் புராணம் கூறப்பட்டன என்றற்கு ஓத்து இலாமையின், அவ்வக் குணமூர்த்திகளின் மேன்மைகூறும் புராணங்களை அவ்வக் கற்பங்களின் விளக்குவித்தான் என்பது மாத்திரையேபற்றி அங்ஙனங் கோடல் பொருந்தாமையின். {{gap}}இனிச், சத்துவகுண முதலியன உடைய கடவுளரைக் கூறுதல் பற்றி அங்ஙனம் பகுத்தாம்எனின், - அதனான் எமக்கு வருவதோர் இழுக்கின்று; எம்முடைய கடவுள் முக்குணங்களும் கடந்தவன் என்பது, <sup>♣</sup>வேதம் சிவாகமம் புராணம் இதிகாசம் எல்லாவற்றினும் முழங்குதலான் என்க. <sup>♣{{smaller|சுவேதாசுவதரம்.}}</sup> {{gap}}அல்லதூஉம், அவர் சாத்துவிக புராணம் எனக் கொண்ட கருடபுராணத்திற் சிவரகசியத்தினும், பாற்மபுராணத்திற் சிவகீதையினும், இன்னும் பல இடங்களினும் பரமசிவன் பெருமையை விரித்தெடுத்து இலிங்கபுராணம் முதலியவற்றினும் அதிகமாகக் கூறுதலின், இங்ஙனம் பகுத்ததனாலும் அவர் கருத்து நிரம்பாமை அறிக. {{gap}}இனி, உண்மையான் நோக்குவார்க்குச் சிவபுராணங்கள் எல்லாம், வேதத்திற்கு உபப்பிருங்கணமாய் வேதப் பொருளையே விரித்து எடுத்தோதுதலிற் சிறந்த பிரமாணம் எனவும், ஏனைய புராணங்கள் அங்ஙனம் அல்லாமையின் இவற்றோடு முரணியவழி, முரணாதவாறு உய்த்துணர்ந்து பொருள்கொள்ளப் படும் எனவும், அவற்றுள், ஓரோர் இடங்களின் மாயோனுக்கும் பிரமனுக்கும் தாழ்வாக உருத்திரனைக் கூறுவனவெல்லாம் காத்தல் தொழிலும், படைத்தல் தொழிலும் இனிது நடாத்தற்பொருட்டுச் சங்கார உருத்திரன் கூறாய் அவர்பால் தோன்றிய நீலலோகிதன் முதலிய அவதார மூர்த்திகளை அவர்க்குப் புதல்வர் என்னும் உபசாரமேபற்றிக் கூறியனவாம் எனவும் ஓர்ந்து உணர்க. {{gap}}பாரதத்தினும் ஓரோர் இடங்களின் அங்ஙனம் கூறுவனவற்றையும் இவ்வாறே பொருள்உரைத்துக் கொள்க; அல்லுழியெல்லாம் பாரதம் சிவன் பெருமையே விளக்குதலின். அது “பாரத தாற்பரிய சங்கிரக”த்துட் காண்க. {{gap}}இங்ஙனம் அன்றி, “நாராயணன் நான்முகனைப் படைத்தான், நான்முகன் உருத்திரனைப் படைத்தான்” என்பது முக்கியப் பொருள் என்பாரை, “நாராயணன்பால் நின்றும் பிரமன் தோன்றினான், நாராயணன்பால் நின்றும் உருத்திரன் தோன்றினான்” என்புழி, உருத்திரன் என்றது யாரை எனவும், “நாராயணன்பால் நின்றும் உருத்திரன் தோன்றினான்” என்பது முக்கியப் பொருள்எனக் கொள்வாரை “நான்முகன் உருத்திரனைப் படைத்தான்” என்புழி, உருத்திரன் என்றது யாரை எனவும் கடாவி மறுக்க. {{gap}}அதர்வசிகை முதலிய உபநிடதங்களிற் கூறும் பரமசிவன் “மும்மூர்த்திகளையும் படைத்தான்” என்றதுபோலக் குணமூர்த்திகளை இவ்வாறு கூறாது, தம்மையொழித்தொழிந்த இருவரையும் படைத்தார் எனவே கூறுதலாற் புராணங்கட்கும் அதுவே பொருள் எனக் கொள்க. {{gap}}{{block_center|<poem>“அயனை முன்படைத் திடுமொரு கற்பத்(து)அரியை முன்படைத் திடு(ம்)ஒரு கற்பத்(து) உயரு ருருத்திரன் தனைமுனம் படைப்பன் ஒருகற்ப மற்றொரு கற்பந் தன்னின் முயலு மூவரை ஒருங்குடன் படைப்பன் முன்பிறந்தவர் மற்றிரு வரையும் செயலி னாற்படைக் கவும்அருள் புரிவன் சிவபிரான்எனில் ஏற்றம்இங்(கு) எவனோ”</poem>}} -எனச் '''சிவதத்துவ விவேக'''த்திற் கூறியதனையும் ஈண்டு விரித்துரைத்துக் கொள்க. {{gap}}பாரதத்தில் “அளவில் பேரொளிப் பகவனாம் உருத்திரற்(கு) அச்சுதன்ஆன்மா” வாம் எனச் சிவனுக்கு விண்டு ஆன்மா என்றது, அபேதம் என்னும் பொருள்பட உபசரித்துக் கூறியது, சரீரம் என்னும் பொருட்டு எனினும் அமையும். இவ்வாறன்றி, ஆண்டு ஆன்மாவென்றது அந்தரியாமி என்னும் பொருட்டு எனக் கொள்ளின், “அளவில் பேரொளிப் பகவன்” என்று உயர்த்திக் கூறியதோடு முரணுமாறு அறிக. பாரதத்தின் மோக்கதருமத்தின், {{left_margin|3em|<poem>“ஆதலால் எனக்கான் மாவே யாம்உருத்திரனை முன்னர்க் காதலால் அருச்சிக் கின்றேன் யான்”</poem>}} -எனக் கண்ணன் கூறும் வாக்கியத்திற் சிவனைத் தனக்கு ஆன்மாவென்றுது அந்தரியாமி என்னும் பொருட்டேயாம்; தன்னாற் பூசிக்கப்படும் கடவுளாதற்கு உரியபொருள் அதுவேயாகலான் என்க. {{gap}}இனி, <sup>♥</sup>வேதத்துட் கரும காண்டத்தின் “விண்டு பரமன், அங்கி அவமன், அவ்விருவர்க்கும் இடையே யெல்லாத் தேவரும்” என்றது, ஆண்டுச் செய்வதொரு வேள்வி விசேடத்தின் அவிர்ப்பாகம் ஏற்கும் முறைமையின், “விண்டு முந்தினவன் அங்கி பிந்தினவன் அவ்விருவர்க்கும் இடையே ஏனைத் தேவர் எல்லாம்” என்னும் பொருட்டாகலின், ஆண்டுப் “பரமம் அவமம்” என்பன, “ஆதி அந்தம்” எனவே பொருள்படுமாறு காண்க. இவ்வாறன்றி ஆண்டுப் “பரமன்” என்றதற்கு விண்டு எல்லாக் கடவுளர்க்கும் மேற்பட்டவன் என்றும், “அங்கி அவமன்” என்றதற்கு அங்கி எல்லாக் கடவுளர்க்கும் கீழ்ப்பட்டவன் என்று பொருள் கொள்ளின், “அங்கி கடவுளர்க்குள் மேற்பட்டவன்” என்று ஆண்டாண்டுக் கூறும் சுருதி மிருதி புராணங்கள் பலவற்றோடும் முரணும் என்று ஒழிக. இவ்வாறு முன்னோடுபின் முரணாமைப் பொருள்கொள்ள அறியாது, “விண்டு ஆன்மா” என்றது பற்றியும், “விண்டு பரமன்” என்றது பற்றியும் விண்டுவுக்கு முதன்மை கோடல் பொருந்தாமை அறிக. இன்னும் வருவனவெல்லாம் இவ்வாறே ஓர்ந்து உணர்க. <sup>♥{{smaller|சிவாக்கிர பாடியம், முதற்சூத்திரம்}}</sup> {{gap}}பாஞ்சராத்திரிகள் இன்னும் கூறுமாறு:- அரசன் உலாப் போதுங்காலைத் தொகுதி தொகுதியாகச் செல்வாருள் அரசனாவான் இவன் என்பது ஆடை அணி யானை குதிரை முதலிய வைபவம் பற்றித் துணியப்படாதாம்; என்னை? அவை அமைச்சர் படைத்தலைவர் முதலியோர்க்கும் பொது; அல்லதூஉம், அரசன் உவகையுற்றுழி அமைச்சர் முதலாயினார்க்குத் தன்னினும் மிக்கவரிசைகள் அளித்தலும் உண்டு ஆகலின். அதுபோல, வேதத்துள் கூறப்படும் கடவுளருள் பரப்பிரமப்பொருளாவான் இவன் என்பது ஏனைப் பெருமைகளால் துணியப்படாதாம். மற்றுக் கிரீடம்கவித்து வெண்கொற்றக்குடை நிழற்கீழ் வருதல் ஒன்றேபற்றி அரசனாவான் இவன் என்பது துணியப்படுமாறு போலக், காரணவாக்கியங்களுட் படைப்பு முதலியவற்றிற்குக் காரணமாகக் கூறப்படுதல் ஒன்றேபற்றி அவனே பரப்பிரமம் என்பது துணியப்படும். காரணப்பொருளாவான் நாராயணனே என்பது சுபாலமுதலிய உபநிடதங்களிற் காணப்படும். {{gap}}அற்றேல், சில உபநிடங்களில் காணப்படும் காரணப்பொருள் “சத்து” என்றும், “பிரமம்” என்றும், “ஆன்மா” என்றும், இங்ஙனம் பொதுவகையானும்; “இரணியகருப்பன்” என்றும், “சிவன்” என்றும், “உருத்திரன்” என்றும் இங்ஙனம் சிறப்புவகையானும் வெவ்வேறு பெயரான் எடுத்தோதவும் படுமாலோ வெனின், - அற்றன்று; சுபால முதலியவற்றுள் காரணப்பொருள் நாராயணன் என்றது உலகம்|௯௨|தோன்றும் முறைமை எடுத்துக்கொண்டவழிக் கூறப்பட்டதாகலின் அதுவே உண்மைப்பொருள் எனவும், “சத்து” “பிரமம்” “ஆன்மா” என்றற் றொடக்கத்துப் பொதுப்பெயர்கள் சாகபசு நியாயம் பற்றி நாராயணனையே உணர்த்தி நிற்கும்; இரணியகருப்பன் முதலிய சிறப்புப் பெயர்களும் காரணப்பெயராய் நாராயணனையே உணர்த்தி நிற்கும்; அங்ஙனமன்றி இடுகுறிப்பெயர் காரணப்பெயரை காரணத்தை விலக்கும் எனக் கொள்ளினும் ஆகுபெயராய்த்தான், மாயோனுடைய ஆயிரம்பெயர்க்குள் சிவன் முதலிய நாமங்களும் எடுத்தோதுலின், இடுகுறியாய்த்தான், நாராயணனையே உணர்த்திநிற்கும் எனவும் கொள்ளப்படும் என்க. {{gap}}அற்றேல், நாராயணன் முதலிய மாயோன் பெயர்களும் காரணக்குறியாய்ச் சிவனையே உணர்த்திநிற்கும் ஆகலின், காரணப்பொருள் சிவன் என்னும் உபநிடதங்களே வலியுடைய என மாறிக்கொள்ளிற் படும் இழுக்கு என்னையெனின்,- அற்றன்று; மாயோன் பெயருள் ஏனையவெல்லாம் காரணக்குறியாய் வேறொரு கடவுளை உணர்த்தும் எனக் கொள்ளினும், நாராயணன் என்னும் பெயர் இடுகுறிப் பெயர் ஆதலேயன்றி, ஏனைப்பெயர்கள் போலக் காரணப்பெயரும் ஆம் என்றற்கு ஏலாது. அஃது எங்ஙனம்எனின், - நாரம் என்பது நீர், அயனம் என்பது இடம், நாரம் அயனாக உடையவன் நாராயணன் என அன்மொழித் தொகையாய், இருமொழியும் புணர்ந்தவழி “ரகரத்தின் முன் வந்த நகரம் ஒருமொழிக் கண்ணதாயின் ணகரமாய்த் திரியும்; உயிரெழுத்துக்களும் யகரவகரங்களும் ககர பகர வருக்கங்களும் இடையே நிற்பினும் அங்ஙனம் திரியும்; ரகரம் நிலைமொழிக்கண்ணதாக நகரம் வருமொழிக்கண்ணதேல் இடுகுறிப்பெயராயின் ணகரமாய்த் திரியும்” என்பது பாணிநி சூத்திரமாகலின், நாராயணன் என்பதனைக் காரணக்குறியாக்குவார்க்கு நகரம் ணகரமாய்த் திரியும் என்றற்கு ஓத்தில்லை என்பது. அற்றாகலினன்றே சிவன் முதலிய பெயர்போல அவயவப்பொருள்பற்றிக் காரணக்குறியாய் மற்றொருகடவுளை உணர்த்துதல் பெறாத நாராயணன் என்னும் சிறப்புப்பெயரால் சுபாலமுதலியவற்றின் எடுத்தோதியதூஉம் என்க என்று இங்ஙனம் பிதற்றுவர். இவை அனைத்|௯௩|தும் சுவேதாச்சுவதரம் முதலிய உபநிடதங்களை ஓதி உணராத மடவோர் கூற்றேயாம் என மறுக்க. {{gap}}படைப்பு முதலியவற்றிற்குக் காரணமாதல் ஒன்றே பிரமத்திற்குச் சிறந்த இலக்கணம் என்பது ஒக்கும். அதுபற்றியன்றே பரப்பிரமப்பொருள் பரமசிவனேயெனத் துணிந்தாம் என்க. சுபாலம் முதலிய உபநிடதங்கள் உலகம் தோன்றி ஒடுங்கும் முறைமை உணர்த்தப் புகுந்தனவன்றிக், காரணப்பொருளை உணர்த்தப் புகுந்தனவல்ல. இடையே இயைபுபற்றிக் காரணப்பொருளும் உடன்கூறப்பட்டது. சுவேதாச்சுவதரத்தின் அவ்வாறன்றிச், சுபாலம் முதலியவற்றுள் பொதுவகையான் உணர்ந்த காரணப்பொருளைச் சிறப்புவகையான் உணர்த்தற்பொருட்டுக், “காரணமாகிய பிரமம் யாது?” என முனிவர் வினாவும் வினாவை முதற்கண் எடுத்துக்கொண்டு, உபநிடதம் முழுவதும் பரமசிவனுக்குரிய சிறப்புப் பெயர்களாற் பரமேசுவரன் பெருமையை விளங்கக் கூறுதலானும், இவ்வாறு ஏனை உபநிடதங்களுள் முதற்கண் எடுத்துக்கொள்ளாமையானும், ஏனைய உபநிடதங்களினும் சுவேதாச்சுவதரம் வலியுடைத்து ஆகலான் அதனுள் கூறப்படும் காரணப்பொருளாகிய பரமசிவனே பரப்பிரமம் எனவும், ஏனைக் காரண வாக்கியங்களுள் கூறும் பெயர்கள் எல்லாம் சாகபசு நியாயத்தாற் பரமசிவனையே உணர்த்திநிற்கும் எனவும், இரணியகருப்பன் நாராயணன் முதலிய சிறப்புப்பெயர்களும் அவயவப்பொருள் பற்றிக் காரணப்பெயராய்த்தான், அங்ஙனமன்றி ஆகுபெயராய்த்தான், பரமசிவனையே உணர்த்திநிற்கும் எனவும் உணர்க. எல்லாப்பெயரும் பரமசிவன் பெயரென்பதே வேதத்தின் துணிபு என்பது ஆண்டுக்காண்க. {{gap}} {{gap}} {{gap}} =====பார்க்க===== [[சிவஞான பாடியம்]] [[சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்]] [[சிவஞான போதம்- மங்கலவாழ்த்து]] [[சிவஞான போதம்- அவையடக்கம்]] [[சிவஞானபோதம்]] 5rvj5bt4cb5grchiuh41af7kjf8szoc பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/17 250 444835 1437017 1422594 2022-08-05T16:40:04Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" />{{c|xv}}</noinclude> {{center|<b>கல்வி</b>}} {| |- |டாக்டர் எம். டீ. பால், எம்.ஏ., எ. எஸ்ஸி.,<br>{{smaller|எல்.டி., ஈடீ.டீ. (கொலம்பியா), உதவி டைரக்டர், கல்வி இலாகா, சென்னை.}}{{gap}} ||கி. ர. அப்பளாச்சாரியார், எம்.ஏ., எல்.டி.,<br> {{smaller| {{gap}} முன்னாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}} |- |டி. பி. சந்தானகிருஷ்ண நாயுடு, பீ.ஏ., எல்.டி.,<br>{{smaller| முதல்வர், ஆசிரியர் கல்லூரி, சென்னை.}}{{gap}} ||டாக்டர், திருமதி கார்னீலியஸ், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}}எல்.டி., டீ.ஈ.டீ., முன்னாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம், கோயமுத்தூர்.}} |} {{center|<b>பொறியியால், தொழில்நுட்பவியல், போரியல், சுங்கவியல்</b>}} {| |- |டாக்டர் எம். ஏ. கோவிந்த ராவ், எம்.ஏ., <br>{{smaller| பிஎச்.டீ. (லண்டன்), எப்.ஏ.எஸ்ஸி ., எம்.ஐ., ரசாயனப் பொறியியல் (லண்டன்), டைரக்டர், அளகப்ப செட்டியார் தொழில் நுட்பவியல் கல்லூரி, கிண்டி, சென்னை.}}{{gap}} ||டாக்டர் எஸ். ராமச்சந்திர ராவ், எம்.ஏ.,<br> {{smaller| {{gap}}டீ.எஸ்ஸீ. (லண்டன்), பௌதிகப் பேராசிரியர், மத்தியக் கல்லூரி, பெங்களூர்.}}<br> டாக்டர் நீ. ரா. ஸ்ரீநிவாசன், எம்.எஸ்ஸி.,<br> {{smaller| {{gap}}பிஎச்.டீ., இந்திய விஞ்ஞானச் சங்கம், பெங்களூர்.}} |- |லெப்டி. கர்னல் எஸ். பால், பீ.ஈ., எம்.ஐ.ஈ,<br>{{smaller|(இந்தியா), முதல்வர், பொறியியல் கல்லூரி, கிண்டி, சென்னை.}}{{gap}} ||டாக்டர் வீ. சுப்பிரமணியம்,<br> {{smaller| {{gap}} உயிர்-ரசாயனப் பேராசிரியர், இந்திய விஞ்ஞானச் சங்கம், பெங்களூர்.}} |- |டாக்டர் கே. சுகுமாரன், பீ.ஈ., பிஎச்.டீ.,<br>{{smaller| எம்.ஐ.ஈ. (இந்தியா), மின்சாரப் பொறியியல் பேராசிரியர், பொறியியல் கல்லூரி, கிண்டி, சென்னை.}}{{gap}} ||ஜீ. ஆர். தாமோதரன், பீ.எஸ்ஸி,<br> {{smaller| {{gap}} எலக்டிரிக்கல், பீ.எஸ்ஸி. மெக்கானிக்கல் (டர்ஹேம்), எம். ஐ. ஈஈ. (லண்டன்), டைரக்டர், பி.எஸ்.ஜீ. அண்டு சன்ஸ், கைத்தொழில் நிலயம் . கோயமுத்தூர்.}} |- |ஜீ. சுந்தரம், எம்.ஏ., எம்.ஐ.ஈஈ., எம்.ஐ.ஈ,<br>{{smaller| (இந்தியா), பிரதம எஞ்சினியர், அரசாங்க மின்சார இலாகா, சென்னை.}}{{gap}} ||டாக்டர் சீ. எஸ். பிச்சைமுத்து, டீ எஸ்ஸீ,<br> {{smaller| {{gap}}(கிளாஸ்கோ ), பிஎச்.டீ., எப்.ஆர்.எஸ்.ஈ., எப். ஜீ.எஸ்., எப்.ஏ.எஸ்ஸி ., எப்.என்.ஐ., டைரக்டர், மைசூர் புவியியல் இலாகா, பெங்களூர்.}} |} {{center|<b>சட்டம்</b>}} {| |- |கே. வி. வெங்கட சுப்பிரமணியம், பீ.ஏ., <br>{{smaller|எம்.எல்., ஓய்வுபெற்ற பேராசிரியர், சட்டக் கல்லூரி, சென்னை.}}{{gap}} ||சர் எஸ். வரதாச்சாரியார், பி.ஏ., பி.எல்.,<br> {{smaller| {{gap}}ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, சென்னை.}} |- |எஸ். கோவிந்தராஜுலு நாயுடு, பி.ஏ.,பீ.எல்.,<br>{{smaller|எல்எல்.பி., பாரிஸ்டர், கல்வி இலாகா டைரக்டர், சென்னை.}}{{gap}} ||எஸ். ராமசாமி ஐயர், பி.ஏ., பி.எல்.,<br> {{smaller| {{gap}}அட்வொக்கேட்டு, சென்னை.}} |}<noinclude></noinclude> s9y60i4o1yxdw7a9kovm6mdcgrc2l3n பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/33 250 444851 1436986 1436955 2022-08-05T14:32:28Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude> {| | அ. ஐ.<br>அ.ஐ.நா. || - || அமெரிக்க ஐக்கிய நாடுகள் || செ.மீ || - || சென்டிமீட்டர் |- | அங். || - || அங்குலம் || த.க || - || தனிக் கட்டுரை |- | அ.நி. || - || அணு நிறை || தி.வெ.அ || - || திட்ட வெப்பநிலையும் அழுத்தமும் |- | ஆ.கா. || - || ஆட்சிக் காலம் || நூ, நூற். || - || நூற்றாண்டு |- | இ. || - || உருகு நிலை , உறை நிலை || ப. கா. || - || பதவிக் காலம் |- | உ.நி. || - || கன சென்டி மீட்டர் || || - || |- | க.செ.மீ. || - || கிறிஸ்துவுக்குப் பின் || || - || |- | கி.பி. || - || கிறிஸ்துவுக்கு முன் || || - || |- | கி.மு. || - || கொதிநிலை || || - || |- | ச.மைல். || - || சதுர மைல் || || - || |- | சு. || - || சுமார் || || - || |} ஐங்குறுநூறு குறுந்தொகை அகநானூறு அபிதான சிந்தாமணி இலக்கண விளக்கம் நற் - நற்றிணை பதிற் - பதிற்றுப்பத்து பரி - பரிபாடல் பன். - பன்னிருபாட்டியல் பு.வெ. - புறப்பொருள் வெண்பாமாலை புறம். - புறநானூறு பேரா. - பேராசிரியருரை பொருநர் - பொருநராற்றுப்படை மணி. - மணிமேகலை மதுரை. - மதுரைக்காஞ்சி யாப். - யாப்பருங்கல விருத்தி வெண். - வெண்பாப்பாட்டியல்<noinclude></noinclude> e9kr2wxkzygirjuo2vrplyxebykf4n5 1436987 1436986 2022-08-05T14:38:52Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude> {| | அ. ஐ.<br>அ.ஐ.நா. || - || அமெரிக்க ஐக்கிய நாடுகள் || செ.மீ || - || சென்டிமீட்டர் |- | அங். || - || அங்குலம் || த.க || - || தனிக் கட்டுரை |- | அ.நி. || - || அணு நிறை || தி.வெ.அ || - || திட்ட வெப்பநிலையும் அழுத்தமும் |- | ஆ.கா. || - || ஆட்சிக் காலம் || நூ, நூற். || - || நூற்றாண்டு |- | இ. || - || உருகு நிலை , உறை நிலை || ப. கா. || - || பதவிக் காலம் |- | உ.நி. || - || கன சென்டி மீட்டர் || பா || - || பாரன்ஹீட் வெப்ப நிலை அளவை. (டிகிரி மட்டும் போட்டிருந்தால் சென்டி கிரேடு அளவையாகும்) |- | க.செ.மீ. || - || கிறிஸ்துவுக்குப் பின் || பி || - || பிறப்பு |- | கி.பி. || - || கிறிஸ்துவுக்கு முன் || மக் || - || மக்கள் தொகை |- | கி.மு. || - || கொதிநிலை |- | ச.மைல். || - || சதுர மைல் || மி.எ.வே. || - || மில்லியன் எலக்ரான் வோல்ட் |- | சு. || - || சுமார் || மி.மீ || - || மில்லி மீட்டர் |} ஐங்குறுநூறு குறுந்தொகை அகநானூறு அபிதான சிந்தாமணி இலக்கண விளக்கம் நற் - நற்றிணை பதிற் - பதிற்றுப்பத்து பரி - பரிபாடல் பன். - பன்னிருபாட்டியல் பு.வெ. - புறப்பொருள் வெண்பாமாலை புறம். - புறநானூறு பேரா. - பேராசிரியருரை பொருநர் - பொருநராற்றுப்படை மணி. - மணிமேகலை மதுரை. - மதுரைக்காஞ்சி யாப். - யாப்பருங்கல விருத்தி வெண். - வெண்பாப்பாட்டியல்<noinclude></noinclude> nyslqgt4nu6tn0gz27ph4juzlk0yjk6 1436997 1436987 2022-08-05T15:44:22Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /></noinclude> {| | அ. ஐ.<br>அ.ஐ.நா. || - || அமெரிக்க ஐக்கிய நாடுகள் || செ.மீ || - || சென்டிமீட்டர் |- | அங். || - || அங்குலம் || த.க || - || தனிக் கட்டுரை |- | அ.நி. || - || அணு நிறை || தி.வெ.அ || - || திட்ட வெப்பநிலையும் அழுத்தமும் |- | ஆ.கா. || - || ஆட்சிக் காலம் || நூ, நூற். || - || நூற்றாண்டு |- | இ. || - || இறப்பு || ப. கா. || - || பதவிக் காலம் |- | உ.நி. || - || உருகு நிலை , உறை நிலை || பா || - || பாரன்ஹீட் வெப்ப நிலை அளவை. (டிகிரி மட்டும் போட்டிருந்தால் சென்டி கிரேடு அளவையாகும்) |- | க.செ.மீ. || - || கன சென்டி மீட்டர் || பி || - || பிறப்பு |- | கி.பி. || - || கிறிஸ்துவுக்கு முன் || மக் || - || மக்கள் தொகை |- | கி.மு. || - || கிறிஸ்துவுக்குப் பின் |- | ச.மைல். || - || சதுர மைல் || மி.எ.வே. || - || மில்லியன் எலக்ரான் வோல்ட் |- | சு. || - || சுமார் || மி.மீ || - || மில்லி மீட்டர் |} ஐங்குறுநூறு குறுந்தொகை அகநானூறு அபிதான சிந்தாமணி இலக்கண விளக்கம் நற் - நற்றிணை பதிற் - பதிற்றுப்பத்து பரி - பரிபாடல் பன். - பன்னிருபாட்டியல் பு.வெ. - புறப்பொருள் வெண்பாமாலை புறம். - புறநானூறு பேரா. - பேராசிரியருரை பொருநர் - பொருநராற்றுப்படை மணி. - மணிமேகலை மதுரை. - மதுரைக்காஞ்சி யாப். - யாப்பருங்கல விருத்தி வெண். - வெண்பாப்பாட்டியல்<noinclude></noinclude> j9gckg7lqexaxwski0wf9z5k50v6zlx 1437010 1436997 2022-08-05T16:16:35Z Deepa arul 5675 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{gap2}}{{larger|<b>குறியீட்டு விளக்கம்</b>}} {| | <b>அ. ஐ.<br>அ. ஐ. நா.</b> || - || அமெரிக்க ஐக்கிய நாடுகள் || <b>செ. மீ</b> || - || சென்டிமீட்டர் |- | <b>அங்.</b> || - || அங்குலம் || <b>த. க</b> || - || தனிக் கட்டுரை |- | <b>அ. நி.</b> || - || அணு நிறை || <b>தி. வெ. அ</b> || - || திட்ட வெப்பநிலையும் அழுத்தமும் |- | <b>ஆ. கா.</b> || - || ஆட்சிக் காலம் || <b>நூ, நூற்.</b> || - || நூற்றாண்டு |- | <b>இ.</b> || - || இறப்பு || <b>ப. கா.</b> || - || பதவிக் காலம் |- | <b>உ. நி.</b> || - || உருகு நிலை , உறை நிலை || <b>பா.</b> || - || பாரன்ஹீட் வெப்ப நிலை அளவை. (டிகிரி மட்டும் போட்டிருந்தால் சென்டி கிரேடு அளவையாகும்) |- | <b>க. செ. மீ.</b> || - || கன சென்டி மீட்டர் || <b>பி.</b> || - || பிறப்பு |- | <b>கி. பி.</b> || - || கிறிஸ்துவுக்கு முன் || <b>மக்.</b> || - || மக்கள் தொகை |- | <b>கி. மு.</b> || - || கிறிஸ்துவுக்குப் பின் |- | <b>ச. மைல்.</b> || - || சதுர மைல் || <b>மி. எ. வே.</b> || - || மில்லியன் எலக்ரான் வோல்ட் |- | <b>சு.</b> || - || சுமார் || <b>மி. மீ</b> || - || மில்லி மீட்டர் |} கட்டுரையின் முடிவில் அதை எழுதினோர் பெயரின் முதலெழுத்துகள் குறிக்கப்படும். கட்டுரையின் முதற்பகுதியை அக்கட்டுரையாளரே எழுதியிருப்பின், அப்பகுதியின் முடிவில் உடுக்குறி யிருக்கும். கட்டுரையின் பகுதிகளில் தொடர்ச்சியாக உள்ளவைகளை ஒருவரே எழுதியிருந்தால் இறுதிப் பகுதியின் முடிவிலேயே அவர் பெயரின் முதலெழுத்துகள் குறிக்கப்படும். {{gap2}}{{larger|<b>தமிழ் நூல்கள்</b>}} {| | <b>அகம்.</b> || - || அகநானூறு || <b>நற்</b> || - || நற்றினை |- | <b>அபி.</b> || - || அபிதான சிந்தாமணி || <b>பதிற்.</b> || - || பதிற்றுப்பத்து |- | <b>இல. வி.</b> || - || இலக்கண விளக்கம் || <b>பரி.</b> || - || பரிபாடல் |- | <b>ஐங்.</b> || - || ஐங்குறுநூறு || <b>பு.வெ.</b> || - || பன்னிருபாட்டியல் |- | <b>குறுந்.</b> || - || குறுந்தொகை || <b>பு. வெ.</b> || - || புறப்பொருள் |- | <b>சிதம்.</b> || - || சிதம்பரப்பாட்டியல் || || || வெண்பாமாலை |- | <b>சிலப்.</b> || - || சிலப்பதிகாரம் || <b>புறம்.</b> || - || புறநானூறு |- | <b>சிறுபா.</b> || - || சிறுபாணாற்றுப்படை || <b>பேரா.</b> || - || பேராசிரியருரை |- | <b>சீவக.</b> || - || சீவகசிந்தாமணி || <b>பொருநர்.</b> || - || பொருநராற்றுப்படை |- | <b>தொல்.</b> || - || தொல்காப்பியம் || <b>மணி.</b> || - || மணிமேகலை |- | <b>நச்.</b> || - || நச்சினார்க்கினியருரை || <b>மதுரை. </b> || - || மதுரைக்காஞ்சி |- | <b>நம்பி.</b> || - || நம்பியகப்பொருள் || <b>யாப்.</b> || - || யாப்பருங்கல விருத்தி |- | <b>நவ.</b> || - || நவநீதப்பாட்டியல் || <b>வெண். </b> || - || வெண்பாட்டியல் |}<noinclude></noinclude> iw2jqk2atrotsv8fv73zmx029i6pw53 1437011 1437010 2022-08-05T16:18:31Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{gap2}}{{gap2}}{{larger|<b>குறியீட்டு விளக்கம்</b>}} {| | <b>அ. ஐ.<br>அ. ஐ. நா.</b> || - || அமெரிக்க ஐக்கிய நாடுகள் || <b>செ. மீ</b> || - || சென்டிமீட்டர் |- | <b>அங்.</b> || - || அங்குலம் || <b>த. க</b> || - || தனிக் கட்டுரை |- | <b>அ. நி.</b> || - || அணு நிறை || <b>தி. வெ. அ</b> || - || திட்ட வெப்பநிலையும் அழுத்தமும் |- | <b>ஆ. கா.</b> || - || ஆட்சிக் காலம் || <b>நூ, நூற்.</b> || - || நூற்றாண்டு |- | <b>இ.</b> || - || இறப்பு || <b>ப. கா.</b> || - || பதவிக் காலம் |- | <b>உ. நி.</b> || - || உருகு நிலை , உறை நிலை || <b>பா.</b> || - || பாரன்ஹீட் வெப்ப நிலை அளவை. (டிகிரி மட்டும் போட்டிருந்தால் சென்டி கிரேடு அளவையாகும்) |- | <b>க. செ. மீ.</b> || - || கன சென்டி மீட்டர் || <b>பி.</b> || - || பிறப்பு |- | <b>கி. பி.</b> || - || கிறிஸ்துவுக்கு முன் || <b>மக்.</b> || - || மக்கள் தொகை |- | <b>கி. மு.</b> || - || கிறிஸ்துவுக்குப் பின் |- | <b>ச. மைல்.</b> || - || சதுர மைல் || <b>மி. எ. வே.</b> || - || மில்லியன் எலக்ரான் வோல்ட் |- | <b>சு.</b> || - || சுமார் || <b>மி. மீ</b> || - || மில்லி மீட்டர் |} கட்டுரையின் முடிவில் அதை எழுதினோர் பெயரின் முதலெழுத்துகள் குறிக்கப்படும். கட்டுரையின் முதற்பகுதியை அக்கட்டுரையாளரே எழுதியிருப்பின், அப்பகுதியின் முடிவில் உடுக்குறி யிருக்கும். கட்டுரையின் பகுதிகளில் தொடர்ச்சியாக உள்ளவைகளை ஒருவரே எழுதியிருந்தால் இறுதிப் பகுதியின் முடிவிலேயே அவர் பெயரின் முதலெழுத்துகள் குறிக்கப்படும். {{gap2}}{{gap2}}{{larger|<b>தமிழ் நூல்கள்</b>}} {| | <b>அகம்.</b> || - || அகநானூறு || <b>நற்</b> || - || நற்றினை |- | <b>அபி.</b> || - || அபிதான சிந்தாமணி || <b>பதிற்.</b> || - || பதிற்றுப்பத்து |- | <b>இல. வி.</b> || - || இலக்கண விளக்கம் || <b>பரி.</b> || - || பரிபாடல் |- | <b>ஐங்.</b> || - || ஐங்குறுநூறு || <b>பு.வெ.</b> || - || பன்னிருபாட்டியல் |- | <b>குறுந்.</b> || - || குறுந்தொகை || <b>பு. வெ.</b> || - || புறப்பொருள் |- | <b>சிதம்.</b> || - || சிதம்பரப்பாட்டியல் || || || வெண்பாமாலை |- | <b>சிலப்.</b> || - || சிலப்பதிகாரம் || <b>புறம்.</b> || - || புறநானூறு |- | <b>சிறுபா.</b> || - || சிறுபாணாற்றுப்படை || <b>பேரா.</b> || - || பேராசிரியருரை |- | <b>சீவக.</b> || - || சீவகசிந்தாமணி || <b>பொருநர்.</b> || - || பொருநராற்றுப்படை |- | <b>தொல்.</b> || - || தொல்காப்பியம் || <b>மணி.</b> || - || மணிமேகலை |- | <b>நச்.</b> || - || நச்சினார்க்கினியருரை || <b>மதுரை. </b> || - || மதுரைக்காஞ்சி |- | <b>நம்பி.</b> || - || நம்பியகப்பொருள் || <b>யாப்.</b> || - || யாப்பருங்கல விருத்தி |- | <b>நவ.</b> || - || நவநீதப்பாட்டியல் || <b>வெண். </b> || - || வெண்பாட்டியல் |}<noinclude></noinclude> nx4dztfjm3au5d87jtx5lfwsw0nt2yb 1437035 1437011 2022-08-06T04:33:55Z TVA ARUN 3777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /></noinclude>{{gap2}}{{gap2}}{{larger|<b>குறியீட்டு விளக்கம்</b>}} {| | <b>அ. ஐ.<br>அ. ஐ. நா.</b> || - || அமெரிக்க ஐக்கிய நாடுகள் || <b>செ. மீ</b> || - || சென்டிமீட்டர் |- | <b>அங்.</b> || - || அங்குலம் || <b>த. க</b> || - || தனிக் கட்டுரை |- | <b>அ. நி.</b> || - || அணு நிறை || <b>தி. வெ. அ</b> || - || திட்ட வெப்பநிலையும் அழுத்தமும் |- | <b>ஆ. கா.</b> || - || ஆட்சிக் காலம் || <b>நூ, நூற்.</b> || - || நூற்றாண்டு |- | <b>இ.</b> || - || இறப்பு || <b>ப. கா.</b> || - || பதவிக் காலம் |- | <b>உ. நி.</b> || - || உருகு நிலை , உறை நிலை || <b>பா.</b> || - || பாரன்ஹீட் வெப்ப நிலை அளவை. (டிகிரி மட்டும் போட்டிருந்தால் சென்டி கிரேடு அளவையாகும்) |- | <b>க. செ. மீ.</b> || - || கன சென்டி மீட்டர் || <b>பி.</b> || - || பிறப்பு |- | <b>கி. பி.</b> || - || கிறிஸ்துவுக்கு முன் || <b>மக்.</b> || - || மக்கள் தொகை |- | <b>கி. மு.</b> || - || கிறிஸ்துவுக்குப் பின் |- | <b>ச. மைல்.</b> || - || சதுர மைல் || <b>மி. எ. வே.</b> || - || மில்லியன் எலக்ரான் வோல்ட் |- | <b>சு.</b> || - || சுமார் || <b>மி. மீ</b> || - || மில்லி மீட்டர் |} கட்டுரையின் முடிவில் அதை எழுதினோர் பெயரின் முதலெழுத்துகள் குறிக்கப்படும். கட்டுரையின் முதற்பகுதியை அக்கட்டுரையாளரே எழுதியிருப்பின், அப்பகுதியின் முடிவில் உடுக்குறி யிருக்கும். கட்டுரையின் பகுதிகளில் தொடர்ச்சியாக உள்ளவைகளை ஒருவரே எழுதியிருந்தால் இறுதிப் பகுதியின் முடிவிலேயே அவர் பெயரின் முதலெழுத்துகள் குறிக்கப்படும். {{gap2}}{{gap2}}{{larger|<b>தமிழ் நூல்கள்</b>}} {| | <b>அகம்.</b> || - || அகநானூறு || <b>நற்</b> || - || நற்றிணை |- | <b>அபி.</b> || - || அபிதான சிந்தாமணி || <b>பதிற்.</b> || - || பதிற்றுப்பத்து |- | <b>இல. வி.</b> || - || இலக்கண விளக்கம் || <b>பரி.</b> || - || பரிபாடல் |- | <b>ஐங்.</b> || - || ஐங்குறுநூறு || <b>பு.வெ.</b> || - || பன்னிருபாட்டியல் |- | <b>குறுந்.</b> || - || குறுந்தொகை || <b>பு. வெ.</b> || - || புறப்பொருள் |- | <b>சிதம்.</b> || - || சிதம்பரப்பாட்டியல் || || || வெண்பாமாலை |- | <b>சிலப்.</b> || - || சிலப்பதிகாரம் || <b>புறம்.</b> || - || புறநானூறு |- | <b>சிறுபா.</b> || - || சிறுபாணாற்றுப்படை || <b>பேரா.</b> || - || பேராசிரியருரை |- | <b>சீவக.</b> || - || சீவகசிந்தாமணி || <b>பொருநர்.</b> || - || பொருநராற்றுப்படை |- | <b>தொல்.</b> || - || தொல்காப்பியம் || <b>மணி.</b> || - || மணிமேகலை |- | <b>நச்.</b> || - || நச்சினார்க்கினியருரை || <b>மதுரை. </b> || - || மதுரைக்காஞ்சி |- | <b>நம்பி.</b> || - || நம்பியகப்பொருள் || <b>யாப்.</b> || - || யாப்பருங்கல விருத்தி |- | <b>நவ.</b> || - || நவநீதப்பாட்டியல் || <b>வெண். </b> || - || வெண்பாப்பாட்டியல் |}<noinclude></noinclude> a2r44k4lb13gawllzvcaoa9bzmkggrb பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/348 250 445179 1436983 1436767 2022-08-05T14:16:04Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|ஆக்ரா|302|ஆக்லந்து பிரபு}}</b></noinclude>யடைந்து, படிப்படியாகப் பல பொருள்களைத் தருகிறது. இதில் U<sub>11</sub> என்பதும் ஒன்று. இது U<sub>y</sub> என்ற தனிமமாக மாறிப் புரோடோ ஆக்டீனியம் என்ற பொருளாகிறது. இது ஒரு பீட்டாதுகளை வெளியிட்டு ஆக்டீனியமாகிறது. இதுவும் படிப்படியாகப் பல மாறுதல்களை அடைந்து, கடைசியாக வெள்ளீயத்தின் ஐசோடோப்பாகிறது. இந்த மாறுதல்கள் ஆக்டீனியத்தொடர் எனப்படும். பார்க்க : கதிரியக்கம். {{larger|<b>ஆக்ரா</b>}} உத்தரப் பிரதேசத்து மூன்றாவது பெரிய நகரம். இந்தியாவின் பண்டைய நகரங்களுள் ஒன்று. யமுனையாற்றங் கரையில் உள்ளது சிக்கந்தர் லோடி 1500-ல் இந்நகரைத் தனது தலைநகராக்கிக் கொண்டான். 1526-ல் பாபர் இந்நகரைக் கைப்பற்றினான். இவ்வூரருகேயுள்ள அக்பராபாத் என்னும் கோட்டை அக்பரால் கட்டப்பட்டது. ஒளரங்கசீப் காலத்தில் தலை நகரம் மறுபடியும் டெல்லிக்கு மாற்றப்பட்டுவிட்டதால் ஆக்ராவின் தலைமை சிறிது குறைந்தது. ஷாஜகான் கட்டிய தாஜ்மகால் (த.க.) என்னும் உலகப் புகழ் பெற்ற சலவைக்கல் கட்டடம் இங்கே இருக் கிறது. இங்குள்ள முத்து மசூதியும் ஜம்மா மசூதியும் புகழ் வாய்ந்தவை. கோட்டையின் சுற்றளவு ஒரு மைல். மதில் சுவர் உயரம் 70 அடி. தங்கம், வெள்ளி. சித்திரத் தையல் வேலைகள் நடைபெறுகின்றன; சிறந்த கம்பளங்களும் செய்யப்படுகின்றன. சர்க்கரை, தானியம் ஆகியவை முக்கிய வியாபாரம். இருப்புப் பாதை நடு நிலையம் உள்ளது. இங்கு ஒரு பல்கலைக் கழகம் உண்டு. மக்: 3,75,665 (1951). {{float_right|★}} {{larger|<b>தொல் பொருளியல்</b>}} : முகலாயர்கள் காலத்திய (1550-1660) அழகிய கட்டடங்கள் பல இங்கு உண்டு. இவற்றில் அக்பர் காலத்துக் கட்டடங்களில் கோட்டை மதிலும், ஜகாங்கீர் மகாலும் எஞ்சியுள்ளன. இவ்வூரின் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 348 |bSize = 414 |cWidth = 191 |cHeight = 164 |oTop = 327 |oLeft = 8 |Location = left |Description = {{center|தாஜ்மகால்}} }} அருகிலுள்ள சிக்கந்திராவில் ஜகாங்கீர் காலத்தில் கட்டப்பட்ட ஐந்தடுக்குக் கொண்ட புதிய முறையிலான அக்பரின் சமாதிக் கட்டடமும், ஆக்ராவில் ஜகாங்கீரின் மாமனார் இதிமத் உத்தௌலாவின் சமாதிக் கட்டடமும் இருக்கின்றன. இச்சமாதிக் கட்டடங்கள் சலவைக் கல்லாலும் இரத்தினத்தாலும் இழைக்கப்பட்டுள்ளது. இவற்றைவிடப் பன்மடங்கு அழகு மிகுந்ததும், ஷாஜகானால் கட்டப்பட்டதுமான முத்து மசூதியும், உலகமே வியக்கும் வனப்புமிக்க தாஜ்மகா லும் இங்கு இருக்கின்றன. தாஜ்மகால் சலவைக்கற்களாலும் இரத்தினங்கள் இழைத்தும் கட்டப்பட்டுள்ளது. இதைக்கட்டி முடிக்க நாள்தோறும் 20,000 ஆட்கள் வேலை செய்து, 20 ஆண்டுகளுக்கு மேலாயிற்று என்றும், சுமார் 4 கோடி ரூபாய்க்குமேல் செலவாயிற்று என்றும், இதன் அமைப்பை வகுத்தவர் ஒரு ஐரோப்பியச் சிற்பி என்றும், கட்டி முடித்தவர் துருக்கி தேசத்திய உஸ்தாத் ஈசா என்ற சிற்பி என்றும்சொல்லுகிறார்கள். {{float_right|பி. ஆர். ஸ்ரீ.}} {{larger|<b>ஆக்ரா பல்கலைக் கழகம் :</b>}} 1921-ல் இயற்றப்பட்ட அலகாபாத் பல்கலைக் கழகச் சட்டத்தின்படி அலகாபாத் பல்கலைக் கழகமானது பல கல்லூரிகள் இணைக்கப்படாமல் தனியான குருகுலவாசக் கலைக் கழகமாக அமைக்கப்பட்டது. அதனால் அலகாபாத் பல்கலைக் கழகத்திலிருந்து பத்து மைல் சுற்றுவட்டாரத்துக்கு அப்பாலுள்ள கல்லூரிகளை இணைப்பதற்காக 1927-ல் உத்தரப் பிரதேசச் சட்டசபை ஒரு சட்ட மியற்றியது. அதன் பயனாக ஆக்ரா பல்கலைக் கழகம் அமைக்கப்பெற்றது. அதன் அதிகார வரம்பு உத்தரப் பிரதேசம், மத்திய இந்தியா, குவாலியர், அஜ்மீர்-மேர்வாரா, இராஜபுதனம் ஆகிய பகுதிகள்வரை எட்டியிருந்தது. அண்மையில் இராஜபுதனப் பல்கலைக் கழகம் நிறுவப்பெற்றுவிட்டதால் இராஜபுதனத்திலுள்ள கல்லூரிகள் அப்பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுவிட்டன. ஆக்ரா பல்கலைக் கழகம் தொடங்கியபோது அதில் பதினான்கு கல்லூரிகள் இணைந்திருந்தன. இப்போது அவற்றின் தொகை அறுபத்திரண்டாகும். இக்கழகத்தில் முதலில் கலைகள், விஞ்ஞானம், சட்டம், வாணிபம் ஆகிய துறைகள்மட்டு மிருந்தன. பின்னால் விவசாயம், மருத்துவம், கால்நடை விஞ்ஞானம், பொறியியல் ஆகிய துறைகளும் அமைக்கப்பட்டன. {{larger|<b>ஆக்ரான்</b>}} (Akran) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான ஓஹியோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள நகரம். உலகத்திலுள்ள ரப்பர்க் கைத்தொழில் நகரங்களுள் இதுவே பெரியது. வேறு கைத்தொழில்களும் நடைபெறுகின்றன. ஆக்ரான் என்பதன் பொருள் உயரமான இடம் என்பதாகும். இது கடல் மட்டத்துக்கு 950 அடி உயரத்திலிருக்கிறது. மக்கள் தொகையில் 2·5% நீக்ரோக்கள். அமெரிக்காவின் பெரிய ஆகாய விமான நிலையங்களுள் ஒன்று இங்கே இருக்கிறது. நகராண்மைக் கழகத்தால் நடத்தப்பெறும் பல்கலைக் கழகம் ஒன்று உண்டு. {{larger|<b>ஆக்லந்து பிரபு</b>}} (1784-1849) பென்டிங் பிரபுவுக்குப் பிறகு, 1836-ல் இந்தியாவிற்குக் கவர்னர் ஜெனரலாக வந்தவர். ரஷ்யாவும் பாரசீகமும் ஆப்கானிஸ்தானத்தில் காலூன்ற முயல்வதாகக் கருதி, ஆக்லந்து பிரபு ஆப்கானிஸ்தானத்தில் அனாவசியமாகத் தலையிடத் தொடங்கினார். அப்போது ஆப்கானிய மன்னராக இருந்த டாஸ்ட் முகம்மது ஆங்கிலேயர்களுக்கு இணங்கிவராததால் ஆப்கானிஸ்தானத்தின்மீது படையெடுக்க ஆக்லந்து தீர்மானித்தார். தோஸ்த்து முகம்மது ஓடி விட்டாராயினும், மற்ற ஆப்கானியர்கள் செய்த தொந்தரவால் ஆங்கிலப்படை மிகுந்த நஷ்டத்தோடு திரும்ப வேண்டியதாயிற்று. ஆங்கிலத் தளபதி மெக்நாட்டன் கொலையுண்டார். 16,000 வீரர்களில் ஒருவனே எஞ்சினான். ஆப்கானிஸ்தானத்தின் உள்நாட்டு விஷயத்தில் இவ்வாறு தலையிட்டது ஆக்லந்து செய்த பெருந்தவறு என்று கூறப்படும். இவர் காலத்தில் கர்நூல் ஆங்கிலேயர் ஆட்சிக்குள் வந்தது. அமைதிக் கால ஆட்சிக்கு ஏற்றவராயினும், போரை வெற்றிகரமாக<noinclude></noinclude> poeuf2d9v1aqthj5vlv8wveukz8ldzr பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/389 250 445219 1436984 1436796 2022-08-05T14:17:36Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்|342|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்}}</b></noinclude>மனிதனது இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு இவ்வாறு கூறுவர். இக்கொள்கையைப் பெரிதும் எடுத்துக் கூறியவர்களில் டால்ஸ்டாய் என்னும் ரஷ்ய அறிஞர் முக்கியமானவர். மகாத்மா காந்தியும் இதே மனப்போக்குடையவர். சுதந்திரப்பேச்சுக்கேட்போர் மனத்தில் ஆர்வத்தைத் தூண்டுவது உண்மையே. எனினும் சுதந்திரத்தை இடைவிடாது பிரசாரம் செய்து வந்த ஆட்சிவேண்டாக் கொள்கையினர் பலர் சமூக நலனைக் கெடுக்கும் வழிகளிலேயே சென்றிருக்கின்றனர். புனிதமான இலட்சியம் கூட அதனையுடையவர்கள் ஒழுங்கு தவறான முறைகளைக் கையாளுவதால் மாசடைகிறது. மேலும், எவ்வித அதிகாரமும் ஒழிய வேண்டுமென்ற முழக்கத்தை யெழுப்புவது எளிது; அதிகாரம் மறைந்தபின் சமூக வேலைகளைத் திட்டமாக நடத்துவது மிகவும் அரிது. {{float_right|ஸ்ரீ.தோ.}} {{larger|<b>ஆட்டங்களும்விளையாட்டுக்களும்</b>}} (Games & Sports): எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும், எல்லா வயதுகளிலும் மக்கள் ஆட்டத்திலும் விளையாட்டிலும் பொழுதைக் கழிப்பதில் மகிழ்ச்சி பெற்று வந்திருக்கிறார்கள். (இதன் காரணம் பற்றி விளையாட்டும், விளையாட்டு மருத்துவமும் என்ற கட்டுரை பார்க்க). {{larger|பழங்கால ஆட்டங்கள் :}} உடல் நலத்தை உயர்வாகக் கருதிய பழங்கால மக்களது ஆட்டங்களில் உடற்பயிற்சியே முக்கிய நோக்கமாக இருந்தது. இளைஞர்களுக்கு வலிமையும் உள்ளத் துணிவும் அளித்து, அவர்களைப் போர் வீரர்களாகப் பழக்குவதற்காகவே பழங்கால அரசர்கள் ஆட்டங்களுக்கும் விளையாட்டுக்களுக்கும் ஆதரவளித்தனர். இதனால் விற்போர், மற்போர், சிலம்பம் போன்ற விளையாட்டுக்கள் தோன்றின. மற்றும், பெண்களும் செல்வரும் அதிகச் சிரமமின்றி விளையாடும் சொக்கட்டான், பந்தாட்டம் போன்றவைகளும் எல்லா நாடுகளிலும் வழக்கத்தில் இருந்தன. பழங்கால விளையாட்டுகள் பல மதச் சடங்குகளையும் ஈமச் சடங்குகளையும் ஒட்டி நடைபெற்றன. இந்திய நாட்டில் இன்றும் பல பகுதிகளில் ஈமச் சடங்குகளின் போது மற்போர், சிலம்பம் போன்ற விளையாட்டுக்களை ஏற்பாடு செய்கிறார்கள். அஸ்ஸாம் மலையிலுள்ள நாகர்கள் இழுபோர்ப் போட்டிகளால் பயிர்கள் தழைக்கும் என்றும், பந்தாட்டங்களால் மழை பெய்யும் என்றும் நம்புகிறார்கள். பழங்காலக் கிரேக்கர்கள் ஒலிம்பிக் பந்தயங்களுக்கு மிக விரிவான சடங்குகளை வகுத்திருந்தார்கள். இந்தியாவில் சில பண்டிகைகளின் போது மட்டும் நிகழும் ஆட்டங்கள் உள்ளன. பழங்கால ஆட்டங்கள் பெரும்பாலும் மதச்சடங்குகளின் ஒரு பகுதியாகவே பிறந்தன என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். பழங்காலத்தில் இந்திய நாட்டில் மற்போரும், விற்போரும், கத்திச் சண்டையும், சிலம்பமும் முக்கியமான ஆட்டங்களாக விளங்கின. மஞ்சுவிரட்டு, கோழிச் சண்டை, பன்றிச் சண்டை, ஆட்டுச் சண்டை போன்ற விளையாட்டுக்கள் பண்டிகைகளில் முக்கியமான அமிசமாக இந்நாளிலும் விளங்குகின்றன. கரகம் ஆடுதல், பொய்க்கால் குதிரை போன்ற சில ஆட்டங்கள் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் முக்கியமான பகுதிகளாக விளங்குகின்றன. பலபேர் இருந்தாடும் பந்தாட்டங்கள் இந்திய நாட்டு வழக்கத்தில் இருந்தன. கோலி விளையாட்டு எப்போதும் சிறுவர்களது கருத்தைக் கவர்ந்து வந்துள்ளது. குதிரைமீதிருந்து ஆடும் பந்தாட்டம் பல நூற்றாண்டுகளாகவே அரசர்களது பொழுதுபோக்காக இருந்துவந்துள்ளது. கிட்டிப்புள், கிட்டிப்பந்து ஆகிய பழைய விளையாட்டுக்கள் தற்காலத்தில் முக்கியமான விளையாட்டான் கிரிக்கெட்டை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சடுகுடு, கண்ணாம்பூச்சி முதலிய வேறு பல விளையாட்டுக்களும் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளன. வீட்டினுள் இருந்து விளையாடும் விளையாட்டுக்களில் சதுரங்கம் முக்கியமானது. உலகமெங்கும் பரவியுள்ள இவ்விளையாட்டு இந்திய நாட்டில் ஆதியில் தோன்றியது. சீட்டாட்டம் என்பது சீனாவில் தோன்றியது எனக் கருதப்பட்டாலும் நெடுங்காலத்திற்கு முன்னரே திருமாலின் பத்து அவதாரங்களைச் சித்திரமாகத் தீட்டிய சீட்டுக்களைக் கொண்ட விளையாட்டு இந்தியாவிலும் வழக்கத்தில் இருந்துள்ளது. மகளிர் விளையாட்டுக்களான அம்மானை, கழங்கு, கும்மி, கோலாட்டம் ஆகியவையும் மிகத் தொன்மையானவை. சாழல், தோணோக்கம், உந்தியார் என்னும் பலவகையான மகளிர் விளையாட்டுக்கள் இருந்திருக்கின்றன. சொக்கட்டான் விளையாட்டுக்கள் பல வடிவங்களில் இந்தியாவில் வழங்கின. குளிர்காலத்தில் பனிக்கட்டி அதிகமாகத் தோன்றும் பிரதேசங்களில் அவற்றிற்கே தனிப்பட்ட ஆட்ட வகைகள் உண்டு. பனிக்கட்டிப் பரப்பின்மேல் சறுக்குவதும், குதிப்பதும், நடனமாடுவதும், பாய்மரங்கள் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 389 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 138 |oTop = 255 |oLeft = 210 |Location = center |Description = {{center|<b>பனிச் சறுக்கல்<br><br> {{smaller|உதவி : கார்வே தூதர் அலுவலகம், புது டெல்லி.}}</b>}} }} கொண்ட வண்டியில் சறுக்கிச் செல்வதும், நாய்கள் பூட்டிய வண்டிகளைப் பந்தயம் விடுவதும் இவற்றுள் சில, பந்துகளைக்கொண்டு விளையாடப்பெறும் பனிக்கட்டி ஹாக்கி என்ற விளையாட்டு ஒன்றுண்டு. நார்வே, கானடா, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இவை அதிகமாக விளையாடப்பெறுகின்றன. பழங்கால எகிப்தியர்களிடையே மற்போரும் குதியாட்டமும் வழக்கத்தில் இருந்தன. அம்மானை விளையாட்டை அக்காலத்து மாதர் மிக உயர்வாக மதித்தனர். குறுந்தடிகளைக்கொண்டு ஆடப்பட்ட சிலம்பமும் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது. பழங்காலச் சீனர்கள் பலவகையான ஆட்டங்களில் திறமை மிக்கவர்களாக இருந்தார்கள். தற்காலத்தில் ஜப்பானி லிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவியுள்ள ஜூ-ஜிட்சு என்ற மற்போர் முறை சீனாவில் தோன்றியது, அக்காலத்தில் குத்துச்சண்டையும் காற்பந்தாட்டமும் அங்கு வழக்கத்திலிருந்தன.<noinclude></noinclude> sbknttpp1qpapsy77xz1x84gxtdpleq 1436985 1436984 2022-08-05T14:18:12Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்|342|ஆட்டங்களும் விளையாட்டுக்களும்}}</b></noinclude>மனிதனது இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு இவ்வாறு கூறுவர். இக்கொள்கையைப் பெரிதும் எடுத்துக் கூறியவர்களில் டால்ஸ்டாய் என்னும் ரஷ்ய அறிஞர் முக்கியமானவர். மகாத்மா காந்தியும் இதே மனப்போக்குடையவர். சுதந்திரப்பேச்சுக்கேட்போர் மனத்தில் ஆர்வத்தைத் தூண்டுவது உண்மையே. எனினும் சுதந்திரத்தை இடைவிடாது பிரசாரம் செய்து வந்த ஆட்சிவேண்டாக் கொள்கையினர் பலர் சமூக நலனைக் கெடுக்கும் வழிகளிலேயே சென்றிருக்கின்றனர். புனிதமான இலட்சியம் கூட அதனையுடையவர்கள் ஒழுங்கு தவறான முறைகளைக் கையாளுவதால் மாசடைகிறது. மேலும், எவ்வித அதிகாரமும் ஒழிய வேண்டுமென்ற முழக்கத்தை யெழுப்புவது எளிது; அதிகாரம் மறைந்தபின் சமூக வேலைகளைத் திட்டமாக நடத்துவது மிகவும் அரிது. {{float_right|ஸ்ரீ.தோ.}} {{larger|<b>ஆட்டங்களும்விளையாட்டுக்களும்</b>}} (Games & Sports): எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும், எல்லா வயதுகளிலும் மக்கள் ஆட்டத்திலும் விளையாட்டிலும் பொழுதைக் கழிப்பதில் மகிழ்ச்சி பெற்று வந்திருக்கிறார்கள். (இதன் காரணம் பற்றி விளையாட்டும், விளையாட்டு மருத்துவமும் என்ற கட்டுரை பார்க்க). {{larger|பழங்கால ஆட்டங்கள் :}} உடல் நலத்தை உயர்வாகக் கருதிய பழங்கால மக்களது ஆட்டங்களில் உடற்பயிற்சியே முக்கிய நோக்கமாக இருந்தது. இளைஞர்களுக்கு வலிமையும் உள்ளத் துணிவும் அளித்து, அவர்களைப் போர் வீரர்களாகப் பழக்குவதற்காகவே பழங்கால அரசர்கள் ஆட்டங்களுக்கும் விளையாட்டுக்களுக்கும் ஆதரவளித்தனர். இதனால் விற்போர், மற்போர், சிலம்பம் போன்ற விளையாட்டுக்கள் தோன்றின. மற்றும், பெண்களும் செல்வரும் அதிகச் சிரமமின்றி விளையாடும் சொக்கட்டான், பந்தாட்டம் போன்றவைகளும் எல்லா நாடுகளிலும் வழக்கத்தில் இருந்தன. பழங்கால விளையாட்டுகள் பல மதச் சடங்குகளையும் ஈமச் சடங்குகளையும் ஒட்டி நடைபெற்றன. இந்திய நாட்டில் இன்றும் பல பகுதிகளில் ஈமச் சடங்குகளின் போது மற்போர், சிலம்பம் போன்ற விளையாட்டுக்களை ஏற்பாடு செய்கிறார்கள். அஸ்ஸாம் மலையிலுள்ள நாகர்கள் இழுபோர்ப் போட்டிகளால் பயிர்கள் தழைக்கும் என்றும், பந்தாட்டங்களால் மழை பெய்யும் என்றும் நம்புகிறார்கள். பழங்காலக் கிரேக்கர்கள் ஒலிம்பிக் பந்தயங்களுக்கு மிக விரிவான சடங்குகளை வகுத்திருந்தார்கள். இந்தியாவில் சில பண்டிகைகளின் போது மட்டும் நிகழும் ஆட்டங்கள் உள்ளன. பழங்கால ஆட்டங்கள் பெரும்பாலும் மதச்சடங்குகளின் ஒரு பகுதியாகவே பிறந்தன என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். பழங்காலத்தில் இந்திய நாட்டில் மற்போரும், விற்போரும், கத்திச் சண்டையும், சிலம்பமும் முக்கியமான ஆட்டங்களாக விளங்கின. மஞ்சுவிரட்டு, கோழிச் சண்டை, பன்றிச் சண்டை, ஆட்டுச் சண்டை போன்ற விளையாட்டுக்கள் பண்டிகைகளில் முக்கியமான அமிசமாக இந்நாளிலும் விளங்குகின்றன. கரகம் ஆடுதல், பொய்க்கால் குதிரை போன்ற சில ஆட்டங்கள் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் முக்கியமான பகுதிகளாக விளங்குகின்றன. பலபேர் இருந்தாடும் பந்தாட்டங்கள் இந்திய நாட்டு வழக்கத்தில் இருந்தன. கோலி விளையாட்டு எப்போதும் சிறுவர்களது கருத்தைக் கவர்ந்து வந்துள்ளது. குதிரைமீதிருந்து ஆடும் பந்தாட்டம் பல நூற்றாண்டுகளாகவே அரசர்களது பொழுதுபோக்காக இருந்துவந்துள்ளது. கிட்டிப்புள், கிட்டிப்பந்து ஆகிய பழைய விளையாட்டுக்கள் தற்காலத்தில் முக்கியமான விளையாட்டான் கிரிக்கெட்டை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சடுகுடு, கண்ணாம்பூச்சி முதலிய வேறு பல விளையாட்டுக்களும் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளன. வீட்டினுள் இருந்து விளையாடும் விளையாட்டுக்களில் சதுரங்கம் முக்கியமானது. உலகமெங்கும் பரவியுள்ள இவ்விளையாட்டு இந்திய நாட்டில் ஆதியில் தோன்றியது. சீட்டாட்டம் என்பது சீனாவில் தோன்றியது எனக் கருதப்பட்டாலும் நெடுங்காலத்திற்கு முன்னரே திருமாலின் பத்து அவதாரங்களைச் சித்திரமாகத் தீட்டிய சீட்டுக்களைக் கொண்ட விளையாட்டு இந்தியாவிலும் வழக்கத்தில் இருந்துள்ளது. மகளிர் விளையாட்டுக்களான அம்மானை, கழங்கு, கும்மி, கோலாட்டம் ஆகியவையும் மிகத் தொன்மையானவை. சாழல், தோணோக்கம், உந்தியார் என்னும் பலவகையான மகளிர் விளையாட்டுக்கள் இருந்திருக்கின்றன. சொக்கட்டான் விளையாட்டுக்கள் பல வடிவங்களில் இந்தியாவில் வழங்கின. குளிர்காலத்தில் பனிக்கட்டி அதிகமாகத் தோன்றும் பிரதேசங்களில் அவற்றிற்கே தனிப்பட்ட ஆட்ட வகைகள் உண்டு. பனிக்கட்டிப் பரப்பின்மேல் சறுக்குவதும், குதிப்பதும், நடனமாடுவதும், பாய்மரங்கள் {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 389 |bSize = 414 |cWidth = 195 |cHeight = 138 |oTop = 255 |oLeft = 210 |Location = right |Description = {{center|<b>பனிச் சறுக்கல்<br><br> {{smaller|உதவி : கார்வே தூதர் அலுவலகம், புது டெல்லி.}}</b>}} }} கொண்ட வண்டியில் சறுக்கிச் செல்வதும், நாய்கள் பூட்டிய வண்டிகளைப் பந்தயம் விடுவதும் இவற்றுள் சில, பந்துகளைக்கொண்டு விளையாடப்பெறும் பனிக்கட்டி ஹாக்கி என்ற விளையாட்டு ஒன்றுண்டு. நார்வே, கானடா, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இவை அதிகமாக விளையாடப்பெறுகின்றன. பழங்கால எகிப்தியர்களிடையே மற்போரும் குதியாட்டமும் வழக்கத்தில் இருந்தன. அம்மானை விளையாட்டை அக்காலத்து மாதர் மிக உயர்வாக மதித்தனர். குறுந்தடிகளைக்கொண்டு ஆடப்பட்ட சிலம்பமும் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது. பழங்காலச் சீனர்கள் பலவகையான ஆட்டங்களில் திறமை மிக்கவர்களாக இருந்தார்கள். தற்காலத்தில் ஜப்பானி லிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவியுள்ள ஜூ-ஜிட்சு என்ற மற்போர் முறை சீனாவில் தோன்றியது, அக்காலத்தில் குத்துச்சண்டையும் காற்பந்தாட்டமும் அங்கு வழக்கத்திலிருந்தன.<noinclude></noinclude> ld1bfz1srx6eaw5p0k7hb60exnv4bj3 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/495 250 445325 1437013 1436335 2022-08-05T16:22:35Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /></noinclude>{{center|<b>அட்டவணை II குறு ஆவர்த்த அட்டவணை (தற்கால வடிவம்)</b>}} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 495 |bSize = 450 |cWidth = 452 |cHeight = 267 |oTop = 24 |oLeft = -3 |Location = center |Description = குறு ஆவர்த்த அட்டவணை (தற்கால வடிவம்) }}<noinclude></noinclude> nu3mgy2i8eta24glh88u16c9j02oxxd 1437014 1437013 2022-08-05T16:23:02Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="TVA ARUN" /></noinclude>{{center|<b>அட்டவணை II குறு ஆவர்த்த அட்டவணை (தற்கால வடிவம்)</b>}} {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 495 |bSize = 450 |cWidth = 452 |cHeight = 267 |oTop = 24 |oLeft = -3 |Location = center |Description = {{center|குறு ஆவர்த்த அட்டவணை (தற்கால வடிவம்)}} }}<noinclude></noinclude> m4518kmd302mkhsi3o4c7dnkioqmebz பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/560 250 445392 1436977 1436956 2022-08-05T13:32:16Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இசை|511|இசை}}</b></noinclude>{| |1. || 1 || X || <math>\tfrac{2}{2}</math>=<math>\tfrac{3}{2}</math> || |- |2. || <math>\tfrac{3}{2}</math> || X || <math>\tfrac{3}{2}</math>=<math>\tfrac{1}{4}</math>Ξ<math>\tfrac{9}{8}</math> || (மத்யஸ்தாயி) |- |3. || <math>\tfrac{9}{8}</math> || X || <math>\tfrac{3}{2}</math>=<math>\tfrac{27}{16}</math> || |- |4. || <math>\tfrac{2}{1}</math><math>\tfrac{7}{4}</math> || X || <math>\tfrac{}{2}</math>=<math>\tfrac{81}{92}</math>Ξ<math>\tfrac{81}{64}</math> || (மத்யஸ்தாயி) |- |5. || <math>\tfrac{81}{64}</math> || X || <math>\tfrac{8}{2}</math>=<math>\tfrac{243}{128}</math>|| |- |6. || <math>\tfrac{243}{128}</math> || X || <math>\tfrac{3}{2}</math>=<math>\tfrac{729}{256}</math>Ξ<math>\tfrac{729}{512}</math>|| (மத்யஸ்தாயி) |- |} இந்தச் சுரம் நமக்குப் பயன்படாததால் அதற்கு மிக்க அருகிலுள்ளதும் நம் அனுபவத்திற்குற்றதுமான <math>\tfrac{64}{45}</math> எனும் சுரத்தை எடுத்துக்கொள்ளலாம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 560 |bSize = 414 |cWidth = 404 |cHeight = 270 |oTop = 132 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|<b>இருபத்திரண்டு சுருதிகள்</b>}} [64/45=1<sup>.</sup>422. ஆதலால் வித்தியாசம் சிறியதாகும்.] {| |7. || <math>\tfrac{6}{4}</math> <math>\tfrac{4}{5}</math> || X || <math>\tfrac{3}{2}</math>=<math>\tfrac{32}{15}</math>Ξ<math>\tfrac{1}{1}</math><math>\tfrac{}{5}</math> || (மத்யஸ்தாயி) |- |8. || <math>\tfrac{1}{1}</math><math>\tfrac{6}{5}</math> || X || <math>\tfrac{3}{2}</math>=<math>\tfrac{8}{5}</math> || |- |9. || <math>\tfrac{8}{5}</math> || X || <math>\tfrac{3}{8}</math>=<math>\tfrac{12}{8}\tfrac{7}{6}</math>Ξ<math>\tfrac{6}{5}</math> || (மத்யஸ்தாயி) |- |10. || <math>\tfrac{6}{5}</math> || X || <math>\tfrac{8}{2}</math>=<math>\tfrac{9}{5}</math> || (மத்யஸ்தாயி) |- |11. || <math>\tfrac{9}{5}</math> || X || <math>\tfrac{8}{2}</math>=<math>\tfrac{37}{10}</math>Ξ<math>\tfrac{27}{23}</math>|| (மத்யஸ்தாயி) |- |12. || <math>\tfrac{27}{20}</math> || X || <math>\tfrac{3}{2}</math>=<math>\tfrac{81}{80}</math>|| |- |} [இந்த முறையில் 4/3 மத்யமம் கிடைப்பதில்லை.] {{gap}}{{larger|ஷட்ஜ - மத்யம இடைவெளி: 4/3}} 1×1=4 (மத்யஸ்தாயி) (மத்யஸ்தாயி) (மத்யஸ்தாயி) (மத்யஸ்தாயி) (மத்யஸ்தாயி) இது நமக்குப் பயன்படாததால் இதற்குப் பதிலாக 45/32 எனும் சுரத்தை ஏற்கலாம். X=4=} X = X-40=40 X-49 X=¹22 (இந்த முறையில் 3/2 பஞ்சமம் கிடைப்பதில்லை.] இவ்விதம் கிடைத்த சுருதியிடைவெளிகள் பின்வருமாறு: 1,81/80,256/243, 16/15, 10/9, 9/8 இருபத்திரண்டு சுருதிகள் இசைக் கணக்கு (வெவ்வேறு விதம்) 1 1 1 1 1 25/24 256/243 256/243 256/243 256/243 16/15 10/9 5/3 27/16 (மத்யஸ்தாயி ) (மத்யஸ்தாயி) 40/27 3/2 25/16 128/81 128/81 128/81 8/5 81/64 45/32 64/45 40/27 128/81 16/9 9/5 15/8 48/25 243/128 243/128 243/128 243/128 32/27, 6/5, 5/4, 81/64, 4/3, 27/20, 45/32, 64/45, 40/27, 3/2, 128/81, 8/5, 5/3, 27/16, 16/9, 9/5. 15/8, 243/128. அந்தர காந்தார முறையில் 25/24 என்ற சுருதியும் கிடைக்கும். இந்தச் சுருதிகளில் கையாளச் சௌகரியமும் காதுக்கினிமையும் உள்ள 22 சுருதிகளையே கருநாடக இசை முறையில் ஏற்றுக் கொண்டிருக்கிறார் கள். இந்த 22 இடைவெளிகளைக் கணக்கிடுவதிலும் பல கருத்து வேறுபாடுகள் இருந்துவருகின்றன. இந்த இடைவெளிகளைச் சுருதி என்றழைத்தார்கள். சுருதி என்பது காதால் தெளிவாகக் கேட்கக்கூடிய தன்மை உடையது என்று பொருள்படுவது. இந்த 22 சுருதிகளின் பெயர்களையும் அவைகளுக்குள்ள இடைவெளிகளையும் பேதங்களுடன் அட்டவணையில் காணலாம். ஒரே மேள இராகத்தில் உபயோகப்படுத்தப்படும் ஏழு சுரங்களுக்குள்ள இடைவெளிகளை நிச்சயப்படுத்த இந்த 22 சிறு இடைவெளிகளைப் பலவாறு சேர்க்கவேண்டி வருகிறது. ஓரிடை, இரண்டிடை<noinclude></noinclude> sr1x7wkhcve6th6beu8krwnf5n3k7z7 1436979 1436977 2022-08-05T13:52:50Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இசை|511|இசை}}</b></noinclude>{| |1. || 1 || X || <math>\tfrac{2}{2}</math>=<math>\tfrac{3}{2}</math> || |- |2. || <math>\tfrac{3}{2}</math> || X || <math>\tfrac{3}{2}</math>=<math>\tfrac{1}{4}</math>Ξ<math>\tfrac{9}{8}</math> || (மத்யஸ்தாயி) |- |3. || <math>\tfrac{9}{8}</math> || X || <math>\tfrac{3}{2}</math>=<math>\tfrac{27}{16}</math> || |- |4. || <math>\tfrac{27}{16}</math> || X || <math>\tfrac{}{2}</math>=<math>\tfrac{81}{92}</math>Ξ<math>\tfrac{81}{64}</math> || (மத்யஸ்தாயி) |- |5. || <math>\tfrac{81}{64}</math> || X || <math>\tfrac{8}{2}</math>=<math>\tfrac{243}{128}</math>|| |- |6. || <math>\tfrac{243}{128}</math> || X || <math>\tfrac{3}{2}</math>=<math>\tfrac{729}{256}</math>Ξ<math>\tfrac{729}{512}</math>|| (மத்யஸ்தாயி) |- |} இந்தச் சுரம் நமக்குப் பயன்படாததால் அதற்கு மிக்க அருகிலுள்ளதும் நம் அனுபவத்திற்குற்றதுமான <math>\tfrac{64}{45}</math> எனும் சுரத்தை எடுத்துக்கொள்ளலாம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 560 |bSize = 414 |cWidth = 404 |cHeight = 270 |oTop = 132 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|<b>இருபத்திரண்டு சுருதிகள்</b>}} [64/45=1<sup>.</sup>422. ஆதலால் வித்தியாசம் சிறியதாகும்.] {| |7. || <math>\tfrac{6}{4}</math> <math>\tfrac{4}{5}</math> || X || <math>\tfrac{3}{2}</math>=<math>\tfrac{32}{15}</math>Ξ<math>\tfrac{1}{1}</math><math>\tfrac{}{5}</math> || (மத்யஸ்தாயி) |- |8. || <math>\tfrac{1}{1}</math><math>\tfrac{6}{5}</math> || X || <math>\tfrac{3}{2}</math>=<math>\tfrac{8}{5}</math> || |- |9. || <math>\tfrac{8}{5}</math> || X || <math>\tfrac{3}{8}</math>=<math>\tfrac{12}{8}\tfrac{7}{6}</math>Ξ<math>\tfrac{6}{5}</math> || (மத்யஸ்தாயி) |- |10. || <math>\tfrac{6}{5}</math> || X || <math>\tfrac{8}{2}</math>=<math>\tfrac{9}{5}</math> || (மத்யஸ்தாயி) |- |11. || <math>\tfrac{9}{5}</math> || X || <math>\tfrac{8}{2}</math>=<math>\tfrac{37}{10}</math>Ξ<math>\tfrac{27}{23}</math>|| (மத்யஸ்தாயி) |- |12. || <math>\tfrac{27}{20}</math> || X || <math>\tfrac{3}{2}</math>=<math>\tfrac{81}{80}</math>|| |- |} [இந்த முறையில் 4/3 மத்யமம் கிடைப்பதில்லை.] {{gap}}{{larger|ஷட்ஜ - மத்யம இடைவெளி: 4/3}} {| |1. || 1 || X || <math>\tfrac{4}{3}</math>=<math>\tfrac{4}{3}</math> || |- |2. || <math>\tfrac{4}{3}</math> || X || <math>\tfrac{4}{8}</math>=<math>\tfrac{16}{9}</math> || |- |3. || <math>\tfrac{16}{9}</math> || X || <math>\tfrac{4}{3}</math>=<math>\tfrac{64}{27}</math>Ξ<math>\tfrac{32}{27}</math> || (மத்யஸ்தாயி) |- |4. || <math>\tfrac{32}{27}</math> || X || <math>\tfrac{4}{3}</math>=<math>\tfrac{128}{81}</math> || (மத்யஸ்தாயி) |- |5. || <math>\tfrac{128}{81}</math> || X || <math>\tfrac{4}{3}</math>=<math>\tfrac{513}{243}</math>Ξ<math>\tfrac{256}{243}</math>|| (மத்யஸ்தாயி) |- |6. || <math>\tfrac{256}{243}</math> || X || <math>\tfrac{4}{3}</math>=<math>\tfrac{1024}{729}</math>|| |- |} இது நமக்குப் பயன்படாததால் இதற்குப் பதிலாக 45/32 எனும் சுரத்தை ஏற்கலாம். [124/729=1<sup>.</sup>405 : 45/32=1<sup>.</sup>406. இங்கு வித்தியாசம் மிகச் சிறியதாகும்.] (இந்த முறையில் 3/2 பஞ்சமம் கிடைப்பதில்லை.]<br> இவ்விதம் கிடைத்த சுருதியிடைவெளிகள் பின்வருமாறு: 1, 81/80, 256/243, 16/15, 10/9, 9/8 இருபத்திரண்டு சுருதிகள் இசைக் கணக்கு (வெவ்வேறு விதம்) அந்தர காந்தார முறையில் 25/24 என்ற சுருதியும் கிடைக்கும். இந்தச் சுருதிகளில் கையாளச் சௌகரியமும் காதுக்கினிமையும் உள்ள 22 சுருதிகளையே கருநாடக இசை முறையில் ஏற்றுக் கொண்டிருக்கிறார் கள். இந்த 22 இடைவெளிகளைக் கணக்கிடுவதிலும் பல கருத்து வேறுபாடுகள் இருந்துவருகின்றன. இந்த இடைவெளிகளைச் சுருதி என்றழைத்தார்கள். சுருதி என்பது காதால் தெளிவாகக் கேட்கக்கூடிய தன்மை உடையது என்று பொருள்படுவது. இந்த 22 சுருதிகளின் பெயர்களையும் அவைகளுக்குள்ள இடைவெளிகளையும் பேதங்களுடன் அட்டவணையில் காணலாம். ஒரே மேள இராகத்தில் உபயோகப்படுத்தப்படும் ஏழு சுரங்களுக்குள்ள இடைவெளிகளை நிச்சயப்படுத்த இந்த 22 சிறு இடைவெளிகளைப் பலவாறு சேர்க்கவேண்டி வருகிறது. ஓரிடை, இரண்டிடை<noinclude></noinclude> tjhqifwpt5h6p3vikidnfsqmdwgnwrj 1436981 1436979 2022-08-05T14:11:13Z Deepa arul 5675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="N.Uma Maheswari Murali" /><b>{{rh|இசை|511|இசை}}</b></noinclude>{| |1. || 1 || X || <math>\tfrac{2}{2}</math>=<math>\tfrac{3}{2}</math> || |- |2. || <math>\tfrac{3}{2}</math> || X || <math>\tfrac{3}{2}</math>=<math>\tfrac{1}{4}</math>Ξ<math>\tfrac{9}{8}</math> || (மத்யஸ்தாயி) |- |3. || <math>\tfrac{9}{8}</math> || X || <math>\tfrac{3}{2}</math>=<math>\tfrac{27}{16}</math> || |- |4. || <math>\tfrac{27}{16}</math> || X || <math>\tfrac{}{2}</math>=<math>\tfrac{81}{92}</math>Ξ<math>\tfrac{81}{64}</math> || (மத்யஸ்தாயி) |- |5. || <math>\tfrac{81}{64}</math> || X || <math>\tfrac{8}{2}</math>=<math>\tfrac{243}{128}</math>|| |- |6. || <math>\tfrac{243}{128}</math> || X || <math>\tfrac{3}{2}</math>=<math>\tfrac{729}{256}</math>Ξ<math>\tfrac{729}{512}</math>|| (மத்யஸ்தாயி) |- |} இந்தச் சுரம் நமக்குப் பயன்படாததால் அதற்கு மிக்க அருகிலுள்ளதும் நம் அனுபவத்திற்குற்றதுமான <math>\tfrac{64}{45}</math> எனும் சுரத்தை எடுத்துக்கொள்ளலாம். {{Css image crop |Image = கலைக்களஞ்சியம்_1.pdf |Page = 560 |bSize = 414 |cWidth = 404 |cHeight = 270 |oTop = 132 |oLeft = 6 |Location = center |Description = }} {{center|<b>இருபத்திரண்டு சுருதிகள்</b>}} [64/45=1<sup>.</sup>422. ஆதலால் வித்தியாசம் சிறியதாகும்.] {| |7. || <math>\tfrac{64}{45}</math> || X || <math>\tfrac{3}{2}</math>=<math>\tfrac{32}{15}</math>Ξ<math>\tfrac{1}{1}</math><math>\tfrac{}{5}</math> || (மத்யஸ்தாயி) |- |8. || <math>\tfrac{16}{15}</math> || X || <math>\tfrac{3}{2}</math>=<math>\tfrac{8}{5}</math> || |- |9. || <math>\tfrac{8}{5}</math> || X || <math>\tfrac{3}{8}</math>=<math>\tfrac{12}{8}\tfrac{7}{6}</math>Ξ<math>\tfrac{6}{5}</math> || (மத்யஸ்தாயி) |- |10. || <math>\tfrac{6}{5}</math> || X || <math>\tfrac{8}{2}</math>=<math>\tfrac{9}{5}</math> || (மத்யஸ்தாயி) |- |11. || <math>\tfrac{9}{5}</math> || X || <math>\tfrac{8}{2}</math>=<math>\tfrac{37}{10}</math>Ξ<math>\tfrac{27}{23}</math>|| (மத்யஸ்தாயி) |- |12. || <math>\tfrac{27}{20}</math> || X || <math>\tfrac{3}{2}</math>=<math>\tfrac{81}{80}</math>|| |- |} [இந்த முறையில் 4/3 மத்யமம் கிடைப்பதில்லை.] {{gap}}{{larger|ஷட்ஜ - மத்யம இடைவெளி: 4/3}} {| |1. || 1 || X || <math>\tfrac{4}{3}</math>=<math>\tfrac{4}{3}</math> || |- |2. || <math>\tfrac{4}{3}</math> || X || <math>\tfrac{4}{8}</math>=<math>\tfrac{16}{9}</math> || |- |3. || <math>\tfrac{16}{9}</math> || X || <math>\tfrac{4}{3}</math>=<math>\tfrac{64}{27}</math>Ξ<math>\tfrac{32}{27}</math> || (மத்யஸ்தாயி) |- |4. || <math>\tfrac{32}{27}</math> || X || <math>\tfrac{4}{3}</math>=<math>\tfrac{128}{81}</math> || (மத்யஸ்தாயி) |- |5. || <math>\tfrac{128}{81}</math> || X || <math>\tfrac{4}{3}</math>=<math>\tfrac{513}{243}</math>Ξ<math>\tfrac{256}{243}</math>|| (மத்யஸ்தாயி) |- |6. || <math>\tfrac{256}{243}</math> || X || <math>\tfrac{4}{3}</math>=<math>\tfrac{1024}{729}</math>|| |- |} இது நமக்குப் பயன்படாததால் இதற்குப் பதிலாக 45/32 எனும் சுரத்தை ஏற்கலாம். [124/729=1<sup>.</sup>405 : 45/32=1<sup>.</sup>406. இங்கு வித்தியாசம் மிகச் சிறியதாகும்.] {| |7. || <math>\tfrac{45}{32}</math> || X || <math>\tfrac{4}{8}</math>=<math>\tfrac{15}{8}</math> || |- |8. || <math>\tfrac{15}{8}</math> || X || <math>\tfrac{4}{}</math>=<math>\tfrac{5}{}</math>Ξ<math>\tfrac{5}{4}</math> || |- |9. || <math>\tfrac{5}{3}</math> || X || <math>\tfrac{4}{3}</math>=<math>\tfrac{5}{3}</math> || |- |10. || <math>\tfrac{5}{3}</math> || X || <math>\tfrac{4}{3}</math>=<math>\tfrac{20}{9}</math>Ξ<math>\tfrac{10}{9}</math> || (மத்யஸ்தாயி) |- |11. || <math>\tfrac{10}{9}</math> || X || <math>\tfrac{4}{3}</math>=<math>\tfrac{40}{27}</math>|| |- |12. || <math>\tfrac{40}{27}</math> || X || <math>\tfrac{4}{3}</math>=<math>\tfrac{160}{1}</math>|| |- |} (இந்த முறையில் 3/2 பஞ்சமம் கிடைப்பதில்லை.]<br> இவ்விதம் கிடைத்த சுருதியிடைவெளிகள் பின்வருமாறு: 1, 81/80, 256/243, 16/15, 10/9, 9/8 32/27, 6/5, 5/4, 81/64, 4/3, 27/20, 45/32, 64/45, 40/27, 3/2, 128/81, 8/5, 5/3, 27/16, 16/9, 9/5, 15/8, 243/128 அந்தர காந்தார முறையில் 25/24 என்ற சுருதியும் கிடைக்கும். இந்தச் சுருதிகளில் கையாளச் சௌகரியமும் காதுக்கினிமையும் உள்ள 22 சுருதிகளையே கருநாடக இசை முறையில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த 22 இடைவெளிகளைக் கணக்கிடுவதிலும் பல கருத்து வேறுபாடுகள் இருந்துவருகின்றன. இந்த இடைவெளிகளைச் சுருதி என்றழைத்தார்கள். சுருதி என்பது காதால் தெளிவாகக் கேட்கக்கூடிய தன்மை உடையது என்று பொருள்படுவது. இந்த 22 சுருதிகளின் பெயர்களையும் அவைகளுக்குள்ள இடைவெளிகளையும் பேதங்களுடன் அட்டவணையில் காணலாம். ஒரே மேள இராகத்தில் உபயோகப்படுத்தப்படும் ஏழு சுரங்களுக்குள்ள இடைவெளிகளை நிச்சயப்படுத்த இந்த 22 சிறு இடைவெளிகளைப் பலவாறு சேர்க்கவேண்டி வருகிறது. ஓரிடை, இரண்டிடை<noinclude></noinclude> o6pchn2vfl6btx8dac0s1a1u29l9luq பக்கம்:கனிச்சாறு 2.pdf/3 250 446142 1436989 1418703 2022-08-05T15:15:46Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|உ||கனிச்சாறு இரண்டாம் தொகுதி}}</b></noinclude>{| | முழுமையான <br>முதற்பதிப்பு || : || தி.பி. 2043. துலை (அத்தோபர் 2012) |- | நூல் தலைப்பு || : || {{larger|<b>பாவலரேறு<br>பெருஞ்சித்திரனார் பாடல்கள்</b>}}<br>(கனிச்சாறு - இரண்டாம் தொகுதி) |- | ஆசிரியர் || : || <b>''பாவலரேறு பெருஞ்சித்திரனார்''</b> |- | வெளியீடு || : || <b>{{larger|தென்மொழி பதிப்பகம்<br>செந்தமிழ் அடுக்ககம்}}<br> (சி.கே. அடுக்ககம்)<br><br> மேடவாக்கம் கூட்டுச்சாலை,<br>மேடவாக்கம், சென்னை - 600 100<br> 94444 40449</b> |- | அச்சாக்கம் || : || <b>தென்மொழி அச்சகம்,</b><br> சென்னை - 600 100 |- | உரிமை || : || <b>{{larger|''தாமரை பெருஞ்சித்திரனார்''}}</b> |- | பக்கங்கள் || : || 36+250 |- | தாள் || : || படத்தாள் (மேப் லித்தோ 18.6) |- | அளவு || : || {தெம்மி (1/8) |- | படிகள் || : || 1000 |- | விலை || : || உரு. {{larger|<b>220.00</b>}} |}<noinclude></noinclude> qdco2kshyi4dajkfyd6yroj5h8l1sal பக்கம்:கனிச்சாறு 2.pdf/4 250 446143 1436990 1436263 2022-08-05T15:19:34Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|| ௩}}</b></noinclude> {{c|{{larger|<b>முன்னுரை</b>}}}} இயற்கை ஓர் ஒழுங்குடையது. நிலம் நெறியான ஓர் இயல்போட்டத்தை உடையது. கதிரவனும் விண்மீனும் ஓர் ஒழுங்கான அசைவை உடையன. புடவியும் பேரண்டமும் அவற்றுள் இயங்கும் பல்லாயிரங்கோடி இயற்கைக் கோளங்களும் சுடர்த் தொகுதிகளும் சிறிதே ஒழுங்கின்றி இயங்கத் தொடங்கினும் உடனே பேரழிவு நேரும். இவ்வியற்கை நிலையினைப்போல், இயற்கையுட்பட்ட அனைத்து நிலைகளிலும் அதனதற்குப் பொருந்திய ஓர் ஒழுங்கு கடைப்பிடிக்கப் பெறுதல் வேண்டும். இயற்கை அறிவிக்கும் இவ்வொழுங்கு சிதைவுறின், அச் சிதைவுக்கேற்ப, படிப்படியான அழிவுநிலைகளே நேரும் என்பதில் துளியும் ஐயமின்று. உயிர்கள் அனைத்தினும் மேம்பட்டு விளங்கும் மாந்த இயக்கமும் அதன் பரும, நுண்ம நிலைகளுக்கு ஏற்ப, ஒழுங்குற இயங்குதல் வேண்டும் என்பதே இயற்கையின் உட்கோளாதல் வேண்டும். ஒழுங்கற்ற பரும இயக்கத்தால் உடல் சிதைவுறுதல்போல் ஒழுங்கற்ற உணர்வியக்கத்தால் உள்ளமும் சிதைவுறும். உள்ளச் சிதைவு மாந்தப் பேரழிவையே தோற்றுவிக்கும். உணர்வியக்கத்தின் தலைமைக்கூறு மொழி. மொழியின் படிநிலையுற்ற ஒழுங்கியக்கம் இலக்கணம். எனவே, இலக்கணச் சிதைவு மொழியைச் சிதைப்பதும், மொழிச் சிதைவு கருத்தைச் சிதைப்பதும், கருத்துச் சிதைவு உணர்வைச் சிதைப்பதும், உணர்வுச் சிதைவு உளத்தைச் சிதைப்பதும், உளச்சிதைவு உலகியலைச் சிதைப்பதும் ஒன்றினின்று ஒன்றெழும் தொடர் விளைவுகளாகும். மொழியின் மலர்ச்சியே பாட்டு. பாட்டுணர்வால்தான் மாந்தன் மீமிசை உயிருணர்வை எட்டுகின்றான். மற்ற உணர்வுகள் மாந்த உணர்வுகளிலேயே அவனைத் தேக்கி வைத்திருக்கையில், பாடல் உணர்வே புறவுணர்வுத் தளைகளைக் கட்டறுத்து, உலகியல் கூறுகளினின்றும் விடுவித்து, அவனை மீமிசை மாந்த நிலைக்கு உயர்த்துகிறது. பாட்டுணர்வு தாழ்ச்சியுறுதலால் அவன் உணர்வுயர்ச்சிக்குச் சறுக்கல் ஏற்படுகின்றது; உயிர்மைக்கு அயர்வு ஏற்படுகின்றது. இதனால் இயற்கைத் துய்ப்பு கெடுகிறது. உயிர்மை குன்றுகிறது; உலகியல் உணர்விருள் அவனைப் பற்றி<noinclude></noinclude> 4qepifpabwbpl5b6qajizdvseq1e8v9 பக்கம்:கனிச்சாறு 2.pdf/5 250 446144 1436991 1418705 2022-08-05T15:21:05Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|௪||கனிச்சாறு இரண்டாம் தொகுதி}}</b></noinclude>அலைக்கழிக்கின்றது. இவ் வியற்கைப் பொது நிலைகளை யொட்டி, ஒவ்வொருவரும் சில இன்றியமையாக் கலை, இலக்கியக் கூறுகளை உணர்ந்திருத்தல் வேண்டும். இவற்றுள் கலை புறமும் இலக்கியம் அகமும் ஆகும். இலக்கியத்தின் கொடுமுடி பாடல்! பிற அவற்றினின்று விரிந்து படரும் கொடிகளையும் கிளைகளையும் போன்றவை. ஒழுங்கற்ற ஓசையைவிட ஒழுங்கான ஒலி உயிர்க்கவர்ச்சி உடையது. ஒலியொழுங்கோடு உணர்வும் சேருமாயின் உயிர்க் கவர்ச்சியுடன் உளக்கவர்ச்சியையும் அஃது உண்டாக்கி, அறிவுணர்வு உயர்ச்சியுடைய மாந்தனை அது தன்வயப்படுகிறது. இனி, உணர்வு சேர்ந்த ஒலியொழுங்குடன் ஏற்ற இறக்க அலைவொலிகள் அளவொத்து இணைதலும், பின் அவற்றுடன் ஏதாமொரு மொழி சேர்தலும், அவற்றைப் <b>பண்</b> என்றும் பாவென்றும் உயர்நிலைப்படுத்துவிக்கும். இப் பண்ணொடு தாளம் சேர்ந்து <b>இசை</b>யென்றும், பாவொடு கருத்துச் சேர்ந்து பாடல் என்றும் தமிழில் வழங்கும். இனி, பண்ணும் பாடலும் சேர்ந்து நடக்கும் இசைத்தமிழ் என்னும் ஒரு மொழியியல் மரபையே பண்டைத் தமிழ்மொழி முனைவோர் உலகோர் உணர்ந்துய்ய உண்டாக்கித் தந்துள்ளனர். வேற்றுமொழிகளில் இம் மொழியியல் கூறு தோன்றியிருப்பினும் தமிழ்மொழியில் உள்ளதுபோல், அஃது அத்துணையளவு தனித்தோ, சிறந்தோ இயங்கவில்லை யென்பதை அறிவினார் உணர்வர். இனி, பாடல் என்பது <b>பா தழுவிய கருத்துமொழி</b> என்று பொதுவில் பொருள் தரினும், அதற்கெனப் பல தனிக்கூறுகள் உண்டு. பாடல் இயற்கையாக வெளிப்படுதல் வேண்டும். மனமும் அறிவும் வயப்பட, உணர்வும் எழுச்சியும் மேம்பட்டுப் புறநிலையழுத்தத்தால் பீறிக் கொண்டு வெளியேறும் பாடலிலேயே இயற்கைச் சாயல் படிந்திருக்கும். <b>மொத்தத்தில் அஃது ஒரு வெளிப்பாடாக இருத்தல் வேண்டுமேயன்றி, வெளிப்படுத்துதலாக இருத்தல் கூடாது.</b> அவ்வாறு உள்ள நிலையில் அது சிறவாது; நிலைத்து நிற்காது; அதுவன்றிக் காலத்தில் கரைந்து போகும் தன்மையுடையதாக அஃது இருக்கும். ஓர் உணர்வு சான்ற இயற்கைப்பாடல் உணர்வுள்ள உள்ளங்களை மட்டுமேயல்லாது, உணர்வற்ற உள்ளங்களையும் அவையளவில் தொடுதல் வேண்டும். அப்பொழுதுதான் அஃதால் உயிர்க்கூறு படிப்படியாக மலர்ச்சி எய்துதல் முடியும். பிற உள்ளங்களை<noinclude></noinclude> bej0w8egwsiespglquk3no37jfv2jjw பக்கம்:கனிச்சாறு 2.pdf/6 250 446145 1436992 1418706 2022-08-05T15:23:37Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||ரு}}</b></noinclude>ஆட்கொள்ளும் நிலையில் அஃது ஒரு மண்வெட்டியைப்போல் பயன்படுதல் வேண்டும். மண்வெட்டி பள்ளம் மேடுகள் நிறைந்த நிலத்திற்கே மிகுதியும் பயன்படுவதாகும். சமமான தரையில் அதன் பயன்பாடு மிகவும் குறைவே. வெறும் சுவைக்காக மட்டுமே வெளிப்படும் பாடல்கள் மாந்த உள்ளுணர்வுகளை வளர்த்து வாழ்விக்காமல் அவற்றை மழுங்கடித்துவிடும். பாட்டுணர்வு இயற்கையேயாயினும், அதன் புறக்கூறுகள் உலகியல் சான்றனவே. அப் புறக்கூறுகள் அசை படிந்த சொற்களாலும், சொற்களமைந்த சீர்களாலும், சீர்கள் இணைந்தியங்கும் யாப்பாலும், யாப்புடன் கூடிய அணியாலும், அணிபெற்றியங்கும் கருத்தாலும் விளங்கித் தோன்றுனவாகும். அவையே பாடலுக்குரிய தகுதிகளும் ஆகும். அவை பதினான்கு இன்றியமையாக் கூறுகளைக் கொண்டவை. அவை இவை: {{left_margin|3em|<b>அ. சொற்கள்</b> 1. கருத்தாழம் நிரம்பிய தேர்ந்த சொற்கள். 2. சுற்றி வளைக்காத சொல்லாட்சி. 3. வளங்கொழுவிய பொருத்தமான சொற்கள். 4. குறைவான இடைச் சொற்கள். <b>ஆ. சீர் அமைப்பு:</b> 1. ஒலிநயத்தால் இணைகின்ற சீர் அமைப்பு. 2. கருத்தின் உணர்வுக்கேற்ற சீர் நீளம். 3. வகையுளி அல்லது சொற்பிரிப்பால் பாட்டின் ஓட்டத்தையும் அழகையும் குறைக்காமல், முழுச் சொல்லால் அல்லது சொற்களால் அமைந்த சீர்கள். <b>இ. யாப்பு</b> 1. பிழையற்ற யாப்பு. 2. கூறப்போகும் கருத்தின் உணர்வை மழுங்கடிக்காத யாப்பு வகை. 3. உணர்வுயர்ச்சிக்கும் கருத்தகலத்திற்கும் ஏற்பத் தெரிந்தெடுக்கப் பெற்ற யாப்பு. <b>ஈ. அணிகள்</b> 1. எளிதே விளங்கிப் பாடற் கருத்துடன் உடனே பொருந்துமாறு இருக்கும் உவமைகளும் உருவகங்களும்.}}<noinclude></noinclude> t9zgzdrr4zklstlk2roz4mhyeb95f5h 1436993 1436992 2022-08-05T15:24:10Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||ரு}}</b></noinclude>ஆட்கொள்ளும் நிலையில் அஃது ஒரு மண்வெட்டியைப்போல் பயன்படுதல் வேண்டும். மண்வெட்டி பள்ளம் மேடுகள் நிறைந்த நிலத்திற்கே மிகுதியும் பயன்படுவதாகும். சமமான தரையில் அதன் பயன்பாடு மிகவும் குறைவே. வெறும் சுவைக்காக மட்டுமே வெளிப்படும் பாடல்கள் மாந்த உள்ளுணர்வுகளை வளர்த்து வாழ்விக்காமல் அவற்றை மழுங்கடித்துவிடும். பாட்டுணர்வு இயற்கையேயாயினும், அதன் புறக்கூறுகள் உலகியல் சான்றனவே. அப் புறக்கூறுகள் அசை படிந்த சொற்களாலும், சொற்களமைந்த சீர்களாலும், சீர்கள் இணைந்தியங்கும் யாப்பாலும், யாப்புடன் கூடிய அணியாலும், அணிபெற்றியங்கும் கருத்தாலும் விளங்கித் தோன்றுனவாகும். அவையே பாடலுக்குரிய தகுதிகளும் ஆகும். அவை பதினான்கு இன்றியமையாக் கூறுகளைக் கொண்டவை. அவை இவை: {{left_margin|3em|<b>அ. சொற்கள்</b> 1. கருத்தாழம் நிரம்பிய தேர்ந்த சொற்கள். 2. சுற்றி வளைக்காத சொல்லாட்சி. 3. வளங்கொழுவிய பொருத்தமான சொற்கள். 4. குறைவான இடைச் சொற்கள். <b>ஆ. சீர் அமைப்பு:</b> 1. ஒலிநயத்தால் இணைகின்ற சீர் அமைப்பு. 2. கருத்தின் உணர்வுக்கேற்ற சீர் நீளம். 3. வகையுளி அல்லது சொற்பிரிப்பால் பாட்டின் ஓட்டத்தையும் அழகையும் குறைக்காமல், முழுச் சொல்லால் அல்லது சொற்களால் அமைந்த சீர்கள். <b>இ. யாப்பு</b> 1. பிழையற்ற யாப்பு. 2. கூறப்போகும் கருத்தின் உணர்வை மழுங்கடிக்காத யாப்பு வகை. 3. உணர்வுயர்ச்சிக்கும் கருத்தகலத்திற்கும் ஏற்பத் தெரிந்தெடுக்கப் பெற்ற யாப்பு. <b>ஈ. அணிகள்</b> 1. எளிதே விளங்கிப் பாடற் கருத்துடன் உடனே பொருந்துமாறு இருக்கும் உவமைகளும் உருவகங்களும்.}}<noinclude></noinclude> 2gcct5t0y9fwpn2m24nlz5umlvlppxs பக்கம்:கனிச்சாறு 2.pdf/7 250 446214 1436995 1418707 2022-08-05T15:27:24Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|௬||கனிச்சாறு இரண்டாம் தொகுதி}}</b></noinclude> {{left_margin|3em|2. பாட்டின் பெருமையைக் குறைக்கும் பிற ஆரவார அணிகள் பெரிதும் தவிர்க்கப் பெறுதல். <b>உ. கருத்து</b> 1. மயக்கம் தராது உடனே புலப்படும் தெளிவு நிறைந்த கருத்து. 2. பொது மனத்திற்குப் புலப்படாத உயர்ந்த கருத்து.}} இனி, முன்னைக் காலத்து, இயற்கை உணர்வின் ஒலியொழுங்குக் கொத்த மரபு தழுவிய பாடல்கள், தாய்மையுணர்வு நிரம்பிய ஓரிளம் பெண் பெற்றெடுக்கும், நல்ல அழகிய அறிவறிந்த நிறைமாதக் குழந்தைகள் போன்றவை. சோம்பலாலும் அறிவுக் குறுக்கத்தாலும் மன இழிவாலும் பிதுக்கப்பெறும் இக்காலத்து மரபு நழுவிய பாடல்கள், தாய்மையுணர்வு நிரம்பாத பெண்ணுரு சான்ற ஒருத்தி, அரைகுறை முதிர்ச்சியோடு பெற்றெடுக்கும், உறுப்புகள் குறைவுற்று அழகும் அறிவும் குறைந்த, குறைமாதக் குழந்தைகள் போன்றவை. நன்கு வளர்ச்சியுறாத உறுப்பு நிலைகளும், உணர்வு நிலைகளும், அக்குழந்தைகளைக் கவர்ச்சியற்றனவாகவும் நீடிய காலத் தங்குதலற்றனவாகவும் ஆக்கிவிடுகின்றன. ஒழுங்கற்ற ஓசை இசையாகாததுபோல், ஒழுங்கான கட்டுக்கோப்பற்ற கருத்து வெளிப்பாடும் பாடலாகாது. பாடல் உள்ளத்தின் மலர்; உணர்வின் மணம்; உயிரின் ஒலியொழுங்கு. பாடல் மலரிலிருந்தே உரைநடையென்னும் காய் தோன்றிக் கதையாகக் கனிகிறது. பாடல் உணர்வு சிதைவுறுமானால் உரைநடையாக அது தத்துகிறது. உரைநடையில் பாடல் உண்டு. பாடலில் உரைநடை இல்லை. பாடல் உரைநடையாவது, மலர் தன் மென்மையையும் மணத்தையும் இழந்து பருமையும் வெறுமையும் உறுவது போன்றதே. அத்தகைய பாடற்போலிகள் தேங்காய் மட்டையின் ஊறலின்று அடித்தெடுக்கும் நார் போன்றவை. இனி, உண்மையான பாடலை வெளிப்படுத்துபவனே உயர்ந்த பாவலன். <b>பாவலன் பிறக்கிறான்; பாடல் தோன்றுகிறது.</b> பாவலன் படைப்பாளன். அவன் உண்டாக்கித் தரும் உணர்வுருவாய கற்பனை மாந்தர்களையே இயற்கை பருவுருவாக உலகுக்குப் படைத்துத் தருகிறது. எனவே உலகின் இயற்கைப் படைப்புக்கே அவன் உணர்வுக் கருவைத் தருபவனாகிறான்.<noinclude></noinclude> bmx3rx0u1imvr6y5oed3xxj669ctv7w பக்கம்:கனிச்சாறு 2.pdf/8 250 446215 1436994 1418709 2022-08-05T15:25:41Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||எ}}</b></noinclude> உயர்ந்த உண்மைப் பாவலனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பத்து. அவை, நுண்ணோக்கு, இயற்கையீடுபாடு, சொல்வன்மை, பாத்திறன், யாப்பறிவு, மொழியறிவு, கற்பனையாற்றல், மனவியல், நடுவுநிலைமை, துணிவு என்பனவாகும். இவை ஒன்றின் ஒன்று சிறந்து விளங்கிப் பாவலன் ஆற்றலைப் படிப்படியாக மிகுவிக்கின்றன. இத்தகுதிகளின் பொருத்தத்திற்கேற்பவே ஒவ்வொருவனின் பாடலும் ஒளிர்ந்து சுடரும்; காலத்தை வெல்லும்; மக்கள் கருத்தினை ஆட்கொள்ளும்; அறிஞர் மதிப்பினைப் பெறும். <b>கனிச்சாறு</b> என்னும் இப்பாடல் தொகுதி பல நூறு கற்பனைத் தோற்றங்களை உங்கட்குக் காட்டுவதாகும். பல வாழ்வியல் கூறுகள் இதில் சொல்லப் பெறுகின்றன. அறிவுநிலை விளக்கங்கள், உரிமை உணர்வுகள், மாந்தநிலை உயிரெழுச்சிக் கூறுகள், உள்ளுணர்வெழுப்பும் மெய்யறிவு நிலைகள், மொழியியல், இனவியல், நாட்டியல் புரட்சிக்கு வித்தூன்றும் அடிப்படை வரலாறுகள் முதலியன இப்பிழிவில் கலந்திருப்பதை நீங்கள் சுவைத்து உணரலாம். {{left_margin|3em|<poem><b>கனியைப் பிழிந்திட்ட சாறு - எம் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!</b></poem>}} என்றும், {{left_margin|3em|<poem><b>கனிச்சாறு போல் பல நூலெல்லாம் கண்டு காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு!</b></poem>}} என்றும், பாவேந்தர் பாரதிதாசன் தமிழையும் தமிழ்ப் பனுவலின் இனிமையையும் உணர்த்தக் கனிச்சாற்றை உவமை பேசுவார். எனவே தமிழும் தமிழுணர்வும் செறிந்து விளங்கும் இப்பாடல் தொகுதிக்குக் <b>கனிச்சாறு</b> என்று பெயர் தரப்பெற்றது. மிக அரும்பாடுபட்டு இத்தொகுதித் தொடர்கள் வெளியிடப்பெறுகின்றன. தமிழினம் தன் நிலைப்பாட்டு மேன்மைக்கு இத்தொகுதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாக. :சென்னை - 5 {{gap2}}{{float_right|அன்பன்}} :14-4-1979 {{gap2}}{{float_right|<b>பெருஞ்சித்திரன்</b>}}<noinclude></noinclude> lwuv9p5cjhb81f78800ig27k04arqt2 1436999 1436994 2022-08-05T15:45:07Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||எ}}</b></noinclude> உயர்ந்த உண்மைப் பாவலனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பத்து. அவை, நுண்ணோக்கு, இயற்கையீடுபாடு, சொல்வன்மை, பாத்திறன், யாப்பறிவு, மொழியறிவு, கற்பனையாற்றல், மனவியல், நடுவுநிலைமை, துணிவு என்பனவாகும். இவை ஒன்றின் ஒன்று சிறந்து விளங்கிப் பாவலன் ஆற்றலைப் படிப்படியாக மிகுவிக்கின்றன. இத்தகுதிகளின் பொருத்தத்திற்கேற்பவே ஒவ்வொருவனின் பாடலும் ஒளிர்ந்து சுடரும்; காலத்தை வெல்லும்; மக்கள் கருத்தினை ஆட்கொள்ளும்; அறிஞர் மதிப்பினைப் பெறும். <b>கனிச்சாறு</b> என்னும் இப்பாடல் தொகுதி பல நூறு கற்பனைத் தோற்றங்களை உங்கட்குக் காட்டுவதாகும். பல வாழ்வியல் கூறுகள் இதில் சொல்லப் பெறுகின்றன. அறிவுநிலை விளக்கங்கள், உரிமை உணர்வுகள், மாந்தநிலை உயிரெழுச்சிக் கூறுகள், உள்ளுணர்வெழுப்பும் மெய்யறிவு நிலைகள், மொழியியல், இனவியல், நாட்டியல் புரட்சிக்கு வித்தூன்றும் அடிப்படை வரலாறுகள் முதலியன இப்பிழிவில் கலந்திருப்பதை நீங்கள் சுவைத்து உணரலாம். {{left_margin|3em|<poem><b>கனியைப் பிழிந்திட்ட சாறு - எம் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!</b></poem>}} என்றும், {{left_margin|3em|<poem><b>கனிச்சாறு போல் பல நூலெல்லாம் கண்டு காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு!</b></poem>}} என்றும், பாவேந்தர் பாரதிதாசன் தமிழையும் தமிழ்ப் பனுவலின் இனிமையையும் உணர்த்தக் கனிச்சாற்றை உவமை பேசுவார். எனவே தமிழும் தமிழுணர்வும் செறிந்து விளங்கும் இப்பாடல் தொகுதிக்குக் <b>கனிச்சாறு</b> என்று பெயர் தரப்பெற்றது. மிக அரும்பாடுபட்டு இத்தொகுதித் தொடர்கள் வெளியிடப்பெறுகின்றன. தமிழினம் தன் நிலைப்பாட்டு மேன்மைக்கு இத்தொகுதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாக. {{rh|சென்னை - 5 <br>14-4-1979||அன்பன்<br>{{larger|<b>பெருஞ்சித்திரன்</b>}}}}<noinclude></noinclude> t2dt80o5rftmaoaiye93o3xh91pmt4h பக்கம்:கனிச்சாறு 2.pdf/9 250 446216 1437000 1418710 2022-08-05T15:47:21Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|அ||கனிச்சாறு இரண்டாம் தொகுதி}}</b></noinclude> {{center|{{larger|<b>முதல் பதிப்பு - பதிப்புரை</b>}}}} உலக வரலாற்றிலேயே தலைசிறந்தது மாந்த வரலாறாகும். அதனுள்ளும், நம் முதுபழங் குமரித் தமிழிய வரலாறோ, மூல முதன்மையும், உயர் மாந்தத் தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். அத்தென்குமரித் தலைக்கழக(சங்க)க் காலத்து முத்தமிழ் மீமிசை மாந்த வாழ்வியலின் ஏந்திய பண்பு நலன்கள் யாவும், அடுத்து வந்த இடைக்கழகக் காலந்தொட்டே, (பிற்காலக் கீழை) வேத ஆரியத்தின் நுழைவால் தாக்குண்டு சீர்குலையத் தொடங்கின. அதுமுதலே, ஆரிய எதிர்ப்பியக்கங்களும், தொடர்ந்து, பரவல் சிதறலாகத் தமிழகத்தில் தோன்றி வரவே செய்தன. ஆனால், அவை எவற்றுக்கும் ஆரியத்தை அடிதுமித்துச் சாய்த்துத் தமிழ் மீட்பினை நிலைநாட்டித் தரும் மொய்ம்புரம் வாய்க்கவில்லை. இறுதியாக, சென்ற நூற்றாண்டில், மேலைநாட்டு நல்லறிஞரால் விழிப்புறுத்தப் பெற்றும், <b>மறைமலையடிகளாரின்</b> தனித்தமிழ்த் தொண்டினாலும், <b>பெரியாரின்</b> இனமானத் தொண்டினாலும் இந் நூற்றாண்டில் புத்துரமூட்டப் பெற்றும், பல மறுமலர்ச்சி இயக்கங்கள் தமிழகத்தில் தோன்றலாயின. அவற்றின் ஒட்டுமொத்த முயற்சிகளின் மெய்வருத்தக் கூலியாக, இன்று <b>மொழிஞாயிறு பாவாணர்</b> அவர்களின் மொழிமுதற் புலத்தில், <b>பாவலரேறு பெருஞ்சித்திரனார்</b> அவர்களின் உரன்வல அறிவாண்மைப் படை கொண்டு முனைந்துழுது ‘தென்மொழி’ என்னும் இதழ்வாயிலாக, தேடரிய தெளிவியக்கம் ஒன்று புரட்சிக்கால் ஊன்றி, ஆள்வினையும் ஏற்றுள்ளது. அத் ‘தென்மொழி இயக்க’த்தின், வினை வேளாண்மைக்கென மொழி - இன - நாடு தழுவிய பல்வேறு துறைகளிலும், <b>பாவலரேறு</b> அவர்கள், முப்பது ஆண்டுகட்கும் மேலாக, பன்னூற்றுக் கணக்கில் பாடிக் குவித்துள்ள அரும்பாடற் கனிகளையே இங்ஙனம் தொகுத்து, <b>‘கனிச்சாறு’</b> ஆகப் படைத்துள்ளோம். அவ்வமிழ்தச் சாற்றினை ஆரட் பருகும் எவரும், தமிழியக் குடிசெயலுக்கு வேண்டிய ‘வீறெய்தி மாண்ட’ வினைத் திட்பம் பெற்று, தொண்டாற்ற முன்வர வேண்டுதலே எமது பெருநோக்கம் ஆகும். இப்பாடற் களஞ்சிய வெளியீட்டுத் திட்டம், கோவை மாவட்டத் தமிழன்பர்களின் அருமுயற்சியால் இயல்வதாகி, தி.பி. 2006இல் அறிவிக்கப் பெற்று, தி.பி. 2008 முதல் செயலாக்கங்-<noinclude></noinclude> qoq299kzdjva7l055e32mzqex5alhs2 பக்கம்:கனிச்சாறு 2.pdf/10 250 446217 1437001 1418711 2022-08-05T15:49:24Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்|௯|}}</b></noinclude>கொண்டு, இக்கால் முழுமையாக்கப் பெற்றுள்ளது. இத்திட்டத்தை வினைப் படுத்திய <b>தென்மொழி ந. முத்துக்குமரனார்,</b> அவர் துணைவர் <b>தென்மொழி மறை. நித்தலின்பனார்</b>, ஊக்கப்படுத்திய <b>திரு.க. ஆகுன்றன்</b>, கொடை நல்கி வலந்தந்த புரவலன்மார் ஆகிய அனைவரும் தமிழின மீட்பு வரலாற்றில் என்றும் நீங்கா இடம்பெறும் சிறப்புடையர். வெல்க எம் தமிழம்! மலர்க நல்லுலகம்! {{rh|14.4.1979||பணிவுடன்,<br><b>‘கனிச்சாறு வெளியீட்டுக் குழு’</b>}}<noinclude></noinclude> ltlvod7gdfyjjd9gt5maqrsr5otlib9 பக்கம்:கனிச்சாறு 2.pdf/11 250 446218 1437002 1418712 2022-08-05T15:51:32Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|க0||கனிச்சாறு இரண்டாம் தொகுதி}}</b></noinclude> {{c|{{larger|<b>வெளியீட்டுரை</b>}}}} கனிச்சாறு (பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்) தொகுதி முதற்பதிப்பு 1979இல் வெளிவந்த பின், 1995 இல் பாவலரேறு மறைவுவரை வெளிவந்த அனைத்துப் பாடல்களும் தொகுக்கப் பெற்று முழுமைபெற்ற முதற்பதிப்பாக இப்போது வெளிவருகிறது. முதற்பதிப்பின் முத்தொகுதிகளும் தென்மொழியில் சுவடி : 14; ஓலை : 12 வரையிலும் மற்றுத் தமிழ்ச்சிட்டில் குரல் : 9; இசை: 12 வரையிலும் வெளிவந்த பாடல்கள் அளவிலேயே அமைந்தன. அதன்பின் தொடர்ந்து வந்த இதழ்களின் பாடல்கள் அனைத்தும் துறைவாரியாகப் பிரிக்கப்பெற்று எண்தொகுதிகளாக இப் பதிப்பு நிறைவு செய்யப்பெற்றுள்ளது. மேலும், ஐயா அவர்கள் தம் இளமைக் காலத்தில் எழுதியனவும் இதுகாறும் அச்சுக்கு வராதனவுமான பாடல்கள் சில, பழைய குறிப்புச் சுவடிகளினின்றும் எடுத்துச் சேர்க்கப்பட்டுள்ளன; அன்றியும் ஐயா அவர்கள் அன்பர்கள் பலருக்குப் பல்வேறு நிகழ்வுகளையொட்டி எழுதியனுப்பிய பாடல்கள் பல, அவ் அன்பர்களிடமிருந்து பெறப்பட்டும், சில ஐயா அவர்களின் சுவடிகளிலிருந்து எடுத்தும் இணைக்கப்பட்டுள்ளன. (பழைய பாடல்களில் ஒரோவழி பெற்றிருந்த அயன்மொழிச்சொற்கள் வரிவடிவில் வேறுபடுத்திக் காட்டப் பெற்றுள்ளன.) மொத்தத்தில், ஐயா அவர்களின் தனி இலக்கியங்களான கொய்யாக்கனி, ஐயை, பாவியக்கொத்து, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, நூறாசிரியம், உலகியல் நூறு, கழுதை அழுத கதை, அறுபருவத் திருக்கூத்து ஆகியன அல்லாத பிற பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பெற்றுப் <b>‘பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தனிப்பாடல்கள் _ அடங்கல்’</b> என்னுமாறு இப்பதிப்பு முழுமையான பதிப்பாக வெளிவருகிறது. அவ்வகையில் இதுவே முதற் பதிப்பு எனலாம். பாடல்கள் அனைத்திற்கும் முன்னைப் பதிப்பின் போக்கிலேயே தொடர்ந்து பாடல்கள் விளக்கக் குறிப்புகள் எழுதிச் சேர்க்கப் பெற்றுள்ளன. இயற்றப்பெற்ற அல்லது வெளிவந்த காலத்தையொட்டி ஆண்டு, மாத முறைப்படி பாடல்கள் வரிசைப்படுத்தப்பட்டிருப்பது இப்பதிப்பின் தனிச்சிறப்பாகும். பழைய பாடல்கள் சில எழுதப்பெற்ற காலம் தெளிவாகத் தெரியாமையால், அப்பாடற்குரிய ஆண்டையொட்டி <b>வினாக்குறி யிடப்பட்டுள்ளது.</b><noinclude></noinclude> 17usosizqzbu8ya2i4275lgepufnplq பக்கம்:கனிச்சாறு 2.pdf/12 250 446219 1437003 1418713 2022-08-05T15:53:12Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||கக}}</b></noinclude> இக் கனிச்சாறு தொகுதிகளில், தமிழ், இந்தி யெதிர்ப்புப் பற்றிய பாடல்கள் முதல் தொகுதியாகவும், இன எழுச்சிப் பாடல்கள் இரண்டாந் தொகுதியாகவும் அமைந்துள்ளன; நாட்டுரிமை பற்றிய மூன்றாந் தொகுதியில் நாட்டுரிமை, தமிழீழம் என்னும் பிரிவுகளிலான பாடல்கள் இடம்பெற்றுள்ளன; இளைய தலைமுறை, பொதுமை, இயக்கம் ஆகியன பற்றிய பாடல்கள் நான்காந் தொகுதியாகவும், குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழி மாலை என்னுந் தலைப்புகளில் அமைந்த பாடல்கள் ஐந்தாந் தொகுதியாகவும் கொள்ளப்பெற்றுள்ளன; ஆறாந் தொகுதியாவது காதல், இயற்கை, இறைமை என்னும் பிரிவுகளைக் கொண்ட பாடல்கள்; தன்னிலை விளக்கம், பெருமக்கள் சிறப்பு, திருநாள் வாழ்த்து, திருமண வாழ்த்து, மதிப்புரைகள் முதலியனவாகிய பாடல்கள் ஏழாந் தொகுதியில் வைக்கப் பெற்றுள்ளன. பாட்டரங்கப் பாடல்கள் எட்டாந் தொகுதி. 2009இல் தமிழக அரசு, பாவலரேறு அவர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கிப் பெருமை கொண்டது. அதனால் அவர்தம் படைப்புகளைப் பலரும் வெளியிட வாய்ப்பு ஏற்பட்டது. எனினும் வெளிவராத பாடல்கள் பலவற்றையும் நாம் வெளியிட்டால் மட்டுமே மற்றவர்கள் வெளியிட வாய்ப்பு ஏற்படும் என்பதால் நாம் முழுமையாக வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்டது. எட்டுத் தொகுதிகளையும் ஒரே நேரத்தில் வெளியிடுவதற்குப் பெரும் பொருள் தேவைப்பட்டதால், முன்வெளியீட்டுத் திட்டம் ‘தென்மொழி’யில் அறிவிக்கப் பெற்றது. தென்மொழி அன்பர்கள் பலரும் முனைந்து தொகை அனுப்பி வைத்திருந்தனராயினும், அத் தொகை, தேவையான எல்லைக்கு மிகவும் குறைவான அளவையே நிறைவு செய்தது. நாமும் அந்தக் காலக்கட்டத்திற்குள் வெளியிட இயலாமல் சற்று காத்திருக்கநேர்ந்தது. அவ்வாறு காத்திருக்கும் காலத்திற்குள்ளும் எதிர்மம், அச்சுக்கூலி, தாள் இவற்றின் விலையேற்றம் அளவு கடந்து உயர்வும் பெற்றன. அவற்றையும் நெருக்கியே வெளியிட வேண்டியதாயிற்று. இனி, தமிழ்மக்கள் தம் மொழிநலத்தையும் வாழ்வியற் சிறப்புகள் சீரழிவுகள் ஆகியவற்றையும் உணர்ந்து, அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்து, எழுச்சிபெற்று, இனநலம் பேணி, நாட்டுரிமை பெற்று வாழ்வாங்கு வாழ வகைசெய்யும் கருத்துத் தெளிவும் உணர்வுச் செழுமையும் வாய்ந்த பாடல் திரட்டான இக் கனிச்சாறு தொகுதிகளைத் தமிழ்கூறும் நல்லுலகம் வரவேற்றுப் பயன்கொண்டு சிறக்கும் என்று நம்புகின்றோம். {{Right|<b>-தென்மொழி பதிப்பகத்தினர்</b>}}<noinclude></noinclude> nqrc3lnoxmlgk9br4vulm20oivwa74a பக்கம்:கனிச்சாறு 2.pdf/13 250 446220 1437006 1418752 2022-08-05T16:02:45Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" />{{rh|கஉ||கனிச்சாறு இரண்டாம் தொகுதி}}</noinclude> <poem>{{center|{{larger|<b>கனிச்சாறு இரண்டாம் தொகுதி</b>}} (இனஎழுச்சி) {{larger|<b>பொருளடக்கம்</b>}}}}</poem> {| |<b>பாடல் எண்</b> <br>இனஎழுச்சி.|| <b>பாடல் தலைப்பு</b> ||<b>பக்க எண்</b> |- | 1 || போர்ப் பாட்டு! || 3 |- | 2 || நமக்கோர் ஏவல்! || 4 |- | 3 || பாவலர்களுக்கு! || 5 |- | 4 || தமிழ்க்குலமே! || 6 |- | 5 || இருட் பூங்குயிலே! || 8 |- | 6 || அஞ்சாதீர்! || 9 |- | 7 || ஆர்த்திங்கு வம்மினோ! || 10 |- | 8 || உருவொன்று திருவாறு || 12 |- | 9 || நாடு மறப்பரோ? || 13 |- | 10 || உய்வோம் வாரீர்! || 14 |- | 11 || வானம்பாடி! || 16 |- | 12 || தமிழ்த்திறம் பொறிப்போம் || 18 |- | 13 || தமிழர் எழுச்சிப் பத்து! || 19 |- | 14 || தமிழா, நீ எங்கே? || 24 |- | 15 || கடலே, சீறாயோ? || 25 |- | 16 || செய்குவீர் இன்றே! || 26 |- | 17 || வாழ்கின்றாரே! || 27 |- | 18 || இனங்கொல்லி! || 28 |- | 19 || எவரோ அவர் தமிழர்! || 28 |- | 20 || இற்றைத் தமிழக நிலை! || 29 |- | 21 || நினைவுத் துயர்! || 31 |- | 22 || அடிமை வாழ்வு எத்தனை நாள்? || 33 |- | 23 || எழுந்தது மறவர் கூட்டம்! || 34 |- | 24 || தமிழர் விழிப்படைக! || 34 |- | 25 || எழுவாய் நெஞ்சே! || 35 |- | 26 || குரங்கு வாயில்! || 38 |- | 27 || தமிழ்த் தொண்டர்க்கு...! || 40 |- | 28 || தமிழ் காக்க இணைவீர்! || 41 |- | 29 || கண்ணீர் வரி! || 46 |- | 30 || தமிழ் உருவில் தமிழ்ப் பகைவர்! || 49 |- | 31 || துன்பம் தொடர்க! || 50 |}<noinclude></noinclude> eh9rkk3tk7fp5tahudp6dh8ti0r7s8e 1437008 1437006 2022-08-05T16:04:12Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|கஉ||கனிச்சாறு இரண்டாம் தொகுதி}}</b></noinclude> {{center|{{larger|<b>கனிச்சாறு இரண்டாம் தொகுதி</b>}}<br> (இனஎழுச்சி)<br> {{larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| |<b>பாடல் எண்</b> <br><b>இனஎழுச்சி.</b>|| <b>பாடல் தலைப்பு</b> ||<b>பக்க எண்</b> |- | 1 || போர்ப் பாட்டு! || 3 |- | 2 || நமக்கோர் ஏவல்! || 4 |- | 3 || பாவலர்களுக்கு! || 5 |- | 4 || தமிழ்க்குலமே! || 6 |- | 5 || இருட் பூங்குயிலே! || 8 |- | 6 || அஞ்சாதீர்! || 9 |- | 7 || ஆர்த்திங்கு வம்மினோ! || 10 |- | 8 || உருவொன்று திருவாறு || 12 |- | 9 || நாடு மறப்பரோ? || 13 |- | 10 || உய்வோம் வாரீர்! || 14 |- | 11 || வானம்பாடி! || 16 |- | 12 || தமிழ்த்திறம் பொறிப்போம் || 18 |- | 13 || தமிழர் எழுச்சிப் பத்து! || 19 |- | 14 || தமிழா, நீ எங்கே? || 24 |- | 15 || கடலே, சீறாயோ? || 25 |- | 16 || செய்குவீர் இன்றே! || 26 |- | 17 || வாழ்கின்றாரே! || 27 |- | 18 || இனங்கொல்லி! || 28 |- | 19 || எவரோ அவர் தமிழர்! || 28 |- | 20 || இற்றைத் தமிழக நிலை! || 29 |- | 21 || நினைவுத் துயர்! || 31 |- | 22 || அடிமை வாழ்வு எத்தனை நாள்? || 33 |- | 23 || எழுந்தது மறவர் கூட்டம்! || 34 |- | 24 || தமிழர் விழிப்படைக! || 34 |- | 25 || எழுவாய் நெஞ்சே! || 35 |- | 26 || குரங்கு வாயில்! || 38 |- | 27 || தமிழ்த் தொண்டர்க்கு...! || 40 |- | 28 || தமிழ் காக்க இணைவீர்! || 41 |- | 29 || கண்ணீர் வரி! || 46 |- | 30 || தமிழ் உருவில் தமிழ்ப் பகைவர்! || 49 |- | 31 || துன்பம் தொடர்க! || 50 |}<noinclude></noinclude> 16qv68cozhfx04wnrf4pr6xfs8x2vu8 1437009 1437008 2022-08-05T16:05:27Z Fathima Shaila 6101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|கஉ||கனிச்சாறு இரண்டாம் தொகுதி}}</b></noinclude> {{center|{{larger|<b>கனிச்சாறு இரண்டாம் தொகுதி</b>}}<br> (இனஎழுச்சி)<br> {{larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| |<b>பாடல் எண்</b> <br><b>இனஎழுச்சி.</b>|| <b>பாடல் தலைப்பு</b> ||<b>பக்க எண்</b> |- | 1. || போர்ப் பாட்டு! || 3 |- | 2. || நமக்கோர் ஏவல்! || 4 |- | 3. || பாவலர்களுக்கு! || 5 |- | 4. || தமிழ்க்குலமே! || 6 |- | 5. || இருட் பூங்குயிலே! || 8 |- | 6. || அஞ்சாதீர்! || 9 |- | 7. || ஆர்த்திங்கு வம்மினோ! || 10 |- | 8. || உருவொன்று திருவாறு || 12 |- | 9. || நாடு மறப்பரோ? || 13 |- | 10. || உய்வோம் வாரீர்! || 14 |- | 11. || வானம்பாடி! || 16 |- | 12. || தமிழ்த்திறம் பொறிப்போம் || 18 |- | 13. || தமிழர் எழுச்சிப் பத்து! || 19 |- | 14. || தமிழா, நீ எங்கே? || 24 |- | 15. || கடலே, சீறாயோ? || 25 |- | 16. || செய்குவீர் இன்றே! || 26 |- | 17. || வாழ்கின்றாரே! || 27 |- | 18. || இனங்கொல்லி! || 28 |- | 19. || எவரோ அவர் தமிழர்! || 28 |- | 20. || இற்றைத் தமிழக நிலை! || 29 |- | 21. || நினைவுத் துயர்! || 31 |- | 22. || அடிமை வாழ்வு எத்தனை நாள்? || 33 |- | 23. || எழுந்தது மறவர் கூட்டம்! || 34 |- | 24. || தமிழர் விழிப்படைக! || 34 |- | 25. || எழுவாய் நெஞ்சே! || 35 |- | 26. || குரங்கு வாயில்! || 38 |- | 27. || தமிழ்த் தொண்டர்க்கு...! || 40 |- | 28. || தமிழ் காக்க இணைவீர்! || 41 |- | 29. || கண்ணீர் வரி! || 46 |- | 30. || தமிழ் உருவில் தமிழ்ப் பகைவர்! || 49 |- | 31. || துன்பம் தொடர்க! || 50 |}<noinclude></noinclude> 06k7k8g9vuzssy2vkm2de3qj743ijfc பக்கம்:கனிச்சாறு 2.pdf/14 250 446221 1437012 1418756 2022-08-05T16:19:26Z Fathima Shaila 6101 /* Proofread */ proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|பாவலரேறு பெருஞ்சித்திரனார்||க௩}}</b></noinclude>{| |- |<b>பாடல் எண்</b> || <b>பாடல் தலைப்பு</b> || <b>பக்க எண்</b> |- | 32. || பகையே விலகுக! || 54 |- | 33. || அடிமைக் கூட்டம்! || 54 |- | 34. || தமிழ் வளர்ப்பார்! || 55 |- | 35. || எழுதிப் பிழைக்கும் இடக்கர்! || 55 |- | 36. || தமிழனுக்கு ஒப்பாரி ! || 56 |- | 37. || கவல் கொள்ளாரே! || 60 |- | 38. || பழிபறித்துண்பார்..! || 61 |- | 39. || தமிழா, ஒன்று செய்! || 61 |- | 40. || போலித் தமிழ்த் தொண்டர்! ||62 |- | 41. || ஒரு துளிக் கண்ணீர்! || 65 |- | 42. || பூக்கட்டும் தமிழருளம்! || 71 |- | 43. || ஆர்த்த முரசே அறை! || 73 |- | 44. || மானக்கொடி ஊன்றுக! || 73 |- | 45. || நெஞ்சு இனிக்குமா? || 74 |- | 46. || அரசியல் குழப்பம்! || 74 |- | 47. || என்னென்று சொல்வோம்? || 75 |- | 48. || தானே அழியும் தமிழன்! || 76 |- | 49. || தமிழர் திறம்....! || 77 |- | 50. || பாரதிதாசனுக்குப் பா மடல்! || 78 |- | 51. || ஒற்றுமை பூக்காது! || 81 |- | 52. || தமிழரிடை உணர்வுண்டோ? || 81 |- | 53. || கூற்றை விளித்தனரோ? || 82 |- | 54. || ஓ! திரைப்படக்காரரே! || 83 |- | 55. || திருவள்ளுவர் விழாவா...? || 94 |- | 56. || இறுதிப் போர்! || 95 |- | 57. || பாய்புலியே! எங்கே உன் சீற்றம்? || 96 |- | 58. || புறப்பட்டாய், நீ! || 99 |- | 59. || அன்புத் தமிழனே! || 100 |- | 60. || விடுதலை பிறக்கும்! || 101 |- | 61. || ஓ! தமிழ் மாந்தனே! || 102 |- | 62. || ஓ! ஓ! ஓ! பார்ப்பனரே! || 103 |- | 63. || தமிழ்க்குலமே தெளிக! || 104 |- | 64. || செயலுக்கு முன் வருவோம்! || 105 |- | 65. || பொய் சாகும்; மெய் வெல்லும்! || 106 |- | 66. || கருத்தை மாற்றுவீர் புலவர்களே! || 107 |- | 67. || உயர்வடைதல் என்றோ? || 108 |- | 68. || அயல்நாட்டில் வாழ்கின்ற தமிழர்க்கு.....! || 109 |- |}<noinclude></noinclude> 1qam7smshgsywad6f51zoijeewg77en பக்கம் பேச்சு:கலைக்களஞ்சியம் 1.pdf/560 251 453640 1436982 2022-08-05T14:12:38Z Deepa arul 5675 "சில பின்னங்களில் எண்கள் சரியாக தெரியவில்லை இயன்றால் மூல நூலைக் கொண்டு சரிபார்க்கவேணெடும்.--~~~~"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது wikitext text/x-wiki சில பின்னங்களில் எண்கள் சரியாக தெரியவில்லை இயன்றால் மூல நூலைக் கொண்டு சரிபார்க்கவேணெடும்.--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 14:12, 5 ஆகத்து 2022 (UTC) 45ctr9feojfu15gsrlp1x3qeexreyuq பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/11 250 453641 1437020 2022-08-06T02:16:24Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>தொல்காப்பிய எழுத்ததிகாரச் சூத்திர அகராதி. சூத்திரம். வேற்றுமை யல்வழி யாய் வேற்றுமை வழிய வேற்றுமைக் குக்செட வேற்றுமை யாயி வேற்றுமை யாயி னேனை வேற்றுமை யல்வழி யெண் வேற்றுமை - ஓகர சூத்திரம் வன்றொடர் மொழியு வஃபான் வேற்றுமைக் கண்ணும் வேற்றுமை யல்வழி வேற்றுமை யல்வழிக்குறு வாழிய வென்னு விசைமரக் கிளவியு விண்ணென லிளையெஞ்சு கிளவிக்கு வினையெஞ்சு கிளவியு வெயிலென் கிளவி வெரிநெ னிறுதி வேற்றுமை குறித்த வேற்றுமை எண், அட, கய, கூக, கங, கூசு பக்கம். எச isa s ள கூடு ருய 15.00 (FL8 ளஉ கக பக்கம். P எஎ 4557 பாயிரம் கூகூ எச ஈஉஎ 17: ருஎ ளஉ ய ழகர வஈர ழகார விறுதி ளகார விறுதி னகார விறுதி னகார விறுவாய் னகார முன்னர் னஃகான் இயலகராதி. உயிர்மயங்கியல் உருபியல் குற்றியலுகரப்புணரியல் தொகைமரபு நூன்மரபு பிறப்பியல் புணரியல் புள்ளிமயங்கியல் மொழிடிப்பு - சூத்திரத்தொகை. கூஙு ஙய எஎ ma 5.7. உக சய ஆ இயல் கூ-க்குச் சூத்திரம் -- சஅங சூத்திரம். ஆ சூத்திரம் - சு.அச. Mi சுகூ பக்கம். ள உ. F ளயஎ ளயஉ 7ரு HT P... Rள உஅ ள நச ளயங E₂ உக சச<noinclude></noinclude> asqkhdohcikecbcfqaddcikdk62q2sf பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/12 250 453642 1437021 2022-08-06T02:34:02Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் இளம்பூரணம் சிறப்புப்பாயிரம் வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கல் ஓலகத்து வழக்குள் செய்யுளு மாயிரு முதலின் எழுத்தின் சொல்லும் பொருளு நாடிச் செந்தமியற்கை சிவணிய நிலக்கொடு முந்து நால் கண்டு முறைப்பட வெண்ணிப் லக்தொகுத் தோனே போக்கறு பனுவல் கிலந்தரு திருவிற் பாண்டிய னவையக் தாங்கரை ஓரவி னான்மறை முற்றிய அதங்கோட் டாசாரற் கரிறபத் தெரிந்து மயங்கா மரபி னெழுத்துமுறை சாட்? மல்கு நீர் வரைப்பினைந்தி: நிறைந்த தொல்காப் பயனெனக் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுக்த படிமை யோனே, எக்கால் உரைப்பினும், அந்நற்குப் பாயிரம் உரைத்து உரைக்கலென்பது மா!.. என்னை" ஆயி முகர்சா போகன்ற தாயினும் பாயிரக் கலை து பனுவ வன்'ற' என்ப வாகலின், பா.H QrRok* u ? ! 4.nsi 301. அக நூற்குப் புறகசையேல் அஏகேட்டு என்னை பயனெனின். தன் ணர்குக் கற்புடையாள் போல் இன்றிய மைடா சப்பிற்றாயும் திருவைச் , KOT 5கத்திற்கு உரு ="மைச்சான்பாடம் போல அலக்கா "மாதர் சிறப்பியும் 'பரு லானும், பாசம் $ *R : F: 5: கேட்குமேயெனில் குறிரரி புக்க மான் போல மாணாக்கன் இடர்ப்படுமா மாலும், பாயி கேட்டல் பயனுடை நாயிற்று. அப்பாவிடம் பொதும் சிறப்புடான இருவதைத்து, எல்லா தான்முகத்தும் பொதவாக உரைக்கப்படுதலில் பொது பெனப்பட்ட. .எவோன்" ஹன்னா'' முதலிய நாலுட்சொல்லும் பொருளலை'ா : பருப்பொருகாக் சு... ஜூம் பொதுப்பாயிம் போலாத, தூலகத்தெல்லாம் பயான்" மாத்திரையேயன்றி அர் நூலில் சொல்லப்படுகின்ற பொருள் முதலிய 2. ணர் ர் 4 வின். அணியிழை மகார்க்கு அவ்வணியிற் சிறந்த ஆடைபோல் நாற்கச Ar , வார் சிறப்பெனப்பட்ட த'.<noinclude></noinclude> kevwvgh05tibba04c0opy5b62vm1nvk பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/13 250 453643 1437022 2022-08-06T02:34:23Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் - இளம்பூரணம் அவற்றுள், பொது கால்கலைத்து. ': ஈவோன் றன்மை பாடலியற்கை, கொள்வோன் நன்மை தோடன் "பென, ஈரிரண் டென்ப பொ தன் ாெகையே. இதனான் அறிக. + ஈவோர் கக்கப்படுவோரும் சற்கப்படாடோரும் என இருடிசையர், சற்கப் படுமேரர் ஈரான் கு நிறத்தான் உமய் க.சப்படுகர். saலை நிலம் புமே தலாக்கோ லென் ஜின்னர், . லை:லி ஓணர் கடை யார், " இதனான் அறிக. இனிக் கற்கப்படாதார்க்குக் கூறும் உவமமும் கால்வகைத்து', , * கழற்பெய் குடமே மடற்பனை முடத்பெடக்கு, குண்டினைப் பரு, இயோ டிலையென மொழிய, இதனன் அறி. ஈரலியக்கை : பா த விகால்பேயல்புதக் கிளப்பற், பொழிப்பே ய ல உட்ப லாமெனப்,பழிப்பில் பல்லுலா பயின் ரசானன், புகழ், மதியற் பொருத்தி மோடையில், Jெ MPவீனன் மெய்வம் வாழ்த்திக், கொல்கோ னுணர்வலை அப் 1 i" பொன் +, கொதித்தன் . பெனக்கூறினர் புலர்.'' இதனான் அRT, சார்ம் .. +id + ப்படுவோரும் கற்பிக்கப்படாதோரும்: என இரு கசைபர்.. :3.5 ஈப்படுபோர் அறுங்கையர். - 2 தாம் தன்மக சான் மானே 'மஃ மகன் பொருணனி கொடுப்போன் வழிபடி போனே, பு ைகோளாளனோ டி: பொன் மொழிய. ரெனான். அறிக. இவர் நன்மை :''அன்ன : ARC'u veda. + செய் பாரி,யானை னே தென் திசை, போலக், 5 விக்கொள். குண பாண்டோம்' ,'' னகது. இது இனிக் கற்பிக்கப்படாரார் க'ண் கையர், << மடிமானி பொச்சாப்பா! சாமுகன் நன்லைன், அசோய்ப் பிணியாள நாராச சினத்தன், மொறு கெஞ்ச TA னு கார்ட் டெண்மர், செடுதலைக் கக்கல் தார். இதனான் அறிக. இவர்தண்மை : ''கு தெறினா + பெரும் பாடே. தோனி யென்சுக் கிெையன (to:': பிப.' . . 'கோடன்மபு : கொள்வோன் முறையை ...D! 5, *ாலைய், பொழுசொல் சென்று வழிபடல்: முனியான், முன்னும் பின்னு 8ெலிலும் பாலிலும், 4 5 லானாகி யாபொடு புணர் நாட்காரற புணர்ச்தான் வாவென பாம்:, கிருமென விருந்தே டலிழேன் - வீழ்த்திசி, சொல்லெச சொல்லிப் போவெனய் போகி, செஞ்சுகள னாக ச செவி) 'யா * * , கேட்டவை கேட்டவை வல்ல னாகிப், போற்றிக் கோட கனது பொழிலே";கச் சிற சாசானுவக்கு மத்திரம், அறத்திற்றிரியாப் படர் சி N பாடே''; செல்வன் சொரிகிற்பான் மெய்நோக்கிக் காண்கிற்பான், பல்லு'ல'யு : கேட்பான்+ப்பு பரிதாதலான், ரெய்லரைப் போல மதிப் பான் றரியில்லான், இக்கா ழ மாண்பு முடையாற் குப்ப.ே , சொதி ஓலை, தெரிந்த" "செக்கினிலக்கடை ழுக்கின் அறிதல், பாட்டம் போற்றல் கேட்டவை *னை எல்',ஆசாற் சார் ஆலை 3.10 கேட்டல், அம்பாண் படையோர் சம்பாடு பயிரால், வினாகல் வினாயலை விடுத்து வென் றிவை கடனாக் சொசினே மடகனி யிகள் கும்'', "ஆனை பணல்லோன் கொள்குல னாயின், வினையி னுழப்பொடு பயன் றலைப் படா அன்'. இவற்றான் அறிக. இவ்வாறு கோடன் மாபுடைய மாணாக்கன் நூன் முற் ற றிச்சானாமா ஐ. :* ஆசா ஓரைத்தவை யமைவா கொரிலும், காற்கூறல் லது பற்றல னாகும்", அவ்வினை யாளபொடு பயில் வகை யொருபால், செவ்விதினு காப்பக விரூபாலும், மைய புலமை மாண்புானி படை...தே." இவற்றான் அறிக,<noinclude></noinclude> hds7e1yqenujbfsi2hby33hd9wdjzmt பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/14 250 453644 1437023 2022-08-06T02:35:21Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சிறப்புப்பாயிரம் சிறப்புப் பதினொரு வகைத்து::"ஆக்கியோன் பெய ோ'ழியே யெல்லை, நம் பெயர் பாப்பே துரலிய பொருனே, கேட்போர் பயனோ டாயெண் பொருளும், காய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே", "காலக் களனே காரண யென்றம், மூட்கை போற்றி மொழிகரு முள:ே''. இவற்றான் அறிக. இனி, அச்சிராப்பக் san, செப்புமாறு: ' பாபி / திலக்கணம் பாருக் காலை, நா ஓதல் பொருகா தன்னக நடக்கி, ஆசிரிய நானும் பெ'ண்பா 2 ஓ, மருவியட் கையா say: ' ல் வெண்கர்'. இதனான் அறி.. தான் செப்பான் பாய்:'ம் செய்வானல்லன், தோன்ரூ ( பானை பல முடிப்பினும், பொன்மம் புகழ்தல் தகுதியன்றே கான்பராகலின். !.J.THI' சம் செய்தார் தன் ஆசிரியலும், தன்னொடு ஒருக்கு கற்ற மாணாக்கனும்.. நன் TROக்கனும் என அதையர், அருள் இதற்குப் பாயிரம் செய்தார் உன்னோடு இருக்கு கற்ற பனம்பானார், இ-ள் :- பாேட்கடய் பென்கு:c!' .ஆ இடைடத் தமிழ் கூட மாம்ஸ் . i'தத்து : வழக்கும் செய்பா அ இருமுதலின்-&'டக்கின் கண்டனு'ன் தாஇய கேங்க!-ம் தெற்கின் கண் ஜாதாகி': குமரியு மாதிய அரை கால்லை:பாக க........! For பூக்கும் பெ: பூனை + கூறும் சன்மச்சனான் பழங்கும்ழக்கும் செய்யஞR AA! இரு கணபானும், எழு/ தம்: சொல்ஓம் பொருளும் காடித்திலக்கணம் தினையும் சொல்வி'ைக்கணத்தில: யும் பொருரிலக்க நிலையம் "ாய் 2', செ , ' இயற்கை சிக'ax: பொ முத்து தான் கண்க-(அங்காத! பச்சி குறைய இடையக நறிற்குச் சபின இயல்பு பொருந்தின செ. * லத்து கோடு முதல்நல்காம் சொன்னற் நிலைக் கண்டு, முறைப் பட்ட ரன்ணி:- அவ்விலக்கணம். முரைப்பட ஆதாய் த', மலம் கரு திருவின் பாண்டி 2'ன் 2 : 14: - "து, நிலத்திலை: கன்*- STDார்க்குக் கொண்கிகொடு க்கும் போர்த்திருவினையடை. : பாண்டி பான் மார்த்தியது. அவைக்கண்ணே, அறம் க"ை சாவின் சால்மறை முற்றிய அ.சங் சோட்டு ஆசாற்கு-(அல்/A-மையும்" ** கேற்பத் ரெமிதே என்ற) வாய் சொல்லும் சாவிலை: யுடைய கான் கும் சினையும் (meter 15 - அ + கோத்தான்கள் p xseயின் ஆசானுக்கு, அரில் சுப தொ. த;~#'._r அ தெரிதாக...றி, பயக்காரன் எழுத்து முறை காட்டி-(அல் கெழுத்தும் சொல்லும் செய்கின்றழி முன்னை நால்போல் எழுத்திலக்கணம் சொ ல் லுட்சென் று) மயங்காத முறைமையானே எழுத்திலக்கணர் தினை கோர் ஸித்து, மல்கு சீர் பைப்பின் ஐசேம் சைர் தொல்காப்பியன் என என் பெயர் தோற்றி | அ கா று செய்கின் றழி) :-5 நீரையுடைய சடலாதிய எல்லைல படை..! லகின்கண்ணே , இந்தி னாற் செய்யப்பட்ட இக்கிர வியாதி னர் தினை hapu! அறிந்து, பழையகாப்பியக்குடியினுள் னோனெனத் தன் பெயர் தோத்துவித்த', போக்கு அறுப்லுவல்-. நாற்குச் சொல்லப்பட்ட குற்றங்களற்ற ஆள் லூ லுள்போ, புலம் தொகுத்தோன் - அவ்விலக்கலா *கோத் தொகுத்துக்கூறினான், (அவன்' பாடு" னில்,) பல்புகழ் ஒறுத்த படிமைபோன்-தவத் தான் வரும்) பல்புகழ்களை உலகி லே றுத்தின கொழுக்கத்தினை யுடையான். வழக்கும் செய்யுளும் அ இரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் , முறைப்பட எண்ணி ,பாண்டியன் அவையத்து அதக்கோட்டு ஆசாற்கு அரில்தபடி<noinclude></noinclude> 3m7inxm9c3iwn67nubzqu0zuhy6bly5 பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/15 250 453645 1437024 2022-08-06T02:35:43Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் - இளம்பூரணம் தெரிந்து, மு.திம க ன த்தைச் சொல்லும் முல நமை AAL% % R ME பிற் காட்டி, தொல்காப்பியனெனக் கன்பெயர் கோற்றி, பஜ வஓyர் புலக்தொகுக்கோன் படி பையோன் கனக்கூட்டுக, டை. வேக, தென்குமரி யெனகே', 17ல்லை பெறப்பட்டது. வழக்குஞ் செய்யுளு மாயிரு மு.சுலி லெனவே, தால் , ஒலிய, ஆச உம் பயனும் பெறப் 'பட்டன. முக் ஆர்.ஸ் கண்டு முரைப்பட வெ'ண்(sar: பொன'ே, வழியும் யாப்பும் சானமும் பெறப்பட்டன. சாண் 2 ய னவையத் செனரோ, கலமும்! சாலும் பெறப்பட்ட ரோ. அ. கோட்டாராம் .றோம் ( காட்'. கேட்டோர் பெறப்பட்ட திட். தொல்காப்பென்ன பன்பெட் போர்றியனவே, ஆக்கி Ariy பொரும் , நரம்பெயரும் பெறப்பட்ட 3:', ம' திசையாக லின், வடக்கு முன் கூறப்பட்டது. 4. . ல் கொள்வதன் பார் :, 'p, 3 ம் - 3 மையின் தெற்கும் கால்ல கூ. நட்பட்ட . சிறக்கும் மேற்குப் ரோடு இன்மை 'ன். கூறப்பட? -:'T JAlear. :D இரண்டெ ... v கூ.மு.* இம்ட்ல தம் க. றியது, ஆவை நீர்தாமாதிலாலும் 250 was + ஆம் iii 'லும் * றியப் பகவானுமென்பது. இவை அகப்பாட்டெல்லை. shiva'! *'ன் றாம். இ'. ஈல்லாசிரியர்- அகத்தியர் முதலானோர். உலக யென் பது சிரிய . அகண்டது ஆகு பொன்', அவற்றை & clov= படைய எதை ஓனை". இடைப்பது எழாமுருபு. முதைப்ப - i ன்ன: ரெக், அம்மூது நாம் தலில் ஒன்ரர் குரிய இலக்கத்தினை ஒன்றன்: இலக்கணகோடு ஆர் தாம்போல ஆராயாது முறைப்பட ஆராய்ந்து என் தான், மற்று, நூல் செய்யும் இலக்கணமெல்லாம் இதுலுபா.ச செய்தானென்பது. இம்முறைப்ப கொண் யென் றதனாற் கொள், அவை யாமாறு; '' ஒத்தே சூந்தி மெனவிரு வகைய', தோன மணியை :':'ஃபட வைத்தாக, கோரினப் பொருகோ பொரு..' கைப்ப, தோற்பொ மொழிப்பயர்மொழிப் புலவர் செய்ய பரியல்- த... க ; " மொட் பத்திட்பஞ் சொல்லிற், சுருக்கங் கருத்துப் பகுதியோடு தொகைஇ, மருதம்' பொருட்பய னிசசி சூத்திடம்; '' பொது விமாள் ஈரப்பனும் போற்று இரலைப், பொல் பெற்றமை காத்து : காப்பொது, 'P துபெற 'கலகன் கருத் தாகும்''; '' அதுலே', Sண்ட தொகை A CR-- குமியே செய்கை, கொண் (y கல் புறனன.... C 132: சன் லிபபோ, யொன்றி: ருமியே பொன் பொன்ப'; ''மற்ற தொழுக்க 'தெசைப் பாய்லே . *: .ே -ருந்தும், கெவன், lg se: - சான்கே கிடக்கைப் பயனே'', '' பொழிப்பே யசுல நம்ப மெச்சமெனப், பழிப் :5-ல் சூர், திடப் பயனான் கென்ப''; ''பா! - கண்ணாழி கதா" என மென் றிலை', காடிர் நிரியில் பகுதல்பொழிப்பே '; ''நான் ஓi மரு, சினும் 'நான்' மருக்கினூர், அன்னிய கடாவின் போன் ' '* *பர், பன்ளி! 15ல சென்மனார் புலர்' '; '' திவி னாங்கலை துடைத்த ஓட்பம்''; '' துடைதிக்கொள் பொருளை யெச் டென்ப'', இற்குலும், 'மவர்மனும் அறி6, இனி, நூல் செய்தற்கு உரியா னையும், நூல்செய்யும் குறையும் சொல்லுதும், "அப்புல மரிறபறிந்து முதல், பக்கம் போற்றும் பயன்தெரி துலகத், திட்ப முடைய தெளிவா விடையோன், அட்புலட் டைம் e VA!! மென்ப்; ''சூத்திர மு ையென் றாயிரு திறலும்,<noinclude></noinclude> t9358vshh7e9xmd3ttleok7wfwppddg பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/16 250 453646 1437025 2022-08-06T02:36:16Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ சிறப்புப்பாயிரம் பம்படர் போந்தம் டஸ்டபே , துபயலுணர் !'ண்.3: 4:TC'', இவற்றான் அறிக. போக்கு அது எக்குக் கூறுங் குற்ற மற்றும் சண்டையுள வாத.. அலக பசைக்குந்தா. ன்.ேதி. னெகா புணர்ப்பின தென்மர் புலவர்”. * 'டத்தும் சொ' ஓர் , பெர்குங்க. ' wish mai' ப் பின்னும் ': ' *R (2s 4.! காஎழுத்துமுறை காட்?' ன் ச ட தல்போசோன் ஓள் எத்தனை பயக் கிரது. என்: ந சர் கூறினாடென்றதென்பது, சிறப்புப்பா முற்றம்,<noinclude></noinclude> qmiiolwap8amb3ts8ki18t8bjocylag பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/17 250 453647 1437026 2022-08-06T02:36:36Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம். இளம்பூரணம். எழுத்ததிகாரம் இல்லதிகாரம் என் .சலி எடுத்துக்கொள்ளப்பட்டதோ வெனின், அதிகாரம் நுதலிய தாஉம் அதிகாத் தினது பெயர் உரைப்பவே அடங்கும். அ.கொம் என்ன பெயர்த்தோ வெனின், எழுத்ததிகாரம் என்னும் பெயர் து. எழுத்து ணர்த்தினமைக் காரணத்திற்பெற்ற பெயர் என ண்ர்க. எழுத்து அனைத்துவகையான் உணர்த்தினாரோ வெனின், எட்டு ல கையாலும் காட்டிறந்த பல வகையானும் உணர்த்தினாரென்பது. அவற்றுள், எட்டு கையால'ன எழுத்து இளைர் சென்றாலும், இன்ன பெபா கொன்றலும். இன்ன முரைமைய வெ'ன் மலும், இன்ன அளலின சென்ரலும், இன்ன பிறப்பின சென்றாலும், இன்ன புணர் சசிய கென்றலும். இன்ன . டி. வின வென்றாலும், இன்ன தன்மைய லென்ர ஜம், ''னவே. அவற்றுள் தன்பையும் டிடிம் ஆசிரியர் தாம் உணருஃபெனினும், ஈமக்கு உணர்ந்தால் அருமையின் எழி 1 ஆரமே இனுள் உணர்தினார் என உணர்க . இனி, எட்டிறந்த பலகையான உண்மை தன்மையும், குறைனர். கூட்டமும்.!S + கம், மயக்கமும்.. மொழி பாகமும், லயும். இனமும், ஒன்று பலயாம் ஓம் . திரிந்த உன்திரிபதி சென்றலும். பிறிசென் நாம், அது உம் சிறிதும். என் லும், வயிற் தென்றலும், தலையா தென்றலும், கலை சற்று சிலையா தென்றலும், இன்னோன்னகம் என இலை'. இவையெல்லாம் ஆயா ) மேல் கழிக் கண்டுகொள்க இஃதிகாாக திலக்கணம் கருலியும் செய்கையும் என இரு. கைத்து, அவற் அள். கருவி புறப்புரக்கருவியும், புறக்கருவியும், அகப்புறக்கருவியும், அகக்கருவி யும் என நான்கு கைப்படும். செய்கை புறப்புறசசெய்கையும், புறசசெய்கையும், அகப்புறசசெய்கையும், அகசசெய்கையும் என நான்கு சைப்படும். தான் பும் பிறப்பியலும் புறப்புறக்கருவி , மொழிம 4 புறக்கருவி; புணரிபல் அகப்புறக் கருவி, 14 615 - பொக -ம்: பெயர்க்க முகா, முன்னிலை: மொழிய: கென்மனார் புலவர் (உ.யிர் மயககியல்-எய்) என்றாற்போல்கன அகக்கருவி. 'கால்லா மொழிக்கு முயிர் வரும் வழியே, உடம்படு மெய்யி ஒருபுகொளல் -பைபார்'', [புணரியல்- 1 2 ] என்றும்போல்லன புறப்பு ரசசெய்கை, ''லனகெனல் ரூஉம் புள் # முன்னர்). த 15 வெனகரிற் ானா கும்மே"தொகை 4-6) என்ரும்போல்வன புறசசெய்கை. " உ.கமொடு புணரும் புள் விறுதி, யக மு முயிரும் -ரும் வழி பிபற்கை ” (தொகைமரபு-2s ) என்றாற்போல்லன அகப்புறச் செய்கை. ' தொகைமாபு முதலிய ஓந்தினுள், இன்ன ஈற இன்னாறு முடியுமென ச செய்கை -. அவன வெல்லாம் அச்செய்கை, முதலாவது - நூன்மரபு. இவ்யோத்து என் இதலிற்றோ பெனின், அது ஈம். அதன் பெயர் உரைப் பலே அடக்கும். இல்வதிகாசத்தார் சொல்லப்படும்: எழுத்திலக்கணத்தினை<noinclude></noinclude> 54oj3xfxiokr4wanau2x3n62l3k2doo பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/18 250 453648 1437027 2022-08-06T02:36:55Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ எழுத்ததிகாரம் - நூன்மரபு எ - - ஓராற்றால் தொகுத்து உணர்த் திரி தலின், ஏன்மாபு என்னும் பெயர் சு. இரனுட் கூட சகின்ற இலக்கணம் மொழியிடை நின்ற எழுத்திற்கன்றி, தனி மன்ற எழுத்திற்கென உணர்க, க. எழுத்தெனப்படுப அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே. இத்தலைச்சூத்தியம் நான் அதலிற்றோ வெனின், எழுத்துக்களது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- எழுத்து எனப்படும்-எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன, அகம் முதல் னகர இலாப முப்பஃது என்ப-அs :மாகிய முருவை புடையனவும் னக "மாகிய இறுவாயினையுடையன மாகி.ப முப்பதென்று சொல்லும் (ஆசிரியர்) ; சார்ந்து வால் மரபின் மூன்றும் அலங்கடை-சார்த்து வருதலாகிய இலக்கணத் தினையுடைய மூன்றும் அல்லாலிடத்து மூன்றும் ஆனவிடத்து முப்பத்து மூன்று என்று சொல்லும் என்றகாறு', உராணம் : அ ஆ இ ஈ உ எ ஏ 99 ஓ ஔ க் ங் சஞ்ட்ட ன் ம் யர்ழ்ள்த ன் என வரும், எனப்படும் என்ற சிறப்பான், அளபெடையும் உயிர்மெய்யும் வரிஉ டி3ம் சிறப்பில்லா எழுத்தாகக் கொள்ளப்பட்டன. அஆ என்பன பெயர். முறை அம் முறை, தொகை முப்பது, அவற்றுள், அக"ம் சானும் இயங்கித் சனிகெய்களை இய க்குரற் சிறப்பான், முன்வைக்கப்பட்டது. S.காம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின்மைக்கப்பட்டது. தொகை (யென்பது) தொகையுட் டொகையும், தொகையுள் வகையும், தொகையுள் விரியும், வகையுட்டொகையும், வகையுள் வகையும், வகையுள் வீரியும், விரியுட்டொகையும், விரியுள் கையும், லிரி யுள் விரியும் என ஒன்பது வகைப்படும், எழுச்சென்பது தொகையுட்டொகை. முப்பதென்பது அதன் வகை. முப்பத்து மூன்றென்பது அதன் விரி. முப்பதென் பதுகையுட்டொகை. முப்பத்து மூன்றென்பது அரசன் வகை. அளபெடை தலை ப்பெய்து சாறபதென்பது அரன் வி.ரி. முப்பத்துமூன்றென்பது விரியுட்டொகை, பாற்பதென்பது அதன் வகை. உயிர்மெய் தலைப்பெய்து இரு நூற்றைம்பத்தாறெ ன்பத, அதன் .. செய்யு. "ன்பம் போக்கியம் நீக்கிப் பல "ம் இடப்பட்டது. அகாமுல் னக ரவி ஐவாய் என்ன, இருபெயரொட்டாகுபெயான் முப்பான் மேல் சன்றன, 2. அவைதாம் குற்றியலிக ரங் குற்றியலுகரம் ஆய்த மென்ற முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன. இது, மேல்சார் அவரும் என்னப்பட்ட மூன்றற்கும் பெயரும் முறையும் உணர்த்துதல் முதலிற்று, இ-ள் :- அவைதாம்-மேற் சார்த்து வரும் எனப்பட்டவைதாம், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பால் புள்ளியும் குற்றியலிகரமும் குற்றியலுகர மும் ஆய் கழும் என் சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளியும் என இவை,<noinclude></noinclude> 6lrk21r01kmc3a15qzr49z5u5fqsdul பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/19 250 453649 1437028 2022-08-06T02:37:22Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் - இளம்பூரணம் ஜத் ஓர் அன்ன-(அலை) பேர் சொல்லப்பட்ட முப்பது எழுத்தோகி ஒரு தன்மைய. அப்பெயர் பெயர், அம்முறை முரை எழுத்தோபன்ன' என வேண்டாகடமிய இதனன், முன் ' எனப்படும்' என்ற சிறப்பு அம்மூன் நற்கும் கொள்2 க் கிடந்தமை யின், அது விலக்கு,2ல் பொது மென்பது. குர்மியலிகரமும் குற்றியலுக "மும் என் இம் மொ ஓணம்ஈம (* கால் பொக்கன. சக்சனக் குறுகின விடச்துப் பிரப்ப கோல் ஆகாது. அயொளி', ' *.*"க்கள் தகினவிடத்தும், அவை உயிர் ஆசNurs', அதைப் புசiேெவற்றுமையும் பொருள் வேற்றுமையும் சோக்கி ரெக்செல் a.டி.ஒ 17 • னக, அவற்றுள் 37 ஒ வென்னு மப்பா லைந்தும் ஓரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப, இ.3, மேற்கூறப்பட்டன ற்றிற்கு அன்பும் குறியும் உணர்தரல் நு சலிற்.ஐ. இன் :- அற்றன்-மேற்கூறப்பட்ட எழுத்தினும். அ இ 2. எ ஏ என்னும் அப்பால் -, தம் உ எ ஒ என்று சொல்லப்படுகின்ற அக்கூற்று ஐந்தும், ர் அளபு இசைக்கும் (ஒாேயொன்று ஓர் அளபாக இசைக்கும். குற் றழு, க: என்ப(அலை தாம்) குற்றெழுத்தென்தும் குறிய என் ஜூசொல்லும் ர் (புலவர்) இவர் ( 'ணம்பற்றியன்றிக் குறியீடார். ஆகவன். இது நன்கு றுமையான் இக்குறி பெற்றது. இக்குறியை ஆண்ட வாறு மேல் 'ந்தவழிக் கண்டுகொள்க, ( 6 ) ஓ ஔ வென்னு மப்பா லேழும் ஈரான பிசைக்கு நெட்டெழுத் தென்ப. இ-ன் '--ஆ ஈ எ ஐ ஓ ஔ என்னும் அப்பால் எழும்-ஆ R rot எ தி ஒள கான் ஐசொல்லப்படுகின்ற அம்.க.... து எழும், ஈர் அளபு இசைக்கும்-போ வொன்று ) இாண்டு பாத தி ைUTE ஒலிக்கும், பெட்டெழுச் சான்ப- அலை தாம்) கெட்டெழுத்து என்னும் கரிய என் றுசொல்ஓர் : 'புலர் கா நாகா களுக்கு இனம் இவ்ல யெனும், இடையொப்பு:மை யான் அதை செட்டெழுதினப்படடன. 'நீ, அவள பிசைத்தலோ செழுத் தின்றே. இது, உயிரளபெடையெழுசதிற்கு மாத்திரை கூறுதல் து.ரவிற்று. இ-ள் : -- மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்று-மூன்ற மாத்திரையாக ஒலித்கல் இயல்பாகிய கர் எழுத்திற்கு இல்லை. (விகா மாகிய இாண்டு கூடியதற்கு உண்டு .! | நீட்டம் வேண்டி னவ்வள புடைய கூட்டி பொட்த லென் மனார் புலவர் இது, உயி எளபெடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.<noinclude></noinclude> 88mnwz1jqf4cfvs8narwefgvcg3csa2 பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/20 250 453650 1437029 2022-08-06T02:37:45Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ எழுத்ததிகாரம் - நூன்மரபு இ-ன் :-- நீட்டம் வேண்டின்-நீண்டமாத்திரையையுடைய அளபெடை எழுத் துப்பெற வேண்டின், அ அளபு உடைய கட்டி எழூஉதல்-மேற்கடறிய இரண்ட புடைய நெடிலையும் ஓர் அளபுடைய குறிலையும் (பிளவுபடாமற்)கூட்டி யெழூஉக, என்மனார் புலவர் என்று சொல்லுவர் புலவர். எ. கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை அண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே. இஃது, அம்மாத் திரையிலக்கணம் கூறுதல் நுதலிற்று, இ-ன் :--கண்ணிமை என நொடி என அவ் மாத்திரை-கண்ணிமையும் சொடி யு மாகிய அவை மாத்திரைக்கு அளபு, தண்ணி தின் உணர்ந்தோர் கண்ட ஆ(இழி) நுண்ணிதாக நூலிலக்கணத்தினை உணர்ந்த ஆசிரியர் கண்ட செறி, இமையென்றது இமைத்தற்றொழிலை, நொடியென்றது நொடியிற்பிறர். இசையை, தன் குறிப்பு இன்றி நிகழ்தலின், இமை முன்கூறப்பட்டது. நிறுத் தளத்தல், பெய்தளத்தல், ஈட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்கமுகந்தளத்தில், , சார்த்தியளத்தல், எண்ணியளத்தல் என எழுவகைய என்னும் அளவினுள், இது! சார்த் தியளத்தல். நுண்ணிதினுணர்ந்தோர் கண்டவாறு' என்றதனான்,நாலுழக்குக் கொண்டது நாழியென்றாற்போல, அவ்வளவைக்கு அளவை பெறாமை அறிக. (எ) - அ. ஔகார விறலாய்ப் பன்னீ ரெழுத்து முயிரென மொழிப. இது, மேற்கூறிய குறிலையும் நெடிலையும் தொகுத்து வேறு ஓர் குறியிடுதல் நுதலிற்று, இ-ள் :-ஒளகார இறுவாய் பன்னீர் ஏழுத்தும்-ஔகாரமாகிய இறுதியையு டைய பன்னிரண்டு எழுத்தினையும், உயிர் என மொழிப உயிரென்னும் குறியினை புடைய என்று சொல்லுவர். னகார விறுவாய்ப் பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப, இது, மேற்கூறிய உயிரல்லா எழுத்திற்கு ஓர் குறியிடுதல் முதலிற்று. இ-ள் :-- னகார இறுவாய் பதினெண் எழுத்தும் னகரமாகிய இறுதியையு டைய பதினெட்டு எழுத்தினையும், மெய் என மொழிப மெய்யென்னும் குறியினையு டைய என்று சொல்லுவர். 0. மெய்யோ டியையினு முயிரிய றிரியா, இஃது, உயிர்மெய்க்கு அளபு கூறுதல் அதலிற்று, இ-ள் !--மெய்யோடு இயையினும்-(உயிர்மெய்யாவன) மெய்களோடு உயிர் இயையப்பிறந்த சிலைமையவாயினும், உயிரியல் திரியா-(அவ்வுயிர்மெய்கள்' அவ்லி யைபின் கண்ணே வேறு ஓர் எழுத்தாய் நின்றமையின், மெய்யோடு இயைபின்றி வின்ற) உயிர்களது இயல்பில் திரியா. உயிரும் மெய்யும் கூடுகின்ற உயிர்மெய்க் கூட்டத்தினை, ' மெய்யோடியையி னும் ' என உயிர்மேல்வைத்துக் கூறியது, அவ்வுயிரின் மாத்திரையே இதற்குமாக் திரையாகக் கூறுகின் றமை நோக்கிப்போலும், இயலென்றது பெரும்பான்மை<noinclude></noinclude> iqj33jh1mxbslnzdzw2jesaa83z7vmy பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/21 250 453651 1437030 2022-08-06T02:38:10Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ய - தொல்காப்பியம் - இளம்பூரணம் மாத்திரையினை, சிறுபான்மை குறியும் எண்ணும் கொள்க, " எனவும், கா எனவும் அவ்வாறு நின்றமை அறிக். சுக, மெய்யி ளையே யரையென மொழிப. இது, தனிமெய்க்கு அளபு கூறுதல் இதலிற்று, இ-ள் :- மெய்யின் அளபு-மெய்யது மாத்திரையினை, அரை என மொழிப. (ஏரோ வொன் று) அரை மாத்திரை யுடைய வென்று சொல்லுவர். காக்கை, கோங்கு எனக் கண்டுகொள்க. ஈண்டு வேற்றுமைாயமின்றி ஒற் அமைாயம் கரு,சப்பட்டது, க2. அவ்விய விலையு மேளை மூன்றே, இது, சார்பிற்றோற்றத்து எழுத்து மூன்றற்கும் அளபு கூறுதல் முதலிற்று. இ-ள் ;---அ இயல் நிலையும் - மேற்கூறிய அதை மாத்திரையாகிய அவ்வியல் பின்கண்ணே நீற்கும், எனை மூன்று-ஒழிந்த சார்பிற் றோற்றத்து மூன்றும், கேண்யோ , நாகு, எஃகு எனக் கண்டுகொள்க. (ஏகாரம் ஈற்றசை) (52) க... அரையளபு குறுகன் மகர முடைத்தே இசைவிட னருகுந் தெரியுங் காலை. இ', 'மெய்களுள் ஒன்றற்கு மாத்திசைச் சுருக்கம் கூறுதல் நுதலிற்று, இ-ன் :--அரை அளபு குறுகல் மகரம் உடைத்து-அரையளபாகிய வெல்லை பிற் குறுகிக் கான் மாத்திரை யாதலை மகரமெய் உடைத்து. (அஃது யாண்டோவெ னின்) இசையிடன் அருகும்-வேறு ஓர் எழுத்தினது ஒலியின் கண் அது சிறு பான்மையாகி வரும், தெரியுங்காலை-உராயுங்காலத்து. உ - ம். போன்ம், வரும் வண்ணக்கன் என வரும். கான்மாத்திரையென்பது உயிைர்கோடல், (ஏகாரம் ஈற்றசை.) கச. உட்பெறு புள்ளி யுருவா கும்மே. இது, பகத்தின் மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்தல் முதலிற்று, இ-ள் :- உள்பெறு புள்ளி உருது ஆகும் புறத்துப்பெறும் புள்ளியோடு உள் சாற்பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவாம். (அஃதின்மை பகரத்திற்குவடிவாம்.) உ-ம். ம, ப எனக் கண்டுகொள்க. (உள்ளாற் பெறும்புள்ளி குறுகிய மகரத்திற்கு வடிவாம் என்பதே இச்சூத்தி மத்திற்கு சேர் உரை, ஏகாரம் ஈற்றசை.) (கச) கநி. மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல், இஃது, உயிர்மெய்யோடு தனிமெய்யிடை வடிவுவேற்றுமை செய்தல் துத விற்று. இள்:-- மெய்யின் இயற்கை- தனிமெய்யினது இயல்பு, புள்ளியொடு நிலையல்புள்ளியொடு நிற்றல். (உயிர்மெய்யின தியல்பு புள்ளியின்றி நிற்றல்,) க்ங் ச் ஞ் ட் ண் த்ம்ய்ர்ல்வ்ழ்ள்ற்ன் எனக் கண்டு கொள்க. (கரு) கசு, எகர ஒகரத் தியற்கையு மற்றே . இஃது, எகர ஒகரங்கட்கு ஏகார ஓகாரங்களோடு வடிவுவேற்றுமை செய் 'ல் -தலிற்று,<noinclude></noinclude> 76j8dos7xtm8xwik3nylmfw7dol40h5 பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/22 250 453652 1437031 2022-08-06T02:38:34Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ (கசு) எழுத்ததிகாரம் - நான்மபு இ-ள்':-எகர ஒகரத்து இயற்கையும் அற்று-எகர ஒகரங்களது இயல்பும் அவ் வாறு புள்ளி பெறும் இயல்பிற்று, (ஏகார ஓகாரங்களது இயல்பு அப்புள்ளி பெறா இயல்பிற்று.) (ஏகாரம் ஈற்றசை.) உ-ம். எ, ஒ. கன், புள்ளி யில்லா வெல்லா மெய்யும் உருவுரு வாகி யகரமோ யீெர்த்தலும் எனை யுயிரோ இருவ திரிந் துயிர்த்த லும் ஆயீ ரியல வுயிர்த்த லாறே. இஃது, உயிரும் மெய்யும் கூடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :--எல்லா மெய்யும் புள்ளி இல்லாக - எல்லா மெய்களும் புள்ளி இல்லை யாம்படியாக, உருவு உருவு ஆகி - தத்தம் முன்னைவடிவே இன்னும் வடிவாக, அகரமோடு உயிர்த்தலும் - அகரத்தோடுகூடி ஒலித்தலும், ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும்-ஒழிந்த உயிர்களோடு வடிவு வேறுபட்டு ஒலித்தலுமா கிய, அ ஈர் இயல-அவ்விரண்டு இயல்பினையுடைய, உயிர்த்தல் ஆறு-அவை ஒலி க்கு முறைமை, "தன்னின முடித்தல்” என்பதனான், அளபெடை உயிரோடும் சார்பிற்சோற்ற த்து உயிரோடும் கூடும் உயிர்மெய்யும் கொள்க. உ-ம். உரும்பு உருவாகி உயிர்த்தல் காது எனக் கண்டுகொள்க. உருவு திரி த்து உயிர்த்தல் கா நா எனக் கண்டுகொள்க. ஈண்டு உயிரும் மெய்யும் கூடுகின்ற உயிர்மெய்க்கூட்டத்தினை, எல்லா மெய் மென்று மெய்மேல் வைத்துக் கூறியது, அது முன்கூறிக் கூறப்படுதல் நோக்கிப் போலும். உயிர்மெய் யென்பதனை, ஒற்றுமைகொள் வுழி உம்மைத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை யெனவும், வேற்றுமை கொள்வுழி உம்மைத்தொகையெனவும் கொள்க. 'இல்லாக' என்பது இல்லா' என நின்றது, உருவு திரிந்து உயிர்த்தல் மேலும் கீழும் விலங்கு பெறு வன விலங்கு பெற்று உயிர்த்தலும், கோடுபெறுவன கோெெபற்று உயிர்த்த லும், புள்ளி பெறுவன புள் பெற்று உயிர்த்தலும், புள்ளியும் கோடும் உடன் பெறுமான புள்ளியும் கோடும் உடன்பெற்று உயிர்த்தலும் எனக்கொள்க. (கன) க.. மெய்பின் வழிய அயிர்தோன் று நிலையே. இது, உயிர்மெய்யுள் உயிரும் மெய்யும் நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று, இள் :-- உயிர்-உயிர், மெய்யின் கழியது மெய்களின் பின்னவாம், தோன்றும் நிலை-உயிர்கள் தோன்றும் நிலைமைக்கண், 'தோன்று நிலை' என்றதனான், உயிர்மெய்களைப் பிரிக்குமிடத்தும் கூட்டுமிட த்தும், அவ்வாறே முன்னும் பின்னும் ஆதலைக் கொள்க. மெய்யும் உயிரும் முன் னும் பின்னும் பெறவிற்குமென் றமையால், அக்கூட்டம் பாலும் நீரும்போல உடன் கலந்த தன்றி, விரல் கனிகள் தலைப்பெய்தாற்போல வேறு நின்று கலந்தனவல்ல என்பது பெறுதும். ஈண்டு வேற்றுமைாயம் கருதப்பட்டது. (எ-ஈற்றசை.) (கஅ) சுகூ, வல்லெழுத் தென்ப கசடதபற. இது, தனிமெய்களுள் சிலவற்றிற்கு வேறு ஓர் குறியிடுதல் சதலிற்று,<noinclude></noinclude> 1ravzovsme115hx82awpuj1j19wryrp பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/23 250 453653 1437032 2022-08-06T02:38:55Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ 42 தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ன் :- வல்லெழுத்து என்ப-வல்லெழுத்து என்னும் குறிய என் று சொல் அவர், 5 சட த ப ற-க ச ட த ப ற என்னும் தனிமெய்களை. வல்லென்று இசைத்தலானும், வல் என்ற தலைவளியாற் பிறத்தலானும் வல்லெழுத்து எனப்பட்டது. மொழிக்கு முதலாமெழுத்து நான்கு உளவாகலா னும், அவற்றால் வழக்குப்பயிற்சி பெரிதாகலாலும் .(வல்லினம்) முன்கூறப்பட் டது. (கசடதபற எனனும் தனிமெய்கள் க் ச்ட்த் ப் ற்.) உய, மெல்லெழுத் தென்ப க ஞ ண ந மன. இதுவும் அது, இ-ள் :--மெல்லெழுத்து என்ப - மெல்லெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர், க ஞ ண ந ம ன ங ஞ ண ந ம ன என்னும் தனிமெய்களை, மெல்லென்று இசைத்தலானும், மெல் என்ற மூக்கின் வளியாற் பிறத்தலா லும், மெல்லெழுத்து எனப்பட்டன. மொழிக்கு முதலாமெழுத்து மூன்று உளவாகலானும் அவற்றின் வழக்குப்பயிற்சியாலும் (மெல்லினம்), முதலா மெழுத்துச் சிறுபான்மை வழக்கினவாய் இரண்டாகிய இடையினத்தின் முன் வைக் கப்பட்டது. வன்மை மென்மை கூறலின், எழுத்து அருவன்றி உருவாதல் பெறப் பட்டது. உயிருக்கும் குறுமை பெருமை கூறலின்,உருவென்பது பெறுதும். (உய) (ங ஞ ண ந மன என்னும் தனிமெய்கள் ங் ஞ் ண்ர்ம்ன் .) உக. இடையெழுத் தென்ப யரலவழள, இதுவும் அது. இ-ள் :- இடைடயெழுத்து என்ப - இடையெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர், ய ர ல வ ழ ள-ய ர ல வ ழ ள என்னும் தனிமெய்களை. இடைநிகரவாகி ஒலித்தலானும், இடைரிகர்த்தாய கிடற்றுவளியாற் பிறத்த லாலும் இடையெழுத்து எனப்பட்டது. (ய - ல வ ழ ள என்னும் தனிமெய்கள் ய் ர் ல் வ்ழ்ள் . உ.உ, அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின் மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை , இது, தனிமெய் மயக்கத்திற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்து தல் நுதலிற்று, இ-ள் :--அ மூ ஆறும்-மேற்சொல்லப்பட்ட (மூவா று) பதினெட்டு மெய்யும், வழங்கு இயல் மருங்கின் - தம்மை மொழிப்படுத்தி வழங்கும் இயல்பு உளதாகிட த்து, மெய்மயக்கு-மெய் மயக்கம் என்றும், .டன் லை-உடனிலை மயக்கம் என்றும் இருவகைய, தெரியும் காலை-(அலை மயங்கு முறைமை) ஆகாயும் காலத்து, உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூன்றனையும் உறழ்ச்சியகையான் உறழ ஒன்பது உளவாமன்றே, அவற்றுள் தனிமெய்யோடு தனிமெய் மயக்கம் ஒன்றே கூறிய தென்னெனின், மற்றவற்றிற்கு வரையறை யின்மையின், வரையறை யுடைய தனிமெய்மயக்கமே கூறியொழிந்தார் என உணர்க. மெய் என் றதனால், தனிமெய்யோடு உயிர்மெய் மயக்கமன்றி, தனிமெய்யோடு தனிமெய் மயக்கமாதல் கொள்க:<noinclude></noinclude> gef3qwi5reic2yltf465wr5rr766x3p பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/24 250 453654 1437033 2022-08-06T02:39:19Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ எழுத்ததிகாரம் - நான்மாபு உக, றலள வென்னும் புள்ளி முன்னர்க் கசப வென்னு மூவெழுத் துரிய, இது, மெய்மயக்கம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :-ட ற ல ள என்னும் புள்ளி முன்னர்-ட றலள என்று சொல்லப் படும் புள்ளிகளின் முன்னர், க ச ப என்னும் மூ எழுத்து உரிய-க ச ப என்று சொல்லப்படும் மூன்றெழுத்தும் மயங்குதற்கு உரிய, உ-ம், கட்க, கற்க, செல்க, கொள்க எனவும், கட்சிறார், கற்சிறார், செல்சிறார், கொள் சிறார் எனவும், கட்ப, கற்ப, செல்ப, கொள்ப எனவும் வரும். மேல் தெரியுங்காலை' என்றதனான், இம்மெய்மயக்கம் கூறுகின்ற சூத்திர மெல்லாம் பலபடியால் மயக்கம் கொள்ளச் சொல்நோக்கு உடைய வெனினும், வழ க்கினோடு பொருந்த ஒன்றறோடு ஒன் நன்றி மயங்காதென்பது கொள்க. மெய் மயக்கம் ஒருமொழிக்கும் புணர்மொழிக்கும் பொதுவாகலின், மேற் கூறும் புணர் மொழிச் செய்கையெல்லாம் தலையாய அறிவினோரை நோக்க ஒருவாற்றாற் கூறி யவா முயிற்று. உச. அவற்றுள் லௗஃகான் முன்னர் பவவுர் தோன்றும். இதுவும் அது. இ-ள் :--அவற்றுள்-மேற்கூறிய நான்கனுள்ளும், வனஃகான் முன்னர்-லகார வகாரங்களின் முன்னர், யவலம் தோன்றும்-கசபக்களேயன்றி யகர சங்களும் தோன்றி மயங்கும். உ-ம், கொல்யானை, வெள்யானை, கோல்வளை, வெள்வளை என வரும். (உச) உரு, கஞணா மனவெனும் புள்ளி முன்னர்த் தத்த மிசைக ளொத்தன நிலையே, இதுவும் அது. இ-ள் :- ஞ ண ந மன என்னும் புள்ளி முன்னர்- ங ஞ ண ந மன என்று சொல்லப்படும் புள்ளிகளின் முன்னர், தம்தம் மீசைகள் ஒத்தன-(நெடுங்கணக்கி னுள்) தத்தமக்கு மேல்நிற்கும் எழுத்தாகிய கசடதபறக்கள் பொருந்தின, நிலை-மயங்கிரிற்றற்கண். (ஏகாரம் ஈற்றசை.) உ-ம், தெங்கு, மஞ்சு, வண்டு, பந்து, கம்பு, கன்று என வரும், உசு. அவற்றுள் ணனஃகான் முன்னர்க் * சுசஞப மயவவ் வேழு முரிய, இதுவும் அது. இ-ன் :- அவற்றுள் மேற்கூறப்பட்ட மெல்லெழுத்து ஆறனுள், ணனஃகான் முன்னர் - ணகார னகாரங்களின் முன்னர், க ச ஞ ப மயவ எழும் உரிய(டறக்கனே யன்றி,) க ச ரூப மயன் என்றுசொல்லப்படும் ஏழும் மயங்குதற்கு உரிய,<noinclude></noinclude> 3fa9gva0cwsf9sxfc9o63mk6f5811n1 பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/25 250 453655 1437034 2022-08-06T02:39:42Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் - இளம்பூரணம் உ-ம். வெண்கலம், புன்கண், வெண்சாந்து, புன்செய், வெண்ஞாண், பொன் ஞாண், வெண்பலி, பொன்பெரிது, வெண்மாலை, பொன்மாலை, மண்யாது, பொன் யாது, மண்வலிது, பொன் வலிது எனவரும், (உசு) உள. ஞகமவ வென்னும் புள்ளி முன்னர் பஃகா னிற்றன் மெய்பெற் றன்றே, இதுவும் அது' | இ-ள் :--ஞ ஈ மவ என்னும் புள்ளி முன்னர்-ஞ ந மவ என்று சொல்லப்படு கின்ற புள்ளிகளின் முன்னர், யஃகான் நிற்றல் மெய்பெற்றன் று-யகாம் மயங்கி நிற்றல் பொருண்மைபெற்றது. (ஏகாரம் ஈற்றசை,) உ-ம். உரிஞ்யாது, பொருக்யாது, திரும்யாது, தெவ்யாது என வரும். (உ.எ) உ.அ. மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும். இதுவும் அது. இ-ள் :-- மஃகான் புள்ளிமுன்-மகரமாகிய புள்ளி முன்னர், வ உம் தோன் ஓம்-(பகா யகரங்களே யன்றி) வகரமும் தோன்றிமயங்கும். உ-ம். நிலம் வலிது என வரும். உக, யாழ வென்னும் புள்ளி முன்னர் முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும். இதுவும் அது. இ-ள் :-யாழ என்னும் புள்ளி முன்னர்-ய ரழ என்று சொல்லப்படுகின்ற புள்ளிகளின் முன்னர், முதல் ஒரு எழுத்து ஙகர மொடு தோன்றும் - மொழிக்கு முதல் ஆம் என்னப்பட்ட ஒன்பதுமெய்யும் (முதலாகா) கொத்தோடு தோன்றி மயங்கும், உ-ம். வேய் கடிது, வேர் கடிது, வீழ் கடிது, சிறிது, தீது, பெரிது; ஞான் நது, நீண்டது, மாண்டது, யாது, வலிது எனவரும், வேய்ஙனம், வேர் கனம், வீழ்ஙனம் எனவும் ஒட்டுக, வேய் யாது என்புழி, உடனிலையா தலான் யகரம் ஒழித்து ஒட்டுக. (மொழிக்கு முதல் ஆம் என்னப்பட்ட ஒன்பது மெய் ' என்பது மொழிக்கு முதலாய் வரும் ஒன்பது உயிர்மெய்யெழுத்துக்களில் உயிரொழிந்த மெய்களைக் குறித்துமின்றது.) கடம், மெய்க்நிலைச் சுட்டி னெல்லா வெழுத்துக் தம்முற் றாம்வரூஉம் ரழவலங் கடையே. இது, நிறுத்த முறையானே உடனிலைமயக்கம் ஆமாற உணர்த்துதல் அத விற்று, இ-ன் :- மெய்நிலை சுட்டின் பொருள் நிலைமைக் கருத்தின் கண், எல்லா எழு த்தும் தம்முன் தாம் வரும் எல்லா மெய்யெழுத்தும் தம்முன்னே தாம் வந்து மயங் கும், ர ழ அலங்கடை-ரகார மகாரங்கள் அல்லாத இடத்து. (ஏகாரம் ஈற்றசை.) உ-ம், காக்கை, எங்கனம், பச்சை, மஞ்ஞை, பட்டை, மண்ணை, தத்தை, வெர்ரோய், அப்பை ஆழ்மி, வெய்யர், எல்லி, எவ்வீ, கொள்ளி, கொற்றி, சன்னி<noinclude></noinclude> jxfttxzt7dks0pelk14c2yka2z11zgp பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/26 250 453656 1437037 2022-08-06T10:32:34Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ எழுத்ததிகாரம் - நான்மரபு எனவரும், 'மெய்க்கிலைச்சுட்டின்' என்றதனால், 'தம்முற்றாம்வரும்' என்றது மெய்ம்முன்னர் மெய்யென்னும் மாத்திசையன்றி உடனிலைமெய் மேலதாம் என் பதுகொள்க. எல்லாம்' என்றது, மேல் ய ர ழ என்ற அதிகாரம் மாற்றிவந்து நின்ற து. கூ.க. அ இ உ.அம் மூன்றுஞ் சுட்டு, இ-ன்:-அ இ உ அமூன்றும் சுட்டு-(குற்றெழுத்து என்னப்பட்ட) அ இ உ என்னும் அம்மூன்றும் சுட்டு என்னும் குறியவாம். உ-ம். அங்ஙனம், இங்கனம், உங்கனம் என வரும். கூஉ ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. இ-ன் :---- ஏ ஓ அமூன்றும் வினா-(மேல் நெட்டெழுத்து என்னப்பட்ட) ஆ ஏ ஓ என்னும் அம்மூன்றும் வினா என்னும் குறியவாம். உ-ம், உண்கா, உண்கே, உண்கோ சாத்தா எனவரும். தன்னின முடித்தல்” என்பதனால், எகாரமும் யகர ஆகாரமும் வினாப் பெறு மெனக்கொள்க. இக்குறிகளையும் முன்குறிலென்றும் நெடிலென்றும் கூறியவழியே கூறுகவெனின், இவை சொல் நிலைமையிற்பெறும் குறியாகலின், ஆண்டு வையாது மொழிமரபினைச் சாரவைத்தார் என்க, இக்குறி மொழிகிலைமைக்கேல் எழுத்தின் மேல் வைத்துக் கூறியது என்னையெனின், இவ்வதிகாரத்துப் பெயர் வினையல்லன வற்றிற்குக் கருவிசெய்யாமையின் என்க. (கூட) கூட, அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலும் உளவென மொழிப விசையொடு சிவணிய நரம்பின் மறைய வென் மனார் புலவர். இஃது, எழுத்துக்கள் முற்கூறிய மாத்திரையின் நீண்டுவிற்கும் இடம் இது வென்பது உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்;- அளபு இறந்து உயிர்த்தலும்-(உயிரெழுத்துக்களெல்லாம்) தமக்குச் சொன்ன அளவினைக் கடந்து ஒலித்தலையும், ஒற்று இசை நீடலும் ஒற்றெழுத்துக் கள் தம்மொலி முன் கூறிய அளபின் கடலையும், இசையொடு சிவணிய நரம்பின் மறைய-(இந் நூலுட்கூறும் விபரீயின் கண்ணேயன்றிக்) குரல் முதலிய ஏழிசை யோடு பொருந்திய நரம்பினையுடைய யாழினது இசை கற்கண்ணும், உள என மொழிப என்மனார் புலவர்-உள எனச்சொல்லுவர் அவ்விசை நூலாசிரியர் என்று சொல்லுவர் புலவர். ஒற்றிசை நீடலும் என்றனர், அளபிறந்துயிர்த்த லென்றது அதிகாரத்தால் நின்ற உயிர்மேற்சேறலின். உன வென்றது அந்நீட்டிப்பு ஒரு தலையன் றென்பது விளக்கிற்று. இசைநூலாசிரியரும் முதனூலாசிரியர் தாமே யெனினும், 'மொழிப் என வேறொருவர்போலக் கூறியது, அதுவும் வேறு ஒரு நூலாகச் செய்யப்படும் நிலைமைநோக்கிப் போலும், 'மறையும்' என்பதன் உம்மை விகாரத்தால் தொக் கது, அகரம் செய்யுள் விகாரம், முதலாவது நூன்மரபு முற்றிற்று<noinclude></noinclude> 0clyxua3kaf4bor23p2zahygmtjymlu பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/27 250 453657 1437038 2022-08-06T10:33:44Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ இரண்டாவது மொழிமரபு. இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், மொழிகளுக்கு எழுத்தான் வரும் மரபு உணர்த்தினமையின் மொழிமரபு எனப்பட்டது, இதனுள் கூறுகின் வது தனிகின்ற எழுத்திற் கன்றி மொழியிடை (இன்ற) எழுத்திற்கு எனவுணர்க. கூச, குற்றிய லிகர நிற்றல் வேண்டும் பாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக் காவயின் வரூஉ. மகர மூர்ந்தே . இத்தலைச்சூத்திரம் என் முதலிற்றோ வெனின், சார்பிற்றோற்றத்து எழுத் துக்களிற் குற்றியலிகரத்தில் ஒருமொழிக்குற்றியலிகரத்திற்கு இடமும் பற்றுக் கோடும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- குற்றியலிகரம்-ஒருமொழிக்குற்றியலிகரம்,உரையசைக் கிளவிக்கு. உரையசைச் சொல்லாகிய கியா என் முதற்கு, ஆ வயின் வரூஉம்-(சினை யாக) அச்சொற்றன்னிடத்து வருகின்ற, யா என் சினை மிசை-யா என் சினை மிசை, மகரம் ஊர்ந்து நிற்றல்வேண்டும்-மகர ஒற்றினை ஊர்ந்து நிற்றலைவேண்டும் (ஆசிரியன்). உ-ம், கேண்மியா எனவரும். மியா என்னும் சொல் இடம். மகாம் பற் றுக்கோடு, யா என்னும் சினையும் மகாம்போலக் குறுகுதற்கு ஒரு சார்பு. (ச) கூடு. புணரிய னிலையிடைக் குறுகலு முரித்தே உணரக் கூறின் முன்னர்த் தோன்றும் இது, குற்றியலிகரம் புணர்மொழியுள்ளும் வருமென்று உணர்த்துதல் மத லிற்று. இ-ன் :--புணர் இயல் சிலை இடையும் இருமொழி தம்மிற் புணர்தல் இயன்ற நிலைமைக்கண்ணும், குறுகல் உரித்து-அவ்விசரம் குறுகுதலுடைத்து. உணரக்கூறின்-(ஆண்டை இடத்தினையும் பற்றுக்கோட்டினையும் ஈண்டு) உணரக் ...றப்புகின், முன்னர் தோன்றும்-(அது வேண்டுவதில்லை,) குற்றியலுகரப்புணரி யலுள் (அவ்விடனும் பற்றுக்கோடும்) தோன்றும். 'புணரிய னிலை யிடையும்' என மொழிமாற்றி உரைக்க. முன்னர்த்தோன்று மாறு : “ யகரம் வரும்வழி யிகரங் குறுகும், உகரக் கிளவி துவரத்தோன் முது'' [குற்றியலுகரப் புணரியல்-டு) என்பதனுள் அறிக. உகாம்சார்ந்த வல்லெழுத்துப் பற்றுக்கோடு, உ-ம். நாகியாது, வரகியாது, தென்கியாது, எஃகியாது, சொக்கியாது, குரங் கியாது எனவரும், கூ.சு, நெட்டெழுத் திம்பருக் தொடர்மொழி யீற்றுங் குற்றிய லுகரம் வல்லா பார்த்தே. இஃது, ஒருமொழிக் குற்றியலுகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் உணர்த் முதல் முதலிற்று.<noinclude></noinclude> i6a0y0frf33cchpz39hlv0ziv8jq2uq பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/28 250 453658 1437042 2022-08-06T11:04:10Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ எழுத்ததிகாரம் - மொழிமரபு இ-ள் :- நெட்டெழுத்து இம்பரும் நெட்டெழுத்தினது பின்னும், தொடர் மொழி ஈற்றும் தொடர்மொழியது இறுதியிலும், குற்றியலுகரம் வல்லாறு கார் ந்து (நிற்றல் வேண்டும்)-குற்றிய லுகரம் வல்லெழுத்து ஆறினையும் ஊர்ந்து விற் தலை வேண்டும் ஆசிரியன்). " தந்து புணர்ந்துரைத்தல் ) (மரபு-ாய) என்னும் தந்திரீவுத்தியான், முன்னி ன்ற நிற்றல் வேண்டும்' என்பது ஈண்டும் புணர்க்கப்பட்டது. உ-ம். நாகு, வாகு என வரும். நெட்டெழுத்திம்பரும் தொடர்மொழியீறும் இடம். வல்லெழுத்துப் பற்றுக் கோடு. இவ்வாறு இடமும் பற்றுக்கோடும் கூறவே, மொழிக்கு ஈறாலும் கூறி யவா முயிற்று. 6. இடைப்படிற் குதுகு மிடறு மாருண்டே கடப்பா டறிந்த புணரிய லான, இது, குற்றியலுகரம் புணர்மொழியுள்ளும் வருமென்பது உணர்த்துதல் ஆ விற்று . இ-ள் :--இடைப்படினும் குறுகும் இடன் உண்டு-(அவ்வகரம்) புணர்மொழி இடைப்படினும் குறுகும் இடமுண்டு. (அதன் இடமும் பற்றுக்கோடும் யாண்டோ பெறுவதெனின்) கடப்பாடு அறிர்த புணரியலான்-அதன் புணர்ச்சிமுறைமை அறி யும் குற்றியலுகரப்புணரியலின்கண்ணே . "இடைப்படினும் குறுகும்' என மொழிமாற்றி உமைக்க, அக்குற்றியலுகரம் புணரியலுள் " வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித், தொல்லை யியற்கை நிலையலு முரித்தே'' (குற்றியலுகரப் புணரியல்-ச) என்பதனுள் வல் லொற்றுத்தொடர்மொழியும் வல்லெழுத்து வருவழியும் இடம். அவ்வல்லொற் றுத்தொடர்மொழியீற்று வல்லெழுத்துப் பற்றுக்கோடு, உ-ம். செக்குக்கணை, சுக்குக்கோடு என வரும், 'இடன்' என்றதனான், இக்குறுக்கம் சிறுபான்மை என் றுணர்க. (ஆர், ஏ என்ப ன அசைகள், 'புணரியலான்' என்பது வேற்றுமை மயக்கம். அகரம் சாரியை.) (ச) கூஅ, குறிய தன் முன்ன 'சாய்தப் புள்ளி உயிரொடு புணர்ந் தலல் லாறன் மிசைத்தே, . இஃது, ஒருமொழி ஆய்தம் வருமாறு உணர்த்து ஓல் துரலிற்று. இ-ள் :- ஆய்தப் புள்ளி-ஆய்தமாகிய புள்ளி, குறியதன் முன்னர் குற்றெழுத் இன் முன்னர், உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்து-உயிரொடு புணர்ந்த வல் லெழுத்து ஆதன் மேலது. உ-ம். எஃகு, கஃசு என வரும். குறியதன் முன்னரும் வல்லெழுத்துமிசையும் இடம். இஃது உயிரன்மையின், இதற்குப் பற்றுக்கோடு என்பதில்லை. கஃறீது என்பதனை மெய்பிறிதாகிய புணர் ச்சி (புணரியல்-எ) என்ப வாகவின், ' புள்ளி' என்றதனான் ஆய்தத்தை மெய்ப் பாற்படுத்துக்கொள்க, ஈண்டும் உயிரென்றது, மேல் 'ஆய்தத்தொடர் மொழி' (குற்றியலுகரப் புணரியல்-க) என்பேதலின் பெரும்பான்மையும் குற்றியலுகரத் தினை, வெஃகாமை முதலிய பிற உயிர் வாவு சிறுபான்மை யெனக்கொன்க, (5)<noinclude></noinclude> 7houtia2dzczr4esv6s3h9ojn5my9g8 பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/29 250 453659 1437043 2022-08-06T11:04:52Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் - இளம்பூரணம் கூக, ஈறியன் மருங்கினு மிசைமை தோன்றும். இஃது, அ டம் பான மொழியள் நாம் உருயென்ப* V Wர் தால் இ-ள்:-+- இயல் மரு 4 : -20 , ' - மு ) /, & ர்த்து கடக்கும் இடத்திலும், 2. பொன் தப்லீ ' போன்றும், P.-. ஃது, மு' < F S 5" - ருர். *ண்டும் வ ஈன் அவை, 17. உருவினு மிசையினு மருகிக் தோன்று || மொழிக்குறிப் பெல்லா மெழுத்தி னியல் ஆய்* : 31க் 51-பான. :: . '. '* ' F ' ம் = ணர் சசல் * ---- . - , . * 3 65 , *' di sax:157+ J. &#ள் : '. ஒரு - " " - 2-! * பப், ம், காப்பு சொழிபெ : தரிப்பு ட்ெ 2 73, 4 / Fair 2 :-c- எழுச் ... Pட்டு எ.4:'பட் ' 4 - 5,ம். ''> *L, " , ! :'த; எ கால மேடெனி d, அன்;.) <! - > * - * kao Jான - து பாய்ம் என் அx7 னா அளபாய் 3 . ANT / [ .. ரூபக - கு.ரியும் உணர். தற்கு) தன் பல ஆட்சிக்கு 2-1, ரேகாந்த'ஸ்பர உரு> - ஃன்றது' 3"ன்பது இல்லை. (எ) குன்றிசை மொழிவழி வின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுக்கே, இதா... பட்டர் - 33 டி' ரா : 5, * *பர்க ஓர பானடை 2,கனர் * *எல். நரலிற்று . இ-ள் :- குன்று. இசை மொழி , ன் என் ம இசை மறைக்கும் (அளபெடை யோசை பாகச சொல்லாதொழியில், குன்னு - தா எ ஓசையையுடைய அவள பெடை எழுத்சானாய மொழிக்கண்ணே ஒன்று அங்வோசையை சிறைக்கும், (அ) யான பென்சரின்,) செட்டெ.4 /*/ இU P!, தர்செழுத்து-சேட்டெ முச்சக்க என் பின்த4 | அறிந்தப்பிரப்பானும் பானர் யொலும் பசையா னும்) மொத்த கும்மிரமுகர்கள் உம், ஆ, ஈa, E2. So', - '...னே. (:L. ஈண்கிபென்ற, அ . , பேழை து ஒரு பொருளுள் 2..ணர்த்தி பெழுத்தொருமாழியாய் பர்கும் மைான இலையும் மொழிமேற் காணப் படு தலிற் சார்பிற்ரந்தது. எழு தன்னப்பான், பெரும்பான்மையும் அம்மொழிதானே அகவெழுந்தாய் --ருதலானும், அய்மொழிநிலைமை ஒழிய கேறெழுத்தாகவும் சொல்லப்பதெலானும், அக்காறு ஆகாதென்பது. சிறுபான்மையும் அம்மொழி தானே எழுத்தாய் வாடாதெனக் கொள்க. (..-ம்.) எருதுகாலுரு அது என்றாற்போல்வன,<noinclude></noinclude> 5g3lrr220sufatr5nxq0jmt29tghftc பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/30 250 453660 1437044 2022-08-06T11:05:18Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ பசு எழுத்ததிகாரம்-- மொழிமாபு ச. ஐ ஔ வென்னு மாயீ ரெழுத்திற் . கிகரவுகர மிசைரின்ற வாகும் இது, மேலதற்கு ஓர் புதனடை உணர்த்துதல் நுதலிற்று. இ.ன் ! --- 32 ஔ என்னும் அ ஈர் எழுத்திற்கு-(ஒத்த குற்றெழுத்து இல்லா) ஐ ஔ என்று சொல்லப்படும் அவ்விரண்டெழுத்திற்குமுன், இகரம் உகரம் இசை விரை ஆகும் (ஈ தாம் ஈ-37.கா கட்கு ஒத்தி குற்றெழுத்தாகிய) இ52 உகாங்கள் (அல்குண்மிசை பொழிக்கண் ஒன்று ஓசையை நிறைப்பன யாகும் இத்துணையும் நூன்மரபின் ஒழிபு. h ., நெட்டெழுத் தேழே யோசெழுத் தொருமொழி, ஃ ', எழுத்தினான் மொழியாமாறு உணர்த்துதல் கதவிற்று. இன்:---பெட்டெழுத்து எழும் பொட்டெழுத்தாகிய ஏழும், ஓர் எழுத்து ஒரு மொழி-ஓர் எழுத்தானாரும் ஒரு மொழியாம். -ம், st: *, *", ht, * , ஒள என ரூம். இதும் காக்கும் --பொய்க்கும் பொதி. ஔகாரத்தில் உயிர்மெய்யினை பே கொள்க. வழும்' என்பதன் உம்மை விகா'ந்தால் தொக்கது.' (ஏகாரம் 'T. குற்றெழுத் தைந்து மொழி நின்ற சிலவே. இவர், தற்பொழு தாக்கள் செழுத்தொருமொழி ஆகா யென்பதும், அவற் றுள் ஒருலமாழிபால ன உள்ளவர் பதம் உணர்த்தல் அலிற்று. ' இ-ன் :- குற்றெழுத்தும் குற்றெழுத்தாகிய ஐந்தும், மொழி நிறைபு இம- செமூதாய்கன்று ஒருமொழியாட்டம் இல. அவற்றார். சி' 'ரைக்கும். p" ஒழிபான்கும் பட்டா வினாவாயும் பொழில்மைக்குமன்மே 'ெனின், அனர் இச்சொல்லாத, அவற்றிற்குக் கருவிசெய்யார் என்க, ஐநம் கண்பான் ---பை ஈண்டு கச்சப்பட்டஈன்றது. (ஏ-காரம் ஈற்றசை.) கம் உச்சகும். உயிர்க்கும் பொது. 2 :...'', - r ::'3" .. ரூம். (க்க) சடு, ஒரெழுத் தொருமொழி ரெழுத் தொருமொழி இரண்டிறர் திசைக்கும் தொடர்மொழி எப்பட மூன்றே மொழிகிலை தோன்றிய நெறியே. இஃது, எழுத்தினான் ஆகும் செலாதிக பின் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் பூலிற்று, இ-ள் :-- ஓர் எழுத்து ஒருமொழி- ழுத்தான் ஆகும் ஒருமொழி, ஈர் எழு து ஒருமொழி-இண்டெழுத்தான் ஆகும் ஒருமொழி, இரண்டு இறந்து இசைச் கும் தொடர் மொழி - இலண்டி றந்து L! பற்கன் இசைக்கும் தொடர்மொழி, உளப் பட மூன் று-2.ட்பு:'... பொழிகளின் நிலைமை மூன்றாம். தோன்றிய பொறி-அலை தோன்றிய வழக்கு தெறிக்கண். (ஏகாரம் ஈற்றசை.?. உ-ம், ஆ, மணி, வரகு: கொற்றன் என வரும். (52)<noinclude></noinclude> nyevma0d1wnpzg9w4ihjyh9bnopgey1 பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/31 250 453661 1437045 2022-08-06T11:05:57Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ உய தொல்காப்பியம் - இளம்பூரணம் சா, மெய்யி னியக்க மகரமொடு சிவணும். இது, தனிமெய்களைச் சொல்லும் முறைகிலை இதுவென்பது உணர்த்துதல் இதலிற்று, "இ-ள் :--மெய்யின் இயக்கம்- தனிமெய்களினது இயக்கம், அம்மொடு சிவ ஓம்-அகத்தோடு பொருந்தும். உ-ம், ட ற ல ள வென்னும் புள்ளி” (நூன்மரபு-2) எனவரும். இது மொழியிடை (நின்ற) எழுத்துக்கள் அன்மையின் நூன்மரபின் வைக்க வெனில், தன்னை உணர்த்தாது வேறு பொருள் உணர்த்தும் சொல் விலைபோல 'டறலன வென்றது உயிர்மெய்யை உணர்த்தாது தனிமெய்யை உணர்த்தலானும், ஒற்றினை உயிர்மெய்போலச் சொல்லுகின்ற வழுவமைதியிலக்கணத்தானும் மொழிமரபின் கண்ண தாயிற்றென உணர்க. சா. தம்மியல் கிளப்பி னெல்லா வெழுத்து - மெய்க்நிலை மயக்க மான மில்லை. இது, மெய்ம்மயக்கத்திற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று, இ-ள் !-- எல்லா எழுத்தும் தம் இயல் கிளப்பின் எல்லா மெய்யெழுத்தும் மொழியிடையின்றித் தம் வடிவின் இயல்பைச் சொல்லுமிடத்து, மெய்மயக்க நிலை மானம் இல்லை-மெய்ம்மயக்க நிலையின் மயங்கி வருதல் குற்றம் இல்லை. உ-ம். < வல்லெழுத் தியையின் டகார மாகும்'' (புள் மயங்கு-எ)என வரும், இதனை அம் மெய்ம்மயக்கத்து வைக்கவெனின், இது வழுவமைதிநோக்கி மொழிமரபின்கண்ண தாயிற்று. சஅ. மரழ வென்னு மூன் றுமுன் னொற்றக் கசதப ஈஞமை வீரொற் முகும். இஃது, ஈர் ஒற்று உடனிலை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று, இ-ள் :- ய ர ழ என்னும் மூன்று-T 5 ழ என்று சொல்லப்படுகின்ற மூன்ற னுள் ஒன்று, முன் ஒற்ற-(குறிற்கீழும் நெடிற்கீழும்) முன்னே ஒற்றாய் நிற்ப (அவற் றின் பின்னே ), 5சதப கஞசம ஈர் ஒற்றாகும். கசதபக்களிலொன்முதல் நஞா மக் களிலொன்றாதல் ஒற்றாய்வா அவை ஈபொற்றுடனிலையாம். உ-ம். வேய்க்குறை, வேய்ங்குறை, வேர்க்குறை, வேர்க்குறை, வீழ்க்குறை, வீழ்ங்குறை, சிறை, தலை, புறம் என ஒட்டுக. இவ்விதி மேல் ஈற்றகத்து உணர்ந்துகொள்ளப்படுமாலெனின், இது ஈர்க்கு' பீர்க்கு' என ஒருமொழியுள் வருதலானும், இரண்டுமொழிக்கண் வருதல் விகார மாதலாலும் ஈண்டுக் கூறப்பட்டது. அஃதேல், இதனை நூன்மா பினகத்து மெய்ம் மயக்கத்துக்கண் ... றுக வெனின், ஆண்டு வேற்றுமைாயம் கொண்டதாகலின் மூவொற்று உடனிலையாதல் நோக்கி ஒற்றுமைநயம்பற்றி ஈண்டுக் கூறப்பட் சசு, அவற்றுள் ரகார மகாரங் குற்றோற் றாகா. இது, ரகார ழகாரங்கட்கு எய்தியது ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று,<noinclude></noinclude> 71xa8zn16npk5cd9pcp5zfq1h3wajmf பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/32 250 453662 1437046 2022-08-06T11:06:21Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ எழுத்ததிகாரம் - மொழிமரபு இ-ன் :---அவற்றுள்-மேற்கூறப்பட்ட மூன் றனுள்ளும், ரகாரம் காரம் குற்று ஒற்று ஆகா-ரகாரமும் முகாரமும் குறிற்கீழ் ஒற்றாகா, அவை நெடிற்கீழ் ஒற்றம் ; குறிற்கீழ் உயிர்மெய்யாம். உ-ம். தார். தாழ் என நெடிற்கீழ் ஒற்றாய்.பின்றன. கரு மழு எனக் குறிற்கீழ் உயிர்மெய்யாய் நின்றன. இவ்வாறு விலக்கினமையின், பகரம் பொய் எனவும் நோய் எனவும் இரண்டி டத்தும் ஒற்றாயிற்று. குற்றெற்று என்பது குறிதாகிய ஒற்று எனப் பண்புத் தொகை. குறிற்கீழ் நிற்றலான், குறியது எனப்பட்டது. ஈண்டுக் குறில் நெடில் என்கின்றது மொழிமுதல் எழுத்தினை என உணர்க. இது மேல் வரையறை இல எனப்பட்ட உயிரும் மெய்யும் மயங்கும் மயக்கத்திற்கு ஓர் வரையறை கண்டு கூறி னவாறு. ருய, குறுமையு நெடுமையு மளவிற் கோடலிற் றெடர்ழொழி யெல்லா நெட்டெழுத் தியல. இ-ள் :- குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின்-உயிரெழுத்திற்குக் குறுமையும் நெடுமையும் அளவிற் - கொள்ளப்படுதலில், தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல - தொடர்மொழிக்கீழ் நின்ற கோர மகாரங்களெல்லாம் நெடிற்கீழ் நின்ற ராகார மகாரங்களின் இயல்பையுடைய (என் றுகொள்ளப்படும்), உ-ம். அகர், புகர், அகழ், புகழ் எனக் கொள்க. 'புலவர்' என்றாற்போல இரண்டுமாத்திரையை இறந்ததன் பின்னும் வருமா லெனின், அவையும் “தன்னின முடித்தல்” என்பதனால் 'நெடிற்கீழ் ஒற்று' எனப் படும். எல்லாம் என்றதனான், சகார ழகாரங்களேயன்றி, பிற ஒற்றுக்களும் நெடிற் கீழ் ஏற்று' எனப்படும். இதனானே, விரல் தீது என்புழி லகரம் ‘நெடிற்கீழ் ஒற்று' என்று கெடுக்கப்படும். ருக, செய்யு ளிறுதிப் போலு மொழிவயின் 'னகார மகார மீரொற் றாகும். இது, செய்யுட்கண் ஈசொற்று உடனிலை ஆமாறு உணர்த்துதல் தெலிற்று. இ-ன்; -- செய்யுள் இறுதி போலும் மொழிவயின் - செய்யுள் இறுதிக்கண் 'போலும்' என்னும் மொழிக்கண், னகாரம் மகாரம் ஈர் ஒற்று ஆகும்-னகாரமும் மகா ரமும் வந்து ஈதொற்று உடனிலையாய் நிற்கும். ('போலி' எனவும் பாடம்.) உ-ம், 11 எம்மொடு தம்மைப் பொருஉங்காற் பொன்னொக, கூவிளம் பூத்தது போன்ம்'' என வரும். டூஉ. ன்கார முன்னர் மகாரக் குறுகும். இஃது, 4 அசையளபு குறுகன் 'மகர முடைத்து ' (நூன்மரபு-க.) என்ப தற்கு ஓர் புறனடை உணர்த்துதல் இதலிற்று. இ-ள் :- னகாரம் முன்னர் மகாரம் குறுகும்-(மேற்கூறப்பட்ட) னகாரத்து முன் வந்த மகாரம் மாத்திரை குறுகி நிற்கும். (கன)<noinclude></noinclude> lsuvrz1aa9b0e84bflq94q36c6xxuid பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/33 250 453663 1437047 2022-08-06T11:06:42Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ உஉ தொல்காப்பியம் - இளம்பூரணம் குசு . மொழிப்படுத் திசைப்பினும் தெரிந்துவே றிசைப்பினும் எழுத்திய பிரியா வென் மனார் புலவர். இது, எழுத்துக்கட்கு மொழிக்கண் மாத்திடை காண ( கப் (Smப்பதோர் கபம் தீர்ப ல் குதலிற்று. உள்:--மொழிப்பது; இசைப்பிலும் மொழிக்கண்படும் (கச சொல்லிலும், தெரிது கேறு: இசைப்பலும் தெரிந்து கொண்டு பேதே சொல்லிலும், எழுத்து இயல் திரியா என்மனார் புலவர்-2. மிரும் மெய்யுமாகிய எழுத்தர்கள் (பெருக்கம் சுருக்கம் உடையன போன் 2, இசைப்பிலும்,) + நம் மார்னெ- இயல்பில் திரியா என்று சொல்லுவர் புலவா, உ-ம், அஃல், அ எனவும், ஆல், ஆ எனவும், கடல், * எனவும், கால், கா எனம் கண்டுகொள்க. வேறு என்றதனான், இத்தல் படுத்தல் முரலிய தசை பேஸ்பை : கண்ணும் எழுத்தியல் திரியா வொன்பது சொன்ன. (ந1 அகர இகர மைகார மாகும். இது, போலி எழுத்து ஆபாற உணர்த்துதல் ,ல. இ-ள் :-அகக் இக - அக மும் இக :மும், கூ..டசல்சால் , ஜகம் ஆகும்ஐகா -ம்போல ஆகும் உ-ம். PT பர், அ இயர் எனரும். அது கொள்ளத்ச. இது. அகா உகர மௌகார மாகும், இ-ள் :- அகம் 24: ம்-- * மும் 2.5 மும்: கட்ட சொல்ல, நாகாரம்: தகும்ஒளகாப்போல கும். உ-ம். ஒளகை". அதயை எனக் கண்டுகொங்க. அGar'ங்க (2 ) 'நீதா. அகரத் திம்பர் யகாப் புள்ளியும் ஐயெ னெடுள் சினை மெய்பெறத் தோன்றும். இதுவும் அது. | இ-ள்:- அசத்தும் இம்பர் யக புள்யும்-அகதின் பின்னர் இரா மேயன்றி பக - மாகிய புள்ளியும், என் பெருஞ்சினை-" எனப்பட்ட பெட்டெழுதாம்' மெய்பொதோன்றும்-அ ைடி. பெறப்ரான்: உ-d, et என!ம், அய்யன... கானே - ரும். <மெய்பெறத் போன்றும் ' என்றதனான். அக தன் பின்னர் * * - மே யன்றி.) காப்புள். "யும் ஒன்ராம்போல - மெயக்கொள் மன்றலாம், (இகரம் 21ம், '' அக 'த் திம்பர் பங்கப் புள். யும் ஐயொ ரெகஞ்சினை மெய்பெறத் தோன்'' என்றிருத்தல் வேண்டும்,<noinclude></noinclude> ob8s0a0jyiw1y2g711rdgt94384uqvk பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/34 250 453664 1437048 2022-08-06T11:07:18Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ - 2 , எழுத்ததிகாரம் - மோழிமாபு உள்:-அகரத்து இம்பர் ப ர *ப் புள் பெம் ஆக" ர். என் பின்.. யாா வொற்றும் கையொற்றும், ஐ ஔ செஞ்சினை - ஐகாரம் ஔகா எம் என்னும் செட் பெ.முப்பார், செய், பொசோன் ஜம்- அடை ) - டி - பறப் போன்றும், டம். ஐI.a', அய்களி : ஔவை, தங்கை . பெர் பெறத்தோன்றும் என்றனால், அவற்றைக் கொள் என்றவாறு: காலப் பழைமையில் என் பெயர்த்து எழுதினேர் 'யவக சப்புள் கரி' என்பதனை ‘ய5"ப்புள் + > எனவும் 'யௌ நெடுஞ்சினை' என்பதனை ' ஐயெ னெடுஞ்சினை ' எனவும் பிழையாக எழுதினர் போலும். அப்பிழைப்பாடத்தைப் பிழையற்ற பாடமெனக் கருதி உரையாசிரியர் அதற்குத் தக்கவாறு உலையெழுதிச் சென் மனர் Fulyம்.) 57. ஓரள பாகு மிடனுமா ருண்டே தேருக் காலை மொழிவயி னான. 2. பன் நதலிற்றோ பெனின், உயிர்களுள் ஒன்றற்கு மரத்திசைச் சுரு: சம்.ஈ. 2ல் 'லிற்று. இ-ள் :-பருக்காலை மொழியின் ஒர் --அனபு ஆரும் இடனும் உண்டு. ஐார் - 4 காலத்து மொழிக்கண் ஓர் அனபாய் நிற்கும் இடமும் உண்கி. உ-ம். 32 டையன், மடையன் என வரும். நேரு 'நா'ல என்றதனான் முதற்கண் சுருக்கா தென்பது கொள்க. இடன் என்றதனான் இக்குறுக்கம் சிறுபான்மை வென்பது கொள்க. [[இருக்கத்திற்குப் பின் வருமாறு உரைத்தலே பொருத்தமுடைத்து :இன்சு', ” 'பீர்களுள் இரண்டற்கு மாத்தினாச்சருக்கம் கூறுதல் நுதலிற்று. இ-ள் : - :ரும் காலை மொழி வேயின் ஆன-ாயக் காலத்து மொழிக்கண் நின்ற கா - -- - காரங்கள், ஓர் அனபு ஆகும் இடனும் உண்டு-ஓர் அள பாய்சிற்கும் இடமும் உண்.. ' Tv ` என்றதனான், தனியே ரின்ற ஐகா மும் ஒளகாரமுமே ஒரு மாத்தின் பாகு மென் று கொள் 5. உ-ம். பை, uைe, கை : தெனா, சௌ, வௌ. இடலும்' எ'ன்றானான் இக்கு iri #A # பயைன்பது கெ , ஆர் என்பன அகன்', மேல், '' ' ப் புள்.-யும் யெனொல் சினை' என்ற பிழைப்பாடத்தைப் பிழையற்ற பாடமௌத் கொண்டால் - பாசிரியர் ' ஒவகாரத்தைச் கூறாது ஐகாம் ஓர் அன்பாய் நிற்கும் இடமும் உண்டு என் D 2. ச, 5 + சென் றனர் போதர்.) | இகர யகர மிறுதி விரவும். இதும் ஓர் போலியெழுத்து உணர்த்துதல் துரலிற்று, இ-ன்' :-- இறுதி இகா யகாம் வி -ும்-இக வீற்று மொழிக்கண் யாமமும் (அதுபோல இகமும் விரவிவரும். உ-ம். நாய் காஇ எனக் கண்டுகொள்க. விகம் என்றதனால், அவையிரண் டும் கொள்க என்றவாறு.)<noinclude></noinclude> laanwgcsaj70sc4us5ob4yt6c0j4ycj பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/35 250 453665 1437049 2022-08-06T11:10:30Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் - இளம்பூரணம் ருகூ, பன்னீ ருவிரு மொழிமுத லாகும். இஃது, உயிரெழுத்து மொழிக்கு முதலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- பன்னீர் உயிரும் மொழிமுதல் ஆகும்-பன்னிரண்டு உயிரெழுத்தும் மொழிக்கு முதலாம். உ-ம். அடை, ஆடை, இடை, ஈயம், உx'ல், ஊர்தி, எழு, ஏணி, ஐவனம், ஒளி, ஒளி, ஒளவியம் என வரும். *ய, உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா, இஃது, pmk) மெய்யெழுதது மொழிக்கு முதலாம் ஆறு உணர்த்துதல் இத விற்று. இ-ள் ---உயிர்மெய் அல்லன மொழி முதல் ஆகா-உயிரொடுகூடிய மெய்யல் வாதனவாகிய தனிமெய்கள் மொழிக்கு முதலாகா உயியொடு கூடிய மெய்கள் மொழிக்கு முதலாம். ஈண்டு உயிர்மெய் யென்பது வேற்றுமைாயம் கருதி யெனவுணர்க. ஈண்டு ஒற்றுமை கருதில், “ கதாப மவெனு மாணவர் தெழுத்தும், எல்லா மயிரொடுஞ் செல்லுமார் முதலே" (மொழிமரபு-உஅ ) எனச சூத்திரம் சுருங்க வருவதன்றி, இதனாற் சொல்லப்பட்ட அறுபது உயிர்மெய்யினை எடுத்தோத வேண்டிச குத் திரம் பரக்கவரு மென்பது T[' சுருங்க இதுமன்றி ' எனவும், ஒகவேண்டில் ' எனவும் முந்திய அசசுப் பிரதியிலும் எட்டுப் பிரதிகளிலும் காணப்படும் (உரைப்) பாடம் எடுபெயர்த் தெழுதினோரால் நேர்ந்த பிழை போலும்) (உஎ} அக. கதா பமவெனு மாவைந் தெழுத்தும் எல்லா வுயிரொடுஞ செல்லுமார் முதலே. இது, மேல் முதலாம் என்னப்பட்ட உயிர்மெய்கட்கு வரையறை கூறுதல் நுதலிற்று. இ-ள் :- கதாபம் எனும் அ ஐந்து எழுத்தும்-தபம என்று சொல்லப்பட்ட ஐர்து தனிமெய்யெழுத்தும், எல்லா உயிரொடும் முதல் செல்லும் பன்னிரண்டு உயிரோடும் மொழிக்கு முரலாரற்குச செல்லும் உ-ம் கலை, க 1.f, A., 5, கீரி, குடி, கூடு, கெண்டை , கேழல், கை கல், கொண்டல், கோடை ,கௌவை எனயும், தாதை தாடி, திற்றி, தீமை, துணி, எணி, தெற்றி, தேவர், தையல் தொண்டை , தோடு, தௌவை எனவும், கடம்,நாளை, நிலம், நீர், நுழை தூல், நெய்தல், நேயம், சைகை கொய்யன, நோக்கம், கௌலி எனவும், படை, பாடி, பிடி பீடம், புகழ், பூழி, பெடை, பேடி, பைதல், பொன் போக்கம், பௌவம் எனவும், மடம், மாலை,'டறு மீனம், முகம், மூதூர், மெலிந்தது, மேனி, மையல், மொழி, மோத கம், மௌவல் எனவும் உரும். முதற்கு ' என்பதன் நான்காம் உருபு விகாரத்தாற் றொக்கது, (ஆர் என் பது அசை, ஏகாரம் ஈற்றசை.) சுஉ, சகாக் கிளவியு மவற்றோ ரற்றே அ ஐ ஒளவெனு மூன்றலங் கடையே, இதுவும் அது.<noinclude></noinclude> b7sadauk84ftzjz8pmsmcmv2r9wm6hd பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/36 250 453666 1437050 2022-08-06T11:10:59Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ எழுத்ததிகாரம் - மோழிமாவு இ-ன் :- சகர கிளவியும் அவற்று - ஓர் அற்று-சகரமாகிய எழுத்தும் மேற் சொல்லப்பட்டவைபோல எல்லா உயிரோடும் பொழிக்கு முதலாம், அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடை-அ ஐ ஔ என்னும் மூன்றும் அல்காவிடத்து. &-ம். சாலை, சிலை சீறுக, சுரும்பு, சூழ்க செய்கை சேவடி, சொறிக, சோ, என மககடம் எனவும், சையம் எனவும் விலக்கினவும் வருமாவெனின், அவற்றுள் ஆரியச்சிதை, வல்லா தன “கடிசொல் லில்லை” என்பதனாற் கொள்க, (ஏகாரம் இர ண்டும் ஈற்றசைசன். இந்தூல் மூலத்தில் 'ஓர் அன்ன,' 'ஓர் அற்று' என்று வரும் இடங்களில் 'ஓர்' என்பதனை அசையென்று கொள்ளுதல் பொருத்தமுடையதா கத் தோற்றுகின்றது.). சர்., உ. ஊ ஓ ஓ வென்னு நான்குயிர் வ என் னெழுத்தொடு வருத வில்லை. இதுவும் அது, இ-ள் :---- ஓ. ஒ ஓ என்னும் நான்கு உயிர்-உ ஊ ஒ ஓ என்று சொல்லப் படுகின்ற நான்கு உயிரும், வ என் எழுத்தொடு வருதல் இல்லை-வ என்னும் மெய் யெழுத்தோடு மொழிமுதலில் வருதலில்லை. பிற உயிர்கள் வரும். உ-ம், வளை வானி, விளரி வீடு, வெள்ளி, வேர், வையம் வௌவு என வரும். () சுசி. து எ ஒ எனு மூவுயிர் ஞகாரத் சரிய. இதுவும் அது. இ-ள் :--ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய-ஆ எ ஓ என்று சொல் லப்படும் மூவுயிர்கள் ஞகார ஒற்றோடு முதலாதற்கு உரிய. பிற உயிர் உ.ரியவல்ல. - உ-ம். ஞாலம், ஞெகிழி, ஞொன்கிற்று என வரும், குழியிற்று என்றாற்போல்வன விலக்கினவும் வருமாலெனின், அவை பழி வழக்கென்று மறுக்க. காடு, ஆலோ டல்லது பகரமுத லாது. இதுவும் அது, இ-ன் :--ஆவோக அல்லது யகரம் முதலாது-ஆகாரத்தோடு அல்லது யகர முதலாகாது. உ-ம், யான் என வரும். யவனர் என்முற்போல் வன விலக்கினவும் வருமாவெனின், அவை ஆரியச் இதைவென்று மறுக்க. (ஈ.உ) சுசு, முதலா வேன தம்பெயர் முதலும். இது, மொழிக்கு முதலாகாதனவும் ஒரோவழி ஆமாறு உணர்த்துதல் இத லிற்று,<noinclude></noinclude> iozp0216vkjmeuzoeoxtx4ehry6cb5j பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/37 250 453667 1437051 2022-08-06T11:11:41Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ள் :- முதலா என-மொழிக்கு முதலாகாத ஒழிந்த மெய்களும், தம் பெயர் முதலும்-(அவ்வெழுத்துக்கள்) தம் பெயர் கூறுதற்கு முதலாம். முதலாயின மெய் சதாபமக்களும், வகரமும், சகரமும், ஞகரமும், யகரமும் என இவை. முதலாகாத மெய் நகரமும், டகரமும், ணகரமும், ரகரமும், லகா மும, முகாமும், எகரமும், றகரமும், னகரமும் என இவை. அவை தம் பெயர்க்கு முதலாமாறு :- கூக்களைத் தார், டப்பெரிது, ணக்கன்ற என்றாற்போல ஒட்டிக்கொள்க. இனி 'என' என்றதனான், முதலாம் என்னப்பட்ட ஒன்பது உயிர்மெய்யும் பன்னிரண்டு உயிரும் தம்பெயர் கூறும் வழியும் மொழிக்கு முதலாம் எனக்கொள்க. சுக்களை நார், தப்பெரிது, அக்குறிது, ஆவலிது ' என்றாற்போல ஒட்டிக் கொள்5. எ. குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை கரமொடு முதலும். இது, குற்றியலுகாம் மொழிக்கு முதலாமாறு உணர்த்துதல். 3! தலிற்று. இ-ள் :- குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் - குற்றியலுகரம் முறைப் பெயரிடத்தி, ஒற்றிய ஈகரமிசை ஈகாமொடு முதலும் ஒற்றாய்லின் ற நகரத்தின் மேலாய சகாத்தோடு மொழிக்கு முதலாம். ' ஆந்தை எனவரும். இவ்வாறு முதவாக்கம் கூறலே, மொழி முதற் குற்றியலுகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் கூறியவா மூயிற்று, இடம் நுந்தை என்னும் முறைப்பெயர், பற் றுக்கோடு நகரா'சை நகரம், (ஏகாதிசை ஈரம்-ஈகா ஒற்றின் மேலுள்ள ஈக ஒற்று .) 1 அ. முற்றிய லுகரமொடு பொருள் வேறு படாஅ தப்பெயர் மருங்கி னிலையிய லான. இது, மேலதற்கு ஓர் புறனடை. இ-ள் :--முற்றியலுகாமொடு பொருள் வேறுபடாது-(அம் முதற்கட் குற்றி பலுகரம் ஆண்டு இதழ்குவித்துக் கூறும்வழி) முற்றுகரத்தோடு பிற உசரம்போ லப் பொருள் வேறுபடாது; (யாண்டெனின்,) அப்பெயர் மருங்கின் நிலை இயலான்அம் முறைப்பெயரிடத்துத் தான் சிற்றற்கண். சாகு எனவும், ஈகு எனவும் குறுகியும், குறுகாதும் நின்ற உகாங்கள் போல, இந்தை என்று குறுக்கமாயவழியும், இதழ்குவித்துக் கூறக் குறுசாதவழியும், பொருள் வேறுபடாதவாறு அறிக. இனி இரட்டுறமொழிதல்' என்பதனால், பொருள் என்றதனை இடனும் பர் அக்கோடும் ஆக்கி, பிற உகரங்கள் போல ஈண்டை உகரங்கள் இடனும் பற்றுக் கோடும் வேறுபடா என்பது கொள்க. (ஈற்றகரம் சாரியை.) ( 8) சுசு. உயிர் ஔ லெஞ்சிய விறுதி யாகும், இஃது, உயிர் மொழிக்கு ஈறாமா று உணர்த்துதல் நுதலிற்று. இன் :- உயிர் ஔ எஞ்சிய இறுதி ஆகும்-உயிரெழுத்துக்களுள் ஔசாரம் ஒழிந்தவை மொழிக்கு ஈரும். ஒன் காரத்தான் ஈராகாசி,<noinclude></noinclude> kgcgswe9grb956owtjxaenlh72ao94r பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/38 250 453668 1437052 2022-08-06T11:12:13Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ எழுத்ததிகாரம் - மொழிமரபு இஃது உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது. : ஆஅ, ஆ, இ, ஈ, 122, 2, எஎ, ஏ, இ, 8, ஒ, ஓ என உயிர் ஈசயின, இவற்றுட் குற்றெழுத்தைந்தும் அளபெடைவகையான் ஈராயின. உயிர்மெய்களும் மேல் வரையறை கடறு தனவாகிய அகா ஆகார இகர ஈகா ஐகாரங்களோடு இயைந் தன ஈண்டே கொள்க, உ-ம். விள, பலா, கிளி, கு.ர்', பனை எனவரும். எi கவவோ டியையி னௌவு மாகும். இஃது, ஈறாகா தென்ற ஔகாரம் இன்னுழி ஆம் என்கின்றது. இ-ன் :- க வ ஓடு இயையின்-ககா வகரமாகிய மெய்களோடு பொருந்தின். ஔ உம் ஆகும்-முன் ஈறாகா தென்ற ஒளகாரமும் ஈறாம், உ-ம், கௌ, வௌ என வரும், எக, எ என வருமுயிர் மெய்யீ றாகாது. இஃது, எகரம் தானே நின் றவழியன்றி மெய்யோடு கூடி ஈறாகாதென வரைய றை சடறுதல் நுதலிற்று. இ-ள் :--5 என வரும் உயிர் 5 என்று சொல்ல வரும் உயிர், மெய் ஈறு ஆகாதுதானே ஈறாவதன்றி மெய்யோடு இயைர்து ஈமுகாது, எஉ, ஒவ்வு மற்றே ஈவ்லலங் கடையே. இதுவும் கரையறை, இ-ள் :- ஒவ்வும் அற்று-ஒகமும் தானே நின்று ஈறாவதன்றி மெய்யோடு இயைந்து ஈருகாது, ந அலங்கடை நகரமெய்யோ டல்லாத விடத்து. (க.க) எங.. ஏ ஓ எனுமுயிர் ஞகாரத் தில்லை. இதுவும் வரையறை இ-ள் :--எ ஓ எனும் உயிர் ஞகாரத்து இல்லை-ஏ ஓ என் றுசொல்லப்படும் உயிர் (தாயே தின்றும் பிறமெய்களோடு ஓன்றும் ஈறாவதன்றி) ஞகரத்தோடு ஈரு வதில்லை . . தாமேயாதல் முன்னே காட்டப்பட்டது. பிறமெய்களோடு ஈறாவனவற்றுள் வழக்கிறந்தனவொழிய இறவா தன வந்தவழிக் கண்டுகொள்க. எச. உ ஊ கார தவவொடு நவிலா. இதுவம் வரையறை. இ-ள் :- காரம் நவ ஒடு ஈவிலா-உ ஜாகாரங்கள் (தாமே நின்றும் பிற மெய்களோடு நின்றும் பயில்வதன்றி) *கா வகரக்களோடு பயிலா. தாமே ஈறாதல் மேலே காட்டப்பட்டது. பிற பொய்களோடு ஈமுமவற்றுள், வழக்கிறந் தன வல்லா தன வந்தவழிக் கண்டு கொள்க. 'நீவிலா' என்றதனாற் சிறு பான்மை நொவ்வும் கவ்வும் என (உகரம்) வகாரத்தோடு ஈமுதல் கொள்சா இன் wம் இதனனே சிறுபான்மை நகரத்தோடு வாவு உண்டேனும் கொள்க, (சக'<noinclude></noinclude> 6xe4cdqpfvsyaljq26wzi78bd20gyvb பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/39 250 453669 1437053 2022-08-06T11:12:46Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் - இளம்பூரணம் எரு, உச்ச கார மிருமொழிக் குரித்தே. இதுவும் ஒரோவழி வரையறை. இ-ள் :-உச்சசாரம் இரு மொழிக்கு உரித்து-உசாத்தோடு கூடிய சகரம் இரு மொழிக்கு. ஈறாகும் (பலமொழிக்கு ஈறாகாது). உ-ம். உசு, முசு எனவரும். பசு வென்பது ஆரியச்சிதைவு, . (52) எசு. உப்ப கார மொன்றென மொழிய இருவயி னிவையும் பொருட்டா கும்மே. இதுவும் மொழிவரையறையும் மொழியது பொருள் பாடும் உணர்த்துதல் அதலிற்று. இ-ள் :--உப்பகாரம் ஒன்று என மொழிப உகாத்தோடு கூடிய பகாம் ஒரு மொழிக்கு ஈறாம் என்று சொல்லுவர், இருவயின் நிலையும் பொருட்டு ஆகும்-அது தான் தன் வினை பிறவினை என்னும் இரண்டிடத்தும் நிலைபெறும் பொருண்மைத் 5 . உ-ம். தழ என வரும். இது படுத்துச்சொல்ல, நீ சா எனத் தன் வினையாம். எடு த்துச்சொல்ல, * ஒன் றனைச் சாவி எனப் பிறவினையாம். (ஏகாரம் ஈற்றசை.) (சக) எஎ, எஞ்சிய வெல்லா மெஞ்சுத லிலவே. இது, மொழிக்கு ஈறாகா உயிர்மெய்யும் ஒரோவழி ஆமாறு உணர்த்துதல் நுத விற்று. இ-ள் :- எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இல-மொழிக்கு ஈறாகாது நின்ற உயிர் மெய்களெல்லாம் தம்பெயர் கூறும்வழி ஈனதற்கு ஒழிபு இல. எஞ்சிய உயிர்மெய்யா வன; ஒளகாரம் ககார வகாரங்களை ஒழிந்த மெய்யோடு இயைந்த உயிர்மெய்யும், எகாம் எல்லாமெய்யோடும் இயைந்த உயிர்மெய்யும், ஒகரம் நகரம் ஒழிந்த மெய்யோடு இயைந்த உயிர்மெய்யும், ஏகார ஓகாரம் ஞகாரத் சோடு இயைந்த உயிர்மெய்யும், உ ஊகாரம் ஈகர வகரங்களோடு இயைந்த உயிர் மெய்யும் என இவை. தம் பெயர்க்கு (ஈறு) ஓமா று': கௌக் களைந்தார் எனவும், கெக் களைந்தார் எனவும், கொக்களைர்தார் எனவும், ஞேக் களைந்தார் எனவும், ஞோக்களைந்தார் என காம், நுக்களைர் தார் எனவும், தூக்களைந்தார் எனவும், வுக்களைத் தார் எனவும், ஆக் களைந்தார் எனவும் வரும். எல்லாம் என்றதனான், மொழிக்கு ஈறாய்நின்ற உயிர்மெய் ஈளூம் தம்பெயர் கூறும்வழியும் ஈறாம் என் றுகொள்க. கக் களைந்தார், கா வலிது எனவும், அக்களைத்தார், ஆவலிது எனவும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. தன்னை உணா நின்றவழி, மொழிகட்கு இது கருவியாக ஈற்றகத்து முடிபு ஒன்றின முடித் தலாற் கொள்க, எஅ. ஞணாம னயரல வழள வென்னும் அப்பதி னொன்றே புள்ளி யிறுதி, இது, தனிமெய்களுள் மொழிக்கு ஈறாவன கூறுதல் நுதலிற்று, இ-ள் :- ஞ ண ந ம ன யரலவழள என்னும் அ பதினொன்றே -ஞ ண 5 பனயரலவழள என்று கூறப்பட்ட அப்பதினொன்றுமே, புள்ளி இறுதி.புள் விசாளில் மொழிக்கு ஈசாவன.<noinclude></noinclude> if0374tcl0ufz3x97whq68qocz21nu7 பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/40 250 453670 1437054 2022-08-06T11:13:11Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ மும் எழுத்ததிகாரம் - மொழிமாபு உ-ம். உரிஞ், மண், பொருந், திரும், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ் வேள் என வரும். சகாரத்தை ஈற்று வையாது, மகரத்தோடு வைத்தது அதன் மயக்க இயைபு நோக்கி என் றுணர்க, (58) எசு, உச்ச காரமொடு நகாரஞ் சிவனும், இதுவும் மொழிவரையறை. இ-ள் :- உச் சகாரமொடு நகாரம் சிவனும்-உகாத்தோடு கூடிய சகாரத்தோ டே நகாரம் பொருந்தி அஃது இருமொழிக்கு ஈமுய வாறுபோல தானும் இரு மொழிக்கு ஈறாம், உ-ம். பொருர், வெரிந் எனவரும். (உகரத்தோடு கூடிய சகரம் இருமொழிக்கு ஈறாயவாறு போல நகரம் இரு மொழிக்கு ஈரும் என்க.) (சசு) அம், உப்ப சாரமொடு ஞகாரையு மற்றே அப்பொரு ளி பட்டா திவனை யான. இதுவும் மொழிவரையறை, இ-ள் .---உப்பகாரமொடு ஞகாரையும் அற்று - உகரத்தோடு கூடிய பகரத் தோடு ஞகாரமும் அத்தன்மைத்தாய் ஒருமொழிக்கு ஈறாம். இவணையான அ பொருள் இரட்டாது -இவ்விடத்ததன் பொருள் அவ்வுப்பகாம்போல இருபொ ரூள் படாது, உ-ம். உறிஞ் என வரும். ஞகாரம் ஒருமொழிக்கு ஈமுதலின், பகரத்தின் பின் கூறப்பட்டது. (ஏகாரம் ஈற்றசை.) | (சஎ) அக. வகரக் கிளவி நான் மொழி பீற்றது. இதுவும் மொழிவரையறை, இ-ள் :- வகாக் கிளவி நான்மொழி ஈற்றது--காயாகிய எழுத்து நான்கு மொழி ஈற்றதாம். // / உ-ம். அவ், இவ், உவ், தெவ் என வரும். அ... மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப - புகாறக் கிளந்த வஃறிணை மேன. இதுவும் ஒரோவழி மொழிவரையறை. இ-ள் :- புகர் அற கிளந்த அஃறிணைமேல்-குற்றம் அறச் சொல்லப்பட்ட அஃறிணையிடத்து, மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த-மகரவீற்றுத் தொ டர்மொழியோடு மயங்காதென்று வரையறுக்கப்பட்ட, னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப-னகரவீற்றுத் தொடர்மொழி ஒன்பதென்று சொல்லுவர். உ-ம் :-- நிலன், நிலம், பிலம், பிலன் என்றாற்போல்வன மயக்குவன, இனிமயங்காதன உகின், செகின், விழன், பயின், அழன், புழன், குயின், கடான், யான் என வரும், இவற்றுள் திரிபுடையன களைக, ஒன்புஃது என்னும் ஆய்தம் செய்யுள் விகா ரம். அஃறிணையென்றது எண்டு அஃறிணைப் பெயரினை. இரண்டாவது மொழிமாபு முற்றிற்று,<noinclude></noinclude> furm6a0g7555rdqsg4857c81n3lqqwy பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/41 250 453671 1437055 2022-08-06T11:13:36Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ மூன்றாவது பிறப்பியல் இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், எழுத்துக்களது பிறப்பு உணர்ந் தினமையின் பிறப்பியல் என்னும் பெயர்த்து, இதனை நூன்மரபின் பின்னே வைக்கவெனின், சார்பிற்றோற்றத்தெழுத்தும் தனிமெய்யும் மொழிமாயிடை உணர்த்தி (ப் பிறப்பு) உணர்த்தவேண்டு தலின், மொழிமா பின் பின்ன தாயிற்று, அகூ, உந்தி முதலா முந் துவளி தோன்றித் தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலை இப் பல்லு நிதழு நாவு] மூக்கும் * அண்ணமு முளப்பட வெண்முறை நிலையான் உறுப்புற் றமைய நெறிப்பட நாடி எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப் பிறப்பி னாக்கம் வேறுவே றியல திறப்படத் தெரியுங் காட்சி யான, இச்சலைச்சூத்திரம் என் ஈதலிற்றோ பெனின், எழுத்திக்களது பொதுப் பிறப்பு உணர்த்துதல் துரலிற்று, இ-ள் -... எல்லா எழுத்தும் நெறிப்பட நடி சொல்லும் காலை- சரீழெழுத்துக் கனெல்லாம் ஒருவன் முறைப்பட ஆராய்ந்து தம்மைச் சொல்லுங்காலத்து, உந்தி முதலா முர்து வளி தோன்றி-கொப்பூழ், அடியாக மேலே கிளர்கின்ற உதா னன் என்னும் பெயரையுடைய காயுத் தோன்றி, தலையினும் பட்டற்றினும் செஞ்சி ம்ை சிலைஇ - தலையின்கண்ணும் கிடற்றின்கண்னும் நெஞ்சின் கண்ணும் நிலைபெ ற்று, பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலை யான் உறுப்பு உற்று அமைய-(தவையும் மிடறும் செஞ்சும் என்னும் மூன்றனோடும்) புல்லும் இதமும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எட்டாகிய முறைமையை புடைய இடங்களில் , ஓர் உறுப்போடு ஓர் உறுப்புத் தம்பி ற்பொருத்தி அமைதி பெற, பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல-பிறப்பினது ஆக்கம் வேறு வேறு புலப்பட்டு வழக்கு தலுடைய, திறப்படத் தெரியும் காட்சியான்-கூ றுபாடுளதாகி ஆராயும் அறிவிடத்து. ' | இதழ்போறலான் வாய் இதெழெனப்பட்டது, எல்லா எழுத்தும் என்றும் எழுவாய்க்குப் பிறப்பினக்கம் வேறுவேறு இயல என்பதனை ஒருசொன்னீர்மைப் படுத்திப் பயனிலை யாக்கு, ( முதலாக ' என்பது ஈறு கெட்டு நின்றது. ஈற்ற மரம் சாரியை) அச. அவ்வழிப் பன்னீ ருயிருந் தந்திலை திரியா மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும். இஃது, உயிரெழுத்திற்குப் பொதுப்பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று.<noinclude></noinclude> ncsb4v8j81snmedgkmw703tw1nuykjs பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/42 250 453672 1437056 2022-08-06T11:13:58Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ எழுத்ததிகாரம் - பிறப்பியல் கூக இ-ள் :--அ வழி-அவ்விடத்து, பன்னிரு உயிரும் தம் நிலை திரியா-பன்னிர ண்டு உயிழுத்தும் தத்தம் நிலையில் திரியாவாய், மிடற்று பிறந்த வரியின் ஒலிக் கும்-டெற்றின்கட் பிறந்த வரியான் ஒலிக்கும். தவிலை திரியா' என்றதனால், குற்றியலிகரம் குற்றியலுகரம் தச்சிலை திரியு மென்பது பெறப்பட்டது. அடு. அவற்றுள் அ ஆ வாயிரண் டங்கார் தியலும், இஃது, உயிரெழுத்துக்களுட் சிலவற்றிற்குச் சிறப்புப்பிறவி உணர்த்துதல் நுதலிற்று, இ-ள் :- அவற்றுள் -மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டிலுள், அ ஆ அ இரண்டு அங்கார்து இயலும்-அகா ஆசாரங்களாகிய அவ்விரண்டும் அங்காந்து சொல்ல அஃது இடமாகப் பிறக்கும். *ஈ, இ # எ ஏ ஐயென விசைக்கும் அப்பா லைந்து மவற்றோ ரன்ன ; அவை தாம் அண்பன் முதனா விளிம்புற லுடைய. இதுவம் அது. இன் :- இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்; அ பால் ஐந்தும்-இ * எ ஏ ஐ என்று சொல்லப்படும் அக்கூற்று ஐந்தும், அவற்று ஓர் அன்ன-மேற்கூறிய அகா ஆகாரங் கள் போல அக்காந்து சொல்லப் பிறக்கும். அவை தாம் பல் அண்ராமுதல்விளிம்பு உறல் உடைய-அவைதாம் (அவ்வாறு சொல்லப் பிறக்குமிடத்துப்) பல்லினது அணிய இடத்தினை நாவினது அடியின் விளிம்பு சென்று உறுதலை யுடைய, (ச) அஎ. உ ஊ ஒ ஓ ஒளவென விசைக்கும் அப்பா லைந்து மிதழ்குவித் தியலும். இதுவும் அது. இ-ள் :-உ தல ஒ ஓ ஔ என இசைக்கும் அ பால் ஓதும்-உ த ஒ ஓ ஔ எனச்சொல்ல இசைக்கும் அக்கூற்று ஐந்தும், இதழ் குவிந்து இயலும்-இதழ் குவித்துச் சொல்ல நடக்கும். -4அ. தத்தந் திரிபே சிறிய வென்ப, இது, முன் டறிய உயிர்க்கும் மேற்கூறிய மெய்க்கும் ஓர் புறனடை கூறுதல் அ.தலிற்று . இ-ள் :-- தம்தம் திரிபு சிறிய என்ப-(எழுத்துக்கள் ஒருதானத்துக் கூடிப் பிற்க்கு மெனப்பட்டன. அவ்வாறு கூடிப்பிறப்பினும்,) தத்தம் வேறுபாடுகளைச் சிறிய வேறுபாடுக ளென்று சொல்லுவர். அவ்வேறுபாடு அறிந்துகொள்க. (ஏகாரம் அசை.)<noinclude></noinclude> rxytav247p9p2mlcd0b0zwoxldoko8j பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/43 250 453673 1437057 2022-08-06T11:14:20Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ கூட தொல்காப்பியம் - இளம்பூரணம் -- அக. ககார நிகார முதனா வண்ணம், ' இது, மெய்களுட் சிலவற்றிற்குப் பிறவி ஆமாறு உணர்த்துதல் முதலிற்று, இ-ள் :-சுகாரம் ஙகாரம் சாமுதல் அண்ண ம்(முதல்)-ககாரமும் கொரமும் சாமுதலும் அண்ணமுதலும் உறப் பிறக்கும். சுய. சகார ஞகார மிடைநா வண்ணம், இதுவும் அது. இ-ள் :---காரம் ஞகாரம் நாஇடை அண்ண ம் (இடை)--காரமும் ஏகாரமும் சாவது இடையும் அண்ணத்தது இடையும் உறப் பிறக்கும், கக, டகார ணகார நுனிகா வண்ணம். இதுவும் அது. இ-ள் :--டகாரம் ணகாரம் நா நுனி அண்ண ம் (தனி)-டகாரமும் னகாரமும் காவது இனியும் அண்ணத்தது அனியும் உறப் பிறக்கும். கூஉ.. அவ்வா றெழுத்து மூவகைப் பிறப்பின, இது, மேலனவற்றிற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று, இ-ள் :--அ ஆறு எழுத்தும் மூவகை பிறப்பின -மேற்கூறப்பட்ட ஆம எழுத் தும் ரேனிறைவகையான் (அறுவகைப் பிறப்பின் அல்ல.) மூவகைப் பிறப்பின.(2) கூட, அண்ண நண்ணிய பன் முதன் மருங்கின் நா துனி பரந்து மெய்புற வொற்றத் தாமினிது பிறக்குந் தகார நகாரம். இதுவும் மெய்களிற் சிலவற்றிற்குப் பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று, இ-ன் :- அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கின் - அண்ணத்தைப் பொருக் திய பல்லினது அணிய இடத்தின்கண்ணே , நா நுனி பரந்து மெய் உற ஒற்றராவி னது இனி பார்து வடிவை உறும்படி ஒற்ற, தாம் இனிது பிறக்கும்- தாம் இனி தாகப் பிறக்கும், தகாரம் நகாரம்-தகாசமும் நகாரமும், மூன்னே உ றுப்புற்றமைய' என்று வைத்துப் பின்னும் மெய்யுற' என்றத னான், எல்லா எழுத்துக்களும் மெய்யுற்றபோதே இனிது பிறப்பதென்பது கொள்க. கூச. அணரி இனிதா வண்ண மொற்ற மஃகா னஃகா வயிரண்டும் பிறக்கும். இதுவும் அது. இ-ள் :- அணரி அனிசா அண்ணம் ஒற்ற-அணர்ந்து நுனிநா அண்ணத்தைச் சென்று ஒற்ற, நஃகான் னஃகான் அ இரண்டும் பிறக்கும்-நசார னகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும், 1 இங்குகின்று நெடுங்கணக்கு முறைமை விட்டு ஈர் அதிகாரம்பட்டது கண்டு கூறுன்த தெனவுணர்க.<noinclude></noinclude> 84sg35ms1uwl2t0yf3o9q1jua0mr6sp பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/44 250 453674 1437058 2022-08-06T11:14:58Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ ந எழுத்ததிகாரம் - பிறப்பியல் கூடு. தளிகா வனறி யண்ணம் வருட கார முகார மாயிரண்டும் பிறக்கும். இதுவும் அது. இ-ன் :-நுனிரா அணரி அண்ணம் வருட- நுனிநா அணர்ந்து அண்ணக் தைத் தடவ, ரகார ழகாரம் அ இரண்டும் பிறக்கும்-ரகார ழகாரமாகிய அவ்விரண் டும் பிறக்கும், கசு, சாவிளிம்பு வீங்கி பண்பன் முதலுற ஆவயி எண்ண மொற்றவும் வருடவும் லகாரளகார மாயிரண்டும் பிறக்கும், (ச...) இ-ள் :--நா விளிம்பு வீங்கி பல் அண் முதல் உற-நாவினது விளிம்பு தடித்துப் பல்லினது அணிய இடத்தைப் பொருந்த, அ வயின் அண்ணம் ஒற்ற லகாசமும் வருட ளகாரமும் அ இரண்டும் பிறக்கும்-அவ்விடத்து (முதல்கா) அவ்வண்ணத்தை ஏற்ற லகாரமும் அதனைத் தடவ ளகாரமுமாக அவ்வி:'ண்டும் பிறக்கும். (கஈ) கூள. இதழியைந்து பிறக்கும் பகார மகாரம், இதுவும் அது. இ-ள் :- இதழ் இயைந்து பிறக்கும் பகாசம் மகாரம்-கீழ்இதழும் மேல் இதழும் தம்:தில் இயையப் பிறக்கும் பகாரமும் மகாரமும், சு.அ. பல்வித ழியைய வகாரம் பிறக்கும். இதுவும் அது. இ-ள் ;--பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும் மேற்பல்லும் கீழ் இதழும் தம் மில் இயைய வகாசம் பிறக்கும். கூகூ அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை கண்னுற் றடைய யகாரம் பிறக்கும். இதுவும் அது, இ-ள் :-- அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வரி இசை கண் உற்று அடைய யகா சம் பிறக்கும்-அண்ணத்தை நாச் சேர்ந்தவிடத்து மிடற்றினின்றும் எழும் வளியா ாைய இசை அவ்வண்ணத்தை அணைத்து செறிய யகாரம் பிறக்கும். (கஎ) என, மெல்லெழுத் தாறும் பிறப்பி னக்கஞ் சொல்லிய பள்ளி நிலையின வாயினும் மூக்கின் வளியிசை பாப்புறத் தோன்றும், இது, மெல்லெழுத்திற்கு ஓர் புறாடை கூறுதல் அதலிற்று, இ-ள் !--மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம் சொல்லிய பள்ளி நிலையின ஆயினும் மெல்லெழுத்துக்களாறும் தத்தம் பிறப்பினது ஆக்கஞ்சொல்லிய இடத்தே திலைபெற்றன வாயினும், மூக்கின் வளி இசை யாப்புற தோன்றும் - அவை மூக்கின் கண் னுள தாகிய வளியது இசையான் யாப்புறத் தோன்றும்.<noinclude></noinclude> 872y877336el2374pd7cm5nxiw86eep பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/45 250 453675 1437059 2022-08-06T11:15:21Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் - இளம்பூரணம் 1) 'யாப்புற' என்றதனான், இடையெழுத்திற்கு மிடற்றுவளியும், வல்லெழுத்திற் குத் தலைவளியும் கொள்க, AA. சார்ந் துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் தேர்ந்து வெளிப் படுத்த வேனை மூன்றுந் தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி ஒத்த காட்சியிற் றம்மியல் பியலும், இது, சார்பிற்றோற்றத் தெழுத்திற்குப் பிறப்பு உணர்த்துதல் துதவிற்று, இ-ள் ;--ரார்த்துவரின் அல்லது தமக்கு இயல்பு இல என தேர்ந்து வெளிப் படுத்த ஏனை மூன்றும் சிலவற்றைச் சார்ந்துகரின் அல்லது தமக்குத் தாமே வரும் இயல்பு இவவென்று ஆராய்ந்து செரிப்படுத்தப்பட்ட ஒழிந்த மூன்றும், தம்தம் சார்பில் பிறப்பொக சிவணி ஒத்த காட்சியில் தம் இயல்பு இயலும்- தத்தமக்குச் சார்பாகிய எழு : ' க்கள சு! பிறப்பிடதே பிறத்லொடு பொருந்தி பொருத்தின ஆசை . க்கரியதில் கடக்கும். காட்சி 'நச்', நிற்குள் குத்தெழுத்தும் சார்பேயொனும் FRe: ', ரோம் பிசின், டாகி புணர் மல்லெழுத்துச் சார்பாக பிறக்கு ஒமன்பது சொல், தம்பியல்பியலும் ' என்றதனான், அளபெடையும் உயிர்மெய் w் நமக்கு அடியாகிய எழுத்துக்காது. பிறப்பிடமே இடமாக வருமென்பது கொள்க. 172. எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி யெழுதரு வளியிற் பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாரத் தகத்தெழு வளியிசை வரிறப காடி யளவிற் கோட லந் தணர் மறைத்தே. இந்து, எல்லா எழுத்திற்கும் போர் புடை உணர்த்து நல் நதவிற்று, இ-ள் :-- எல்லா எழுத்தம்-எல்லா எழுத்துக்களும், வெளிப்பட கிளந்து சொல்லிய பள்-வெஃசிப்பட தம் சொல்லப்பட்ட இடத்தின்கண்ணே, எழு சரு வளியின் முகின் ற மயானே, பிறப்பொக விடுவழி-தாம் பிறக்குந் தொழிலு டைய வாதலொடு தம்மைச் சொல்லும் இடத்து, உ.நழ்ச்சி வாரத்து அகத்து எழு வரி இசை-திரிதருக்கூற்றையுடைய மண்ணின்று எழும் வளியானாய இசையை, அரில் சபஈாடி-பிணக்கமற ஆராய்ந்து, அளபின் கோடல்-மாத்திரை' இசையறையாற் கோடல், அ.தணர் மறைத்து பார்ப்பார் வேதத்துக்கண்ணது, உறழ்ச்சி போசம் என்றது, உ.ர் திமுதலா எழும் வளி தலைகாறும் சென்று மீண்டு நெஞ்சின்கண் நிலைபெறுதலை எனக்கொள்க. வளி என்னாது வளியிசை என்றது, அவ்வாறு கெஞ்சின்கண் நிலைபெறும் அளவும் வளி எனப்படுவது பின்னை நெஞ்சினின்றும் எழுவுழியெல்லாம் வளித் தன்மை திரிந்து எழுத்தாம் தன்மைய தாம் என்பது விளக்கிகின்றது. (ஏகாசம் ஈற்றசை.) .... அஃதிவ ணுவலா தெழுத்துபுறத் திசைக்கும் மெய்தெரி வளியிசை யளபு. நுவன் றிசினே. இது, மேற்குத்திரத்திற்கு ஓர் புறாடை உணர்த்துதல் - தலிற்று,<noinclude></noinclude> 8mv8bv2wueif1lot66fdpzq2kzvf6v2 பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/46 250 453676 1437060 2022-08-06T11:15:43Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ எழுத்ததிகாரம் - பிறப்பியல் படு இ-ள் :- அஃது இவண் காது-(அகத்தெழுவளியிசை அள பிற் கோட்ட கிய) அதனை இந் நூலிடத்துச் சொல்லாது, எழுந்து புறத்து இசைக்கு.--(மந்தி, னின்று) எழுந்து புறத்துப் போந்த இசைக்கும், பெய் தெரி வளி இசை அளபுபொருண்மை தெரிகின்ற களியானாய இசையது மாத்திசையினை, துவன்றிசின்யான் ஈண்டுக் கூறினேன், மற்று, இஃது “அளபிற் கோட வந்தணர் மறைத்து” (மொழிமரபு-20) எனவே பெறப்பட்ட தன்றோவெனின், "அந்தணர் மறைத்து" என்பது பிறன் கோட் கூறுதற்கும், பிறன்கோட் கூறி நேர்ந்து உடம்படுதற்கும் ஒப்பக்கிடந்தமை யின் அவ்வையம் தீர்தற்குக் கூறினாரென்பது, புறத்து இசைப்பதன் முன்னர், அகத்து இசைக்கும் வளி யிசையை அம்மறைக்கண் ஓர் எழுத்திற்கு மூன்று விலை உளதாகக் கூறும் (அதன் ஆசிரியன்). அஃது ஆமாறு அறிந்துகொள்க. மெய்தெரி' என்றதனான், முற்கு முதலிடன முயற்சியாத் பிறக்குமெனினும், பொருள் தெரியா சிலை மைய மாகலின் அவற்றிற்கு அளபு டாமினா ரென்பது பெறப்பட்ட, அயன் றிசின்' என்பது கண்டு இறந்தகாரத்தன்மைவினை, (2.3) ஒன்பது பிறப்பால் முற்றிற்று.<noinclude></noinclude> hhhlrf9kj9uf239x6dqqnx2ulu4y725 பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/47 250 453677 1437061 2022-08-06T11:16:10Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ நான்காவது - புணரியல் இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், மொழிகள், (மேற் செய்கை யோத் துக்களுள்) புணர்தற்குரிய கருவியின் இயல்பு கூறினமையின் புணரியல் எனப்பட் டது. மேல் மொழிமரபிற் கூறிய மொழிகள் புணருமாறு உணர்த்தினமையின் மொழிமரபினோடு இயைபுடைத் தாயிற்று. ச. மூன்று தலை யிட்ட முப்பதிற் றெழுத்தின் இரண்டு தலை விட்ட முதலா கிருபஃ தறுகான் கீறொடு தெறிகின் றியலும் எல்லா மொழிக்கு மிறுதியு முதலும் மெய்யே யுபிரென் றாய் ரியல, இத்தலைச் சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், மொழிமாபினுள் முதலும் ஈறும் கூறிய வழி உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் என மூன்றாய் விரித்து பின்ற தனை உயிரும் மெய்யும் என இரண்டாகத் தொகுத்தலானும், அவ்வழி இருபத்திரண்டு எழுத்து மொழிக்கு முதல், இருபத்து நான்கு எழுத்து மொழிக்கு ஈறு எனக்கூற வின், முப்பத்து மூன்று எனப்பட்ட எழுத்து நாற்பத்தாறு ஆவனபோல விரித் ததனை அவ வயெல்லாம் முப்பத்து மூன்றினுள்ளனவே எனத் தொகுத்தலானும் விரிந்தது தொகுத்தல் நுதலிற்று. இ-ள் :--மூன்று தலை இட்ட முப்பதிற்று எழுத்தின் -மூன் றனை முடிவிலே யிடப்பட்ட முப்பதாகிய எழுத்தினுள், இண்டு தலை இட்ட முதல் கு இருபஃது. அவ்விரண்டினை முடிவிலே யிடப்பட்ட மொழிக்கு முதலாய இருபதும், அறு நான்கு ஈறொடு நெறி நின்று இயலும்- இருபத்துநான்கு ஈற்றொடு வழக்குதெறிக் கண் நின்று நடக்கும், எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்-மூவகை மொழிக்கும் ஈறும் முதலுமாவன, மெய் உயிர் என்று அ ஈர் இயல-மெய்யும் உயிருமாகிய அவ்வி ரண்டு இயல்பினையுடைய. உ-ம். மரம், இலை, ஆல், விள என மெய்யும் உயிரும், முதலும் ஈறும் ஆயின. இருபத்திரண்டு எழுந்து முதலாவன பன்னி. ண்டு உயிரும் ஒன்பது உயிர் மெய்யும் மொழிமுதற் குற்றியலுக மும் என இவை. இருபத்து நான்கு எழுத்து ஈறா வன பன்னிரண்டு உயிரும் பதினொரு புள்ளியும் ஈற்றுக்குற்றிய லுகரமும் என இவை. > ஈற்றொடு ' என்பது (' ஈறொரு ' என) விகாரத்தாற்றொக்கது மெய் முற் கூறிய வதனால், சொல் வகைப்புணர்ச்சியும் மெய்க்கண் நிகழுமாறு உயிர்க்கண் நிகழா தென்பது கொள்க. ('என்று' என்பது எண்ணிடைச்சொல்.) பாடு. அவற்றுள் // மெய்யீ றெல்லாம் புள்ளியோடு அலையல், இது, (மேற்கூறியவாற்றான் தனிமெய்யும் முதலாவான் சென்றதனை விலக்க லின்,) எய்தியது விலக்கல் 3 தலிற்று.<noinclude></noinclude> q4kqwveb9yzxkvznbp0296jq9cih0rj பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/48 250 453678 1437062 2022-08-06T11:16:39Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ எழுத்ததிகாரம் - புணரியல் இ-ள் :-- அவற்றுள்-மேல் மெய்யும் உயிரும் என்று கூறிய இரண்டினுள், ஈறு மெய்யெல்லாம் புள்ளியொடு நிலையல்-மொழிக்கு ஈறாய மெய்யெல்லாம் புள்ளி பெறு தெலொடு நிற்க. முதலாயவையெல்லாம் புள்ளியிழந்து நிற்க என்றவாறு, உ-ம். மரம் என வரும். மொழிமுதன் மெய் புள்ளியொடு நில்லா தென்னாது, ஈறெல்லாம் புள்ளியொடு நிலையல் என ஈற்றின் மேல் வைத்துக் கூறிய வதனான், அவ்வீற்றின் மெய் உயிர் முதன் மொழி வந்த இடத்து அஃது ஏற இடம் கொடுக்கு மென்பது பெறப் பட்டது. சு, குற்றிய லுகரமு மற்றென மொழிப, இஃது, ஈற்றிற் குற்றியலுகரத்திற்கு ஒர் கருவி கூறுதல் , தலிற்று. இ-ன் :-- குற்றியலுகரமும் அற்று என மொழிப ஈற்றிற்குற்றியலுகரமும் (புள் ளியீறு போல உயிரேற இடம் கொடுக்கும்) அத்தன்மைத்து என்று சொல்லுவர், இம்மாட்டேறு ஒருபுடைச்சேறல் என வணர்க. எஎ, உயிர்மெய் வீறு முபிரீற் றியற்றே. இது, மேல் ( மெய்யே யுயிரென் றாயீ ரியல ” (புணரியல்-க) என்றதற்கு ஓர் புறாடை கூறுதல் துதலிற்று. இ-ள் :- உயிர்மெய் ஈறும் உயிர் ஈற்று இயற்று உயிர்மெய் மொழியீற்றில் நின்றதுவும் உயிரீற்றின் இயல்பையுடைத்து. இடையில் நின்றதுவும் உயிரின் இயல்பையுடைத்து. ஈறும் இடையும் உயிருள் அடக்குயெனவே, முதல் மெய்யுள் அடங்கும் என்ப தாயிற்று. இதனால், விள முதலிய உயிர்மெய் ஈறெல்லாம் அகரவீறு முதலிய உயிரீற்றுள் அடங்கிப் புணர்ச்சி பெறுவன வாயின, பாகு என்புழி இடை நின்ற சகர உயிர்மெய் அகரமாய் உயிர்த்தொடர்மொழி யெனப்பட்டது. ஈண்டு உயிர்மெய் ஒற்றுமை நயத்தான் உயிர்மெய்யென வேறு ஓர் எழுத்தாவ தன்றி, ஈறும் இடைாம் உயிரென தெழுத்தாகம், முதல் கெய்யென ஓரெழுத் நாயும் கன்றதாயிற்று. இத்துணையும் ஒருமொழி யிலக்கணக் க. நலின் மொழிமரபின் ஒழிபாயிற்று.(ச) 14 உயிரீறு சொன்மு னு பிர்வரு வழியும் உயிரிறு சொன்முன் மெய்வரு வழியும் மெய்யிறு சொன்மு னுயிர்வரு வழியும் மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியுமென் றிவ்வென வறியக் கிளக்குக் காலை நிறுத்த சொல்லை குறித்து வரு கிளவியென் முயீ ரியல புணர்விலைச் சுட்டே . இது, மேற்கூறும் புணர்ச்சி மும்மொழிப்புணர்ச்சியாகாது, இருமொழிப்புணர் ச்சியாமென்புரஉம், அவை எழுத்து வகையான் நான்கா மென்பதூஉம் உணர்த்து தல் ஈதலிற்று,<noinclude></noinclude> j5qw1fu0bkryqputnxun9qzdtxblyne பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/49 250 453679 1437063 2022-08-06T11:17:10Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் - இளம்பூணம் இன் :-உயிர் இது சொல் முன் உயிர் வரு வழியும் உயிரீற்றுச் சொல்முன் உயிர்முதல் மொழி வரும் இடமும், உயிர் இறு சொல்முன் மெய் வரு வழியும்-உயி ரீத்றுச்சொல்முன் மெய்முதல் மொழி வரும் இடமும், மெய் இறு சொல்முன் உயிர் வரு வழியும் மெய்யீற்றுச் சொல்முன் உயிர்முதல் மொழி வரும் இடமும், மெய் இறு சொல்முன் மெய் வரு வழியும்-மெய்யீற்றுச்சொல்முன் மெய்முதல் மொழி வரும் இடமும், இவ் என அறிய-(அப்புணர்ச்சிவசை) இவையென அறிய, கிளக்கும் காலைஆசிரியர் சொல்லுங்காலத்து, நிறுத்த சொல் குறித்து வரு கிளவி என்று அ ஈர் இயல அவை நிறுத்த சொல்லும் அதன் பொருண்மையைக் குறித்து வரும் சொல்லு மாகிய அவ்விரண்டு இயல்பையுடைய, புணர்நிலைச் சுட்டு-புணரும் நிலைமைக்கண். ஆ ஈ, ஆ வலிது, ஆல் இலை, ஆல் வீழ்ந்தது எனக் கண்டுகொள்க. விளவினைக் குறைத்தான் என்பது அவ்வருபுகுறித்து உருகிளவியை நிலைமொ ழியுள் அடக்கி இருமொழிப்புணர்ச்சியாய் நின்றவாறு அறிக, (அவ்வுருபு- விளவினை ' என்பதன் ஐ உரு:.. முதல் ஏ. காம் பிரி'லை. இரண் டாம் ஏகாரம் ஈற்றசை, 'என்று இரண்டும் எண்ணிடைச்சொல், ' வாக. அவற்றுள் நிறுத்த சொல்லி னீ செழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் திபையப் பெயரொடு பெயரைப் புணர்க்கும் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலுக் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலுந் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிட னொன்றே யியல்பென ஆங்கக் கான்கே மொழிபுண ரீயல்பே, இது, மேற்கூறும் புணர்ச்சி புணர்ச்சிவகையான் நான்காபொன்பா.. ம், சொல் வகையான் நான் காமென்பது உம், புணர்வது சொல்லும் சொல்லுமேயன்றி, எழும் தும் எழுத்துமே யென்பு தர உம் உணர்த்துதல் ஆதலிற்று, இ-ன்:-அவற்றுள் - நிலைமொழி வருமொழி யெனப்பட்ட வற்றுள், சிறுத்த சொல்லின் ஈறு ஆகு எழுத்தொடு குறித்து வரு கினவி முதல் எழுந்து இயையவிறுத்த சொல்லினது ஈறாகின்ற எழுத்தினோடு அதனைக் குறித்து வருகின்ற சொல் லினது முதலெழுத்துப் பொருந்த, பெயரொடு பெயரை புணர்க்கும் காலும் - பெயர் ச்சொல்லொடு பெயர்ச்சொல்லைப் புணர்க்கும் காலத்தும், பெயரொடு தொழிலை புணர்க்கும் காலும்-பெயர்ச்சொல்லொடு வினைச்சொல்லைப் புணர்க்கும் காலத்தும், தொழிலொடு பெயரை புணர்க்கும் காலும்-வினைச்சொல்லொடு பெயர்ச்சொல்லைப் புணர்க்கும்காலத்தும், தொழிலொடு தொழிலை புணர்க்கும் காலும்-வினைச்சொல் லொடு வினைச்சொல்லைப் புணர்க்கும் காலத்தும், திரிபு மூன்று இயல்பு ஒன்று என அ நான்கே மொழிபுணர் இயல்பு திரியும் இடம் மூன்றும் இயல்பு ஒன்றும் ஆகிய அக் நான்கே மொழிகள் தம்மிற் புணரும் இயல்பு. உ-ம், சாத்தன் சை, சாத்தன் உண்டான், வர்தான் சாத்தன், வர்தான் போயி அன் எனக் கண்டுகொள்க.<noinclude></noinclude> gjy91aqwxwyy58g7juipqdf9h24zs1v பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/50 250 453680 1437064 2022-08-06T11:17:30Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ எழுத்ததிகாரம் - புணரியல் AL இடையும் உரியும் பெயர் வினைகளை அடைத்தல்லது தாமாக நில்லாமையின், பெயர் வினைகட்கே புணர்ச்சி கூறப்பட்டது, (இடை இடைச்சொல், உரி-உரிச்சொல், 'ஆக்கு என்பது அசை. முதல் மூன்று கோரமும் தேற்றப்பொருளில் வந்தன. நான்காம் ஏகாரம் ஈற்றசை.) ய. அவைதாம் மெப்பிறி தாதன் மிகுதல் குன்றலென் றிவ்வென மொழிப திரியூமாறே. இது, மேற்கூறிய திரிபுமூன்றும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- அவைதாம்-அத்திரிபுதான், மெய்பிறிது ஆதல் மிகுதல் குன்றல் என்று இவ் என மொழிப திரியும் ஆறு-மெய்பிறிதாதலும் மிகுதலும் குன்றலுமாகிய இவை எனச் சொல்லுவர் திரியும் நெறியினை.) இம்மூன்றும் அல்லாதது இயல் பென்று கொள்க. || உ-ம், பொற்குடம், யானைக்கோடு, மரவேர் என வரும், குபோடீலர் என்பது இயல்பு. இப்புனார் சொன்கும் ஒருபு: 55ச்சரிக்கண்ணே நீசம் பெறுமென்பது உரை யிற்கொள்க. மேல் இடர்' (புணரியல்-5) என்றானால், ஒருபுணர்ச்சிக்குத் திரிபு மூன் றனுள் ஒன்றாயினும் இரண்டாயிலும் மூன்றுயினும் வாப்பெறும் எனக்கொள்க, மாத்தாற் கொண்டான்' என்பது அம்பிகு இரண்டு வந்தது. ' நீயிர் குறியிர்' என்பது அம்பகம் மூன்றுவந்தது. பிறவும் அன்ன, (முதல் உதாரணத்தில் 'அத் திரிபு மூன்று வந்தது' என்றிருத்தல் வேண்டும். இரண்டாம் உதாரணம் பிழை. இப்பிழைகள் எதிபெயர்த்தெழுதினோரால் நேர்ந்தன போலும். 'என்று' எண் ணிடைச்சொல்.) 105க, நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியும் அடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய. இது, வறுத்து சொல்லே குறித்து வருகிளவி” புண ரியல்-இ) என்பதற்கு ஓர் புறனடை உணர்த்துதல் , நுதலிற்று. இ-ள் :-- நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியும் நிலைமொழியாக நிறுத்தின சொல்லும் அதனைக்குறித்து வரு சொல்லும், அடையொடு தோன்றினும் புணர் நிலைக்கு உரிய-தாமேவந்து புணர்வதன்றி,) அவையிரண்டினும் ஓரோர் சொல் லடைவந்து ஒன்றித்தோன்றினும் புணர்நிலைக்கு உரிய, உ-ம், பதினாயிரத்தொன்று, ஆயிரத்தொருபஃது, பதினாயிரத்தொருபஃது எனவரும். ஈண்டு அடையென்றது உம்மைத் தொகையினையும், இருபெயரொட்டுப் பண் புத்தொகையினையும் எனவுணர்க. அவையல்லாத தொகைகளுள் வினைத்தொகை யும், பண்புத்தொகையும் பிளந்து முடியாமையின் ஒருசொல் எனப்படும். அன்மொ ழித்தொகையும் தனக்கு வேறு ஓர் முடிபு இன்மையின் ஒரு சொல் எனப்படும். இனி, ஒழிந்த வேற்றுமைத்தொகையும் உவமைத்தொகையும் “ தன்னின முடித்தல் என்றதனான் ஈண்டு ஒருசொல் எனப்படும், உண்டசாத்தன் வந்தான், உண்டுவந்தான் சாத்தன் என்பனவும் அவ்வாறே ஒருசொல் எனப்படும். பிறவும் அன்ன,<noinclude></noinclude> hhmkdebgzbvim9b0s7q6eat3jd9ny8h பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/51 250 453681 1437065 2022-08-06T11:17:50Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் - இளம்பூானம் * மருவின் நெருதி மயம்பியன் மொழியும் உரியவை பாவே புணர்க்கச் சுட்டே. இஃது, இலக்கண வழக்கேயன்றி மரூஉக்களும் புகார்ச்சப்படும் என்பது * உமார்த்துதல் இதவிற்று, இ-ள் :--மருவின் தொகுதி மயங்கு இயல் மொழியும்-(இலக்கணலழச்சே பன்றி) மரூஉத்திரளாகிய தவதமொறாக மயங்கின இயல்பைபுடைய இலக்சணத் தொடு பொருந்தின் மரூஉவழக்கும், உரியவை உள புணர் நிலைச் சுட்டு உரியன உன் புணரும் நிலைமைக்கண். உ-ம். மீகண், மூன்றில் எனவரும், 'நிலை' என்றதனான், இலக்கணத்தொடு பொருந்திய மரூஉவழக்கல்லா மரூஉ வழக்கும் புணர்க்கப்படும் எனக்கொள்க. எககூ, வேற்றுமை குறித்த புணர்மொழி விலையும் வேற்றுமை டல் வழிப் புணர்மொழி நிலையும் எழுத்தே சாரியை யாயிரு பண்பின் ஒழுக்கல் வலிய புணருங் காவை, இது, நால்வகைப்புணர்ச்சியுள், கக்கபுணர்சசி இத்தன்மைத் தென்பதும், அக்கால்வகைப்புணர்ச்சியும் வேறு ஓர் ஆற்றான் இருவகையா மென்பதுஉம் உணர்த் துதல் நுதலிற்று. இ-ள் :-வேற்றுமை குறித்த புணர் மொழி விலையும் வேற்றுமையது பொருண் மையினைக் குறித்த புணர் மொழியது இலைமையும், வேற்றுமை அல்வழி புணர் மொழி நிலையும் வேற்றுமையல்லாத அல்பழியீடத்துப் புணர் மொழியது நிலைமை பும், எழுத்து சாரியை அ இரு பண்பின் ஒழுக்கல் வலிய-(மிக்க புணர்சசிக்கண்) எழுத்து மிகுதலும் சாரியை மிகுதலு மாகிய அவவிாண்டு இலக்கணத்தானும் நடாத் துதலைத் தமக்கு உலியாக, டைய, புணரும்காலை-அவைபுணரு காலத்து. விளங்கோடு, மகவின்கை, விளக்குறிது, பனையின் குறை எனக்கண்டுகொள்க. 'ஒழுக்கல்வலிய' என்றதனான், எழுத்தும் சாரியையும் உடன் பெறுதல் கொள்க. அவற்றுக்கோடு, கலத்துக்குறை எனவரும், அல்வழி முற்கூறாதது, வேற்றுமையல்லாதது அல்வழியென வேண்டலின் என்பது. முன்னே ‘புணர்மொழி' என்று வைத்து, ‘புணருங்காலை' என்றதனாற் புணர்ச்சிக்கண்ணே வேற்றுமை அல்வழி என இரண்டாவது; அல்லாக்கால், வேத் றுமையெனவே படுமென்பது கொள்க. ஈண்டு அல்வழி யென்றது பெரும்பான்மை பும் எழுவாயினை. சுச, ஐஓடு குஇன் அரண் ணென்னும் அவ்வா றென்ப வேற்றுமை புருபே. இது, மேல் வேற்றுமை யென்னப்பட்ட அவற்றது பெயரும், முறையும், தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.<noinclude></noinclude> 86mj7qt5wcnbuix8myfytr97hkih05c பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/1 250 453682 1437066 2022-08-06T11:21:46Z Neyakkoo 7836 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1}} proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Neyakkoo" /></noinclude>{{raw_image|1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/1}}<noinclude></noinclude> 6gyogbdgwm229oke0ai9vwedbk8n7uo பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/52 250 453683 1437067 2022-08-06T11:22:41Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ எடித்து காரம்'. புணரியல் ! . (55) இ-ன் :-- ஐ ஒரு கு இன் அது கண் என்னும்-ஐ' ஒரு கு இன் அது கண் என்று சொல்லப்படும், அ ஆறு என்ப வேற்றுமை உருபு-அவ்வாறும் என்று சொல்லுவர் வேற்றுமை யுருபுகளை, இவ்வாறும் அல்லன வெல்லாம் அல்வழி எனப்படும். அவை எழுவாயும், விளியும், உவமத்தொகையும், உம்மைத்தொகையும், பண்புத்தொகையும், இருபெய ரொட்டுப் பண்புத்தொகையும், முற்றும், இருவகை எச்சமும், இடையும், உரியும் என இவை. கடு, வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற் கொல்வழி பொற்றிடை மிகுதல் வேண்டும். இது, நான்காவதற்கும் ஏழாவதற்கும் உருபியலை நோக்கிற்றோர் கருவி உணர் | த்துதல் அதலிற்று. இ-ன் :- வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு- வல்லெழுத்து முத வாகவுடைய வேற்றுமை யுருபிற்கு, ஒல்கழி ஒற்று இடை கிகுதல் வேண்டும்பொருந்தின இடத்து வல்லொற்றாயினும் மெல்லொற்றாயினும் இடைக்கண் குதல் வேண்டும். 5.32/ ஊர்க்கு, நீர்க்கு, 29zர்க்கண், தீர்க்கண் என வல்லெழுத்து பிக்கன. தங்கண், எங்கண் என மெல்லெழுத்து :சிக்கன. 'ஒல்வழி' என்றதனால், அரசர்கண், பார்ப்பார்கண் தான ஒற்று சகாதனவும் கொள்க. "மெய்பிறிதாதல்" (புணரியல்-எ) முதலாய நான்கு புணர்ச்சியும் உருபு புணர்ச்சிக்கண்னும் எய்தலின், மெய்பிறிதாதலை எடுத்தோதாது : 'க்கதனை எடுத் தோதிய வதனான், மிக்க புணர்ச்சி யல்லனவும் ஈண்டே கொள்க. பொற்கு, பொற் கண், ஆங்கண், நாங்கள், உங்கண்டு அவற்கு, இவற்கு; துங்கண், கொற்றற்கு, சாத்தற்கு என வரும், அவன்கண், சாத்தன்கண் என்புழி இயல்பும் இதனானே கொள்க. (52) நகசு. ஆறனுருபி னகரக் கிளவி ஈற சுகாமுனைக் கெடுதல் வேண்டும். இஃது, ஆறுவதற்குத் தொகை மாசினை போக்கியதோர் கரும் கூதுதல் லிற்று. இ-ள் :- ஆறன் உருபின் அகாக்கிளவி -இரும் வேற்றுமையாகிய விந்து என் னும் சொல்லிடத்து அகரமாகிய எழுத்து, ஈறு ஒரு அகரமுனை தெடுதல் வேண்டும்:(நெடுமுதல் குறுகும்) மொழியீற்று உளதாகின்ற அகரத்தின் முன்னர்த் ரான் கெடு தல் வேண்டும், 2-ம், நமது எமது, தனது, எனது, நினது என வரும். * மேல் ஈராகு அகரம் இதற்குத் தாதாது, இவ்வுருபகரமே ஏறி முடிய - அமைத் லின், அது கேடாதல் வேண்டா எனின், நெடுமுதல் குறுகி விகாரப்பட்டு இன்ற மொழியாகலின் அதன்மேல் உருபகரமேறி முடியல் வேண்டா ' ஈயினார் போலு மென்பது. கா, வேற்றுமை வழிய பெயர் புணர் நிலையே. இது, வேற்றுமையுருபு பெயர்க்கண் நிற்குமாறு உணர்த்துதல் கதலிற்று',<noinclude></noinclude> h8xgq4jki12mbydg4uu6s2dbts9t9e6 பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/53 250 453684 1437068 2022-08-06T11:38:45Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ மேல்) “ உருபரில், பெயசொடு பெயர் முகன், வினைவழிய re 'தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ள் :- வேற்றுமை பெயர் வழிய புணர் நிலை-வேற்றுமை பெயர்களின் பின் னிடத்தன அவற்றோடு புணரும் நிலைமைக்கண். சாத்தனை, சாத்தெனொடு என வரும். மேல் “ உருபுரிலை திரியா நீறுபெயர்க் காகும் ” (வேற்றுமையியல். அ) என் கின்றான்றோ வெனின், பெயசொக பெயர் முதலிய நால்வகைப் புணர்ச்சியையும் வேற்றுமை அல்வழியென இரண்டாக அடக்கலின், வினைவழியும் உருபு வருமென் பதுபட நின்றதாகலின் ஈண்டு இது கூறப்பட்டது. வேற்றுமை வேற்றுமையுருபு கன். ஏகாரம் ஈற்றசை.) பசுஅ, உயர் திணைப் பெயரே யஃறிணைப் பெயரன் றாயிரண் டென்ப பெயர்கிலைச் சுட்டே, இது, வேற்றுமையொடு புணரும் பெயர்கட்குப் பெயரும், முறையும், தொகை யும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :-- உயர்தினைப்பெயரே அஃறிணைப்பொர் என்று அ இண்டு என்ப. த :பர் திணைப்பெயரும் அஃறிணைப்பெயருமாகிய அவவி ண்டு மென்று சொல்லும், பெயர் நிலை ஈட்டு- பெராகிய மையது கருத்தினை ஆடும. , 125 டூ உ என்பன உயர் திணைப்பெட்டர், ஒன்று பல என்பன அஃறிணைய் பெயர். > மற்று விரவுப்பெயர் கூறு காயது என்னை யெனின், மற்றது சாத்தன் வந்தான், "கந்தது எனப் புணர்சசிக்கண் பெரும்பான்மையும் ஒரு திணைப்பாற் படுதலின், அலம் விண்டாக அடக்கிக் கூறினா ரென்பது. எ, என்று கான்பன எண்ணிடைச்சொல் இரண்டாம் ஏகாரம் ஈற்றசை.){at) 14. அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே. இது, சாமியை வரும் இடம் கூறுதல் அதலிற்று. , இ-ள் :- அவற்றுவழி மருங்கின் சாரியை வரும்- அப்பெயர்க. என் பின்னாகிய இடத்தின் கண்ணே சாரியை வரும். ஆஉேவின் கை, பலவற்றுக் கோடு என வரும். 'அவற்றுள் வழி' எனவும்பாடம்.) உய, அவைதாம் இல்_னே வற்றே யாத்தே யம்மே இன்னே யானே பக்கே மிக்கே அன்னென் கிளவி புளப்படப் பிறவும் அன்ன வென்ப சாரியை மொழியே. இது, சாரியைகட்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் இத லீற்று, இ-ள் :-- அவைதாம்-மேற் சாரியை யென்னப்பட்டவைதாம், இன்னே வற்றே அத்தே அம்மே ஒன்னே ஆனே அக்கே இக்கே அன் என் கிளவி உளப்பட பிற ஆம்-இன்னும் வற்றும் அத்தும் அம்மும் ஒன்னும் ஆனும் அக்கும் இக்கும் அன் என் லும் சொல்லுமாகிய அகவொன்பதும் உளப்படப் பிறவும், அன்ன என்ப சாரியை மொழி-அசசாரியையாம் தன்மைய என்று சொல்லுவர் சாரியையாகிய மொழிகளை<noinclude></noinclude> cn92rnk1gfy8tluxg4k11vozrb31430 பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/54 250 453685 1437069 2022-08-06T11:39:12Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ எழுத்ததிகாரம் - புணரியல் சக பிறவும்' என்றதனால், தம், ஈம், நும், எம், கெழு, ஏ, ஐ, ஞான்று என்பனவுங் கொள்க. ''எடுத்த நறவின் குலையலங் காந்தள்'' என்புழி 'அலம்' என்பதோர் சாரி யையும் உண்டா லெனின், அதனை 'அலங்கு காந்தன்' என்பதன் விகாரமென்ப, இன் சாரியை வழக்குப் பயிற்சியாலும் அலுட் பலகாலும் எடுத்தோதப்படலானும், வாளா ஓதியவழி தானே சேறலானும் முன்வைக்கப்பட்டது. அன்சாரியையும் அதுபோலச் சிறப்புடைமையின் பின் வைக்கப்பட்டது, இடை நின்றவற்றியல்பும் அறிந்து கொள்க. (முதல் எட்டு ஏகாரமும் எண்ணிடைச்சொல், ஒன்பதாம் ஏகாரம் ஈற்றசை,) (5எ) உக, அவற்றுள் இன்னி னிகா மாவி னிறுதி முன்னர்க் செடுத அரித்து மாகும். இஃது, அல; ற்றுள் இன்சாரியை முதன் திரியுமாறு கூறுதல் ஆதலிற்று, இ-ள் :--அவற்றுள் -மேற்... றப்பட்ட சாரியைாளுள், இன்னின் இகாம் லின் இறுதிமுன்னர்-இன் சாரியையினது இகரம் என்னும் சொல்லீற்று முன்னர், கெடுதலும் உரித்தாகும் கெடாமையேயன்திக் கெடுதலும் உரித்தாம். உ-ம். ஆனை, ஆவினை, ஆன்கோடு, ஆவின்கோடு என வரும். 'முன்னர்' என்றதனான், 'மா' என்னும் சொல்லின் முன்னும் அவ்விரு விதியம் எய்தாம். மானை, மாவினை, மான் கோடு, மாலின்கோடு என வரும். 1 உடீ. அளபாகு மொழிமுக னிலைஇய வயிர்மிசை னஃகான் றஃகா னாகிய நிலைத்தே. இஃது, இன்னிறுதி திரியுமாறு உணர்த்துதல் க தலிற்று. இ-ள் :--அளபாகும் மொழி முதல்-அனபுப்பெயராகும் மொழியின் முதம் கண், நிலைஇய உயிர்மிசை னஃகான்- நிலைபெற்ற உயிர்க்குமேலாயான்ற இன் சாரியையது னகாரம், மஃகான் ஆகிய நிலைத்து-- மகாரமாகிய லைமைத்து, பதிற்றகல், பதிற்றுழக்கு என்புழி அவ்வாறு வருதல் அறிக. <நிலைத்து' என்றதனால், பிறவழியும் இன்னின் னகரம் றகரமாதல் கொள்க. பதிற்சென்று, பதிற்றேழு எனவரும். ... வஃகான் மெய்கெடச் சுட்டுமுத லைம்முன் அஃகா னிற்ற லாகிய பண்பே. இது, வற்று முதல் திரியுமாறு உணர்த்துதல் பந்தலிற்று. இ-ள் :-- சுட்டு முதல் ஐமுன்-சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார வீற் றுச் சொல்முன்னர், வஃகான் மெய் கெட அஃகான் நிற்றல் ஆகிய பண்பு-வற்றுச் சாரியை தன் வகரமாகியமெய் கெட அகரம் நிற்றலாகிய பண்பினையுடைய, அவையற்றை, இவையற்றை, உவையற்றை எனவும், அவையற்றுக்கோடு என வும் வரும், ஆகிய பண்பு' என்றதனால், சுட்டு முதலாகிய ஐ என் இறுதி ஐகாரத்தோடு நில்லாதவழி, வற்றின் வகரம் அகரம் பிற்கக் கெடாது வற்றாயே நிற்றல் கொள்க. மற்றிது, 'திரிச்ததன்றிரிபு பிறிது'' என்னும் நயத்தாற் கெடாதேரிற்கு மாகலின்,<noinclude></noinclude> 8ud9a9dufl8ji9f2ug177w1t8cv5yln பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/55 250 453686 1437070 2022-08-06T11:39:38Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் - இளம்பூரணம் இது கூறவேண்டா எனின், சுட்டு முதல் ஐ ஈற்றுச் சொல்லின் ஐமுன் என ஓதாது, சுட்டு முதல் ஐம்முன்' என அச்சொல்முன் எல்லாம் கெடுவது போல தி னமையின், வேண்டிற்றென்றுது. உச, னஃசான் மஃகானான்ச'னுருபிற்கு, இது, னகரவீற்றுச் சாரியை நான் கற்கும் ஈறு திரிபு கூறுதல் முதலிற்று. இ-ள் --நான்கன் உருபிற்கு னஃகான் றஃகான் நான்காம் உருபிற்கு (னகார வீற்றுச் சாரியையெல்லாம்) னகாரம் றகாரமாம். உ-ம், விகாவிற்கு, கோஒற்கு, ஒருபாற்கு, அதற்கு என வரும், (உச) உடு. ஆனி னகாமு மதனோ ரற்றே நாண்முன் வரூஉம் வன்முதற் றொழிற்கே, இஸ்', என்சாரியை பொருட்புணர்சரித்தண் ஏ.ஜ திரியுமாறு: உணர்த்துதல் இன் :--பான்முன் வரும் பல் மு. தொழிற்கு அவரின் அகரமும் காட்பெயர் முன்னர் வரும் வல்லெழுத்தை மு.சலாகவடைய வினை சசொற்கண் வரும் ஆன்சாரி யையின் நாமும், அதன் ஓர் அற்று-அச்சான்கனுருபின்கண் வரும் ஆன் சாரியை யோடு ஒரு தன்மைச்சாய் னகாசம் றகாரமாம். "தொழிற்கு' என்பதனைத் தொழிற்கண்' என மயக்கமாகக் கொள்க, 22.-ம், பாணியாற் கொண்டான் எனவரும். உம்மையை இரட்டுற மொழிதலானே எதிாது தழீஇய தாக்கி, அதனான் ஈானல்லவற்று முன் வரும் வன்முதற் றொழிற்தன் இன்னின் னகரமும் றகாரமா பத் திரிசல் கொள்க, பளியில் கொண்டான் எனவரும், தொழிற்கண் இன்னின் னக!"ம் கிரியமென, பெயர்க்கண் இன்னின் னகரம் நிரிலும் திரியாமையுமுடைய வென்பது ஞாபசத்தாற் கொள்ளப்படும். பறம்பிற் பாரி, வண்டின் கால் என வரும். {42) உசு. அத்தி னகர மகரமுளை யில்லை, - இஃது, அத்து முதல் திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :-அத்தின் அகரம் அகரமுனை இல்லை--அத்துச்சாரியையின் அசரம் அகரவீற்றுச்சொல் முன்னர் இல்லையாகும், உ.-ம், மகத்துக்கை எனவரும். உள. இக்கி னிகர மிக ரமுகா யற்றே . இஃது, இக்குச்சாரியை முதல் திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று, இ-ள் :- இக்கின் இகரம் இகரமுனை அற்று-இக்குச்சாரியையினது இகரம் இகரவீற்றுச்சொல் முன்னர் மேற்கூறியவாறுபோலக் கெடும். உ-ம். ஆடிக்குக் கொண்டான் என வரும்.<noinclude></noinclude> 28v2j1qs181caldb9z2z2wzsp9hq91e பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/56 250 453687 1437071 2022-08-06T11:40:15Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ எழுத்ததிகாரம் - புணரியல் Me.. ஐபின் முன்னரு மவ்விய னிலையும், இதுவும் அது. இ-ள் :-ஐயின் முன்னரும் அ இயல் நிலையும்-(இக்கின் இகரம்) இச வீற்றுச் சொல்முன்னன்றி ஐகாரவீற்றுச்சொல் முன்னரும் மேற்கூறப்பட்ட சொதலியல் பிலே நிற்கும். உ-ம். சித்திரைக்குக் கொண்டான் எனவரும், (2) சு. எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி அக்கினிறுதிமெய் மிசையொழில் கொமே குற்றிய லுகர முற்றத்தோன் முது. இஃது, அக்கிறு திரியுமாறு உணர்த்துதல் ஈதலிற்று, இ-ள் :- எ பெயர் முன்னரும் வல்லெழுத்து வரு வழி அக்கின் இறுதிக் குற்றியலுகரம் முற்ற தோன்ற தி-எல் வகைப்பட்ட பெயர்முன்னும் வல்லெழுத்து உருபீடத்து அக்கின் இறுதிக் குற்றியலுகரம் முடியத் தோன்ருது, மெய் மிசை யொடும் கெடும்-அதனார் பற்றப்பட்ட "ல்லெழுத்தாகிய மெய் தனக்கு மேல் நின்ற . மெய்யோடும் கெடும். க.38 உ-ம், குன்றக்கூகை, மன்றப்பெண்ணை, ஈமக்குடம், அரசக்கன்னி, தமிழக் கூத்து, என வரும். (முற்ற' என்றதனால் வன்கணமன்றி மற்றக் கணங்கட்கும் கொள்க.) தமிழ நூல், தமிழயாப்பு: தகிழவரையர் என வரும். கூய. அம்மி னிரதி சதக் காலைத் தன்மெய் திரிந்து கஞக வாகும், இஃது, அம்பின் இறுதி திரியுமா று உணர்த்துதல் நதலிற்று. இ-ள் :-அம்பின் இறுதி கசத காலை-அம்பின் இறுதியாகிய மகாவொற்று கச தக்கள் வருமொழியாக வர்தகாலத்து, தன் மெய் திரிந்து B) » F ஆகும்- தன் வடி திரிந்து ங ஞ நக்களாம். உ-ம். புளியங்கோடு, புளியஞ்செதின், புளியந்தோல் எனவரும், தன்மெய் என்றதனால், அம்மின் இறுதி மகரமேயன்றி, தம் நம் நும் உம் என்பனவற்றின் இரதி மகரமும் திரியுமென்பது கொள்க. எல்லார் தங்கையும், எல்லார்கங்கையும், எல்லார் நுங்கையும், "வானவரி வில்லும் திங்களும் எனவரும். கூக, மென்மையு மிடைமையும் வரூஉக் காலை இன்மை வேண்டு மென்மனார் புலவர். இதுவும் அது. இ-ள் :---மென்மையும் இடைமையும் வரும் சாலை-அம்மின் இறுதி மென்மை பும் இடைமையும் வருமொழியாய் வருங்காலத்து, இன்மை வேண்டும்-என்மனார் புலயர்-ஒன்றிமுடிதலை வேண்டும் என்று சொல்லுவர் புலவர்,<noinclude></noinclude> m50wfz6ih1ddgfcezc2cpw0vgdidaxu பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/57 250 453688 1437072 2022-08-06T11:40:44Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் . இளம்பூரணம் 2.-ம், புளிய ஞெரி, நுனி, முரி, யாழ், வட்டு என வரும். உரையிற்சோட லென்பதனால், புவிய விலை எனவும் உயிர் வருவழிக் கேடும் சொள். க.உ. இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற் பின்னென் சாரியை பின்மை வேண்டும். இஃது, இன் சாரியை முழுவதூஉம் கெடும் இடம் உணர்த்துதல் நுதலிற்று. - இ-ள் :--இன் என வரும் வேற்றுமை உருபிற்கு-இன் என்று சொல்ல வரு சின்த வேற்றுமையுருபிற்கு, இன் என் சாரியை இன்மை வேண்டும்-இன் என்னும் சாரியை தான் இன்றி முடிதல் வேண்டும். உ-ம். விளவின், பலாவின் என வரும், அவற்றுள் இன்னின் இகசம்” (புணரியல்-க.) என்ற தன் பின் வையாததனால், சிறுபான்மை இன் சாரியை கெடா துபற்றல் கொள்க, பாம்பினிற் கடிது தேள் என வரும். ந... பெயருக் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப வேற்றுமை உருபு நிலைபெறு வழியும் தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் ஒட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச் சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா திடைகின் றியலுஞ் சாவியை வியற்கை உடைமையு மின்மையு மொடுவயி னொக்கும். இது, சாரியைகட்கெல்லாம் பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப-பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் பெயரும் வினையுமாய்ப் பிரிந்தும் பெயரும் பெயருமாய்க் கூடியும் இசைப்ப, வேற்றுமை உருபு நிலை பெறு வழியும்-வேற்றுமையுருபு தொகாது நிலை பெற்ற இடத்தினும், தோற்றம் வேண்டா தொகுதிக்கண்ணும்-அவை தோற்றுதல் வேண்டாத தொகுதிக்கண்ணும், ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி- தாம் தாம் பொருந்து தற்கேற்ப நடந்த வழக்கோடு பொருந்தி, சொல் சிதர்மருங்கின்-சாரியை பெறும் புணர்மொழிகளைப் பிரித்துக்கானுமிடத்து, வழி வந்து விளங்காது இடை நின்று இயலும்-அவற்றின் பின் வந்து விளங்காது அவற்றிடையே நின்று நடக்கும், சாரியை இயற்கை-சாரியையின் இயல்பு.உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும்அவைதாம் உண்டாதலும் இல்லையாதலும் ஒரு உருபினிடத்து ஒக்கும், உ-ம், விளவினைக் குறைத்தான், விளவினைக்குறைத்தவன் எனவும், நிலாத்துக் கொண்டான், நிலாத்துக்கொண்டவன் எனவும் வரும். | ஒட்டுதற்கொழுகிய வழக்கன்மையின், நிலாக்கதிர் நிலாமுற்றம் என்பன சாரியை பெறாவாயின. . எல்லாகம்மையும் எனச் சாரியை ஈற்றின்கண்ணும் வருதலின், இடையின்றி யறல் பெரும்பான்மை யெனக்கொள்க,<noinclude></noinclude> paq1nl5qh4a9koifvzgj0mxeyr2ev3t பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/58 250 453689 1437073 2022-08-06T11:41:18Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ எழுத்ததிகாரம் - புணரியல் பூவினொடுவிரிந்த கூந்தெலெனவும், பூவொடுவிரிந்த கூந்தலெனவும், உண்மையும் இன்மையும் ஒடுவயின் ஒத்தவாறு, இயற்கை' என்றதனான் ஒடுவருபின்கண் சாாயை பெறுதலும் பெறாமையும் ஒழிய, ஒரோவழிப் பெற்றேவருமென்பது கொள்க. பலவற்றொடு எனவரும்.(கூய) கூச, அத்தே வற்றே பாயிரு மொழிமேல் ஒற்றுமெய் கெடுத றெற்றென் றற்றே அவற்று முன் வரூஉம் வல்லெழுத்து மிருமே, இஃது, அத்தும் வற்றும் வருமிடத்து நிலைமொழியினும் வருமொழியிலும் வருஞ் செய்கை கூறுதல் அதலிற்று. இ-ள்-: அத்தே வற்றே அ இரு மொழிமேல் ஒற்று மெய்கெடுதல் தெற்றென் நற்று-அத்தும் பெற்றுமாகிய அவ்விரு மொழிமேல்வின்ற ஒற்றுத் தன்வடிவுகெடுதல் தெளியப்பட்டது. அவற்றுமுன் வரும் வல்லெழுத்து மிகும்- அவ்விருசாரியை முன் லும் வரும் வல்லெழுத்து கும். முந்திய ஏகாரம் இரண்டும் எண்ணிடைச்சொல், பிரதிய ஏகாரம் இரண்டும் ஈற்றசை.. உ-ம். கலத்துக்குறை, அவற்றுக்கோடு என வரும். கலன் என னகாரமாக நிறுத்திக்கெடுக்கவே, 'ஒன்றின முடித்தல்' என்பதனால், புள்ளியீறல்வழி விகார வகையான் நின்றனவும் அவற்றின் இசையொற்றென்று கெடுக்கப்படு மெனக்கொள்க. அவற்றுக்கோடு என வரும். இஃது: * STE ஈறு'. ஈண்டு வல்லெழுத்து :குெமென்றது. ஈற்று வல்லெழுத்தின்றித் திரிந்து முடியும் னசு."மும் ணகமும் லகரமும் எகரமும் என இவற்றை போக்கி பயனவுணர்க. அத்து முற்கூறிய முறையன்றிய கூற்றினான், அத்தின் இசை யொற்றுக் கெடா து நிற்ககம் பெறும், விண்ணத்துக்கொட்கும், வெயிலத்துச்சென்றான், இருளத்துக் கொண்டான் என வரும். "மெய்' என்றதனால், அத்தின் அகரம், பிறவுயிரின் முன்னும் கெடுதல் கொள்க. அண்ணாத்தேரி என வரும். . தெற்று பாண்றதனால், அத்தின் அகரம் கெடாது ற்றலும் கொள்க. விளவத் துக்கண் 6:ன வரும். கூடு. காரமுங் கரமுங் கானொடு சிவணி கோத் தோன்று மெழுத்தின் சாரிகை இஃது, எழுத்துச்சாரியைகட்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்து தல் துதவிற்று. இ-ள் :--காரமும் கரமும் காஞெக சிவணி-காரமும் கரமும் கானோ பொரு த்தி, நோ தோன்றும் எழுத்தின் சாரியை-எல்லா ஆசிரியராலும் உடன்படத் தோன் றும் எழுத்துச்சாரியை யாதற்கு. 'நேரத்தோன்றும்' என்றதனான், சோத்தோன்று தன அனம், ' ஓனம், என (கூட)<noinclude></noinclude> 9g5dd2qmgj142w6j5pgsbr9louk45tj பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/59 250 453690 1437074 2022-08-06T11:41:44Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ தொல்காப்பியம் - இளம்பூரணம் கூசு. அவற்றுள் காமுங் காறு நெட்டெழுத் திலவே. இஃது, அவற்றுட் சில சாரியை சில எழுத்தோடு வாரா என எய்தியது விலக் குதல் துதவிற்று. இ-ள் :--அவற்றுள் கரமும் காலும் நெட்டெழுத்து இல-மேற் சொல்லப்பட்ட வற்றுள் சரமும் கானும் நெட்டெழுத்திற்கு இல. சாரம் நெட்டெழுத்திற்கு உண்டு என்றவாறு. ஆகாரம், ஈகாரம் என வரும். () கா. வரன்முறை மூன்றுக் குற்றெழுத் தடைய, இது, நெட்டெழுத்திற்குச் சில சாரியை விலக்கினமையின் குற்றெழுத்திற்கும் சில விலக்குவதுண்டுகொல் என்னும் ஐயம் தீர்த்தல் நதலிற்று, இ-ள் :--ரல் முறை மூன்றும் குற்றெழுத்து உடைய-வ: காற்று முறைமை யையுடைய மூன்று சாரியையும் குற்றெழுத்து உடைய, அகாரம், அகரம், அஃகான் என உரும். வன்முறை' என்றதனான், அஃகான் என்புழி ஆய்த ஃக்கு முடியுமென்பது கொச்சு. | க.. ஐகார ஒளகாரம் கானொடும் தோன்றும், இஃது, அவற்றுள் கான் என்பதற்கு ஓர் புறாடை உணர்த்துதல் முதலிற்று. இ-ன் :---ஐகாரம் ஔகாரம் கானொடும் தோன்றும் நெட்டெழுத்துக்களில் ஐகாரமும் ஒளகா மும் முன் விலக்கப்பட்ட கானொடும் தோன்றும். கசான், ஔகான் என உரும். கூக, புள்ளி கீற்றுமு னுயிர் தனித் தீயலாது மெய்யொடுஞ் சியது மவ்வியல் கெடுத்தே. இஃது, பீர்முதல் மொழி புன்-எயிற்றுமுன் வருகாற் பிறப்பதோர் கருளி உறுதல் ; லிந்து. இ-ள் :--புள் ஈற்றமுன் உயிர் தனித்து கடலா புள்பற்றுச்சொல்முன் உயிர் தனித்து ஈடவாது, மெய்யொடு சிவனும் அ இயல் கெடுத்து அப்புள் ரியோக உடும் தான் தனிநின்ற அவலியல்பினைக் கெடுத்து. உ-ம். ஆல் + அடை, ஆலடை எனவரும். ஒன்றிள முடித்தல்'" என்பதனால், இயல்பல்லா த புள்ளிமுன் உயிர்வர்தாலும் இங்கிதி கொள்க. அதனை எனவும், சாரி எனவும் வரும். புள்ளியித்துமுன்னும் என, தொகுத்துசின்ற உம்மையை விரித்தனானே கும் வியாகரத்தின் முன்னும் இவ்விதி கொள்க. சாகரிது எனவரும். மி, மெய்புயிர் நீர்பிற் நன்றுரு வாகும், al:'பார்மேட் உயிர்மெய் உயிர்சிக்கியவழிப் பலேதோர் வீதிகூறுதல்<noinclude></noinclude> ip5h3fe43mobf766idia0d5xjd9pdy7 பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/60 250 453691 1437075 2022-08-06T11:42:26Z Neyakkoo 7836 வருடல் proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________ மக்க , எழுத்ததிகாரம் - புணரியல் இ-ள்---மெய் உயிர் ரீங்கின் தன் உரு அரும் மெய் தன்னொரு படிய உயிர் புணர்ச்சியிடத்து நீயேகழித் தன்புள்ளி வடிவு பெறும், உ-ம். அதனை, அதன் + ஐ எனவரும், (கா) சக. எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே உடம்படு மெய்சி னுருபுகொளல் வரையார். இஃது, உயிர் உயிர் முதன் மொழியொடு புணரும்வழி கெழ்வதேரர் உருவி சுறுதல் நுதலிற்று, இ-ள் :- எல்லா மொழிக்கும் மூவகைப்பட்ட மொழிக்கும், உயிர் வரு வழிஉயிர் முதன் மொழி வரும் இடத்து, உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார். இடை உடம்படுமெய் வடிவு சோடலை நீக்கார். உ-ம், புளியங்கோடு, எருவங்குழி, விளவத்துக்கொட்கும் எனவரும். "உலரயிற்கோடல்' என்பதனால், உடம்படுமெய்யாவன யகரமும் வகரமும் எனக்கொள்க. இகாவீறும் ஈகாரவீறும் ஐகாரவீறும் யகரவுடம்படுமெய் கொள் உன; அல்லனவெல்லாம் வகாமெய்கொள் வன. “ஒன்றெனமுடித்தல்' என்பதனான், விகாரப்பட்ட மொழிக்கண்ணும் உடம்படுமெய் கொள்க. மரவடி, ஆயிருதிணை என உரும், வரையார்' என்றதஞல், உடம்படுமெய்சோடல் ஒருதலை அன்றென்பது கொன்றப்படும். கிளி அரிது, மூங்கா இல்லை என வரும். ச... எழுத்தோ ரன்ன பொருடெரி புணர்ச்சி இசையிற் றிரிதனிலை இய பண்பே . இஃதி, எழுத்துக்கள் ஒன்ற பலவாதல் கூறுதல் நுதலிற்று. இ-ள் :- எழுத்து ஓர் அன்ன பொருள் தெரி புணர்ச்சி-எழுத்து ஒரு தன்மை யான பொருள் விளங்கிநிற்கும் புணர்மொழிகள், இசையின் திரிதல் நிலை இய பண்புஇசைவேற்றுமையால் புணர்ச்சிவேறுபடுதல் நிலைபெற்ற பண்பு. உ-ம். செம்பொன்பதின்றொடி, குன்றேறாமா என வரும். கசக., அவைதாம் முன்னப் பொருள புணர்ச்சி வாயின் இன்ன வென்னு மெழுத்துக்கடனிலவே, இது, மேலதற்கு ஓர் புறாடை கூறுதல் நுதலிற்று. இ-ன் .---அவைதாம்.மேற்சொல்லிய புணர்மொழிகள் தாம், முன்னப் பொருள். , முன்னத்தினான் உணரும் பொருண்மையையுடைய; புணர்ச்சிவாவின் இன்ன என் ஓம் எழுத்து கடன் இல-அவை புணர்ச்சியிடத்து இத்தன்மைய வென்னும் எழு த முறைமையை உடையவல்ல. செம்பொன்பதின்நொடி என்றவழி, பொன்ஞராய்சிசி' உள்வழிப் பொன்னெ காக, செம்பாராய்ச்சி உவவழிச்செம்பெனவும் குறிப்பால் உணரப்பட்டது. மற்று, இரன்மேல் இசையிற் றிரிதல் நிலைதல்" என அறியுமாறு கூறினானன்றேலெனின், ஓல என் றமையான் அஃது ஒலியெழுத்திற்கெனவும், 'இன்னவென்பெழுத்தும் சடனிய என்றதனான் இச வரிவடிவிற்கெனவும் கொள், (2) கான்காவது புணரியன் முற்றிற்று.<noinclude></noinclude> 6f8hqtc0gw7k8kadt8sk02ub81wedym