விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.39.0-wmf.21
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Gadget
Gadget talk
Gadget definition
Gadget definition talk
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/141
250
375445
1433621
836102
2022-07-20T16:44:19Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 131</noinclude>முல்லைப் பதிப்பகத்தைத் தொடங்கி, பாவேந்த நூல்களை நான் வெளியிட்டுக் கொண்டிருந்த காலத்தில் 'இன்ப மாளிகை'யில் பாவேந்தரும் வை.சு.வும் உரையாடிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது, 'தமிழில் பிறமொழிக் கலப்பு ஏன்?' என்ற பிரச்னையை வை. சு. எழுப்பினார்கள்.
அன்று இரவே, 'தமிழ் இயக்கம்' என்ற பாடல்களை
இயற்றினார் பாவேந்தர்.
மறுநாள் காலையில், என்னிடம் கொடுத்து, "உடனே
இதை அச்சிட்டு வெளியிடு" என்றார் பாவேந்தர்
(அப்படியே வெளியிட்டேன்.)
அப்பொழுது அருகில் இருந்த வை.சு. அவர்கள்,
"எதையும் அழகாக அச்சிட்டு, வெளிப்படுத்துவதில்
முத்தையாவுக்குத் தணியாத ஆர்வம் உண்டு" என்று
கூறினார்கள்.
அவர்கள் அன்று கூறியது, தீர்க்கதரிசியின் சொல்லாகவே
அமைந்தது.
(இன்று வரை 16 பக்கங்களிலிருந்து 1000 பக்கங்கள்
வரை 370 அச்சிட்டிருக்கிறேனே!)
ஒரு சமயம், "தம்பி! உன் தேதி இல்லாக் கடிதம் வந்தது" என்று வை.சு. எழுதி இருந்தார். (கடிதத்தில் தேதி குறிப்பிடாததைச் சுட்டிக் காட்டினார்கள்.)
இன்றும் கடிதத்தில் தேதி குறிப்பிடும் போது எனக்கு
வை.சு.வின் நினைவு எழும்.
வை.சு. அவர்கள் சத்திய சீலர் என்பதற்கு ஓர் எடுத்துக்
காட்டு.<noinclude></noinclude>
55v9zvhg8nvblj052l5vb8i1h2j36xl
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/142
250
375446
1433620
836104
2022-07-20T16:42:21Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />132 சீர்திருத்தச் செம்மல்</noinclude>தேவகோட்டை வழக்கறிஞர் இல்லத்துக்கு வை.சு.
உடன் நானும் சென்றேன்.
"நீதி மன்றத்தில் இன்றைய விசாரணையில் வை.சு!
நீங்கள்... இவ்வாறு சொல்ல வேண்டும்" என்றார்
வழக்கறிஞர்.
"உண்மைக்குப் புறம்பாக ஒரு வார்த்தையும் கூற
மாட்டேன்" என்றார் வை.சு.
பெருந்தொகைக்கான வழக்கு அது! எதிரிக்கு வசதியும்
செல்வாக்கும் மிகுதி.
சூழ்ச்சியினால், பெருந்தொகையை வை.சு. இழக்க
வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டதை
நினைத்துக் கண்ணீர் வடித்ததைத் தவிர வேறு வழி?
ஆனால், மன்னரான வை.சு. கலங்கவில்லை. நிலை குலைய
வில்லை!
வை.சு. அவர்கள் தம் வாழ்க்கைச் சரிதத்தை எழுதி யிருந்தால், எவ்வளவோ உண்மைகள் தெரிய வந்திருக்குமே!
நீங்கள் சொல்லுங்கள் நான் எழுதுகிறேன் என்று பல
முறை வற்புறுத்திக் கொண்டிருந்தேன். அது பயனற்றுப்
போயிற்று.
வை.சு. அவர்கள் தந்தை என்றால், மஞ்சுளா அம்மையார் தாயாக விளங்கினார்.
வை.சு.வின் உள்ளத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்
தார்கள்!
இன்முகம் காட்டி வரவேற்று உபசரித்ததைத் தவிர,
எவரிடமும் எந்த வேளையிலும்,<noinclude></noinclude>
iratuu2x02fphocsk4uksyujl6se26o
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/143
250
375447
1433619
836106
2022-07-20T16:40:52Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 133</noinclude>கடுகடுப்பையோ முகச் சுளிப்பையோ காட்டிய தில்லையே!
இப்பொழுது வெளிவரும் இந்த நினைவுமலர் சில
ஆண்டுகளுக்கு முன்பே, வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
ஏனெனில், வை.சு. அவர்களுடன் நெருங்கிப் பழகிய சில பதிப்பாளத் தோழர்கள் முயற்சி எடுக்காமையால், வை.சு. அவர்களின் திருமகள் பார்வதி (ஆச்சி) அவர்களின் பெருமுயற்சியால் இப்போது வெளி வருகின்றது.
அந்தத் தோழர்களுக்கு முன்பே நான் வை.சு.வுடன் பழகியவன். பதிப்பாளனாகவும் ஓய்வு பெற்று
ஆசிரியனாகக் காலம் கழிக்கின்றேன்.
என்னால் இயலாமல் போனதற்கு இதுவே காரணம் என்பதை இந்தச் சமயத்தில் வருத்தத்தோடு கூறாமல்
இருக்க முடியவில்லை.<noinclude></noinclude>
c99lpjcgyq0bnpxlm7c3axxdql42zn5
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/144
250
375448
1433618
836108
2022-07-20T16:39:23Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>14
எங்கள் வழிகாட்டி
சோ. இராசா சண்முகம்
(சண்முகனாரின் மகன் வழிப் பேரன் இராசா சண்முகம், தம் பாட்டனாரின் பண்பாடுகளைச் சுட்டிக் காட்டி, ஐயா பேரப் பிள்ளை களை எவ்வாறு வழி நடத்திச் சென்றார் என்பதையும் உளமுருகி எடுத்துக் காட்டுகிறார்.)
தலைவர்கள் தொடர்பு
'தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த' அண்ணல் காந்தியடிகள்.
தியாக வேள்வியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட - இரும்பு மனிதராகத் திகழ்ந்த வ.வே. சுப்பிரமணிய ஐயர்,
எத்துணைத் தொல்லைகள் துன்பங்கள் தொடரினும் கொஞ்சமும் அஞ்சாது, தேசபக்தியை நாடு முழுதும் கொழுந்து விட்டெரியச் செய்த தீர்க்கதரிசி மகாகவி பாரதி.
'நாயினுங் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார் நலிவதை நான் கண்டு ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி<noinclude></noinclude>
fv15yc59aaivvmirphpuvlonnkuje9j
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/145
250
375449
1433617
836110
2022-07-20T16:38:52Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />135</noinclude>உழைத்திட நான் தவறேன்' என முழங்கிய பாவேந்தர் பாரதிதாசன்.
சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் தலைசிறந்த தலைவரும் சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவரும் ஆன பெரியார் ஈ.வே.ரா., போன்ற பெருமக்களை யெல்லாம் வரவேற்று, அவர்களுடைய கொள்கைகளையும் சான்றாண் மையையும் ஏற்று அவர்களுடைய அன்பையும் நட்பையும் பெற்று விளங்கியவர் வை.சு.ச. அவர்கள்.
காங்கிரசுப் பேரியக்கத்திலும் பின்னர்ப் பொது வுடைமைக் கட்சியிலும் சேர்ந்து, பொது வாழ்வில் தம்மை மெழுகாக்கிக் கொண்ட ப. ஜீவானந்தம் அவர்கள் இறுதிக் காலம் வரை வை. சு.சண்முகனாரின் நட்பில் திளைத்தார். பழந்தமிழ் இலக்கிய நூல் களைக் கட்சிக்காக ஜீவா அவர் களிடம் வை.சு. வழங்கினார்.
செக்கிழுத்த செம்மல் சிதம்பரனாரின் வரலாற்றை எழுதிய தேச பக்தரும் 'லோகோபகாரி' பத்திரிகையின் ஆசிரியருமான பரலி. சு. நெல்லையப்பர், வை.சு.வின் நெருங்கிய நண்பர்.
தமிழ்ப்பணி
'பைந்தமிழ்த் தேர்ப்பாகன்' பாரதியின் பாடல் உரிமைகளை வாங்கியிருந்த தொழிலதிபர் ஏவி. மெய்யப்பனாரிடம், 'பாரதியின் பாடல்களைப் பொதுச் சொத்தாக்க வேண்டு மென்று கேட்டுக் கொண்டதை மதித்துப் பாரதியார் பாடல் களை நாட்டின் பொதுச் சொத்தாக்கிப் புகழ் பெற்றார் மெய்யப்பனார்.'
"தமிழகத்துக்கு நற்கால உதயம்! தமிழ் நாட்டில் தமிழிசையை எதிர்ப்போரும் உண்டா?" என்ற<noinclude></noinclude>
06z59es59lmr5fauuwys8m8te9zo0ad
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/146
250
375450
1433616
836112
2022-07-20T16:34:49Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />136 சீர்திருத்தச் செம்மல்</noinclude>தலைப்பில் அக்காலத்தில் தமிழிசைக் காகத் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டார்கள்.
"தமிழ்நாடு வானொலி கேட்போர் கழகம்" (Tamil Nadu Radio Listeners Association) என்ற அமைப்பினை உருவாக்கித் திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில் தமிழ்ப் பாடல்கள் ஒலிக்க வேண்டும் என்று கடிதங்களை எழுதியனுப்பிய வண்ணம் கிளர்ச்சி செய்தார்கள்.
பொதுப் பணிகள்
வை.சு.ச. அவர்கள் இராமநாதபுர மாவட்டக் காங்கிரசின் தலவராகவும், அனைத்திந்தியக் காங்கிரசுக் கமிட்டியின் உறுப்பின ராகவும், சுயமரியாதை இயக்கத்தின் பொருளாள ராகவும் இருந்து பொதுப் பணியாற்றினார்கள்.
ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க அயல் நாட்டுத் துணிகளை ஒழிக்கும் திட்டத்தின் கீழ், தம் இல்லத்தி லிருந்த ஏராளமான துணிகளை எடுத்து வந்து, காரைக்குடி மகார் நோன்புத்திடலில் (காந்தி சதுக்கம்) எரித்து அரசியல் விழிப்பினை அன்று ஏற்படுத்தினார்கள்.
வை.சு.ச. தம் வீட்டு இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் ‘சமபந்தி போஜனம்’ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி வந்தார்கள். அக்காலத்தில் இது புரட்சியாக விளங்கியது.
காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்த வர்களில் வை.சு.ச. வும் ஒருவராவார்.<noinclude></noinclude>
3epkk2qgkj7rt829vmxg60fguws125d
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/147
250
375451
1433615
836114
2022-07-20T16:32:52Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 137</noinclude>நகரத்தார் சமுதாயத் தொண்டு
சண்முகனார், மாறிவரும் உலகச் சூழ்நிலையை அன்றே உணர்ந்து, நகரத்தார் சமூகத்தின் முன்னேற்றத்துக்கான தடை களை ஆராய்ந்து, எதிர்ப்புகளுக்கும் ஏச்சுகளுக்கும் கேலி களுக்கும் மத்தியில். சமூகப் புரட்சிக்கு முன்னேற்றத்துக்கு - மனமாற்றத்துக்கு வித்திட்ட நல்லவர்; வைர நெஞ்சம் படைத்தவர்.
எதிர்காலத்தில் சமூகம் சந்திக்கப்போகும் தீமைகளை - சோதனை களை - பிரச்சனைகளை உணர்ந்து, அவற்றை வருமுன் காக்கச் சண்முகனார் போன்ற பெரு மக்கள் உழைத்துங் கூட அவர்தம் முயற்சி முழு வெற்றி பெறவில்லையே!
நகரத்தார் சமூகப் பெண்களின் எண்ணிக்கை அந்நாளிலேயே வளர்ந்து வருவது கண்டு, திருமணம் ஆகாத பெண்களின் நிலை பற்றிச் சண்முகனார் காணும் பிரமுகர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லி வருந்தினார்கள். இதற்கு மன மாற்றமும் கூட்டு முயற்சியும் பலன் தரும் என்று நம்பினார்கள். இதன் பொருட்டுத் தொண் ணூற்றாறு ஊர் நகரத்தார் கூட்டத்தைக் கோவிலூரில் கூட்டி, ஒற்றுமையை வலியுறுத்தினார்கள்.
லேவாதேவித் தொழில் எப்படியிருந்தது? எப்படியிருக்கிறது? எப்படியிருக்க வேண்டும்? என்று, கூட்டு முயற்சியை வலி யுறுத்திப் பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சிறு நூலை வை.சு. அவர்கள் எழுதினார்கள்.
உயரிய குணங்கள்
“பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு”<noinclude></noinclude>
mdol2pg3lloyxsnmrys4884tn5hg8xf
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/148
250
375452
1433613
836116
2022-07-20T16:09:35Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />138 சீர்திருத்தச் செம்மல்</noinclude>என்ற வள்ளுவப் பெருந்தகையின் கொள்கையை இறுதி வரை இலட்சியமாகக் கொண்டு ஒழுகி வந்தார்கள்.
வை.சு. அவர்கள் நொடித்துத் துன்புற்றிருந்த காலத்தில் ஒரு பிரமுகர் வந்திருந்தார். வந்தவர், ‘உங்களை வெளியே பார்க்க முடிய
வில்லையே?’ என்று கேட்டார். ‘இது உற்சவ விக்கிரக மல்ல; மூலவிக்
கிரகம்; வெளியே வராது’ என்று சுவைபட விடை தந்தார் சண்முகனார்.
“நன்றே நினைமின்; நமனில்லை” என்ற திருமூலர் வாக்கில் ஒன்றிய ஐயா அவர்களின் பேச்சில் கனிவிருக்கும்; உறுதியிருக்கும்; கம்பீரமும் கலந்திருக்கும்; தோற்றத்தில் எளிமையிருக்கும்; ஏற்றமும் இணைந்திருக்கும். எண்ணத்தில் துணி விருக்கும்; தூய்மை யுடன் தெளிவும் தொடர்ந்திருக்கும்.
தெய்வ பக்தி குறைந்தாலும் மறைந்தாலும் நாடு சிறக்காது. எத்தனை வளம் பெருகினாலும் அது நிலைக்காது; நிரக்காது. போலிப் பக்தியினால்தான் உண்மை பக்தி கேலிக்கு இடமாக அமைந்தது என்ற உறுதியான கருத்து வை.சு.வுக்கு உண்டு.
துன்பங்கள் அணிவகுத்துச் சூழ்ந்த போதும், சுடச்சுட ஒளிரும் பொன் போலத் தெய்வ நம்பிக்கையும் தன்னம்பிக் கையும் குறை யாமல், நெஞ்சுறுதியுடன் வாழ்ந்த பெரு மகனாரின் எண்ணமும் வாழ்வும் நமக்கு வழிகாட்டுமாக.
இனி, ஐயா அவர்கள் என்னை ஆளாக்கிய முறைப் பற்றி இரண்டொன்று சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
நாங்கள் குழந்தைகளாக இருந்தபொழுது ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்<noinclude></noinclude>
n41emns1anhuazm4adxj4734o0c31qo
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/149
250
375453
1433612
836119
2022-07-20T16:07:39Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>வை. சு. சண்முகனார் 139
குள் தகராறு வந்து விட்டது. யாரோ, எப்போதோ சொன்னது சடாரென்று நினைவுக்கு வர, நல்லதுக்குக் காலமில்லை என்று சொல்லிவிட்டேன்.
அந்த இடத்திற்குத் தற்செயலாக வந்த ஐயா, ‘நல்லதுக்குக் காலமில்லையா? யார் சொன்னது?’ என்று கேட்டுவிட்டு நடந்ததை விசாரித்தார். உடனே ‘நல்லோர் பெரியோர் என்றெண்ணும் காலம் வந்ததே - கெட்ட -நயவஞ்சகக் காரருக்கு நாசம் வந்ததே’ என்ற பாரதியின் பாடல் வரிகளை, என்னைப் பல தடவை (Imposition) எழுதச் செய்தார்கள்.
ஐயா அவர்கள், இன்னல்களை இன்முகத்துடன் ஏற்றிருந்த போது, என்னிடம் ஆழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, ‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்ற குறள் பற்றிப் பேச்சு எழுந்தது.
நான் டாக்டர் மு.வ. எழுதிய ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ என்ற நூலிற் படித்த ‘பொருளில்லார் இவ்வுலகில் இல்லை’ என்பதைப் பற்றி எடுத்துச் சொன்னேன்.அடடா! அப்படி ஒரு நிலை நாட்டில் ஏற்பட்டு விட்டால் எப்படியிருக்கும்!’ என்று மிக வியந்து மகிழ்ந்தார்கள் ஐயா.
குழந்தைகளாகிய எங்களைப் பாசத்துடனும் அதே நேரத்தில் கண்டிப்புடனும் வளர்த்தார்கள். பாரதியார், பாரதிதாசனார் பாடல்களை நாள் தோறும் எங்களைப் பாடச் சொல்வார்கள்.
1947 இல் கானாடுகாத்தான் கொரட்டியார் ஊருணி அருகில் அமைந்திருந்த பள்ளியில் முதல் சுதந்திர தின<noinclude></noinclude>
rdbz26wbbi1sroqjknnbzlcwcw0ayum
1433614
1433612
2022-07-20T16:10:08Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 139</noinclude>குள் தகராறு வந்து விட்டது. யாரோ, எப்போதோ சொன்னது சடாரென்று நினைவுக்கு வர, நல்லதுக்குக் காலமில்லை என்று சொல்லிவிட்டேன்.
அந்த இடத்திற்குத் தற்செயலாக வந்த ஐயா, ‘நல்லதுக்குக் காலமில்லையா? யார் சொன்னது?’ என்று கேட்டுவிட்டு நடந்ததை விசாரித்தார். உடனே ‘நல்லோர் பெரியோர் என்றெண்ணும் காலம் வந்ததே - கெட்ட -நயவஞ்சகக் காரருக்கு நாசம் வந்ததே’ என்ற பாரதியின் பாடல் வரிகளை, என்னைப் பல தடவை (Imposition) எழுதச் செய்தார்கள்.
ஐயா அவர்கள், இன்னல்களை இன்முகத்துடன் ஏற்றிருந்த போது, என்னிடம் ஆழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, ‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்ற குறள் பற்றிப் பேச்சு எழுந்தது.
நான் டாக்டர் மு.வ. எழுதிய ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ என்ற நூலிற் படித்த ‘பொருளில்லார் இவ்வுலகில் இல்லை’ என்பதைப் பற்றி எடுத்துச் சொன்னேன்.அடடா! அப்படி ஒரு நிலை நாட்டில் ஏற்பட்டு விட்டால் எப்படியிருக்கும்!’ என்று மிக வியந்து மகிழ்ந்தார்கள் ஐயா.
குழந்தைகளாகிய எங்களைப் பாசத்துடனும் அதே நேரத்தில் கண்டிப்புடனும் வளர்த்தார்கள். பாரதியார், பாரதிதாசனார் பாடல்களை நாள் தோறும் எங்களைப் பாடச் சொல்வார்கள்.
1947 இல் கானாடுகாத்தான் கொரட்டியார் ஊருணி அருகில் அமைந்திருந்த பள்ளியில் முதல் சுதந்திர தின<noinclude></noinclude>
m9v4g80n04bhvupf4os113o23fdinz7
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/150
250
375454
1433611
836123
2022-07-20T16:05:56Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />140</noinclude>விழா நடைபெற்றது. சிறுவர் சிறுமியர்க்கான பாரதி பாட்டுப் போட்டி, விளையாட்டுப் போட்டி முதலியவை நடைபெற்றன.
நானும் கூட்டத்தில் இருந்தேன். நான் அஞ்சிக் கொண்டே அமர்ந்திருந்தேன். நமக்கோ குரல் வளம் இல்லை; ஐயா நம்மைப் பாடச் சொல்லாமல் விடப் போவதும் இல்லை என்று தயக்கத்துடன் ஒதுங்கியிருந்தேன். நான் எதிர் பார்த்த படியே நடந்து விட்டது.
விடுதலை! விடுதலை!! விடுதலை!!!
என்ற முழுப் பாடலையும் (எனக்குரிய குரல் வளத்துடன்) பாடினேன். வீட்டுக்குத் திரும்பி வந்த ஐயாவுக்கோ பெரு மகிழ்ச்சி.
“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே”
“வெற்றி எட்டுத்திக்கும் எட்டக்கொட்டுமுரசே”
போன்ற பாரதி பாடல்களை ஊர்ப் பிள்ளைகள் பலர் பாடினாலும் ‘விடுதலைப்’ பாட்டைப் பொருத்தமான நேரத்தில் இவன்தான் பாடினான் என்று என்னைப் பாராட்டிச் சொன்னார்கள்.<noinclude></noinclude>
ajxmlayzk585wbw3adspihmvvici2cd
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/151
250
375455
1433610
836124
2022-07-20T16:02:53Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>15
"வைராக்கியம் படைத்த வை.சு. சண்முகனார்"
எஸ்பி. முத்துராமன்
(திரைப்பட இயக்குநர் சுப. முத்துராமன், தம் மனைவி கமலாவின் பாட்டனார் பற்றிப் படம் பிடித்துக் காட்டுகிறார்.)
அய்யா வை. சு. சண்முகம் அவர்களைப் பற்றி நினைவு நூல் வெளியிடுவதறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
அவர்களின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாகும். இக்கால இளைஞர்கள் அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டால் ஒரு தைரியமே வரும்.
"இன்ப மாளிகை" என்று தன் வீட்டிற்குப் பெயர் வைத் தார்கள். அங்கு வராத தலைவர்களே இல்லை. மகாத்மா காந்தி யார், பாரதியார், பாரதிதாசன், வ.வே. சு. ஐயர் அனைவரும் இன்ப மாளிகையின் விருந்தினர்கள். வழக்கு ஒன்றின் காரண மாக அந்த மாளிகையை விட்டு வெளியே சென்று, ஒரு சிறிய வீட்டில் வாழ நேர்ந்தபோதும் இன்பமாகவே வாழ்ந்தார்கள்.
அவர்களின் மகனார் சோலை அவர்கள் (என் மாமனார்) மூன்று தலைமுறை வழக்கை எடுத்துக்<noinclude></noinclude>
bnaj4w42so0hmu1rq7qksxvjgvztdd0
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/152
250
375456
1433609
836129
2022-07-20T16:02:00Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />142 சீர்திருத்தச் செம்மல்</noinclude>கொண்டு, சிங்கப்பூர், மலேசியாவில் தாமே நீதிமன்றங்களில் வாதாடினார்கள். அவரின் வாதத்திறமையை வழக்கறிஞர்களே பாராட்டினார்கள். வேலைக்கும் போய்க் கொண்டு இதனைச் செய்தார்கள். அவர்கள் திறமை - கடுமையான உழைப்பு - தைரியம் வேறு யாருக்கும் வராது. அவர்கள் பட்ட கஷ்டங்கள் பலனாகும் போது அவர்கள் இல்லை.
கமலாவை நான் திருமணம் செய்து கொண்ட அன்று என்னிடம் கமலாவை நன்கு வைத்துக் கொள்ள வேண்டு மென்று காரண காரியங்களோடு உருக்கமாகக் கூறினார்கள். எங்களின் நல்ல இல்லற வாழ்க்கைக்கு அந்த அறிவுரைகளே அஸ்திவாரமாக அமைந்தன. அய்யாவின் வளர்ப்பு, அம்மானைச் சிறந்த மனிதனாக ஆக்கியது.
அவர்களின் மகள் பார்வதி ஆச்சி அவர்களின் திருமணத்தை அந்தக் காலத்திலேயே பி.டி. ராசன் அவர்கள் தலைமையில் சீர்திருத்த முறையில் நடத்தினார்கள். திருமதி. பார்வதி நடராசன் அவர்கள் எதையும் சிந்தித்துச் செயலாற்றம் தன்மை கொண்டவர்கள். என் மைத்துனர் ராஜா. சண்முகம் அவர்கள் சிங்கப்பூர், மலேசியா சென்றபோது அவர்களுக்குத் துணையாக இருந்து, வந்த கஷ்டங் களையெல்லாம் சமாளித்து இருவரும் வெற்றி பெற்றார்கள். இந்த மன தைரியத்துக் கெல்லாம் அய்யாவின் துணிச்சலான வளர்ப்பு முறையே காரணம்.
எங்கள் வீட்டில் சில நாள்கள் வந்து தங்கியிருந்தார்கள். அதுவும் நாங்கள் திருமணம் செய்து கொண்ட புதிதில் அவர்களின் அறிவுரை களும் வாழ்க்கை முறைகளும் எங்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்தன.<noinclude></noinclude>
jp19dvil95b7qwlnroxouoj4dn9soab
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/153
250
375457
1433608
836131
2022-07-20T15:59:34Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 143</noinclude>கடிதங்கள் எழுதுவது - அதற்கு நகல் எடுத்துக் கொள்வது - பதில் கடிதங்களைப் பதிவு செய்து வைப்பது - அன்றைய செலவுகளை அன்றே கணக்கில் எழுதி இருப்புப் பார்ப்பது - எதையும் குறிப்பிட்ட காலத்தில் செய்வது - உணவில் கட்டுப்பாடு - உறக்கத்தில் ஒழுங்கு - பிள்ளைகளிடம் அன்பு, அதே நேரத்தில் கண்டிப்பு - எதையும் துணிவோடு சொல்வது, செய்வது இவை போன்ற பல - அவர்களின் கடமைகளாகும்.
செட்டிநாட்டில் சீர்திருத்தத்துக்கு வித்திட்டவர்களின் வரிசையில் இவர்களுக்கு முதலிடம். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் வைராக்கிய மாக எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுவார்கள்.
காந்தியார் நூற்ற நூலால் செய்த துண்டை அன்றே ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி தேசப்பற்றைக் காட்டிக் கொண்டார்கள்.
பாரதியார் படங்களை இன்று பார்க்கிறோமே அந்தப் படங்கள் அய்யா அவர்கள் முயற்சியில் எடுக்கப் பட்டவை. பாரதியார் அய்யாவைப் பற்றிப் பாடியபாடல் குறிப்பிடத் தக்கது.
அய்யாவின் அன்பை, விருந்தோம்பலைப் பெறாத தமிழறிஞர்கள் மிகக் குறைவு.அய்யாவின் வீட்டில் நான் மாப்பிள்ளையாக ஆனதற்குப் பெருமைப்படுகிறேன். அவரின் தொண்டுகள் இந்த நூல் மூலம் தமிழகத்திற்குத் தெரியட்டும். இதனை ஆக்குவதில் முனைந் துள்ள உயர்திரு கவிஞர். முடியரசனார் அவர்களுக்கும், திருமதி. பார்வதி ஆச்சி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துப் பாராட்டுகிறேன்.<noinclude></noinclude>
6r44exno970fnb50tmelj5yvgfs3aqe
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/154
250
375458
1433607
836133
2022-07-20T15:23:02Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>16
"எங்கள் குல விளக்கு"
கமலா முத்துராமன்
(சண்முகனார்க்கு மகன் வழிப் பேர்த்தி கமலா. தாமறிந்தவற்றைச் சுருக்கமாக நமக்குத் தருகிறார்.)
ஐயா வை.சு. சண்முகம் அவர்கள் அக்காலத்தில் இராமநாத புர மாவட்டக் காங்கிரசுத் தலைவராகவும் அனைத்து இந்திய காங்கிரசுக் கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்து தேசத் தொண்டு செய்தார்கள். யோகி சுத்தானந்த பாரதியாரின் வளர்ச்சிக்குத் துணையாக இருந்தார்கள்.
பிற்காலத்தில் தாவர இயலில் பேரறிஞராகத் திகழ்ந்த மயூர நாதன் அவர்கள் படிப்பதற்கு வை.சு. உதவி செய்தார்கள். அந்த அறிஞர் வை.சு.விடம் கடைசிவரை மதிப்பும் நன்றியும் செலுத்தினார்கள் என்று ஐயா சொல்வார்கள்.
"நன்றே நினைமின் நமனில்லை"
என்ற திருமூலர் வாக்கை அடிக்கடி சொல்வார்கள்.
குழந்தைகளிடத்தில் ஐயா வை. சு. வுக்கு மிகவும் பாசம் உண்டு. குழந்தைகளாயினும் அதிகாலையில்<noinclude></noinclude>
7r0wihial4d0yw75ea77evw8mrg97ft
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/155
250
375459
1433606
836135
2022-07-20T15:22:00Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />145</noinclude>எழுந்திருக்க வேண்டும். நன்கு படிக்க வேண்டும். நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். தினமும் மதிய உணவுக்கு முன்பு மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாச னாரின் குறிப்பிட்ட பாடல்களை எங்களைப் பாடச் செய்வார்கள். நல்ல புத்தி மதிகளைக் குழந்தைகளாக இருந்த எங்களிடம் கனிவோடும் சில சமயம் கண்டிப்பாகவும் சொல்வார்கள்.<noinclude>சீ.__10</noinclude>
nd6tl4i3llmerso224g1jjyhsgdhgwp
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/156
250
375460
1433605
836137
2022-07-20T15:19:31Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>17
எங்களை ஆளாக்கிய ஐயா
எஸ். சாந்தா சோமசுந்தரம் B.Sc.,
(மகன் வழிப் பேர்த்தியாகிய சாந்தா, தம் ஐயாவின் குழந்தை வளர்ப்பு முறைகளை நினைவு கூர்கிறார்.)
எங்கள் ஐயா என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது அறிவுரை களும் அடுத்துப் பழமொழிகளும் தான். எங்கள் சிறுவயதில், அன்று சொன்னவை மனத்தில் பசுமரத்தாணி போல் பதிந்து, இன்று அன்றாட வாழ்க்கைக்கு உதவுகின்றன. அன்பு காட்டுகையில் அன்பாகக் கூறி, கண்டிக்கையில் கோபமாகக் கூறித் திருத்துவதற்கு அன்று நமக்கு இருந்த ஐயா, இன்று நம் பிள்ளைகட்கு இல்லையே என்று தோன்று
கின்றது. அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை. கேட்பதற்கு அப்பொழுது நேரம், பொறுமை எல்லாம் இருந்தன. ஆனால் இப்போதோ எல்லாமே இயந்திர வாழ்க்கையாகி விட்ட நிலையில், தானாகத் தெரிந்து அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.
பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து விளையாடும் பொழுது சிறு சச்சரவு வந்தால், உடனே ஒரு பாரதியார் பாட்டு ‘ஓடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை<noinclude></noinclude>
hhdpuxvdfneimemdtynrvpyl50upfzl
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/157
250
375461
1433603
836139
2022-07-20T15:18:37Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />147</noinclude>வையாதே பாப்பா’... என்பார்கள். மாலை நேரத்தில், விளக்குப் போடத் துணை தேடுகையில், ‘அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்ப தில்லையே’ என்ற பாரதியார் பாட்டைப் பாடிக் கொண்டே போ எனக் கூறுவார்கள். விளையாடுகையில் சிறு பிள்ளை யானால், சிறு பிள்ளைக்கு விட்டுக் கொடு என்றும், பெரிய பிள்ளைகட்குத் திருப்பி பதில் சொன்னால் அவர்கள் சொல்வதனால், உடம்பில் காய்த்துத் தொங்குகிறதா என்றும் கேட்பார்கள். சக வயதுப் பிள்ளையானால், “பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்” என்று கூறுவார்கள்.
ஒரு முறை பாரதிதாசன் ஐயா அவர்கள் வீட்டுக்கு வந்த போது, வழக்கம் போல் “வாருங்கள்” என்று கூறி விட்டேன். உடனே, ஐயாகோபப்பட்டு, “வரவேற்க நாங்கள் இருக்கி றோம்; நீ வணக்கம் என்று கூற வேண்டும்” என்றார்கள்.
சாப்பிடுகையில் எதையுமே வீணாக்கக் கூடாது என்பார்கள். சிறு வயதில் கீரையைப் பார்த்தால், விளக்கெண்ணெய் சாப்பிடப் போவதைப் போல் சங்கடமாக இருக்கும். ஐயாவை ஏமாற்றி விட்டு, சாப்பிடாமல் தப்பிக்கவே முடியாது.
ஐயா அவர்களின் கல்வி ஆர்வத்தினால்தான் வசதியில்லாத நிலையிலும் நாங்கள் படிக்க முடிந்தது. அதே சமயம் நாங்கள் தற்பெருமை கொள்ளுதல் கூடாது என்பதற்காகக் “கற்றது கைம் மண்ணளவு” என்பது ஒளவையார் வாக்கு என்பார்கள். பெண் குழந்தைக்குப் பொறுமை மிக வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்கள்.
யாராவது, நம் மனம் வருந்தும்படி செய்து விட்டால் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. நாமும் திருப்பிச்<noinclude></noinclude>
r3vsoc7cfcrvsws11pwjp41fllz612o
1433604
1433603
2022-07-20T15:18:52Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />147</noinclude>வையாதே பாப்பா’... என்பார்கள். மாலை நேரத்தில், விளக்குப் போடத் துணை தேடுகையில், ‘அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்ப தில்லையே’ என்ற பாரதியார் பாட்டைப் பாடிக் கொண்டே போ எனக் கூறுவார்கள். விளையாடுகையில் சிறு பிள்ளை யானால், சிறு பிள்ளைக்கு விட்டுக் கொடு என்றும், பெரிய பிள்ளைகட்குத் திருப்பி பதில் சொன்னால் அவர்கள் சொல்வதனால், உடம்பில் காய்த்துத் தொங்குகிறதா என்றும் கேட்பார்கள். சக வயதுப் பிள்ளையானால், “பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்” என்று கூறுவார்கள்.
ஒரு முறை பாரதிதாசன் ஐயா அவர்கள் வீட்டுக்கு வந்த போது, வழக்கம் போல் “வாருங்கள்” என்று கூறி விட்டேன். உடனே, ஐயாகோபப்பட்டு, “வரவேற்க நாங்கள் இருக்கி றோம்; நீ வணக்கம் என்று கூற வேண்டும்” என்றார்கள்.
சாப்பிடுகையில் எதையுமே வீணாக்கக் கூடாது என்பார்கள். சிறு வயதில் கீரையைப் பார்த்தால், விளக்கெண்ணெய் சாப்பிடப் போவதைப் போல் சங்கடமாக இருக்கும். ஐயாவை ஏமாற்றி விட்டு, சாப்பிடாமல் தப்பிக்கவே முடியாது.
ஐயா அவர்களின் கல்வி ஆர்வத்தினால்தான் வசதியில்லாத நிலையிலும் நாங்கள் படிக்க முடிந்தது. அதே சமயம் நாங்கள் தற்பெருமை கொள்ளுதல் கூடாது என்பதற்காகக் “கற்றது கைம் மண்ணளவு” என்பது ஒளவையார் வாக்கு என்பார்கள். பெண் குழந்தைக்குப் பொறுமை மிக வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்கள்.
யாராவது, நம் மனம் வருந்தும்படி செய்து விட்டால் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. நாமும் திருப்பிச்<noinclude></noinclude>
6qujhmjbvpdpz3i995sokuq0c02xhbh
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/158
250
375462
1433602
836141
2022-07-20T15:16:24Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />148</noinclude>செய்தால் தான் அதன் வேதனை அவர்கட்கும் தெரியும் என்றால், உடனே ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்ற திருக்குறளை மேற்கோள் காண்பிப் பார்கள்.
எங்கள் ஐயா என்று கூறியவுடன், நினைவுக்கு வருவது அவர் களின் கம்பீரத் தோற்றமே. சோர்வின்மைக்கும், தைரியத் திற்கும், விடா முயற்சிக்கும், எடுத்துக் காட்டாக வாழ்ந்த அவர்களின் நினைவு, என்றும் எங்கள் மனத்தில் நிற்கும்.<noinclude></noinclude>
c9k8bhj8jn4s5ftyjf2j8pspvq5mw0v
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/159
250
375463
1433601
836143
2022-07-20T15:14:57Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>18
கலங்காத நெஞ்சம் கலங்கியது
சுசீலா சுப்பிரமணியம்
(மகள் வழிப் பேர்த்தியாகிய சுசீலா, சண் முகனாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளில் தாம் அறிந்தவற்றை உருக்கமுடன் கட்டுரையாக்கித் தந்துள்ளார். நம்மையும் உருக வைக்கிறார்.)
முப்பெரும் வேந்தர் காலத்திலிருந்தே மதிப்பும் பெருமையும் பெற்ற தன வணிகர் குலத்தில் செல்வச் செழிப்பு மிக்க, படிப்பாற்றல் மிக்க குடும்பத்தில் சுப்பிரமணியன் செட்டியார் அவர்கட்கும், அழகம்மை ஆச்சி அவர்கட்கும் பிறந்த ஒரே ஆண்மகன் எங்கள் ஐயா. வயி. சு. சண்முகம் செட்டியார் அவர்கள் ஆவார். எங்கள் ஐயாவைப் பற்றித் தெரிந்து கொள்ளு முன் அவர்களின வம்சா வழியை நான் தெரிந்து கொண்டதை எழுத ஆசைப்படுகிறேன்.
எங்கள் ஐயாவின் தந்தையார் சுப்பிரமணியன் செட்டியாரவர்கள் தாய் நாட்டிலும், மலாயா நாட்டிலும் புகழ் பெற்றவர்கள். மிகுந்த திறமையும், கெட்டிக்காரத் தனமும், கடின உழைப்பும், நேர்மையும், தர்ம சிந்தனையும், பரோ பகாரக் குணமும், பாசமும் உள்ளவர்கள். சின்ன வயதிலேயே கடல் கடந்து மலாயா நாடு சென்று<noinclude></noinclude>
ntipyw4ae3wk2frvqlnu7jonqudv5e0
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/160
250
375464
1433600
836147
2022-07-20T15:14:23Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />150 சீர்திருத்தச் செம்மல்</noinclude>சிறப்பான முறையில் அங்குத் தொழில் புரிந்து நன்கு பொருளீட்டி, அங்குத் தர்மங்கள் பலப்பல செய்து, மலாயா நாட்டில் கோவிலும் கட்டிய
வர்கள். மலாயா அரசால் பாராட்டப் பட்டவர்கள். எங்கள் ஐயா அவர்களின் தந்தையார் உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் பெருமையுடன் எடுத்துக்காட்டாக வாழ்ந்த வர்கள்.
அவர்களின் துணைவியார் - எங்கள் ஐயாவின் தாயாரவர்கள் கணவனுக்கேற்ற மனைவியாக வாழ்ந்தவர். வாழ்நாளில் முக்காற் பகுதி கணவர் மலாயா நாட்டில் இருந்த போதும் அடிக்கடி தாய் நாடு வந்து உடன் திரும்பி விடும் நிலையிலும் அந்தப் பெரிய குடும்பத்தைக் கட்டிக் காத்து, கணப் பொழுதும், அயாரது, எங்கள்ஐயா, அவர்களின் சகோதரிகள் இருவர் ஆக மூன்று குழந்தைகளையும் கண்போலக் காத்து வந்தார். தினம் வரும் விருந்தினர், சுற்றத்தாரை வரவேற்று, வேண்டியவர்கட்கு வேண்டியதை அளித்து, விருந்
தோம்பல் பண்பிலும் தலை சிறந்து விளங்கினார்; கணவர் மிகச் சின்ன வயதிலேயே காலமான பின்னர், அதையும் தாங்கி, கண்டிப்புடனும், திட்டத்துடனும் உறுதியோடும் செயல் பட்டுக் குழந்தைகளை மிக மிக நல்ல முறையில் மேன்மையாகக் கொண்டு வந்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்ததால் மிக நல்ல முறையில் வளர்க்கப்பட்டவர்கள் எங்கள் ஐயா. அந்த நாளிலேயே மிகச் சின்ன வயதிலேயே வெள்ளையனைத் தோற்கடிக்கும் ஆங்கில உச்சரிப் போடும், தங்கு தடையின்றி இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசுவார்கள்.
எங்கள் ஐயா அவர்களின் இல்லத்தில் "இன்ப மாளிகை" யில் நாங்கள் பேரன், பேத்திகள் வாழ்ந்த<noinclude></noinclude>
bttp5g72evu99fxhm6ry3z4nu4hx0fi
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/161
250
375465
1433599
836149
2022-07-20T15:11:34Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 151</noinclude>காலம், எங்கள் வாழ்க்கையின் பொற்காலம், மகிழ்ச்சியான, உற்சாகமான காலம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் திட்டமிட்டுச் செயற்படும் விதம் கற்றுக் கொடுத்து, பொறுப்புகளையும் அவரவர் வேலை கடமை களையும், தவறாது செய்யப் பழக்கினார். அதே நேரம் சிறிய தவறு செய்தாலும், கண்டிப் போடு கூறி, பாசம் அன்பு கலந்து எங்கட்கு அறவுரை கூறி, எல்லாவற்றிற்கும், எல்லாச் சூழ்நிலைக்கும் ஏற்ப எங்களை வளர்த்தார்.
எங்கள் ஐயா அவர்களின் கண் பார்வையைப் பார்த்தாலே ஒரு ஒளிவீசும் தன்மையும், தீட்சண்யமும், புலப்படும். சிறு வயதிலேயே நாங்கள் அதைப் புரிந்து கொண்டோம். பழங் காலக் குருகுல வாசம் போல நாங்கள் பயிற்றுவிக்கப் பட்டோம் நாங்கள் அனைவரும் பேரன், பேத்திகள், எங்கள் ஐயாவி னாலும் ஆயா மஞ்சுளாபாய் வை. சு. அவர்களினாலும் மிக மிக நல்ல சுறுசுறுப்பானவர்களாகவும் அறிவாளர்களாகவும் தன் தன் வேலைகளைத் தானே செய்பவர் களாகவும் வளர்க்கப்பட்டோம். அதிகாலை 5 மணிக்கெழும் பழக்கமும், பாரதியார் பாடல்கள் தினம் மூன்று தடவை வீதம் பூராவும் பாடவைத்து, தேகப் பயிற்சியிலிருந்து இரவு 9.00 மணிக்குத் துயிலப் போகும் வரை எல்லாம் திட்டப்படி நடக்கும். கணப்பொழுதும் சோர்வு வராது. அப்படி எல்லாம் மிக மிக நல்லமுறையில் எங்களை வளர்த்தனர்.உண்மையே பேச வைத்து, உண்மை, நேர்மை, நியாயத்துக்குப் போராடி வெற்றி பெறும் வழியை அன்றே எங்கட்குச் சொல், செயல்
முறையில் கற்றுத் தந்தனர். முடிந்தவரை பிறர் துன்பத் தைப் போக்கும்<noinclude></noinclude>
smz9r110fehcgmruxuwbh7zty2zhnfu
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/162
250
375466
1433598
836151
2022-07-20T15:08:39Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />152 சீர்திருத்தச் செம்மல்</noinclude>பாதையிலும், அச்சப்படும் செயல்கட்கு அச்சப்படும் படியும், "இச்சகத்திலுள்ளோரும் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்ச
மில்லை" என்ற பாரதி கூற்றுப் படி, என்ன இடையூறு, பகை வந்தாலும் நல்லதைச் செய்ய, நீதியை நிலை நாட்ட, உண்மையை வெளிக்கொணர முயலவும் எங்களைப் பழக்கினார்.
எங்கள் பள்ளிக்கூடப் பருவ நாளில், 'இன்ப மாளிகைக்கு' வரும் அறிஞர்கள், தலைவர்கள், சித்தர்கள், ஞானிகள், சிநேகிதர்கள், எல்லாரும் எங்களைப் பார்த்துப் பிரமித்துப் போவார்கள். இந்தக் குழந்தைகள் எவ்வளவு அறிவோடு, சுறுசுறுப்போடு, பணிவு, மரியாதையுடன் உள்ளார்கள்! என வியந்து எங்கள் ஐயா அவர் களையும், ஆயாள் அவர்களையும் பாராட்டி என்னையும் என் தங்கைகளையும், எங்கள் அம்மான் மக்களையும் பாராட்டி எங்களுடன் அளவளாவி மகிழ்ந்து, பாரதியார், பாரதிதாசன் பாடல்களை நாங்கள் பாடுவதையும் இரசித்துப் பாராட்டி விடை பெறுவர்.
எங்கட்குள் சண்டைகள் வந்து அறியோம். போட்டி, பொறாமைக்கு அர்த்தம் தெரியாது. மிகுந்த தைரிய சாலி களாக வளர்க்கப் பட்டோம். நாங்கள் எதையாவது பார்த்து அல்லது கேட்டுப் பயந்தாலும், எங்களின் பயத்தின் அடிப் படையைக் கூர்மையாக ஆராய்ந்து ஒரு நொடியில் ஆதார பூர்வமாகச் செயலிலோ, சொல்லிலோ காட்டி, நாங்கள் பயந்ததற்கு நாங்களே வெட்கப்படும் படி செய்வார்கள். தைரியம் ஆயுள் பரியந்தம் எங்கட்குக் கை கொடுக்கும்படி எங்களை ஆக்கினார்கள். கட்டுப்பாடாக, சுதந்தர மாக எங்களை வளர்த்து, அறிவையும், ஆராயும் ஆற்றலையும் எங்கட்கு ஊட்டினார்கள்.<noinclude></noinclude>
kbox6m8r9pz5t5nw99qp0f39wkpvzrt
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/163
250
375467
1433596
836153
2022-07-20T14:57:49Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 153</noinclude>எங்கள் ஐயா அவர்கட்கு எவ்வளவோ செல்வமும், சொத்து களும் இருந்தன. அவர்களின் தீவிர, பிரதிபலன் எதிர் பார்க்காத நாட்டுப்பற்றால் ஏகப்பட்ட செல்வத்தைச் செலவு செய்தார்கள். எஞ்சிய செல்வத்தை நியாயமான உரிமைக்காக நீதி மன்றங்களிலும் செலவிட்டார்கள். மேலும் எவ்வளவோ நல்ல காரியங்கட்கும், கஷ்டத்திலுள்ள நண்பர்கட்கும் உதவி செய்தார்கள்.
"இன்ப மாளிகை" மட்டும் மீதி இருந்தது. அந்த நிலை யிலும் எந்தப் பழம் வந்தாலும் எங்களுக்காகக் கூடையோடு தான்வாங்கப்படும். எங்களோடு வீதிப் பிள்ளைகளுக்கும் தெவிட்டும் மட்டும் கொடுக்கப்படும். பலூனா, பொம்மை களா, சிலேட்டு களா, நோட்டா, பென்சிலா எல்லாம் மொத்த மாக வாங்கப்படும். எங்களுக்கும் ஊர்ப் பிள்ளைகட்கும் விநியோகிக்கப்படும்.
எங்கள் கண் எதிரே எங்களின் ஐயா அவர்கள், ஊரில் தேள் கொட்டப்பட்டு வந்தவர்களையும் பாம்புக் கடிபட்டு வந்தவர்
களையும் காப்பாற்றியுள்ளார். யார் கவலைப்பட்டு, துன்பப் பட்டு வந்தாலும் அவர்கள் ஆபத்து, சங்கடங்கள் விலகும். நன்றியோடு விடை பெறுவார்கள். எவ்வளவோ நல்ல காரியங் களைச் செய்துள் ளார்கள் எங்கள் ஐயா.
எங்கள் ஐயா அவர்களின் தோற்றமும், பேச்சும் கம்பீரமாக இருக்கும். அந்த உண்மையான தேஜசான, கூர்மையான, கனிவான, நேர்மையான, தைரியமான கண்கள் தனித்தன்மை வாய்ந்தன. அவர்களின் முகத்தை நேருக்கு நேர் நோக்கும் தைரியம் யாருக்கும் வராது. இதற்கு ஒரு உதாரணம், எங்கள் ஐயா அவர்கள் எங்கள்<noinclude></noinclude>
p3wq28cj3wl57mo8aytr8632cs6zwjz
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/164
250
375468
1433595
836155
2022-07-20T14:53:58Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />154 சீர்திருத்தச் செம்மல்</noinclude>ஆயாள் அவர்களையும், என் தயார் அவர்களையும், என்னையும் (நான் சிறு பிள்ளை 3 அல்லது 4 வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்) அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரிக்குக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் வீட்டிற்குச் சென்றார்கள். இரயில் பயணம்.
அப்போது பாண்டிச்சேரி பிரான்சு ஆட்சியிலிருந்தது. அதனால் பயணிகளைச் சோதனை செய்து சுங்கவரி விதிப்பது செயல்பட்ட காலம். பாவேந்தர் வீட்டில் தங்கி இருந்தோம். எங்கள் ஐயாவும், பாவேந்தரும் பேசிக் கொண்டிருக்க, நான் என் தாயார் பாவேந்தரின் துணைவியார், அவர்களின் புதல்விகள் அனைவரும் பாண்டிச் சேரியைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம்.
பல தினங்கள் சென்று கானாடுகாத்தானுக்குத் திரும்பினோம். பாண்டிச்சேரியிலிருந்து ரயிலில் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள், இரயில் நின்றது. சுங்கச்சாவடி சோதனை அதிகாரிகள் மற்ற எல்லாரையும், அவர்களின் பொருள்களையும் சோதனை செய்தனர். ஆனால் அவர்கள், எங்கள் ஐயா அவர்களைப் பார்த்தவுடன் எந்தச் சோதனையும் செய்யாமல், மரியாதை கலந்த மென்மையான சிரிப்பை, எங்கள் ஐயாவுக்குக் காணிக்கை ஆக்கிவிட்டு, மிடுக்குடன் மற்ற பயணிகளைச் சோதனை செய்யப் போய் விட்டனர்.
அடுத்த ரயில் நிலையம் வந்த பின், எங்கள் ஐயா எப்போதும் வைத்
திருக்கும் சின்ன வெள்ளி வெற்றிலைப் பெட்டியைத் திறந்து,
வெற்றிலை போட்டார்கள். அப்போது எங்கள் ஐயா, என் ஆயாள் அவர்
களிடமும், என் தாயார் அவர்களிடமும், சொன்னார்கள், "தங்கம், வைரங்கள் இந்த டப்பாவில் எவ்வள வோ வைத்துக்<noinclude></noinclude>
0n0ku8bggy1bxtf7e7s2ftrj3luw0cb
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/165
250
375469
1433592
836157
2022-07-20T14:49:46Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 155</noinclude> கடத்துபவர்கள் இருப்பதால் தானே இந்தச் சுங்கச்சாவடி. உள்ளதைக் கொண்டு நேரான பாதையில் நடந்தால் எவ்வளவோ மேன்மையாக இருக்கலாமே" என்றார்.
ஐயா அவர்களின் பார்வை, கம்பீரம், முகம் இவற்றைக் கண்ட சில வினாடிகளிலே, அவர்களின் அகம் அப்படி இருக்கும் என்பதை, அந்த கஸ்ட்டம்ஸ் அதிகாரிகள் அறிந்து கொண்டு, சுத்தமான, சத்திய
மான, நேர்மையான காந்தீய வாதியாகிய எங்கள் ஐயா அருகில் வந்து சோதனை செய்யாத தோடு, ஐயாவுக்கு மரியாதையும் செலுத்திச் சென்றார்கள்.
நாங்கள் பள்ளிகளில் கற்றதைவிட யாருக்கும் கிடைத்தற் கரிய எங்கள் ஐயா அவர்களின் மூலம் கற்றது கடல் அளவு. அதுதான் இன்று எங்கட்குக் கை கொடுக்கிறது. ஐயா அவர் கட்கு எல்லாத் துறைகளிலும் ஈடுபாடு இருந்தது. உலக ஆசா பாசங்களைத் துறந்த சாமியார்களி
லிருந்து, ஞானிகள், சித்தர்கள், தேசத் தலைவர்கள், தேச பக்தர்கள், கவிஞர்கள் என இன்ப மாளிகைக்கு வந்து செல்லாத வர்கள் இல்லை.
ஐயா அவர்கள், ஊருக்கே, நாட்டுக்கே எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர்கள். ஐயா அவர்கள் ஒரு தலைசிறந்த ஆசிரியராகவும், சிறந்த மருத்துவராகவும், சிறந்த மேதையாகவும், கருணை வள்ள லாகவும், சிறந்த தியாகியாகவும், முடிந்தவரை துன்பம் உற்றவர் கட்கு உதவிக்கரம் நீட்டித் துன்பத்தைப் போக்குபவ ராகவும், எல்லார் குடும்பத்தையும் தன் குடும்பம் போலப் பாவித்தவர் களாகவும், "தனக்கு, நான்" என்ற சொற்களுக்கு அர்த்தம் தெரியாத வர்களாகவும் பகைவனுக்கு அருளும் நன்னெஞ்சு உள்ளவர் களாகவும், நல்லதைச் செய்ய, நீதியை நிலைநாட்ட, குற்றங் களைக்<noinclude></noinclude>
3lz07if71oibjtcq3qkeuhz24ivh3fg
1433593
1433592
2022-07-20T14:50:09Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 155</noinclude>கடத்துபவர்கள் இருப்பதால் தானே இந்தச் சுங்கச்சாவடி. உள்ளதைக் கொண்டு நேரான பாதையில் நடந்தால் எவ்வளவோ மேன்மையாக இருக்கலாமே" என்றார்.
ஐயா அவர்களின் பார்வை, கம்பீரம், முகம் இவற்றைக் கண்ட சில வினாடிகளிலே, அவர்களின் அகம் அப்படி இருக்கும் என்பதை, அந்த கஸ்ட்டம்ஸ் அதிகாரிகள் அறிந்து கொண்டு, சுத்தமான, சத்திய
மான, நேர்மையான காந்தீய வாதியாகிய எங்கள் ஐயா அருகில் வந்து சோதனை செய்யாத தோடு, ஐயாவுக்கு மரியாதையும் செலுத்திச் சென்றார்கள்.
நாங்கள் பள்ளிகளில் கற்றதைவிட யாருக்கும் கிடைத்தற் கரிய எங்கள் ஐயா அவர்களின் மூலம் கற்றது கடல் அளவு. அதுதான் இன்று எங்கட்குக் கை கொடுக்கிறது. ஐயா அவர் கட்கு எல்லாத் துறைகளிலும் ஈடுபாடு இருந்தது. உலக ஆசா பாசங்களைத் துறந்த சாமியார்களி
லிருந்து, ஞானிகள், சித்தர்கள், தேசத் தலைவர்கள், தேச பக்தர்கள், கவிஞர்கள் என இன்ப மாளிகைக்கு வந்து செல்லாத வர்கள் இல்லை.
ஐயா அவர்கள், ஊருக்கே, நாட்டுக்கே எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர்கள். ஐயா அவர்கள் ஒரு தலைசிறந்த ஆசிரியராகவும், சிறந்த மருத்துவராகவும், சிறந்த மேதையாகவும், கருணை வள்ள லாகவும், சிறந்த தியாகியாகவும், முடிந்தவரை துன்பம் உற்றவர் கட்கு உதவிக்கரம் நீட்டித் துன்பத்தைப் போக்குபவ ராகவும், எல்லார் குடும்பத்தையும் தன் குடும்பம் போலப் பாவித்தவர் களாகவும், "தனக்கு, நான்" என்ற சொற்களுக்கு அர்த்தம் தெரியாத வர்களாகவும் பகைவனுக்கு அருளும் நன்னெஞ்சு உள்ளவர் களாகவும், நல்லதைச் செய்ய, நீதியை நிலைநாட்ட, குற்றங் களைக்<noinclude></noinclude>
fd2qhu4thsh331du8adx4d7sc6lzmc8
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/166
250
375470
1433591
836159
2022-07-20T14:46:55Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />156 சீர்திருத்தச் செம்மல்</noinclude>களைய, நேர்மைக்குச் சோதனை வரின் எது வந்தாலும் அஞ்சா நெஞ்சுடன் எதிர்த்துச் சமாளித்து வெற்றி காணும் தன்மை உடையவர்களாகவும், வாழ்ந்து, எல்லா நல்ல தன்மைகட்கும் ஒட்டுமொத்தமாக விளங்கிய ஒரே நபர் ஐயா அவர்கள்.
ஈ.வெ.ரா. ஐயா அவர்கள், அறிஞர் அண்ணாத்துரை அவர்கள், ஜீவானந்தம் ஐயா அவர்கள், பாரதிதாசன் அவர்கள், கவிஞர் முடியரசன் அவர்கள் எல்லாம் இன்ப மாளிகைக்கு வந்து போனது இன்றைக்கும் எனக்கு நினைவு உள்ளது. சீமான் வீட்டுப்பிள்ளை எங்கள் ஐயா. தமக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல், கடைசியில் இன்ப மாளிகையும் போய், எல்லார்க்கும் கைகொடுத்த எங்கள் ஐயாவுக்கு ஆயிரம் கஷ்டம் வந்து, உடலும் மனமும் எய்த்து, சாதாரண வீட்டுக்கு மாறிவந்த சில வருடங்களில் இவ்வுலக வாழ்க்கையை விட்டு விடை பெற்றார்கள். என்றாலும் எங்கள் ஐயா அவர்களின் புகழும், கொடையும், தியாகமும் தேசத்தொண்டும் 'வை.சு.' என்றாலே எல்லாரும் புரிந்து கொள்ளும் அழியாப் புகழை ஈட்டித் தந்துள்ளன.
எனக்கு மகன் பிறந்து, குழந்தையுடன் நான் சிங்கப்பூர் புறப் பட்ட
போது எங்களை வழிஅனுப்ப எங்கள் ஐயா அவர்களும், ஆயாள் அவர்
களும் சென்னைத் துறைமுகம் வந்து எங்களை வழியனுப்புகையில் நான் அவர்களைப் பார்த்துப் பார்த்து அழ, பிரியா விடைக்கு அழ, என் ஐயாவின் உடலும், வலுவும் எய்த்துள்ள தற்கு மேலும் அழ, இனி மீண்டும் சிங்கப்பூரிலிருந்து நாம் திரும்பி வரும்போது, பல ஆயிரம் பேருக்கு நிழல் தந்த இந்த ஆலமரம் இருக்குமா என<noinclude></noinclude>
2sdk0fwxja54tenc9yiyu9fetx5omy1
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/167
250
375471
1433589
836161
2022-07-20T14:42:59Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 157</noinclude>எண்ணி மிக மிகக் குலுங்கி அழ, அந்த நிலையிலும் கண்ணில் நீரைக் காட்டாமல், எங்களைக் கப்பலேற்றியவுடன், எங்கள் ஆயாவுடன் நின்று கொண்டு கைகளை இருவரும் அசைக்க, நாங்கள் கப்பலின் மேல்தளத்தில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கையை அசைக்க, பின்னர்க் கப்பல் மிதக்க ஆரம்பித்த நேரத்தில், கலங்காத எங்கள் தெய்வம் ஐயா அவர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டு கையை ஆட்டி விடை கொடுத்த காட்சி, கடைசிக் கட்டமாகவும் என் வாழ்வின் துக்கத்தின் முதல் கட்டமாகவும் அமைந்து விட்டது.
அதன்பின் தாய்நாடு வந்தபோது எங்கள் ஆயாவைத் தனி மரமாகப் பார்த்துத் தவித்தோம். அந்தச் சாதாரண வீட்டில் எங்கள் தெய்வத்தின் மறைவுக்கு வந்த (அப்nது தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த) அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் திராவிட கழகத் தூண்களில் ஒன்று சரிந்து விட்ட தாகக் கூறியதை ஆயா எங்களிடம் சொன்னார்கள். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாகவும், பேரைச் சொன்னால் ஊர் தெரியணும் என்பதற்கு எடுத்துக் காட்டாகவும் வாழ்ந்தவர்கள் எங்கள் ஐயா.<noinclude></noinclude>
ex0s732v2jjq4b2b1qjkrodwavaxz6w
1433590
1433589
2022-07-20T14:43:21Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 157</noinclude>எண்ணி மிக மிகக் குலுங்கி அழ, அந்த நிலையிலும் கண்ணில் நீரைக் காட்டாமல், எங்களைக் கப்பலேற்றியவுடன், எங்கள் ஆயாவுடன் நின்று கொண்டு கைகளை இருவரும் அசைக்க, நாங்கள் கப்பலின் மேல்தளத்தில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கையை அசைக்க, பின்னர்க் கப்பல் மிதக்க ஆரம்பித்த நேரத்தில், கலங்காத எங்கள் தெய்வம் ஐயா அவர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டு கையை ஆட்டி விடை கொடுத்த காட்சி, கடைசிக் கட்டமாகவும் என் வாழ்வின் துக்கத்தின் முதல் கட்டமாகவும் அமைந்து விட்டது.
அதன்பின் தாய்நாடு வந்தபோது எங்கள் ஆயாவைத் தனி மரமாகப் பார்த்துத் தவித்தோம். அந்தச் சாதாரண வீட்டில் எங்கள் தெய்வத்தின் மறைவுக்கு வந்த (அப்nது தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த) அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் திராவிட கழகத் தூண்களில் ஒன்று சரிந்து விட்ட தாகக் கூறியதை ஆயா எங்களிடம் சொன்னார்கள். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாகவும், பேரைச் சொன்னால் ஊர் தெரியணும் என்பதற்கு எடுத்துக் காட்டாகவும் வாழ்ந்தவர்கள் எங்கள் ஐயா.<noinclude></noinclude>
tawkoatynlz5pg1axz0jy3dka8it9ko
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/168
250
375472
1433588
836162
2022-07-20T14:41:11Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" /></noinclude>19
எங்கள் அருமை ஐயா
டாக்டர் மா. மணிமேகலை, மருந்தியல் துறைத்தலைவர்
(மகள் வழிப் பேர்த்தி மருத்துவர் மணி மேகலை, பெரும் பாலும் சண்முகனாரிடம் வளர்ந்தவர். சண்முகனாரின் வாழ்க்கையில் நாடி நரம்புகளைச் சுட்டிக் காட்டுகிறார்.)
நான் கைப்பிள்ளையாக இருந்த பருவத்திலிருந்து, இரண்டாம் உலக மகாயுத்தம் முடிந்து இரங்கூனிலிருந்து என் பெற்றோர் திரும்பும் வரை என் அருமை ஐயா அவர்களால் வளர்க்கப் பட்டேன். பெற்றோர் திரும்பிய பின்னரும், கிடைக்கும் சந்தர்ப்பங்கள் அனைத்தையும் பயன்படுத்தி ஐயா அவர்களிடமே சென்று விடுவ துண்டு. எப்படியும் எட்டு முதல் பத்துப் பிள்ளைகள் வரை ஐயா அவர்கள் நேர்முகக் கண்காணிப்பில் வளர்ந்து வந்தோம்.
குழந்தைகளிடம் ஐயா அவர்கள் காட்டிய அன்பும், பாசமும், ஒழுங்குமுறைப் பயிற்சியும் வார்த்தைகளின் வரம் பிற்கு அப்பாற் பட்டவை. அவற்றை இன்று நினைக்கும் போதும் கண்கள் கலங்கும். எங்களுக்கு நொண்டி விளை யாடுவது, ஸ்கிப்பிங் விளையாடுவது, நீச்சல் அடிப்பது, கண்ணாமூச்சி விளையாடுவது, நிலாக்காலங் களில் மேல் மாடிக்கு அழைத்துச் சென்று<noinclude></noinclude>
3p5ynfpcum8gipceq6fg19u9s8pb6da
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/169
250
375473
1433587
836163
2022-07-20T14:37:06Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />159</noinclude>உருண்டைச் சோறு அளிப்பது, பயனுள்ள - நாட்டுப் பற்று, வீரம் நிறைந்த கதைகள் - நிகழ்ச்சிகள் கூறுவது, இவையனைத்தும் என்முன் நிழலாடு கின்றன. குழந்தைகள் அனைவருக்கும் ஐயா அவர்கள் அளித்த கட்டுக்கோப் பான ஒழுங்கு நெறிகள் இன்றும் என்றும் எங்களுக்குத் தோன்றாத் துணையாகவுள்ளன.
பிள்ளைகளுக்குள் சண்டை சச்சரவு ஏற்பட்டால் ஐயா அவர்கள் சண்டைக்குக் காரணமானவரைக் கூப்பிட்டு, ஒரு குண்டூசி கொண்டு வரச் செய்து, அதைத் தமது கையில் சதையில் குத்தி எடுக்கச் சொல்வார்கள். எங்களுக்கெல்லாம் கவலையாகவும் வேதனை யாகவும் இருக்கும். எங்கள் அருமை ஐயா அவர்கள் வேதனை யாகச் சிரித்தபடி சொல் வார்கள். "இந்த ஊசி குத்தியது எனக்கு வலியில்லை. நீங்கள் சண்டை போடுவதுதான் வலிக்கிறது" என் பார்கள். குழந்தை களிடையே மறுபடி சண்டைப் பிரச்சினை வராது. தனிப்பட்ட முறையில் பிள்ளைகள் தவறு செய்தால், அந்தப் பிள்ளை முன் பிரம்பால் தம்மை அடித்துக் கொள்வார்கள். 'உங்களைச் சரியாக வளர்க்காமல் விட்ட தவறுக்கு எனக்குத் தண்டனை' என்பார்கள். பிள்ளைகளை வளர்க்கும் விதம், அபரிமித மான பாசம், அப்பழுக்கற்ற அன்பு, மனோதிடம் இவை யாவும் எவரையும் எங்கள் ஐயா பால் ஈர்க்கக்கூடியன.
காலையில் விரைவில் எழுந்திருத்தல், அளவுடன் பகலுணவு கொள்ளுதல், சாப்பிடும் முன் பாரதியார் பாடல்கள், பாரதி தாசனார் பாடல்கள் பாடும் ஒழுங்கு முறைகள் எங்களுக்கு இளம் வயதிலேயே ஐயா அவர்களால் வித்திடப்பட்டவை.
பலதரப்பட்ட மக்கள், பலதரப்பட்ட குடும்பத்தினர் உற்றார், உறவினர் இவர்களிடையே குடும்பத்தில்<noinclude></noinclude>
a8vgoyo9dfimx005pq6cmfztf8b19fj
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/170
250
375474
1433586
836165
2022-07-20T14:34:51Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />160 சீர்திருத்தச் செம்மல்.</noinclude>ஏற்படும் சச்சரவுகள், பிரிவுகள், கருத்து வேறுபாடுகள் இவைகளில் பாதிக்கப் பட்டவர், ஐயா அவர்களின் உதவியை நாடுவதும் வீட்டில் பஞ்சாயத்து செய்து, பிரச்சினைகளை சுமூகமாக ஆனால் ஆணித்தரமாகத் தீர்த்து வைப்பதும் அன்றாட நிகழ்ச்சிகளாக நடக்கும். ஐயா அவர்களின் மன உறுதி, விவேகம், உண்மைக்குப் போராடும் மன வலிமை எவரையும் அயர வைக்கும். இதை எண்ணற்ற நிகழ்ச்சி களில் கண்டுள்ளேன். மூட நம்பிக்கை ஐயா அவர்கட்கு ஒத்து வராத ஒன்று. அதை எதிர்க்க, ஒழிக்க ஐயா அவர்கள் எடுத்த முயற்சிகள், சமாளித்த எதிர்ப்புகள் ஏராளம். ஐயா அவர்கள் பள்ளியில் நான் கற்றவை, உணர்ந்தவைதான் எனது பள்ளிப் படிப்பு, கல்லூரி உயர் கல்விப் படிப்பு, எனது பலதரப்பட்ட பணிகள் அனைத்திற்கும் ஆழமான அடித்தளமாக அமைந்தன.
ஐயா அவர்களின் கூர்மையான புத்தி, புத்திசாலிகளையே தூக்கி விழுங்கக்கூடியது. மோசடி பண்ணியவர்களை, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை, போலிப்ப கட்டு வரட்டு கவுரவம் பார்ப்பவர்களை, எந்த விதமான தவறு செய்பவர்களையும் நேரடியாக அவர்கள் உணரும் வண்ணம் தவற்றைச் சுட்டிக் காட்டுவார்கள். இதனால் ஐயா அவர்கள் பலரது வெறுப்பினையும் பகையினையும் தேடிக் கொள்ள நேர்ந்தது. அதற்காக ஐயா அவர்கள் என்றும் மனந்தளர்ந்ததே கிடையாது. நேர்மைக்காகவும்,உண்மைக்காகவும் அந்த உயர்ந்த உள்ளம் போராடி, இலட்சியத் திற்கு என்றும் வெற்றியைக் குவித்தது. பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டு, மோசடிக் கும்பலினால் வழக்கு விவகாரப் புதை மணலில் சிக்கி, உடல்<noinclude></noinclude>
s3i30917yfu5i0b8pg44u2904tcotby
பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/171
250
375475
1433585
836166
2022-07-20T14:31:03Z
வா.அத்தீபா ஷப்ரீன்
11191
/* சிக்கலானவை */ எழுத்துப் பிழை இல்லை
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="வா.அத்தீபா ஷப்ரீன்" />வை. சு. சண்முகனார் 181</noinclude>வலிமை குன்றினாலும் மனவலிமை என்றும் ஐயா அவர்களிடம் வானளாவியே இருந்து வந்தது.
ஐயா அவர்களிடம் சுயமரியாதைக் கட்சியினர் திரு. பாரதிதாசனார் அவர்கள், தந்தை பெரியார், மணியம்மையார் அவர்கள், ராய. சொ. அவர்கள், திரு. சொ. முருகப்பா - மரகதவல்லி அம்மையார் அவர்கள், கவியரசர் முடியரசனார் அவர்கள், இன்னும் எண்ணற்ற பெரியோர்கள் தொடர்பு கொண்டிருந்ததையும், ஐயா அவர்கள் மாநாடுகளிற் பங்கெடுப் பதையும் (அடிக்கடி என் இளவயதில் பார்த்ததை) நினைவு கூர்கிறேன். இவை அனைத்தும் பின்னர்நான் பொது நிகழ்ச்சி களில் பங்கு பெறும் போது பெரிதும் உதவின.
ஐயா அவர்களின் சிந்திக்கும் திறன், செயல் வேகம் மிக உன்னத மான ஒன்று. எதையும் தொலை நோக்குக் கண்ணுடன் தான் பார்ப்பார்கள். நகரத்தார் சமூகம் திருமணத்தில் எளிமை காட்டாமல் பொருள் விரயம் செய்து நசுங்குகிறதே எனச் சமூக முன்னேற்றத்தில் அளவரிய அக்கறையுடன் கூறுவார்கள். மற்றவர்களுக்கும் என் அருமை ஐயா அவர்கட்கும் என்ன வேறுபாடு என்றால், ஐயா சொல்வதைத் தான் செய்வார்கள். செய்வதைத்தான் சொல்வார்கள். சமூக நலம் கருதி தன் ஒரே புதல்வி (என் அருமை அம்மா) திருமணத்தை 1935-ம் ஆண்டு சீர்திருத்தத் திருமணமாகச் செய்து காண்பித்தார்கள். உறவினர் எதிர்ப்பு - எவ்வளவு கடுமையாக இருந்தும் தன் இலட்சியத்தி லிருந்து விலகவில்லை. அந்த அளவு துணிச்சல், உண்மையான சமூகப் பணி எவருக்கு வரும்? இன்று வரை அது கேள்விக் குறிதான்.
நான் 1957-ம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர விருப்பப் பட்டேன். என் பெற்றோர் எனக்கு மிக்க<noinclude></noinclude>
9h2etneu8axbp640he7nhmv12egimid
விக்கிமூலம் பேச்சு:பனுவல் படியிடல் திட்டம்
5
437373
1433704
1253065
2022-07-21T07:40:33Z
Info-farmer
232
பனுவல் த இ க க
wikitext
text/x-wiki
== முன்மொழிவுகள் ==
#[[அட்டவணை:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-4.pdf]] எனும் நூலின் [https://ta.m.wikisource.org/wiki/பக்கம்:க._அயோத்திதாஸப்_பண்டிதர்_சிந்தனைகள்-4.pdf/18]இந்தப்பக்கத்தில் இருந்து அடுத்துவரும் சில பக்கங்களை விக்சனரியில் பயன்படுத்தலாம் என்று எண்ணுகிறேன். [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 04:29, 1 சனவரி 2021 (UTC)
## கண்டறிந்து முன்மொழிந்தமைக்கு நன்றி.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:40, 21 சூலை 2022 (UTC)
#[https://www.tamilvu.org/ta/library-nationalized-scholars-html-Un-Merge-files-educationl-240940 த. இ. க. கழகத்தில் உள்ள பனுவல்கள்] பயன்படுத்தினால் ஏறத்தாழ ஒரு இலட்சம் பக்கங்களை பதிவேற்றலாம். ஆ்னால் அந்த இணைப்பினை மேம்படுத்தி வருவதால், அரசிடம் கேட்டுப் பெறவேண்டும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:40, 21 சூலை 2022 (UTC)
##
[[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]]
civwmve3ozckqvnm2powyzkrol8lszl
1433705
1433704
2022-07-21T07:42:41Z
Info-farmer
232
/* முன்மொழிவுகள் */ இணைப்பு மாற்றம்
wikitext
text/x-wiki
== முன்மொழிவுகள் ==
#[[அட்டவணை:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-4.pdf]] எனும் நூலின் [https://ta.m.wikisource.org/wiki/பக்கம்:க._அயோத்திதாஸப்_பண்டிதர்_சிந்தனைகள்-4.pdf/18]இந்தப்பக்கத்தில் இருந்து அடுத்துவரும் சில பக்கங்களை விக்சனரியில் பயன்படுத்தலாம் என்று எண்ணுகிறேன். [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 04:29, 1 சனவரி 2021 (UTC)
## கண்டறிந்து முன்மொழிந்தமைக்கு நன்றி.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:40, 21 சூலை 2022 (UTC)
#[https://www.tamilvu.org/ta/library-nationalized-scholars-html-Un-Merge-files-index-240944 த. இ. க. கழகத்தில் உள்ள பனுவல்கள்] பயன்படுத்தினால் ஏறத்தாழ ஒரு இலட்சம் பக்கங்களை பதிவேற்றலாம். ஆ்னால் அந்த இணைப்பினை மேம்படுத்தி வருவதால், அரசிடம் கேட்டுப் பெறவேண்டும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:40, 21 சூலை 2022 (UTC)
##
[[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]]
9tlosfw3imshjc0mzbea74dgf3c3di3
1433706
1433705
2022-07-21T07:44:29Z
Info-farmer
232
/* முன்மொழிவுகள் */ இணைப்பு முறிவு நீக்கம்
wikitext
text/x-wiki
== முன்மொழிவுகள் ==
#[[அட்டவணை:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf]] எனும் நூலின் [https://ta.m.wikisource.org/wiki/பக்கம்:க._அயோத்திதாஸப்_பண்டிதர்_சிந்தனைகள்-4.pdf/18]இந்தப்பக்கத்தில் இருந்து அடுத்துவரும் சில பக்கங்களை விக்சனரியில் பயன்படுத்தலாம் என்று எண்ணுகிறேன். [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 04:29, 1 சனவரி 2021 (UTC)
## கண்டறிந்து முன்மொழிந்தமைக்கு நன்றி.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:40, 21 சூலை 2022 (UTC)
#[https://www.tamilvu.org/ta/library-nationalized-scholars-html-Un-Merge-files-index-240944 த. இ. க. கழகத்தில் உள்ள பனுவல்கள்] பயன்படுத்தினால் ஏறத்தாழ ஒரு இலட்சம் பக்கங்களை பதிவேற்றலாம். ஆ்னால் அந்த இணைப்பினை மேம்படுத்தி வருவதால், அரசிடம் கேட்டுப் பெறவேண்டும்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:40, 21 சூலை 2022 (UTC)
##
[[பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்]]
9jhwx2stle9itpd9vjhhzqjpo6zkh3j
விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1
4
444817
1433655
1433581
2022-07-21T02:54:21Z
Info-farmer
232
/* நடப்பவை 35px 40px */ ** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும்,
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}}
[https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும்.
== திட்டகாலம் ==
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
தொடக்கம் : 3 பிப்ரவரி 2022
முடிவு: 15 சூலை 2022
'''மொத்த காலம்''' : 6 மாதங்கள்
{{clear}}
== விண்ணப்ப இலக்குகள் ==
[[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]]
விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது.
{{clear}}
* <big>'''உரிமம்'''</big>
: [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]]
* '''<big>GLAM</big>'''
: {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''230''' படங்கள்
::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]]
: {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன.
::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்)
: {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள்
::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]]
: {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள்
::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]]
* [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது
== விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் ==
[[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]]
விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம்.
{{clear}}
*[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]]
** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன.
=== புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] ===
* கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர்.
** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார்.
* இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]]
* பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது.
* நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற
* பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்)
* த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன.
* [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார்.
*[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]]
** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை :
** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை :
*[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]]
**[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]]
* [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]]
* [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]]
* [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]]
== நடப்பு இலக்குகள் ==
[[File:Piebar icon.gif|100px]]
=== பயிலரங்குகள் ===
==== கல்லூரிப் பயிலரங்கு 1 ====
* கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]]
* '''பயிற்சி நூல்கள்'''
:# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]]
:# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
* '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.
<gallery>
File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல்
File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
</gallery>
==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ====
* சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]]
பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று.
* [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது]
** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]]
** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும்.
* '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.
<gallery>
File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல்
File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல்
File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]]
</gallery>
==== கல்லூரிப் பயிலரங்கு 4 ====
* உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்)
* [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]]
* '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது.
<gallery>
File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20
File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
</gallery>
==== தனிநபர் பயிலரங்கு ====
* படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள்
<gallery>
File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]]
File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]]
File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]]
</gallery>
* எழுத்துணரியாக்க மேம்பாடு
<gallery>
|[[பயனர்:Yasosri|யசோதா]] எழுத்துப்பிழைநீக்குதல்
|[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]]
|இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]]
|ஹேமலதா
* கல்லூரி, நூலகம்
|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள்
|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]
|[[பயனர்:Rabiyathul|இராபியா]]
|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]
| [[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]]
</gallery>
* உரிம ஆவணங்கள்; பரப்புரை
<gallery>
|[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்]
|[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]]
|[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்கள்; மேலாண்மை
|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை
|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை
</gallery>
== மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] ==
2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன.
=== நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] ===
* சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது.
* 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன.
* தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது.
* தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும்.
* [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
==== கவனிக்க ====
* மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] இருப்பினும், எழுத்துணரியாக்க முறைகளில் இவைகள் பெரும்பாலும் களையப்பட்டன.
=== முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] ===
==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ====
* மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும்.
# சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது.
# [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன்.
# [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன்.
==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ====
# [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small>
# [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small>
# [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small>
# [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small>
# [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது.
# [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும்.
==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ====
* [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம்.
* [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன்.
** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]]
** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]]
** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]
* [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன.
=== கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] ===
== சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] ==
# 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1
# 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
# 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] -
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small>
# 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]]
# 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]]
# 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]]
# 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]]
# 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]]
# 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]]
=== முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் ===
# 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]]
# 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
== இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] ==
* இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
* இயக்கு தளங்கள் (Operating Softwares)
** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி
** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE)
* - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' :
* இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம்.
# [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்'''
# '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம்
# '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம்.
=== கற்பதற்கான காட்சியகம் ===
<gallery>
File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள்
File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள்
File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw
File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf
File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf
File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை
File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக
File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas
File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation
File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம்
File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல்
File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved
File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத
File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல்
File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல்
</gallery>
== சமூக ஊடகத் தொடர்புகள் ==
[[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]]
* டெலிகிராம் :
* Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு].
* [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன].
* பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன.
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]]
lg79mm2weybafleu51nw5rlyd2pb1at
1433656
1433655
2022-07-21T02:55:35Z
Info-farmer
232
/* நடப்பவை 35px 40px */ ==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ====
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}}
[https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும்.
== திட்டகாலம் ==
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
தொடக்கம் : 3 பிப்ரவரி 2022
முடிவு: 15 சூலை 2022
'''மொத்த காலம்''' : 6 மாதங்கள்
{{clear}}
== விண்ணப்ப இலக்குகள் ==
[[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]]
விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது.
{{clear}}
* <big>'''உரிமம்'''</big>
: [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]]
* '''<big>GLAM</big>'''
: {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''230''' படங்கள்
::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]]
: {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன.
::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்)
: {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள்
::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]]
: {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள்
::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]]
* [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது
== விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் ==
[[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]]
விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம்.
{{clear}}
*[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]]
** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன.
=== புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] ===
* கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர்.
** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார்.
* இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]]
* பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது.
* நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற
* பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்)
* த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன.
* [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார்.
*[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]]
** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை :
** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை :
*[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]]
**[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]]
* [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]]
* [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]]
* [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]]
== நடப்பு இலக்குகள் ==
[[File:Piebar icon.gif|100px]]
=== பயிலரங்குகள் ===
==== கல்லூரிப் பயிலரங்கு 1 ====
* கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]]
* '''பயிற்சி நூல்கள்'''
:# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]]
:# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
* '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.
<gallery>
File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல்
File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
</gallery>
==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ====
* சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]]
பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று.
* [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது]
** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]]
** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும்.
* '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.
<gallery>
File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல்
File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல்
File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]]
</gallery>
==== கல்லூரிப் பயிலரங்கு 4 ====
* உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்)
* [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]]
* '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது.
<gallery>
File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20
File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
</gallery>
==== தனிநபர் பயிலரங்கு ====
* படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள்
<gallery>
File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]]
File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]]
File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]]
</gallery>
* எழுத்துணரியாக்க மேம்பாடு
<gallery>
|[[பயனர்:Yasosri|யசோதா]] எழுத்துப்பிழைநீக்குதல்
|[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]]
|இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]]
|ஹேமலதா
* கல்லூரி, நூலகம்
|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள்
|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]
|[[பயனர்:Rabiyathul|இராபியா]]
|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]
| [[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]]
</gallery>
* உரிம ஆவணங்கள்; பரப்புரை
<gallery>
|[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்]
|[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]]
|[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்கள்; மேலாண்மை
|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை
|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை
</gallery>
== மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] ==
2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன.
=== நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] ===
* சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது.
* 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன.
* தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது.
* தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும்.
==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ====
* [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
==== கவனிக்க ====
* மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] இருப்பினும், எழுத்துணரியாக்க முறைகளில் இவைகள் பெரும்பாலும் களையப்பட்டன.
=== முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] ===
==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ====
* மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும்.
# சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது.
# [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன்.
# [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன்.
==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ====
# [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small>
# [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small>
# [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small>
# [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small>
# [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது.
# [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும்.
==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ====
* [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம்.
* [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன்.
** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]]
** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]]
** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]
* [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன.
=== கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] ===
== சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] ==
# 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1
# 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
# 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] -
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small>
# 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]]
# 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]]
# 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]]
# 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]]
# 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]]
# 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]]
=== முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் ===
# 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]]
# 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
== இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] ==
* இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
* இயக்கு தளங்கள் (Operating Softwares)
** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி
** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE)
* - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' :
* இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம்.
# [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்'''
# '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம்
# '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம்.
=== கற்பதற்கான காட்சியகம் ===
<gallery>
File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள்
File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள்
File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw
File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf
File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf
File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை
File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக
File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas
File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation
File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம்
File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல்
File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved
File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத
File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல்
File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல்
</gallery>
== சமூக ஊடகத் தொடர்புகள் ==
[[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]]
* டெலிகிராம் :
* Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு].
* [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன].
* பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன.
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]]
jlufp31oth5i1z5qm1oct9qghtfculp
1433657
1433656
2022-07-21T02:56:46Z
Info-farmer
232
/* நடப்பவை 35px 40px */ இடமாற்றம்
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}}
[https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும்.
== திட்டகாலம் ==
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
தொடக்கம் : 3 பிப்ரவரி 2022
முடிவு: 15 சூலை 2022
'''மொத்த காலம்''' : 6 மாதங்கள்
{{clear}}
== விண்ணப்ப இலக்குகள் ==
[[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]]
விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது.
{{clear}}
* <big>'''உரிமம்'''</big>
: [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]]
* '''<big>GLAM</big>'''
: {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''230''' படங்கள்
::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]]
: {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன.
::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்)
: {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள்
::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]]
: {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள்
::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]]
* [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது
== விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் ==
[[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]]
விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம்.
{{clear}}
*[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]]
** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன.
=== புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] ===
* கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர்.
** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார்.
* இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]]
* பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது.
* நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற
* பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்)
* த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன.
* [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார்.
*[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]]
** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை :
** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை :
*[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]]
**[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]]
* [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]]
* [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]]
* [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]]
== நடப்பு இலக்குகள் ==
[[File:Piebar icon.gif|100px]]
=== பயிலரங்குகள் ===
==== கல்லூரிப் பயிலரங்கு 1 ====
* கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]]
* '''பயிற்சி நூல்கள்'''
:# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]]
:# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
* '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.
<gallery>
File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல்
File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
</gallery>
==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ====
* சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]]
பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று.
* [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது]
** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]]
** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும்.
* '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.
<gallery>
File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல்
File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல்
File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]]
</gallery>
==== கல்லூரிப் பயிலரங்கு 4 ====
* உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்)
* [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]]
* '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது.
<gallery>
File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20
File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
</gallery>
==== தனிநபர் பயிலரங்கு ====
* படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள்
<gallery>
File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]]
File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]]
File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]]
</gallery>
* எழுத்துணரியாக்க மேம்பாடு
<gallery>
|[[பயனர்:Yasosri|யசோதா]] எழுத்துப்பிழைநீக்குதல்
|[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]]
|இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]]
|ஹேமலதா
* கல்லூரி, நூலகம்
|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள்
|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]
|[[பயனர்:Rabiyathul|இராபியா]]
|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]
| [[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]]
</gallery>
* உரிம ஆவணங்கள்; பரப்புரை
<gallery>
|[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்]
|[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]]
|[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்கள்; மேலாண்மை
|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை
|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை
</gallery>
== மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] ==
2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன.
=== நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] ===
* சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது.
* 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன.
* தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது.
* தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும்.
==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ====
* [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
=== முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] ===
==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ====
* மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும்.
# சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது.
# [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன்.
# [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன்.
==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ====
# [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small>
# [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small>
# [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small>
# [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small>
# [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது.
# [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும்.
==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ====
* [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம்.
* [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன்.
** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]]
** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]]
** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]
* [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன.
=== கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] ===
== சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] ==
# 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1
# 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
# 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] -
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small>
# 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]]
# 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]]
# 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]]
# 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]]
# 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]]
# 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]]
=== முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் ===
# 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]]
# 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
== இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] ==
* இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
* இயக்கு தளங்கள் (Operating Softwares)
** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி
** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE)
* - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' :
* இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம்.
# [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்'''
# '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம்
# '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம்.
=== கற்பதற்கான காட்சியகம் ===
<gallery>
File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள்
File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள்
File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw
File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf
File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf
File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை
File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக
File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas
File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation
File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம்
File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல்
File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved
File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத
File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல்
File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல்
</gallery>
== சமூக ஊடகத் தொடர்புகள் ==
[[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]]
* டெலிகிராம் :
* Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு].
* [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன].
* பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன.
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]]
3wnaf6hzfn9izebej712321wd588ozo
1433658
1433657
2022-07-21T02:57:49Z
Info-farmer
232
/* மின்வருடல் பணிகள் 40px 40px 40px */ கவனிக்க
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}}
[https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும்.
== திட்டகாலம் ==
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
தொடக்கம் : 3 பிப்ரவரி 2022
முடிவு: 15 சூலை 2022
'''மொத்த காலம்''' : 6 மாதங்கள்
{{clear}}
== விண்ணப்ப இலக்குகள் ==
[[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]]
விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது.
{{clear}}
* <big>'''உரிமம்'''</big>
: [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]]
* '''<big>GLAM</big>'''
: {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''230''' படங்கள்
::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]]
: {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன.
::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்)
: {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள்
::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]]
: {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள்
::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]]
* [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது
== விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் ==
[[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]]
விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம்.
{{clear}}
*[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]]
** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன.
=== புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] ===
* கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர்.
** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார்.
* இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]]
* பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது.
* நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற
* பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்)
* த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன.
* [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார்.
*[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]]
** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை :
** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை :
*[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]]
**[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]]
* [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]]
* [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]]
* [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]]
== நடப்பு இலக்குகள் ==
[[File:Piebar icon.gif|100px]]
=== பயிலரங்குகள் ===
==== கல்லூரிப் பயிலரங்கு 1 ====
* கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]]
* '''பயிற்சி நூல்கள்'''
:# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]]
:# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
* '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.
<gallery>
File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல்
File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
</gallery>
==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ====
* சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]]
பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று.
* [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது]
** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]]
** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும்.
* '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.
<gallery>
File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல்
File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல்
File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]]
</gallery>
==== கல்லூரிப் பயிலரங்கு 4 ====
* உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்)
* [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]]
* '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது.
<gallery>
File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20
File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
</gallery>
==== தனிநபர் பயிலரங்கு ====
* படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள்
<gallery>
File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]]
File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]]
File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]]
</gallery>
* எழுத்துணரியாக்க மேம்பாடு
<gallery>
|[[பயனர்:Yasosri|யசோதா]] எழுத்துப்பிழைநீக்குதல்
|[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]]
|இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]]
|ஹேமலதா
* கல்லூரி, நூலகம்
|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள்
|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]
|[[பயனர்:Rabiyathul|இராபியா]]
|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]
| [[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]]
</gallery>
* உரிம ஆவணங்கள்; பரப்புரை
<gallery>
|[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்]
|[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]]
|[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்கள்; மேலாண்மை
|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை
|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை
</gallery>
== மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] ==
2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன.
* '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] இருப்பினும், எழுத்துணரியாக்க முறைகளில் இவைகள் பெரும்பாலும் களையப்பட்டன.
=== நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] ===
* சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது.
* 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன.
* தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது.
* தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும்.
==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ====
* [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
=== முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] ===
==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ====
* மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும்.
# சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது.
# [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன்.
# [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன்.
==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ====
# [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small>
# [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small>
# [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small>
# [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small>
# [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது.
# [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும்.
==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ====
* [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம்.
* [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன்.
** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]]
** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]]
** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]
* [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன.
=== கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] ===
== சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] ==
# 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1
# 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
# 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] -
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small>
# 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]]
# 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]]
# 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]]
# 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]]
# 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]]
# 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]]
=== முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் ===
# 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]]
# 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
== இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] ==
* இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
* இயக்கு தளங்கள் (Operating Softwares)
** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி
** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE)
* - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' :
* இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம்.
# [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்'''
# '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம்
# '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம்.
=== கற்பதற்கான காட்சியகம் ===
<gallery>
File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள்
File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள்
File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw
File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf
File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf
File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை
File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக
File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas
File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation
File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம்
File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல்
File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved
File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத
File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல்
File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல்
</gallery>
== சமூக ஊடகத் தொடர்புகள் ==
[[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]]
* டெலிகிராம் :
* Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு].
* [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன].
* பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன.
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]]
hwz4jm1wuyzz1egv38gjega1djwflcx
1433659
1433658
2022-07-21T02:59:56Z
Info-farmer
232
/* மின்வருடல் பணிகள் 40px 40px 40px */ திருத்தம்
wikitext
text/x-wiki
{{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''</big>}}
[https://wikimediafoundation.org/ விக்கிமீடிய நிறுவனம்] பல உலக மொழிகளின் விக்கித்திட்ட வளர்ச்சிகளுக்கு நிதிநல்கை அளிக்கிறது. அதன் ஒரு பிரிவான தென்கிழக்கு ஆசிய மொழிகளுக்கான திட்டப்பக்கத்தின் விவரங்களை, [[m:Grants:Regions/SAARC| அதற்குரிய தனிப் பக்கத்தில்]] அறிய இயலும். தமிழ் விக்கிமூலத்தில் நல்கை பெறுவதற்கான முதற்முயற்சி, [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09#தென்கிழக்கு_ஆசிய_நாடுகளுக்கான_திட்ட_நல்கை|தமிழ் விக்கிமூல ஆலமரத்தடியில்]] அறிவிக்கப்பட்டு, [[பயனர்:info-farmer|தகவலுழவனால்]] தொடக்கப்பட்டது. [https://wmf.fluxx.io/dashboard அதற்குரிய விண்ணப்பத்தினை], அந்நிதிநல்கைக் குழுவினரால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் விக்கிமூலத்திற்க்கு அளிக்கப்படுவதாக மின்னஞ்சல் வழியிலும், [[m:Grants:Programs/Wikimedia Community Fund/Acquisition of missing pages and books of Nationalised books, Wikisource workshops and a GLAM activity in TamilNadu|நிதிநல்கைக்கானப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ]] அந்நல்கையால் நடைபெறும் பணிகளில் பெரும்பாலானவை, இணைய இணைப்பற்ற களப்பணிகளாகவும், இறுதியாக தமிழ் விக்கிமூலத்தில் நடந்த மாற்றங்களையும், இத்திட்டப்பக்கத்தில் தொடர்ந்து தொகுக்கப்படுகிறது. முதல் முயற்சி என்பதால் நாம் கூட்டாக இணைந்து செயற்பட்டால், தொடர்ந்து நம் மொழிக்கான விக்கிமூல வளர்ச்சிகளை விரைந்து அடையலாம். உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1|இதன் உரையாடற் பக்கத்தில்]] தெரிவிக்கவும்.
== திட்டகாலம் ==
[[File:Stopwatch-2624401.svg|100px|இடது]]
தொடக்கம் : 3 பிப்ரவரி 2022
முடிவு: 15 சூலை 2022
'''மொத்த காலம்''' : 6 மாதங்கள்
{{clear}}
== விண்ணப்ப இலக்குகள் ==
[[படிமம்:Sustainable Development Goals - logo.svg|100px|இடது]]
விக்கிமீடிய அறக்கட்டளை நல்கை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திட்ட இலக்குகளை இங்கு காண்போம். விக்கிமீடிய அறக்கட்டளையின் பல்வேறு திட்ட உதவிகளால் நடைபெற்ற பயிற்சியினால் பெற்ற அனுபவங்களால், விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய இலக்குகளை அலகுகளாகக் கொண்டு இத்திட்டம் வரையப்பட்டது.
{{clear}}
* <big>'''உரிமம்'''</big>
: [[File:Creative Commons heart logo.svg|37px]] - [[:c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents|தமிழ்நாடு அரசு 80 நூலாசிரியர்களுக்கு அளித்த,12 அரசாணைகள்.]]
* '''<big>GLAM</big>'''
: {{circled text|{{larger|'''G'''}}|size=2|radius=1}} - Gallery = காட்சியகம் = '''230''' படங்கள்
::: [[:c:Category:குறளோவியக் கண்காட்சி|1. குறளோவியக் கண்காட்சி (024)]], [[:c:Category:பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் காட்சியகம்|2. பிரஞ்சுத் தொடர்பு ஒன்றிணைதல் (139)]], [[:c:Category:Gallery of Tamil Nadu archaeological sites|தமிழ்நாட்டின் தொல்லியல் இடங்கள் (067)]]
: {{circled text|{{larger|'''L'''}}|size=2|radius=1}} - Library = நூலகம் = 0000 பக்கங்களை கீழுள்ளவை கண்டறியப்பட்டன.
::: கண்டறிந்த விடுபட்ட பக்கங்கள் (); எழுத்துப்பிழைக் களைந்த பக்கங்கள்(); கூட்டுமுயற்சி (144 நூல்கள்); உருவாக்கியவை (15 நூல்கள்)
: {{circled text|{{larger|'''A'''}}|size=2|radius=1}} - Archeive = காப்பகம் = கோப்புகள்
::: 1. ஓலைச்சுவடியோலைகள் (); [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil Wiktionary pronunciations|2. 166 ஒலிக்கோப்புகள்]]
: {{circled text|{{larger|'''M'''}}|size=2|radius=1}} - Museum = அருங்காட்சியகம் = '''657''' படங்கள்
::: [[:c:Category:Government Museum, Ooty|1. ஊட்டி அரசு அருங்காட்சியகம் (170)]], [[:c:Category:AIA Archaeology museum, Coimbatore|2. கோயமுத்தூர் தொல்லியல் தொழிற்கூட அகழ்வைப்பகம் (180)]], [[:c:Category:Government Museum, Coimbatore|3. கோவை அரசு அருங்காட்சியகம் (093)]], [[:c:Category:G D Naidu Museum|4. ஜி டி நாயுடு அருங்காட்சியகம் (214)]]
* [[c:Category:Rapid_Fund_SAARC_2022_Tamil_Wikisource]] என்ற பொதுவகப் பகுப்பும் வளர்க்கப்படுகிறது
== விரிவடைந்த விக்கிமூலத்திட்டங்கள் ==
[[File:Project icon 01 analyse goals.png|100px|இடது]]
விண்ணப்பத்தில் குறிக்கப்பட்ட இலக்குகள் கீழ்கண்ட விக்கிமூலத் திட்டங்களின் முதன்மைப் பணிகளை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்களை 2016 ஆம் ஆண்டு முதல் பலர் வளர்த்து வந்துள்ளனர். அவ்வளர்ச்சிகளானது, ஏறத்தாழ ஆறு ஆண்டுகள்(2016 முதல் 2021, ...) அலைப்பேசி வழியாகவும், விக்கிமீடியக் கூடல்களிலும், இணையவழிக் கூடல்களிலும் நடந்தன. அவற்றால் ஏற்பட்ட விக்கிமூல வளர்ச்சிகளை இங்கு சுருக்கமாகக் காணலாம்.
{{clear}}
*[[விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்]]
** [[c:Category:Rapid Fund SAARC 2022 taWS the government documents]] என்ற பகுப்பில் ஒவ்வொரு நாட்டுடைமை நூல் ஆசிரியர்களுக்குரிய அரசு ஆவணங்கள் மேம்படுத்துப்பட்டு வருகின்றன.
=== புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் [[File:Collaboration logo V2.svg|40px]] ===
* கணியம் அறக்கட்டளை - சென்னையில் நடந்தவும், தட்டச்சு செய்த 10,000 பக்கங்களை தந்துள்ளனர்.
** கணியம் அறக்கட்டளையைச் சார்ந்த பயனர் [[w:user:Gnuanwar|அன்வர்]] 50 க்கும் மேற்பட்ட நூல்களின் விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவினார்.
* இணைய ஆவணகம் / நூலகம் அறக்கட்டளை - அனைத்துத்தமிழ் கலைக்களஞ்சியங்களை மின்வருடல் செய்கின்றனர். இதுவரை 33 தொகுதிகள் தந்துள்ளனர். எ-கா [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#கலைக்களஞ்சிய_நூலும்,_விக்கிப்பீடியக்_கட்டுரைகளும்|பிற விவரங்களை விக்கிப்பீடியாவில் அறியலாம்.]]
* பதிப்பகத்தார் - மணிமேகலை பதிப்பகம் மூன்று நூல்கள் மின்வருடப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்களும் மின்வருடப்பட்டுள்ளன. உரிமையாளர் சிங்கப்பூரில் இருப்பதால் உரிம ஆவணம் பெறுவதில் காலதாமதகிறது.
* நூலாசிரியர் குடும்பத்தார் - வெள்ளியங்காட்டான்(இராசேந்திரன், சத்தியராசு ), பெருஞ்சித்திரனார்(யோசுவா), அ.மு.பரமசிவானந்தம்(முகைதீன்), வ. உ. சி.(கார்த்தி) இன்னும் பிற
* பேராசிரியர்களின் அமைப்புகள் - முனைவர் சத்தியராசு (ஆய்வுக்கட்டுரைகள்), முனைவர் இராசேந்திரன் (தொல்லியல்)
* த. இ. க. க. அருண் வழியே அயோத்திதாசரின் இரண்டு தொகுதிகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்னூல் ஆக்கம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டன.
* [[user:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]] அ. மு. பரமசிவனாந்தம் நூல்கள் குறித்து தொடர்ந்து பலவித முயற்சிகள் எடுத்து அவரின் நூல்களையும்,அவர்கள் கல்லூரியில் விக்கிமூலத் தொடர்வகுப்பு நடத்தவும் அடித்தளமிட்டுள்ளார்.
*[[விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்கள் மேம்பாட்டுத்திட்டம்]]
** கண்டறிந்த விடுபட்ட பக்க எண்ணிக்கை :
** கண்டறிந்த முழு நூல்களின் எண்ணிக்கை :
*[[விக்கிமூலம்:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியங்கள் பதிவேற்றத் திட்டம்]]
**[[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]]
* [[விக்கிமூலம்:ஒலிப்புக்கோப்பு திட்டம்]]
* [[விக்கிமூலம்:வ. உ. சிதம்பரம் பிள்ளை நூல்கள்]]
* [[விக்கிமூலம்:பனுவல் படியிடல் திட்டம்]]
== நடப்பு இலக்குகள் ==
[[File:Piebar icon.gif|100px]]
=== பயிலரங்குகள் ===
==== கல்லூரிப் பயிலரங்கு 1 ====
* கோவை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-6]]
* '''பயிற்சி நூல்கள்'''
:# [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]]
:# [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
* '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.
<gallery>
File:Sri Ramakrishna college of Arts and Science for women 1-coimbatore-TamilNade-India.jpg|நிகழ்ச்சி நிரல்
File:Sri Ramakrishna college of Arts and Science for women 2-coimbatore-TamilNade-India.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
</gallery>
==== கல்லூரிப் பயிலரங்கு <big>2, 3</big> ====
* சென்னை : [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7]]
பெரும்பாலான திட்டப்பணிகள் களப்பணியென்றாலும், தற்போது இணைய இணைப்பின் வழியாக விக்கிமூலத்தில் உருவாக்கப்படும் மேம்பாடுகளுடன் இணைந்து பங்களிப்பு செய்தல் நன்று.
* [[c:File:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்ற நூலினை தரமேம்பாடு செய்தே, பொதுவகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
** [https://www.youtube.com/watch?v=tIZDaQG5EGw அந்த லினக்சு நுட்ப முறை (pdf2ppm) யூடிப்பில் சுருக்கமாக விளக்கப்படுகிறது]
** இம்மின்னூலை உருவாக்கம் : [[பயனர்:info-farmer| 1. info-farmer]], [[பயனர்:Tshrinivasan|2. Tshrinivasan]], [[பயனர்:Nethania Shalom|3. Nethania Shalom]] [[பயனர்:Joshua-timothy-J|4. Joshua-timothy-J]]
** '''பயிற்சி நூல்''' : [[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] என்பதனை, 100 மாணவிகள் எழுத்துப்பிழைகளைக் களைந்து பக்கங்களை ஊதா நிறமாக்கியுள்ளனர். மஞ்சளாக்க விக்கிநிரல் இடப்பட வேண்டும்.
* '''விளைவு''': எழுத்துப்பிழை முழுமையாகக் களையப்பட்டு ஊதா நிறமாகப் பக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன.
<gallery>
File:Tamil Wikisource workshop SHASUN 01.jpg|ஏப்ரல் 4 கணிதவியல்
File:Tamil Wikisource workshop SHASUN 3.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
File:Tamil Wikisource workshop SHASUN 1.jpg|ஏப்ரல் 5 வணிகவியல்
File:Tamil Wikisource workshop SHASUN 2.jpg| [[பயனர்:TVA ARUN|TVA ARUN]]
</gallery>
==== கல்லூரிப் பயிலரங்கு 4 ====
* உளுந்தூர் பேட்டை : ஶ்ரீ சாரதா கலை, அறிவியல் கல்லூரி (உறைவிடக் கல்லூரி, 55-65 மாணவிகள்)
* [[விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-8]]
* '''விளைவு''': இணைய இணைப்பு சரிவர இல்லை. கல்லூரியில் விளையாட்டு விழா நடந்து கொண்டு இருந்தது.
<gallery>
File:Tamil WS workshop1 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|ஏப்ரல் 20
File:Tamil WS workshop2 Ulundurpet Sri Sarada Arts Science college for Women.jpg|[[பயனர்:info-farmer|info-farmer]]
</gallery>
==== தனிநபர் பயிலரங்கு ====
* படம் செதுக்கும் பள்ளிக் குழந்தைகள்
<gallery>
File:Wikisource-Tamil user Rabiyathul Jesniya-TamilNadu govt school girl 2022-.webm|[[பயனர்:Rabiyathul Jesniya|ஜெசினியா]]
File:விக்கிமூலம் - படம் செதுக்கும் வழிமுறை - நி.ச.தமிழினி.webm|[[பயனர்: Thamizhini Sathiyaraj|தமிழினி]]
File:விக்கிமூலம் - படம் செதுக்கல் (Picture Crop) - நி.ச.பாவாணர்.webm|[[பயனர்:Pavanar Sathiyaraj|பாவாணர்]]
</gallery>
* எழுத்துணரியாக்க மேம்பாடு
<gallery>
|[[பயனர்:Yasosri|யசோதா]] எழுத்துப்பிழைநீக்குதல்
|[[பயனர்:Deepa arul|தீபா அருளரசன்]] [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf|கலைக்களஞ்சியம் 1 மேம்பாடு]]
|இராதை - [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf| 0000 பக்கங்கள்]]
|ஹேமலதா
* கல்லூரி, நூலகம்
|[[w:பயனர்:Gnuanwar|அன்வர்]] ரோசா முத்தையா நூலகம்; விடுபட்ட பக்கங்கள்
|[[பயனர்:Nethania Shalom|சாலோம்]]
|[[பயனர்:Rabiyathul|இராபியா]]
|[[பயனர்:Joshua-timothy-J|யோசுவா]]
| [[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]]
</gallery>
* உரிம ஆவணங்கள்; பரப்புரை
<gallery>
|[[User:Kavitha Packiyam|கவிதா]] [https://commons.wikimedia.org/wiki/Special:Contributions/Kavitha_Packiyam ஒலிப்புக்கோப்புகள்]
|[[பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்|முகைதீன்]], [[ஆசிரியர்:அ. மு. பரமசிவானந்தம்/நூற்பட்டியல்|அ. மு. பவின் கல்லூரியுடன் இணக்கம்]]
|[[பயனர்:TVA ARUN|அருண்]], அரசாவணங்கள்; மேலாண்மை
|[[User:Neyakkoo|சத்தியராசு]] உரிமம், பரப்புரை
|[[பயனர்:Rajendran Nallathambi|இராசேந்தின்]] உரிமம், பரப்புரை
</gallery>
== மின்வருடல் பணிகள் [[படிமம்:Noun Library 2821235.svg|40px]] [[File:Book notice.svg|40px]] [[படிமம்:Book (Search).svg|40px]] ==
2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற நூலாசிரியர்களின் நூல்களில் பல பக்கங்கள் இல்லை. மேலும் பல நூல்கள் உருவாக்கப்படவே இல்லை. பல நூல்கள் மின்வருடப்படவில்லை. அவை இங்கு தேடி இணைக்கப் படுகின்றன.
* '''கவனிக்க:''' மின்வருடலின் போது, மேல்பக்க ஓரத்தில் வருவது போன்ற கோட்டினை, நான்கு ஓரங்களிலும் நீக்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, [[பக்கம்:கனிச்சாறு 1.pdf/39]] அப்பொழுதே எழுத்துணரியாக்கம் சிறப்பாக இருக்கும்.
=== நடப்பவை [[படிமம்:Underconstruction icon gray.svg|35px]] [[படிமம்:Gnome-dev-scanner.svg|40px]] ===
* சீவகன் கதை மின்வருடல் முடிந்து தூய்மைப் பணி நடைபெறுகிறது. பழைய நூல் என்பதால் அதிக நேரம் ஆகிறது.
* 1909 ஆண்டு வெளியான ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி ~1200 பக்கங்கள். 700 பக்கங்கள் முடிந்துள்ளன.
* தந்தைப் பெரியார் - நம்மிடம் இருப்பது பழைய பதிப்பு என்பதாலும், விடுபட்ட பக்கங்களை எடுக்க இயலவில்லை என்பதாலும், இந்த புதிய நூலில் படங்கள் நிறை உள்ளன என்பதாலும் முழுமையான புதுநூலாக இது மின்வருடல் செய்யப்பட்டது.
* தந்தைப்பெரியார் குறித்து [[ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல்|பாவலேரேறு பெருஞ்சித்திரனார்]] நூல் உள்ளது. இது முழுமையாக உருவாக்கப்பட வேண்டும்.
==== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ====
* [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
** [[c:Tamil_Audiobooks#நடிகவேள்_எம்._ஆர்._இராதாவின்_சிறைச்சாலைச்_சிந்தனைகள்]] - 30 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
** [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - 13 ஒலிப்புக்கோப்புகளும், அதற்குரிய அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
=== முடிந்தவை [[File:Icon library.svg|40px]] [[File:Book template.svg|40px]] ===
==== 1. உருவாக்கம் - மின்வருடிய முழுநூல்கள் ====
* மூலநூல் பெறப்பட்டு, மின்வருடல் பணி, செம்மைப்படுத்தி பொதுவகத்தில் ஏற்றி, அட்டவணை உருவாக்கப்பட்டு, எழுத்துபிழைகள் களையப்பட்டுள்ளன. [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned]] என்ற பகுப்பில் தனிமுயற்சிகளைக் காணவும்.
# சீவகன் கதை - அ. மு. பரமசிவானந்தம் - 144 பக்கங்கள் மின்வருடல் முடிந்தது. கன்னிமாரநூலகம், ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாஞ்சூர், யோசுவா, அன்வர். பழைய நூல் என்பதால் மின்வருடல் படங்களில் அதிக துப்புரவு பணி நடந்து கொண்டு இருக்கிறது. . மிகப்பழைய நூல் படியே கிடைத்தது. அதனால் துப்புரவு பணி ஒரு பக்கத்திற்கு 15-20 நிமிடங்கள் ஆகின்றது.
# [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]] நூலுக்கு மேலடி இட, யோசுவாவுக்கு பைத்தான் (PAWS) பயிற்சித் அளித்துள்ளேன்.
# [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] நூலுக்கு மேலடி இட, [[பயனர்:Aasathmatheena|ஆசாத் மிதினாவுக்கு]] பைத்தான் (PAWS) பயனருக்கு பயிற்சி அளித்துள்ளேன்.
==== 2. உருவாக்கம் - கூட்டுறவு முழுநூல்கள் ====
# [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(நூலக அறக்கட்டளை மின்வருடியது)</small>
# [[அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small>
# [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] <small>(காண்க:பொதுவக விவரப்பக்கம், இந்த அட்டவணையின் பேச்சுப்பக்கம்)</small>
# [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf]] <small>(Tamil digital library எடுத்து மேம்படுத்தி, 4விடுபக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)</small>
# [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]] - எழுத்துப்பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது.
# [[:c:Category:Rapid Fund SAARC 2022 Tamil books scanned by partnerships]] என்ற பகுப்பினையும் காணவும்.
==== 3. நூலகத்தால், பக்கங்கள் இணைக்கப்பட்டு முழுமையான மின்னூல்கள் ====
* [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவகம்]] என்ற பகுப்பில் காணலாம்.
* [[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்-பொதுவக வழுவுள்ளவை]] என்ற பகுப்பினையும் காணவும். நிலவும் வழுவகையின் கீழே ஒரு எட்டுக்காட்டுடன் விவரித்துள்ளேன்.
** '''வழு 1''': பக்கம் இணைக்கப்பட்டதால், மெய்ப்புத்தரவு வரலாற்றோடு நகர்த்தப்பட வேண்டும் - [[அட்டவணை பேச்சு:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf]]
** '''வழு 2''': [https://commons.wikimedia.org/w/index.php?title=File%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf&type=revision&diff=655282863&oldid=655282107 மீளமைக்க இயலுகிறது.] எனவே, எப்பயனரும் முந்தைய பதிப்பை விக்கிமூலத்தில் அமைக்கலாம்.[[அட்டவணை பேச்சு:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf]]
** மேற்கண்ட வழுக்கள் களையப்பட்ட பின்பு பதிவேற்ற அணியமாக உள்ள நூல்கள்:[[:பகுப்பு:விடுபட்ட பக்கங்களைக் கண்டறிந்த அட்டவணைகள்]]
* [[]] உரிய பக்கங்கள் கண்டறிய வேண்டிய நூல்கள் இவற்றில் உள்ளன.
=== கிடைக்காதவை [[File:Book red; question marks.svg|40px]] [[File:Kjots.svg|35px]] ===
== சொற்ப்பிழைத் திருத்தம் முடிந்தவை [[File:Book (97559) - The Noun Project.svg|60px]] ==
# 112 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65320 பங்களித்தவர்கள்(query)] - [[அட்டவணை:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf]] - பயிலரங்கு 1
# 129 பக்கங்கள், பயிலரங்கு 1 : [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
# 194 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/63653 பங்களித்தவர்கள்(query)] பயிலரங்கு 2, 3 :[[அட்டவணை:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf]] -
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65319 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf]] <small>(சரிபார்: [[c:Commons:Watermarks]]-நூலக அறக்கட்டளை பேசியுள்ளேன்.)</small>
# 193 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65318 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf]]
# 142 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65226 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 1.pdf]]
# 287 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65306 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 2.pdf]]
# 150 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65314 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 3.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65315 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 4.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65316 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 5.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65317 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 6.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66031 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 7.pdf]]
# 039 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66032 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:கனிச்சாறு 8.pdf]]
# 218 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66033 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:தமிழின எழுச்சி.pdf]]
# 044 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/66034 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:இட்ட சாவம் முட்டியது.pdf]]
=== முழுமையாக மறுபார்வையிட்ட மின்னூல்கள் ===
# 080 பக்கங்கள், [https://quarry.wmcloud.org/query/65617 பங்களித்தவர்கள்(query)] [[அட்டவணை:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf]]
# 129 பக்கங்கள் - பங்களித்தவர்கள் - [[அட்டவணை:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf]]
== இத்திட்ட மென்பொருள்கள் [[படிமம்:FLOSS logo.svg|40px]] ==
* இத்திட்டத்தில் முழுக்க முழுக்க '''கட்டற்ற மென்பொருட்களே''' பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்தும் அவைகளை கணினியில் நிறுவி பயன்படுத்துதல் குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
* இயக்கு தளங்கள் (Operating Softwares)
** [[படிமம்:1 Openlogo-debian 10 Kde-ta.svg|50px]] டெபியன் பதிப்பு 10 கேடியி
** [[படிமம்:LinuxMint Nice Logo.svg|50px]] லினக்சு மின்டு (19 Cinnamon. 20 MATE)
* - [[File:Wilber-gimp.png|50px]] மின்வருடல் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் சிம்ப் (GIMP) பயன்படுத்தப்படுகிறது. '''நிகழ்படம்''' :
* இறுதியான படங்களை மூன்று முறைகளில் மின்னூலாக மாற்றலாம்.
# [[படிமம்:Antu libreoffice-draw.svg|40px]] லிபரே டிராவைக் கொண்டு மாற்றலாம். '''நிகழ்படம்'''
# '''gscan2pdf''' (GUI) கொண்டு மின்னூலாக மாற்றலாம்
# '''img2pdf''' என்ற கட்டளை வழி (CLI = Terminal) கொண்டு மாற்றலாம்.
=== கற்பதற்கான காட்சியகம் ===
<gallery>
File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm|விக்கிமீடியத்திட்டங்கள்
File:0 Introduction Wikisource Tamil OCR tools by debian 10 KDE.webm | எழுத்துணரியாக்கமுறைகள்
File:1 pdf creating by Libre draw in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 1 Libre Draw
File:2 pdf creating by gscan2pdf in debian 10 KDE.webm| மின்னூல் உருவாக்கல் 2 gscan2pdf
File:3 pdf creating by img2pdf A6 in Linux Mint 20 MATE.webm| மின்னூல் உருவாக்கல் 3 img2pdf
File:Audacity tool for wiktionary Tamil in debian 10 KDE.webm|விக்சனிரிக்கான அடாசிட்டி முறை
File:Curl downloading Creative Commons images recursively-2022 April.webm|இணையப்பக்கங்களை பதிவிறக்குக
File:GIMP fit the image to the canvas.webm|GIMP 1 fit canvas
File:GIMP cropping rotation by Tamil in debian 10 KDE.webm| GIMP 2 cropping rotation
File:Rename batch by krename tool in debian 10 KDE.webm|பல கோப்புகளின் பெயர்மாற்றல் நுட்பம்
File:ImageMagick2 convert command-cropping uniformly-many.webm|படங்களை ஒரே அளவினதாக மாற்றல்
File:ImageMagic making PDF issue solved.webm| PDF xml openning issue solved
File:Pdf2image-poppler utils and GIMP cleaning in LinuxMint 19.webm|மின்னூலை வேண்டிய படங்களாக மாற்றுத
File:Pdfshuffler for rearranging, deleting pages of a PDF in LinuxMint.webm|மின்னூல் பக்கங்களை மாற்றுதல், நீக்குதல்
File:GIMP darkening text of a image in debian 10 kde 64bit-2022-05-08 12.03.59.webm|தெளிவற்ற எழுத்துக்களை சீராக்குதல்
</gallery>
== சமூக ஊடகத் தொடர்புகள் ==
[[படிமம்:Book store-free-ebooks-online-Tamil-kaniyam-FTB.svg|40px]]
* டெலிகிராம் :
* Tamil Linux community's telegram, you tube and [http://www.kaniyam.com/new-forum-website-to-discuss-free-open-source-technologies-in-tamil-https-forums-tamillinuxcommunity-org/ (விவரம்)] [https://forums.tamillinuxcommunity.org/ website started] to promote FOSS esp., wikibased techs. (e.g.) [https://forums.tamillinuxcommunity.org/t/sudo-pip-install-pyexiv2/148/6 ஒரு கோப்புரையில் உள்ள நூல்களை பதிவேற்றும் கருவி குறித்த வழு].
* [[:File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm|விரைவித் தொகுப்பி]], விழுப்புரம் [https://www.mediawiki.org/wiki/Wikimedia_Hackathon_2022/Showcase விக்கி நிரலோட்டத்தின் போது, மேம்படுத்துப்பட்டன].
* பனுவல்களை எடுத்து ஒட்டுவதற்கான பைத்தான்3 நிரலாக்கத்தால், முதற்கட்ட வெற்றிகரமான நிரலாக்கம் உருவாக்கப்பட்டன. தந்தை பெரியார், தேவநேயம் 1 நூலில் சோதிக்கப்பட்டன.
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்கள்/தென்கிழக்கு நல்கை 1]]
dcphvlg1t31boxtpb9kk6sbvgittp3k
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/640
250
445752
1433582
1433579
2022-07-20T12:17:48Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|588|இந்தியா}}</b></noinclude>யூரென்ஸ்,) டில்லீனியா இந்திக்கா, லீயா, மகிழ் சாதி
(மிமுசாப்ஸ்), இலுப்பைச் சாதி (பாசியா), ராக்ஸ்
பர்ஜியா முதலிய வகைகள் காணப்படுகின்றன. உள்
நாட்டிலுள்ள மலைக் காடுகள் வறண்டவை. அவற்றின்
இடையிடையே அடர்த்தியில்லாத பள்ளத்தாக்குக்கள்
உண்டு. இந்தப் பள்ளத்தாக்குக்களில் பயிர் விளைவிக்கப்படுகிறது. இந்த மலைகளின் வடக்கு, கிழக்குச் சரிவுகளில் உள்ள காடுகள் கிழக்கு மலைத்தொடரில் உள்ளவற்றைப்போல இருக்கின்றன. சந்தனவேம்பு அல்லது தேவதாரம் (செட்ரெலா டூனா), வெள்ளைப்பயின் (வாட்டிக்கா ரொபஸ்ட்டா),
காட்டுமா அல்லது சாரை (புக்கனானியா), சேங்கொட்டை (செமகார்ப்பஸ் அனக்கார்டியம்), புரசு (பூட்டியா பார்விபுளோரா) முதலிய வகைகள் மிகுதியாகவும் வடக்குப் பாகங்களில் தணக்கு அல்லது கொங்கிலவு (காக்லோஸ்பெர்மம்), பஞ்சு (காசிப்பியம்), சிக்ரேசியா டாபுளாரிஸ், ஸ்வீடீட்னியா பெப்ரிபூஜா, பாஸ்வெல்லியா தூரிபெரா, ஹார்ட் விக்கியாபைனேட்டா, பாசியாலாட்டி போலியாமுதலிய வகைகள் ஓரளவிலும் காணப்படுகின்றன. பீனிக்ஸ் அக்காலிஸ் என்ற ஈச்சமரம் தவிர வேறு பனைவகைகள் இந்தப் பகுதிக்கு இயற்கையாக உரியவையல்ல. {{float_right|பொ. து. வ.}}
{{center|{{larger|<b>விலங்குகள்</b>}}}}
இந்தியாவில் பிராணிகளுக்குக் குறைவில்லை. அதிகமாகவும் நானாவிதமாகவும், நாட்டுக்கு நாடு வேறுபட்டும் இருக்கின்றன. மலையாளக் கரையில் பெருங் காடுகள் அடர்ந்து, உயர்ந்த மலைத்தொடர் இருப்பதனாலும், தட்ப நிலையாக இருப்பதனாலும் பிராணி வருக்கங்கள் மிகுந்திருக்கின்றன. அதிகமான வகைகள் இருப்பதேயன்றி. அம்மலைத் தொடருக்குக் கிழக்கேயுள்ள நாட்டில் காணாத வகைகள் பலவும் அங்கு
உண்டு. இது போலவே அஸ்ஸாம், பர்மா முதலிய நாடுகளிலும் அடர்ந்த காடுகளும் மழைப் பெருக்கமும்
இருப்பதால் அங்கும் பிராணி வகைகள் மிகுந்திருக்கின்றன. ராஜபுதனம் முதலிய பாலைவன நாடுகளில் இவை குறைந்து காணப்படுகின்றன. இந்தியாவில் நாட்டுக்கு நாடு தட்பவெப்பநிலை மாறுபட்டிருப்பதால், பிராணி வகைகளும் அந்நிலைக்கு ஏற்றவாறு மாறுபட்டிருக்கின்றன.
உயிரியலறிஞர் இந்தியாவுடன் பர்மாவையும் இலங்கைத் தீவையும் ஒன்றாகச் சேர்த்து, அம் முழுப் பரப்பையும் இந்தியப் பிராந்தியம் என்று கூறுவது வழக்கம். இந் நாடுகள் மூன்றும் அடங்கிய இந்தியப் பிராந்தியத்திலே கீழ்க்கண்டவாறு பிராணிகளின் பட்டி குறிக்கப்பட்டிருக்கின்றது.
{| class={|class="wikitable sortable"
|-
! scope="col" style="width: 10px;" |
! scope="col" style="width: 10px;" |
! scope="col" style="width: 10px;" | சாதிகள்
! scope="col" style="width: 10px;" |
! scope="col" style="width: 10px;" | இனங்கள்
|-
| பாலூட்டிகள்
| சுமார்
| 120
|சுமார்
|420
|-
| பறவைகள்
| ,,
| 600
|,,
|1,700
|-
| ஊர்வன
| ,,
| 150
|,,
|550
|-
| தவளை வகுப்பு
| ,,
| 30
|,,
|140
|-
| மீன்கள்
| ,,
| 380
|,,
|1,500
|
|}
{{larger|பாலூட்டிகள் (Mammals) :}} உடல் அமைப்பில்
மனிதனுக்கும் குரங்கு ஜாதிகளுக்கும் சில ஒற்றுமைகளைக் காண்கிறோம். வாலில்லன, வாலுள்ளன என்னும் இருவகைக் குரங்குகளில், ஊராங் ஊட்டான்,
சிம்பன்சீ என்னும் வாலில்லாக் குரங்குகள் இந்திய
நாட்டில் தற்காலத்தில் இல்லை. ஆனால் மிகப் பழைய
காலங்களில் இமயமலை அடிவாரத்திலே அவை வாழ்ந்திருந்தன என்பதற்கு அறிகுறியாக அப்பிராணிகளின் எலும்புக் கூட்டை ஒத்துள்ள பாசில்கள் வடமேற்கு இந்தியாவில் கிடைத்துள்ளன. அதுவுமன்றி இன்னொரு வகையான கிப்பன் என்னும் வாலில்லாக் குரங்கு இன்றும் அஸ்ஸாம், பர்மா காடுகளில் வசிக்கின்றது. இது ஊலூகு, ஊகம் எனப்படும். வாலுள்ள குரங்குகளில் பலவிதங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றிற்குக் கன்னத்தில் தீனியை அடக்கிவைத்துக் கொள்வதற்குப் பைகள் இருக்கின்றன. மற்றவற்றிற்கு இந்தப் பை இல்லை. முதல் வகுப்புக் குரங்குகளில் பலவகைகள் இருக்கின்றன. தென்னிந்தியாவில் மூன்று இனங்கள் இருக்கின்றன.
அவற்றுள் ஒன்றுக்குத் தலைமயிர் தொப்பி போன்று உச்சியிலிருந்து சுற்றிலும் ஆரையொழுங்கில் அமைந்திருக்கும். இவ்வினக் குரங்கைத்தான் சாதாரணமாக ஆட்டக்காரர்கள் தங்களுடன் இழுத்துச்சென்று, குழந்தைகளுக்கு ஆட்டங்காட்டிப்
பிழைக்கிறார்கள். இந்த இனக் குரங்கைப் பழக்கிப் பல
வேலைகளைச் செய்யக் கற்பிக்கலாம். இது மக்கள் நடமாடுகின்ற இடங்களிலே கும்பலாக மரங்களின்மேல்
வசிக்கின்றது. மலையாளப் பிரதேசத்தில் கருங்குரங்கு
என்பதைப் பார்க்கலாம். இதற்கு உடலில் கருமயிரும்,
தாடியில் சாம்பல் நிற மயிரும் உண்டு. வால் நுனியில் மயிர்க்குச்சுத் தொங்கும். மயிர்க்குச்சுத் தொங்குவதால் இதைச் சிங்கவால் குரங்கு என்றும் சொல்வார்கள். மூன்றாவது இனம் இந்தியா முழுவதிலும் காணப்படுகிறது. இது பழுப்பு நிறமாக இருக்கும்.
இதற்குத் தாடி கிடையாது.
கன்னப்பை இல்லாத குரங்குகளில் நான்கு இனங்கள்
காணப்படுகின்றன. இவைகளுக்கு வால் நீண்டிருக்கும்.
ஒன்று அனுமான் குரங்கு. இதுவே முசு எனப்படுவது.
இதை வட இந்தியாவில் சாதாரணமாகக் காணலாம்;
தென்னிந்தியாவில் குடகிலும், மைசூரிலும், ராயலசீமை
ஜில்லாக்கள் சிலவற்றிலும் வசிக்கின்றது. கைகளும்,
பாதங்களும் கறுத்திருக்கும். முகத்தைச் சுற்றி நீண்ட
மயிர்களும் தாடியும் இருக்கும். மைசூர், வயநாடு பிரதேசங்களிலும், வடக்கே நெல்லூர் வரையிலும், இந்தக்
குரங்கைப்போன்ற மற்றோரினம் காணப்படுகிறது.
ஆனால் இதற்குக் காலும் கையும் கறுத்திரா. மயிர்ச் செண்டு தலையைச் சுற்றி இருக்காது. அனுமான்
குரங்கைப்போன்ற மற்றோரினத்தை மலையாளப் பிரதேசத்தில் காணலாம் ; கைகளும் பாதங்களும் கறுத்திருக்கும்; உடம்பு நிறமும் கொஞ்சம் கறுத்துத் தோன்றும். மற்றோரினமும் மலையாள நாட்டில் காணலாம். அது மலையுச்சிகளில் வசிக்கிறது. இதனைப் பழநி, நீலகிரிகளிலும் காணலாம்.
இவற்றிற்கு அடுத்தபடியாகத் தேவாங்குகளைக் காண்கிறோம். இவைகள் சிறியவாய் மரக்கிளைகளுக்கிடையே வாசம் செய்யும். தமிழ்ப் பிரதேசங்களில் இவற்றுள் ஓரினத்தைக் காணலாம். இவை சில சமயங்களில் விற்பனைக்கு வரும். தமிழ் மருத்துவத்தில் சில கண் மருந்துகள் செய்வதற்குத் தேவாங்கின்கண் உபயோகப்படுவதாகக் கூறப்படுகிறது. மிகவும் மெதுவாய்க் கிளைகளைப் பிடித்துக்கொண்டு நடக்கும். மற்றோரினம் குடகுநாடு, மலையாளப் பிரதேசங்களில் காணப்படும்.
வௌவால் பறக்கும் பிராணியாயினும் பாலூட்டி
வகுப்பைச் சேர்ந்தது. இதுவும் குட்டி போட்டுப் பால்
ஊட்டுகிறது. இதில் பல இனங்கள் இருக்கின்றன.
பெரிய இனங்களில் ஒன்று பழந்தின்னி வௌவால்
என்பது. இதனை ஆல், அரசு முதலிய மரங்களில் கூட்டமாகத் தலை கீழாகத் தொங்கிக்கொண்டிருக்கக்
காணலாம். இது இரவில்தான் இரை தேடும். ஓர்
இனம் பழைய கட்டடங்களிலும் மனிதப் புழக்கமற்ற
கோயில்களிலும் காணலாம். மற்றோரினம் வாழை<noinclude></noinclude>
hjq1gb6z8v8mwqq8ynahd8gf2849kp3
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/641
250
445753
1433583
1418165
2022-07-20T14:04:02Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|589|இந்தியா}}</b></noinclude>மரத்துக் குருத்திலைகளில் வசிக்கிறது. இதன் நிறமும் அழகாக இருக்கும்; குருத்திலையை ஒத்திருக்கும்.
சில இனங்களுக்கு முகத்தின் தோல் இலைகள்போல்
மடிப்பாக (மூக்கு இலைகள் - Nose leaves) மூக்குக்கு
இரு பக்கத்திலும் இருக்கும். சில இனங்கள் மாமிசத்தை
உட்கொள்ளும்; தவளை, குருவி முதலியவற்றைப் பிடித்துத் தின்னும். ஒரு சிறிய இனம் வீடுகளில் சந்து
பொந்துகளில் வசிக்கும்.
பூச்சிதின்னி (Insectivora) என்னும் ஒரு வரிசை
பாலூட்டி வகுப்பில் உண்டு. அது சிறிய வரிசை.
அதைச் சேர்ந்தவை இந்தியாவில் ஏழெட்டு இனங்கள்
தான் இருக்கின்றன. மூஞ்சுறு, முள்ளெலி (Hedge -
hog), மரமூஞ்சுறு (Tree-shrew) என்பவை இவ்வரிசையைச் சேர்ந்தவை. இவை சிறிய விலங்குகள்.
கொறிப்பன (Rodent)வற்றுள் அநேக இனங்கள்
இருக்கின்றன. பல் இன அணில்கள், எலிகள்,
சுண்டெலிகள், பெருச்சாளிகள், முள்ளம்பன்றிகள்,
முயல்கள் இருக்கின்றன. மலையாளப் பிரதேசத்தில்
பறக்கும் அணில்களில் இரண்டு இனங்கள் இருக்கின்றன. இவை தங்கள் இருபக்கத்திலும் முன் பின் கால்களுக்கு இடையிலுள்ள தோல் மடிப்புக்களாகிய இறக்கைகளால் ஒரு மரத்தினின்று எட்டவுள்ள மற்றொரு மரத்திற்குத் தாவிப் பறந்து செல்கின்றன. இவ்வகையான அணில்கள் இலங்கையிலும் வசிக்கின்றன. முதுகில் மூன்று வரிகள் அமைந்த அணில்களை வீட்டிலும் தோட்டங்களிலும் சாதாரணமாகக் காண்கிறோம். மலைப்பிரதேசங்களில் பெரிய அணில் இனங்கள் காணப்படுகின்றன. எலிகளில் இருபது இனங்கள் இருக்கின்றன. எலிவகைகளில் சிறியவற்றைச் சுண்டெலிகள் என்றும் பெரியவற்றைச் பெருச்சாளிகள் என்றும் கூறுகிறோம். எலிகளும் முள்ளம்பன்றிகளும் முயல்களும்கூட இரவில் இரை தேடுகின்றன.
புலாலுண்ணி (Carnivora) களில் பல வகைகள்
இருக்கின்றன. சிங்கம் தென் இந்தியாவில் வசிப்பதில்லை. தற்காலத்தில் கத்தியவார் பிரதேசத்தில்
காணப்படுகின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன் பஞ்சாப், ராஜபுதனம் முதலிய நாடுகளில் வசித்திருந்ததாகக் கூறப்படுகிறது. சிங்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. பாதுகாவா விட்டால் கம்பீரமான இந்த விலங்கினம் இந்தியாவில் இல்லாமலே போய்விடும்.
புலி இந்தியக் காடுகளில் சாதாரணமாக வாழ்கின்றது. உடலின் பக்கங்களில் அழகான வரிப்பட்டையுள்ளது. பார்வைக்கு அழகுடையது. இதன் நகங்கள் கூர்மையானவை. இது மரஞ் செடிகள் அடர்ந்த காடுகளில் மான், ஆடு, பன்றி இவைகளை அடித்துத் தின்று
வாழ்கின்றது. செடிகளிடையே இருக்கும்பொழுது
இதைக் கண்டுபிடிப்பது எளிதன்று. உடம்பின்மேல்
இருக்கும் பட்டைகள் சூரிய வெளிச்சமும் மஞ்சளும்
கறுப்புமான இலைக் கிளைகளின் நிழலும்போல் காணும்.
காடுகளில் மற்றப் பிராணிகளைத் தேடியோடிப் பிடித்துத் தின்ன முடியாத புலிகள், மக்கள் நடமாட்டமுள்ள
கிராமங்களை அடைந்து, ஆடு மாடுகளையும் மனிதர்களையும் அடித்துக்கொண்டு போகும். இவை மனிதனுக்கு ஆபத்தானவை.
சிறுத்தைப்புலி புலியைவிட மிகவும் சாதாரணமாகக் காணப்படும். தோலில் கறுப்புப் புள்ளிகள் இருக்கும். சில சமயங்களில் முழுவதுங் கருநிறமான சிறுத்தையையுங் காணலாம். சிலர் சிறுத்தையை மான் பிடிக்க வளர்ப்பதுண்டு. இரண்டு வகைப் புனுகுப் பூனைகள் தென்னிந்தியாவில் இருக்கின்றன. இவற்றின்
பின்பாகத்தில் சில சுரப்பிகள் இருக்கின்றன. இச் சுரப்பிகளிலிருந்து புனுகு கொழுப்புப் போன்ற மஞ்சள்
பொருளாக வெளிப்படும். இதைப் பூனை அடைக்கப்பட்டிருக்கும் கூண்டின் கம்பி முதலியவற்றில் தேய்க்கும். இதைச் சேர்த்து வியாபாரிகள் விற்பார்கள்.
மரநாய் தென்னிந்தியாவில் அகப்படுகிறது. இது நாய்
வகையைச் சேர்ந்ததன்று; புனுகுப் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது.
கீரிப்பிள்ளைகளில் நான்கினங்கள் தென்னிந்தியாவில்
இருக்கின்றன. இவைகளுக்கும் பாம்புக்கும் பகைமை
என்பது யாவருக்கும் தெரிந்ததே. கழுதைப்புலிகளை
ஓநாய்கள் இல்லாத இடங்களில் காணலாம். ஓநாயைப்
போல இது ஆடுமாடுகளுக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்தானது. புலிப்பட்டைகள்போல் உடம்பில் இருப்பதால் இதற்குக் கழுதைப்புலி என்ற பெயர் வந்தது போலும். ஆனால் இது கழுதை வகையைச் சேர்ந்ததன்று. கழுதையும் குதிரையும் பயிருண்ணிக் கூட்டத்தைச் சேர்ந்தவை. புலிப்பட்டைகளுக்குப் பதிலாகப் புள்ளி போட்ட கழுதைப்புலி கர்நூல் ஜில்லாவில் சில குகைகளில் காணப்பட்ட கற்புதையல்களால் தென்னிந்தியாவில் முற்காலத்தில் இருந்திருக்கின்றது எனத்தெரியவருகிறது. புள்ளிக் கழுதைப் புலி (Spotted hyaena) இக்காலத்தில் ஆப்பிரிக்காக் கண்டத்தில் காணப்படுகின்றது. இதுபோன்ற பல குறிகளால் முன்னாளில் ஆப்பிரிக்காவும் இலங்கையும் தென்னிந்தியாவோடு நிலத்தொடர்புற்று இருந்திருக்கவேண்டும். எனவும் பின்னால் இத் தொடர்புப் பகுதிகள் கடலில் மூழ்கி ஆப்பிரிக்கா தனிக் கண்டமாகவும் இலங்கைதனி தீவாகவும் ஆயின எனவும் ஊகிக்கப்படுகிறது.
நாய் வகைகளில் ஓநாய், நரி, குள்ளநரி, செந்நாய்
இவைகள் தென்னிந்தியாவில் உண்டு. புலாலுண்ணிகளில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மலைகளில் மரங்களில் வசிக்கும் மார்ட்டென் (Marten)களும், பூமியில் பொந்துகளில் வசிக்கும் ராட்டெல் (Ratel)களும், ஆறுகளில் மீன்பிடித்துத் தின்னும் நீர்நாய் (Otter) களும் மற்றவைகளும் சேரும். தடித்த உடம்பும், நீண்ட வலிமை பொருந்திய வாலும், நீந்துவதற்கேற்ற சவ்வு பொதிந்த விரல்களும் உள்ள நீர்நாயைச் சென்னை மாகாணத்தில் பலவிடங்களில் காணலாம். ராட்டெலின் முதுகு, வெள்ளை மயிர்களால் மூடப்பட்டு இருக்கும். கரடிகளில் இரண்டு வகைகள் இருக்கின்றன. தென்னிந்தியாவில் காணும் கறுப்புக்கரடி இந்தியா முழுவதும் பாறை மலைகளிலும் காடுகளிலும் வசிக்கின்றது. இக்கரடியைப் பழக்கலாம். இது மனிதனுடன் வாழும். வடநாட்டிலே, பஞ்சாபிலிருந்து அஸ்ஸாம் வரையில் வேறொரு கரடி இனம் காணப்படுகிறது.
குளம்புள்ள பிராணிகளில் இரண்டுவித காட்டெருமைகள் இருக்கின்றன. ஒன்றுக்குக் கொம்பு குறுக்கு வெட்டில் முக்கோணமாக இருக்கும். அதை எருமை என்பார்கள். தெலுங்கு நாடுகளில் காணலாம். மற்றொன்றில் கொம்பு குறுக்குவெட்டில் வட்டமா யிருக்கும். இதைக் காட்டெருமை (Bison, Gaur) என்பார்கள். இது மேற்குத் தொடர்ச்சி
சாதாரணமாக உண்டு. ஆடுகளில் வரையாட்டின்
(Nilgiri Wild Goat, Hemitragus) கொம்புகள்
முதுகு பக்கம் வளைந்திருக்கும். இந்தியாவில் காணும்
ஐந்துவகைக் காட்டாடுகளில் இவ்வொன்றுதான் தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கங்களில் இருக்கிறது. மற்றவை இமயமலையில் காணப்படுகின்றன.
இரலைகளை (Antelope) நாம் சாதாரணமாக மான்கள் எனக் கூறுகின்றோம். ஆனால் இவை உண்மையில்<noinclude></noinclude>
2ao3y83ewkxsu6g02r8ei3p88a3hfxz
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/642
250
445754
1433584
1418166
2022-07-20T14:04:47Z
Deepa arul
5675
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|590|இந்தியா}}</b></noinclude>இந்தியா
திய யூனியன் மக்கள்,
596
தொகை அட்டவணை.
ப ப ப ப ப ப பப பபப ப ட வ ப ட ட ட ட ப அவம்
மக்கள் தொகை
இராச்சியங்கள் பரப்பு ச... மை. ரன] ள்
ஏ. இராச்சியங்கள்
அஸ்ஸாம் * 85,018. 75,99,097 | 90,49,707
ஆந்திரம். 69,000. 9,05,07,801
உத்தரப்பிரதேசம். 3,18,409. 5,65,51,849 6,92,15,742.
ஒரிஸ்ஸா: - 60,186 1,97,67,998. ந,கீ6,க5,946,
சென்னை. 64,700 499,80,749** 9$,65,08,201
பஞ்சாப் 97,978 1,5699,608 1,20,41,805.
பம்பாய் | முறிந்த 591,81,146 9,59,50,150.
பீகார் 70,830. 9,65,29:110 %09,25,947.
மத்தியப்பிரதேசம். 1,80,972 1,96,91,615 519,47598.
மே. வங்காளம். 90,775 918,97,905 |. 548,10,808
பீ. இராச்சியங்கள் |
அஸ்ஸாம் பழங்குடிப் பகுதிகள் 1. 5,60,000
ஐதராபாத் 89,168 1,6957,119 1,86,55,108.
செளராஷ்டிரம் | 91,451 35,60,700 41,97,959
இருவிதாங்கூர்-கொச்சி 9,144 75,00,057 99,80,425
பெப்சு. 10,078. 9%,09,586.. 34,9808.
மத்திய பாரதம். 46478. | 71,69,880 | 79,54,154
மைசூர் | 9,489. |... 19,97,818 90,74,978.
ராஜஸ்தான். |. 390,207 1,99,06,992 1,59,90,797
வித்தியப்பிரதேசம் 29,603. 99,06,040. 35,74,690.
ஐம்மு-காச்மீரம் | 99,760 40,81,016 440,000 44.
8. இராச்சியங்கள்
அஜ்மீர் ஒக்17 5,89,608. | 699,979.
இமாசலப் பிரதேசம். | 10,451. இவராக | 9,89,907
கட்சு 16,724 5,07,980. | 5,67,606
குடகு: 1,586. 3,68,726 29,405
டெல்லி 578 9,17,999. 17,4078.
திரிபுரா 4099 | 5,19,010. 689,099.
பிலாஸ்பூர்: - 458 1,10,996 1,96,099.
போபால். 6876 176629 $,80,474
மணிப்பூர் 868 | 5,19,069 5,77,685.
டி. இராச்சியங்கள்
அந்தமான், நிக்கோபார் தீவுகள். | 15 88708. 80,971.
சிக்கும். இரக்க 1,91,590. மலர
*.. பீ-பிரிவு பழங்குடிப் பகுதிகள் நீங்கலாக.
1 சரிபார்க்கப்படா.த மதப்பு.
18 இலட்சம் ௪. மைல் பரப்பில் 85:69 கோடி. மக்கள்:
19த1-ல் வடத்தனர். 1941-ல் 81:48 கோடி. மக்கள்
வ௫ித்தனர். இந்தப் பத்தாண்டுகளில் மக்கள் தொகை.
19:5% மிகுந்திருக்கறது. பாகஸ்தானிலிருந்து இந்திய
யூனியனுக்கு 7த இலட்சம் பேர் வந்து சேர்ந்திருக்கன் ஐ.
னர் என்று கணக்டெப்பட்டிருக்கறது. பிரிவினைக்கு.
முன், சென்ற 70 ஆண்டுகளில் மக்கள் தொகையின்.
பெருக்கம் வருமாறு :
௬௩... ஆத்திரமும் சேர்ந்த மக்கள் தொகை.
13%. 1-9-1951-ல் தோராய மதப்பு.
இந்திய மக்கள் தொகைப் பெருக்கம்
ஆண்டு (மக்கள் தொகை _
1891. ப் 85,99,06,980.
1891] 978,14671
1901 99,49,61,056.
1911 91,51,50,296.
3991 31,89,49,480.<noinclude></noinclude>
dgaf43iadcplzyx2lwj66i5t9uluc1n
1433713
1433584
2022-07-21T08:43:15Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|590|இந்தியா}}</b></noinclude>மான்களுக்கும் ஆடுகளுக்கும் நடுத்தரமான உடல்
அமைப்பு உள்ளவை. இந்த இரலைகள் இந்தியாவிலேதான் காணப்படுகின்றன. இவற்றில் நான்கு வகைகளுண்டு. மூன்று வகைகள் தென்னிந்தியாவிலும்
காணப்படுகின்றன. வடநாட்டு மொழிகளில் நீல்கை
(Nilgai) என்றும், தமிழில் மான் போத்து என்றும்
வழங்குவது ஒன்று. மற்றொன்றிற்கு நான்கு
கொம்புகள், முன் இரண்டு சிறியவும், பின் இரண்டு
பெரியவுமாக இருக்கின்றன. இதற்குத் தெலுங்கில்
கொண்ட- கொர்ரி என்று பெயர். மூன்றாவதை
வேலி மான் (Black Buck) என்று சொல்லுவார்கள். வேலி மானின் கொம்பு முறுக்கியும், எடுப்பாயும், பள்ளமாயும் இருக்கும். திரி மருப்பு இரலை என்பது இதுவே. இம்மூன்றுவகை இரலைகளில் பெண்ணுக்குக் கொம்புகள் வளருவதில்லை. நவ்வி (Gazelle) என்று சொல்லப்படுகிற வகையில் இந்தியாவில் மூன்று
இனங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான்
தென்னிந்தியாவில் இருக்கிறது. மைசூர், அனந்தப்பூர், கர்நூல் ஜில்லாக்களில் அகப்படுகின்றது. இதில்
பெண்ணுக்கும் சிறிய கொம்புண்டு. இதற்குத் தெலுங்கில் புருட-ஜிங்க (Buruda Jinka) என்று பெயர்.
மேற்கூறியவைகளுக்கெல்லாம் கொம்புகள் உள்ளே
குடைவாக இருக்கும். இவைகளைப் பழைய காலங்களில்
மருந்து முதலியவற்றை வைப்பதற்குப் புட்டிபோல்
உபயோகித்து வந்தார்கள். இப்போதும் சில இடங்களில் ஈயம் பூசுவோரைப் போன்றவர் இதை வைத்திருப்பதைக் காணலாம்.
{{larger|மான் :}} கலைமான், கடமை, புள்ளிமான் என மூன்று வகை மான்கள் தென்னிந்தியாவில் இருக்கின்றன. கலைமானுக்கு முகத்தில் மூன்று சிறு பள்ளங்கள் இருக்கும். மான்களில் பெரியது கடமை. இந்த இரண்டு
வகைகளை மலைப்பிரதேசங்களில் காணலாம். புள்ளி
மான் கடமையைவிடச் சிறியது. இது சமவெளிகளிலும்
வசிக்கிறது-
மேற்குத்தொடர்ச்சிமலையின் கீழ்ப்பாகங்களில்
நான்கு குளம்புகளுடைய மான்வகை ஒன்று வாழ்கிறது. இதைப் பார்ப்பது அரிது. பாறைகளின் பொந்துகளில் பகலில் தங்கி வெப்பப்பொழுதைக் கழிக்கும். இதை ஆங்கிலத்தில் ஷெவ்ரடேன் (Chevrotain) என்றும், சிறிதானதனால் சுண்டெலிமான் (Mouse Deer) என்றும் சொல்வார்கள். தமிழில் குறும் பன்றி என்பார்கள். இதைப் பிடித்து வீட்டில் வளர்க்கலாம். சாதாரண நாய் அளவு உயரம் இருக்கும். இதற்குக் கொம்புகள் இல்லை.
காட்டுப்பன்றியில் ஒருவகைதான் தென்னிந்தியாவில்
இருக்கின்றது. இது இரவில் வெளிவந்து பயிரைப் பாழ்செய்யும். அந்தமான் தீவில் ஒரு சிறிய வகையும், இமயமலைப் பிரதேசங்களில் இன்னும் சிறிய குள்ளப்பன்றி (Pigmy Hog) வகையும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரல்களிலும் அவற்றைச்
சார்ந்த மைசூரில் உள்ள அடர்ந்த காடுகளிலும் யானைக்
கூட்டங்களைப் பார்க்கிறோம். யானை தென்னிந்தியாவிற்கும், அஸ்ஸாம், பர்மா முதலிய இடங்களுக்கும் உரியது. வடஇந்தியாவில் ராஜபுதனத்தில் ஒட்டகங்கள் மிகுதியாய்க் காணப்படுகின்றன. இவை வெளி நாட்டிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டவை. ஒட்டகங்களை மாடுகள்போல் வண்டியில்
பூட்டியும், மற்றும் உடம்பின்மேல் சுமை ஏற்றியும் வடநாடுகளில் உபயோகப்படுத்துகிறார்கள்.
பாலூட்டிகளில் பல்லில்லாதவை என்பது ஒருவகை
(Edentata). இந்த வகையில் தென்னிந்தியாவிலும்
இலங்கையிலும் அழுங்கு என்று ஒன்று உண்டு. இதன்
மேல்தோலில் பருத்த செதில்கள் முதுகிலும் பக்கங்களிலும் ஓடு அடுக்கினாற்போல் அடுக்கியிருக்கும். விரல்களின் நுனியில் கூரிய நகங்கள் இருக்கின்றன. அவை
பூமியில் பொந்துகள் செய்து வசிக்கவும், புற்றுக்களை
உடைக்கவும் உபயோகப்படுகின்றன. இது புற்றுக்களில்
உள்ள கறையான், எறும்பு முதலியவைகளைத் தின்னும்.
வெகு நீளமான நாக்கு உடையது. இதன் எச்சில் பிசின்
போல் இருக்கும். நீண்ட நாக்கைப் புற்றின் துவாரங்களில் செலுத்தி, எச்சிலில் எறும்புகளை ஒட்டச்செய்து, நாக்கை இழுத்து அவ்வெறும்புகளை உட்கொள்ளுகிறது. இதன் தலை நீண்டிருக்கும். கண் சிறுத்திருக்கும். இது இரவில் இரைதேடும். ஆபத்துக் காலத்தில் உடம்பை மரவட்டைபோல் சுருட்டிக்கொள்ளும். இது சென்னைக்கருகே நகரி முதலியமலைகளில் இருக்கின்றது.
{{larger|பறவைகள்:}} பறவைகளில் பல இனங்கள் இருக்கின்றன. இனங்கள் பெருந்தொகையா யிருப்பதால் இவ்விடத்தில் விரிவாகச் சொல்ல இயலாது. கிளிகள் பார்வைக்கு மிக அழகானவை. சிறு பறவைகளையும் உயிர்களையும் பிடித்துத் தின்னும் இனங்களில், கழுகுகள், பருந்துகள். பைரி, இராசாளி அல்லது வல்லூறுகள், ஆந்தைகள் முதலியன இருக்கின்றன. மூன்றுவகை மீன் கொத்திகள் மீனைக்கொத்தி யுண்டு வாழ்கின்றன. மைனாக்கள் சில மனிதர்களால் பழக்கப்பட்டுப் பேசவும் கற்கின்றன.
நீர்ப்பறவைகளில் வாத்துக்கள், நீர்க்கோழிகள் முதலிய பலவகையுண்டு, அல்லிக்கோழி என்பது நீண்ட
கால்களும் விரல்களும் பொருந்தியது. தாமரை இலைகளின்மேல் நிற்கவும் நடக்கவும் கூடியது. இந்த இனத்தில் பெண்பறவை முட்டையிடுங் காலங்களில் ஆண்
பறவையின் நிறம் மாறி மிக அழகாகத் தோன்றிப்
பெண்ணின் மனத்தைக் கவரும்.
புறாக்கள், காட்டுக்கோழிகள் முதலியன புதர்களில்
காடுகளில் வாழும். மயில் இனமும் காட்டில் காணலாம். சில சமயங்களில் வெள்ளை மயில்களும் காணப்படுன்றன. காட்டுக்கோழி, கினிக்கோழி (Guinea
fowl) எனக் கோழிகளில் சில சாதிகள் இருக்கின்றன.
காடை, கௌதாரி முதலிய பறவைகளை வலை வீசிப்
பிடித்து விற்பதைக் காணலாம்.
{{larger|ஊர்வன (Reptiles):}} இந்தக் கூட்டத்தில் ஓணான் முதலிய வகைகள், பாம்புகள், ஆமைகள், முதலைகள் அடங்குகின்றன.
பல்லிகளில் மூன்று இனங்களை வீடுகளில் காணலாம்.
அவற்றுள் பெரியது மரங்களினின்று வீட்டுக்குள் வருகிறது. பல்லிகளின் விரல்களின் கீழே பலகைகள் அடுக்கியதுபோல் தோல்மடிப்புக்கள் இருக்கின்றன. இவை
மழமழப்பான செங்குத்தான சுவரின்மேல் ஏறவும்,
கூரைத்தளத்தின் அடியில் மல்லாந்து செல்லவும் உதவுகின்றன. திருப்பதி மலையில் சில சமயங்களில் காணப்படுகின்ற காலோடாக்ட்டிலஸ் (Calodactylus) என்னும் பல்லிக்கு விரலின்கீழ் இரண்டே தோல்மடிப்புக்கள்
இருக்கின்றன.பல்லிகள் ஓடுள்ள இரண்டு முட்டைகளை
இடுகின்றன. ஓணானும் முதுகில் நான்கு மூலையுள்ள
வைர வடிவ அடையாளங்களையுடைய மற்றொரு சிறு
வகையான கரட்டோணானும் மரங்களில் (சைத்தானா-Sitana) காணப்படும். கற்பாறைகளில் சாதாரணமாகக்
மற்றொரு சாதி உண்டு. அதன் ஆணின் தலையின் மேற்பாகமும், கழுத்தும், முதுகும் நாமம் போட்டது போல் இனம் பெருக்கும் பருவத்தில் சிவந்திருக்கும். உடும்பைச் சிலர் தின்பதுண்டு. அரணைகளில் பெரிய அரணை (மபூயா), சிறிய அரணை (லைகோ<noinclude></noinclude>
c5b485q7puf6wqm8sf3uit7f70u88ze
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/643
250
445755
1433714
1418167
2022-07-21T09:07:16Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|591|இந்தியா}}</b></noinclude>சோமா) என்பவையுண்டு. இவற்றின் குட்டிகளுக்கு வால் சிவந்திருக்கும். தென்னிந்திய மலையில் காண்கின்ற
இன்னொருவகை ரிஸ்ட்டெல்லா வேறெங்கும் அகப்
படுவதில்லை. அரணைகளில் சில இனங்களுக்குக் கால்கள் இல்லை. அவை பாம்புபோல் காணும். பூமியின்
பொந்துகளில் வாழும். பச்சோந்தி நிறம் மாறுவது
யாவருக்கும் தெரியும். சாதாரணமாக விலங்குகளின்
இரண்டு கண்களும் ஒரேவிதமாக இணைந்து அசையும்.
ஆனால் பச்சோந்தி தன் கண்களைத் தனித்தனியே
சுழற்றக்கூடிய சக்தி பொருந்தியிருக்கிறது. கையும்
அடியும் இரண்டாகப் பிரிந்து, கிளைகளைப் பிடித்துக்
கொண்டு ஏற இறங்க உதவுகின்றன. வாலும் கிளைகளில் சுருட்டிக்கொள்ளும். அவ்வாறு கிளைகளினின்றும் சில சமயங்களில் தொங்கலாம். பிசுபிசுப்பான நீண்ட நாக்கைப் பூச்சிகளின்மேல் திடீரென நீட்டி, ஒட்டிக்கொண்ட பூச்சியைத் தின்றுவிடும்.
{{larger|பாம்புகள்:}} பாம்புகளில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் நான்கு வகையே கொடிய நஞ்சுள்ளவை. அவைகளால் ஆயிரக்கணக்கில் உயிர்கள் மாள்கின்றன.
{{larger|1. நாகங்கள் :}} நாகம் என்று சொல்லுகிற நல்லபாம்பு படம் எடுத்து ஆடும். மூக்குக்கண்ணாடி போன்ற குறி படத்தில் தோன்றும். கருநாகம் (King Cobra) மிகப் பெரியது; கொடூரமானது. இதன் நஞ்சு நல்லபாம்பின் நஞ்சைவிட மிகக் கொடியது.
{{larger|2. கட்டுவிரியன்கள் (Kraits):}} இவற்றில் சில வகைகள் உண்டு, கட்டுவிரியனின் கருநிறமான உடலில்
வெண்ணிறமான குறுக்கு வரிகள் கட்டுக் கட்டாக
ஓடும். இதன் உடல் எண்ணெய் வடிந்ததுபோல் மினுமினுப்பாகக் காண்பதால் எண்ணெய் விரியன் என்றும் இதைச் சொல்வதுண்டு. வடநாட்டிலுள்ள விரியனில் மஞ்சள் நிறமான கட்டுக்கள் இருக்கின்றன. கட்டுவிரியன்களிலே முதுகின் நடுவரிசையிலுள்ள செதில்கள் பருத்தும், அறுகோண வடிவமுள்ளவையாகவும் இருக்கும். கட்டுவிரியன்களைத் தெரிந்து கொள்வதற்கு இது ஓர் அறிகுறியாகும்.
{{larger|3. விரியன்கள் (Vipers) :}} விரியன்களின் தலை முக்கோணமாயும், தலை மேல் உள்ள செதில்கள்
உடம்பின் மேல் உள்ள செதில்கள் போல் சிறியனவாயும் இருக்கும். மற்றப் பாம்பினங்களில் தலைச் செதில்கள் பருத்து, ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும். அவற்றைக் கேடகங்கள் (Shields) என்பர். விரியன்கள் குட்டி போடும். கண்ணாடி விரியன் (Russell's Viper) சாதாரணமாகக் காணப்படுவது. உடம்பில் மூக்குக்கண்ணாடி போன்ற நீள் வட்டப் புள்ளிகள் இருக்கும். சுருட்டை விரியன் (Saw-scaled Viper) என்று மற்றொரு விரியன் உண்டு. இது தன் செதில்களை உராய்வித்து ஒருவிதமான பலத்த பெருமூச்சு விடுவதுபோன்ற சலசலப்பை உண்டாக்கும். இதனால் இதற்குக் குறட்டைப்பாம்பு, ஊது சுருட்டை என்று பெயர். இது புல்தரையில் வாழ்வதால் புல்விரியன் எனவும்படும். இது வறண்ட மணற்பாங்கிலும் சாதாரணமாக அகப்படும். குழி விரியன்கள்: இவற்றின் தலையீன் பக்கத்தில் கண்ணுக்கும் மூக்குத் தொளைக்கும் இடையில் ஒரு குழியிருக்கும். இவை மலைப்பகுதிகளில் வாழும். இவைகள் மற்ற விரியன்கள் போல் அவ்வளவு நஞ்சுள்ளவையல்ல.
{{larger|4. கடற் பாம்புகள்:}} இவற்றின் வால் துடுப்புப்
போல் இருக்கும். தலையும் கண்களும் சிறுத்திருக்கும்.
மிகவும் நஞ்சுடையவை. ஆனால் சாதாரணமாகக்
கடிப்பதில்லை.
{{larger|நஞ்சில்லாத பாம்புகள்}} பல உள மண்ணுளிப்
பாம்பு, குருடிப்பாம்பு, செவிப்பாம்புகளை (Typhlops)
நம் வீடுகளில் சில சமயங்களில் காணலாம். செவிப்பாம்பு
கம்பிபோன்று நீண்டு இருக்கும். பொந்துகளில் வசிக்கும். இதை வீடுகளில் கண்டால் நெருப்பைப்போட்டுக்
கொளுத்துவார்கள். நசுக்கினால் இது எளிதில் நசுங்குவதில்லை.
{{larger|கேடகவால் பாம்புகள் (Uropeltidae):}} இவைகள் காப்பி, தேயிலைத் தோட்டங்களில் மண்ணில் புதைந்து வாழும். மரங்கள், பாறைகளின் கீழும் வசிக்கும். இவை தென்னிந்தியாவிலேயே காணப்படுகின்றன. மிக அழகான நிறங்களுடையவை. சில வகைகளில் வாலின் நுனியில் சிறிய செதில்கள் கூடி யுண்டான தட்டையான கேடகம்போன்ற பாகம் இருக்கும். பெருமழையில் இவை வாழும் வளைகளை விட்டு வெளியே ஊர்ந்துபோகும்.
மலைப்பாம்புகள் மலைகளில் மரங்களின் கிளைகளில்
வாழும். தாசரிப்பாம்பு (பைத்தான்) அதிகப் பருமனும்
நீளமுமுள்ளது. இரைகளைத் தன் உடலால் சுற்றி
நொறுக்கிப் பின்பு விழுங்கும். இதன் உடல் முழுதும்
பொட்டுக்கள் காணப்படும். கட்டளைவிரியன் (டிரை
யோகலாமஸ்), பவளப்பாம்பு (கல்லோபிஸ்) முதலிய
பாம்புகளும் இருக்கின்றன.
மரங்களின் கிளைகளில் மூன்றுவகைப் பாம்புகளைக்
காணலாம். 1. பச்சைப்பாம்பு அல்லது பச்சோலைப்
பாம்பு அல்லது கண்குத்திப்பாம்பு இலையைப் போல்
பச்சை நிறமுள்ளது. 2. கொம்பேறிமூக்கனை
உலர்ந்த கிளைகளில் காணலாம்; மங்கிய பழுப்பு நிறம்
பொருந்தியது. இது ஒருவனைக் கடித்தபின் மரத்தின்
உச்சியில் ஏறி, இறந்தவன் பிணத்தைச் சுடும் புகை
வருகிறதா எனப் பார்க்கும் என்பது பொதுமக்கள்
கற்பனை. 3. பெருஞ் சுருட்டைப்பாம்பு பழுப்பு நிறமுடையது. முதுகிலே கறுப்புக் குறிகள் உண்டு.
மணல்நாடுகளில் கூழைப்பாம்பு, இருதலைப்பாம்பு,
புடையன் என்னும் பெயர்களைப் பெற்ற எரிக்ஸ் என்னும் பாம்பைக் காணலாம். இதன் மேல்தோல் வெண்
குட்டம் பிடித்த தோலின் நிறம் போல் இருக்கும்.
சாரைப்பாம்பு சாதாரணமாகப் பாம்பாட்டிகளிடம்
காணப்படும். 5-6 அடி நீளம் இருக்கும்.
வழலை (லைக்கொடான்) பார்வைக்கு எண்ணெய் விரியனைப்போல் இருக்கும். ஆனால் சிறிது சிவந்து இருக்கும். இதைக் கட்டுவிரியன் என்று சிலர் தவறுதலாகக் கூறுவர். கட்டுவிரியனுக்கு முதுகின் நடுவிலுள்ள நீள் வரிசைச் செதில்கள் பருத்து, ஆறு கோண முடையவையாக இருப்பது போல, வழலைக்கு இருப்பதில்லை.
நீரில் நான்குவிதப் பாம்புகள் வாழ்கின்றன. (1)
செர்பிரஸ்,(2) நீர்ச்சாரை (ஹெலிக்காப்ஸ்), (3) நீர்ச்
சுருட்டை (டிராப்பிடொனோட்டஸ் பிஸ்கேட்டர்), (4)
உப்பங்கழிகளில் உள்ள செர்ஸைட்ரஸ் என்பவை;
டிராப்பிடோனோட்டஸ் ஸ்டோலேட்டஸ் என்ற வகை
ஈரமுள்ள கழனிகளிலும் புல்தரைகளிலும் ஓடும்.
இதற்குக் கல்யாணிக்குட்டி அல்லது காளியன்குட்டி
எனப் பெயர் உண்டு. வெள்ளங்களில் நீர்ப்பாம்புகளும்
அடித்துக்கொண்டு போகப்பட்டுக் கழனிகளிலும்
தோட்டங்களிலும் வருவதைக் காணலாம்.
முதலைகளில் மூன்று இனங்கள் உண்டு. இரண்டு
இனங்கள் தென்னிந்தியாவில் ஆறுகளில் இருக்கின்றன.
மூன்றாவது இனம் வங்காளத்தில் கங்கையாற்றில் மீன்களைப் பிடித்து வாழ்கின்றது. இதற்கு வாய் நுனி
நீண்டு பக்கங்களில் பற்கள் பொருந்தியிருக்கும்.
ஆமைகளில் பலவிதங்கள் இருக்கின்றன. கடலில் சில
வாழ்கின்றன. குளங்குட்டைகளிலும் ஆறுகளிலும்<noinclude></noinclude>
7pjgqovr885fumxl3k5qv1lda4mc79r
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/644
250
445756
1433715
1418168
2022-07-21T09:20:03Z
Deepa arul
5675
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Deepa arul" /><b>{{rh|இந்தியா|592|இந்தியா}}</b></noinclude>சில வாழ்கின்றன. காடுகளிலும் நிலங்களிலும் சில
வாழ்கின்றன. கடலில் பேராமை, அழுங்காமை, பெருந்தலை ஆமை, எழுவரி ஆமை என்னும் நான்கு விதம் உண்டு.
{{larger|தவளை வகுப்பு :}} இந்தக் கூட்டத்தில் மூன்று பிரிவுகள் இருக்கின்றன. 1. வாலுள்ளவை - யூரோடீலா,
2. தவளைபோல் வாலில்லாதவை-அன்யூரா, 3. கால்கள்
இல்லாதவை - அபோடா அல்லது ஜிம்னோபியோனா
(Gymnophiona). இம்மூன்று பிரிவுகளுக்கும்
உதாரணங்கள் இந்தியாவில் காணலாம். வாலுள்ள
பிரிவுக்கு இமயமலை அடிவாரத்தில் டார்ஜிலிங் முதலிய
இடங்களில் தலைப்பிரட்டை போன்ற டைலொட்டோ
டிரைட்டான் என்னும் ஓரினம் இருக்கின்றது. இது
ஒன்றுதான் இந்தியாவில் காணப்படுவது. வாலில்லாதனவான தவளைகளில் அநேக வகைகள் உண்டு. கால்களில்லா பிரிவைச் சேர்ந்தவை தென்னாட்டிலும் மலையாளப் பிரதேசத்திலும் மலையடிவாரங்களில் உள்ள வாழை, காப்பி முதலிய தோட்டங்களில் மண்ணில் புதைந்து வாழ்கின்றன. இவை தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், தென் ஆப்பிரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் அகப்படுகின்றன. இவ்வாறு தூரத்திலுள்ள நாடுகளில் காண்பது ஓர் உண்மையைத் தெரிவிக்கின்றது. அதாவது இந்நாடுகள் ஒருகாலத்தில் ஒன்றுபட்டிருந்திருக்கவேண்டும்;பின்னால் இடையிலுள்ள நாடுகள் கடலில் மூழ்கிப்போனதால் இவை பிரிந்து போயின என்பதாம். இந்த உயிர்கள் சிறு பாம்பு அல்லது பெரிய மண்புழுப்போல் தோன்றினாலும், பாம்புகளைப்போல் இவற்றிற்கு உடம்பில் செதில்கள் இல்லை. வாலும் கிடையாது; குதம் உடம்பின் கடைசியில் உள்ளது; திறந்து மூடக்கூடிய தாடையுடன் கூடிய வாய் இருப்பதாலும், முதுகு எலும்பும் மண்டையும் இருப்பதனாலும் இவை மண்புழுக்களாகா. இவை ஈரமுள்ள பொந்தில் முட்டைகளைச் சுற்றிக்கொண்டு அவைகளைக் காப்பாற்றுகின்றன. முட்டையிலிருந்து பொரித்த குஞ்சுகள் மீன் தலையைப்போன்ற தலையையும், வாயைச் சுற்றி உதடுகளையும், நீந்துவதற்கு உபயோகப்படக்கூடிய தட்டையான வாலையும் உடையன.
தவளைகளில் நீரிலே வாழ்பவை, நிலத்தில் பொந்துகளில் வாழ்பவை, குளிர்ச்சியான மரங்களில் வாழ்பவை (தேரை) எனப் பலவகைகள் உண்டு. தேரை முட்டையிடுங் காலத்தில் நீரை அடைந்து, வெள்ளைப் பிசின் போன்ற நீரை வெளிப்படுத்தி, அதைக் காலால் அடித்து நுரையான பொருளாக்கி அதில் முட்டைகளையிடுகின்றது. இந்த நுரையை நீருக்குமேல் தொங்கிக்கொண்டிருக்கும் இலைகளில் காணலாம். முட்டைகள் பொரித்ததும் குஞ்சுகள் நீரில் விழுந்து வாழும். சொறித்தவளை (Toads) போன்றவை முட்டைகளைச் சரம் சரமாகப் பிசின் போன்ற பொருளில் வைத்திடும். சாதாரணத் தவளைகள் (Frogs) ஜவ்வரிசிப் பாயசம்போல் பரப்புள்ள பிசினில் முட்டைகளைப் பொதிந்து இடுகின்றன.
{{larger|மீன்கள்:}} இந்தியாவில் மீன்களுக்குக் குறைவில்லை. மூன்று பக்கங்களில் கடல் சூழ்ந்திருக்கிறது. நாட்டில் ஆறுகளும் ஏரிகளும் குளங்களும் ஏராளமாய் இருக்கின்றன. ஆதலால் கடல் மீன்களும் ஆற்று மீன்களும் நிறையக் கிடைக்கின்றன. கடல் ஓரத்தில் வசிப்பவர்களுக்குத்தான் கடல்மீன் அதிகமாகக் கிடைக்கிறது. ஆனால் தற்காலத்தில் பனிக்கட்டியிலும், பனிக்கட்டிப் பெட்டிகளிலும் மீனை வைத்து உள்நாடுகளுக்கும் அனுப்புகிறார்கள்.
கடல் மீன்களில் சுவையில் மேலானவை வஞ்சிரம்,
மாலவாசி முதலிய மீன்கள். கடல் மீன்களுக்குள் சுவையில் இவற்றிற்கு மேலான மீன்கள் இல்லை என்று
சொல்லுவார்கள். முதிர்ந்த மீன்கள் அவ்வளவு சுவையாக இரா. அடுத்தபடியாகச் சுவையில் வௌவால் மீனைக் கூறலாம். இதில் மூன்று விதங்கள் இருக்கின்றன. வெள்ளை, கறுப்பு, சாம்பல் நிறம் உள்ளவை. சில
காலங்களில் வௌவால் மீன்கள் கூட்டங்கூட்டமாகக்
கடலில் செல்லும். அப்போது 1,000-2,000 மீன்கள்
ஒரே வலையில் மலையாள தேசத்தில் பிடிபடும். இம்மீன்களின் இறைச்சி எளிதில் செரிக்கக்கூடியதாகையால் நோயாளிகளும், சீரணசக்தி குறைந்தவர்களும் தின்னலாம். அடுத்தபடியாகக் காலாமீன், நாக்குமீன், கிழங்கான் முதலியவைகளைக் கூறலாம். சிலவகைக் காலாமீன்கள் 6 அடி நீட்டு வளரக்கூடுமானாலும், தென்னிந்தியாவில் அகப்படுகின்றவை 1-11 அடி நீளத்துக்கு மேல் போவதில்லை. இம்மீன் வங்காளத்தில் கடலிலிருந்து காசிவரையில் கங்கை நதியிலே போவதாகச் சொல்லப்படுகிறது. அதனால் இதற்குத் தபசி என்றும்
பெயர். முன் ஜதைத் துடுப்பில் நீண்டிருக்கும் கதிர்கள்
(Fin rays) தாடிபோலிருக்கும். நாக்குமீன்களில் பலவிதங்கள் இருக்கின்றன. இவை கடலில் தரையிலே
மணலின் மேலும், புதைந்தும் கிடக்கும். இது உடல்
அமைப்பில் மற்ற மீன்களை ஒத்திராது; நாக்குப்
போன்று தட்டையாயிருக்கும். இதன் உடலில் வலம்,
இடம் என்று கூறாமல் மேற்புறம், கீழ்ப்புறம் எனக்
கூறவேண்டும். மேற்புறத்தில் இரண்டு கண்களும்
அமைந்துள்ளன. குட்டியாக இருக்கும்போது சாதாரண மீன்களைப்போலவே இடம் வலமாகக் கண்கள் இருக்கும். குட்டி நாளடைவில் நீருக்கு அடியிலுள்ள தரையில் வசிக்கத் தொடங்கும்போது இப்பக்கங்கள் மேல், கீழ்ப் பக்கங்களாக மாறி, இரண்டு கண்களும் ஒரே பக்கத்திற் சேர்கின்றன. சிலவகைகளில் இடப்பக்கமும், மற்றவற்றில் வலப்பக்கமும் கீழ்ப்பக்கமாகின்றன. கீழ்ப்பக்கத்துக்கண் மேற்புறத்துக்கு
மாறுகிறது. இவைகள் சிற்சில சமயங்களில் நீந்தும்.
பாறை (காராங்க்ஸ்) மீன்களில் பலவகைகள் இருக்கின்றன. அவ்வளவு சுவையில்லாமற்போனாலும் ஏழை மக்களுக்கு இவை விருப்பமான மீன்கள். இம்மீன்களின் வால்புறம் இருபக்கத்திலும் நடுவில் உயர்ந்த செதில்கள் ஒரு கோடுபோல் ஓடுகின்றன. வாலும் மஞ்சள் நிறமா யிருக்கும், அதனால் இவற்றை மஞ்சள்வால் என்றும் கூறுவார்கள். ஆனி, ஆடி மாதங்களில் ஓலைவாளை கூட்டங்கூட்டமாக வலைகளில் கிழக்குக் கடலில் அகப்படுகின்றது. நெய்த்தோலி (எங்க்ராலிஸ்) என்னும் சிறிய மீனையும் அதிகமாக இம்மாதங்களிற் காணலாம். சென்னக்கூனி என்பது மீன்வகையல்ல ; இறால் இனத்தைச் சேர்ந்தது, மடவை, நகரை, மட்டவாயன், கொடுவாய், உல்லம், கெளிறு முதலிய மீன்கள் விலை மலிவாக இருப்பதால் ஏழை மக்களால் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவற்றில் மடவை. கெளிறு போன்ற மீன்களைக் கடலிலும் கடலை அடுத்த உப்பங்கழிகளிலும் பிடிக்கலாம். சிலவகைக் கெளிறுகள் நன்னீரில் வாழ்கின்றன. கெளிறு செரிப்பது கடினம்.
ஆற்று மீன்களில் வாளை, ஆரல், குறவை, அயிரை,
கெளிறு வகைகள், கெண்டை மீன்கள் முதலியவற்றைக் கூறலாம். சேற்றுக்கெண்டை (எட்ட்ரோப்ளஸ்) என்ற மீன் மிகவும் அழகாக இருக்கும். பச்சைப் புள்ளிகள் இதன் உடம்பில் காணப்படுகின்றன. அதனால் இதைச் செல்லாக்காக என்றும் சொல்லுவார்கள். இம்மீன் தென்னிந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் மாத்திரம் அகப்படுவதாகச் சொல்லப்படுகிறது.{{nop}}<noinclude></noinclude>
pbrkt8gx35ruajvo61k04kwnljtwi4a
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/695
250
445830
1433736
1418210
2022-07-21T10:43:45Z
TVA ARUN
3777
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TVA ARUN" /><b>{{rh|இந்தியா|630|இந்தியா}}</b></noinclude>-மன் வீரபாண்டியனும் தமக்குள் போர் புரிந்துகொண்டிருந்தனர். அதை ஒரு வாய்ப்பாகக் கொண்ட மாலிக்காபூர் மதுரைமீது படையெடுத்து, நாட்டைக் கொள்ளையடித்துப் பல அழிவு வேலைகளை அங்கே நிகழ்த்திப் பின்னர் 1311-ல் பெரும் பொருளுடன் டெல்லி திரும்பினான். அடுத்த ஆண்டில் தேவகிரியை ஆண்ட சங்கர தேவன் டெல்லிப் பேரரசுக்குக் கப்பம் தர மறுத்துக் கலகம் செய்ததால், மாலிக்காபூர் மீண்டும் தேவகிரிமீது படையெடுத்துச் சங்கரதேவனைத் தோற்கடித்துக் கொன்றான். இதன் முடிவில் மாலிக்காபூருடைய வீரமும் புகழும் எங்கும் பரவின. அல்லாவுதீனுடைய பேரரசும் மிக உயர்ந்த நிலைமை அடைந்தது.
அல்லாவுதீன் இறுதிக் காலத்தில் மாலிக்காபூர் சொற்படி நடக்க ஆரம்பித்து, அதனால் தனக்குத் தீங்கு தேடிக்கொண்டான். ராஜபுதனம், குஜராத் முதலியவை அவனுக்கு எதிராகக் கலகம் செய்தன. மனம் உடைந்த சுல்தான் அல்லாவுதீன் 1316-ல் இறந்தான். அவன் அக்கால நிலைக்கேற்ற அரசன். அவன் அருந்திறலும் நல்ல நிருவாகத் திறனும் வாய்ந்த மன்னன். கலை வளர்ச்சியிலும் கற்றோரை ஆதரிப்பதிலும் அவன் ஊக்கம் கொண்டான். குதுப்மினாரைச் சேர்ந்த பல கட்டடங்களை அமைத்து, 1310-ல் ஒரு பெரிய வாயிலையும் அவன் கட்டினான். அது சிற்பப் புகழ்பெற்றதாகும். டெல்லிக்கருகில் புதிய நகர் ஒன்றையும் அவன் அமைத்தான். சிறந்த கவிஞனாகிய அமீர் குஸ்ரு அவன் காலத்தில் இருந்தவன்.
அல்லாவுதீனுக்குப் பின்னர் டெல்லிப் பேரரசில் குழப்பம் ஏற்பட்டது. மாலிக்காபூர் அரியணையேறப் பல சதிகள் செய்தான். கடைசியில் கொல்லப்பட்டான். பின்னர் அல்லாவுதீனுடைய மகன் முபாரக் அரியணையேறினான். அவன் ஆட்சியில் கலகம் செய்த தேவகிரி மன்னன் ஹரபாலதேவன் தோற்கடிக்கப்பட்டுக் கொடுமையாகக் கொல்லப்பட்டான். தந்தை காலத்தில் ஏற்பட்ட பல சீர்திருத்தங்கள் மாற்றப்பட்டன. பாண்டிய நாட்டையும் ஓரங்கல் நாட்டையும் அவன் வென்றான். கடைசியில் தன் நண்பன் குஸ்ருகான் என்பவனால் கொல்லப்பட்டான்.
1320-ல் அரியணையேறிய குஸ்ருகான் விரைவில் பிரபுக்கள், பொதுமக்கள் ஆகியோருடைய பகைக்கு ஆளாகிக் காசிமாலிக் என்னும் தலைவனால் அதே ஆண்டில் கொல்லப்பட்டான். ஆகவே 1290-ல் தொடங்கிய கில்ஜி வமிசம் 1320-ல் முடிவடைந்தது.
காசி மாலிக் 1320-ல் கியாசுதீன் துக்ளக் என்னும் பெயரோடு முடி சூடி ஆள ஆரம்பித்தான். 1320 முதல் 1325வரை திறமையுடனும் நேர்மையுடனும் ஆட்சி புரிந்து புகழெய்தினான். அல்லாவுதீன் காலத்திய சட்டத் திட்டங்கள் எவ்வித மாறுதலுமின்றிக் கையாளப்பட் டன. 1325-ல் வங்காளப் படையெழுச்சியினின்றும் திரும்பிய அவன் ஒரு மாளிகையில் தங்கி யிருந்தபோது அது இடித்து வீழ்த்தப்பட்டதால் உயிரிழந்தான். இந் நிகழ்ச்சியில் அவனுடைய புதல்வன் முகம்மது என்பவனும் கலந்தவன். கியாசுதீன் டெல்லிக் கண்மையில் துக்ளகாபாத் என்னும் புதிய நகரைக் கட்டினான். அவனுக்குப்பின் பட்டமெய்திய முகம்மது துக்ளக் (ஆ.கா.1325-1351) மிகுந்த கல்வியறிவு உடையவன். கூர்மையான நினைவாற்றலும், அருமையான பேச்சுத் திறனும் அவனுக்கிருந்தன. அவன் பாரசீகக் கவிதை, தருக்க சாஸ்திரம் முதலியவற்றைக் கற்றவன். பிறரோடு வாதித்துத் தன் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் திறமைமிக்கவன். அவனுடைய அறிவாற்றல்களை இபன்பதூதாவும் பாரனியும் வியந்து பாராட்டுகின்றனர். இந்த அருங்குணங்களோடு பிடிவாதமும், கொடுமை முதலிய சில தீயகுணங்களும் அவனுக் கிருந்தமையினால்தான் அவனுடைய ஆட்சி நல்ல முறையில் நடைபெறாமல் பொதுமக்களுக்கு அல்லலையும், இடைவிடாத தொல்லைகளையும் கொடுப்பதாயிற்று. அதனால்தான் அவனைப் 'பேய்மனம் படைத்த துறவி" எனவும், 'துறவிபோன்ற மனப்பண்புடைய பேய்' எனவும் சிலர் கூறியுள்ளனர்.
அவன் பட்டம் பெற்றபோது போதுமான அரசியல் அனுபவம் அவனுக்கிருந்தது. 1327-ல் அவன் தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றினான். இம்மாற்றத்துக்குப் பல நல்ல காரணங்கள் இருப்பினும், அதனால் பொதுமக்கள் பெருந்துன்பம் அடைந்தார்கள். டெல்லியிலிருந்து சுமார் 700 மைல்கள் பிரயாணம் செய்து, தேவகிரியை அடையமுயன்ற மக்களில் மிகப் பெரும்பான்மையினர் களைப்பினால் வழியிலேயே இறந்தனர். எஞ்சியவர்கள் தேவகிரியை அடைந்ததும் பல வித நோய்களுக்கு இரையாயினர். பதினேழு ஆண்டுகள் கழித்து மறுபடியும் டெல்லி தலைநகராயிற்று.
பொருளாதாரத் துறையில் தேர்ந்த முகம்மது பொருட் செலாவணி முறையைத் திருத்தியமைத்து, மதிப்புக் குறைந்த தங்கத்தை வெள்ளியின் மதிப்புக்கு ஒத்திருக்குமாறு செய்தான். உயர்ந்த உலோகங்களில் நாணயங்கள் வெளியிடுவதற்குப் பதிலாகப் பித்தளை நாணயங்களை வெளியிட்டான். இம்முறையில் தவறொன்றும் இல்லையாயினும், கள்ள நாணயங்கள் ஏராளமாக வெளிவந்து உலவுவதைத் தடுக்க அவனால் இயலவில்லை. உடனே சுல்தான் தனது தவறுதலை ஒப்புக்கொண்டு, தன் புதிய நாணயங்களைத் திருப்பி வாங்கிக்கொண்டு, அவற்றுக்குப் பதிலாக நல்ல நாண யங்களைக் கொடுக்க ஏற்பாடு செய்தான். இவ்வித மாற்றங்களால் பொக்கிஷம் வறண்டது. வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டது. தனது அரசின் ஒரு பகுதியில் அரசாங்க வரியை அதிகப்படுத்தியதன் விளைவாக உழவர்கள் அல்லலுற்றுக் காடுகளில் ஒளிந்து வாழ முற்பட்டனர். அங்கும் முகம்மது துக்ளக் சென்று, மிருக வேட்டையாடுவதுபோல் அவர்களை வேட்டையாடிக் கொன்றான். தன் பெருந்தவறுகளை உணர்ந்தவுடன் பரிகாரந்தேட முன்வந்தான். ஆயினும் இதனால் பொதுமக்கள் நன்மையடைய வழியில்லாமற் போயிற்று. சதி என்னும் பழக்கத்தை அவன் சட்டவிரோதமாக்கினான். முகம்மது துக்ளக் ஓரங்கல் நாட்டை வென்று தன்னடிப்படுத்தினான். துவார சமுத்திரத்தை அடியோடு சிதைத்து அழித் தான். பாண்டியநாட்டையும் வென்று அடிப்படுத்தினான். அவனது பேரரசு வடக்கே இமயம் முதல் தெற்கே மதுரை வரையிலும், மேற்கே சிந்துநாடு முதல் கிழக்கே வங்காளம் வரையிலும் பரவியிருந்தது. அதில் 23 மாகாணங்கள் அடங்கியிருந்தன. இவற்றை வெல்லுதற்கான போர்களாலும், அவசியமற்ற வேறு சில சண்டைகளாலும் மிகுந்த பொருளழிவும், பொது மக்களுக்கு இன்னலும் ஏற்பட்டன.
அவனது ஆட்சியின் பிற்பகுதியில் நாடெங்கும் கலகங்கள் ஏற்பட்டன. வங்காளம், மதுரை, தேவகிரி முதலியவை சுயேச்சையடைந்தன. வட இந்தியாவில் முகம்மது துக்ளக் ஓரளவு வெற்றியடைந்தபோதிலும் தென்னிந்திய நாடுகள் முழுச் சுயேச்சை எய்திவிட்டன. இந்நிலையில் 1351-ல் ஒரு கலகத்தை அடக்குவதற்குக் குஜராத்துக்குச் சென்ற முகம்மது துக்ளக் திடீரென இறந்தான்.<noinclude></noinclude>
dayy3264jxsuty6nok6hpy56vkanili
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/750
250
445889
1433594
1418267
2022-07-20T14:51:27Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||685|}}</b></noinclude>1947-48-ல் ரூ. 1069-18 இலட்சமாயிருந்தது, 195152-ல் ரூ. 41 இலட்சமாகக் குறைந்துள்ளது. நிதிக்குழுவி னுடைய கருத்துக்களை ஏற்று, மத்திய அரசாங்கம் இராச்சியங்கட்கு அவற்றின் மக்கள் தொகைக்கு ஏற்ப, புகையிலை, தீப்பெட்டி, தாவரநெய் முதலிய தாவரச் செய்பொருள்கள் ஆகியவற்றுக்கு வசூல் செய்யும் கலால் வரி வருமானத்தில் 40% பிரித்துக் கொடுக்க ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இராச்சியங்கள் செலவில் பெரும்பகுதி அபிவிருத்தி இனங்களின தாகும். 1953-54-ல் ஏ இராச்சியங்களின் மொத்தச் செலவு மதிப்பு: ரூ. 362.93 கோடி. பீ இராச் சியங்களின் மொத்தச்செலவு மதிப்பு: ரூ.118.62 கோடி, இதில், விஞ்ஞான இலாகா, கல்வி, மருத்துவம், சுகா தாரம், விவசாயம், கால்நடை மருத்துவம், கூட்டுறவு, கைத்தொழில்கள், சிற்றூர் வளர்ச்சி, தொழிலாளர் நலம், விமானப் போக்குவரத்து, ரேடியோ, மின்சாரம், சமூகவளர்ச்சித் திட்டங்கள் ஆகிய அபிவிருத்தி இனங் களுக்காகவுள்ள செலவு ஏ இராச்சியங்களின் மொத் தச்செலவில் ரூ. 141-75 கோடி. அதாவது 391%. பீ இராச்சியங்களின் மொத்தச் செலவில் ரூ.50-44 கோடி அதாவது 42:5% ஆகும். வரி வசூல் நிருவாகத்துக்கும், நீதி பரிபாலனம், சிறை, போலீஸ் முதலிய அதிகார நிருவாகத்துக்கும் செலவு விகிதம் ஏ இராச்சியங்களில் முறையே 9•1%, 24%. பீ இராச்சியங்களில் முறையே 91%, 19% ஆகும்.
இராச்சியங்கள் இந்தச் செலவுகள் தவிர, ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள், நீர்ப்பாசனம், சாலைப் போக்குவரத்து, கைத்தொழில் வளர்ச்சி முதலிய ஐந் தாண்டுத் திட்டப் பகுதிகளுக்காக முதலீட்டுச் செலவு களும் செய்கின்றன. 1951-52-ல் ஏ இராச்சியங் களின் மொத்த முதலீடு ரூ. 79'69 கோடி ; பீ இராச் சியங்களில் ரூ. 20*60 கோடி. 1953-54-ல் இவை முறையே ரூ. 126-78 கோடியும், ரூ. 27-96 கோடியு மாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
1952-53 முதல் அஜ்மீர், குடகு, டெல்லி, இமாசலப் பிரதேசம், விந்தியப்பிரதேசம், போபால் ஆகிய ஆறு சீ இராச்சியங்கள் தனியாக வரி வருமான வரவு செலவுத் திட்டம் தயார் செய்கின்றன. மீதியுள்ள இராச்சியங்க ளான கட்சு, பிலாஸ்பூர், மணிப்பூர், திரிபுரா ஆகிய வற்றின் வரவுசெலவுகள் மத்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் சேர்ந்துள்ளன.
டெல்லி தவிர, ஏனைய சீ இராச்சியங்களில் வரி வரு மான விகிதமானது வரியில்லாத வருமான விகிதத்தை விடக் குறைவாயிருக்கிறது. வரியல்லாத வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் உதவிநிதியேயாம்.
அரசாங்கக் கடன் : இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியதற்கு முந்திய ஆண்டில் இந்திய அரசாங்கக் கடன் ரூ. 1,205.76 கோடி. இதில் இந்தியாவில் வாங் கியது ரூ. 736:64. அயல்நாட்டில் வாங்கியது ரூ. 469•12 கோடி. யுத்தகாலத்தில் வியாபாரம் வளர்ந்ததாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்காக இந்திய அரசாங்கம் யுத்தச் செலவுகள் செய்ததாலும், பிரிட்டனுக்கு 1939-ல் தரவேண்டிய கடன் சவரன் 4,700 கோடி யானது யுத்த முடிவில் 700 கோடியாகக் குறைந்தது. அதே சமயத்தில் வெளிநாட்டுக் கடனை உள் நாட்டுக்கட னாக மாற்றியதால் இந்திய ரூபாய்க் கடன் அந்த ஆள வுக்கு மிகுந்தது. ஆகவே மத்திய அரசாங்கம் 1952-53 இறுதியில் தரவேண்டிய வட்டிக்கடன் மொத்தம் ரூ. 2,645-70 கோடி. இதில் இந்திய ரூபாய்க் கடன் ரூ. 2,501-73 கோடி. வெளிநாட்டுக் கடன் (டாலர் கடன் உட்பட) ரூ. 143'97 கோடி.
இந்தியா
ஏ இராச்சியங்களின் கடன் 1952-53 இறுதியில் மொத்தம் ரூ. 399'86 கோடி. இதில் நிலையான கடன் ரூ. 78.36 கோடி; நிலையாக் கடன் (Floating Debt) ரூ. 3:53 கோடி.; மத்திய அரசாங்கத்திடம் வாங்கி யவை ரூ. 279-38 கோடி; இனப்படுத்தாத கடன் (Unfunded Debt) ரூ. 36-79 கோடி. இப்புள்ளிகள் திட்டமானவை யல்ல.
1952-53 இறுதியில் மத்திய அரசாங்கத்தின் வட்டிக்கடன், முந்திய ஆண்டில் இருந்ததைவிட ரூ. 34 கோடி. மிகுந்துள்ளது. ஏ இராச்சியங் களின் கடன் அந்த ஆண்டில் ரூ. 77 கோடி மிகுந் துள்ளது.
நாணயச் செலாவணி இந்தியாவில் 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக் கிந்தியக் கம்பெனி ஆட்சி துவங்கியபொழுது இந்தியா வில் சுமார் 994 வகை நாணயங்கள் பழக்கத்திலிருந் தன. அவை எடையிலும் மாற்றிலும் வேறுபட்டிருந் தனவாதலால், வாணிகத்துக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன. கம்பெனியார் அக் குறைகளை நீக்கக் கம் பெனியின் குறியிட்டவையும், குறிப்பிட்ட மாற்றும் எடையும் பரஸ்பர மதிப்பும் விகிதமும் உள்ளவையு மான தங்க நாணயங்களையும் வெள்ளி நாணயங்களை யும் வெளியிட்டு, இரட்டை உலோக நாணய முறையை (Bimetallism) ஏற்படுத்த முயன்றனர். ஆனால் இந்த இரண்டு உலோகங்களின் இயல்பான மதிப்பு (Intrinsic value) அடிக்கடி மாறவே, சட்டப்படி திட்டம் செய்த மதிப்பும் விகிதமும் மாறின. ஆகையால் 1818-ல் வெள்ளிப் பிரமாண நாணயத்திட்டம் (Silver Stan' dard) ஏற்படுத்துவதென்று முடிவு செய்து, தங்க நாணயத்திற்குப் பதிலாக 180 கிரெயின் எடையும், + மாற்றும் உள்ள வெள்ளி ரூபாய்களை வெளியீட் டனர். ஆயினும் பழக்கத்தில் இருந்துவந்த தங்க வரா கன்கள், வராகன் ஒன்றிற்கு 15 ரூபாய் வீதம் செலா வணியில் இருந்துவந்தன. 1835ஆம் ஆண்டு நாணயச் சட்டப்படி (Coinage Act) இந்த ரூபாய், இந்தியா வில் கம்பெனியின் ஆட்சிக்குட்பட்ட இடங்களில் திட்ட நாணயமாகவும் (Standard Coin), சட்டச் செலாவணி (Legal tender) நாணயமாகவும் வெளி யிடப்பட்டது. வெள்ளியைத் தடையின்றி யாவரும் ரூபாய் நாணயமாக அடித்துக்கொள்ளும் உரிமையும் (Open mint for silver) கொடுக்கப்பட்ட ன. ஆனால் தங்க நாணயங்களும் செலாவணியில் இருந்து வந்தன. 1870ஆம் ஆண்டிலிருந்து வெள்ளியின் விலை குறையத் தொடங்கிற்று. ஆண்டுதோறும் இந்தியா வில் குவிந்த வெள்ளி, ரூபாயாக மாற்றப்பட்டது. பணப் பெருக்கெடுத்து விலைவாசிகள் ஏறின. வெள்ளியின் மதிப்புக் குறையவே, ஒரு ரூபாய்க்கு 2 ஷில்லிங்காக இருந்த ரூபாய்-பவுண்டு நாணயமாற்று விகிதம் ஒரு ரூபாய்க்கு 1 ஏ. 2 பெ. ஆயிற்று. இங்கிலாந்துக்கு இந்தியா செலுத்தவேண்டிய இனங்களுக்கு முன்னைவீட அதிக ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியதாயிற்று. தங்க நாணயத் திட்டமுள்ள (Gold Standard) நாடு களிலிருந்து இறக்குமதியாகும் பண்டங்களுக்கு அதிக ரூபாய்களும், ஐரோப்பிய உத்தியோகஸ்தர்களுக்கு அதிகச் சம்பளமும் கொடுக்கவேண்டி வந்தது. 1892-ல் ஹெர்ஷல் (Herschell) தலைமையில் ஒரு கமிட்டி நிய மிக்கப்பட்டது. இக் கமிட்டியின் சிபார்சுப்படி 1893-ல் தங்கசாலைகளில் வெள்ளியைக் கொடுத்துத் தடையின்றி நாணயமாக மாற்றும் உரிமை ரத்து செய்யப்பட்டது. ரூபாய் திட்ட நாணய அந்தஸ்தை இழந்து, சட்டச்<noinclude></noinclude>
bduvudy94h1zj1sa6wxjtl2ghrkrtzk
1433597
1433594
2022-07-20T15:02:16Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|685|இந்தியா}}</b></noinclude>1947-48-ல் ரூ. 1069-18 இலட்சமாயிருந்தது, 195152-ல் ரூ. 41 இலட்சமாகக் குறைந்துள்ளது. நிதிக்குழுவி னுடைய கருத்துக்களை ஏற்று, மத்திய அரசாங்கம் இராச்சியங்கட்கு அவற்றின் மக்கள் தொகைக்கு ஏற்ப, புகையிலை, தீப்பெட்டி, தாவரநெய் முதலிய தாவரச் செய்பொருள்கள் ஆகியவற்றுக்கு வசூல் செய்யும் கலால் வரி வருமானத்தில் 40% பிரித்துக் கொடுக்க ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இராச்சியங்கள் செலவில் பெரும்பகுதி அபிவிருத்தி இனங்களின தாகும். 1953-54-ல் ஏ இராச்சியங்களின் மொத்தச் செலவு மதிப்பு: ரூ. 362.93 கோடி. பீ இராச் சியங்களின் மொத்தச்செலவு மதிப்பு: ரூ.118.62 கோடி, இதில், விஞ்ஞான இலாகா, கல்வி, மருத்துவம், சுகா தாரம், விவசாயம், கால்நடை மருத்துவம், கூட்டுறவு, கைத்தொழில்கள், சிற்றூர் வளர்ச்சி, தொழிலாளர் நலம், விமானப் போக்குவரத்து, ரேடியோ, மின்சாரம், சமூகவளர்ச்சித் திட்டங்கள் ஆகிய அபிவிருத்தி இனங் களுக்காகவுள்ள செலவு ஏ இராச்சியங்களின் மொத் தச்செலவில் ரூ. 141-75 கோடி. அதாவது 391%. பீ இராச்சியங்களின் மொத்தச் செலவில் ரூ.50-44 கோடி அதாவது 42:5% ஆகும். வரி வசூல் நிருவாகத்துக்கும், நீதி பரிபாலனம், சிறை, போலீஸ் முதலிய அதிகார நிருவாகத்துக்கும் செலவு விகிதம் ஏ இராச்சியங்களில் முறையே 9•1%, 24%. பீ இராச்சியங்களில் முறையே 91%, 19% ஆகும்.
இராச்சியங்கள் இந்தச் செலவுகள் தவிர, ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள், நீர்ப்பாசனம், சாலைப் போக்குவரத்து, கைத்தொழில் வளர்ச்சி முதலிய ஐந் தாண்டுத் திட்டப் பகுதிகளுக்காக முதலீட்டுச் செலவு களும் செய்கின்றன. 1951-52-ல் ஏ இராச்சியங் களின் மொத்த முதலீடு ரூ. 79'69 கோடி ; பீ இராச் சியங்களில் ரூ. 20*60 கோடி. 1953-54-ல் இவை முறையே ரூ. 126-78 கோடியும், ரூ. 27-96 கோடியு மாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
1952-53 முதல் அஜ்மீர், குடகு, டெல்லி, இமாசலப் பிரதேசம், விந்தியப்பிரதேசம், போபால் ஆகிய ஆறு சீ இராச்சியங்கள் தனியாக வரி வருமான வரவு செலவுத் திட்டம் தயார் செய்கின்றன. மீதியுள்ள இராச்சியங்க ளான கட்சு, பிலாஸ்பூர், மணிப்பூர், திரிபுரா ஆகிய வற்றின் வரவுசெலவுகள் மத்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் சேர்ந்துள்ளன.
டெல்லி தவிர, ஏனைய சீ இராச்சியங்களில் வரி வரு மான விகிதமானது வரியில்லாத வருமான விகிதத்தை விடக் குறைவாயிருக்கிறது. வரியல்லாத வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் உதவிநிதியேயாம்.
அரசாங்கக் கடன் : இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியதற்கு முந்திய ஆண்டில் இந்திய அரசாங்கக் கடன் ரூ. 1,205.76 கோடி. இதில் இந்தியாவில் வாங் கியது ரூ. 736:64. அயல்நாட்டில் வாங்கியது ரூ. 469•12 கோடி. யுத்தகாலத்தில் வியாபாரம் வளர்ந்ததாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்காக இந்திய அரசாங்கம் யுத்தச் செலவுகள் செய்ததாலும், பிரிட்டனுக்கு 1939-ல் தரவேண்டிய கடன் சவரன் 4,700 கோடி யானது யுத்த முடிவில் 700 கோடியாகக் குறைந்தது. அதே சமயத்தில் வெளிநாட்டுக் கடனை உள் நாட்டுக்கட னாக மாற்றியதால் இந்திய ரூபாய்க் கடன் அந்த ஆள வுக்கு மிகுந்தது. ஆகவே மத்திய அரசாங்கம் 1952-53 இறுதியில் தரவேண்டிய வட்டிக்கடன் மொத்தம் ரூ. 2,645-70 கோடி. இதில் இந்திய ரூபாய்க் கடன் ரூ. 2,501-73 கோடி. வெளிநாட்டுக் கடன் (டாலர் கடன் உட்பட) ரூ. 143'97 கோடி.
ஏ இராச்சியங்களின் கடன் 1952-53 இறுதியில் மொத்தம் ரூ. 399'86 கோடி. இதில் நிலையான கடன் ரூ. 78.36 கோடி; நிலையாக் கடன் (Floating Debt) ரூ. 3:53 கோடி.; மத்திய அரசாங்கத்திடம் வாங்கி யவை ரூ. 279-38 கோடி; இனப்படுத்தாத கடன் (Unfunded Debt) ரூ. 36-79 கோடி. இப்புள்ளிகள் திட்டமானவை யல்ல.
1952-53 இறுதியில் மத்திய அரசாங்கத்தின் வட்டிக்கடன், முந்திய ஆண்டில் இருந்ததைவிட ரூ. 34 கோடி. மிகுந்துள்ளது. ஏ இராச்சியங் களின் கடன் அந்த ஆண்டில் ரூ. 77 கோடி மிகுந் துள்ளது.
நாணயச் செலாவணி
இந்தியாவில் 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக் கிந்தியக் கம்பெனி ஆட்சி துவங்கியபொழுது இந்தியா வில் சுமார் 994 வகை நாணயங்கள் பழக்கத்திலிருந் தன. அவை எடையிலும் மாற்றிலும் வேறுபட்டிருந் தனவாதலால், வாணிகத்துக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன. கம்பெனியார் அக் குறைகளை நீக்கக் கம் பெனியின் குறியிட்டவையும், குறிப்பிட்ட மாற்றும் எடையும் பரஸ்பர மதிப்பும் விகிதமும் உள்ளவையு மான தங்க நாணயங்களையும் வெள்ளி நாணயங்களை யும் வெளியிட்டு, இரட்டை உலோக நாணய முறையை (Bimetallism) ஏற்படுத்த முயன்றனர். ஆனால் இந்த இரண்டு உலோகங்களின் இயல்பான மதிப்பு (Intrinsic value) அடிக்கடி மாறவே, சட்டப்படி திட்டம் செய்த மதிப்பும் விகிதமும் மாறின. ஆகையால் 1818-ல் வெள்ளிப் பிரமாண நாணயத்திட்டம் (Silver Stan' dard) ஏற்படுத்துவதென்று முடிவு செய்து, தங்க நாணயத்திற்குப் பதிலாக 180 கிரெயின் எடையும், + மாற்றும் உள்ள வெள்ளி ரூபாய்களை வெளியீட் டனர். ஆயினும் பழக்கத்தில் இருந்துவந்த தங்க வரா கன்கள், வராகன் ஒன்றிற்கு 15 ரூபாய் வீதம் செலா வணியில் இருந்துவந்தன. 1835ஆம் ஆண்டு நாணயச் சட்டப்படி (Coinage Act) இந்த ரூபாய், இந்தியா வில் கம்பெனியின் ஆட்சிக்குட்பட்ட இடங்களில் திட்ட நாணயமாகவும் (Standard Coin), சட்டச் செலாவணி (Legal tender) நாணயமாகவும் வெளி யிடப்பட்டது. வெள்ளியைத் தடையின்றி யாவரும் ரூபாய் நாணயமாக அடித்துக்கொள்ளும் உரிமையும் (Open mint for silver) கொடுக்கப்பட்ட ன. ஆனால் தங்க நாணயங்களும் செலாவணியில் இருந்து வந்தன. 1870ஆம் ஆண்டிலிருந்து வெள்ளியின் விலை குறையத் தொடங்கிற்று. ஆண்டுதோறும் இந்தியா வில் குவிந்த வெள்ளி, ரூபாயாக மாற்றப்பட்டது. பணப் பெருக்கெடுத்து விலைவாசிகள் ஏறின. வெள்ளியின் மதிப்புக் குறையவே, ஒரு ரூபாய்க்கு 2 ஷில்லிங்காக இருந்த ரூபாய்-பவுண்டு நாணயமாற்று விகிதம் ஒரு ரூபாய்க்கு 1 ஏ. 2 பெ. ஆயிற்று. இங்கிலாந்துக்கு இந்தியா செலுத்தவேண்டிய இனங்களுக்கு முன்னைவீட அதிக ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியதாயிற்று. தங்க நாணயத் திட்டமுள்ள (Gold Standard) நாடு களிலிருந்து இறக்குமதியாகும் பண்டங்களுக்கு அதிக ரூபாய்களும், ஐரோப்பிய உத்தியோகஸ்தர்களுக்கு அதிகச் சம்பளமும் கொடுக்கவேண்டி வந்தது. 1892-ல் ஹெர்ஷல் (Herschell) தலைமையில் ஒரு கமிட்டி நிய மிக்கப்பட்டது. இக் கமிட்டியின் சிபார்சுப்படி 1893-ல் தங்கசாலைகளில் வெள்ளியைக் கொடுத்துத் தடையின்றி நாணயமாக மாற்றும் உரிமை ரத்து செய்யப்பட்டது. ரூபாய் திட்ட நாணய அந்தஸ்தை இழந்து, சட்டச்<noinclude></noinclude>
e0ybmiqjqfx7azcwad4dace0c5kny3n
1433628
1433597
2022-07-20T17:30:23Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|685|இந்தியா}}</b></noinclude>1947-48-ல் ரூ. 1069-18 இலட்சமாயிருந்தது, 195152-ல் ரூ. 41 இலட்சமாகக் குறைந்துள்ளது. நிதிக்குழுவினுடைய கருத்துக்களை ஏற்று, மத்திய அரசாங்கம் இராச்சியங்கட்கு அவற்றின் மக்கள் தொகைக்கு ஏற்ப, புகையிலை, தீப்பெட்டி, தாவரநெய் முதலிய தாவரச் செய்பொருள்கள் ஆகியவற்றுக்கு வசூல் செய்யும் கலால் வரி வருமானத்தில் 40% பிரித்துக் கொடுக்க ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இராச்சியங்கள் செலவில் பெரும்பகுதி அபிவிருத்தி இனங்களினதாகும். 1953-54-ல் ஏ இராச்சியங்களின் மொத்தச் செலவு மதிப்பு : ரூ. 362.93 கோடி. பீ இராச்சியங்களின் மொத்தச்செலவு மதிப்பு : ரூ.118.62 கோடி, இதில், விஞ்ஞான இலாகா, கல்வி, மருத்துவம், சுகாதாரம், விவசாயம், கால்நடை மருத்துவம், கூட்டுறவு, கைத்தொழில்கள், சிற்றூர் வளர்ச்சி, தொழிலாளர் நலம், விமானப் போக்குவரத்து, ரேடியோ, மின்சாரம், சமூகவளர்ச்சித் திட்டங்கள் ஆகிய அபிவிருத்தி இனங்களுக்காகவுள்ள செலவு ஏ இராச்சியங்களின் மொத்தச்செலவில் ரூ. 141.75 கோடி. அதாவது 39.1%. பீ இராச்சியங்களின் மொத்தச் செலவில் ரூ.50.44 கோடி அதாவது 42.5% ஆகும். வரி வசூல் நிருவாகத்துக்கும், நீதி பரிபாலனம், சிறை, போலீஸ் முதலிய அதிகார நிருவாகத்துக்கும் செலவு விகிதம் ஏ இராச்சியங்களில் முறையே 9.1%, 24%. பீ இராச்சியங்களில் முறையே 9.1%, 19% ஆகும்.
இராச்சியங்கள் இந்தச் செலவுகள் தவிர, ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள், நீர்ப்பாசனம், சாலைப் போக்குவரத்து, கைத்தொழில் வளர்ச்சி முதலிய ஐந்தாண்டுத் திட்டப் பகுதிகளுக்காக முதலீட்டுச் செலவுகளும் செய்கின்றன. 1951-52-ல் ஏ இராச்சியங்களின் மொத்த முதலீடு ரூ. 79.69 கோடி ; பீ இராச்சியங்களில் ரூ. 20-60 கோடி. 1953-54-ல் இவை முறையே ரூ. 126-78 கோடியும், ரூ. 27-96 கோடியுமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
1952-53 முதல் அஜ்மீர், குடகு, டெல்லி, இமாசலப் பிரதேசம், விந்தியப்பிரதேசம், போபால் ஆகிய ஆறு சீ இராச்சியங்கள் தனியாக வரி வருமான வரவு செலவுத் திட்டம் தயார் செய்கின்றன. மீதியுள்ள இராச்சியங்களான கட்சு, பிலாஸ்பூர், மணிப்பூர், திரிபுரா ஆகியவற்றின் வரவுசெலவுகள் மத்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் சேர்ந்துள்ளன.
டெல்லி தவிர, ஏனைய சீ இராச்சியங்களில் வரி வரு மான விகிதமானது வரியில்லாத வருமான விகிதத்தை விடக் குறைவாயிருக்கிறது. வரியல்லாத வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் உதவிநிதியேயாம்.
அரசாங்கக் கடன் : இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியதற்கு முந்திய ஆண்டில் இந்திய அரசாங்கக் கடன் ரூ. 1,205.76 கோடி. இதில் இந்தியாவில் வாங் கியது ரூ. 736:64. அயல்நாட்டில் வாங்கியது ரூ. 469•12 கோடி. யுத்தகாலத்தில் வியாபாரம் வளர்ந்ததாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்காக இந்திய அரசாங்கம் யுத்தச் செலவுகள் செய்ததாலும், பிரிட்டனுக்கு 1939-ல் தரவேண்டிய கடன் சவரன் 4,700 கோடி யானது யுத்த முடிவில் 700 கோடியாகக் குறைந்தது. அதே சமயத்தில் வெளிநாட்டுக் கடனை உள் நாட்டுக்கட னாக மாற்றியதால் இந்திய ரூபாய்க் கடன் அந்த ஆள வுக்கு மிகுந்தது. ஆகவே மத்திய அரசாங்கம் 1952-53 இறுதியில் தரவேண்டிய வட்டிக்கடன் மொத்தம் ரூ. 2,645-70 கோடி. இதில் இந்திய ரூபாய்க் கடன் ரூ. 2,501-73 கோடி. வெளிநாட்டுக் கடன் (டாலர் கடன் உட்பட) ரூ. 143'97 கோடி.
ஏ இராச்சியங்களின் கடன் 1952-53 இறுதியில் மொத்தம் ரூ. 399'86 கோடி. இதில் நிலையான கடன் ரூ. 78.36 கோடி; நிலையாக் கடன் (Floating Debt) ரூ. 3:53 கோடி.; மத்திய அரசாங்கத்திடம் வாங்கி யவை ரூ. 279-38 கோடி; இனப்படுத்தாத கடன் (Unfunded Debt) ரூ. 36-79 கோடி. இப்புள்ளிகள் திட்டமானவை யல்ல.
1952-53 இறுதியில் மத்திய அரசாங்கத்தின் வட்டிக்கடன், முந்திய ஆண்டில் இருந்ததைவிட ரூ. 34 கோடி. மிகுந்துள்ளது. ஏ இராச்சியங் களின் கடன் அந்த ஆண்டில் ரூ. 77 கோடி மிகுந் துள்ளது.
நாணயச் செலாவணி
இந்தியாவில் 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக் கிந்தியக் கம்பெனி ஆட்சி துவங்கியபொழுது இந்தியா வில் சுமார் 994 வகை நாணயங்கள் பழக்கத்திலிருந் தன. அவை எடையிலும் மாற்றிலும் வேறுபட்டிருந் தனவாதலால், வாணிகத்துக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன. கம்பெனியார் அக் குறைகளை நீக்கக் கம் பெனியின் குறியிட்டவையும், குறிப்பிட்ட மாற்றும் எடையும் பரஸ்பர மதிப்பும் விகிதமும் உள்ளவையு மான தங்க நாணயங்களையும் வெள்ளி நாணயங்களை யும் வெளியிட்டு, இரட்டை உலோக நாணய முறையை (Bimetallism) ஏற்படுத்த முயன்றனர். ஆனால் இந்த இரண்டு உலோகங்களின் இயல்பான மதிப்பு (Intrinsic value) அடிக்கடி மாறவே, சட்டப்படி திட்டம் செய்த மதிப்பும் விகிதமும் மாறின. ஆகையால் 1818-ல் வெள்ளிப் பிரமாண நாணயத்திட்டம் (Silver Stan' dard) ஏற்படுத்துவதென்று முடிவு செய்து, தங்க நாணயத்திற்குப் பதிலாக 180 கிரெயின் எடையும், + மாற்றும் உள்ள வெள்ளி ரூபாய்களை வெளியீட் டனர். ஆயினும் பழக்கத்தில் இருந்துவந்த தங்க வரா கன்கள், வராகன் ஒன்றிற்கு 15 ரூபாய் வீதம் செலா வணியில் இருந்துவந்தன. 1835ஆம் ஆண்டு நாணயச் சட்டப்படி (Coinage Act) இந்த ரூபாய், இந்தியா வில் கம்பெனியின் ஆட்சிக்குட்பட்ட இடங்களில் திட்ட நாணயமாகவும் (Standard Coin), சட்டச் செலாவணி (Legal tender) நாணயமாகவும் வெளி யிடப்பட்டது. வெள்ளியைத் தடையின்றி யாவரும் ரூபாய் நாணயமாக அடித்துக்கொள்ளும் உரிமையும் (Open mint for silver) கொடுக்கப்பட்ட ன. ஆனால் தங்க நாணயங்களும் செலாவணியில் இருந்து வந்தன. 1870ஆம் ஆண்டிலிருந்து வெள்ளியின் விலை குறையத் தொடங்கிற்று. ஆண்டுதோறும் இந்தியா வில் குவிந்த வெள்ளி, ரூபாயாக மாற்றப்பட்டது. பணப் பெருக்கெடுத்து விலைவாசிகள் ஏறின. வெள்ளியின் மதிப்புக் குறையவே, ஒரு ரூபாய்க்கு 2 ஷில்லிங்காக இருந்த ரூபாய்-பவுண்டு நாணயமாற்று விகிதம் ஒரு ரூபாய்க்கு 1 ஏ. 2 பெ. ஆயிற்று. இங்கிலாந்துக்கு இந்தியா செலுத்தவேண்டிய இனங்களுக்கு முன்னைவீட அதிக ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியதாயிற்று. தங்க நாணயத் திட்டமுள்ள (Gold Standard) நாடு களிலிருந்து இறக்குமதியாகும் பண்டங்களுக்கு அதிக ரூபாய்களும், ஐரோப்பிய உத்தியோகஸ்தர்களுக்கு அதிகச் சம்பளமும் கொடுக்கவேண்டி வந்தது. 1892-ல் ஹெர்ஷல் (Herschell) தலைமையில் ஒரு கமிட்டி நிய மிக்கப்பட்டது. இக் கமிட்டியின் சிபார்சுப்படி 1893-ல் தங்கசாலைகளில் வெள்ளியைக் கொடுத்துத் தடையின்றி நாணயமாக மாற்றும் உரிமை ரத்து செய்யப்பட்டது. ரூபாய் திட்ட நாணய அந்தஸ்தை இழந்து, சட்டச்<noinclude></noinclude>
incbqoxsj22vi7hj819thic89ihbcbm
1433629
1433628
2022-07-20T17:43:33Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|685|இந்தியா}}</b></noinclude>1947-48-ல் ரூ. 1069-18 இலட்சமாயிருந்தது, 195152-ல் ரூ. 41 இலட்சமாகக் குறைந்துள்ளது. நிதிக்குழுவினுடைய கருத்துக்களை ஏற்று, மத்திய அரசாங்கம் இராச்சியங்கட்கு அவற்றின் மக்கள் தொகைக்கு ஏற்ப, புகையிலை, தீப்பெட்டி, தாவரநெய் முதலிய தாவரச் செய்பொருள்கள் ஆகியவற்றுக்கு வசூல் செய்யும் கலால் வரி வருமானத்தில் 40% பிரித்துக் கொடுக்க ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இராச்சியங்கள் செலவில் பெரும்பகுதி அபிவிருத்தி இனங்களினதாகும். 1953-54-ல் ஏ இராச்சியங்களின் மொத்தச் செலவு மதிப்பு : ரூ. 362.93 கோடி. பீ இராச்சியங்களின் மொத்தச்செலவு மதிப்பு : ரூ.118.62 கோடி, இதில், விஞ்ஞான இலாகா, கல்வி, மருத்துவம், சுகாதாரம், விவசாயம், கால்நடை மருத்துவம், கூட்டுறவு, கைத்தொழில்கள், சிற்றூர் வளர்ச்சி, தொழிலாளர் நலம், விமானப் போக்குவரத்து, ரேடியோ, மின்சாரம், சமூகவளர்ச்சித் திட்டங்கள் ஆகிய அபிவிருத்தி இனங்களுக்காகவுள்ள செலவு ஏ இராச்சியங்களின் மொத்தச்செலவில் ரூ. 141.75 கோடி. அதாவது 39.1%. பீ இராச்சியங்களின் மொத்தச் செலவில் ரூ.50.44 கோடி அதாவது 42.5% ஆகும். வரி வசூல் நிருவாகத்துக்கும், நீதி பரிபாலனம், சிறை, போலீஸ் முதலிய அதிகார நிருவாகத்துக்கும் செலவு விகிதம் ஏ இராச்சியங்களில் முறையே 9.1%, 24%. பீ இராச்சியங்களில் முறையே 9.1%, 19% ஆகும்.
இராச்சியங்கள் இந்தச் செலவுகள் தவிர, ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள், நீர்ப்பாசனம், சாலைப் போக்குவரத்து, கைத்தொழில் வளர்ச்சி முதலிய ஐந்தாண்டுத் திட்டப் பகுதிகளுக்காக முதலீட்டுச் செலவுகளும் செய்கின்றன. 1951-52-ல் ஏ இராச்சியங்களின் மொத்த முதலீடு ரூ. 79.69 கோடி ; பீ இராச்சியங்களில் ரூ. 20-60 கோடி. 1953-54-ல் இவை முறையே ரூ. 126-78 கோடியும், ரூ. 27-96 கோடியுமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
1952-53 முதல் அஜ்மீர், குடகு, டெல்லி, இமாசலப் பிரதேசம், விந்தியப்பிரதேசம், போபால் ஆகிய ஆறு சீ இராச்சியங்கள் தனியாக வரி வருமான வரவு செலவுத் திட்டம் தயார் செய்கின்றன. மீதியுள்ள இராச்சியங்களான கட்சு, பிலாஸ்பூர், மணிப்பூர், திரிபுரா ஆகியவற்றின் வரவுசெலவுகள் மத்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் சேர்ந்துள்ளன.
டெல்லி தவிர, ஏனைய சீ இராச்சியங்களில் வரி வருமான விகிதமானது வரியில்லாத வருமான விகிதத்தை விடக் குறைவாயிருக்கிறது. வரியல்லாத வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் உதவிநிதியேயாம்.
{{larger|அரசாங்கக் கடன் :}} இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியதற்கு முந்திய ஆண்டில் இந்திய அரசாங்கக் கடன் ரூ. 1,205.76 கோடி. இதில் இந்தியாவில் வாங்கியது ரூ. 736.64. அயல்நாட்டில் வாங்கியது ரூ. 469.12 கோடி. யுத்தகாலத்தில் வியாபாரம் வளர்ந்ததாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்காக இந்திய அரசாங்கம் யுத்தச் செலவுகள் செய்ததாலும், பிரிட்டனுக்கு 1939-ல் தரவேண்டிய கடன் சவரன் 4,700 கோடியானது யுத்த முடிவில் 700 கோடியாகக் குறைந்தது. அதே சமயத்தில் வெளிநாட்டுக் கடனை உள்நாட்டுக்கடனாக மாற்றியதால் இந்திய ரூபாய்க் கடன் அந்த அளவுக்கு மிகுந்தது. ஆகவே மத்திய அரசாங்கம் 1952-53 இறுதியில் தரவேண்டிய வட்டிக்கடன் மொத்தம் ரூ. 2,645-70 கோடி. இதில் இந்திய ரூபாய்க் கடன் ரூ. 2,501.73 கோடி. வெளிநாட்டுக் கடன் (டாலர் கடன் உட்பட) ரூ. 143.97 கோடி.
ஏ இராச்சியங்களின் கடன் 1952-53 இறுதியில் மொத்தம் ரூ. 399.86 கோடி. இதில் நிலையான கடன் ரூ. 78.36 கோடி; நிலையாக் கடன் (Floating Debt) ரூ. 3:53 கோடி; மத்திய அரசாங்கத்திடம் வாங்கியவை ரூ. 279.38 கோடி; இனப்படுத்தாத கடன் (Unfunded Debt) ரூ. 36.79 கோடி. இப்புள்ளிகள் திட்டமானவை யல்ல.
1952-53 இறுதியில் மத்திய அரசாங்கத்தின் வட்டிக்கடன், முந்திய ஆண்டில் இருந்ததைவிட ரூ. 34 கோடி. மிகுந்துள்ளது. ஏ இராச்சியங்களின் கடன் அந்த ஆண்டில் ரூ. 77 கோடி மிகுந்துள்ளது. {{Right|டீ.பீ}}
{{center|{{larger|<b>நாணயச் செலாவணி</b>}}}}
இந்தியாவில் 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி துவங்கியபொழுது இந்தியாவில் சுமார் 994 வகை நாணயங்கள் பழக்கத்திலிருந்தன. அவை எடையிலும் மாற்றிலும் வேறுபட்டிருநதனவாதலால், வாணிகத்துக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன. கம்பெனியார் அக் குறைகளை நீக்கக் கம்பெனியின் குறியிட்டவையும், குறிப்பிட்ட மாற்றும் எடையும் பரஸ்பர மதிப்பும் விகிதமும் உள்ளவையுமான தங்க நாணயங்களையும் வெள்ளி நாணயங்களையும் வெளியிட்டு, இரட்டை உலோக நாணய முறையை (Bimetallism) ஏற்படுத்த முயன்றனர். ஆனால் இந்த இரண்டு உலோகங்களின் இயல்பான மதிப்பு (Intrinsic value) அடிக்கடி மாறவே, சட்டப்படி திட்டம் செய்த மதிப்பும் விகிதமும் மாறின. ஆகையால் 1818-ல் வெள்ளிப் பிரமாண நாணயத்திட்டம் (Silver Standard) ஏற்படுத்துவதென்று முடிவு செய்து, தங்க நாணயத்திற்குப் பதிலாக 180 கிரெயின் எடையும், ¹½ மாற்றும் உள்ள வெள்ளி ரூபாய்களை வெளியீட்டனர். ஆயினும் பழக்கத்தில் இருந்துவந்த தங்க வராகன்கள், வராகன் ஒன்றிற்கு 15 ரூபாய் வீதம் செலாவணியில் இருந்துவந்தன. 1835ஆம் ஆண்டு நாணயச் சட்டப்படி (Coinage Act) இந்த ரூபாய், இந்தியாவில் கம்பெனியின் ஆட்சிக்குட்பட்ட இடங்களில் திட்ட நாணயமாகவும் (Standard Coin), சட்டச் செலாவணி (Legal tender) நாணயமாகவும் வெளியிடப்பட்டது. வெள்ளியைத் தடையின்றி யாவரும் ரூபாய் நாணயமாக அடித்துக்கொள்ளும் உரிமையும் (Open mint for silver) கொடுக்கப்பட்டன. ஆனால் தங்க நாணயங்களும் செலாவணியில் இருந்து வந்தன. 1870ஆம் ஆண்டிலிருந்து வெள்ளியின் விலை குறையத் தொடங்கிற்று. ஆண்டுதோறும் இந்தியாவில் குவிந்த வெள்ளி, ரூபாயாக மாற்றப்பட்டது. பணப்பெருக்கெடுத்து விலைவாசிகள் ஏறின. வெள்ளியின் மதிப்புக் குறையவே, ஒரு ரூபாய்க்கு 2 ஷில்லிங்காக இருந்த ரூபாய்-பவுண்டு நாணயமாற்று விகிதம் ஒரு ரூபாய்க்கு 1 ஷி. 2 பெ. ஆயிற்று. இங்கிலாந்துக்கு இந்தியா செலுத்தவேண்டிய இனங்களுக்கு முன்னைவீட அதிக ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியதாயிற்று. தங்க நாணயத் திட்டமுள்ள (Gold Standard) நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பண்டங்களுக்கு அதிக ரூபாய்களும், ஐரோப்பிய உத்தியோகஸ்தர்களுக்கு அதிகச் சம்பளமும் கொடுக்கவேண்டி வந்தது. 1892-ல் ஹெர்ஷல் (Herschell) தலைமையில் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. இக் கமிட்டியின் சிபார்சுப்படி 1893-ல் தங்கசாலைகளில் வெள்ளியைக் கொடுத்துத் தடையின்றி நாணயமாக மாற்றும் உரிமை ரத்து செய்யப்பட்டது. ரூபாய் திட்ட நாணய அந்தஸ்தை இழந்து, சட்டச்<noinclude></noinclude>
31icsp024sq4nt0xqnt9qemo9p08qqq
1433630
1433629
2022-07-20T17:47:17Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|685|இந்தியா}}</b></noinclude>1947-48-ல் ரூ. 1069-18 இலட்சமாயிருந்தது, 195152-ல் ரூ. 41 இலட்சமாகக் குறைந்துள்ளது. நிதிக்குழுவினுடைய கருத்துக்களை ஏற்று, மத்திய அரசாங்கம் இராச்சியங்கட்கு அவற்றின் மக்கள் தொகைக்கு ஏற்ப, புகையிலை, தீப்பெட்டி, தாவரநெய் முதலிய தாவரச் செய்பொருள்கள் ஆகியவற்றுக்கு வசூல் செய்யும் கலால் வரி வருமானத்தில் 40% பிரித்துக் கொடுக்க ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இராச்சியங்கள் செலவில் பெரும்பகுதி அபிவிருத்தி இனங்களினதாகும். 1953-54-ல் ஏ இராச்சியங்களின் மொத்தச் செலவு மதிப்பு : ரூ. 362.93 கோடி. பீ இராச்சியங்களின் மொத்தச்செலவு மதிப்பு : ரூ.118.62 கோடி, இதில், விஞ்ஞான இலாகா, கல்வி, மருத்துவம், சுகாதாரம், விவசாயம், கால்நடை மருத்துவம், கூட்டுறவு, கைத்தொழில்கள், சிற்றூர் வளர்ச்சி, தொழிலாளர் நலம், விமானப் போக்குவரத்து, ரேடியோ, மின்சாரம், சமூகவளர்ச்சித் திட்டங்கள் ஆகிய அபிவிருத்தி இனங்களுக்காகவுள்ள செலவு ஏ இராச்சியங்களின் மொத்தச்செலவில் ரூ. 141.75 கோடி. அதாவது 39.1%. பீ இராச்சியங்களின் மொத்தச் செலவில் ரூ.50.44 கோடி அதாவது 42.5% ஆகும். வரி வசூல் நிருவாகத்துக்கும், நீதி பரிபாலனம், சிறை, போலீஸ் முதலிய அதிகார நிருவாகத்துக்கும் செலவு விகிதம் ஏ இராச்சியங்களில் முறையே 9.1%, 24%. பீ இராச்சியங்களில் முறையே 9.1%, 19% ஆகும்.
இராச்சியங்கள் இந்தச் செலவுகள் தவிர, ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள், நீர்ப்பாசனம், சாலைப் போக்குவரத்து, கைத்தொழில் வளர்ச்சி முதலிய ஐந்தாண்டுத் திட்டப் பகுதிகளுக்காக முதலீட்டுச் செலவுகளும் செய்கின்றன. 1951-52-ல் ஏ இராச்சியங்களின் மொத்த முதலீடு ரூ. 79.69 கோடி ; பீ இராச்சியங்களில் ரூ. 20-60 கோடி. 1953-54-ல் இவை முறையே ரூ. 126-78 கோடியும், ரூ. 27-96 கோடியுமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
1952-53 முதல் அஜ்மீர், குடகு, டெல்லி, இமாசலப் பிரதேசம், விந்தியப்பிரதேசம், போபால் ஆகிய ஆறு சீ இராச்சியங்கள் தனியாக வரி வருமான வரவு செலவுத் திட்டம் தயார் செய்கின்றன. மீதியுள்ள இராச்சியங்களான கட்சு, பிலாஸ்பூர், மணிப்பூர், திரிபுரா ஆகியவற்றின் வரவுசெலவுகள் மத்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் சேர்ந்துள்ளன.
டெல்லி தவிர, ஏனைய சீ இராச்சியங்களில் வரி வருமான விகிதமானது வரியில்லாத வருமான விகிதத்தை விடக் குறைவாயிருக்கிறது. வரியல்லாத வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் உதவிநிதியேயாம்.
{{larger|அரசாங்கக் கடன் :}} இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியதற்கு முந்திய ஆண்டில் இந்திய அரசாங்கக் கடன் ரூ. 1,205.76 கோடி. இதில் இந்தியாவில் வாங்கியது ரூ. 736.64. அயல்நாட்டில் வாங்கியது ரூ. 469.12 கோடி. யுத்தகாலத்தில் வியாபாரம் வளர்ந்ததாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்காக இந்திய அரசாங்கம் யுத்தச் செலவுகள் செய்ததாலும், பிரிட்டனுக்கு 1939-ல் தரவேண்டிய கடன் சவரன் 4,700 கோடியானது யுத்த முடிவில் 700 கோடியாகக் குறைந்தது. அதே சமயத்தில் வெளிநாட்டுக் கடனை உள்நாட்டுக்கடனாக மாற்றியதால் இந்திய ரூபாய்க் கடன் அந்த அளவுக்கு மிகுந்தது. ஆகவே மத்திய அரசாங்கம் 1952-53 இறுதியில் தரவேண்டிய வட்டிக்கடன் மொத்தம் ரூ. 2,645-70 கோடி. இதில் இந்திய ரூபாய்க் கடன் ரூ. 2,501.73 கோடி. வெளிநாட்டுக் கடன் (டாலர் கடன் உட்பட) ரூ. 143.97 கோடி.
ஏ இராச்சியங்களின் கடன் 1952-53 இறுதியில் மொத்தம் ரூ. 399.86 கோடி. இதில் நிலையான கடன் ரூ. 78.36 கோடி; நிலையாக் கடன் (Floating Debt) ரூ. 3:53 கோடி; மத்திய அரசாங்கத்திடம் வாங்கியவை ரூ. 279.38 கோடி; இனப்படுத்தாத கடன் (Unfunded Debt) ரூ. 36.79 கோடி. இப்புள்ளிகள் திட்டமானவை யல்ல.
1952-53 இறுதியில் மத்திய அரசாங்கத்தின் வட்டிக்கடன், முந்திய ஆண்டில் இருந்ததைவிட ரூ. 34 கோடி. மிகுந்துள்ளது. ஏ இராச்சியங்களின் கடன் அந்த ஆண்டில் ரூ. 77 கோடி மிகுந்துள்ளது. {{Right|டீ.பீ}}
{{center|{{larger|<b>நாணயச் செலாவணி</b>}}}}
இந்தியாவில் 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி துவங்கியபொழுது இந்தியாவில் சுமார் 994 வகை நாணயங்கள் பழக்கத்திலிருந்தன. அவை எடையிலும் மாற்றிலும் வேறுபட்டிருநதனவாதலால், வாணிகத்துக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன. கம்பெனியார் அக் குறைகளை நீக்கக் கம்பெனியின் குறியிட்டவையும், குறிப்பிட்ட மாற்றும் எடையும் பரஸ்பர மதிப்பும் விகிதமும் உள்ளவையுமான தங்க நாணயங்களையும் வெள்ளி நாணயங்களையும் வெளியிட்டு, இரட்டை உலோக நாணய முறையை (Bimetallism) ஏற்படுத்த முயன்றனர். ஆனால் இந்த இரண்டு உலோகங்களின் இயல்பான மதிப்பு (Intrinsic value) அடிக்கடி மாறவே, சட்டப்படி திட்டம் செய்த மதிப்பும் விகிதமும் மாறின. ஆகையால் 1818-ல் வெள்ளிப் பிரமாண நாணயத்திட்டம் (Silver Standard) ஏற்படுத்துவதென்று முடிவு செய்து, தங்க நாணயத்திற்குப் பதிலாக 180 கிரெயின் எடையும், 11/12 மாற்றும் உள்ள வெள்ளி ரூபாய்களை வெளியீட்டனர். ஆயினும் பழக்கத்தில் இருந்துவந்த தங்க வராகன்கள், வராகன் ஒன்றிற்கு 15 ரூபாய் வீதம் செலாவணியில் இருந்துவந்தன. 1835ஆம் ஆண்டு நாணயச் சட்டப்படி (Coinage Act) இந்த ரூபாய், இந்தியாவில் கம்பெனியின் ஆட்சிக்குட்பட்ட இடங்களில் திட்ட நாணயமாகவும் (Standard Coin), சட்டச் செலாவணி (Legal tender) நாணயமாகவும் வெளியிடப்பட்டது. வெள்ளியைத் தடையின்றி யாவரும் ரூபாய் நாணயமாக அடித்துக்கொள்ளும் உரிமையும் (Open mint for silver) கொடுக்கப்பட்டன. ஆனால் தங்க நாணயங்களும் செலாவணியில் இருந்து வந்தன. 1870ஆம் ஆண்டிலிருந்து வெள்ளியின் விலை குறையத் தொடங்கிற்று. ஆண்டுதோறும் இந்தியாவில் குவிந்த வெள்ளி, ரூபாயாக மாற்றப்பட்டது. பணப்பெருக்கெடுத்து விலைவாசிகள் ஏறின. வெள்ளியின் மதிப்புக் குறையவே, ஒரு ரூபாய்க்கு 2 ஷில்லிங்காக இருந்த ரூபாய்-பவுண்டு நாணயமாற்று விகிதம் ஒரு ரூபாய்க்கு 1 ஷி. 2 பெ. ஆயிற்று. இங்கிலாந்துக்கு இந்தியா செலுத்தவேண்டிய இனங்களுக்கு முன்னைவீட அதிக ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியதாயிற்று. தங்க நாணயத் திட்டமுள்ள (Gold Standard) நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பண்டங்களுக்கு அதிக ரூபாய்களும், ஐரோப்பிய உத்தியோகஸ்தர்களுக்கு அதிகச் சம்பளமும் கொடுக்கவேண்டி வந்தது. 1892-ல் ஹெர்ஷல் (Herschell) தலைமையில் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. இக் கமிட்டியின் சிபார்சுப்படி 1893-ல் தங்கசாலைகளில் வெள்ளியைக் கொடுத்துத் தடையின்றி நாணயமாக மாற்றும் உரிமை ரத்து செய்யப்பட்டது. ரூபாய் திட்ட நாணய அந்தஸ்தை இழந்து, சட்டச்<noinclude></noinclude>
gjn9rqas4nl4t6djcl29jz4jrxfvgrj
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/751
250
445890
1433622
1418268
2022-07-20T17:04:33Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|686|இந்தியா}}</b></noinclude>செலாவணி நாணயமாக மாத்திரம் இருந்தது. மேலும் அரசாங்கத்தார் ஒரு ரூபாய்க்கு 1 ஷி .4 பெ. வீதம் சவரன்களையும் அரைச் சவரன்களையும் பெற்றுக் கொள்வதாக அறிக்கை யிட்டனர்.
1898-ல் இந்தியாவில் தங்கநாணயத் திட்டம் ஏற் படுத்துவதைப்பற்றி ஆராயச் சர் ஹென்ரி பவுலர் தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டி இந்தியாவில் தங்க நாணயச் செலாவணியுடன் தங்கத் திட்ட
நாணய முறை ஏற்படுத்த வேண்டு மென்று கூறியது. கமிட்டியின் சிபார்சுகளை அரசாங்கம் ஏற்றது. 1899-ல் சவரன்களும் அரைச் சவரன்களும் சட்டச் செலாவணி நாணயங்களாகச் செய்யப்பட்டன.வெள்ளி ரூபாயும் சட்டச் செலாவணி நாணயமாக இருந் தது. ஆனால் வெள்ளியைக் கொடுத்து ரூபாயாக மாற் றும் உரிமை மட்டிலும் இல்லை. சவரன்களுக்கும் ரூபாய்க்கும் பரஸ்பர மதிப்பு விகிதம் ரூ., 1ஷி. 4பெ. (அதாவது 1 சவரன் = ரூ.15) ஆனால் இந்தி யாவில் தங்கத் திட்ட நாணய முறை அமைக்க வேண்டுமென்ற நோக்கம் நிறைவேறவில்லை. அதற் குப் பதிலாகத் தங்க நாணய இனமாற்றுத் திட்டம் (Gold Exchange. Standard) தோன்றியது. 1894-1900 ஆண்டுகளில் தங்க நாணயங்களை வழங்கிப் பழக்கத்தில் கொண்டுவர அரசாங்கத்தார் முயன்றனர். ஆனால் நாட்டில் பஞ்சமேற்பட்டிருந்த தால் அதிக மதிப்புள்ள நாணயத்துக்குத் தேவையில்லா மல் ரூபாய்களுக்கு அதிக கிராக்கி யேற்பட்டது. தங்க நாணயங்கள் திரும்பவும் கஜானாவில் வந்து சேர்ந்தன. அரசாங்கத்தார் நாட்டில் தங்க நாணயங்களில் ஆசை யில்லை என்று எண்ணித் திரும்பவும் வெள்ளி வாங்கி ரூபாய்கள் அச்சிட்டு வெளியிட்டனர். ஆகையால் நடை முறையில் உள்நாட்டில் குறி அல்லது ஒப்பு நாணய (Token Money) அந்தஸ்து வாய்ந்த ரூபாய்களும் காகித நோட்டுக்களும் (Paper Notes) செலாவணியா யிருந்தன. மேலும் 1904 வரை இந்திய மந்திரி இந்திய சர்க்கார் சம்பந்தமான செலவுக்கு வேண்டிய மட்டில் அவ்வப்பொழுது கவுன்சில் பில் (Council Bills) முறையில் ஸ்டர்லிங்கு வருவித்துக் கொள்வது வழக்கம். அதாவது இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்ப விரும்புவோர்க்கு அவர்களிடமிருந்து பவுண்டு ஸ்டர்லிங்கு பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக 1ஷி.4 பெ.க்கு ஒரு ருபாய் வீதம் இந்தியாவின் பெய ரில் (கவர்னர் ஜெனரல் மீது) உண்டியல் விற்பது வழக் கம்: கவுன்சில் பில் அல்லது கவுன்சில் உண்டியல் என்ற இந்த உண்டியல்களுக்கு இந்தியாவில் ரூபாய் கொடுப் பது வழக்கம். ஆனால் 1904 முதல் இந்தியாவில் ரூபாய் களுக்குக் கிராக்கி ஏற்பட்டு, ரூபாயின் மாற்று விகிதம் 1 வி. 4 பெ.க்கு மேல் ஏறும்பொழுதெல்லாம் இந்தியா மந்திரி ரூ.1க்கு 1 ஷி. 4 பெ. வீதம் தம் தேவைக்கு மட்டுமன்றி, இந்தியாவுக்குப் பணம் அனுப்பவேண்டிய வர்களுக்கெல்லாம் கவுன்சில் உண்டியல்களை விற்பது வழக்கமாயிற்று. 1907-8-ல் இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்ததின் பயனாக இந்தியா விலிருந்து இங்கிலாந்துக்கு அதிகப் பணம் அனுப்ப வேண்டி வந்தது. பவுண்டு ஸ்டர்லிங்குக்குக் கிராக்கி ஏற்பட்டது. ரூபாயின் நாணய மாற்று மதிப்புக் குறைந்தது. இச்சமயம் இந்தியா மந்திரியின் உத்தர வின்பேரில் கவர்னர் ஜெனரல் இங்கிலாந்துக்குப் பணம் அனுப்ப வேண்டியவர்களிடமிருந்து ரூபாய் பெற்று, அதற்குப் பதிலாக 1 ஷி. 4 பெ. வீதம் இந்தியா மந்திரியின் பெயரால் உண்டியல் விற்றார். இவ் வுண் டியல்களுக்கு இந்தியா மந்திரி இங்கிலாந்தில் பவுண்டு
ஆனால்,1915க்குப்பின் இந்தியாவின் வர்த்தகச் சாதக நிலை அதிகரித்து, ரூபாய்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. மேலும் 1916லிருந்து வெள்ளி விலையும் வெகுவாக அதிகரித்தது. 1915-ல் ஓர் அவுன்ஸ் வெள்ளி விலை 27 பெ. 1919-ல் 78 பெ. இந்தியாவில் வெள்ளி ரூபாய்கள் உருக்கிப் பதுக்கப்பட்டன. நாணயப் பஞ்சமும் ஏற்பட் டது. ஒரு ரூபாய் இரண்டரை ரூபாய் நோட்டுக்களும், நிக்கல்இரண்டணாக்களும் வெளியிடப்பட்டன. வெள்ளி விலை ஏற்றத்தாலும், ரூபாய்க்குக் கிராக்கி ஏற்பட்ட தாலும் ரூபாயின் ஸ்டர்லிங்கு மதிப்பு உயர்ந்து கொண்டேபோய் 1919-ல் 2ஷி. 4 பெ.ஆக இருந்தது. அரசாங்கத்தார் ரூபாயின் மாற்று விகிதத்தை 1ஷி. 4பெ.ஆக நிலைநிறுத்த எவ்வளவோ முயன்றும் முடிய வில்லை. ரூபாயின் மதிப்பு, வெள்ளியின் விலையைப் பின் பற்றியது. தங்க நாணய இனமாற்றுத் திட்டம் குலைந் தது. 1919-ல் இந்திய நாணய முறைகளை ஆராய்ந்து சீராக்க வழி கூற,சர் ஹென்ரி பாபிங்க்டன் ஸ்மித் தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டியாரின் அறிக்கை யில் ரூபாயின் மாற்று விகிதத்தை நிலைநிறுத்த வேண்டு மென்றும், 1 ரூபாய்க்கு 2 ஷி. விகிதமே (1 சவரன் = ரூ. 10) சரியானது என்றும் வற்புறுத்தப்பட்டது. இதன் படி1920-ல் 1 சவரன் 10 ரூபாய் என்று சட்டம் பிறப் பிக்கப்பட்டது. ஆனால் விரைவில் முன்னிருந்த நிலைமை மாறியது. இந்தியாவின் ஏற்றுமதிகள் குறைந்து, இறக்குமதி அதிகரித்து, வர்த்தகப் பாதக நிலை யேற் பட்டு, ஸ்டர்லிங்குக்குக் கிராக்கி உண்டாகி, ஸ்டர் லிங்கு மதிப்பு ஏறி, ரூபாய் மதிப்பு 1 ஷி.3 பெ. வரை இறங்கியது. அரசாங்கத்தார் 2ஷி.விகிதத்தில் இங்கி லாந்தின்மேல் உண்டியல் விற்று, இந்த 2 ஷி.விகிதத்தை நாட்ட முயன்றனர். ஆனால் அரசாங்கத்தாருக்கும் வியாபாரிகளுக்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டது. கடைசி யில் 1920 செப்டம்பரிலிருந்து அரசாங்கத்தார் ரூபா யின் மாற்று விகிதத்தைக் கட்டுப்படுத்துவதைக் கைவிட்டனர்.
இந்தியா
ஸ்டர்லிங்கு கொடுத்துவந்தார். இவ்வுண்டியல்களுக்கு ரிவர்ஸ் கவுன்சில் பில், அல்லது ரிவர்ஸ் கவுன்சில் உண்டியல் என்று பெயர். இம்மாதிரி இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே உண்டியல்கள் மூலம் குறிப்பிட்ட நாணய மாற்று விகிதப்படி பணம் அனுப் பப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றத் தனியா கத் தங்கத் திட்டச் சேமநிதி ஒன்று (Gold Standard Reserve) ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறாக 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவில் உள்நாட்டில் தங்க நாணயச் செலாவணி இல்லாமல், ஒப்பு அல்லது குறி நாணயங்களான ரூபாய்களும், நோட்டுக்களும், வேறு சில்லரை நாணயங்களும் பழக்கத்தில் வந்தன. இங்கிலாந்துக்குப் பணம் செலுத்தவேண்டி வந்த போது, அரசாங்கத்தாரால் 1 .4 பெ.மாற்று விகி தப்படி உள்நாட்டு நாணயத்துக்குப் பதிலாக அயல் நாட்டில் தங்க நாணயம் கொடுக்கப்பட்டது. இத்திட் டத்திற்குத்தான் தங்க நாணய இனமாற்றுத் திட்டம் என்று பெயர். 1913-ல் நாணய முறை விஷயமாக ஆலோசனை கூற ஜோசப் ஆஸ்ட்டென் சேம்பர்லின் தலைமையில் நியமிக்கப்பட்ட ராயல் கமிஷனும் இந்தியா வுக்குத் தங்க நாணயச் செலாவணி முறை தேவை யில்லையென்றும், தங்க நாணய இன மாற்றுத்திட் டமே மிகவும் உகந்ததென்றும் 1914-ல் தனது அறிக் கையில் கூறிற்று.
1925 ஆகஸ்டில் எட்வர்டு ஹில்ட்டன் யங் தலைமை யில் இந்திய நாணய நிலையைப் பற்றி ஆராய்ந்து ஆலோசனை கூற ஒரு ராயல் கமிஷன் நியமிக்கப்பட்<noinclude></noinclude>
lkljww1jqtjsdkoyvq7t9an0zu189gd
1433725
1433622
2022-07-21T09:32:38Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|686|இந்தியா}}</b></noinclude>செலாவணி நாணயமாக மாத்திரம் இருந்தது. மேலும் அரசாங்கத்தார் ஒரு ரூபாய்க்கு 1 ஷி .4 பெ. வீதம் சவரன்களையும் அரைச் சவரன்களையும் பெற்றுக் கொள்வதாக அறிக்கை யிட்டனர்.
1898-ல் இந்தியாவில் தங்கநாணயத் திட்டம் ஏற்படுத்துவதைப்பற்றி ஆராயச் சர் ஹென்ரி பவுலர் தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டி இந்தியாவில் தங்க நாணயச் செலாவணியுடன் தங்கத் திட்ட நாணய முறை ஏற்படுத்த வேண்டு மென்று கூறியது. கமிட்டியின் சிபார்சுகளை அரசாங்கம் ஏற்றது. 1899-ல் சவரன்களும் அரைச் சவரன்களும் சட்டச் செலாவணி நாணயங்களாகச் செய்யப்பட்டன. வெள்ளி ரூபாயும் சட்டச் செலாவணி நாணயமாக இருந்தது. ஆனால் வெள்ளியைக் கொடுத்து ரூபாயாக மாற்றும் உரிமை மட்டிலும் இல்லை. சவரன்களுக்கும் ரூபாய்க்கும் பரஸ்பர மதிப்பு விகிதம் ரூ., 1ஷி. 4பெ. (அதாவது 1 சவரன் = ரூ.15) ஆனால் இந்தியாவில் தங்கத் திட்ட நாணய முறை அமைக்க வேண்டுமென்ற நோக்கம் நிறைவேறவில்லை. அதற்குப் பதிலாகத் தங்க நாணய இனமாற்றுத் திட்டம் (Gold Exchange. Standard) தோன்றியது. 1894-1900 ஆண்டுகளில் தங்க நாணயங்களை வழங்கிப் பழக்கத்தில் கொண்டுவர அரசாங்கத்தார் முயன்றனர். ஆனால் நாட்டில் பஞ்சமேற்பட்டிருந்ததால் அதிக மதிப்புள்ள நாணயத்துக்குத் தேவையில்லாமல் ரூபாய்களுக்கு அதிக கிராக்கி யேற்பட்டது. தங்க நாணயங்கள் திரும்பவும் கஜானாவில் வந்து சேர்ந்தன. அரசாங்கத்தார் நாட்டில் தங்க நாணயங்களில் ஆசையில்லை என்று எண்ணித் திரும்பவும் வெள்ளி வாங்கி ரூபாய்கள் அச்சிட்டு வெளியிட்டனர். ஆகையால் நடை முறையில் உள்நாட்டில் குறி அல்லது ஒப்பு நாணய (Token Money) அந்தஸ்து வாய்ந்த ரூபாய்களும் காகித நோட்டுக்களும் (Paper Notes) செலாவணியாயிருந்தன. மேலும் 1904 வரை இந்திய மந்திரி இந்திய சர்க்கார் சம்பந்தமான செலவுக்கு வேண்டிய மட்டில் அவ்வப்பொழுது கவுன்சில் பில் (Council Bills) முறையில் ஸ்டர்லிங்கு வருவித்துக் கொள்வது வழக்கம். அதாவது இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்ப விரும்புவோர்க்கு அவர்களிடமிருந்து பவுண்டு ஸ்டர்லிங்கு பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக 1ஷி. 4 பெ.க்கு ஒரு ருபாய் வீதம் இந்தியாவின் பெயரில் (கவர்னர் ஜெனரல் மீது) உண்டியல் விற்பது வழக்கம். கவுன்சில் பில் அல்லது கவுன்சில் உண்டியல் என்ற இந்த உண்டியல்களுக்கு இந்தியாவில் ரூபாய் கொடுப்பது வழக்கம். ஆனால் 1904 முதல் இந்தியாவில் ரூபாய்களுக்குக் கிராக்கி ஏற்பட்டு, ரூபாயின் மாற்று விகிதம் 1 வி. 4 பெ.க்கு மேல் ஏறும்பொழுதெல்லாம் இந்தியா மந்திரி ரூ. 1க்கு 1 ஷி. 4 பெ. வீதம் தம் தேவைக்கு மட்டுமன்றி, இந்தியாவுக்குப் பணம் அனுப்பவேண்டியவர்களுக்கெல்லாம் கவுன்சில் உண்டியல்களை விற்பது வழக்கமாயிற்று. 1907-8-ல் இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்ததின் பயனாக இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு அதிகப் பணம் அனுப்ப வேண்டி வந்தது. பவுண்டு ஸ்டர்லிங்குக்குக் கிராக்கி ஏற்பட்டது. ரூபாயின் நாணய மாற்று மதிப்புக் குறைந்தது. இச்சமயம் இந்தியா மந்திரியின் உத்தரவின்பேரில் கவர்னர் ஜெனரல் இங்கிலாந்துக்குப் பணம் அனுப்ப வேண்டியவர்களிடமிருந்து ரூபாய் பெற்று, அதற்குப் பதிலாக 1 ஷி. 4 பெ. வீதம் இந்தியா மந்திரியின் பெயரால் உண்டியல் விற்றார். இவ் வுண்டியல்களுக்கு இந்தியா மந்திரி இங்கிலாந்தில் பவுண்டு ஸ்டர்லிங்கு கொடுத்துவந்தார். இவ்வுண்டியல்களுக்கு ரிவர்ஸ் கவுன்சில் பில், அல்லது ரிவர்ஸ் கவுன்சில் உண்டியல் என்று பெயர். இம்மாதிரி இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே உண்டியல்கள் மூலம் குறிப்பிட்ட நாணய மாற்று விகிதப்படி பணம் அனுப்பப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றத் தனியாகத் தங்கத் திட்டச் சேமநிதி ஒன்று (Gold Standard Reserve) ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறாக 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவில் உள்நாட்டில் தங்க நாணயச் செலாவணி இல்லாமல், ஒப்பு அல்லது குறி நாணயங்களான ரூபாய்களும், நோட்டுக்களும், வேறு சில்லரை நாணயங்களும் பழக்கத்தில் வந்தன. இங்கிலாந்துக்குப் பணம் செலுத்தவேண்டி வந்தபோது, அரசாங்கத்தாரால் 1 ஷி .4 பெ. மாற்று விகிதப்படி உள்நாட்டு நாணயத்துக்குப் பதிலாக அயல் நாட்டில் தங்க நாணயம் கொடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்குத்தான் தங்க நாணய இனமாற்றுத் திட்டம் என்று பெயர். 1913-ல் நாணய முறை விஷயமாக ஆலோசனை கூற ஜோசப் ஆஸ்ட்டென் சேம்பர்லின் தலைமையில் நியமிக்கப்பட்ட ராயல் கமிஷனும் இந்தியாவுக்குத் தங்க நாணயச் செலாவணி முறை தேவையில்லையென்றும், தங்க நாணய இன மாற்றுத்திட்டமே மிகவும் உகந்ததென்றும் 1914-ல் தனது அறிக்கையில் கூறிற்று.
ஆனால், 1915க்குப்பின் இந்தியாவின் வர்த்தகச் சாதக நிலை அதிகரித்து, ரூபாய்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. மேலும் 1916லிருந்து வெள்ளி விலையும் வெகுவாக அதிகரித்தது. 1915-ல் ஓர் அவுன்ஸ் வெள்ளி விலை 27 பெ. 1919-ல் 78 பெ. இந்தியாவில் வெள்ளி ரூபாய்கள் உருக்கிப் பதுக்கப்பட்டன. நாணயப் பஞ்சமும் ஏற்பட்டது. ஒரு ரூபாய் இரண்டரை ரூபாய் நோட்டுக்களும், நிக்கல் இரண்டணாக்களும் வெளியிடப்பட்டன. வெள்ளி விலை ஏற்றத்தாலும், ரூபாய்க்குக் கிராக்கி ஏற்பட்டதாலும் ரூபாயின் ஸ்டர்லிங்கு மதிப்பு உயர்ந்து கொண்டேபோய் 1919-ல் 2ஷி. 4 பெ. ஆக இருந்தது. அரசாங்கத்தார் ரூபாயின் மாற்று விகிதத்தை 1ஷி. 4பெ. ஆக நிலைநிறுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. ரூபாயின் மதிப்பு, வெள்ளியின் விலையைப் பின்பற்றியது. தங்க நாணய இனமாற்றுத் திட்டம் குலைந்தது. 1919-ல் இந்திய நாணய முறைகளை ஆராய்ந்து சீராக்க வழி கூற, சர் ஹென்ரி பாபிங்க்டன் ஸ்மித் தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டியாரின் அறிக்கையில் ரூபாயின் மாற்று விகிதத்தை நிலைநிறுத்த வேண்டு மென்றும், 1 ரூபாய்க்கு 2 ஷி. விகிதமே (1 சவரன் = ரூ. 10) சரியானது என்றும் வற்புறுத்தப்பட்டது. இதன் படி1920-ல் 1 சவரன் 10 ரூபாய் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் விரைவில் முன்னிருந்த நிலைமை மாறியது. இந்தியாவின் ஏற்றுமதிகள் குறைந்து, இறக்குமதி அதிகரித்து, வர்த்தகப் பாதக நிலையேற்பட்டு, ஸ்டர்லிங்குக்குக் கிராக்கி உண்டாகி, ஸ்டர்லிங்கு மதிப்பு ஏறி, ரூபாய் மதிப்பு 1 ஷி.3 பெ. வரை இறங்கியது. அரசாங்கத்தார் 2ஷி. விகிதத்தில் இங்கிலாந்தின்மேல் உண்டியல் விற்று, இந்த 2 ஷி. விகிதத்தை நாட்ட முயன்றனர். ஆனால் அரசாங்கத்தாருக்கும் வியாபாரிகளுக்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டது. கடைசியில் 1920 செப்டம்பரிலிருந்து அரசாங்கத்தார் ரூபாயின் மாற்று விகிதத்தைக் கட்டுப்படுத்துவதைக் கைவிட்டனர்.
1925 ஆகஸ்டில் எட்வர்டு ஹில்ட்டன் யங் தலைமையில் இந்திய நாணய நிலையைப் பற்றி ஆராய்ந்து ஆலோசனை கூற ஒரு ராயல் கமிஷன் நியமிக்கப்பட்-<noinclude></noinclude>
ad4pt2jzqdu4ex0a5ckviseszc2aqpy
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/752
250
445891
1433623
1418269
2022-07-20T17:05:52Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|687|இந்தியா}}</b></noinclude>டது. இக்கமிஷன், இந்தியாவில் தங்க நாணய இன மாற்றுத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும், தங்க நாணயச் செலாவணி யில்லாமல் தங்கத் திட்டம் ஏற்படுத்த வேண்டுமென்றும், 1ஷி.6 பெ. விகிதத்தில் ரூபாயின் மதிப்பை நாட்ட வேண்டுமென்றும், ரிசர்வ் பாங்கு என்ற பெயரில் ஒரு மத்திய பாங்கு ஸ்தாபிக்க வேண்டுமென்றும், இந்தப் பாங்கு யாதொரு தடையு மின்றி 400 அவுன்ஸுக்குக் குறையாமல் குறிப்பிட்ட விலைக்குத் தங்கம் வாங்கவும் விற்கவும் வேண்டுமென் றும், நாட்டில் ரூபாயும் நோட்டுகளுமே செலாவணியில் இருக்க வேண்டுமென்றும் கூறியது. இப்புதுத் திட்டத் துக்குத் தங்கக்கட்டி நாணயத் திட்டம் (Gold Bullion Standard) என்று பெயர். அரசாங்கத்தாரால் மேற்படி சிபார்சுகள் ஏற்கப்பட்டு, 1927ஆம் ஆண்டின் நாணயச் சட்டம் பிறந்தது. நாட்டில் வலுத்த எதிர்ப்பு இருந்தும், 1ஷி . 4 பெ. விகிதமே நாட்டுக்கு நலன் பயக்குமென் ற கிளர்ச்சியிருந்தும், ரூபாய்க்கு 1ஷி. 6 பெ. மதிப்பிடப்பட்டது. தோலா ரூ.21-3-10க்குத் தங்கம் 40 தோலாக் கட்டிகளாக வரையின்றி வாங்குவதாக வும், இந்த விலைக்கு 400 அவுன்ஸுக்குக் குறையாமல் தங்கக்கட்டிகள் அயல்நாடுகளுக்கு அனுப்பி விற்பதாக வும் அல்லது சர்க்காரின் நோக்கம்போல் இங்கிலாந்தில் ஸ்டர்லிங்கு கொடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இம் மாதிரி, தங்கக்கட்டி நாணயத்திட்டம் 1931 செப்டம் பர்வரை அமலில் இருந்தது. 1931. செப்டம்பர் 20உ பிரிட்டனில் தங்க நாணயத் திட்டம் கைவிடப்பட்டு, ஸ்டர்லிங்கு நாணயத் திட்டம் ஏற்பட் டது. இந்தியாவும் தங்கக்கட்டி நாணயத் திட்டத்தைக் கைவிட்டது. 1 ஷி.6 பெ. வீதம் ரூபாய்க்கும் ஸ்டர்லிங் குக்கும் (ஸ்டர்லிங்கு நோட்டு) தொடர்பு ஏற்படுத்தப் பட்டது. இப்புதிய திட்டத்திற்கு ஸ்டர்லிங்கு மாற்றுத் திட்ட நாணயமுறை (Sterling Exchange Standard) என்று பெயர்.
இரண்டாவது உலகயுத்தத்தின் பயனாக நாட்டில் 1939 முதல் பணப்பெருக்கம் அதிகரித்தது. விலைவாசி கள் உயர்ந்தன. போர்ச் செலவுக்காகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் இந்தியாவுக்கு இங்கிலாந்தில் கொடுக்கப்பட்ட ஸ்டர்லிங்கின் ஈட்டின்பேரில் இந்தியா வில் ரூபாய் நோட்டுக்கள் ஏராளமாக அச்சடிக்கப்பட் டன. பணவீக்கத்தைக் குறைக்க அரசாங்கத்தார் பல முறைகளைக் கையாண்டனர். யுத்தத்தின் பயனாகப் பலவகை நாணய மாற்றுக் கட்டுப்பாடுகளும் (Exchange Control) ஏற்பட்டன. பிரிட்டிஷ் சாம் ராச்சிய டாலர் சேமிப்பு நிதியில் (Empire Dollar Pool) இந்தியா ஓர் அங்கமாகச் சேர்ந்தது. 1945-ல் உலக நாணய நிதியிலும் (International Monetary Fund) சேர்ந்தது. 1947 ஏப்ரலில் ரூபாய்க்கும் ஸ்டர் லிங்குக்கும் இருந்த தொடர்பு அகற்றப்பட்டது. ரூபாய்க்கும் வேறு நாடுகளின் நாணயங்களுக்கும் நேர் உறவு ஏற்படுத்தப்பட்டது. ஒரு ரூபாய் 4.1 சொச்சம் கிரெயின் தங்கத்துக்கும், 3:30 சொச்சம் ரூபாய்கள் அமெரிக்க டாலர் ஒன்றுக்கும் சமம் என்றும் நிருணயம் செய்யப்பட்டது. ரூபாய்க்கும் ஸ்டர்லிங்குக்கும் 1ஷி. 6 பெ.விகிதமே நடைமுறையில் இருந்து வருகிறது.
1949 செப்டம்பர் 18ஆம் தேதி ஸ்டர்லிங்கின் மதிப் பைப் பிரிட்டன் குறைத்தது. இந்தியாவும் அதே அள வுக்கு ரூபாயின் மதிப்பைக் குறைத்தது. தற்சமயம் டாலர் ரூபாய் மதிப்புச் சமன் (Par value) 1 டாலர் = 4.7 சொச்சம் ரூபாய்கள். அதாவது ஒரு டாலருக்கு ரூ.4-12-4 : ரூபாய் ஸ்டர்லிங்கு விகிதம் 1 ஷி.6பெ. பாகிஸ்தான் தனது ரூபாயின் மதிப்பைக் குறைத்துக்
687
கொள்ளவில்லை. இந்நிலையில் 144 இந்திய ரூபாய் 100 பாகிஸ்தான் ரூபாய்கள் சமமாயின.
களுக்கு காகித நாணயம்: 1861க்கு முன் சென்னை,பம் பாய், கல்கத்தா ஆகிய இடங்களிலிருந்த மாகாண பாங்குகளுக்குக் காகித நாணயம் அல்லது நோட்டுக்கள் அச்சடிக்க உரிமை கொடுக்கப்பட்டு, இந்த நோட்டுக் கள் மேற்கண்ட நகரங்களில் மாத்திரமே செலாவணியி லிருந்தன. அச்சடிக்கக்கூடிய நோட்டுக்களின் மதிப்பு வரம்பும் ஒதுக்கு நிதித் (Reserve) தொகையும் குறிப் பிடப்பட்டிருந்தன. 1861-ல் தான் முதன் முதலாக நோட்டுக்கள் வெளியிடுவது அரசாங்கத்தாரின் ஏக உரிமை (Monopoly) யாகியது. அரசாங்கத்தாரின் பத்திரங்களை ஆதாரமாகக்கொண்டு, இவ்வளவு மதிப் புள்ள நோட்டுக்கள் தான் வெளியிடலாமென்றும், அதற்கு மேல் வெளியிடும் நோட்டுக்களுக்கு ஆதாரமாக நாணயங்களும், தங்கம் வெள்ளிக்கட்டிகளும் வைக்க வேண்டுமென்ற முறையில் காகித நாணயங்கள் முத லில் வெளியிடப்பட்டன. கல்கத்தா, பம்பாய், சென்னை என்னுமிடங்களை முக்கியமாக வைத்து, நாட்டை மூன்று வட்டங்களாகப் பிரித்து, அந்தந்த நகரங்களில் வெளியிடப்படும் நோட்டுக்கள் அந்தந்த வட்டங்களில் தான் சட்டப்படி செலாவணியிலிருந்தன. 1910க்குள் ரங்கூன், கராச்சி, கான்பூர்,லாகூர் என்று மேலும் நான்கு வட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.10.20.50,100, 500, 1000, 5000 ரூபாய் நோட்டுக்கள் வெளிவந்தன. 1910லிருந்து 1931-32க்குள் நாளடைவில் எவ்வட்டத் தைச் சேர்ந்த நோட்டுக்களும் தேசம் முழுவதிலும் செலாவணிக்குரியனவாகச் செய்யப்பட்டன. மேலும் 1905லிருந்து ஸ்டர்லிங்குப் பத்திரங்களின் ஈட்டின் பேரி லும் நோட்டுக்கள் வெளியிடலாமென்றும் ஏற்பட்டது.
முதல் உலகயுத்தம் துவங்கினவுடன் நாட்டில் திகில் ஏற்பட்டு, நோட்டுக்களை நாணயமாகமாற்ற மக்கள் முன் வந்தனர். ஆனால் நாளடைவில் மக்களிடையே நம்பிக்கை உண்டாகி அமைதியேற்பட்டது. யுத்தகாலத்தில் பணத் தேவை மிகுந்து, நோட்டுக்கள் வெகுவாக அதிகரிக்கப் பட்டன. 21 ரூ.1 ரூ. நோட்டுக்களும் வெளிவந்தன.
1920-ல் இயற்றப்பட்ட சட்டப்படி நோட்டுக்கள், விகித சம ஒதுக்கு நிதி முறையில் (Proportional Reserve System) வெளியிடப்பட்டன. இதன்படி வெளியிடப்படும் நோட்டுக்களின் மதிப்பில் 50% ரூபா யா கவோ, சவரன்களாகவோ, தங்கம், வெள்ளிக்கட்டிக ளாகவோ ஈடு இருக்கவேண்டும். ஆனால் அவ்வப் பொழுது வியாபாரப் பெருக்கம் ஏற்படும் காலங்களில் தேவையான செலாவணிக்கு உள்நாட்டு உ ண் டிய ல் பேரில் 5 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள நோட்டுக்கள் வெளியிடலாம் என்று ஏற்பாடாயிற்று
ஹில்ட்டன் யங் கமிஷன் சிபார்சுப்படி 1927-ல் பிறப்பிக்கப்பட்ட நாணயச் சட்டப்படி வெளியிடப் படும் நோட்டுக்களுக்கு ஆதாரமாக 40% தங்கம், தங்க நாணயங்கள் அல்லது ஸ்டர்லிங்கு பத்திரங்களாக வும், மற்ற 60%க்கு ரூபாய் நாணயங்களும், இந்திய சர்க்கார் பத்திரங்களும், வர்த்தக உண்டியல்களும் ஆக இருக்கலாமென்று ஏற்பட்டது. 1935-ல் நோட்டுக் கள் வெளியிட்டு நிருவாகம் செய்யும் ஏகவுரிமையும் பொறுப்பும் ரிசர் பாங்குக்குக் கொடுக்கப்பட்டது. ரிசர்வ் பாங்கு நோட்டுக்கள் சர்க்கார் உத்திரவாதம் பெற்றவை. கே.ஆர்.
பாதுகாப்பு
இந்திய ராணுவமானது தரைப்படை (Army), கடற்படை (Navy), ஆகாயப்படை (Air Force)<noinclude></noinclude>
86loy4ig1aoqkzzfx7buk8xu1nzcqxz
1433730
1433623
2022-07-21T09:54:10Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|687|இந்தியா}}</b></noinclude>டது. இக்கமிஷன், இந்தியாவில் தங்க நாணய இனமாற்றுத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும், தங்க நாணயச் செலாவணி யில்லாமல் தங்கத் திட்டம் ஏற்படுத்த வேண்டுமென்றும், 1ஷி. 6 பெ. விகிதத்தில் ரூபாயின் மதிப்பை நாட்ட வேண்டுமென்றும், ரிசர்வ் பாங்கு என்ற பெயரில் ஒரு மத்திய பாங்கு ஸ்தாபிக்க வேண்டுமென்றும், இந்தப் பாங்கு யாதொரு தடையுமின்றி 400 அவுன்ஸுக்குக் குறையாமல் குறிப்பிட்ட விலைக்குத் தங்கம் வாங்கவும் விற்கவும் வேண்டுமென்றும், நாட்டில் ரூபாயும் நோட்டுகளுமே செலாவணியில் இருக்க வேண்டுமென்றும் கூறியது. இப்புதுத் திட்டத்துக்குத் தங்கக்கட்டி நாணயத் திட்டம் (Gold Bullion Standard) என்று பெயர். அரசாங்கத்தாரால் மேற்படி சிபார்சுகள் ஏற்கப்பட்டு, 1927ஆம் ஆண்டின் நாணயச் சட்டம் பிறந்தது. நாட்டில் வலுத்த எதிர்ப்பு இருந்தும், 1ஷி . 4 பெ. விகிதமே நாட்டுக்கு நலன் பயக்குமென்ற கிளர்ச்சியிருந்தும், ரூபாய்க்கு 1ஷி. 6 பெ. மதிப்பிடப்பட்டது. தோலா ரூ.21-3-10க்குத் தங்கம் 40 தோலாக் கட்டிகளாக வரையின்றி வாங்குவதாகவும், இந்த விலைக்கு 400 அவுன்ஸுக்குக் குறையாமல் தங்கக்கட்டிகள் அயல்நாடுகளுக்கு அனுப்பி விற்பதாகவும் அல்லது சர்க்காரின் நோக்கம்போல் இங்கிலாந்தில் ஸ்டர்லிங்கு கொடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இம் மாதிரி, தங்கக்கட்டி நாணயத்திட்டம் 1931 செப்டம்பர்வரை அமலில் இருந்தது. 1931. செப்டம்பர் 20 பிரிட்டனில் தங்க நாணயத் திட்டம் கைவிடப்பட்டு, ஸ்டர்லிங்கு நாணயத் திட்டம் ஏற்பட்டது. இந்தியாவும் தங்கக்கட்டி நாணயத் திட்டத்தைக் கைவிட்டது. 1 ஷி.6 பெ. வீதம் ரூபாய்க்கும் ஸ்டர்லிங் குக்கும் (ஸ்டர்லிங்கு நோட்டு) தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இப்புதிய திட்டத்திற்கு ஸ்டர்லிங்கு மாற்றுத் திட்ட நாணயமுறை (Sterling Exchange Standard) என்று பெயர்.
இரண்டாவது உலகயுத்தத்தின் பயனாக நாட்டில் 1939 முதல் பணப்பெருக்கம் அதிகரித்தது. விலைவாசிகள் உயர்ந்தன. போர்ச் செலவுக்காகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் இந்தியாவுக்கு இங்கிலாந்தில் கொடுக்கப்பட்ட ஸ்டர்லிங்கின் ஈட்டின்பேரில் இந்தியாவில் ரூபாய் நோட்டுக்கள் ஏராளமாக அச்சடிக்கப்பட்டன. பணவீக்கத்தைக் குறைக்க அரசாங்கத்தார் பல முறைகளைக் கையாண்டனர். யுத்தத்தின் பயனாகப் பலவகை நாணய மாற்றுக் கட்டுப்பாடுகளும் (Exchange Control) ஏற்பட்டன. பிரிட்டிஷ் சாம்ராச்சிய டாலர் சேமிப்பு நிதியில் (Empire Dollar Pool) இந்தியா ஓர் அங்கமாகச் சேர்ந்தது. 1945-ல் உலக நாணய நிதியிலும் (International Monetary Fund) சேர்ந்தது. 1947 ஏப்ரலில் ரூபாய்க்கும் ஸ்டர்லிங்குக்கும் இருந்த தொடர்பு அகற்றப்பட்டது. ரூபாய்க்கும் வேறு நாடுகளின் நாணயங்களுக்கும் நேர் உறவு ஏற்படுத்தப்பட்டது. ஒரு ரூபாய் 4.1 சொச்சம் கிரெயின் தங்கத்துக்கும், 3.30 சொச்சம் ரூபாய்கள் அமெரிக்க டாலர் ஒன்றுக்கும் சமம் என்றும் நிருணயம் செய்யப்பட்டது. ரூபாய்க்கும் ஸ்டர்லிங்குக்கும் 1ஷி. 6 பெ.விகிதமே நடைமுறையில் இருந்து வருகிறது.
1949 செப்டம்பர் 18ஆம் தேதி ஸ்டர்லிங்கின் மதிப்பைப் பிரிட்டன் குறைத்தது. இந்தியாவும் அதே அளவுக்கு ரூபாயின் மதிப்பைக் குறைத்தது. தற்சமயம் டாலர் ரூபாய் மதிப்புச் சமன் (Par value) 1 டாலர் = 4.7 சொச்சம் ரூபாய்கள். அதாவது ஒரு டாலருக்கு ரூ.4-12-4 4/21 ரூபாய் ஸ்டர்லிங்கு விகிதம் 1 ஷி. 6பெ. பாகிஸ்தான் தனது ரூபாயின் மதிப்பைக் குறைத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் 144 இந்திய ரூபாய் 100 பாகிஸ்தான் ரூபாய்கள் சமமாயின.
{{larger|காகித நாணயம்:}} 1861க்கு முன் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களிலிருந்த மாகாண பாங்குகளுக்குக் காகித நாணயம் அல்லது நோட்டுக்கள் அச்சடிக்க உரிமை கொடுக்கப்பட்டு, இந்த நோட்டுக்கள் மேற்கண்ட நகரங்களில் மாத்திரமே செலாவணியிலிருந்தன. அச்சடிக்கக்கூடிய நோட்டுக்களின் மதிப்பு வரம்பும் ஒதுக்கு நிதித் (Reserve) தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தன. 1861-ல் தான் முதன் முதலாக நோட்டுக்கள் வெளியிடுவது அரசாங்கத்தாரின் ஏக உரிமை (Monopoly) யாகியது. அரசாங்கத்தாரின் பத்திரங்களை ஆதாரமாகக்கொண்டு, இவ்வளவு மதிப்புள்ள நோட்டுக்கள் தான் வெளியிடலாமென்றும், அதற்கு மேல் வெளியிடும் நோட்டுக்களுக்கு ஆதாரமாக நாணயங்களும், தங்கம் வெள்ளிக்கட்டிகளும் வைக்க வேண்டுமென்ற முறையில் காகித நாணயங்கள் முதலில் வெளியிடப்பட்டன. கல்கத்தா, பம்பாய், சென்னை என்னுமிடங்களை முக்கியமாக வைத்து, நாட்டை மூன்று வட்டங்களாகப் பிரித்து, அந்தந்த நகரங்களில் வெளியிடப்படும் நோட்டுக்கள் அந்தந்த வட்டங்களில் தான் சட்டப்படி செலாவணியிலிருந்தன. 1910க்குள் ரங்கூன், கராச்சி, கான்பூர், லாகூர் என்று மேலும் நான்கு வட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. 10, 20, 50, 100, 500, 1000, 5000 ரூபாய் நோட்டுக்கள் வெளிவந்தன. 1910லிருந்து 1931-32க்குள் நாளடைவில் எவ்வட்டத்தைச் சேர்ந்த நோட்டுக்களும் தேசம் முழுவதிலும் செலாவணிக்குரியனவாகச் செய்யப்பட்டன. மேலும் 1905லிருந்து ஸ்டர்லிங்குப் பத்திரங்களின் ஈட்டின் பேரிலும் நோட்டுக்கள் வெளியிடலாமென்றும் ஏற்பட்டது.
முதல் உலகயுத்தம் துவங்கினவுடன் நாட்டில் திகில் ஏற்பட்டு, நோட்டுக்களை நாணயமாகமாற்ற மக்கள் முன் வந்தனர். ஆனால் நாளடைவில் மக்களிடையே நம்பிக்கை உண்டாகி அமைதியேற்பட்டது. யுத்தகாலத்தில் பணத் தேவை மிகுந்து, நோட்டுக்கள் வெகுவாக அதிகரிக்கப் பட்டன. 2½ ரூ.1 ரூ. நோட்டுக்களும் வெளிவந்தன.
1920-ல் இயற்றப்பட்ட சட்டப்படி நோட்டுக்கள், விகித சம ஒதுக்கு நிதி முறையில் (Proportional Reserve System) வெளியிடப்பட்டன. இதன்படி வெளியிடப்படும் நோட்டுக்களின் மதிப்பில் 50% ரூபாயாகவோ, சவரன்களாகவோ, தங்கம், வெள்ளிக்கட்டிகளாகவோ ஈடு இருக்கவேண்டும். ஆனால் அவ்வப் பொழுது வியாபாரப் பெருக்கம் ஏற்படும் காலங்களில் தேவையான செலாவணிக்கு உள்நாட்டு உண்டியல் பேரில் 5 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள நோட்டுக்கள் வெளியிடலாம் என்று ஏற்பாடாயிற்று.
ஹில்ட்டன் யங் கமிஷன் சிபார்சுப்படி 1927-ல் பிறப்பிக்கப்பட்ட நாணயச் சட்டப்படி வெளியிடப்படும் நோட்டுக்களுக்கு ஆதாரமாக 40% தங்கம், தங்க நாணயங்கள் அல்லது ஸ்டர்லிங்கு பத்திரங்களாகவும், மற்ற 60%க்கு ரூபாய் நாணயங்களும், இந்திய சர்க்கார் பத்திரங்களும், வர்த்தக உண்டியல்களும் ஆக இருக்கலாமென்று ஏற்பட்டது. 1935-ல் நோட்டுக்கள் வெளியிட்டு நிருவாகம் செய்யும் ஏகவுரிமையும் பொறுப்பும் ரிசர் பாங்குக்குக் கொடுக்கப்பட்டது. ரிசர்வ் பாங்கு நோட்டுக்கள் சர்க்கார் உத்திரவாதம் பெற்றவை. {{Right|கே.ஆர்}}.
{{center|{{larger|<b>பாதுகாப்பு</b>}}}}
இந்திய ராணுவமானது தரைப்படை (Army), கடற்படை (Navy), ஆகாயப்படை (Air Force)<noinclude></noinclude>
o1y7youd6llvdge0mq5he6ucagyuqjk
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/753
250
445892
1433624
1418270
2022-07-20T17:07:31Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|688|இந்தியா}}</b></noinclude>என மூன்று பிரிவுகளுடையது. ராணுவத்தின் கடமை இந்தியாவை வெளிநாடுகள் தாக்காவண்ணமும், உள் நாட்டில் செழிப்பும் சமாதானமும் நிலவுவதற்கான நிலைமை தளராவண்ணமும் பாதுகாப்பதாகும். இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு மந்திரி இலாகா இம் மூன்று படைகளும் ஒத்துழைக்குமாறு செய்கின்றது; படைக்கல உற்பத்திச்சாலைகளை மேற்பார்க்கின்றது; படைகளுக்கு வேண்டிய மருத்துவ இலாகாவையும், பாதுகாப்பு விஞ்ஞான இலகாவையும் நடத்துகின்றது.
தரைப்படை : இதில் சேனாதிபதி முதல் போர்வீரன் வரை எல்லோரும் இந்தியராகவே யுள்ளனர். தொழில் நுட்ப நிபுணர்களுள் மட்டும் சில பிரிட்டிஷ் அலுவ லாளர்கள் உள்ளனர். தகுதியுள்ள இந்திய மக்கள் யாவ ராயினும் ராணுவத்தில் சேர உரிமையுடையவராவர்.
இந்தியப் படைகளுள் தரைப்படை தலையாயது. இந்தியத் தரைப்படை சென்ற இரண்டு உலக யுத்தங் களிலும் புகழ் பெற்றுள்ளது. இப்போதும் உலகிலுள்ள மிகச்சிறந்த படைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. சுதந்திரம் வந்த பின்னர் நடைபெற்ற காச்மீரம்; ஐதரா பாத் நிகழ்ச்சிகளிலும் புகழ்பெற நடந்து வந்துள்ளது.
மேலும், சென்ற ஐந்தாண்டுகளாகத் தரைப்படை யினர் ஆற்று வெள்ளம் ஏற்பட்ட காலங்களிலும், தண் ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டபொழுதும், சாலைகள் அமைக்க வேண்டியபொழுதும் பொதுமக்களுக்குச் சமூக சேவை யும் செய்து வருகிறார்கள்.
இதைத்தவிரப் பிரதேசப்படை (Territorial army} ஒன்றும் இருக்கிறது. இதன் முக்கிய நோக்கம் பொதுமக்களையும் நாட்டின் பாதுகாப்பில் ஈடுபடுத்து வதேயாகும். தரைப்படைக்குப் பக்கபலமாக இருந்து போக்குவரத்துப் பாதைகளையும் கடற்கரைகளையும் காப்பதும், பொதுவாக நாட்டில் அமைதியும் சட்டமும் நிலவுவதற்கு அரசாங்கத்துக்குத் துணையாக நிற்பதுமே இதன் முக்கியக் கடமைகள்.
ராணுவத்திற்கு வேண்டிய படைக்கலங்களை இந்தியா விலேயே செய்துகொள்ள வேண்டுமென்பதே இலட்சிய மாகும். அதற்காக வடாலா என்னுமிடத்திலும், புசாவல் என்னுமிடத்திலும் இரண்டு உற்பத்திச்சாலை கள் வேலைசெய்து வருகின்றன. அம்பர்நாத் என்னு மிடத்தில் எந்திரக்கருவி உற்பத்திச்சாலை நிறுவப்பட் டுள்ளது.
பாதுகாப்புக்கு வேண்டியவற்றைப் பற்றி ஆராய் வதற்காகப் பாதுகாப்பு விஞ்ஞான ஸ்தாபனம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மந்திரி இலாகா விற்கு ஒரு விஞ்ஞான ஆலோசகர் நியமிக்கப்பட்டுளர். படைக்கலங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக ஒரு சோதனை நிலையமும் நிறுவப்படும்.
கப்பற் படை: சுதந்திரம் வந்த சமயம் இருந்த படையைக் கப்பற்படை என்று கூறமுடியாது. ராயல் நேவி என்னும் ஆங்கிலக் கப்பற் படையின் ஒரு சிறு துணைப் படையாக மட்டுமே இருந்தது. பாகிஸ்தான் பிரிவினையால் அது, அதனினும் சிறிதாக ஆகிவிட்டது. இந்தியாவின் மூவாயிரத்து ஐந்நூறு மைல் நீளமுள்ள கடற்கரையைப் பாதுகாக்கச் சிறி தளவுகூடப் போதுமானதாக இருக்கவில்லை. அப்படை இப்போது விரிவடைந்துள்ளது. கடற் பயிற்சிக்கும் கடற்கரைப் பயிற்சிக்கும் பழைய நிலையங்கள் விரி வடைந்தும், புதிய நிலையங்கள் நிறுவப்பட்டும் வருகின் றன. கடற்படை விமானப் போக்குவரத்துக் கிளை ஏற் படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கப்பற் படைக்கு வேண்டியவர்களைத் தயாரிக்கும் நிலையம் கொச்சியில் அமைக்கப்பட்டிருக்கிறது.
688
கப்பற் படை அலுவலாளர்கள் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பயிற்சி பெறுகிறார்கள். ஜாம்நகரிலும் லொனாவலாவிலுமுள்ள நிலையங்கள் விரிவாக்கப்பட் டன. கொச்சியிலும் விசாகப்பட்டினத்திலும் புது நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. கொச்சி நிலையமே இந்தியாவில் மிகப் பெரிய பயிற்சி நிலையமாகும்.
டேராடூனிலுள்ள இந்திய ராணுவக் கல்லூரி 1949-ல் திருத்தி அமைக்கப்பட்டது. அதனுடன் மூன்று படை உத்தியோகஸ்தர்களுக்கும் கூட்டு ஆதா ரப் பயிற்சி கொடுக்கக் கூட்டுப்படைக் கிளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இக்கிளையில் இரண்டு ஆண்டுகள் பயின்ற கடற் படைப் பயிற்சி மாணவர்கள் (Cadets) மீண்டும் 4-6 ஆண்டுகள் பயிற்சி பெறுவதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பெறுகின்றனர். ஆகாயப் படை: இது பாகிஸ்தான் பிரிவினையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. வடமேற்கிலிருந்த ஆகாயப் படை நிலையங்களுள் பெரும்பாலானவை பாகிஸ்தானிடம் சேர்ந்தன. ஆயினும் இந்திய யூனியன் ஆகாயப் படையினர் 1947-ல் மேற்குப் பாகிஸ்தானி லிருந்து அகதிகளை இந்தியாவுக்கு வெகு திறமையுடன் கொண்டுவந்து சேர்த்தார்கள். இதுபோல் காச்மீர நிகழ்ச்சியிலும் அரிய சேவை செய்தனர்.
இப்போது இந்தியக் கடற்படைக்கு இக் காலத்திய எந்திரங்கள் வாங்கப்படுகின்றன. பலவிதமான வேலை களுக்கேற்ற கிளைகளும் ஏற்படுத்தப்படுகின்றன. நெடுந்தூரம் விமானம் ஓட்டிச் செல்லும் பயிற்சியும் அளிக்கப்டுகிறது. விமானம் ஓட்டும் பயிற்சி யளிப் பதற்காக அம்பாலாவிலும் ஜோதிபுரியிலுமிருந்த ஆரம் பப் பயிற்சிக்கிளைகள் இரண்டு பெரிய கல்லூரிகளாகத் திருத்தி அமைக்கப்பட்டுள. கப்பற் படைக்கான பொறி யியல் நுட்பங்கள் கற்றுக் கொடுப்பதற்காகப் பெங்க ளூரில் பொறி நுட்பப் பயிற்சிக் கல்லூரி ஒன்று நிறு வப்பட்டுள்ளது. இந்தியாவின் பகுதிகளையும் ஆகாயவிமானத்திலிருந்து போட்டோ பிடித்துத் தேசப் படங்கள் தயாரிக்கவும், சர்வே இலாகா ஒன்று அமைக் கப்பட்டிருக்கிறது. பம்பாயிலுள்ள இந்தியக் கடற் படையின் கப்பற்கட்டு நிலையத்தை விரிவுபடுத்த ஆலோசனை நடந்து வருகிறது. பல
இந்திய ராணுவத்திலுள்ளவர்களின் மக்கள் ராணுவ சேவை செய்வதற்கு ஏற்ற பயிற்சியும் கல்வியும் பெறு வதற்காக, ஜலந்தர், அஜ்மீர், பெல்காம், பெங்களூர் ஆகிய ஊர்களில் ராணுவக் கல்லூரிகள் இருக்கின்றன. ராணுவ உத்தியோகஸ்தர்களுக்கு அன்னிய மொழிகள் கற்றுக் கொடுப்பதற்காகப் புது டெல்லியில் அன்னிய மொழிக் கல்லூரி 1949-ல் அமைக்கப்பட்டது. ராணுவ மருத்துவக் கல்லூரி பூனாவில் நடந்து வருகிறது.
பொருளாதாரம்
வரலாறு: கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வருகை யும், இந்தியாவின் பொருளாதார வாழ்க்கை மாறு பாடும்: இந்தியாவில், 17ஆம் நூண்றாண்டிலும், 18ஆம் நூற்றாண்டின் முற்பாதியிலும் வேளாண் மையே முக்கியத் தொழிலாயிருந்தது. இது தவிரப் பல கைத்தொழில்களும் வேலைகளும் உண்டு. இவைகளில் தலைசிறந்தது நெசவுத்தொழில். டாக்கா மஸ்லின் உஎ கறிந்தது. வங்காளத்தில் பட்டு நெய்தல், தோய்த்தல், காச்மீரத்திலும் லாகூரிலும் சால்வைகள் நெய்தல்,லாகூரிலும் ஆக்ராவிலும் இரத்தினக் கம்பு ளங்கள் நெய்தல் சிறப்பான தொழில்களாயிருந்தன. இ நாட்டில் கப்பல் கட்டுதலும் உண்டு. அக்காலத்தில் ஆசியா, ஐரோப்பா நாடுகளுடன் இந்தியா வியாபாரப்<noinclude></noinclude>
fjl2g02bykjwueicbw4dqrpz4p36tc9
1433731
1433624
2022-07-21T10:03:46Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|688|இந்தியா}}</b></noinclude>என மூன்று பிரிவுகளுடையது. ராணுவத்தின் கடமை இந்தியாவை வெளிநாடுகள் தாக்காவண்ணமும், உள்நாட்டில் செழிப்பும் சமாதானமும் நிலவுவதற்கான நிலைமை தளராவண்ணமும் பாதுகாப்பதாகும். இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு மந்திரி இலாகா இம் மூன்று படைகளும் ஒத்துழைக்குமாறு செய்கின்றது; படைக்கல உற்பத்திச்சாலைகளை மேற்பார்க்கின்றது; படைகளுக்கு வேண்டிய மருத்துவ இலாகாவையும், பாதுகாப்பு விஞ்ஞான இலகாவையும் நடத்துகின்றது.
{{larger|தரைப்படை :}} இதில் சேனாதிபதி முதல் போர்வீரன் வரை எல்லோரும் இந்தியராகவே யுள்ளனர். தொழில்நுட்ப நிபுணர்களுள் மட்டும் சில பிரிட்டிஷ் அலுவலாளர்கள் உள்ளனர். தகுதியுள்ள இந்திய மக்கள் யாவராயினும் ராணுவத்தில் சேர உரிமையுடையவராவர்.
இந்தியப் படைகளுள் தரைப்படை தலையாயது. இந்தியத் தரைப்படை சென்ற இரண்டு உலக யுத்தங்களிலும் புகழ் பெற்றுள்ளது. இப்போதும் உலகிலுள்ள மிகச்சிறந்த படைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. சுதந்திரம் வந்த பின்னர் நடைபெற்ற காச்மீரம்; ஐதராபாத் நிகழ்ச்சிகளிலும் புகழ்பெற நடந்து வந்துள்ளது.
மேலும், சென்ற ஐந்தாண்டுகளாகத் தரைப்படையினர் ஆற்று வெள்ளம் ஏற்பட்ட காலங்களிலும், தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டபொழுதும், சாலைகள் அமைக்க வேண்டியபொழுதும் பொதுமக்களுக்குச் சமூக சேவையும் செய்து வருகிறார்கள்.
இதைத்தவிரப் பிரதேசப்படை (Territorial army) ஒன்றும் இருக்கிறது. இதன் முக்கிய நோக்கம் பொதுமக்களையும் நாட்டின் பாதுகாப்பில் ஈடுபடுத்துவதேயாகும். தரைப்படைக்குப் பக்கபலமாக இருந்து போக்குவரத்துப் பாதைகளையும் கடற்கரைகளையும் காப்பதும், பொதுவாக நாட்டில் அமைதியும் சட்டமும் நிலவுவதற்கு அரசாங்கத்துக்குத் துணையாக நிற்பதுமே இதன் முக்கியக் கடமைகள்.
ராணுவத்திற்கு வேண்டிய படைக்கலங்களை இந்தியாவிலேயே செய்துகொள்ள வேண்டுமென்பதே இலட்சியமாகும். அதற்காக வடாலா என்னுமிடத்திலும், புசாவல் என்னுமிடத்திலும் இரண்டு உற்பத்திச்சாலைகள் வேலைசெய்து வருகின்றன. அம்பர்நாத் என்னுமிடத்தில் எந்திரக்கருவி உற்பத்திச்சாலை நிறுவப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்கு வேண்டியவற்றைப் பற்றி ஆராய்வதற்காகப் பாதுகாப்பு விஞ்ஞான ஸ்தாபனம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மந்திரி இலாகா விற்கு ஒரு விஞ்ஞான ஆலோசகர் நியமிக்கப்பட்டுளர். படைக்கலங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக ஒரு சோதனை நிலையமும் நிறுவப்படும்.
{{larger|கப்பற் படை:}} சுதந்திரம் வந்த சமயம் இருந்த படையைக் கப்பற்படை என்று கூறமுடியாது. ராயல் நேவி என்னும் ஆங்கிலக் கப்பற் படையின் ஒரு சிறு துணைப் படையாக மட்டுமே இருந்தது. பாகிஸ்தான் பிரிவினையால் அது, அதனினும் சிறிதாக ஆகிவிட்டது. இந்தியாவின் மூவாயிரத்து ஐந்நூறு மைல் நீளமுள்ள கடற்கரையைப் பாதுகாக்கச் சிறிதளவுகூடப் போதுமானதாக இருக்கவில்லை. அப்படை இப்போது விரிவடைந்துள்ளது. கடற் பயிற்சிக்கும் கடற்கரைப் பயிற்சிக்கும் பழைய நிலையங்கள் விரிவடைந்தும், புதிய நிலையங்கள் நிறுவப்பட்டும் வருகின்றன. கடற்படை விமானப் போக்குவரத்துக் கிளை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கப்பற் படைக்கு வேண்டியவர்களைத் தயாரிக்கும் நிலையம் கொச்சியில் அமைக்கப்பட்டிருக்கிறது.
கப்பற் படை அலுவலாளர்கள் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பயிற்சி பெறுகிறார்கள். ஜாம்நகரிலும் லொனாவலாவிலுமுள்ள நிலையங்கள் விரிவாக்கப்பட்டன. கொச்சியிலும் விசாகப்பட்டினத்திலும் புது நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. கொச்சி நிலையமே இந்தியாவில் மிகப் பெரிய பயிற்சி நிலையமாகும்.
டேராடூனிலுள்ள இந்திய ராணுவக் கல்லூரி 1949-ல் திருத்தி அமைக்கப்பட்டது. அதனுடன் மூன்று படை உத்தியோகஸ்தர்களுக்கும் கூட்டு ஆதாரப் பயிற்சி கொடுக்கக் கூட்டுப்படைக் கிளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இக்கிளையில் இரண்டு ஆண்டுகள் பயின்ற கடற் படைப் பயிற்சி மாணவர்கள் (Cadets) மீண்டும் 4-6 ஆண்டுகள் பயிற்சி பெறுவதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பெறுகின்றனர்.
{{larger|ஆகாயப் படை:}} இது பாகிஸ்தான் பிரிவினையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. வடமேற்கிலிருந்த ஆகாயப் படை நிலையங்களுள் பெரும்பாலானவை பாகிஸ்தானிடம் சேர்ந்தன. ஆயினும் இந்திய யூனியன் ஆகாயப் படையினர் 1947-ல் மேற்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளை இந்தியாவுக்கு வெகு திறமையுடன் கொண்டுவந்து சேர்த்தார்கள். இதுபோல் காச்மீர நிகழ்ச்சியிலும் அரிய சேவை செய்தனர்.
இப்போது இந்தியக் கடற்படைக்கு இக் காலத்திய எந்திரங்கள் வாங்கப்படுகின்றன. பலவிதமான வேலைகளுக்கேற்ற கிளைகளும் ஏற்படுத்தப்படுகின்றன. நெடுந்தூரம் விமானம் ஓட்டிச் செல்லும் பயிற்சியும் அளிக்கப்டுகிறது. விமானம் ஓட்டும் பயிற்சி யளிப்பதற்காக அம்பாலாவிலும் ஜோதிபுரியிலுமிருந்த ஆரம்பப் பயிற்சிக்கிளைகள் இரண்டு பெரிய கல்லூரிகளாகத் திருத்தி அமைக்கப்பட்டுள. கப்பற் படைக்கான பொறியியல் நுட்பங்கள் கற்றுக் கொடுப்பதற்காகப் பெங்களூரில் பொறி நுட்பப் பயிற்சிக் கல்லூரி ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவின் பகுதிகளையும் ஆகாயவிமானத்திலிருந்து போட்டோ பிடித்துத் தேசப் படங்கள் தயாரிக்கவும், சர்வே இலாகா ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. பம்பாயிலுள்ள இந்தியக் கடற் படையின் கப்பற்கட்டு நிலையத்தை விரிவுபடுத்த ஆலோசனை நடந்து வருகிறது.
இந்திய ராணுவத்திலுள்ளவர்களின் மக்கள் ராணுவ சேவை செய்வதற்கு ஏற்ற பயிற்சியும் கல்வியும் பெறுவதற்காக, ஜலந்தர், அஜ்மீர், பெல்காம், பெங்களூர் ஆகிய ஊர்களில் ராணுவக் கல்லூரிகள் இருக்கின்றன. ராணுவ உத்தியோகஸ்தர்களுக்கு அன்னிய மொழிகள் கற்றுக் கொடுப்பதற்காகப் புது டெல்லியில் அன்னிய மொழிக் கல்லூரி 1949-ல் அமைக்கப்பட்டது. ராணுவ மருத்துவக் கல்லூரி பூனாவில் நடந்து வருகிறது. {{Right|★}}
{{center|{{larger|<b>பொருளாதாரம்</b>}}}}
{{larger|வரலாறு: கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வருகை யும், இந்தியாவின் பொருளாதார வாழ்க்கை மாறுபாடும்:}} இந்தியாவில், 17ஆம் நூற்றாண்டிலும், 18ஆம் நூற்றாண்டின் முற்பாதியிலும் வேளாண்மையே முக்கியத் தொழிலாயிருந்தது. இது தவிரப் பல கைத்தொழில்களும் வேலைகளும் உண்டு. இவைகளில் தலைசிறந்தது நெசவுத்தொழில். டாக்கா மஸ்லின் உலகறிந்தது. வங்காளத்தில் பட்டு நெய்தல், தோய்த்தல், காச்மீரத்திலும் லாகூரிலும் சால்வைகள் நெய்தல், லாகூரிலும் ஆக்ராவிலும் இரத்தினக் கம்பு ளங்கள் நெய்தல் சிறப்பான தொழில்களாயிருந்தன. இந்நாட்டில் கப்பல் கட்டுதலும் உண்டு. அக்காலத்தில் ஆசியா, ஐரோப்பா நாடுகளுடன் இந்தியா வியாபாரப்<noinclude></noinclude>
cccb8amwol3g3a97myog8nno6f53vvx
1433732
1433731
2022-07-21T10:05:53Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|688|இந்தியா}}</b></noinclude>என மூன்று பிரிவுகளுடையது. ராணுவத்தின் கடமை இந்தியாவை வெளிநாடுகள் தாக்காவண்ணமும், உள்நாட்டில் செழிப்பும் சமாதானமும் நிலவுவதற்கான நிலைமை தளராவண்ணமும் பாதுகாப்பதாகும். இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு மந்திரி இலாகா இம் மூன்று படைகளும் ஒத்துழைக்குமாறு செய்கின்றது; படைக்கல உற்பத்திச்சாலைகளை மேற்பார்க்கின்றது; படைகளுக்கு வேண்டிய மருத்துவ இலாகாவையும், பாதுகாப்பு விஞ்ஞான இலகாவையும் நடத்துகின்றது.
{{larger|தரைப்படை :}} இதில் சேனாதிபதி முதல் போர்வீரன் வரை எல்லோரும் இந்தியராகவே யுள்ளனர். தொழில்நுட்ப நிபுணர்களுள் மட்டும் சில பிரிட்டிஷ் அலுவலாளர்கள் உள்ளனர். தகுதியுள்ள இந்திய மக்கள் யாவராயினும் ராணுவத்தில் சேர உரிமையுடையவராவர்.
இந்தியப் படைகளுள் தரைப்படை தலையாயது. இந்தியத் தரைப்படை சென்ற இரண்டு உலக யுத்தங்களிலும் புகழ் பெற்றுள்ளது. இப்போதும் உலகிலுள்ள மிகச்சிறந்த படைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. சுதந்திரம் வந்த பின்னர் நடைபெற்ற காச்மீரம்; ஐதராபாத் நிகழ்ச்சிகளிலும் புகழ்பெற நடந்து வந்துள்ளது.
மேலும், சென்ற ஐந்தாண்டுகளாகத் தரைப்படையினர் ஆற்று வெள்ளம் ஏற்பட்ட காலங்களிலும், தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டபொழுதும், சாலைகள் அமைக்க வேண்டியபொழுதும் பொதுமக்களுக்குச் சமூக சேவையும் செய்து வருகிறார்கள்.
இதைத்தவிரப் பிரதேசப்படை (Territorial army) ஒன்றும் இருக்கிறது. இதன் முக்கிய நோக்கம் பொதுமக்களையும் நாட்டின் பாதுகாப்பில் ஈடுபடுத்துவதேயாகும். தரைப்படைக்குப் பக்கபலமாக இருந்து போக்குவரத்துப் பாதைகளையும் கடற்கரைகளையும் காப்பதும், பொதுவாக நாட்டில் அமைதியும் சட்டமும் நிலவுவதற்கு அரசாங்கத்துக்குத் துணையாக நிற்பதுமே இதன் முக்கியக் கடமைகள்.
ராணுவத்திற்கு வேண்டிய படைக்கலங்களை இந்தியாவிலேயே செய்துகொள்ள வேண்டுமென்பதே இலட்சியமாகும். அதற்காக வடாலா என்னுமிடத்திலும், புசாவல் என்னுமிடத்திலும் இரண்டு உற்பத்திச்சாலைகள் வேலைசெய்து வருகின்றன. அம்பர்நாத் என்னுமிடத்தில் எந்திரக்கருவி உற்பத்திச்சாலை நிறுவப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்கு வேண்டியவற்றைப் பற்றி ஆராய்வதற்காகப் பாதுகாப்பு விஞ்ஞான ஸ்தாபனம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மந்திரி இலாகா விற்கு ஒரு விஞ்ஞான ஆலோசகர் நியமிக்கப்பட்டுளர். படைக்கலங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக ஒரு சோதனை நிலையமும் நிறுவப்படும்.
{{larger|கப்பற் படை:}} சுதந்திரம் வந்த சமயம் இருந்த படையைக் கப்பற்படை என்று கூறமுடியாது. ராயல் நேவி என்னும் ஆங்கிலக் கப்பற் படையின் ஒரு சிறு துணைப் படையாக மட்டுமே இருந்தது. பாகிஸ்தான் பிரிவினையால் அது, அதனினும் சிறிதாக ஆகிவிட்டது. இந்தியாவின் மூவாயிரத்து ஐந்நூறு மைல் நீளமுள்ள கடற்கரையைப் பாதுகாக்கச் சிறிதளவுகூடப் போதுமானதாக இருக்கவில்லை. அப்படை இப்போது விரிவடைந்துள்ளது. கடற் பயிற்சிக்கும் கடற்கரைப் பயிற்சிக்கும் பழைய நிலையங்கள் விரிவடைந்தும், புதிய நிலையங்கள் நிறுவப்பட்டும் வருகின்றன. கடற்படை விமானப் போக்குவரத்துக் கிளை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கப்பற் படைக்கு வேண்டியவர்களைத் தயாரிக்கும் நிலையம் கொச்சியில் அமைக்கப்பட்டிருக்கிறது.
கப்பற் படை அலுவலாளர்கள் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பயிற்சி பெறுகிறார்கள். ஜாம்நகரிலும் லொனாவலாவிலுமுள்ள நிலையங்கள் விரிவாக்கப்பட்டன. கொச்சியிலும் விசாகப்பட்டினத்திலும் புது நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. கொச்சி நிலையமே இந்தியாவில் மிகப் பெரிய பயிற்சி நிலையமாகும்.
டேராடூனிலுள்ள இந்திய ராணுவக் கல்லூரி 1949-ல் திருத்தி அமைக்கப்பட்டது. அதனுடன் மூன்று படை உத்தியோகஸ்தர்களுக்கும் கூட்டு ஆதாரப் பயிற்சி கொடுக்கக் கூட்டுப்படைக் கிளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இக்கிளையில் இரண்டு ஆண்டுகள் பயின்ற கடற் படைப் பயிற்சி மாணவர்கள் (Cadets) மீண்டும் 4-6 ஆண்டுகள் பயிற்சி பெறுவதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பெறுகின்றனர்.
{{larger|ஆகாயப் படை:}} இது பாகிஸ்தான் பிரிவினையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. வடமேற்கிலிருந்த ஆகாயப் படை நிலையங்களுள் பெரும்பாலானவை பாகிஸ்தானிடம் சேர்ந்தன. ஆயினும் இந்திய யூனியன் ஆகாயப் படையினர் 1947-ல் மேற்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளை இந்தியாவுக்கு வெகு திறமையுடன் கொண்டுவந்து சேர்த்தார்கள். இதுபோல் காச்மீர நிகழ்ச்சியிலும் அரிய சேவை செய்தனர்.
இப்போது இந்தியக் கடற்படைக்கு இக் காலத்திய எந்திரங்கள் வாங்கப்படுகின்றன. பலவிதமான வேலைகளுக்கேற்ற கிளைகளும் ஏற்படுத்தப்படுகின்றன. நெடுந்தூரம் விமானம் ஓட்டிச் செல்லும் பயிற்சியும் அளிக்கப்டுகிறது. விமானம் ஓட்டும் பயிற்சி யளிப்பதற்காக அம்பாலாவிலும் ஜோதிபுரியிலுமிருந்த ஆரம்பப் பயிற்சிக்கிளைகள் இரண்டு பெரிய கல்லூரிகளாகத் திருத்தி அமைக்கப்பட்டுள. கப்பற் படைக்கான பொறியியல் நுட்பங்கள் கற்றுக் கொடுப்பதற்காகப் பெங்களூரில் பொறி நுட்பப் பயிற்சிக் கல்லூரி ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவின் பகுதிகளையும் ஆகாயவிமானத்திலிருந்து போட்டோ பிடித்துத் தேசப் படங்கள் தயாரிக்கவும், சர்வே இலாகா ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. பம்பாயிலுள்ள இந்தியக் கடற் படையின் கப்பற்கட்டு நிலையத்தை விரிவுபடுத்த ஆலோசனை நடந்து வருகிறது.
இந்திய ராணுவத்திலுள்ளவர்களின் மக்கள் ராணுவ சேவை செய்வதற்கு ஏற்ற பயிற்சியும் கல்வியும் பெறுவதற்காக, ஜலந்தர், அஜ்மீர், பெல்காம், பெங்களூர் ஆகிய ஊர்களில் ராணுவக் கல்லூரிகள் இருக்கின்றன. ராணுவ உத்தியோகஸ்தர்களுக்கு அன்னிய மொழிகள் கற்றுக் கொடுப்பதற்காகப் புது டெல்லியில் அன்னிய மொழிக் கல்லூரி 1949-ல் அமைக்கப்பட்டது. ராணுவ மருத்துவக் கல்லூரி பூனாவில் நடந்து வருகிறது. {{float_right|★}}
{{center|{{larger|<b>பொருளாதாரம்</b>}}}}
{{larger|வரலாறு: கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வருகை யும், இந்தியாவின் பொருளாதார வாழ்க்கை மாறுபாடும்:}} இந்தியாவில், 17ஆம் நூற்றாண்டிலும், 18ஆம் நூற்றாண்டின் முற்பாதியிலும் வேளாண்மையே முக்கியத் தொழிலாயிருந்தது. இது தவிரப் பல கைத்தொழில்களும் வேலைகளும் உண்டு. இவைகளில் தலைசிறந்தது நெசவுத்தொழில். டாக்கா மஸ்லின் உலகறிந்தது. வங்காளத்தில் பட்டு நெய்தல், தோய்த்தல், காச்மீரத்திலும் லாகூரிலும் சால்வைகள் நெய்தல், லாகூரிலும் ஆக்ராவிலும் இரத்தினக் கம்பு ளங்கள் நெய்தல் சிறப்பான தொழில்களாயிருந்தன. இந்நாட்டில் கப்பல் கட்டுதலும் உண்டு. அக்காலத்தில் ஆசியா, ஐரோப்பா நாடுகளுடன் இந்தியா வியாபாரப்-<noinclude></noinclude>
gxxxhp1rlzq054pgl9zwakmu9eec6uh
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/754
250
445893
1433625
1418271
2022-07-20T17:09:04Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|689|இந்தியா}}</b></noinclude>நடத்தி வந்ததுண்டு. அக்பர் காலம் முதல் ஆங்கிலேயர் களும் டச்சுக்காரர்களும் இந்தியாவுக்கு வந்து பல இடங்களில் பண்டக சாலைகளைக் கட்டிக் கொண்டனர். அப்போது இந்தியாவில் ஆக்ரா, பாட்னா, அகமதாபாத், லாகூர்,காசி,ஹூக்ளி, டாக்கா முதலிய பல நகரங்கள் செழிப்புற்றிருந்தன. போக்கு வரத்துக்குச் சாலைகளும் ஆறுகளும் பயன்பட்டன. 17ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் நாட்டில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகளா லும் குழப்பங்களாலும் மக்களின் பொருளாதார நிலை சீர்குலையத் தொடங்கியது. அன்னியர்கள் ஏராளமான செல்வத்தை இந்தியாவிலிருந்து கடத்தியதும், நாட்டில் ஆட்சிப் பலவீனமுண்டாயதும் இந்த வீழ்ச்சிக்குக் காரணங்களாகும்.
கம்பெனியார் ஆட்சியின் வளர்ச்சி : 1600ஆம் ஆண் டில் நிறுவப்பட்ட கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியா வெங்கும் பண்டக சாலைகள் ஏற்படுத்தி வியாபாரம் தொடங்கிற்று. சென்னை, பம்பாய், கல்கத்தா தலைநக ரங்களாக ஆயின. 1744-1763-ல் மூன்று கருநாடக யுத்தங்களில் பிரெஞ்சுக்காரர்களை வீழ்த்தியபின் தென் னிந்தியாவில் கம்பெனியார் ஆதிக்கம் பெற்றனர். 1757-ல் பிளாசிச் சண்டைக்குப் பின்னர், வங்காளத்தி லும் ஆதிக்கம் அடைந்தனர். 1765-ல் மொகலாயச் சக் கரவர்த்தியிடமிருந்து வங்காளத்தின் ஆட்சியுரிமையும் பெற்றனர். இதன் மூலம் சட்டபூர்வமான ஆட்சிநிலை அடைந்தனர். 1773ஆம் ஆண்டின் ஒழுங்குமுறைச் சட் டத்தின் (Regulating Act) வாயிலாகப் பார்லிமென்டு சபையின் அங்கீகாரமும் கிடைத்தது. 1784-ல் பிட் இந் தியச் சட்டப்படி (Pitt's India Act) கம்பெனியின் ஆட்சி இங்கிலாந்து மன்னரின் மேற்பார்வைக்குள்ளாக் கப்பட்டது. 1833ஆம் ஆண்டில் கம்பெனியின் சாச னம் புதுப்பிக்கப்பட்ட பொழுது, அவர்கள் வியாபா ரத்தை முற்றிலும் விட்டுவிட்டு இந்தியாவை ஆளத் தொடங்கினர். 1775 - 1833க்குள் காசி, சால்செட், மைசூர், சூரத்து, தஞ்சை, கருநாடகம், தற்காலம் பம் பாய் மாகாணம் என வழங்கும் பேஷ்வாவின் நாடு, அஸ் ஸாம், அரக்கான், டெனாசரிம், குடகு முதலிய பகுதி களும் கம்பெனிக்குச் சொந்தமாயின.
கம்பெனியின் ஆதிக்கம் வளர வளர நாட்டில் செழிப்புற்றிருந்த வாணிகமும் கைத்தொழிலும் சீர் குலையத் தொடங்கின. கம்பெனியாரின் குமாஸ்தாக் களும் மற்ற வேலைக்காரர்களும் சுதேச நவாபுகளிட மிருந்தும் அரசர்களிடமிருந்தும் பல வழிகளில் சேர்த்த செல்வமும், ஆட்சி வருமான மீதமும் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு, நாடு வறுமையுற்றது. கம்பெனியாரின் அநியாயப் போட்டியாலும் வழிகளாலும் இந்திய வியாபாரிகள் அழிந்தனர். வங்காளத்தில் நெசவாளி. கள் கம்பெனியாரால் துன்புறுத்தப்பட்டனர். இந்தியத் துணிகள் இங்கிலாந்தில் இறக்குமதி யாகாவண்ணம் சட்டம் போட்டும், கடற்சுங்க வரியை உயர்த்தியும் தடுத்தனர். இவற்றால் வங்காளத்தின் நெசவுத்தொழில் பாழாயிற்று. நிலவரியின் சுமை தாங்காமல் வேளாண்மை கேடுற்றது. கருநாடகத்தில் நவாபுக்குக் கடன்கொடுத்த அன்னியர்கள் ஈடாக நிலத்தின் வரு மானம் முழுவதையும் பெற்றுத் தம் நாட்டுக்கு அனுப் பினர். பொதுவாகக் கம்பெனியார் இந்தியாவின் வரு மானத்தை நாட்டின் முன்னேற்றத்திற்குச் செலவு செய்யாமல் நாட்டிலிருந்து வெளியேற்றி வந்தனர்.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை: இந்தியாவின் வாழ்க்கை மத்தை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான மக்கள் கிராமங்களிலே வசித்து வந்தனர். ஒவ்வொரு கிரா
வரவு கிராமமும் தன் தேவைகளைத் தானே நிறைவு செய்து கொண்டது. போக்குவரத்துச் சாதனங்களில் பல குறை கள் இருந்தன. இதனால் வாணிகம் தடைப்பட்டது. பஞ்ச காலங்களில் ஓரிடமிருந்து மற்றோரிடத்துக்கு உண வுப் பொருள்கள் கொண்டுபோவது இயலாத காரியம். கிராமங்களில் நாணயப் பழக்கம் இல்லை. பண்ட மாற் றுத்தான் நடைபெற்றது. தானிய மூலமாக செலவு செய்யப்பட்டது. . நிலந்தான் செல்வமாயிருந் தது. நிலச் சொந்தக்காரர்களுக்குரிய பகுதி, தொழி லாளிகளுக்குரிய கூலி, சாமான்களுக்குரிய விலை முதலி யன கிராம வழக்கப்படி தீர்மானிக்கப்பட்டு வந்தன. அக்காலத்தில் கிராமங்கள் அன்றிப் பல நகரங்களும் இருந்தன. இந்தியாவின் மக்கள் தொகையில் 10 சத வீதம் நகரங்களில் இருந்ததென்று கூறலாம். ஒவ்வொரு நகரத்திலும் ஏதேனும் ஒரு கைத்தொழில் செய்யப்பட்டு வந்தது. கைத்தொழிலால் வந்த பொருள்கள் மிகுந்த கலை நுணுக்கம் அமைந்த வேலைப்பாடுகளுடன் விளங் கினமையால் உலகப்புகழ் பெற்றிருந்தன. முக்கியமாக நெசவுத் தொழிலைத் தேசியத் தொழில் எனக் கூறலாம். இரும்பு, எஃகு உற்பத்தியும் உண்டு. பீரங்கி, வாள் முதலியன செய்யப்பட்டு வந்தன. வாளின் பிடிகளுக் கும் கேடயங்களுக்கும் சித்திர வேலைப்பாடு செய்வதும் முக்கியமான தொழிலாக இருந்தது. தங்கம், வெள்ளி, பித்தளைச் சாமான்களின்மீது எனாமல் பூசுவதும், சரிகைக் கம்பிகள் இழுத்தல், சலவைக்கல், தந்தம், சந்த னக் கட்டை ஆகியவற்றின் மீது சிற்ப வேலைகள் செய் தல், தோல் பதனிட்டுச் சாமான்கள் செய்தல், காகிதம் செய்தல், வாசனைச் சாமான்கள் செய்தல், கப்பல் கட்டு தல், கண்ணாடிச் சாமான்கள் செய்தல் முதலிய பலவிதத் தொழில்களும் நாட்டின் பற்பல பாகங்களில் செய்யப் பட்டு வந்தன. தொழிலாளர் சங்கங்கள், தொழிலாளர் களின் நலனைக் கவனித்தும், ஆக்கப்படும் பொருள் களின் தரத்தைப் பாதுகாத்தும் வந்தன. மேலும் சில அறங்களிலும் ஈடுபட்டு வந்தன. பொதுவாக ஒவ் வொரு தொழிலாளியும் விலைக்குச் செய்யச் சொல்லும் பொழுதே பொருள்கள் செய்து கொடுத்தனன். அதற்கு வேண்டிய கச்சாப் பொருள்களைச் சாமான்கள் வாங்கு பவர்களிடமே பெற்றனன்.
பொருளாதார மாறுபாடு : சுமார் 19ஆம் நூற்றாண் டின் இடையிலிருந்து பொருளாதார வாழ்க்கையில் பல மாறுபாடுகள் உண்டாயின. இதற்கு நாட்டில் அன்னியர் களும் மேனாட்டுப் பண்பும் புகுந்தமையும், இருப்புப் பாதைகள் முதலிய புதிய போக்கு வரத்துச் சாதனங்கள் ஏற்பட்டமையும், சூயெஸ் கால்வாய் வெட்டப்பட்ட மையும், இங்கிலாந்தில் தொழிற் புரட்சியின் காரண மாக எந்திரங்களால் பெருவாரியாக ஆக்கப்பட்ட சாமான்களை இந்தியாவில் விற்கவேண்டி அரசாங்கத் தினால் கடைப்பிடிக்கப்பட்ட புதுக்கொள்கைகளும் கார ணங்களாகும். கிராமங்களில் சுயதேவைகளைப் பூர்த்தி செய்வது நின்றது. அன்னிய நாட்டுப்பொருள்கள் ஏராள மாக இறக்குமதி செய்யப்பட்டன. நாணயப் புழக்கம் உண்டாகியது. அன்னிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய் வதற்கென்று விவசாயம் செய்யப்பட்டு வந்தது.விவ சாயிகளுக்கிடையே கடன் மிகுந்து, நிலங்கள் கடன் கொடுத்தவர்களின் வசமாயின. ஏற்கெனவே பல கைத் தொழிற் பொருள்களை ஏற்றுமதி செய்த இந்தியா உணவுப் பொருள்களையும், மேனாட்டு எந்திரக் கைத் தொழிலுக்கு வேண்டிய கச்சாப் பொருள்களையும் ஏற்றுமதி செய்து, மேனாட்டிலிருந்து உற்பத்தி செய்த பொருள்களை இறக்குமதி செய்தது. இங்கிலாந்தி லிருந்து குறைந்த விலையில் பெருவாரியாக<noinclude></noinclude>
hply9pe8f5p7o8nqp0nf8ozkmreh850
1433733
1433625
2022-07-21T10:16:30Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|689|இந்தியா}}</b></noinclude>நடத்தி வந்ததுண்டு. அக்பர் காலம் முதல் ஆங்கிலேயர்களும் டச்சுக்காரர்களும் இந்தியாவுக்கு வந்து பல இடங்களில் பண்டக சாலைகளைக் கட்டிக் கொண்டனர். அப்போது இந்தியாவில் ஆக்ரா, பாட்னா, அகமதாபாத், லாகூர், காசி,ஹூக்ளி, டாக்கா முதலிய பல நகரங்கள் செழிப்புற்றிருந்தன. போக்குவரத்துக்குச் சாலைகளும் ஆறுகளும் பயன்பட்டன. 17ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் நாட்டில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகளலும் குழப்பங்களாலும் மக்களின் பொருளாதார நிலை சீர்குலையத் தொடங்கியது. அன்னியர்கள் ஏராளமான செல்வத்தை இந்தியாவிலிருந்து கடத்தியதும், நாட்டில் ஆட்சிப் பலவீனமுண்டாயதும் இந்த வீழ்ச்சிக்குக் காரணங்களாகும்.
{{larger|கம்பெனியார் ஆட்சியின் வளர்ச்சி :}} 1600ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவெங்கும் பண்டக சாலைகள் ஏற்படுத்தி வியாபாரம் தொடங்கிற்று. சென்னை, பம்பாய், கல்கத்தா தலைநகரங்களாக ஆயின. 1744-1763-ல் மூன்று கருநாடக யுத்தங்களில் பிரெஞ்சுக்காரர்களை வீழ்த்தியபின் தென்னிந்தியாவில் கம்பெனியார் ஆதிக்கம் பெற்றனர். 1757-ல் பிளாசிச் சண்டைக்குப் பின்னர், வங்காளத்திலும் ஆதிக்கம் அடைந்தனர். 1765-ல் மொகலாயச் சக்கரவர்த்தியிடமிருந்து வங்காளத்தின் ஆட்சியுரிமையும் பெற்றனர். இதன் மூலம் சட்டபூர்வமான ஆட்சிநிலை அடைந்தனர். 1773ஆம் ஆண்டின் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Regulating Act) வாயிலாகப் பார்லிமென்டு சபையின் அங்கீகாரமும் கிடைத்தது. 1784-ல் பிட் இந்தியச் சட்டப்படி (Pitt's India Act) கம்பெனியின் ஆட்சி இங்கிலாந்து மன்னரின் மேற்பார்வைக்குள்ளாக்கப்பட்டது. 1833ஆம் ஆண்டில் கம்பெனியின் சாசனம் புதுப்பிக்கப்பட்ட பொழுது, அவர்கள் வியாபாரத்தை முற்றிலும் விட்டுவிட்டு இந்தியாவை ஆளத் தொடங்கினர். 1775 - 1833க்குள் காசி, சால்செட், மைசூர், சூரத்து, தஞ்சை, கருநாடகம், தற்காலம் பம்பாய் மாகாணம் என வழங்கும் பேஷ்வாவின் நாடு, அஸ் ஸாம், அரக்கான், டெனாசரிம், குடகு முதலிய பகுதிகளும் கம்பெனிக்குச் சொந்தமாயின.
கம்பெனியின் ஆதிக்கம் வளர வளர நாட்டில் செழிப்புற்றிருந்த வாணிகமும் கைத்தொழிலும் சீர் குலையத் தொடங்கின. கம்பெனியாரின் குமாஸ்தாக்களும் மற்ற வேலைக்காரர்களும் சுதேச நவாபுகளிடமிருந்தும் அரசர்களிடமிருந்தும் பல வழிகளில் சேர்த்த செல்வமும், ஆட்சி வருமான மீதமும் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு, நாடு வறுமையுற்றது. கம்பெனியாரின் அநியாயப் போட்டியாலும் வழிகளாலும் இந்திய வியாபாரிகள் அழிந்தனர். வங்காளத்தில் நெசவாளிகள் கம்பெனியாரால் துன்புறுத்தப்பட்டனர். இந்தியத் துணிகள் இங்கிலாந்தில் இறக்குமதி யாகாவண்ணம் சட்டம் போட்டும், கடற்சுங்க வரியை உயர்த்தியும் தடுத்தனர். இவற்றால் வங்காளத்தின் நெசவுத்தொழில் பாழாயிற்று. நிலவரியின் சுமை தாங்காமல் வேளாண்மை கேடுற்றது. கருநாடகத்தில் நவாபுக்குக் கடன்கொடுத்த அன்னியர்கள் ஈடாக நிலத்தின் வருமானம் முழுவதையும் பெற்றுத் தம் நாட்டுக்கு அனுப்பினர். பொதுவாகக் கம்பெனியார் இந்தியாவின் வருமானத்தை நாட்டின் முன்னேற்றத்திற்குச் செலவு செய்யாமல் நாட்டிலிருந்து வெளியேற்றி வந்தனர்.
{{larger|19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை:}} இந்தியாவின் வாழ்க்கை கிராமத்தை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான மக்கள் கிராமங்களிலே வசித்து வந்தனர். ஒவ்வொரு கிராமமும் தன் தேவைகளைத் தானே நிறைவு செய்து கொண்டது. போக்குவரத்துச் சாதனங்களில் பல குறைகள் இருந்தன. இதனால் வாணிகம் தடைப்பட்டது. பஞ்ச காலங்களில் ஓரிடமிருந்து மற்றோரிடத்துக்கு உணவுப் பொருள்கள் கொண்டுபோவது இயலாத காரியம். கிராமங்களில் நாணயப் பழக்கம் இல்லை. பண்ட மாற்றுத்தான் நடைபெற்றது. தானிய மூலமாக செலவு செய்யப்பட்டது. நிலந்தான் செல்வமாயிருந் தது. நிலச் சொந்தக்காரர்களுக்குரிய பகுதி, தொழிலாளிகளுக்குரிய கூலி, சாமான்களுக்குரிய விலை முதலியன கிராம வழக்கப்படி தீர்மானிக்கப்பட்டு வந்தன. அக்காலத்தில் கிராமங்கள் அன்றிப் பல நகரங்களும் இருந்தன. இந்தியாவின் மக்கள் தொகையில் 10 சதவீதம் நகரங்களில் இருந்ததென்று கூறலாம். ஒவ்வொரு நகரத்திலும் ஏதேனும் ஒரு கைத்தொழில் செய்யப்பட்டு வந்தது. கைத்தொழிலால் வந்த பொருள்கள் மிகுந்த கலை நுணுக்கம் அமைந்த வேலைப்பாடுகளுடன் விளங்கினமையால் உலகப்புகழ் பெற்றிருந்தன. முக்கியமாக நெசவுத் தொழிலைத் தேசியத் தொழில் எனக் கூறலாம். இரும்பு, எஃகு உற்பத்தியும் உண்டு. பீரங்கி, வாள் முதலியன செய்யப்பட்டு வந்தன. வாளின் பிடிகளுக்கும் கேடயங்களுக்கும் சித்திர வேலைப்பாடு செய்வதும் முக்கியமான தொழிலாக இருந்தது. தங்கம், வெள்ளி, பித்தளைச் சாமான்களின்மீது எனாமல் பூசுவதும், சரிகைக் கம்பிகள் இழுத்தல், சலவைக்கல், தந்தம், சந்தனக் கட்டை ஆகியவற்றின் மீது சிற்ப வேலைகள் செய்தல், தோல் பதனிட்டுச் சாமான்கள் செய்தல், காகிதம் செய்தல், வாசனைச் சாமான்கள் செய்தல், கப்பல் கட்டுதல், கண்ணாடிச் சாமான்கள் செய்தல் முதலிய பலவிதத் தொழில்களும் நாட்டின் பற்பல பாகங்களில் செய்யப்பட்டு வந்தன. தொழிலாளர் சங்கங்கள், தொழிலாளர்களின் நலனைக் கவனித்தும், ஆக்கப்படும் பொருள்களின் தரத்தைப் பாதுகாத்தும் வந்தன. மேலும் சில அறங்களிலும் ஈடுபட்டு வந்தன. பொதுவாக ஒவ்வொரு தொழிலாளியும் விலைக்குச் செய்யச் சொல்லும் பொழுதே பொருள்கள் செய்து கொடுத்தனன். அதற்கு வேண்டிய கச்சாப் பொருள்களைச் சாமான்கள் வாங்குபவர்களிடமே பெற்றனன்.
{{larger|பொருளாதார மாறுபாடு :}} சுமார் 19ஆம் நூற்றாண்டின் இடையிலிருந்து பொருளாதார வாழ்க்கையில் பல மாறுபாடுகள் உண்டாயின. இதற்கு நாட்டில் அன்னியர்களும் மேனாட்டுப் பண்பும் புகுந்தமையும், இருப்புப் பாதைகள் முதலிய புதிய போக்குவரத்துச் சாதனங்கள் ஏற்பட்டமையும், சூயெஸ் கால்வாய் வெட்டப்பட்டமையும், இங்கிலாந்தில் தொழிற் புரட்சியின் காரணமாக எந்திரங்களால் பெருவாரியாக ஆக்கப்பட்ட சாமான்களை இந்தியாவில் விற்கவேண்டி அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட புதுக்கொள்கைகளும் காரணங்களாகும். கிராமங்களில் சுயதேவைகளைப் பூர்த்தி செய்வது நின்றது. அன்னிய நாட்டுப்பொருள்கள் ஏராளமாக இறக்குமதி செய்யப்பட்டன. நாணயப் புழக்கம் உண்டாகியது. அன்னிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென்று விவசாயம் செய்யப்பட்டு வந்தது. விவசாயிகளுக்கிடையே கடன் மிகுந்து, நிலங்கள் கடன் கொடுத்தவர்களின் வசமாயின. ஏற்கெனவே பல கைத்தொழிற் பொருள்களை ஏற்றுமதி செய்த இந்தியா உணவுப் பொருள்களையும், மேனாட்டு எந்திரக் கைத்தொழிலுக்கு வேண்டிய கச்சாப் பொருள்களையும் ஏற்றுமதி செய்து, மேனாட்டிலிருந்து உற்பத்தி செய்த பொருள்களை இறக்குமதி செய்தது. இங்கிலாந்திலிருந்து குறைந்த விலையில் பெருவாரியாக<noinclude></noinclude>
kl1htgba6xyifdkqk8h6qzlk6gyu84e
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/755
250
445894
1433626
1418272
2022-07-20T17:10:23Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh||690|}}</b></noinclude>இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் முன், இந்தி யக் கைத்தொழிற் பொருள்கள் நிற்க முடியவில்லை. மேலும் பிரான்சில் இந்தியச் சால்வைகளுக்குக் கிராக்கி குறைந்தது. மரக்கரி விலை ஏற்றத்தாலும், வெளிநாடு களிலிருந்து இரும்பு இறக்குமதி செய்யப்பட்டதாலும் இந்திய இரும்பு, எஃகு உற்பத்தித் தொழில் பாழா கியது. சிலிநாட்டில் நைட்ரேட் இயற்கையில் அகப் பட்டதால் இந்தியாவில் வெடியுப்பு உற்பத்தி நின்றது. இவ்வாறு பல காரணங்களால் இந்தியக் கைத்தொழில் கள் அழிந்தன. பொருளாதார வாழ்க்கை பாதிக்கப் பட்டது.
நிலவரியும் நில உரிமையும் : இந்தியாவில் பண்டைக் காலம் முதல் நிலவரியே அரசாங்கத்தின் முக்கிய வருமானமாக இருந்தது. சாதாரணமாக ஒவ்வொரு கிராமத்தின் மொத்த மகசூலில் ஆறில் ஒரு பங்கு அரச னுடையது. இப்பங்கு கிராமத் தலைவனால் களத்து மேட்டிலேயே வசூலித்துக் கொடுக்கப்பட்டது. முஸ்லிம் ஆட்சியிலும் இம்முறையே வழக்கிலிருந்தது. ஆனால் முன்னைவிட இப் பங்கு அதிகம். முதன் முத லாக அரசாங்க வருமானத்தை நாணயமாகப் பெற்றுக் கொள்வதற்குத் தைமூரினாலும், பிறகு ஷெர்ஷாவினா லும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அக்பர் ஆட்சியில் தோடர் மல் செய்த நிலவரி ஏற்பாட்டின்படி நிலங்கள் அளக்கப்பட்டும், தரவாரியாகப் பிரிக்கப்பட்டும், அர சாங்கத்தின் பங்கு மொத்த மகசூலில் மூன்றில் ஒன் றாகத் தீர்மானிக்கப்பட்டது. பிறகு முன் 19 ஆண்டு களின் தானியச் சராசரி விலை விகிதப்படி மதிப்பீட்டு, இத்தொகை ஒவ்வொரு குடியானவனிடமிருந்தும் பெற் றுக்கொள்ளப்பட்டது. இத்தொகையைத் திரட்டிச் சர்க்காருக்குச் செலுத்தப் பல தரகர்கள் இருந்தனர். தோடர் மல்லின் ஏற்பாடு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு அமலில் இருந்தது. மொகலாய ஆட்சியின் இறுதிக் காலத்தில் ஒரு புதிய வழக்கம் தோன்றியது. ஒரு ஜில்லா அல்லது பர்கனாவில் நிலவரியை வசூல் செய்யும் உரிமை ஏலத்தில் விடப்பட்டு ஏலமெடுப்போரிடமிருந்து அர சாங்கத்தார் - தொகையைப் பெற்றுக்கொண்டனர். சர்க்காருக்குக் கட்டின தொகைபோக மீதி ஏலமெடுப் போருடையது. நாளடைவில் இவ்வரி வசூல் செய்யும் உரிமை பெற்றவர்கள் மிக்க ஆதிக்கம் பெற்றனர். உரிமையும் பரம்பரைப் பாத்தியமாக ஆயிற்று. வங் காளத்தில் இவர்கள் ஜமீன்தார்கள் என்று அழைக்கப் பட்டு, நிலத்தின் சொந்த உரிமையையும் அடைந்தனர். ஐக்கிய மாகாணத்திலும் மற்ற இடங்களிலும் இவர் கள் பல உரிமைகளைப் பெற்றனர்.
மொகலாய 1765-ல் கிழக்கிந்தியக் கம்பெனியார் சர்க்கரவர்த்தி ஷா-ஆலமிடமிருந்து வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா மாகாணங்களில் நிலவரி வசூலிக்கும் உரிமை யைப் பெற்றனர். கம்பெனியார் முதன் முதலில் ஜமீன் தார்களிடமே வரி வசூலிக்கும் வேலையை ஒப்படைத் தனர். ஆனால் ஐமீன் தார்கள் குடியானவரைத் துன் புறுத்தாவண்ணம் பாதுகாக்கப் பார்வையாளர்களை யும் ஏற்படுத்தினர். 1769 முதல் 1774 வரை ஐந்து ஆண்டுகளுக்கு நிலவரியை ஒப்பந்தம் பேசிக் குத் தகைக்கு விட்டனர். பிறகு இக்குத்தகைத் தொகையை ஏலம் கூறி, ஏலமெடுப்போரிடமிருந்து மொத்தமாகப் பெற்று, வரி வசூல் உரிமையை ஏலதாரிடம் கொடுத் தனர். ஆண்டுதோறும் வரிவசூல் உரிமை குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் இம்முறைகளில் பல குறைகள் இருந்தன. ஏலத்தில் அதிகத் தொகைக்கு எடுத்த பலர் பாழாயினர். 1786-ல் கவர்னர் ஜெனரலாக வந்த காரன் வாலிஸ் பிரபுவின் சிபார்சுப்படி 1793ஆம் ஆண்டில்
வங்காளத்தில் சாசுவத நிலவரித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி நிலவரியைக் குத்தகை எடுத்து வந்த ஜமீன்தார்கள் நிலச் சொந்தக்காரர்க ளாயினர். குடியானவர்களிடமிருந்து பெற்றுக்கொள் ளும் தொகையில் பதினொன்றில் பத்துப் பங்கு கம்பெனி
யாருக்குக் கட்டுவதென்றும், மீதி ஜமீன் தார்களுக்குரிய தென்றும் ஏற்பாடாயிற்று. இத்தொகையை ஏற்று வதோ குறைப்பதோ இல்லை என்று கம்பெனியார் உறுதி செய்தனர். 1802-1805-ல் இதே ஏற்பாடு வட சர்க்காரிலும் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. மேலும் தென்னிந்தியாவில் திருநெல்வேலி ஜில்லாவி லும், இராமநாதபுரத்திலும், சிவகங்கையிலும் இருந்த பாளையக்காரர்களிடமும் இதே ஏற்பாடு செய்யப்பட் டது. மற்றும் சென்னை முதலிய தலைநகர்களைச் சுற்றி லும் கம்பெனியாருக்குச் சொந்தமாக இருந்த நிலங் களைப் பல துண்டுகளாகப் பிரித்து ஏலம் கூறி, ஏலமெடுப் போரைச் சாசுவத நிலவரி ஏற்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதே முறையை இந்தியா முழுவதும் நிறுவ வேண்டுமென்று பலர் வற்புறுத்தினர். ஆனால் 1803-ல் இந்தியா மந்திரி மறுத்துவிட்டார். 1792-1802-ல் தற் காலம் சென்னை மாகாணத்தில் அடங்கிய பகுதிகள் கம் பெனியாருக்குச் சொந்தமாயின. இங்கே அக்காலம் கவர்னராக இருந்த தாமஸ் மன்ரோ ரயத்துவாரி நில ஏற்பாட்டை நிறுவினார். இம்முறைப்படி ஒவ்வொரு நிலச்சுவான் தாரிடமிருந்தும் நிலவரி வசூல் செய்வ தென்று ஏற்பாடாயிற்று. நிலவரி செலுத்தும் வரை நிலத்தைப் பயிரிடுவதற்கும், பிறருக்கு மாற்றுவதற்கும், விற்பதற்கும் நிலச்சுவான் தார்களுக்கு உரிமை உண்டு. வரித்தொகை இருபது அல்லது முப்பது ஆண்டு களுக்கு ஒருமுறை மறுபடியும் தீர்மானிக்கப்படும். இதே ஏற்பாடு பம்பாய் மாகாணத்திலும் கொண்டு வரப்பட்டது. ஐக்கிய மாகாணத்தில் பல கிராமங்கள் கிராம சமுதாயத்திற்குச் சொந்தமாக இருந்தன. இங்கே கம்பெனியார் இச்சமுதாய உரிமையை ஒப்புக் கொண்டு, நிலவரி செலுத்தும் பொறுப்பைச் சமுதாயத் தின் மீதும், ஒவ்வொரு கிராம வாசியின் மீதும் ஏற் றினர். மேலும் நிலவரித் தொகை தாற்காலிகமாகவே தீர்மானிக்கப்பட்டது. இவ்வேற்பாட்டுக்கு மகல்வாரி முறை என்று பெயர். சில மாறுதல்களுடன் இதே முறை பஞ்சாபிலும் அமலுக்குக் கொண்டுவரப் பட்டது. மத்திய மாகாணங்களில் ஒவ்வொரு கிரா மத்திலிருந்த குடியானவர் தங்களால் பயிரிடப்படும் நிலத்தின்மேல் உரிமை கொண்டாடினர். மேலும் இங்கு மகாராஷ்டிரர்கள் ஆட்சியில் குடியானவர்களிட மிருந்து வரி வசூல் செய்து அரசாங்கத்திற்குச் செலுத்திவந்த நடுவர்கள் பலர் இருந்தனர். இவர்க ளுக்குப் பட்டேல்கள் அல்லது மல்குசார்கள் என்று பெயர். இவர்களையே நிலத்திற்குச் சொந்தக்காரர்க ளாக்கி, வரி செலுத்தும் பொறுப்பை இவர்கள் மீது ஏற்றினர். இவ்விடத்திலும் தாற்காலிகத் தீர்வைதான் போடப்பட்டது. இது தவிர ஐக்கிய மாகாணம், பஞ் சாப், வங்காளம், பம்பாய் முதலிய மாகாணங்களில் சிற்சில பகுதிகளில் இருந்து வந்த ஜமீன்தார்களோடு தாற்காலிகத் தீர்வை ஏற்பாடும் செய்யப்பட்டது. இம்மாதிரி இந்தியாவில் பற்பல நிலத்தீர்வை முறைகள் அமலுக்குக் கொண்டு வரப்பட்டன. பொதுவாக இவைகளைச் சாசுவத ஜமீன் ஏற்பாடு என்றும், தாற் காலிக ஜமீன் ஏற்பாடு என்றும், ரயத்துவாரி தீர்வை ஏற்பாடு என்றும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் அரசாங்கத்தின் உரிமை என்னவென்று பார்க்கலாம். இந்து, முஸ்லீம் ஆட்சியில் அரசாங்கத்<noinclude></noinclude>
lrxxokoif6rabs0dqnrwe9m7ivz9j3y
1433734
1433626
2022-07-21T10:30:56Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|690|இந்தியா}}</b></noinclude>இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் முன், இந்தியக் கைத்தொழிற் பொருள்கள் நிற்க முடியவில்லை. மேலும் பிரான்சில் இந்தியச் சால்வைகளுக்குக் கிராக்கி குறைந்தது. மரக்கரி விலை ஏற்றத்தாலும், வெளிநாடுகளிலிருந்து இரும்பு இறக்குமதி செய்யப்பட்டதாலும் இந்திய இரும்பு, எஃகு உற்பத்தித் தொழில் பாழாகியது. சிலிநாட்டில் நைட்ரேட் இயற்கையில் அகப்பட்டதால் இந்தியாவில் வெடியுப்பு உற்பத்தி நின்றது. இவ்வாறு பல காரணங்களால் இந்தியக் கைத்தொழில்கள் அழிந்தன. பொருளாதார வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
{{larger|நிலவரியும் நில உரிமையும் :}} இந்தியாவில் பண்டைக் காலம் முதல் நிலவரியே அரசாங்கத்தின் முக்கிய வருமானமாக இருந்தது. சாதாரணமாக ஒவ்வொரு கிராமத்தின் மொத்த மகசூலில் ஆறில் ஒரு பங்கு அரசனுடையது. இப்பங்கு கிராமத் தலைவனால் களத்துமேட்டிலேயே வசூலித்துக் கொடுக்கப்பட்டது. முஸ்லிம் ஆட்சியிலும் இம்முறையே வழக்கிலிருந்தது. ஆனால் முன்னைவிட இப் பங்கு அதிகம். முதன் முதலாக அரசாங்க வருமானத்தை நாணயமாகப் பெற்றுக் கொள்வதற்குத் தைமூரினாலும், பிறகு ஷெர்ஷாவினாலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அக்பர் ஆட்சியில் தோடர் மல் செய்த நிலவரி ஏற்பாட்டின்படி நிலங்கள் அளக்கப்பட்டும், தரவாரியாகப் பிரிக்கப்பட்டும், அரசாங்கத்தின் பங்கு மொத்த மகசூலில் மூன்றில் ஒன்றாகத் தீர்மானிக்கப்பட்டது. பிறகு முன் 19 ஆண்டுகளின் தானியச் சராசரி விலை விகிதப்படி மதிப்பீட்டு, இத்தொகை ஒவ்வொரு குடியானவனிடமிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டது. இத்தொகையைத் திரட்டிச் சர்க்காருக்குச் செலுத்தப் பல தரகர்கள் இருந்தனர். தோடர் மல்லின் ஏற்பாடு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு அமலில் இருந்தது. மொகலாய ஆட்சியின் இறுதிக் காலத்தில் ஒரு புதிய வழக்கம் தோன்றியது. ஒரு ஜில்லா அல்லது பர்கனாவில் நிலவரியை வசூல் செய்யும் உரிமை ஏலத்தில் விடப்பட்டு ஏலமெடுப்போரிடமிருந்து அரசாங்கத்தார் - தொகையைப் பெற்றுக்கொண்டனர். சர்க்காருக்குக் கட்டின தொகைபோக மீதி ஏலமெடுப் போருடையது. நாளடைவில் இவ்வரி வசூல் செய்யும் உரிமை பெற்றவர்கள் மிக்க ஆதிக்கம் பெற்றனர். உரிமையும் பரம்பரைப் பாத்தியமாக ஆயிற்று. வங்காளத்தில் இவர்கள் ஜமீன்தார்கள் என்று அழைக்கப்பட்டு, நிலத்தின் சொந்த உரிமையையும் அடைந்தனர். ஐக்கிய மாகாணத்திலும் மற்ற இடங்களிலும் இவர்கள் பல உரிமைகளைப் பெற்றனர்.
1765-ல் கிழக்கிந்தியக் கம்பெனியார் சர்க்கரவர்த்தி ஷா-ஆலமிடமிருந்து வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா மாகாணங்களில் நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றனர். கம்பெனியார் முதன் முதலில் ஜமீன்தார்களிடமே வரி வசூலிக்கும் வேலையை ஒப்படைத்தனர். ஆனால் ஜமீன்தார்கள் குடியானவரைத் துன்புறுத்தாவண்ணம் பாதுகாக்கப் பார்வையாளர்களையும் ஏற்படுத்தினர். 1769 முதல் 1774 வரை ஐந்து ஆண்டுகளுக்கு நிலவரியை ஒப்பந்தம் பேசிக் குத்தகைக்கு விட்டனர். பிறகு இக்குத்தகைத் தொகையை ஏலம் கூறி, ஏலமெடுப்போரிடமிருந்து மொத்தமாகப் பெற்று, வரி வசூல் உரிமையை ஏலதாரிடம் கொடுத்தனர். ஆண்டுதோறும் வரிவசூல் உரிமை குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் இம்முறைகளில் பல குறைகள் இருந்தன. ஏலத்தில் அதிகத் தொகைக்கு எடுத்த பலர் பாழாயினர். 1786-ல் கவர்னர் ஜெனரலாக வந்த காரன் வாலிஸ் பிரபுவின் சிபார்சுப்படி 1793ஆம் ஆண்டில் வங்காளத்தில் சாசுவத நிலவரித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி நிலவரியைக் குத்தகை எடுத்து வந்த ஜமீன்தார்கள் நிலச் சொந்தக்காரர்களாயினர். குடியானவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் தொகையில் பதினொன்றில் பத்துப் பங்கு கம்பெனியாருக்குக் கட்டுவதென்றும், மீதி ஜமீன்தார்களுக்குரியதென்றும் ஏற்பாடாயிற்று. இத்தொகையை ஏற்றுவதோ குறைப்பதோ இல்லை என்று கம்பெனியார் உறுதி செய்தனர். 1802-1805-ல் இதே ஏற்பாடு வட சர்க்காரிலும் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. மேலும் தென்னிந்தியாவில் திருநெல்வேலி ஜில்லாவிலும், இராமநாதபுரத்திலும், சிவகங்கையிலும் இருந்த பாளையக்காரர்களிடமும் இதே ஏற்பாடு செய்யப்பட்டது. மற்றும் சென்னை முதலிய தலைநகர்களைச் சுற்றிலும் கம்பெனியாருக்குச் சொந்தமாக இருந்த நிலங்களைப் பல துண்டுகளாகப் பிரித்து ஏலம் கூறி, ஏலமெடுப் போரைச் சாசுவத நிலவரி ஏற்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதே முறையை இந்தியா முழுவதும் நிறுவ வேண்டுமென்று பலர் வற்புறுத்தினர். ஆனால் 1803-ல் இந்தியா மந்திரி மறுத்துவிட்டார். 1792-1802-ல் தற்காலம் சென்னை மாகாணத்தில் அடங்கிய பகுதிகள் கம்பெனியாருக்குச் சொந்தமாயின. இங்கே அக்காலம் கவர்னராக இருந்த தாமஸ் மன்ரோ ரயத்துவாரி நில ஏற்பாட்டை நிறுவினார். இம்முறைப்படி ஒவ்வொரு நிலச்சுவான்தாரிடமிருந்தும் நிலவரி வசூல் செய்வதென்று ஏற்பாடாயிற்று. நிலவரி செலுத்தும் வரை நிலத்தைப் பயிரிடுவதற்கும், பிறருக்கு மாற்றுவதற்கும், விற்பதற்கும் நிலச்சுவான்தார்களுக்கு உரிமை உண்டு. வரித்தொகை இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுபடியும் தீர்மானிக்கப்படும். இதே ஏற்பாடு பம்பாய் மாகாணத்திலும் கொண்டு வரப்பட்டது. ஐக்கிய மாகாணத்தில் பல கிராமங்கள் கிராம சமுதாயத்திற்குச் சொந்தமாக இருந்தன. இங்கே கம்பெனியார் இச்சமுதாய உரிமையை ஒப்புக் கொண்டு, நிலவரி செலுத்தும் பொறுப்பைச் சமுதாயத்தின் மீதும், ஒவ்வொரு கிராமவாசியின் மீதும் ஏற்றினர். மேலும் நிலவரித் தொகை தற்காலிகமாகவே தீர்மானிக்கப்பட்டது. இவ்வேற்பாட்டுக்கு மகல்வாரி முறை என்று பெயர். சில மாறுதல்களுடன் இதே முறை பஞ்சாபிலும் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. மத்திய மாகாணங்களில் ஒவ்வொரு கிராமத்திலிருந்த குடியானவர் தங்களால் பயிரிடப்படும் நிலத்தின்மேல் உரிமை கொண்டாடினர். மேலும் இங்கு மகாராஷ்டிரர்கள் ஆட்சியில் குடியானவர்களிடமிருந்து வரி வசூல் செய்து அரசாங்கத்திற்குச் செலுத்திவந்த நடுவர்கள் பலர் இருந்தனர். இவர்களுக்குப் பட்டேல்கள் அல்லது மல்குசார்கள் என்று பெயர். இவர்களையே நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக்கி, வரி செலுத்தும் பொறுப்பை இவர்கள் மீது ஏற்றினர். இவ்விடத்திலும் தற்காலிகத் தீர்வைதான் போடப்பட்டது. இது தவிர ஐக்கிய மாகாணம், பஞ்சாப், வங்காளம், பம்பாய் முதலிய மாகாணங்களில் சிற்சில பகுதிகளில் இருந்து வந்த ஜமீன்தார்களோடு தாற்காலிகத் தீர்வை ஏற்பாடும் செய்யப்பட்டது. இம்மாதிரி இந்தியாவில் பற்பல நிலத்தீர்வை முறைகள் அமலுக்குக் கொண்டு வரப்பட்டன. பொதுவாக இவைகளைச் சாசுவத ஜமீன் ஏற்பாடு என்றும், தாற்காலிக ஜமீன் ஏற்பாடு என்றும், ரயத்துவாரி தீர்வை ஏற்பாடு என்றும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் அரசாங்கத்தின் உரிமை என்னவென்று பார்க்கலாம். இந்து, முஸ்லீம் ஆட்சியில் அரசாங்கத்-<noinclude></noinclude>
ap5fzd9bbza66j89ivqtjvroeja44pt
பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/756
250
445895
1433627
1418273
2022-07-20T17:12:08Z
Fathima Shaila
6101
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Nethania Shalom" /><b>{{rh|இந்தியா|691|இந்தியா}}</b></noinclude>தார் நிலத்திற்குச் சொந்த உரிமை கொண்டாடவில்லை. ஆகையால் ஆங்கிலேய அரசாங்கத்திற்குச் சட்டப்படி இவ்வுரிமை இல்லை. ஆனால் வரி விசாரணைக் கமிட்டி கூறியபடி இந்திய அரசாங்கத்தார் தங்களுடைய விசேஷ அதிகாரத்தினால் நில உரிமைகளைச் சிலருக்கு அளித்தும். சிலர் கொண்டாடி வந்த உரிமைகளை அனுமதித்தும் வந்தனர். ஆனால் புறம்போக்கு நிலங்களையும், கனிச்சுரங் கங்களையும், ஆறு, ஏரித் தண்ணீரையும் தங்களுக்கே சொந்தமென்று வைத்துக்கொண்டிருக்கின் றனர். மேலும் சில சந்தர்ப்பங்களில் நிலத்தைத் தங்கள் விருப் பம்போல் வினியோகிக்கும் உரிமையையும் பறிமுதல் செய்யும் உரிமையையும் வைத்துக்கொண்டிருக்கின் றனர். பொதுவாக ஜமீன்தார்களுக்கும் ரயத்துக்களுக் கும் நிலத்தீர்வை செலுத்திக் கொண்டிருக்கும்வரை, நிலச் சொந்தம் உண்டு. ஜமீன் திட்டத்தில் முதன் முதலில் குடிகளின் உரிமைகளைப் பற்றி யாதும் கூற வில்லை. பிறகு ஜமீன் தார்களுக்கு விசேஷ அதிகாரம் கொடுக்கப்பட்டது. அதன் பயனாகப் பயிரிடும் குடி. கள் பல கஷ்டங்களுக்கு உள்ளாயினர். 1859-ல் குடி வாரச் சட்டம் ஒன்று பிறப்பித்தனர். இதனால் வாரத்தை அதிகப்படுத்தவோ, குடிகளை நிலத்தி லிருந்து வெளிப்படுத்தவோ ஜமீன்தார்களுக்கு இருந்த அதிகாரம் குறைக்கப்பட்டது. 1885-ல் குடிவாரச் சட்டத்தின்படி குடிகளுக்கப் பல உரிமைகள் கொடுக் கப்பட்டன. இதுவே இந்தியாவில் குடிவாரச் சீர்திருத் தங்களுக்கு முதற்படியாரும். 1937லிருந்து கிசான் இயக்கங்களின் பயனாகப் பல மாகாணங்களில் குடி களின் உரிமைகளைப் பாதுகாக்கப் பல சட்டங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவைகளின் மூலம் நில வாரம் (Rent) குறைக்கப்படுகிறது. குடிகளை நிலத்தி லிருந்து வெளியேற்றுவது தடுக்கப்படுகிறது. குடி களுக்கு நிலத்தில் கிணறுகள் வெட்டிக்கொள்வதற்கும் வீடுகள் கட்டிக் கொள்வதற்கும் உரிமைகள் அளிக்கப் படுகின்றன. மேலும் நில வார நிலுவைமீது அதிக வட்டி வாங்கவும் முடியாது. குடிவாரப் பாத்தியத்தைப் பிறருக்கு மாற்றிக் கொடுக்கவும் இயலும்.
1938-ல் வங்க அரசாங்கம் சர் பிரான்சிஸ் புளொடு (Sir Francis Floud) தலைமையின்கீழ் ஒரு நிலத் தீர்வைக் கமிஷன் நியமித்தது. நிலவரித் திட்டங்களை யும், முக்கியமாகச் சாசுவத நிலவரி ஏற்பாட்டையும் பரிசீலனை செய்து, அபிவிருத்திக்கு ஏற்ற ஆலோசனை கூறுவது இதன் வேலை. 1940-ல் இக்கமிஷன் வெளி யிட்ட அறிக்கையில் சாசுவத நிலவரி ஏற்பாட்டை நீக்க வேண்டுமென்றும், ரயத்துவாரி முறையை நடை முறைக்குக் கொண்டுவர வேண்டுமென்றும் சிபார்சு செய்யப்பட்டது. இதன் பயனாகத் தற்காலம் பல மாகாணங்களில்- ஜமீன் தாரி முறையை அறவே ஒழிக்கச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
வேளாண்மை வரலாறு: பத்தொன்பதாம் நூற் றாண்டின் இடையிலிருந்து இந்திய வேளாண்மையில் புரட்சிகரமான ஒரு மாறுதல் ஏற்பட்டது. இந்திய விவசாயிகள் கைத்தொழில்களுக்கு வேண்டிய கச்சாப் பொருள்களை மேலும் மேலும் அதிகமாக உண்டாக்கத் தலைப்பட்டனர். மேலும் அதுவரை உள்நாட்டுத் தேவைக்கென்றே செய்யப்பட்டு வந்த வேளாண்மை இப்பொழுது அன்னிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய் வதற்காக விசேடமாகச் செய்யப்பட்டு வந்தது. அரிசி, கோதுமை, பருத்தி, சணல்,எண்ணெய் வித்துக்கள் முதலியன கிராமங்களிலிருந்து அன்னிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இம் மாறுதலுக்குப் பல காரணங்கள் உண்டு. கம்பெனியார் இங்கிலாந்தின்
தொழிற்சாலைகளுக்கு வேண்டிய கச்சாப் பொருள்களை யும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை யும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்து, இந்தியா வுக்கு இங்கிலாந்திலிருந்து உற்பத்திப் பொருள்களை இறக்குமதி செய்வதையே கொள்கையாகக்கொண்டு, தானியங்களையும், கச்சாப் பொருள்களையும் விளைவிக்க வும் ஏற்றுமதி செய்யவும் ஆதரவளித்தனர். மேலும் சாலைகள், இருப்புப் பாதைகள், நீராவிக்கப்பல்கள் முதலிய போக்குவரத்துச் சாதனங்களின் அபிவிருத்தியி னாலும், சூயெஸ் கால்வாயின் திறப்பினாலும் இந்தியாவி லிருந்து விளைபொருள்களை ஏற்றுமதி செய்தல் எளி தாயிற்று. கிராமங்களில் பணப் பழக்கம் ஏற்பட்டு, நில வாரம்,கூலி, வட்டி முதலியன பணமாகக் கொடுக்க வேண்டி வந்ததால் குடியானவர் தங்களுடைய பொருள்களை விற்றுப் பணமாக்க வேண்டியதாயிற்று. இது தவிர அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப்போரின் காரணமாக அந்நாட்டிலிருந்து இங்கிலாந்திற்குப் பருத்தி ஏற்றுமதி குறைந்தது. ஆகவே, இங்கிலாந்தில் இந்தியப் பருத்திக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. விவசா யப் பொருள்களுக்கு அதிகவிலை கிட்டியது. ஆனால் 1870 லிருந்து 1880 வரை அடுத்தடுத்துப் பல பஞ்சங்கள் ஏற்பட்டதாலும், பருத்தி விலை குறைந்ததாலும், வரிச் மிகவும் ஏறினதாலும் குடியானவர் துன்பங் களுக்கு ஆளாயினர். சுமை
1870-ல் அரசாங்கத்தார் முதன் முதலில், இம்பீரியல் விவசாய இலாகா ஏற்படுத்தினர். மாகாணங்களிலும் விவசாய இலாகாக்கள் நிறுவப்பட்டன. வேளாண் மைக்குரிய புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதும், விசாரணை களைச் செய்வதும், பஞ்ச காலங்களில் நிவாரண வேலை செய்வதும். பொதுவாக வேளாண்மை முன்னேற்றத் திற்கான வழிகளைத் தேடுவதும் இந்த இலாகாக்களின் வேலைகளாகும். குடியானவரின் கடன் தொந்தரவை நீக்க 1879-ல் தக்காண விவசாயிகள் உதவிச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
1880 முதல் 1895 வரை பொதுவாக விவசாயிகளுக்கு நல்ல காலமென்று கூறலாம். ஆனால் 1895-ல் கஷ்ட காலம் தொடங்கியது. இரண்டு பஞ்சங்கள் உண்டாகி, மக்களுக்கும் கால்நடைகளுக்கும் மிகுந்த சேதம் ஏற் பட்டுப் பயிர்த்தொழிலுக்கும் கச்சாப் பொருள்கள் ஏற்றுமதிக்கும் குறைவு ஏற்பட்டது. 1883-ல் நில அபி விருத்திச் சட்டமும், 1884-ல் விவசாயிகள் கடன் சட்ட மும் அமலுக்கு வந்தன. அரசாங்கத்தாரால் குடியான வருக்கு நிலத்தை வளப்படுத்தவும், மாடுகள் விதைகள் வாங்கவும் குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்கப் பட்டு, நாளடைவில் சிறுகச் சிறுக அத்தொகை திரும் பப்பெற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் முதன்முதலில் வேளாண்மை முறைகளைப்பற்றி ஆராய்ந்து, முன்னேற்றத்துக்கான வழிகளை அறிய முயற்சியெடுக் கப்பட்டது. இதற்கு டாக்டர் வோயல்கர் இங்கிலாந்தி லிருந்து வரவழைக்கப்பட்டார். இவரது அறிக்கை யின் பயனாக வேளாண்மை, காடுகள் முதலியவைகளைப் பற்றிய கல்வியைக் கற்பிப்பதற்கு ஏற்பாடுகள் செய் யப்பட்டன. மற்றும் மக்களுக்கு வேளாண்மையில் புது முறைகள், புது உழவுக் கருவிகள் இவைகளின் நன்மைகளை நேரில் காட்ட ஆராய்ச்சிப் பண்ணைகள் நடத்தப்பட்டு வந்தன. சாதிக் குதிரைகள், ஆடுமாடு கள் இன அபிவிருத்தியின்பொருட்டுக் கண்காட்சி களும், பொலிகாளைப் பண்ணைகளும் நடத்தப்பட்டு வந்தன. இந்திய
1903-ல் பூசா என்ற இடத்தில் ஆராய்ச்சிக்குத் தேவையான நிபுணர்களையும் வசதிகளையும் கொண்ட<noinclude></noinclude>
gnwpvuzhxkyacjdgqetgois8cra7llr
1433735
1433627
2022-07-21T10:37:51Z
Fathima Shaila
6101
/* Proofread */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Fathima Shaila" /><b>{{rh|இந்தியா|691|இந்தியா}}</b></noinclude>தார் நிலத்திற்குச் சொந்த உரிமை கொண்டாடவில்லை. ஆகையால் ஆங்கிலேய அரசாங்கத்திற்குச் சட்டப்படி இவ்வுரிமை இல்லை. ஆனால் வரி விசாரணைக் கமிட்டி கூறியபடி இந்திய அரசாங்கத்தார் தங்களுடைய விசேஷ அதிகாரத்தினால் நில உரிமைகளைச் சிலருக்கு அளித்தும், சிலர் கொண்டாடி வந்த உரிமைகளை அனுமதித்தும் வந்தனர். ஆனால் புறம்போக்கு நிலங்களையும், கனிச்சுரங்கங்களையும், ஆறு, ஏரித் தண்ணீரையும் தங்களுக்கே சொந்தமென்று வைத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் சில சந்தர்ப்பங்களில் நிலத்தைத் தங்கள் விருப்பம்போல் வினியோகிக்கும் உரிமையையும் பறிமுதல் செய்யும் உரிமையையும் வைத்துக்கொண்டிருக்கின்றனர். பொதுவாக ஜமீன்தார்களுக்கும் ரயத்துக்களுக்கும் நிலத்தீர்வை செலுத்திக் கொண்டிருக்கும்வரை, நிலச் சொந்தம் உண்டு. ஜமீன் திட்டத்தில் முதன் முதலில் குடிகளின் உரிமைகளைப் பற்றி யாதும் கூறவில்லை. பிறகு ஜமீன்தார்களுக்கு விசேஷ அதிகாரம் கொடுக்கப்பட்டது. அதன் பயனாகப் பயிரிடும் குடிகள் பல கஷ்டங்களுக்கு உள்ளாயினர். 1859-ல் குடிவாரச் சட்டம் ஒன்று பிறப்பித்தனர். இதனால் வாரத்தை அதிகப்படுத்தவோ, குடிகளை நிலத்திலிருந்து வெளிப்படுத்தவோ ஜமீன்தார்களுக்கு இருந்த அதிகாரம் குறைக்கப்பட்டது. 1885-ல் குடிவாரச் சட்டத்தின்படி குடிகளுக்கப் பல உரிமைகள் கொடுக்கப்பட்டன. இதுவே இந்தியாவில் குடிவாரச் சீர்திருத்தங்களுக்கு முதற்படியாகும். 1937லிருந்து கிசான் இயக்கங்களின் பயனாகப் பல மாகாணங்களில் குடிகளின் உரிமைகளைப் பாதுகாக்கப் பல சட்டங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவைகளின் மூலம் நில வாரம் (Rent) குறைக்கப்படுகிறது. குடிகளை நிலத்திலிருந்து வெளியேற்றுவது தடுக்கப்படுகிறது. குடிகளுக்கு நிலத்தில் கிணறுகள் வெட்டிக்கொள்வதற்கும் வீடுகள் கட்டிக் கொள்வதற்கும் உரிமைகள் அளிக்கப்படுகின்றன. மேலும் நில வார நிலுவைமீது அதிக வட்டி வாங்கவும் முடியாது. குடிவாரப் பாத்தியத்தைப் பிறருக்கு மாற்றிக் கொடுக்கவும் இயலும்.
1938-ல் வங்க அரசாங்கம் சர் பிரான்சிஸ் புளொடு (Sir Francis Floud) தலைமையின்கீழ் ஒரு நிலத் தீர்வைக் கமிஷன் நியமித்தது. நிலவரித் திட்டங்களையும், முக்கியமாகச் சாசுவத நிலவரி ஏற்பாட்டையும் பரிசீலனை செய்து, அபிவிருத்திக்கு ஏற்ற ஆலோசனை கூறுவது இதன் வேலை. 1940-ல் இக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் சாசுவத நிலவரி ஏற்பாட்டை நீக்க வேண்டுமென்றும், ரயத்துவாரி முறையை நடை முறைக்குக் கொண்டுவர வேண்டுமென்றும் சிபார்சு செய்யப்பட்டது. இதன் பயனாகத் தற்காலம் பல மாகாணங்களில் ஜமீன்தாரி முறையை அறவே ஒழிக்கச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
{{larger|வேளாண்மை வரலாறு:}} பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையிலிருந்து இந்திய வேளாண்மையில் புரட்சிகரமான ஒரு மாறுதல் ஏற்பட்டது. இந்திய விவசாயிகள் கைத்தொழில்களுக்கு வேண்டிய கச்சாப் பொருள்களை மேலும் மேலும் அதிகமாக உண்டாக்கத் தலைப்பட்டனர். மேலும் அதுவரை உள்நாட்டுத் தேவைக்கென்றே செய்யப்பட்டு வந்த வேளாண்மை இப்பொழுது அன்னிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக விசேடமாகச் செய்யப்பட்டு வந்தது. அரிசி, கோதுமை, பருத்தி, சணல்,எண்ணெய் வித்துக்கள் முதலியன கிராமங்களிலிருந்து அன்னிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இம் மாறுதலுக்குப் பல காரணங்கள் உண்டு. கம்பெனியார் இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய கச்சாப் பொருள்களையும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்து, இந்தியாவுக்கு இங்கிலாந்திலிருந்து உற்பத்திப் பொருள்களை இறக்குமதி செய்வதையே கொள்கையாகக்கொண்டு, தானியங்களையும், கச்சாப் பொருள்களையும் விளைவிக்கவும் ஏற்றுமதி செய்யவும் ஆதரவளித்தனர். மேலும் சாலைகள், இருப்புப் பாதைகள், நீராவிக்கப்பல்கள் முதலிய போக்குவரத்துச் சாதனங்களின் அபிவிருத்தியினாலும், சூயெஸ் கால்வாயின் திறப்பினாலும் இந்தியாவிலிருந்து விளைபொருள்களை ஏற்றுமதி செய்தல் எளிதாயிற்று. கிராமங்களில் பணப் பழக்கம் ஏற்பட்டு, நில வாரம், கூலி, வட்டி முதலியன பணமாகக் கொடுக்க வேண்டி வந்ததால் குடியானவர் தங்களுடைய பொருள்களை விற்றுப் பணமாக்க வேண்டியதாயிற்று. இது தவிர அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப்போரின் காரணமாக அந்நாட்டிலிருந்து இங்கிலாந்திற்குப் பருத்தி ஏற்றுமதி குறைந்தது. ஆகவே, இங்கிலாந்தில் இந்தியப் பருத்திக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. விவசாயப் பொருள்களுக்கு அதிகவிலை கிட்டியது. ஆனால் 1870 லிருந்து 1880 வரை அடுத்தடுத்துப் பல பஞ்சங்கள் ஏற்பட்டதாலும், பருத்தி விலை குறைந்ததாலும், வரிச் மிகவும் ஏறினதாலும் குடியானவர் துன்பங்களுக்கு ஆளாயினர். சுமை
1870-ல் அரசாங்கத்தார் முதன் முதலில், இம்பீரியல் விவசாய இலாகா ஏற்படுத்தினர். மாகாணங்களிலும் விவசாய இலாகாக்கள் நிறுவப்பட்டன. வேளாண்மைக்குரிய புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதும், விசாரணைகளைச் செய்வதும், பஞ்ச காலங்களில் நிவாரண வேலை செய்வதும். பொதுவாக வேளாண்மை முன்னேற்றத்திற்கான வழிகளைத் தேடுவதும் இந்த இலாகாக்களின் வேலைகளாகும். குடியானவரின் கடன் தொந்தரவை நீக்க 1879-ல் தக்காண விவசாயிகள் உதவிச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
1880 முதல் 1895 வரை பொதுவாக விவசாயிகளுக்கு நல்ல காலமென்று கூறலாம். ஆனால் 1895-ல் கஷ்ட காலம் தொடங்கியது. இரண்டு பஞ்சங்கள் உண்டாகி, மக்களுக்கும் கால்நடைகளுக்கும் மிகுந்த சேதம் ஏற்பட்டுப் பயிர்த்தொழிலுக்கும் கச்சாப் பொருள்கள் ஏற்றுமதிக்கும் குறைவு ஏற்பட்டது. 1883-ல் நில அபிவிருத்திச் சட்டமும், 1884-ல் விவசாயிகள் கடன் சட்டமும் அமலுக்கு வந்தன. அரசாங்கத்தாரால் குடியான வருக்கு நிலத்தை வளப்படுத்தவும், மாடுகள் விதைகள் வாங்கவும் குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்கப்பட்டு, நாளடைவில் சிறுகச் சிறுக அத்தொகை திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் முதன்முதலில் வேளாண்மை முறைகளைப்பற்றி ஆராய்ந்து, முன்னேற்றத்துக்கான வழிகளை அறிய முயற்சியெடுக்கப்பட்டது. இதற்கு டாக்டர் வோயல்கர் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டார். இவரது அறிக்கையின் பயனாக வேளாண்மை, காடுகள் முதலியவைகளைப் பற்றிய கல்வியைக் கற்பிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மற்றும் மக்களுக்கு வேளாண்மையில் புது முறைகள், புது உழவுக் கருவிகள் இவைகளின் நன்மைகளை நேரில் காட்ட ஆராய்ச்சிப் பண்ணைகள் நடத்தப்பட்டு வந்தன. சாதிக் குதிரைகள், ஆடுமாடுகள் இன அபிவிருத்தியின்பொருட்டுக் கண்காட்சிகளும், பொலிகாளைப் பண்ணைகளும் நடத்தப்பட்டு வந்தன.
1903-ல் பூசா என்ற இடத்தில் ஆராய்ச்சிக்குத் தேவையான நிபுணர்களையும் வசதிகளையும் கொண்ட<noinclude></noinclude>
hxvhpqpvkt9b3euns2393r66ymq6uzb
பக்கம்:தேவநேயம் 1.pdf/3
250
450910
1433703
1432741
2022-07-21T07:23:52Z
Mythily Balakrishnan
11301
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Info-farmer" /></noinclude> நூற்குறிப்பு
நூற்பெயர் : தேவநேயம் - 1
தொகுப்பாசிரியர் :புலவர். இரா. இளங்குமரன்
பதிப்பாளர் :கோ. இளவழகன்
முதற்பதிப்பு : 2004
மறுபதிப்பு : 2015
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
பக்கம் : 16 + 312 = 328
படிகள் : 1000
விலை : உரு. 305/-
நூலாக்கம் : பாவாணர் கணினி
தியாகராயர் நகர்,சென்னை17.
அட்டை வடிவமைப்பு : தமிழ்க்குமரன்
அச்சு : வெங்கடேசுவரா
ஆப்செட் பிரிண்டர்
இராயப்பேட்டை, சென்னை - 14.
கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
வெளியீடு
தமிழ்மண் பதிப்பகம்
2, சிங்காராவேலர் தெரு
தியாகராயர் நகர், சென்னை -600 017
தொ.பே: 24339030<noinclude></noinclude>
qp0bre98g0ze6hq8z0s3ie9gn1ujwcf
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/3
250
450917
1433701
1430964
2022-07-21T07:19:38Z
Pollachi Vignesh
11381
திருத்தம்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Joshua-timothy-J" /></noinclude>________________
579126
நூல் விவரப்பட்டியல்
நூலின் பெயர் - தந்தை பெரியார்
- கவிஞர் கருணானந்தம்
முதல் பதிப்பு
: 2012
அளவு -
: 1/8 டெம்மி
எழுத்து
: 12.5 புள்ளி
பக்கம்
+ 704
நூல் கட்டமைப்பு
* சாதாரண கட்டமைப்பு
நூலாக்கம்
: ஹர்ஷவர்தினி கிராப்பிக்ஸ், சென்னை .
அச்சிட்டோர்
-: அம்சா ஆப்செட், சென்னை.
வெளியீடு
: Tejashwini Book world
A.P.No.792, 59th Street, 10th Sector. K.K.Nagar, Chennai - 600 078.
விலை : ரூ. 530/<noinclude></noinclude>
dgdm4o2m93a31l9g115ifrcqnsw36v4
பக்கம்:தேவநேயம் 1.pdf/18
250
451084
1433711
1431199
2022-07-21T08:22:04Z
Info-farmer
232
எழுத்துப்பிழைகள் சிறிது களையப்பட்டன
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>தேவநேயம்-உருவாக்கம்
‘தேவநேயஉருவாக்கம்அவர்இயற்iகஎய்தியநள்தொட்டேஎன்னுள்அரும்பியது. அஃது அவர் வரலாற்றிலும், அவர் பெயரால் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனஅறக்கட்டளைப்பொழிவாகியதேவநேயப்பாவணரின்சொல்லாய்வுகள் என்னும்bபாழிவு நூலிலும்வெளிப்பட்டது. அதன் பின்னர்த் தமிழ்நாட்டு அரசு, பாவாணர் அகரமுதலித் திட்ட மேலாய்வுக்கென அமைத்த ஐவர் குழுவின் அறிக்கையிலும் வலியுறுத்தப்பட்டது. தேவநேய உருவாக்க முன்வரைவுகள் இவை.
தேவநேய உருவாக்க வகையாக அவ்வரைவுகளில் இடம் பெற்ற குறிப்புகள் வருமாறு:
தேவநேயர் படைப்பாக்கங்களை எல்லாம் ஒருங்கு திரட்டி ஓரடைவு செய்தால் அது தேவநேயமாகத் திகழும். ஆசிரியர் தொல்காப்பியனார் தொல்காப்பியத்தால் நம்முடன் ஒன்றி உறைந்து உடனாகித் திகழுமாப் போலத் தேவநேயத்தால் தேவநேய ரும் நம்மொடும் ஒன்றி உறைந்து உடனாகித் திகழ்வார்.
தேவநேயரின் அகரமுதலி அவராலேயே முற்றுற முடிக்கப் பெற்றிருப்பின், மற்றொன்று வேண்டா என்னும் நிலையில் அஃதொன்றே தேவநேயமாகத் திகழ்ந்திருக்கும்! அதனைப் பெரும்பேறு தமிழ்மண்ணுக்கு வாய்க்காமையால் கிடைத்த - கிடைக்கின்ற - அளவிலேனும் தேவநேயத்தை உருவாக்கி விடுதல் வேண்டும். அதனை உருவாக்குதல் எவ்வண்ணம்?
தேவநேயப் படைப்பெல்லாம் சொல்லாய்வாகவே வெளிப் பட்டவை. அவர், எப்பொருளை எடுத்துக் கொண்டு பேசினாலும் எழுதினாலும் அவர்க்கு முந்துற நிற்பது சொல்லாய்வே! சொல் லாய்வு இல்லாத உரையாட்டும் கூட அவர்மாட்டு அமைந்தது இல்லை! ஆகலின், அவர்தம் படைப்புகளில் உள்ள சொல்லாய்வுக் குறிப்புகளை எல்லாம் அகர முறையில் தொகுக்க வேண்டும். அவர் வேர்கண்ட சொற்களுக்கு வேர், விளக்கம் கண்ட சொற்களுக்கு விளக்கம், ஒப்புமை கண்ட சொற்களுக்கு ஒப்புமை, பொருள் மட்டும் கூறிய சொற்களுக்குப் பொருள், சொல்லாக மட்டும் சொல்லியிருப்பினும் அச்சொல் ஆகிய எல்லாவற்றையும் தொகுத்து அகர முறையில் அமைத்தல் வேண்டும்.<noinclude></noinclude>
stztjvq4nwxcjrkm0a3ijki10yw7h4p
பக்கம்:தேவநேயம் 1.pdf/19
250
451085
1433712
1431200
2022-07-21T08:24:02Z
Info-farmer
232
சில பிழைகள் களையப்பட்டன
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>
வடமொழியைத் தென்மொழி ஆக்கமாக்கிய தாயினும் சரி, ஆங்கிலத்தைத் தமிழாகப் பெயர்த்ததாயினும் சரி, புதிதாகப் படைத்த கலைச் சொல்லாயினும் சரி, அவ்வகரமுதலியில் விடுபாடு இல்லாமல் இணைத்துவிடவேண்டும். அவ்வாறு அமைந்துவிடு மானால் சொல்லாய்வாளர்க்குத் தேடிவைத்த திருவாகத் திகழ்தல் உறுதியாம். அவர்வழியில் ஆயத்தலைப் படுவார்க்குக் கிடைத்தற் கரிய கருவிநூலாம். அத்தலைப்பாடே தலைப்பாடாக வேறெவர் ஊன்றினாலும் சரி, ஊன்றா தொழியினும் சரி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்கக மேனும் முந்து நிற்றல் வேண்டும். அது தலையாய கடமையாம்.
திருவாசகம் இன்றில்லையேல் சாழல், தெள்ளேணம் முதலிய சொற்களை வேறெங்குக் காணமுடியும்? என ஏங்குபவர் பாவாணர். ஆயிரம் ஆயிரம் சொற்களை மணிமொழியார் தம் நூலில் படைத்திருந்தாலும் சாழலும் தெள்ளேணமும் தனித்துயர்ந்து தலைதூக்கி நிற்பானேன்? அவ்வாட்சி பிறர்மாட்டுக் காண இயலாப் பெற்றியவை. பத்தோடு பதினொன்று என்று இல்லாமல், அவருக்கே உரிமை பூண்ட ஆட்சிச் சொற்கள் அவை. ஆதலால் அவையே மணிவாசகனார்க்குத் தனிவீறும் தனிப்பேறும் அருளிக் கொண் டுள்ளனவாம்.
சாழலும் தெள்ளேணமும் நினைவில் வருவார்க்கு, இளங்கோ வடிகளோ, திருத்தக்கதேவரோ, தேவாரம் பாடிய மூவரோ பிறர்பிறரோ தோன்றாமல் மணிவாசகப் பெருந்தகையே தண்ணா ரும் எழில்முகம் காட்ட வாய்க்கின்றதாம். அவ்வாறு பாவாணர்க்கே உரிய-பாவாணரையே அடையாளம் காட்டக் கூடிய-சொற்கள் ஒன்றா? இரண்டா?
பண்டாரகரா1 பண்டுவரா2 பாவாணரை நினைவு கூராமல் முடியுமா?
குளம்பி3 வேண்டுமா? கொழுந்துநீர்4 வேண்டுமா? என்று வினவுவாரிடைப் பாவாணர் அன்றோ மென்னகை புரிகிறார்.
நான் அணியமாக5 இருந்தேன்; நீங்கள் இப்பொழுது வந்தது ஏந்தாக6 இருந்தது என்பாரிடைப் பாவாணர் இரண்டறக் கலந்து திகழ்கிறார்.
இந்த மொட்டான்7தான் அந்த மேடைக்கு8 அமைவாக இருக்கும் என்பவர் இன்றமிழ் உள்ளத்தில் பாவாணர் வீற்றிருக் கிறார்.
பழக்கூட்டும்9 பனிக்கூழும்10 எனக்கு ஏற்றுவருவதில்லை வெதுப்பமாகப் பருக வேண்டும் என்பார் மாட்டுப் பழக்கூட்டும் பனிக் கூழுமாக அல்லவோ பாவாணர் குளிர்கிறார்.<noinclude></noinclude>
nql6wqfyj2ur756zbfob16449zyuiw8
பக்கம்:தேவநேயம் 1.pdf/143
250
451223
1433707
1431496
2022-07-21T07:58:07Z
Info-farmer
232
{{rh|126|தேவநேயம்|}}{{rule}}
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Neyakkoo" /></noinclude>{{rh|126|தேவநேயம்|}}{{rule}}<noinclude></noinclude>
9mrjy3zhephcabnm010438gra9xt522
பக்கம்:தேவநேயம் 1.pdf/144
250
451224
1433708
1431629
2022-07-21T08:03:34Z
Info-farmer
232
பெட்டி
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|| பாவாணர்|127}}</noinclude>{{dhr|10em}}
{{box|{{center|{{Xx-larger|<b>தேவநேயம்</b>}}}}}}
{{dhr|10em}}<noinclude></noinclude>
8j8qu275rtyajy6mgo9dx390wi3qo2i
1433710
1433708
2022-07-21T08:05:37Z
Info-farmer
232
{{box|
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Info-farmer" />{{rh|| பாவாணர்|127}}{{rule}}</noinclude>{{dhr|10em}}
{{box|{{box|{{center|{{Xx-larger|<b>தேவநேயம்</b>}}}}}}}}
{{dhr|10em}}<noinclude></noinclude>
4aqhbfptf6xnat5cfnz6c71qvk90ha1
பக்கம்:தேவநேயம் 1.pdf/145
250
451225
1433709
1431631
2022-07-21T08:04:10Z
Info-farmer
232
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Neyakkoo" /></noinclude>
{{rh|128|தேவநேயம்|}}{{rule}}<noinclude></noinclude>
hesj9811decf1f0k6wdzf9sut1nht2y
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/26
250
452254
1433700
1433430
2022-07-21T05:37:23Z
TVA ARUN
3777
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>{{Css image crop
|Image = சூர்ய_நமஸ்காரம்,_1928.pdf
|Page = 26
|bSize = 369
|cWidth = 134
|cHeight = 206
|oTop = 194
|oLeft = 128
|Location = center
|Description =
}}<noinclude></noinclude>
6qo6dfgdplx2yl7at8d0s85be5zt518
பக்கம்:சூர்ய நமஸ்காரம், 1928.pdf/1
250
452257
1433699
1433516
2022-07-21T04:38:26Z
TVA ARUN
3777
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="TVA ARUN" /></noinclude>{{border|maxwidth=450px|bstyle=double|bthickness=4px|align=center|padding=20px|
{{c|
மைசூர் அரசாங்கத்தாரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது
{{rule|25em|align=}}
“ஓம் சூரிய ஆத்மா ஜகதஸ் தஸ்துஷஸ்ச்ச.”
{{xx-larger|<b>சூர்ய நமஸ்காரம்</b>}}
அல்லது
{{larger|சூர்ய உபாசவின}}
(தேகப்பயிற்சி)
ஆரோக்கியம், வல்லமை, தீர்க்காயுள் இவற்றைத் தரத்தக்கது.
{{dhr|4em}}
ஒளந்து சமஸ்தானாதிபதியான
{{larger|<b>ஸ்ரீமான் பாலாசாஹேப் பந்து பிரதிநிதி பீ.ஏ.,</b>}}
அவர்களால்
ஆங்கிலேய பாஷையில் எழுதப்பட்டு,
பங்களூர், மல்லேஸ்வரத்திலிருக்கும்
<b>பண்டிதர். என். செங்கல்வராயன், எம். ஆர். ஏ. எஸ்.,</b>
அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
{{rule|5em|align=}}
பங்களூர், மல்லேஸ்வரத்திலிருக்கும்
எஸ். என். சிம்ஹ வெளியிட்டது.
{{rule|5em|align=}}
<b>1928.</b>
காபிரைட் ரிசர்வ்ட் ] {{gap2}} [விலை ரூ.1--0-0
{{dhr|2em}}
}}}}
<noinclude></noinclude>
jzwxpf0u3tluysb2clx15hulsdo3z20
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/131
250
452317
1433631
2022-07-21T02:33:52Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
130 பத்திரிகைக்கு மீண்டும் ஜாமீன் கேட்கப்பட்டது. நான் ஏன் நாஸ்திகன் ஆனேன் என்ற புத்தகமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது புரட்சி வீரர் பகத்சிங் அவர்களால் தமது தந்தைக்குக் கடிதமாக எழுதப்பட்டுத், தோழர் ப. ஜீவானந்தம் தமிழில் மொழிபெயர்த்தது. இதனை எழுதிய தற்காக ஜீவாவும், உண்மை விளக்கம் அச்சகத்தில் பதிப்பித்ததற்காக ஈ. வெ. கிருஷ்ணசாமியும் கைது செய்யப்பட்டனர்.
ஒரு காலகட்டத்தில் பெரியார், அரசுக்குத் தம்மீதும இயக்கத்தின் மீதும் தப்பபிப்பிராயம் ஏற்பட்டதை அறிந்து, அதனைப் போக்க, ஒரு ராஜி பேச நேரிட்டது. இது கேவலமல்ல என்ற எண்ணந்தான் பெரியாருக்கு. அதற்கு ஆதரவாகப் பெரியார் என்ன எழுதினார்:- உண்மை விளக்கம் பிரஸ் பதிப்பாசிரியரான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் மீதும், காலஞ்சென்ற பகத்சிங்கால் எழுதப்பட்ட 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்?' என்ற புத்தகத்தை - முறையே பிரசுரித்ததற்காகவும், மொழி பெயர்த்ததற்காகவும், இந்தியன் பினல் கோட் 122-A செக்ஷன்படி, இராஜத்துவேஷக் குற்றம் சாட்டிக், கைதியாக்கிச் சிறையில் வைத்து. வழக்குத் தொடர்ந்திருந்தது வாசகர்கள் அறிந்திருந்ததாகும்! அவ்வழக்கு, மேற்கண்ட இருதோழர்களாலும் இராஜத்துவேஷத்தை உண்டாக்கவோ, அதைப் பிரச்சாரம் செய்யவோ எண்ணங் கொண்டு அப்புத்தகம் பிரசுரிக்கப்படவில்லை என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து, இராஜத்துவேஷம் என்று கருதத் தகுந்த காரியங்கள் பதிப்பிக்கப்பட்டுவிட்டதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதன்பேரில் - அரசாங்கத்தார் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு ஈ.வெ.கி., ப.ஜீ.. ஆகியவர்களை விடுதலை செய்து விட்டார்கள்,
இந்தப்படி இந்த இரண்டு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலை அடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்லர் என்பதையும், பெரும்பான்மையான அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ளு கிறேன். இந்த மன்னிப்பு எழுதிக் கொடுக்கப்பட்டதும், அதைச் சர்க்கார் ஏற்றுக்கொண்டதும், ஆகிய இரண்டு காரியங்களும் மிகுதியும் இந்தக் கேசையே பொறுத்தது மாத்திரமல்ல என்பது இதில் முக்கிய விஷயமாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிச் சர்க்கார் மனத்தில் எப்படியோ தப்பபிப்பிராயம் ஏற்பட்டு, எப்படியாவது அடக்கி அழித்து விடவேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள் என்பதாக, நான் கொஞ்ச நாளைக்கு முன்பே தெரிந்து கொண்டேன்!
நம் சுயமரியாதை இயக்கம் சமூகத் துறையிலுள்ள குறைகளை நிவர்த்திப்பதற்கென்றே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்ததும்,<noinclude></noinclude>
isn68hkjri2o2qt7lk6hxsyynub4ee8
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/132
250
452318
1433632
2022-07-21T02:34:29Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
131
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சர்க்கார் அதிகாரிகள் முதல் அநேக செல்வவான்களும் நமது இயக்கத்தில் கலந்து வேலை செய்து வந்ததும் எவரும் அறியாததல்ல! ஆனால், சிறிது காலம் சென்றபின், மக்களுக்குள்ள சமுதாயக் கொடுமைகள் தீரவேண்டியது எவ்வளவு அவசியமோ, அதுபோலவே, மக்களுக்குள்ள பொருளாதாரக் கொடுமையும் தீரவேண்டியது மிகவும் அவசியமென்று கருதியதால், பொருளாதார சம்பக்கமாக நாம் சிலிக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தோம். என்றாலும், அரசாங்கத்தார் தப்பபிப்பிராயத்தைக் கொண்டு, இயக்கத்தை அடக்க அடக்குமுறைப் பிரயோகம் ஆரம்பித்துவிட்டார்கள் என்று உணர்கிறேன். எனக்கு ரஷ்யாவிலிருந்து பணம் வருவதாகவும், நான் ரஷ்ய ஒற்றனென்றும் சந்தேகப்பட்டதால், எனக்கு ரஷ்யாவோடு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அதிகாரிகளிடம் விளக்க வேண்டி வந்தது.
அதனால் ஓரளவுக்கு சர்க்காருடன் ராஜி ஏற்படுத்தி கொள்ளலாம் என்கின்ற ஆசையின்மீதே, பொருளாதார விஷயத்தில் சமதர்மக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதில் சர்க்காருக்கு ஆட்சேபனை இல்லை என்றும், சாதி, மத சம்பந்தமான விஷயங்களில் வேறு சாதிக் காரர்கள் மனம் புண்படும்படியோ, அவமானம் ஏற்படும்படியோ என்று இல்லாமல், சாதி மதக் கண்டனங்கள் செய்து கொள்ளலாம் என்றும் முடிவுக்கு வந்தோம். சர்க்காரோடு இந்த மாதிரியான ஒரு சமாதான முடிவுக்கு வராதபட்சம், சர்க்காருக்கும் நமக்கும் வீண் தொந்தரவும், மனக்கசப்பும் ஏற்பட்டுத் தீரும் என்கின்ற நிலையில், மற்ற ஆதாரங்களும், முயற்சிகளும், நிலைமைகளும் இருந்ததால், நான் இந்தச் சமாதானத்துக்கு வரவேண்டியதாயிற்று. ஆகவே, இதன் பலன் என்னவானாலும், இதற்குநானே பொறுப்பாளி என்றுதான் சொல்லவேண்டும்.
சில இளைஞர்களுக்கு இது கேவலமானதாகத் தோன்றலாம். என்றாலும், நம் இயக்க சம்பந்தமாக நமது கொள்கைகளிலோ, திட்டங்களிலோ எதையும் விட்டுக் கொடுத்துச் சமாதானம் செய்து கொண்டதாக எனக்குப் படவில்லை, சுயமரியாதை இயக்கம் சட்ட வரம்புக்கு உட்பட்ட இயக்கம் அல்லவா
ஊரார் என்ன சொல்லுவார்கள், எதிரிகள் என்ன சொல்லுவார்கள் என்பதையே முக்கிய குறிப்பாய் வைத்து அதற்கு அடிமையாகி, மாற்றங்கள் செய்வதானால் மாத்திரம், அவற்றுக்கு அதிக ஆயுள் இருக்குமென்று கருகாமடியாதே தவிர, மற்றபடி உண்மையும் துணிவும் உள்ள காரியத்தில், எவருக்கும் யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்" (குடி அரசு 31.3.19:35)
அடிக்கடி அரசின் அடக்கு முறைகளுக்கு உள்ளாக நேரிட்டதால், அவவப்போது பல பத்திரிகைகளை மாற்றி மாற்றிப் பெரியார் நடத்தி வந்தார். 1933-ல் "புரட்சி" வார இதழ், 1934-ல் “பகுத்தறிவு" வார<noinclude></noinclude>
b0ioekfkqh1um10r34bmqylilcec2tf
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/133
250
452319
1433633
2022-07-21T02:34:59Z
Neyakkoo
7836
வருடல்.
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
132
இதழ், 1934-ல் “பகுத்தறிவு" நாளேடு, 1935-ல் “பகுத்தறிவு" மாத இதழ் இப்படியாகப் பலப்பல.
கருத்துச் சுரங்கமான பெரியார், தமிழ் நாட்டில் அடிப்படைக் கல்லி அகலமாகப் பரவாத காரணத்தை ஆழ்ந்து சிந்தித்து வந்தார். மனுதர்மப்படி சூத்திரன் கல்வி கற்கக் கூடாது; உடலுழைப்பு மட்டுமே செய்ய வேண்டும் என்ற சூழ்ச்சி ஒரு புறம், மக்களின் வறுமை நிலையில் அன்றாடம் வாய்க்கும் கைக்குமே போராட்டம் என்னும் நிலை இன்னொரு புறம் பாதித்தாலும், தமிழ் மொழியிலுள்ள பெருத்த குறைபாடு அதன் நெடுங்கணக்கிலுள்ள ஏராளமான எழுத்து வடிவங்களே என்பது பெரியாரின் ஆராய்ச்சி முடிவாகும். இப்போதுள்ள தமிழ் எழுத்து முறை எவ்வளவோ மாறுதல்களைக் கண்டு வந்துள்ளது என்பது, கல்வெட்டு எழுத்துகளை ஊன்றிப் பார்த்தால் விளங்கும். வீரமாமுனிவர் எனும் பெஸ்கி பாதிரியார் கடைசியாகச் சில மாற்றங்கள் செய்துள்ளார். அதே போல், உயிர் 12, ஆய்தம் 1, மெய் 18, உயிர்மெய் 216 ஆகிய இத்தனை வடிவங்களை இளம் நெஞ்சங்களில் பதிய வைப்பது என்பதற்குப் பதிலாக, இந்த எழுத்து வடிவங்களில் சிலவற்றை நாமும் குறைக்கலாமே என்று பெரியார் சிந்தித்தார். அதன் விளைவாக ணானா, றா என்பனவற்றிக்கு ணா, னா, றா என்றும்; ணொ, னொ, றொ என்பனவற்றிற்கு ணொ, னொ, றொ என்றும்; ணோ, னோ, சே என்பனவற்றிக்கு ணோ, னோ, றோ என்றும் ணே, னை, லை, ளை என்பனவற்றிற்கு ணை, னை, லை, ளை என்றும் பதின்மூன்று எழுத்து வடிவங்களை மாற்றியமைத்தார். 1935-ஆம் ஆண்டு சனவரி 13-ஆம் நாள் முதல் நடைமுறைப்படுத்தித் தமது பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் தொடர்ந்து கையாண்டு வந்தார்.
இன்றும் இதேமுறை திராவிடர்கழகத்தில் தொடர்கிறது. இன்றையத் தமிழ்நாடு அரசு இந்த முறையை அனைவரும் கையாள வேண்டுமென அரசாணையும் பிறப்பித்துள்ளது பாராட்டுக்குரியதாகும்.
தட்டச்சுச் செய்யவும், அச்சுக் கோக்கவும் இம்மாற்றம் எளிதாக இருக்கும். மேலும், தமிழில் ஐ, ஔ ஆகிய இரு உயிரெழுத்துகளும், அவற்றின்மேல் மெய் சேர்ந்த 36 எழுத்துகளும் எழுத்து வடிவத்தில் தேவையில்லை. ஒலி வடிவத்திற்கேற்ப அய் என்றும், அவ் என்றும் எழுதிக்கொள்ளலாம் என்றும் பெரியார் விளக்கியுள்ளார். உயிர் 5, மெய் 15, ஆய்தம் 1, சிறப்புக்குறி 8. ஆக 29-ல் தமிழ் எழுத்து வடிவத்தை அடக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இந்தக் காலகட்டத்தில், பெரியாரின் பொதுவுடைமைக் கருத்துகள் புதுமையாகப் புகுத்தப்பட்டதால், இயக்க மேடைகளிலும், மாநாடுகளிலும் சமுதாய சம்பந்தமான கருத்துகளைவிட, அரசியல்,<noinclude></noinclude>
4jzujmo4ltkw14k6ltiic2h53padr1b
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/134
250
452320
1433634
2022-07-21T02:35:34Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
133
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பொருளாதார சம்பந்தமான இக்கருத்துகள் பெரும்பான்மையான இடத்தைப் பெற்றன. இவற்றுக்கான விளக்க மொழிகள், தெளிவுரைகள் மிகுதியும் பேசப்பட்டன. சுயமரியாதை இயக்கம் புது முறுக்கோடும், பொலிவோடும், வலிவோடும் வளர்ந்தோங்கிவரக் கண்ட ஆதிக்க புரியினரும் பாதிக்கப் படுவோரும், சென்னையிலுள்ள நீதிக்கட்சி ஆட்சி பெரியாருக்கு ஒத்துழைப்பதால், டெல்லியிலுள்ள மத்திய பிரிட்டிஷ் ஆட்சியின் துணையை நாடி, அடக்கி ஒடுக்கப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நுனிப்புல் மேயும் அவசரக்காரர்கள், மாகாண அரசுக்கும் பெரியாருக்கும் பகை மூண்டதாகக் கதை கட்டி விட்டனர் இந்த உண்மை புரியாமல்!
இந்நிலையில் சுயமரியாதை இயக்கம் இதுவரை ஆற்றி வந்த அரும்பணிகள் பாழாகிப், பெரும் இழப்புக்கு உள்ளாகி, அடக்கி ஒடுக்கப் படுமோ என்ற அய்யுறவு, நலம் நாடுவோர் உள்ளத்தில் தோன்றியது. பெரியாரிடம் உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்லி, விளக்கமாக ஓர் அறிக்கை விடுத்திட வேண்டினர். அதற்கிசைந்து 1935- மார்ச் 10-ஆம் நாள் "குடி அரசு" இதழில் பெரியார் அறிவித்தார்:"சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கை - பார்ப்பன ஆதிக்கத்திலுள்ள காங்கிரசை ஒழிப்பது, இதற்காக மத்திய அரசுடன் ஒத்துழைப்பது; சமுதாயக் கொள்கை - சாதி மத பேதங்களை அகற்றுவது; மூடநம்பிக்கைகளை ஒழிப்பது; பொருளியல் கொள்கை சமதர்மம் ஆகும். இவைகளை மக்களிடையே பிரச்சாரம் செய்து அமுலுக்குக் கொண்டு வரும் செயல்கள் வெற்றி பெற வேண்டுமானால் என்னைப் பொறுத்த வரையில் காங்கிரஸ் ஆட்சியை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்பதாகும்."
காற்று காங்கிரசின் பக்கம் வீசத் தொடங்கியதால் பழுத்த மரத்தை நாடிய வவ்வால் மனிதர்கள் சிலர் இது பிரிட்டிஷ்காரரான அந்நியரை ஆதரிக்கும் போக்கு எனச் சாக்குக் கூறி வேற்றிடம் தேடினர். ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சுயமரியாதை இயக்கத்தின் திட்டங்களை ஏற்று நடத்த முன்வந்த நீதிக் கட்சியும்
மோசடியில் சிக்கியதாகவும் பழைமை வாதிகளின் குற்றச் சாட்டிற்கு உள்ளாயிற்று!
" எது எவ்வாறாயினும், பெரியார் - நீதிக்கட்சி உறவு, பொப்பிலி அரசர் காலத்தில் வலுப் பெற்றது சரித்திர உண்மையாகும்!
ஏறத்தாழ இந்தக் கால கட்டத்திலேயேதான் வடநாட்டில் ஆதி திராவிட சமுதாயத்தில் பிறந்த ஒப்பற்ற மேதையும் ஈடிணையற்ற போராட்ட வீரருமான டாக்டர் அம்பேத்கார் தமது தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள், சாதி இந்துக்களாலும், அரசியலில் காங்கிரஸ்<noinclude></noinclude>
dtladlcvc4hinrr2rxqoa1gdcc2ulii
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/135
250
452321
1433635
2022-07-21T02:36:03Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
134
கவிஞர் கருணானந்தம்
கட்சியாலும், தொடர்ந்து நசுக்கப் படுவது கண்டு மனங் குமுறித் தாம் இஸ்லாத்தில் சேர்ந்து விடப் போவதாக அறிவித்தார். அது தெரிந்தவுடன் பெரியார், 1935 அக்டோபர் 20-ஆம் நாளிட்டுத் "தயவு செய்து அவசரமாக முஸ்லிம் மதத்துக்கு மாறிவிடாதீர்கள்! உங்கள வர்களில் குறைந்தது பத்தாயிரம் பேரையாவது முஸ்லிம் ஆக்கிவிட்ட பிறகே நீங்களும் இஸ்லாமாகுங்கள்" என்று தந்திச் செய்தி அனுப்பினார் பெரியார்.
எப்படி அதிரடி?<noinclude></noinclude>
5af8xetdxbl6sbmm23b07shynt00bl2
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/138
250
452322
1433636
2022-07-21T02:36:38Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
137
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
10. இணைத்தார். மாகாண
ஈரோடு திட்டம் ஏற்கப்பட்டது - நீதிக் கட்சிக்கே ஆதரவு - தேர்தல் தோல்வி - எல்லாம் நன்மைக்கோ - 1935 முதல் 1937 வரை.
சென்னை மாகாணத்தில் பிரிட்டிஷாரின் இரட்டை ஆட்சி முறை, நீதிக் கட்சி அரசுப் பொறுப்பேற்ற 1920-ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்தது. 1923 முதல் 1926 வரையில் முதன் மந்திரியாயிருந்த பனகல் அரசர் காலத்தில் தான் பெரியாரின் ஆதரவோடு, இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப் பட்டது. ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு என்னும் உள்ளாட்சி அமைப்பு முறைகள் மக்களாட்சி அடிப்படையில் பனகல் அரசால்தான் நடைமுறைக்கு வந்தன. கிராமப்புற மருத்துவம், சாலை, விளக்கு, கல்வி அத்தனை வசதிகளும் செய்யப்பட்டன. அதனால் அப்போ தெல்லாம் சுயமரியாதை இயக்கத்தைப் பெற்றெடுத்து விட்ட பெரியாரின் தார்மீக ஆதரவு நீதிக் கட்சிக்குத்தானே கிடைத்து வந்தது. பின்னர் நேரடியான நீதிக்கட்சி ஆட்சியாயிராமல், ஓரளவு ஆதரவு பெற்றுச் சுயேச்சையாகச் செயல்பட்ட டாக்டர் சுப்பராயன் அமைச்சரவை தான்காண்டுகள் பதவியில் இருந்தது. -
இந்தக் காலத்தில் அமைச்சராயிருந்த சீர்காழி எஸ். முத்தையா முதலியார் முதன் முதலாகத் தமது இலாக்காவில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை அமுலாக்கி, அதன்படி அரசு உத்தி யோகங்கள் அளிக்க முன்வந்தார். பெரியார் தலைகால் புரியாத மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார். பார்ப்பனரல்லாதார் இதற்காக நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டுமானால், அவர்கள் வீட்டில் பிறக்கும் பிள்ளைகளுக்கு முத்தையா என்று பெயர் சூட்டவேண்டும் என்கிற அளவுக்குச் சென்று, பாராட்டினார். பின்னர், நீதிக்கட்சி நேரடியாக ஆட்சிக்கு வந்தது. சித்தூர் வி. முனுசாமி நாயுடு முதல் மந்திரியாகவும், சர் பி. டி. இராசன், எஸ். குமாரசாமி ரெட்டியார் மந்திரிகளாகவும் விளங்கினர். 1930 முதல் 1932- வரையில் நீதிக் கட்சியின் தலைவராகவும் இருந்த முனுசாமி நாயுடு திறமையற்ற வராகவே காணப்பட்டார். நீதிக் கட்சியிலுள்ளவர்களே அவர்மீது அருவெறுப்புற்றிருந்தனர். காரணம், அவர் சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் காட்டிக், காங்கிரஸ் மீது அனுதாபங் காட்டி வந்ததே<noinclude></noinclude>
g7a9davf0zcj1r5t9ly15y00wtq8ceq
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/139
250
452323
1433637
2022-07-21T02:37:00Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
138 1932 - அக்டோபரில் தஞ்சையில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில், அவரை அகற்றுவதற்குப் பெரியாருடைய ஆதரவை நாடினார் பொப்பிலி அரசர். சுயமரியாதை இயக்கத் தோழர்களின் பேருதவி யினால் பொப்பிலி அரசர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1932 முதல் 1936 வரையில் முதன் மந்திரிப் பதவியும் வகித்தார்; மற்ற இரு மந்திரிகளாக முந்தைய இருவருமே நீடித்தனர்.
1935-ல் நீதிக்கட்சி, பெரியார் தந்த ஈரோடு வேலைத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டது. தாம் ஒரு ஜமீன்தாராயிருந்தும், நாட்டு மக்கள் நலனில் நீதிக்கட்சிக்கு உண்மையான அக்கறை உண்டு என நிரூபித்து நிலைநாட்டிக் காண்பிக்கவே, பொப்பிலி அரசர் பெருமுயற்சி எடுத்துப் பெரியாரின் திட்டத்தை ஏற்றுக்கொண்டார். இதனால் வைதிகர்கள், பிரபுக்கள், பிரிட்டிஷ்காரர் ஆகிய முத்தரப்பினரின் எதிர்ப்பும் நீதிக்கட்சிக்குப் பரிசாகக் கிடைத்தது.
"பகுத்தறிவு" மாத இதழ் ஒன்றினைப் புத்தக வடிவில் பெரியார் துவங்கியிருந்தார். பண்டித முத்துசாமி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், ஜலகண்டபுரம் ப. கண்ணன் ஆகியோர் இதில் பயனுள்ள எழுத்துப் பணி புரிந்து வந்தனர். விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சிப் பூர்வமான கட்டுரைகள், புராண இதிகாச மோசடிகளைப், புரட்டுகளை விளக்கும் கட்டுரைகள், சமூக சீர்திருத்தக் கதைகள், கவிதைகள் இதில் இடம் பெற்றன. இது சுமார் நான்காண்டுகள் நடைபெற்று வந்தது. 1934-ஆம் ஆண்டு பாரதிதாசன் எழுதிய இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற நாடகம் சென்னையில் அரங்கேறிய போது பெரியார் தலைமை தாங்கிக் கவிஞருக்குத் தங்கப் பதக்கம் வழங்கிப் பாராட்டினார். 1946-ஆம் ஆண்டில் அண்ணா முயற்சியால் சென்னையில் கவிஞருக்குப் பணமுடிப்பு வழங்கப்பட்டது.
புதுவை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெரியாரின் கொள்கைகளை நூற்றுக்கு நூறு அப்படியே ஏற்றுக்கொண்டு அவற்றைக் கவிதை வடிவில் வெளியிட்டு வந்தார். இறுதிவரை அவர் இந்த நிலையிலிருந்து பிறழவில்லை . தேசியமும் ஆத்திகமும் கலந்தே பாடிய பாரதியின் சீடராயினும், இவர் நாத்திகரே. மிகப் பெரிய பரம்பரை ஒன்றை இவர் உருவாக்கி விட்டார். இவரால் கவிதையுலகில் செய்யப்பட்ட முதல் மாறுதல்கள் பெரிய திருப்புமுனையாய் நிற்கின்றன. அஞ்சா நெஞ்சமும் ஆழ்ந்தகன்ற பெரும் புலமையும் புதுமையான நோக்கும் கொண்ட இவர் உலக அளவில் தமக்கு நிகரற்ற நிலை பெற்றுவிட்ட கவிஞராவார். மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும், மடையர்களும் இயற்றிடுவார் சுடவுட்பாடல் என்ற வரிகள் இவரது புரட்சி மனப்பாங்கைக் காட்டும். வயதில் அறிவில் முதியார் நாட்டின் வாய்மைப் போருக்கென்றும்<noinclude></noinclude>
gr885n0ovbtrm7c8yk16kgfrv6ofiq4
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/140
250
452324
1433638
2022-07-21T02:37:25Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
139
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
இளையார் - உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்றார் பெரியாரைப்பற்றி. 1964-ஆம் ஆண்டு மறைந்தார் சாகா இலக்கியம் பல படைத்த பின்னர்
நீதிக்கட்சி தமது திட்டத்தை ஏற்றுக் கொண்டதில் பெரியார் மிகுந்த பெருமிதமும் பூரிப்பும் கொண்டார். அவர் விரும்பியதும் அஃதேயாகும். காங்கிரஸ் புறக்கணித்ததையே பெரியார் பெருமை யாகத் கருதினார். காரணம், காங்கிரஸ் பசுத்தோல் போர்த்திய புலி என்று, அதன் தோலுரித்துக் காட்டவே பெரியார் நேரம் பார்த்திருந்தார். அதனால் 1937-ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரஸ் பெருமளவில் ஈடுபட்டதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார். வெற்றி தோல்லி பற்றிய கவலை அவருக்கு எப்போதுமே இருப்பதில்லையாதலால், முழு மூச்சாக நீதிக்கட்சியை ஆதரித்துத் தேர்தல் பிரச்சார இயந்திரத்தை முடுக்கி விட்டார். 1938-ஆம் ஆண்டுவரை பெரியார் மதுவிலக்கை ஆதரித்துத்தான் வந்தார். கதர், கைராட்டை, கைத்தறி இவற்றி லெல்லாம் அவர் நம்பிக்கை இழந்திருந்தார். மதச்சின்னங்களைப் போலவே கதரும் ஒரு மூட நம்பிக்கைச் சின்னம்; பொருளாதார அடிப் படையிலும் இலாபமில்லாமல், மனித உழைப்பை வீணாக்கிடும் ஒரு சாதனம், இயந்திர யுகத்தில் தேவையில்லாத பழைய கட்டை வண்டிக் காலத் திட்டம்; இது கதைக்குதவாது என்று பெரியார் கருதினார்.
நாகம்மையார் மறைந்தபோது பெரியாருக்கு வயது 54. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பெரியார் ஈரோட்டில் தங்க நேர்ந்து, தமது தாயார் சின்னத்தாயம்மையாரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டால், அந்த அம்மையார், ஈன்ற அன்னையென்ற பாசத்தோடும், தனது இளைய மகன் பயமறியாமல் கண்டபடி திரிவதால், மீண்டும் கால் கட்டுப்போட வேண்டும் என்ற வழக்கமான ஆசையோடும், திருமணம் செய்து கொள்ளத் தூண்டுவார். அப்பேர்ப்பட்ட சின்னத்தாயம்மையார் தமது 95-ஆவது வயது வரையில் நல்ல நிதானத்தோடும் நடமாட்டத்தோடும் (ஆகா! அப்படியே தந்தை பெரியாரை நினைவூட்டுகிறாரே!) வாழ்ந்து வந்தவர். 1936-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் நாள், நள்ளிரவு 12 மணிக்கு இயற்கை எய்தினார். ஜோலார்ப் பேட்டை சென்றிருந்த பெரியாருக்குச் செய்தி எட்டவே மறுநாள் வந்து சேர்ந்தார்.
தாயாரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கை வரலாற்றைத் திருக்குறள் போல் இனிதாக எளிதாக 2-8-1936 "குடி அரசு" இதழில் பெரியார் எழுதி வெளியிட்டுள்ளதைக் காணும்போது, இவ்வளவு அருமையான Biograplier ஏன் தமது Autobiograpily எழுதி நமக்கு உயிர் ஊட்டியிருக்கக் கூடாது, என்ற அய்ய வினா எழாமல் இருக்காது! இறுதியாகத், தமது அன்னையாரின் பழைமைப் பிடிப்புக்கோர் உதாரணமாகப், புகழ் பெற்ற மவுலானா முகம்மது அலி, ஷவுக்கத்<noinclude></noinclude>
li2i10xuqf6ba55xosn4voa62mrjx9p
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/141
250
452325
1433639
2022-07-21T02:37:56Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
140 அலி சகோதரர்கள் ஈரோடு வந்திருந்தபோது, தமது அன்னையாருடைய கரங்களின் மீது தங்கள் சிரங்களைப் படியவைத்து. அப்பேர்ப்பட்ட வீர இராமசாமிப் பெரியாரின் அன்னை, தங்களை வாழ்த்த வேண்டு மென்று கேட்டபோது, அவர்களெதிரில் அவ்வாறே வாழ்த்திவிட்டுப், பின் உள்ளே சென்று, தீட்டுப்பட்டதற்காகத் தலை முழுகிய செய்தியினைப் பெரியார் நயமாக வெளியிட்டுள்ள பாங்கு, எண்ணி யெண்ணி மகிழத்தக்கதாகும். பெற்ற மகனையே தொட நேரிட்டாலும், குளித்து முழுக ஓடும் ஆச்சார சீலராயிற்றே அந்தப் பெருமாட்டி! ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை அடைந்துவிட்ட சிலர், தமது முன்னாள் ஏழ்மை வாழ்க்கையினைத் திரும்பிப் பார்ப்பதில்லை/ இன்றுள்ளோர் யாருக்கும் உண்மை தெரியாது என்ற துணிவில், தாம் அரசபரம்பரை எனக் கூசாது பொய் மொழிவதுதான் வாடிக்கை. இங்ஙனமிருக்கப், பெரியார் தமது பெற்றோரின் ஏழ்மைக் கூலி வாழ்க்கையினை, எட்டுணையும் மறைக்காமல் கூறியுள்ள வாய்மையினை எவ்வாறு பாராட்டுவதோ?
இதனால்தான், பெரியாரது தொண்டின் பெருமையினை நேரிற் கண்ட பெரியோர்கள் அக்காலத்திலேயே அவரைப் பலபடப் புகழ்ந்துள்ளனர்:- இவர் இயற்கைப் பெரியார்; இவரது கருத்துகளும், அரிய யோசனைகளும் இயற்கையறிவில் உதித்தவை; தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் என்பது பெரியாருக்கே பொருந்தும் - என்றார் திரு.வி.க. தமிழ்தாட்டின் எல்லாத் தலைவர்களையும் விடப் பெரிய தியாகி இவர்தான்; பெரியாரிடம் உள்ள விசேஷ உத்தம குணம் தன் மனத்திற் பட்டதை ஒளிக்காமல் சொல்வதுதான்; அவரைப் பற்றி அய்ரோப்பாவிலும் பேசப்படுகிறது - என்றார் வ.உ.சி. தமக்கு நியாயமென்று பட்ட கருத்துகளை அஞ்சாது வெளியிடுவதில் பெரியார் முதல் இடம் பெற்றவர்; சமய சமூக அரசியல் துறைகளில் அவர் செய்துள்ள தியாகமும் ஊழியமும், பட்டுள்ள கஷ்டங்களும் இத் தேசத்தினர் ஒரு நாளும் மறக்க முடியாது - என்றார் டாக்டர் நாயுடு, பொதுநலம் பேணும் அறம் திறம்பா அருண் மறவர் பெரியார்; கலா நிலையக் கல்விப் பட்டங்கள் பெறாமல், மானமிழந்து பிறர் பின் நின்று பதவி முதலிய வீண் பெருமை தேட விரும்பாமல் ஊக்கமும் வாய்மையும் ஆக்கமனைத்தும் தரும் என்பதை நாள்தோறும் தாம் வாழ்ந்து காட்டும் சால்புடையார் - என்றார் நாவலர் பசுமலை சோமசுந்தர பாரதியார். இவ்விருபதாம் நூற்றாண்டில் தென் தேசத்தில் உண்டான அறிவின் பயளையெல்லாம் அனுபவிக்கச் செய்த தீரபுருஷன் இராமசாமிப் பெரியாரே என்பது பின் சரித்திரங்களில் எழுதப்படும் - என்றார் கைவல்ய சாமியார். அநீதியை எதிர்க்கத் திறமையும் தைரியமும் அற்ற ஏழைகளாய்ச்<noinclude></noinclude>
9rn0q2zq21rlx8n88ey47p9c3rw3iui
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/142
250
452326
1433640
2022-07-21T02:38:24Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
141
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
சொரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை அடிதெரியும் படிக் கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம் பெரியாரைப் பெரிதும் சேர்ந்ததாகும் - என்றார் வ.ரா. என்னும் ராமசாமி அய்யங்கார். பாமர ஜனங்களை வசப்படுத்தும் ஆற்றல் தமிழ் நாட்டில் வேறெவரையும்விட அவருக்கே அதிகம் உண்டு - என்றார் 'கல்கி' என்னும் ரா. கிருஷ்ணமூர்த்தி. இராமசாமிப் பெரியார் உண்மையிலேயே ஒரு பெரியார் என்பதற்கு மூன்று ஆதாரங்கள் சொல்லலாம்:: அவரைப் பற்றி உலகத்தார் தப்பபிப்பிராயம் கொள்ள வேண்டும்; அவர் கொள்கைகள் எங்கும் கண்டிக்கப் படவேண்டும்; அவர் கடுமையாக வையவும் சபிக்கவும் படவேண்டும் - என்றார் ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார்.
அன்னையார் மறைவுக்குப் பின்னர் மிச்சமிருந்த குடும்பப் பிணைப்பும் அற்று விடவே, முன்னிலும் தீவிரமாகப் பெரியார் தேர்தல்களத்தில் குதித்தார். நீதிக்கட்சி ஆட்சி செய்து வந்த இந்தப் பதினேழு ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டுள்ள அருஞ்சாதனைகளைப் பட்டியல் போட்டுக் காட்டினார். சர்க்கஸ் கொட்டகையில் புலியும் பசுவும் ஒன்றாய் நிற்கலாம்; ரயில் வண்டியில் பறையனும் பார்ப்பானும் ஒன்றாய்ப் பிராயாணம் செய்யலாம்; இது சமதர்மம் ஆகிலிடாது! நீதிக்கட்சி ஆட்சியில் சட்டப்படித் தாழ்த்தப்பட்டவர் களுக்கு அநேக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன; இதைப்பற்றிக் காங்கிரசார் எண்ணியும் பார்த்ததில்லை! நீதிக்கட்சியார் ஆட்சிக்கு மறுபடியும் போனால் மக்கள் தொகைக்கு ஏற்ப அந்தந்தச் சமூகத் தார்க்கும் பதவியில், அதிகாரத்தில் விகிதாச்சாரம் தருவதாகச் சொல்கிறார்கள்; காங்கிரசார் இதைத் தேசத் துரோகம் என்கிறார்கள் நீதிக் கட்சியார் வெள்ளையருடன் அவசியத்துக்கு ஏற்ப ஒத்துழைக் கிறார்கள்; காங்கிரசார் வெள்ளையருக்கு ரகசியமாய்ச் சலாம் போடுகிறார்கள்! ஆகையால் காங்கிரஸ் வெற்றிபெற்றுவிட்டால், நமது சமுதாயம் ஒரு நூற்றாண்டு பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். பார்ப்பனர்களின் சுயராஜ்யம் நிலை நிறுத்தப்படும் - என்ற ரீதியில் பெரியாரின் தேர்தல் பிரச்சாரம் மும்முரமாய் நடந்தது.
இரட்டையாட்சி ஏற்பட்ட 17 ஆண்டுகளாய் நீதிக்கட்சியே தொடர்ந்து ஆட்சி செய்ததால், மனப் புழுக்கமடைந்த காங்கிரசாரும் அவர்களை அதிகம் நம்பி எதிர்பார்த்திருந்த பதவி வேட்டைக் காரர்களும் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வழங்கினர். மக்களும் அப்படியே நம்பித், தங்கள் வரிச்சுமை நீங்கும்; வறுமை பறக்கும்; வளமை சுரக்கும்; ஏகாதிபத்தியம் ஓடும்; துயரங்கள் ஒழியும்; சுயராஜ்யம் வாழும் என்றெல்லாம் எதிர்பார்த்தனர். பழசாய்ப் போன நீதிக்கட்சி மீதில் காதல் குறைந்ததும், புதுமையான காங்கிரஸ் மீது<noinclude></noinclude>
5wj0w3d771hotiiqfewzuj02opjerf9
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/143
250
452327
1433641
2022-07-21T02:38:50Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
142 மோகம் பிறந்ததும் இயற்கைதானே? அதனால் 1937-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், காங்கிரசே எதிர்பாராத அளவுக்கு அது அமோக வெற்றி பெற்றது நீதிக்கட்சி படுதோல்வி கண்டது; பெரும் தூண்களெல்லாம் அடியோடு சாய்ந்தன!
காங்கிரசார் வெறியாட்டம் போட்டனர். நீதிக் கட்சியை அய்யாயிரம் அடி ஆழக்குழி தோண்டிப் புதைத்து விட்டதாகக் காங்கிரஸ் பேச்சாளர்கள் கொக்கரித்தனர். ஈ.வெ. ராமசாமிப் பெரியார் காங்கிரசில் சேர்ந்து விட வேண்டும்; இனி உலகு உள்ளளவும் ஆட்சிபீடம் காங்கிரசுக்குத்தான் - என்றும் ஆர்ப்பரித்தனர்.
ஆனால், ' தோல்வியிலும் வெற்றி காணும் பெற்றிகொண்ட பெரியார். நீதிக்கட்சியின் தோல்வி தமக்கு அனுகூலந்தான் என்றார். தேர்தல் நடைபெறுமுன்பே அவர் கணிப்பு, வெற்றியைக் காட்டிலும் தோல்வியினால்தான் பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து, பலமாக வேலை செய்ய வாய்ப்புக் கிடைக்கும் என்பதே! ஆகவே சோர்வடையாமல், ஊக்கம் மிகுந்தவராய்த் தோழர்களை உற்சாகப் படுத்தி வந்தார் பெரியார், காங்கிரஸ்காரர்களும், பார்ப்பனர்களும் இதுவரையில் செய்து வந்த புளுகுப் பிரச்சாரம், இனி வெட்ட வெளிச்சமாகும். இப்போதுதான் அவர்கள் உண்மையான நெருக் கடியில் சிக்கியிருக்கிறார்கள், தொடர்ச்சியான அவர்களது விஷமத் தனங்களுக்கு இப்போதுதான் முடிவு ஏற்படும்; மந்திரிப் பதவி ஏற்பவர்களின் சாமர்த்தியம் தெரியவரும். நம்மைப் பொறுத்த வரையில் சுயமரியாதைப் பிரச்சாரத்துக்கு நல்ல முறையில் பாதை திறந்து விட்டது போலாகும் - என்று பெரியார் பேசி வந்தார்.
காங்கிரஸ்காரருக்கோ தலைவலி ஆரம்பித்தது. ஆட்சி அமைக்குமாறு கவர்னர்கள் அழைத்தபோது. மந்திரிகளின் அன்றாட அலுவல்களில் கவர்னர்கள் கலந்து கொள்வதில்லை என உறுதி தரவேண்டும் என்று கேட்டனர்; அரசினர் இதனை ஏற்க மறுத்தனர்! அதனால், சுமார் மூன்றரை மாதம் வரை, கவர்னர்களே இடைக்கால மந்திரி சபை அமைத்தனர். நீதிக்கட்சி இந்த இடைக்கால மந்திரி சபையில் பொறுப்பேற்கக் கூடாது என்று பெரியார் சொல்லி விட்டதால், யாரும் ஏற்கவில்லை . கே.வி. ரெட்டி, எம். சி. ராஜா, கலிபுல்லா, பன்னீர் செல்வம், முத்தையா செட்டியார், பாலட் ஆகியோர் பதவியில் அமர்த்தப்பட்டனர். இதனைக் காங்கிரசார் அற்பாயுள் மந்திரிசபை எனக் கேலி பேசினர்.
காங்கிரஸ்காரர்களுக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது; இலை முன்னர் படைக்கப்பெற்ற விருந்தை எவ்வளவு நேரம் அருந்தாமல் பார்த்துக் கொண்டேயிருக்க முடியும்? காங்கிரஸ்காரர்கள் கடைசியாகப் பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்தனர். சக்கரவர்த்தி இராசகோபாலாச் சாரியார் தலைமையில் முதன் முறையாகச் சென்னை மாகாணத்தில்<noinclude></noinclude>
7i6anrqjqbf9p2p2olr3ei31vsri4vo
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/144
250
452328
1433642
2022-07-21T02:39:15Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
143
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் காங்கிரஸ் மந்திரிசபை பதவி ஏற்றது 1937 ஜூலை 14-ஆம் நாளில் முரண்பாடாக நடந்து கொண்டதால் இந்தக் காங்கிரஸ் மந்திரி சபைக்குப் பெரியார், சரணாகதி மந்திரிசபை எனப் பெயர் சூட்டினார். வீம்புடன் முதலில் ஒதுங்கியிருந்தவர்கள், பின் விட்டுக்கொடுத்த பண்பையே பெரியார் சரணாகதி என்றார்; தவறல்லவே? சுயமரியாதைக்காரராக இருந்த எஸ். ராமநாதன் இந்த மந்திரி சபையில் ஒரு மந்திரியானார். முதலமைச்சரை வைத்து ஒரு மாட்டு வண்டியை இவரே ஓட்டிச் சென்றதாகப் புகைப்படங்கள் வெளியாயின. அது முதல் இவர் கட்டை மாட்டு வண்டி ராமநாதன் என்று கேலி செய்யப் பட்டார். இந்த மந்திரிசபையில் ஆச்சாரியார், சத்தியமூர்த்தி அய்யருக்கு இடந்தராமல் டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் அய்யங்காருக்குப் பதவி தந்து விட்டதால், சத்திய மூர்த்தி இதன்பின் ராஜாஜியின் எதிரியாகவே விளங்கினார்.
நீதிக்கட்சியினரால் 19,5-ல் சென்னையில் துவக்கப்பட்டு, வாரம் இருமுறையாயிருந்து, பின்னர் நாளேடு ஆகிய "விடுதலை" பெரியாரிடம் 1937-ல் ஒப்படைக்கப்பட்டது. செய்தித்தாள். என்னும் புதிய படைக்கலன், போர்வீரராகக் களத்தில் முன்னணியில் நின்று கொண்டேயிருக்கும் பெரியாரிடம் உரிய நேரத்தில் வரலாயிற்று அதனை ஈரோட்டுக்கே மாற்றிக் கொண்டார் பெரியார். "விடுதலை"யின் முதல் பக்கத்தில், கொட்டை எழுத்தில், சரணாகதி மந்திரிசபை - இன்று...... ஆவது நாள்! இன்னும் எத்தனை நாள்? என்று பெட்டிச் செய்தி நாள்தோறும் வெளியிடப்பட்டு வந்தது மிக்க பரபரப்பாயிருந்தது! எப்படித்தான் பெரியார் முன்கூட்டி எதிர் பார்த்தாரோ? - 1939 அக்டோபர் மாதத்தில், 28 மாத ஆட்சிக்குப் பின், காங்கிரஸ் பதவியை விட்டு வெளியேறியது. அதன்பின் 1946- வரை சென்னை மாகாணத்தில் ஆலோசகர்கள் உதவியுடன் கவர்னர் ஆட்சியே நடந்தது!
காங்கிரசார் உள்ளாட்சி நிறுவனங்களான பஞ்சாயத்து, நகராட்சி, ஜில்லாபோர்டு ஆகிய அனைத்திலும் வெற்றி பெற்றனர். தோல்வி யுற்றதால் சிலர் காங்கிரசிலே போய்ச் சேர்ந்து கொண்டனர்! இப்படிப் பதவிக்காகக் கட்சி மாறியவர்களைப்பற்றிப் பெரியார் என்ன நினைத்தார் என்பதைக் கவனித்தால், 1937 ஏப்ரல் 5-ஆம் நாள் "குடி அரசு" கூறுவது, இன்றும் என்றும் பொருந்துமே! - "காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால்தான் இனிப் பதவி, உத்தியோகம் தமக்குக் கிட்டும் என நம்பிச் சிலர் அங்கே போகிறார்கள். இந்த முட்டாள்தனமான தேர்தல், அந்த முடிவுக்கு வரத் தூண்டுயிருக்கிறது. யார் யாருக்குப் பதவியினால் மாத்திரம் மதிப்பும் மரியாதையும் கிடைக்குமோ - அவர்கள்தான் போயிருக்கிறார்கள்! வேறு வாழ்வுக்கு வகையில்லாதாரும் போகிறார்கள். இவர்கள் நீதிக் கட்சியிலிருந்து, ஒருக்கால் பதவிக்குச்<noinclude></noinclude>
p8dbbdaeb3ulrhvghn2nhuvlyte9eqy
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/145
250
452329
1433643
2022-07-21T02:39:37Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
144
சென்றாலும், கட்சிக்குக் கெட்ட பெயர் தேடித்தரக் கூடியவர்களே! ஆகையால் இவர்கள் போவதுதான் நல்லது. கட்சியே இவர்களை வெளியேற்றுமுன், தாமே சென்றுவிட்டது அவர்களுக்கே நல்லது! இன்னும் இம்மாதிரி, வெளியேற்றப்படவேண்டிய சிலர் இருக்கிறார்கள்; அவர்களும் போய்விட்டால் நீதிக்கட்சிக்கு உதவியவர் ஆவார்கள்! இப்படிக் குடியிருந்த வீட்டுக்கு கொள்ளி வைக்கும் ஆட்களுக்குப் புகலிடமாய்க் காங்கிரஸ் இருப்பதும் மகிழ்ச்சியே!" - எப்ப டி? |
பதவி ஏற்ற காங்கிரசார் வாக்குறுதிகளை மறந்தனர்; கொள்கைகளை மறந்தனர்; செயல்பட மறந்தனர்; மொத்தத்தில் வந்த வேலையை மறந்தனர்; மக்களையே மறந்தனர்! தவறு கண்டவிடத்துத் தயவு தாட்சண்யம் பாராமல் தட்டிக் கேட்கும் பெரியாரின் இயல்பு - பீரிட்டுக் கிளம்பிற்று. "விடுதலை"யும், “குடி அரசும்" வெடிகுண்டு களாக வீசின!<noinclude></noinclude>
k4d8ilc4lxr8e7uk9gftjooul37lbmv
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/148
250
452330
1433644
2022-07-21T02:40:13Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியா
11. எதிர்த்தார் பானை
இந்திப்போர் - முதல் பரணி - சிறை வாழ்வு - நீதிக் கட்சித் தலைவர் - திராவிடநாடு திராவிடருக்கே முழக்கம் உதயம் - 1938 முதல் 1943 வரை
துஞ்சு புலி இடறிய சிதடன் போலத் தமிழ் மக்களின் உணர்வினை உசுப்பிட முனைந்தார் சென்னை மாகாணப் பிரதமராகப் பதவி ஏற்ற சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார். காங்கிரசின் வேலைத் திட்டங்கள் எத்தனையோ இருக்க, மிக்க அவசரமாகக், காங்கிரஸ் ஆண்டுவந்த எட்டு மாகாணங்களில் வேறெக் மாகாணத்துக் காங்கிரஸ் மந்திரி சபையும் முயற்சி எடுக்காத நேரத்தில், இவர் மாத்திரம் முந்திக்கொண்டு, இந்தி கட்டாயப் பாடமாக்கப்படும், என முதலில் அறிவிப்புச் செய்தார், 1938 பிப்ரவரி 25-ஆம் நாள். 25-4-38-ல் அது நடைமுறைக்கு வந்தது.
தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை; தாய் மொழியில் பற்றுச் செலுத்தாதிருக்கும் வரையில் தமிழர்கள் முன்னேற்றம் அடைய மாட்டார்கள் - என்று காங்கிரசில் இருந்தபோதே பெரியார், 1924-ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாகான மாநாட்டுத் தலைமையுரையில் குறிப்பிட்டுள்ளார். பின்னரும், இந்தி பொது மொழியாக வேண்டு மெனக் காங்கிரசார் வற்புறுத்துவதன் இரகசியம் என்ன என்பதை 1926-ஆம் ஆண்டு “குடி அரசு" இதழில் விளக்கியுள்ளார்:- “100க்கு 97 பேராயுள்ள பார்ப்பனரல்லாதார் செலவில், 100க்கு 3 பேரேயுள்ள பார்ப்பனர்கள், 100க்கு 100 பேரும் இந்தி படித்துள்ளனர். ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, வடமொழி உயர்வுக்கு வகை தேடவே, ஒரு ஒடிந்து போன குண்டூசி அளவு பயனும் இல்லாத இந்தி மொழியை, இங்குப் பிரச்சாரம் செய்ய வருகிறார்கள், தமிழ் மொழி வளர்ச்சிக்காக இதில் 100-ல் 1 பங்கு கவலையாவது இவர்கள் எடுத்துக் கொள்கிறார்களா? பார்ப்பனரல்லாதார்க்கு ஏற்படும் பல ஆபத்துகளில் இந்தியும் ஒன்றாக முடியும் போலிருக்கிறது!" வரும்பொருள் உணர்ந்து பெரியார், அன்றே உரைத்த மொழி இது. மேலும் தொடர்ந்து "குடி அரசு" இதழில் எச்சரித்து வந்திருக்கிறார் பெரியார். 1930-ஆம் ஆண்டு நன்னிலத்தில் நடந்த ஒரு சுயமரியாதை மாநாட்டில் இந்தி நுழைவைக்<noinclude></noinclude>
qlsl5ve3y6ttbk61dact6setagzizte
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/149
250
452331
1433645
2022-07-21T02:40:33Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
148
கண்டித்துத் தீர்மாளம் இயற்றியுள்ளனர். இந்தி மொழி கட்டாயமானால் தமிழ் வளர்ச்சி குறையும்: தமிழர் நலம் குன்றும்; தமிழர் நாகரிகம் அழியும் என்றார் பெரியார். மலைமலையடிகளாரும், இந்தி பொது மொழியாவதற்குத் தகுதியுடையதன்று; இந்தி நுழைப்பால் தமிழ் கெடும்; தமிழர் துன்புறுவர் - எனக் கட்டுரை தீட்டினார்.
தமிழ்நாட்டில் இந்திக்கு எதிர்ப்பு ஏற்படும் என எதிர்பார்த்தே ஆச்சாரியார், கட்டாயப் பாடமாக்குவேன் என உறுதியாய்க் கூறிவிட்டார். தமிழர் உணர்வோடு விளையாடுவது எனத் திட்ட மிட்டே இறங்கியிருக்கிறார்! மேலும், பெரியாரின் சூறாவளி வேகச் சுயமரியாதைப் பொதுவுடைமைப் பிரச்சாரத்துக்கு மக்களிடையே பெருவாரியாக ஏற்பட்டு வரும் செல்வாக்கு கண்டு, தமது இனநலன் அழிக்கப்பட்டு விடுமே என அஞ்சித், திசை திருப்பும் சாணக்ய தந்திரமாகவும் ஆச்சாரியார் இந்தி நுழைப்புப் பணியினைக் கருதினார். 1937 டிசம்பர் 26-ல் திருச்சியில் தி.பொ. வேதாசலம், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் முயற்சியால், நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் ஒரு தமிழர் மாநாடு கூட்டப்பட்டது. பெரியார் கலந்து கொண்டார். இதில் கட்சி, சாதி, மத பேதமின்றி, வைதிகர் உட்படத் தமிழர் அனைவரும் குழுமினர். இந்தி நுழைப்புக்கு எதிர்ப்பு, தமிழ்ப் பல்கலைக் கழகம் கோரல், தனியான தமிழ் மாகாணம் வேண்டல் - ஆகிய முக்கிய தீர்மானங்கள் இங்கு நிறைவேறின. பெரியாரின் உழைப்பினுடைய உருவந்தான் அங்கே அனைவர் சிந்தனையிலும் ஊடுருவிக் காணப்பட்டது. தொடர்ச்சியாகக் கிளர்ச்சிகள், ஆர்ப் பாட்டங்கள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் எதிர்ப்பு உணர்ச்சி வெளிப்படுத்தப்பெற்றது. புத்துயிரும், புதுவன்மையுங் கொண்டவராய்ச் சிலிர்த்தெழுந்தார் பெரியார்!
தமிழவேள் உமாமகேசனார் உறவினரும், வழக்குரைஞருமான திருச்சி தி.பொ. வேதாசலம் பெரியாரிடம் மெய்யன்பு பூண்டவர், நேர்மையும் ஒழுக்கமும் அடக்கமும் அறிவும் மிகுந்தவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் அருமையான விரிவுரைகள் ஆற்றவல்லவர். பெரியாருக்கும் இயக்கத் தொண்டர்களுக்கும் இவர் இல்லம் திருச்சியில் நல்லதோர் உறைவிடமாகும். பெரியார் பிற்காலத்தில் திருச்சியில் தங்குமிடம் அமைக்க இவரே காரணம். எதனாலோ தமது இறுதி நாட்களில் பெரியாரிடம் கருத்து வேறுபாடு கொண்டார். 1971- அக்டோபர் 10 ஆம் நாள் மறைந்தார். இடுகாட்டில் இரங்கலுரை ஆற்றினார் பெரியார்.
1899 ல் பிறந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் திருச்சியில் புகையிலை வணிகர். மேலான, ஆழ்த்த தமிழ்ப் புலமை வாய்ந்த சான்றோர். பெரியாரின் துணையாகச்<noinclude></noinclude>
5ceje7iuai61l7w0wx1kqsrvr3u47eq
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/150
250
452332
1433646
2022-07-21T02:40:59Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
149
பருத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சில ஆண்டுகள் பழகியவர். சுயமரியாதைக் கொள்கைப் பற்றுடன் விளங்குபவர். எண்ணற்ற சீர்திருத்தத் திருமணங்கள் நடத்தி வருகிறார். தமிழுக்கு ஊறு, யாரால், எப்போது, எங்கே நேர்ந்தாலும் எதிர்த்து முதல் குரல் கொடுக்கத் தயங்கமாட்டார் முதுமையிலும் இளைஞராய், ஓய்வின்றி உழைத்து வருகிறார்.
பின்னர் 1938 பிப்ரவரியில் காஞ்சியில் அ.க. தங்கவேலர் முயற்சியால் மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று நடத்தப் பெற்றது. சர் கே.வி. ரெட்டிநாயுடு தலைவர். முன்னாள் சட்ட உறுப்பினர் சர்.எம். கிருஷ்ணன் நாயர் திறப்பாளர். பெரியார் இங்குதான் இந்தி எதிர்ப்புப் போர்ப் பிரகடனம் செய்தார்; போர் போர் போர் என முழங்கினார்; போராட்டம் துவங்கிவிட்டது!
இந்தி கட்டாயப் பாடமாகத் திணிக்கப்படுவது, பொதுவான விஷயம்; அனைவருடைய வரிப்பணத்தில் இருந்துதான் இது செய்யப் படுகிறது; இதைத் தட்டிக் கேட்க வேண்டியது நம்முடைய கடமை என்றார் பெரியார். இந்தி கட்டாயமானால் இந்து மதக் கலாச்சாரம் தொடர்ந்து ஆக்கம் பெறும்; வட நாட்டாரின் அரசியல் ஆதிக்கம் இங்கு நிலைபெற வழி வகுக்கும் - எனவும் எடுத்துக் காட்டினார். இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதை ஒழித்தால் மட்டும் போதாது: அதற்கான உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்! அவை என்ன? பார்ப்பனியத்துக்குத் தமிழ் மக்களைப் புராண காலம்போல் நிரந்தர அடிமைகளாய் ஆக்குவதற்கேயாம், சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொடுத்திருக்கும் பார்ப்பனீய மத உணர்ச்சியை மீண்டும் சரியானபடிப் புகுத்துவதற்கேயாம்! இந்தி எதிர்ப்பின் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற வேண்டுமானால், தமது சரீரத்தில் ஓடும் பார்ப்பன மதஉணர்ச்சி ரத்தம் அவ்வளவும் வெளியேற்றப்பட்டுப் புதிய பகுத்தறிவு ரத்தம் பாய்ச்சப்படவேண்டும் - என்றார் பெரியார்.
ஆச்சாரியார் உறுதியில் பின்வாங்க மறுத்தாரேனும், சிறிது தளர்ச்சி ஏற்படத்தான் செய்தது. அதாவது, எல்லாப் பள்ளிகளிலும் என்று எடுத்த முடிவு தேய்ந்து, 125 பள்ளிகளில் மட்டும் என்றும்; முதல் மூன்று ஃபாரங்கள் வரையிலுந்தான் என்றும்; அதிலும் தேர்வில் வெற்றிபெற வேண்டு மென்று அவசியமில்லை என்றும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டாலும், சூதான உள்நோக்கத்தை நீண்ட நாட்களாகப் புரிந்தவராதலால், ஆச்சாரியாரை நம்பவில்லை பெரியார் மேலும் அவர் தலைமையில் அமைச்சர்கள் எட்டு பேர்; சட்டமன்றத் தலைவர், மேலவைத் தலைவர் ஆகிய பத்துப் பதவிகளில், ஆறு இடங்களில் பார்ப்பனரே இருந்தனர். 12 லட்சம் ரூபாய் செலவில் புதிய வேதபாடசாலை அமைத்து, அதில் பல பார்ப்பன ஆசிரியர்கட்கு வேலையும் அளித்தார் ஆச்சாரியார். மாறாகச் சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமுல் செய்வதாகவும், அந்த இழப்பினை ஈடுகட்டக்<noinclude></noinclude>
2v1l6uc0jn2wc1yhk52dx7oqikybexv
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/151
250
452333
1433647
2022-07-21T02:41:16Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
150)
கிராமப் புறங்களில் ஏழை மக்கள் கல்விக்காக நீதிக்கட்சியினரால் துவக்கப்பட்டிருந்த 2200 ஆரம்பப் பள்ளிகளை மூடிவிடுவதாகவும் ஆச்சாரியார் ஆணையிட்டார். பொற்கொல்லர்கள், தம் பெயருடன் ஆச்சாரி என்ற அவர்களது சாதிப்பட்டத்தை இணைப்பதால் தமது சாதிப் பெருமை குறைவதாக எண்ணி, அவ்வாறு அவர்கள் குறிப்பிடக் கூடாது எனவும் ஆணையிட்டார் சக்கரவர்த்தி இராஜகோபால ஆச்சாரி
நயவஞ்சகமான ஆச்சாரியாரின் போக்கினை நன்கு அறிந்ததால், பெரியார் காங்கிரசை ஒழிக்கவே இந்தியைக் கருவியாக எடுத்துக் கொண்டு போர் துவக்கியதாக, மற்றவர்கள் குற்றம் சுமத்திய போதும், அவற்றையெல்லாம் துச்சமென ஒதுக்கித் தள்ளிப் பெரியார் குதித்தார் போர்க்களத்தில்; இந்திப் பரணி பாடினார்!
1938-ஆம் ஆண்டு ஜுன் 4-ஆம் நாள் சென்னையில் முதல் மறியல் போராட்டம் துவங்கப் பெற்றது. பெத்து நாயக்கன் பேட்டை இந்து தியாலாஜிகல் பள்ளி முன்பும், பிரதமர் (முதல் மந்திரி) இல்லத்தின் முன்பும் ஒரு சர்வாதிகாரி தலைமையில் ஒவ்வோரணி யினராக மறியல் செய்தனர். ஒரு சர்வாதிகாரி கைதான பின் அடுத்த சர்வாதிகாரி தலைமையில் மறியல், ப்ெபடியாக ஏராளமான தாய்மார்கள் (குழந்தைகளுடன்) தமிழ்ப் பற்றுள்ளோர், புலவர், ஆசிரியர், துறவிகள், மக்கள் தொண்டர்கள், மாணவர்கள் - இந்தி எதிர்ப்புக் களத்தில் இன்முகத்துடன் இறங்கினர். பல்லடம் பொன்னுசாமி முதலமைச்சரின் வீட்டுக்கு முன்னால் பட்டினிப் போர் தொடங்கிக் கைதானார். ஸ்டாலின் ஜெகதீசன் அவரை அடுத்து உண்ணா விரதம் தொடங்கிச், சாகும் வரையிலும் தொடர்வதென இருந்தார்; அரசுத் தரப்பில் இவருக்கு வஞ்சக வலை விரிக்கப்பட்டு, ஏமாந்து அதில் சிக்கிவிட்டார் இறுதியில்!
காங்கிரஸ்காரர் ஒத்துழையாமைப் போர் நடத்திய காலத்தில், அவர்கள் மீது வெள்ளை அரசால் வீசப்பட்டு, அவர்களால் அப்போ தெல்லாம் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட, அதே கிரிமினல் திருத்தச் சட்டத்தையே, இந்தி எதிர்ப்புத் தொண்டர்களின் மீது ஏவிக், கைது செய்து, கடுமையான தண்டனைகளை வழங்கியது ஆச்சாரியார் அரசு அடக்குமுறைக் கொடுமை தாளாது, அக்காலத்திய சில காங்கிரஸ் சார்பு ஏடுகள் கூடக் கண்டித்து எழுதின. நடுநிலையாளரான பல பார்ப்பனப் பிரமுகர்களும் வன்முறைகளை எதிர்த்துக் கருத்துக் கூறினர். சத்தியமூர்த்தி அய்யரோ, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி செய்வோர் மீது ராஜத்து வேஷக் குற்றம் சுமத்தித், தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை வழங்க வேண்டுமென அரசுக்கு ஆலோசனை கூறினார்! தயாள குணசீலர்
கிரிமினல் அமெண்ட்மெண்ட் ஆக்ட் 7-3- பிரிவின்படிக் கைதானவர்கள் மீது, வழக்குப் போட்டுக், கடுங்காவல் தண்டனை 3,4<noinclude></noinclude>
irp8qoyp511gz92nifi7dyy2l9dtxjv
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/152
250
452334
1433648
2022-07-21T02:41:42Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
151
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
மாதங்கள்வரை தந்து, மொட்டையடித்துச் சிறை உடை அணிவித்துக், குல்லாய் போட்டுக், களியும் கூழும் உணவாகத் தந்து வந்தது ஆச்சாரியார் ஆட்சி| இதற்கெல்லாம் அஞ்சாமல் அன்றைக்கு, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை, என மகிழ்வோடு சிறை ஏகியவர்கள் எண்ணிக்கை 1269 ஆகும். இதில் பெண்டிர் 73 பேர், மதலையர் 32 பேர்,
மேலும், இந்தியன் பினல்கோட் 117 பிரிவின்படி சி.டி. நாயகம், கே.எம். பாலசுப்பிரமணியம், ஈழத்துச் சிவானந்த அடிகள், சண்முகானந்த சாமிகள், சுவாமி அருணகிரிநாதர், பாலசுந்தரப் பாவலர், மறை. திருநாவுக்கரசு, டி.ஏ.வி. நாதன், சி.என். அண்ணாதுரை ஆகியோரைக் கைது செய்து, சிறையிலிட்டு, 3 ஆண்டு தண்டனை வாங்கித்தர முயற்சிகள் நடந்தன. 1938-ஜூன் 26-ல் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு, சென்னைக் கடற்கரையில், பெரியார் தந்த வாசகங்களான தமிழ் வாழ்க, இந்தி ஒழிக, காங்கிரஸ் ஆட்சி ஒழிக என்பனவற்றை மண்ணதிர முழக்கமிட்டனர்.
செ.தெ. நாயகம் கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராயிருந்த தமிழ்ச் சான்றோர். பெரியாரிடம் மிக்க அன்புடையார். குலசேகரன் பட்டினத்தில் தமிழ்க் கல்லூரி துவக்கினார். 1944-ல் மறைந்தார்.
டி.ஏ.வி. நாதன் ஆங்கிலமும் தமிழும் பாங்குற எழுதவல்ல வழக்கறிஞர். "ஜஸ்டிஸ்", "விடுதலை" ஏடுகளின் ஆசிரியப் பொறுப்பில் இருந்தார். -
முகவை மாவட்ட வெங்கலக்குறிச்சியில் 15-9-1907-ல் பிறந்த பாலசுந்தரப் பாவலர் சுய மரியாதைக் குடும்பத்தின் தலைசிறந்த புலமைத் தொண்டர்; எழுத்தாளர்; பேச்சாளர்; கவிஞர்; பராசக்தி நாடக ஆசிரியர். “தென்சேனை', “தமிழரசு" இதழ்கள் நடத்தினார். 1938-ல் சிறைசென்றவர் திராவிடர் கழகம் நடத்திய எல்லாப் போராட்டங்களிலும் தண்டனை பெற்றவர், புதுக்கோட்டை 'பிராமணாள்' அழிப்புப் போராட்டத்தில், மனைவி பட்டம்மாள், மகள் அறிவுக்கொடி, மகன் தமிழரச னுடன் கலந்து கொண்டார். சென்னையில் பொது மருத்துவ மனையில் 1.4.1971 இரவு 10 மணிக்கு மறைந்து, 3-ந் தேதி அடக்கம் செய்யப்பட்டார். குடும்பத்தார் இன்றும் கழகப் பணியில் முன்னணி.
ஈழத்தடிகள் இல்லறத்தில் ஈடுபட்டுக் காஞ்சியில் அண்ணாவின் ஆதரவில் நீண்ட நாள் வாழ்ந்திருந்தார்.
மறைமலையடிகளாரின் மகனார் திருநாவுக்கரசு. தனித்தமிழ் அன்பர். இனித்திடும் பண்பாளர்.<noinclude></noinclude>
7zvpcwhy3fzgapz1dmn1gr52rkop2lj
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/153
250
452335
1433649
2022-07-21T02:42:10Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
152
சி.என். அண்ணாதுரை 1934-ல் எம்.ஏ., பட்டதாரி. அடுத்த -ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் மாநாடு ஒன்றில் அண்ணாவின் பேசுந்திறனால் பெரியார் கவரப்பட்டார். பெரியாரின் கனிவான கவனிப்புக்கு அண்ணா உள்ளானார். இந்தி எதிர்ப்புப் போரில் 1938-ல் ஈடுபட்டுச் சிறை சென்றார். பெரியாருடன் 1940-ல் ஈரோடு சென்று: 'விடுதலை' ஆசிரியரானார். 1944-ல் சேலம் மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பெயர் திராவிடர் கழகம் என மாற்றப் பட்டது. புகழ்பெற்ற அண்ணாதுரை தீர்மானம் அங்கே நிறைவேறியது. இயக்கத்துக்கு அண்ணாவின் வரவு இளைஞர்களை ஈர்த்துப் புதுரத்தம் பாய்ச்சியது. பெரியார் உருவாக்கிப் பெருமைக்குரியவராக்கிய எண்ணற்ற சுயமரி யாதைத் தளபதிகளில் அறிஞர் அண்ணாவே முதன்மையானவர். பெரியாரின் புகழ் உலகெலாம் பரவியுள்ளதற்கு அண்ணாவை அவர் தமது சீடராக்கிக்கொண்டதும் ஒரு காரணம். சாக்ரட்டீசுக்குப் பிளாட்டோவும், புத்தருக்கு அசோகனும், மார்க்சுக்கு லெனினும் போல் பெரியாருக்கு அண்ணா! இங்கர்சாலும், ரஸ்ஸலும் யாரைக் குருவாகக் கொண்டனரோ; ஆனால் அண்ணாவுக்கு ஆசான் பெரியாரே 1949-ல் பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்தபோது, தான் தலைவராகக் கண்டதும் கொண்டதும் பெரியார் ஒருவரைத்தான் எனக் கூறித் தலைவர் இல்லாத நிறுவனமாகவே அதனைக் கண்டார் அண்ணா , 1967-ல் அண்ணா தமது அமைச்சரவையையே பெரியாருக்குக் காணிக்கையாக்கியவர். 1969. பிப்ரவரி 3-ஆம் நாள் இந்தப் பேரறிவாளர் கல்லறை யானார்; பெரியாரின் கண்ணீரால் குளிப்பாட்டப்பெற்றார். புரந்தார் கண்நீர் மல்கச் சாகிற் பின் சாக்காடு இரந்து கோள் தக்க துடைத்து."
அடக்குமுறை வெறியாட்டம் போட ஆரம்பித்துவிட்டால் அதற்கு முடிவேது? மதுவருந்திய மந்தியைத் தேளும் கொட்டி விட்டால் எப்படியிருக்கும்? "விடுதலை" நாளேட்டின் மீது ராஜத்து வேஷ, வகுப்புத்துவேஷ வழக்குகள் போடப்பட்டன. அரச வெறுப்புக் குற்றம் என்பது தள்ளப்பட்டது. வகுப்பு வெறுப்புக் குற்றத்துக்காக “விடுதலை" ஆசிரியர் பண்டித முத்துசாமியும், வெளியீட்டாளர் ஈ. வெ. கிருஷ்ணசாமியும் ஆளுக்கு ஆறுமாதச் சிறைத்தண்டனை பெற்றனர் கோவையில்.
தமிழர் தன்மான உணர்வோடு, மிகுந்த வீறுகொண்டு எழலாயினர். நாடு முழுவதும் தமிழ் வாழ்க இந்தி ஒழிக எனும் - வீரமுழக்கம் ஒலிக்காத இடமில்லை. அன்று ஆச்சாரியார் மூட்டிய<noinclude></noinclude>
7929u96aqujccuvwjjtlg2fdv4gxwjl
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/154
250
452336
1433650
2022-07-21T02:42:34Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
153
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
இந்தி எனும் செந்தி இன்றளவும் கொழுந்துவிட்டெரிகின்றது. முந்தி அவரே மூட்டிய தீயைப் பிந்தி அவரே அணைக்க நினைத்து மனம்மாறியும் முடியவில்லை. இந்தியாவின் தலைமைப் பீடத்தை யார் அலங்கரித்தாலும் சாம்பல் பூத்த இந்தி நெருப்பை ஊதி எரியவிடுவது வாடிக்கையாகிவிட்டது. தண்ணீரால் அல்ல; கண்ணீராலும் செந்நீராலும் அணைத்துப் பார்த்தும் அது தணிய மறுக்கிறது!
முதன் மந்திரியான ஆச்சாரியார் வீட்டு முன்னர் மறியல் செய்வது அரசுக்கு இடையூறாக உள்ளது என உணர்ந்த பெரியார். அகை தவிர்க்குமாறு பெருந்தன்மையுடன் தமது தொண்டர்களைக் கேட்டுக் கொண்டும், அரசின் அடக்குமுறைக் கொடுமை குறைய வில்லை; போராட்டம் தொடர்ந்தது!
திருச்சியில் வழக்கறிஞர் கலிபுல்லா தலைமையில் பெரியார் கலந்து கொண்ட வழியனுப்புக் கூட்டம், இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் புதுமையான முன்னுதாரணம் படைத்தது. தமிழர்படை என்பதாக 100 பேர் கொண்ட அணி அமைக்கப்பட்டு, அவர்கள் திருச்சியிலிருந்து புறப்பட்டு, வழியிலுள்ள ஊர்களிலெல்லாம் இந்தி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து கொண்டு 42 நாள் நடந்தே 577 மைல் கடந்து சென்னை சென்றடைவது என்பதாக ஒரு திட்டம். இந்தத் தமிழர் படைக்குத் தஞ்சை பள்ளியக்ரகாரம் அய், குமாரசாமி தலைவர். திருச்சி “நகரதூதன்" ஆசிரியர் மணவை ரெ. திருமலைசாமி யுத்தமந்திரி, பட்டுக்கோட்டை கே.வி. அழகர்சாமி அணித்தலைவர். திருப்பூர் முகைதீன், மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் ஆகியோர் முன்னணியில், தொண்டர்களுக்கு அறிவுரை கூறி, 1938-ஆகஸ்டு 1-ஆம் நாள் வழியனுப்பி வைத்த பெரியார், 1938- செப்டம்பர் 11-ஆம் நாள் - அதே தமிழர் படையை வரவேற்றுச், சென்னைக் கடற்கரையில் திரண்டிருந்த இலட்சக்கணக்கான மக்கள் பெருவெள்ளத்தில், வீரமுழக்கம் செய்தார். அங்கே ஒரு புதுக்கர்ச்சனை புரிந்தார். தமிழ்நாடு தமிழருக்கே என்பதுதான் அது. தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோரிக்கை திடீரெனப் பெரியாரின் உள்ளத்திலிருந்து வெடித்ததல்ல. இந்திய அரசியல் அமைப்பில், தமிழர் நலன் தனியாகப் பாதுகாக்கப் படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை . எந்நாளும் பார்ப்பனரும் வடநாட்டாரும் ஆதிக்கம் செலுத்தியே வருவர். இதற்கான பரிகாரம், தமிழ்நாட்டின் ஆட்சி தமிழர்கைக்கு வருவதுதான் என்பன போன்ற கருத்துகள் 1930-ஆம் ஆண்டு முதலே பெரியாரின் உள்ளத்தில் உருவாகி வந்தன.
பின்னாளில் புதுக்கோட்டை திவானாக விளங்கிய கலிபுல்லா, பெரியாரிடமும் இயக்கத்தினிடமும் மிகுந்த பற்றுள்ளவர். போராட்டத்தை அவர் நெடுநாள் ஆதரித்து வந்தார்.<noinclude></noinclude>
aahk8juoi4q78zfge9yjulaw3ddtwo5
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/155
250
452337
1433651
2022-07-21T02:42:56Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
154
கவிஞர் கருணானந்தம்
திருப்பூர் முகைதீன் இந்தி எதிர்ப்புக் காலத்திலிருந்து தொடர்ந்து திராவிட இயக்க மேடைகளிலும் முழங்கி வந்த ஆவேசப் பேச்சாளர். முஸ்லிம் லீகில் இருந்தவாறே நல்ல நட்புடன் ஆதரித்துவந்த பண்பாளர்.
“நகர தூதன்" இதழில் பேனா நர்த்தனம் என்ற பகுதியில், உண்மையிலேயே தமது பேனாவை நடனமாடவிட்ட நயமான எழுத்தாளர் திருமலைசாமி. கேலியும் கிண்டலும், வீரமும் விவேகமும் கொப்புளிக்க எழுதுவார். பெரியாரின் அன்பர்.
இந்திப் பரணி பாடிய இந்தத் தரணி முதல்வர் பெரியார்மீது, ஆச்சாரியார் அரசு வழக்குத் தொடர்ந்து 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்தது. அன்பான எதிரி ஆச்சாரியார், தமது நண்பரின் இந்தி எதிர்ப்புப் போருக்காக அளித்த இன்பமான பரிசு பெரியாரின் ஃபோர்டுகார் (டூரர்மாடல்) 181 ரூபாய்க்கு அரசினரால் ஏலத்தில் விடப்பட்டது; அபராதத் தொகை வசூலிக்க என்று!
1938 நவம்பர் 26-ல் கைது செய்யப்பட்ட பெரியார் மீது வழக்கு, 1938 டிசம்பர் 5, 6 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. தமது நண்பர்களான பாரிஸ்டர் பன்னீர்செல்வம், செட்டி நாட்டு இளவரசர் அ. முத்தையா செட்டியார் ஆகியோர் வேண்டியும், பெரியார் தமது வழக்கம் போலவே எதிர் வழக்காடவில்லை . எழுத்து வடிவில் அறிக்கை ஒன்றினை நீதி மன்றத்தில் வெளியிட்டார். சென்னை ஜார்ஜ்டவுன் 4-வது போலீஸ் நீதிபதி மாதவராவ்தான் விசாரித்துத் தண்டனை வழங்கியவர். பெரியார் அறிக்கையில் என்ன கூறியிருந்தார்? “நான் சம்பந்தப்படும் எந்த இயக்கமும், அல்லது கிளர்ச்சியும், அல்லது போராட்டமும் சட்டத்துக்கு உட்பட்டு, வன்முறையில்லாமல்தான் இருக்கும் என்னுடைய பேச்சுகள் இதை விளக்கும். ஆனால், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை அடக்குமுறை மூலம் ஒடுக்கிவிடக் காங்கிரஸ் அரசு கருதுகிறது. வீட்டுக்குள் திருடன் புகுந்தால் கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பேன் என முதல் மந்திரியார் பேசிவிட்டார். நீதிபதியோ, காங்கிரஸ் அரசுக்குக் கட்டுப்பட்டவர்; அதிலும் பார்ப்பனர். எனவே எவ்வளவு அதிக தண்டனை தரமுடியுமோ அதையும் எவ்வளவு தாழ்ந்த வகுப்புத் தரமுடியுமோ அதையும், கொடுத்து இந்த விசாரணை நாடகத்தை முடித்து விடுங்கள்" - என்பதாகத் தமது அறிக்கையில் பெரியார், தமது உள்ளக் கிடக்கையைத் தெள்ளிதின் விளக்கியிருந்தார். முதலில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பெரியாரை 1939 பிப்ரவரி 16-ல் பெல்லாரி சிறைக்கு மாற்றினார்கள்.
பெரியார் சிறைப்பட்டபோது, தமது தனித்தமிழ்க்குருதி கொதிப்பேறத் திரு.வி.க. தமது “நவசக்தி” ஏட்டில் மிக இரக்கத்துடன் அருமையான தலையங்கம் தீட்டியிருந்தார். ஓய்வு என்பதை அறியாது<noinclude></noinclude>
q7wwm2058hswqtyo9f8e810vunp41qx
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/156
250
452338
1433652
2022-07-21T02:43:20Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
155)
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வீரக்கர்ச்சனை புரிந்துவந்த கிழச்சிங்கம் இப்பொழுது ஓய்வு பெற்றிருக் கிறது. சிறையில் தலை நிமிர்ந்து கிடக்கிறது - என்ற முடித்திருந்தார்.
பெரியார் சிறையேகிய பின்னர்தான், சென்னை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த தாளமுத்து, நடராசன் என்னும் இரு மாவீரர்கள் அடக்குமுறை காரணமாய், சிறையிலேயே உயிர் நீத்துக் களப்பலியானார்கள். 1939 ஜனவரி 15-ஆம் நாள் நடராசனும், மார்ச் 13-ஆம் நாள் தாளமுத்துவும் மாண்டனர். தமிழகமே கொந்தளித்துக் குமுறியது.
முதல் முறை யென்றாலும், 1938-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போர் உலக வரலாற்றில் மேலான இடம் பெறத் தக்கதாகும். தமிழ் நாட்டிலேயே, தமிழ்நாட்டார், தமிழ் வாழ்க என்று முழங்குவதற்காகத் தண்டிக்கப்படும் கொடுமையை நடுநிலையாளர் கண்டித்தனர். தமிழ் நாட்டின் வீரமகளிர், சென்னையில் 1938 நவம்பர் 13-ஆம் நாள், தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு என்ற பெயரில், மறைமலையடிகளார் மகளாரும் திருவரங்கனார் துணைவியாருமாகிய நீலாம்பிகை அம்மையார் தலைமையில் உணர்ச்சியுடன் கூடினர். பெரியாரின் தீரமிக்க சொற்பொழிவைக் கேட்டுத் தன்மானக் குருதி சூடேறத் தாமும் மறியலில் பெருமளவில் ஈடுபடத் துணிவு கொண்டனர். இந்த மாநாட்டில் தீர்மான வடிவமாக, இனித் தோழர் ஈ. வெ. ராமசாமிப் பெரியாரை அனைவரும் பெரியார் என்றே அழைத்திடல் வேண்டுமென முடிவு செய்தனர்.
அடுத்து, வேலூரில் 1938 டிசம்பர் 26, 27 நாட்களில் சர் ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை மாகாணத் தமிழர் மாநாடும், பண்டித நாராயணி அம்மையார் தலைமையில் பெண்கள் மாநாடும் எழுச்சியுடன் கூடி, இனித் தமிழர்களின் தலைவர் பெரியாரே என்றும், எந்நாளும் அவர் மொழிவழி நடப்பதாகவும் உறுதி பூண்டது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் 1938 டிசம்பர் 29, 30, 31 நாட்களில் நீதிக்கட்சியின் 14-ஆவது மாகாண மாநாடு எழுச்சியும் உணர்ச்சியும் பொங்கிடக் கூடியது. லட்சக்கணக்கான, மக்கள், பெரியார் இல்லாமல் நடைபெறும் இந்த மாநாட்டில் கடமையுணர்ச்சியோடு குழுமி யிருந்தனர். மாநாட்டின் தலைவராக, முன்னரே பெரியாரைத்தான் தேர்ந்தெடுத்திருந்தனர்.
பெரியார் பெல்லாரி சிறைக்குள் அடைக்கப்பட்டிருப்பதுபோல் வடிவு அமைக்கப்பட்ட அலங்கார வண்டி ஊர்வலமாய் வந்தது. மாநாட்டு மேடையில் தலைவரின் நாற்காலியில் பெரியாரின் உருவப் படம் பெரிதாக வைக்கப்பட்டிருந்தது. என் தோளுக்குச் சூட்டிய மாலையைப் பெரியாரின் தாளுக்குச் சூட்டுகிறேன் - என்று நன்னீர்மை கொண்ட பன்னீர் செல்வனார் நாத் தழுதழுக்கத் தமது பெருமீசை துடிதுடிக்கக் கூறித் தமக்களித்த மாலையைப் பெரியார் படத்துக்குச்<noinclude></noinclude>
5lafuhw662yyo5lu67e87iaj1sp2asn
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/157
250
452339
1433653
2022-07-21T02:43:39Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
156
சூட்டினார். பெரியாரால் முன்பே தயாரித்துத் தரப்பட்டிருந்த தலைமை யுரையை இவரே படித்தார். சிறையிலடைபட்டிருந்த சிங்கம், இந்தத் தங்கத் தமிழ் நாட்டுக்குப் பங்கம் நேராமல் பாதுகாத்திட, நீதிக் கட்சியின் தலைவராக ஒரே மனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டது. மாநாட்டில் குழுமியோர் அனைவரும் ஒரு முகமாக எழுந்து நின்று, எங்கள் மாபெருத் தலைவரே! உங்கள் உடல் சிறைப்படுத்தப் பட்டிருந்தாலும், உங்கள் வீரத் திருவுருவத்தின் முன் நாங்கள் அனைவரும் எழுந்து நின்று ஒன்றுபட்டிருக்கின்றோம். உங்கள் தலைமையில் நாங்கள் அனைவரும், சொல்வழி நின்று, கட்சி வளர, மக்கள் வாழ, நோக்கம் நிறைவேற ஓயாது உழைத்து வெற்றி பெறுவோம் என உறுதி கூறுகிறோம் - என்னும் உறுதி மொழியிளைத் தமிழிலும், தெலுங்கிலும் எடுத்துக் கொண்டனர். .
பெரியார் தமது தலைமையுரையில், தாம் நிதிக் கட்சியில் தலைவரானதால் சுயமரியாதை இயக்கத்தின் எந்தக் கொள்கைக்கும் எள்ளளவு ஊனமும் நேரவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். இந்து மதப்படிச் சூத்திரர்தான் உழைப்பாளர், தொழிலாளர் பார்ப்பனரல்லாதவர் எல்லாம் நாம் எல்லாரும் திராவிடர் என்னும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள். உலகில், எல்லா மக்களுமே உழைத்து, உழைப்பின் பலனை விகிதாச்சாரப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டும். தேசபக்தி, தேசியம், தேசவிடுதலை, ஆத்மார்த்தம், பிராப்தம் என்று சொல்லி ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கும் போக்கை அடியோடு ஒழிக்க வேண்டும் - இதற்கு ஒரே பரிகாரமாகத் தமிழ்நாடு தமிழருக்கே ஆகவேண்டும் - என்றெல்லாம் பெரியார் நன்கு விளக்கம் அளித்தனர். இளமைப் பிராயத்தில் இயல்பாக அவருள் கருவாகிக் கிளர்ந்தெழுந்த சிந்தனைச் செல்வமே, கொள்கையாய்க் கோட்பாடாய் இலட்சியமாய் இயக்கமாய்ப் பேச்சாய் எழுத்தாய் வழக்காய் போராட்டமாய் வெற்றியாய் உருவும் திருவும் பெற்றுப் பற்பல பரிமாணங்களில் பரிணாம வளர்ச்சியாய்ப் பல்கிப் பெருகி வந்ததைத் தெளிவாகக் காண முடிகின்றது. அடிப்படையில் அணுவளவு மாற்றமும் செய்யாமல், கட்டடத்தின் முதல் தளம், இரண்டாந்தளம், மூன்றாந்தளம் என வசதிக்கும் வாய்ப்புக்கும் நேரத்துக்கும் தேவைக்கும் ஏற்ப எழுப்பிச் செல்வதுதான் அவரது நடைமுறை என்பதும் நுட்பமாய்க் காண்போர்க்குத் திட்பமாய்ப் புரியும்.
தமது அறுபதாவது வயதில், அரசு ஊழியராக இருந்திருந்தால் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுச் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கிடக்கவேண்டிய வயதில் பெரியார் மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டு, வெயிலின் வெம்மை அதிகமாகத் தாக்கும் பெல்லாரி சிறையில், அடக்குமுறைக் கொடுமைகளால் அவதியுற்று, உடல் நலிந்து, வயிற்று நோயினால் துன்புற்று வந்தார். வெளியிலிருந்து,<noinclude></noinclude>
7zjuckpv7lr5nwhvvcxd6wmbucbit7y
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/158
250
452340
1433654
2022-07-21T02:45:30Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
157)
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
வெயிலின் கொடுமையைவிடக் காங்கிரஸ் புதிய ஆட்சியின் அடக்கு முறைக் கொடுமையை அதிகம் அனுபவித்து வந்த தமிழ் மக்கள், பெரியார் வாழ்க எனச் சந்து பொந்துகளிலும் கூடச் செந்தமிழ் முழங்கிச் சிந்து பாடி வந்தனர்.
சென்னை மாகாண அரசு என்ன எண்ணிற்றோ தெரியவில்லை; 1939-ஆம் ஆண்டு மே திங்கள் 22-ஆம் நாள் எந்தக் காரணமும் அறிவிக்காமல் திடீரென்று பெரியாரை விடுதலை செய்து விட்டது. 190 பவுண்டு எடையுடன் சிறை சென்ற பெரியார், ஆச்சாரியார் ஆட்சிக்கு விலையாகத் தமது எடையில் 24 பவுண்டு அன்பளிப்பாக வழங்கியே வெளியில் போந்தார். தாளமுத்து - நடராசன் ஆகிய இரு இளங் காளைகளே சிறைக் கொடுமையால் உயிர்த் தியாகம் செய்ய நேர்ந்ததே! தள்ளாத வயதில் பெல்லாரிச் சிறையில் வாடும் தலைவர் பெரியாரை நாம் உயிருடன் காண்போமா? என அய்யுற்றுக் குமைந்த தமிழ் மக்கள் களிப்பால் கூத்தாடினர் ஊருக்கு ஊர் வரவேற்பும், பணமுடிப்பு வழங்கலும் போட்டி போட்டுக் கொண்டு நடைபெற்ற வண்ணமிருந்தன!
விடுதலை பெற்று வெளிவந்தவுடன், சென்னையில் தம்மைச் சந்தித்த பத்திரிகை நிருபர்களிடம் பெரியார், இந்தி எதிர்ப்பு இயக்கம் தொடரும் எனவும், புதிதாகக் காங்கிரஸ் அரசால் விதிக்கப்பட்டுள்ள வணிக விற்பனைவரி அநீதியானது என்றும், ஆந்திரா தனி மாகாணமாக அமைக்கப்பட வேண்டும் என்றும், தமது தலைமையில் நீதிக்கட்சி தன்மானச் சமதர்ம அடிப்படையிலேயே இயங்கும் எனவும் விரிவாக எடுத்துரைத்தார்.
அவ்வாறே, கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதும், மீண்டும் இந்தி எதிர்ப்பு மறியல் மிக உத்வேகத்துடன் தொடங்கியது. ஏற்கனவே தண்டிக்கப்பட்ட தோழர்கள் இன்னும் சிறையில் வாடத், தம்மை மட்டும் விடுவித்தனரே, எனச் சங்கடமும் சஞ்சலமும் அடைந்திருந்த பெரியார் மனம் மகிழ, முதல் அணியாக 1939 ஜூன் 6-ஆம் நாள் சிலர் விடுவிக்கப்பட்டனர். இரண்டாவது அணியாக 1939 நவம்பர் 15-ஆம் நாள் மீதியிருந்த தோழர்களும் சிறையின்றும் விடுவிக்கப்பட்டனர். ஆக மொத்தம் 1271 பேர் சிறைத்தண்டனை பெற்றவராவர். அரசுக்கு ஏதோ நல்லெண்ணம் முளைத்து விட்டதாகத் தவறியும் யாரும் கருதி விடக் கூடாதே என்று.
யிடப் பெற்றுக் கண்காணிப்புக்கு இலக்காயின.
பெரியாருடைய சிறைவாசம் அவருக்கு இன்னொரு புதிய சிந்தனையைத் தோற்றுவித்திருந்தது. இது புதிய சிந்தனை என்பதை விடப் பட்டை தீட்டப்படாமல் ஒளி மங்கியிருந்த ஒரு வைரக்கல்; அது சிறை வாழ்க்கையில் துப்புரவு செய்யப்பட்டுப் பட்டை தீட்டப்<noinclude></noinclude>
2gbw7hfk1pjf9kowei6p2eotyo65k6g
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/159
250
452341
1433660
2022-07-21T03:15:57Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
158)
கவிஞர் கருணானந்தம் பெற்றுச் சுடரொளி வீசுமாறு பிரகாசமாக்கப்பட்டது எனலாம். அதாவது நமது இனத்துக்கு என்று ஒரு பெயர் இல்லாதது போல, நாம் நம்மை ஏன் பார்ப்பனர் அல்லாதவர் என்று சொல்ல வேண்டும்? நூற்றுக்கு மூன்று பேராயிருப்பவர் பெயரைச் சொல்லி, நூற்றுக்குத் தொண்ணூற்றெழு பேராயிருப்பவர் - அது அல்லாதவர் - என்று சொல்லி வருவது என்ன நியாயம்? நம்மை இந்தியன் என்றும், இந்து என்றும் கருதிக் கொள்வதால் வரும் இழிவுதானே இது? எனவே சரித்திரப்படித் தமிழ் நாட்டின் பூர்வகுடிகளான நாம் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள் தாமே? எனவே நமது இனப்பெயர் திராவிடர்; அவர்கள் வேண்டுமானால் திராவிடர் அல்லாதவர் என்று வைத்துக் கொள்ளட்டும். திராவிடர்களாகிய நமது நாடு திராவிடருக்கே ஆகவேண்டாமா? இவ்வளவேன்? பார்ப்பனர்கள் ஆரிய வழி வந்தவர்கள் என்பதை அவ்வகுப்பைச் சார்ந்த சரித்திர ஆசிரியர்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள்! எனவே நமது நாட்டில் நடைபெறுவது ஆரிய திராவிடப் போராட்டமேயாகும். இதற்கு முடிவு வடவர் பிடியிலிருந்த திராவிட நாட்டைத் தனி நாடாக்குவதே - எளப் பெரியார், 1939 - ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் நாள் “குடி அரசு" இதழில் முதன் முறையாக வெளிப்படுத்தினார். தொடர்ந்து திராவிட நாடு திராவிடருக்கே என்ற உரிமை முழக்கம் நாடெங்கணும் எதிரொலிக்கத் தொடங்கிற்று. இந்திய அரசியல் அமைப்பில் இருந்து கொண்டே, தனிநாடு ஒன்று பிரிக்கப்படவேண்டும் என்ற தத்துவத்தை உருவாக்கியவரும் உலகுக்கு அறிவித்தவரும் முதன் முதலாகப் பெரியார் ஒருவரே என்பது வரலாற்றின் மாபெரும் உண்மைக் குறிப்பாகும்!
1939-ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 10-ஆம் நாள் ஈரோட்டில் பெரியார் மாளிகையில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் நீதிக்கட்சியின் செயற்குழு நடைபெற்றது. அரசர்கள் கட்சி என்று அழைக்கப்பட்ட அந்த நீதிக்கட்சியைப் பயங்கர சமதர்மவாதி என அழைக்கப்பட்ட பெரியார், தமது இல்லத்துக்கே குடியேற்றிவைத்துப் பெருமை சேர்த்தனர். மேலும், ஆங்கிலேய அடிவருடிக் கட்சி என எள்ளி நடையாடப்பட்ட நீதிக்கட்சி, அதுவரை இந்தியாவுக்குக் குடியேற்ற நாட்டு அந்தஸ்து போதும் என்ற அடிப்படைக் கொள்கை தான் கொண்டிருந்தது. அதையும் அடியோடு மாற்றித் பூரணச் சுதந்திரம் வேண்டும் எனப் புரட்சியும் செய்துவிட்டார் பெரியார். இவங்கையில் துயருறும் தமிழர் நிலை குறித்தும், இந்தி எதிர்ப்புத் தொடர் போராட்டம், எதிர் வரும் ஜில்லா போர்டு நகரசபைத் தேர்தல்கள், தனி ஆந்திர நாடு அமைப்பு போன்ற விஷயங்களிலும் நீதிக்கட்சியின் செயற்குழு தனது கண்ணோட்டத்தை விசாலப்படுத்த வகை செய்தார் தலைவர் பெரியார்.<noinclude></noinclude>
cjyoubw5wch5606pcces2xdjjr9f4x9
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/160
250
452342
1433661
2022-07-21T03:16:18Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
159
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
இந்தியர்களின் கோரிக்கைகளை நேரிடையாகக் கண்டறிய, அப்போதைய இந்தியா மந்திரி சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் தலைமையில் கிரிப்ஸ்மிஷன் என ஒன்று இந்தியாவுக்கு வருகை புரிந்தது. பெரியார் நீதிக்கட்சித் தலைவர் என்ற முறையில் கிரிப்ஸைத் சந்தித்துத் தமது திராவிடநாடு கோரிக்கையை விளக்கினார். கிரிப்சோ முதலில் இந்து இந்தியா, முஸ்லிம் இந்தியா எனப் பிரித்தால், பிறகு திராவிட இந்தியா, வட இந்தியா தானே வந்து விடும் என்பதாகக் கருதினாராம்.
"குடி அரசு" வார இதழும், "விடுதலை" நாளேடும் கொடிகட்டிப் பறக்கின்றன. அண்ணாவின் எழுத்தோவியங்கள்; எஸ்.எஸ். மாரிசாமி, ரா.பி. சேதுப்பிள்ளை , என்.வி. நடராசன் ஆகியோரின் கருத்தாழமிக்க கட்டுரைகள் அணிசெய்கின்றன. ஆரியர் - திராவிடர் பற்றி இலக்கிய ஆதாரங்கள் வரலாற்று உண்மைகள் பூகோளச் சான்றுகள் அடுக் கடுக்காய் எடுத்தாளப்படுகின்றன. புள்ளி விவரங்கள் பார்ப்பனக் கொள்ளையை விளக்குகின்றன. கெஜட் பதிவு பெற்ற 650 உத்தியோகங்களில் 350 பார்ப்பனர்க்கு; நூறு ரூபாய்க்கு மேல் மாதச் சம்பளம் பெறும் உத்தியோகங்கள் 6000-ல் 3508 பார்ப்பனர்க்கு; முப்பத்தைந்து முதல் அறுபது ரூபாய் வரை சம்பளம் பெறும் அலுவல்களில் 8000 பார்ப்பனர்க்கும் 9000 மற்றவர்க்கும் என்ற நெஞ்சு பதறும் நிலைமை விளக்கப் படுகின்றது.
1938-ஆம் ஆண்டு இந்திப் போரில் கண்டெடுத்த தொண்டர் மாணிக்கம் என்.வி. நடராசன், அதுவரையில் காங்கிரஸ்காரர்; சென்னை பெத்து நாய்க்கன் பேட்டை வாசி. பெரியாரின் உண்மைத் தொண்டர், அண்ணாவின் அருமை நண்பர். - திராவிடன் வார இதழில் இவர் பேனாவின் திறம் காட்டி வந்தார். தி.மு.க. அமைப்புச் செயலாளராக நெடுநாள் உழைத்தவர், எளியவர், தொழிலாளர் தோழர், கலைஞர் அமைச்சரவையில் உறுப்பினராயிருக்கும் போதே 1975-ல் மரணமடைந்தார். மக்களான சோமு, செல்வம் தி.மு.க. தொண்டர்கள். அனைத்துக் கட்சியினராலும் என்றும் நட்புரிமை பூண்டு கொண்டாடப்பட்ட, சுயமரியாதை இயக்கத்தின் மக்கள் தொடர்புத் தலைவர்.
எஸ்.எஸ். மாரிசாமி இடதுகையால் மிகமிக விரைவாகச் சரமாரியாகக் "காண்டிபம்" வாயிலாகப் பொழிவார். முதலில் காமராசருக்கும், பின்னர் இராஜாஜிக்கும் அதன்பின் கலைஞ ருக்கும் அணுக்கமான நண்பராக விளங்கினார். மாநிலங்களவை உறுப்பினராக நன்முறையில் கடமை யாற்றியவர். 1976 மிசாக் கைதியாகி விடுதலையான பின், சிறிது நாள் ஒய்வில் இருந்தார்.
1939 செப்டம்பர் 3-ஆம் நாள் மூண்ட இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் சம்மதம் பெறாமல் இந்தியாவையும் பிரிட்டன்<noinclude></noinclude>
ls4n9q6t0fr2zdrwf16oas5te5tbnk5
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/161
250
452343
1433662
2022-07-21T03:16:43Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
160 ஈடுபடுத்தியது தவறு என்றும், அதைக் கண்டிக்கும் முகமாகத் தான் வெளியேறுவதாகவும் கூறித், தமது இருபத்தெட்டு மாத ஆட்சியை விட்டு, எட்டு மாகாணக் காங்கிரசும் பதவி விலகியது. சென்னை மாகாணப் பிரதமரான இராசகோபாலாச்சாரியார் 1939 அக்டோபர் 27-ஆம் நாள் பதவி நீத்தார். இதற்குள் சென்னை மாகாண கவர்னர் சர் ஆர்தர் ஹோப் நீதிக்கட்சியின் அரசை உடனே அமைக்குமாறு கட்சித் தலைவர் பெரியாருக்குத் தாக்கீது அனுப்பினார். ஆச்சாரியாரே பெரியாரிடம் வந்து, சண்டை சமயத்தில் அட்வைஸரி ஆட்சி நடக்க விடுவது ஆபத்து. தயவு செய்து நீங்கள் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டால், நானும் மந்திரியாக இருந்து, எங்கள் ஆட்களிலும் 2, 3 பேரை இருக்கச் செய்து உதவுகிறேன் என்று கூறினார்.
பெரியாரோ முன்னெச்சரிக்கையாக அக்டோபர் 25-ஆம் நாள், சென்னை அடையாற்றில் நடைபெற்ற நிர்வாகக் குழுவில், நீதிக்கட்சி பதவி ஏற்காது என்றும், நேசநாடுகளின் போருக்கு ஆதரவு தரும் என்றும் முடிவுகளை மேற்கொண்டார். வலிய வந்த பதவி நாற்காலியைத் தலைவர் இப்படி எளிமையாக உதறிவிட்டாரே என்று சில பதவியாசைத் தோழர்கள் மனத்திற்குள் பொருமினர். தமது முடிவை 29-ஆம் நாள் பெரியார் அறிவித்து விட்டார். நாற்பதாண்டு கட்கு முன்னரே தம்மை நாடி வந்த சென்னை மாகாணப் பிரதமர் பதவியை ஒதுக்கிய பெரியாரின் மாண்பு என்னே! வெள்ளுடை வேந்தரை நினைவுறுத்தும் இச் செயலில், அதனிலும் மேலான முற்போக்கு ஒன்றும் உள்ளது. அன்னார் தமக்குத்தான் பதவி வேண்டா மென்றார்; தியாகராயரைப் போன்றே நீதிக்கட்சித் தலைவரான பெரியாரோ, தமது கட்சியே பதவி ஏற்காதெனத் திட்டமாகக் கூறிவிட்டார்! பெரியாரைப் பற்றிச் சரியாகப் புரியாத கவர்னரோ, பன்னீர் செல்வத்திடம், உங்கள் தலைவருக்கு நன்றாக ஆங்கிலம் கெரியமார அடுத்து முதல் மந்திரி அவர்தான் - என்றாராம். செல்வமோ, எங்கள் தலைவர் உங்கள் பதவியை ஏற்றுக்கொள்வாரா என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையே என்று, அவரது வாயை அடைத்தாராம்.
நவம்பர் இரண்டாம் நாள் பண்டித முத்துசாமியாரும், ஈ.வெ. கிருஷ்ணசாமியாரும் விடுதலை பெற்று வெளிவந்தனர். பெரியாரே சிறை வாசலில் சென்று அன்னாரிருவரையும் வரவேற்றுச் சிறப் பித்தனர். ஈ. வெ. கிருஷ்ணசாமியோ முன்னிலும் தீவிரத்துடன், ஈரோட்டில் ஆரிய திராவிட ஆராய்ச்சிப் பள்ளி ஒன்று துவக்கிப் பணிபுரியலானார். ஈரோட்டில் திராவிட நடிகர் கழகம் ஒன்றைப் பெரியார் 1939 நவம்பர் 24 ஆம் நாள் துவக்கி வைத்தார்.
வடவர் ஆதிக்கம் அடியோடு தகர்க்கப்பட்டுத் தமிழர் சுய ஆட்சி உரிமை பெறவேண்டும் என்ற அடிப்படையில் பெரியார் திராவிட<noinclude></noinclude>
h7rdxc60epm7stq6nqcg6nsa5f2m513
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/162
250
452344
1433663
2022-07-21T03:17:18Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
161
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
நாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை உருவாக்கி, முதன் முதலாக இதே தலைப்பில், "குடி அரசு" 1939 டிசம்பர் 17 ஆம் நாள் இதழில் தலையங்கம் தீட்டினார். பின்னர் இந்தியாவில் இந்துக்களாலும், காங்கிரஸ் கட்சியாலும் முஸ்லிம் சமுதாயத்துக்கு நன்மை கிடைக்காது என்பதாகக் கருத்து வெளியிட்ட அனைத்திந்திய முஸ்லிம் லீக் தலைவர் முகம்மதலி ஜின்னாவை ஆதரித்து. 22 -ஆம் நாள், அவரது அறிவிப்பைப் பெரியாரும் வழிமொழிந்தார். திராவிடநாடு பிரச்சினையைத் தமக்கு 61-வது பிறந்த நாள் விழாவெடுத்த திருவாரூரில் 18-ம் தேதியும், பின்னர் காஞ்சியில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி விவாதிக்கக் கூடிய குழுவில் 31-ந் தேதியும் விரிவாக விளக்கினார் பெரியார்.
பம்பாயில் சுயமரியாதை இயக்க - நீதிக்கட்சித் தோழர்களும், டாக்டர் அம்பேத்கரும் பெரியாரின் வருகையை மிகவும் விழைந்தனர். நெடுநாளைய அவர்களது விருப்பத்திற்கு ஒருப்பட்டுப், பெரியார் தமது குழுவினருடன், ரயில் மார்க்கமாக 1940 சனவரி 6-ஆம் நாள் பம்பாய் போய்ச் சேர்ந்தார். குழுவில் “சண்டே அப்சர்வர் ஆசிரியர் பி. பாலசுப்ரமணியம், “ஜஸ்டிஸ்" ஆசிரியர் டி.ஏ.வி. நாதன், கே.எம். பாலசுப்ரமணியம், அறிஞர் அண்ணா ஆகியோர் இருந்தனர். டாக்டர் அம்பேத்கார் பெரியாருக்கு 6-ந் தேதி இரவு விருந்தும், 9-ந் தேதி இரவு விருந்தும், 7-ந் தேதி மாலை தேநீர் விருந்தும் அளித்துச் சிறப்பித்தார். 8-ந் தேதி இரவு ஜனாப்ஜின்னா அவர்களை அவரது இல்லத்தில், டாக்டர் அம்பேத்கரும் உடனிருக்கப், பெரியார் சந்தித்துப் பேசினார். தமது இந்தி எதிர்ப்பு பற்றி விளக்கவே, அவர்களிருவரும் ஆரவாரத்துடன் ஆதரவு தெரிவித்தனர். தனிநாடு பிரச்சினை குறித்தும் எடுத்துரைத்தார். மூவரும் ஆங்கிலேயர்களின் பிரியத்துக்குரிய காங்கிரஸ் பிடியிலிருந்து நாட்டை எப்படி விடுவிப்பது? இந்துக்களின் கொடுமையிலிருந்து - முஸ்லிம், தாழ்த்தப் பட்ட, திராவிட இன மக்களை எப்படி மீட்பது? என்பது பற்றி யெல்லாம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். பம்பாய் வாழ் இயக்கத் தோழர்களின் ஊர்வலம், பொதுக்கூட்டம் ஆகியவற்றில் பெருமையுடன் கலந்து கொண்டு, அவர்களைப் பூரிப்பில் ஆழ்த்திய பெரியார், சனவரி 10-ஆம் நாள் புறப்பட்டார்; இந்தியா ஒரே நாடு என்ற தத்துவத்தைத் தூளாக்கும் வெடிமருந்தைத் தூவி விட்டு
தமிழகத்திற்குத் திரும்பிய பெரியார், காங்கிரஸ் ஆட்சி ஒழிந்த பின்னும், அது புகுத்திய கட்டாய இந்தி இன்னும் ரத்தாகாத நிலை குறித்துக் கண்டித்து வந்தார். கவர்னரின் கீழிருந்த அட்வைசர் ஆட்சி, 1940 பிப்ரவரி 21-ஆம் நாள் வெளியிட்ட உத்தரவில், இந்தியை விருப்பப் பாடமாக வைத்துக் கொள்ளலாம் எனக் கூறியிருந்தது. கட்டாய இந்தி ஒழிந்ததற்குக் களிப்புத் தெரிவித்தாலும், மக்களின்<noinclude></noinclude>
po5ypezfbe9lk32s0560yrapyg803b3
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/163
250
452345
1433664
2022-07-21T03:17:48Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
162 வரிப்பணத்திலிருந்து விருப்பப் பாடமாகவேனும் இந்தி கற்க அவசியமில்லையெனப் பெரியார் வெறுப்பும் தெரிவித்தார். மற்றப் பத்திரிகைகள் எதிர்ப் பிரச்சாரம் செய்து வந்த போதிலும், ஆதரவு தெரிவித்து வந்த "மெயில்" ஏட்டுக்குப் பெரியார் தமது நன்றியை, 25-ஆம் தேதி “குடி அரசு" அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
சென்னை ராயப்பேட்டையில் நீதிக்கட்சியின் தலைமை அலுவலகத்தை 1940 பிப்ரவரி 4-ஆம் நாள் சர் ஏ.டி. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். பிரிட்டிஷ் அரசு அவரை லண்டனில் இந்தியா மந்திரி ஆலோசகராக நியமித்திருந்தது. பெரியார் அளவற்ற மகிழ்ச்சி யுடன் அவரைப் பாராட்டினார். லண்டன் புறப்படுமுன் தமிழ் நாடெங்கும் அவருக்கு வழியனுப்பு விழாக்கள் சிறப்புடன் நடைபெற்றன. ஆனால் அந்தோ! அவர் புறப்பட்டுச் சென்ற ஹனிபால் என்ற விமானம் மார்ச் 1-ஆம் நாள் காணாமல் போய்விட்டதாக ஒரு செய்தி வந்தது. இதுவரையில் அது என்ன ஆயிற்று என்பதைக் கண்டறிய முடியாத ஒரு மர்மமாகவே அது போய்விட்டது. தமது துணைவியார் நாகம்மையார், தமது தாயார் சின்னத்தாயம்மையார், தமது அண்ணன் மகன் லண்டனில் படித்த ரங்கராம் ஆகியோர் மறைந்த போதும் கண்ணீர் சிந்தாத பெரியார், தமது உண்மைத் தோழரும், உற்ற துணைவரும், உள்ளும் புறமும் ஒன்றாயிருந்தவரும், ஓயாத உழைப்பாளரும், தம்மிடம் களங்கமற்ற அன்பும் விசுவாசமும் கொண்டவருமான பன்னீர்செல்வம் மறைவுக்குக் கலங்கிக் கதறி, முதன் முறையாகக் கண்ணீர் வடித்தார்! அவருக்குக் கிடைத்த பதவி, சர்க்கரை தடவிய நஞ்சு உருண்டை குத்திய தாண்டில் முள்ளாகவும், பன்னீர்செல்வம் அத்தூண்டிலில் சிக்கிய மீனாகவும் ஆன நிலையினை எண்ணி எண்ணி மனம் குமைந்தார் பெரியார்/ ஏப்ரல் 2-ஆம் நாள் பன்னீர்செல்வம் மறைவுக்குத் துக்க நாள் என்று அறிக்கை வெளியிட்டார். ஏப்ரல் 7-ஆம் நாள் கோவையில், என்.ஆர். சாமியப்பா, பா. தாவுத்ஷா, சர் அ. முத்தையா செட்டியார் ஆகியோர் பங்கேற்ற நீதிக்கட்சி மாநாட்டு அரங்கிற்குப் பன்னீர் செல்வம் பெயரைச் சூட்டினார் பெரியார்
இதற்கிடையில் ஜனாப் ஜின்னா, அதுகாறும் இஸ்லாமியக் கலாச்சாரப் பாதுகாப்பு, உத்தியோக உரிமை கோருதல் ஆகியவற்றுக்காக நிறுவப்பட்ட முஸ்லிம் லீக்கின் சார்பில், 1940 மார்ச் திங்களில் முதன் முதலாகத் தமது பாகிஸ்தான் என்னும் தனி நாடு கோரிக்கையைப் பிரகடனம் செய்திருந்தார். பெரியார் அதனை முழுமையாக வரவேற்று, மார்ச் 11-ஆம் நாள் “குடி அரசு" தலையங்கம் தீட்டினார். பின்னர் ஜுன் 6-ஆம் நாள் காஞ்சியில் நடைபெற் திராவிட நாடு பிரிவினை மாநாட்டை ஓட்டி, ஜின்னா பெரியாருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்த மாநாடு திராவிட நாடு தனி ஸ்டேட்<noinclude></noinclude>
aletyokowrbdaq1xbh7mqtkgmnsnovv
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/164
250
452346
1433665
2022-07-21T03:18:15Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
163/
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
ஆவதற்கான நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரத்தைப் பெரியாருக்கு வழங்கியது. அடுத்த வாரத்தில் நெல்லையில் நடந்த தமிழர் மாநாட்டின் தலைமை ஏற்றபோது, பிரிட்டிஷாரின் யுத்த முயற்சிகட்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானத்தைப் பெரியார் நிறைவேற்றினார். அண்ணாவுடன் இங்கு, சி.பி. சின்னராஜ், பி. சண்முக வேலாயுதம் கலந்து கொண்டனர். சென்னை திரும்பியதும் அடுத்த திங்களில் அதாவது ஜூலை 30-ஆம் நாளில் சென்னை வந்திருந்த வைசிராய் வெல்லிங்டனை, அவர் விரும்பிய வண்ணம் சென்று சந்தித்துப் பேசினார் பெரியார்.
சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு என அழைக்கப்பட்ட வேலூர் சின்னராஜ் சுயமரியாதை இயக்க முன்னணி வீரர். அனல் பறக்கப் பேச எழுத நடிக்க வல்லவர். அண்ணாவின் அன்புத் துணைவராய் விளங்கியவர், “தீப்பொறி" ஏடும், போர் வாள் நாடகமும் கணக்கற்ற நூல்களும் நகைச்சுவை மிளிரும் பேச்சும் தனித்தன்மை பெற்றவை. 1978-ல் மறைந்தார். தமிழ் நாடு சட்ட மன்ற மேலவைத் தலைவராகக் கலைஞர் ஆட்சியில் வீற்றிருந்தவர்.
ஈரோடு சண்முகவேலாயுதம் "ஈரோடு வாசி", "ஈரோட்டுப் பாதை" ஆசிரியர். எத்நாளும் பெரியாரின் அந்தரங்கத் தொண்டர். நல்ல பேச்சாளர். பெரியாரின் அசைவுக்கும் அர்த்தம் சொல்லும் வித்தகர்.
1940 மே 5-ஆம் நாள், சென்னையில், இந்தி எதிர்ப்புத் தியாகிகளான தாளமுத்து நடராசன் கல்லறைக்குப் பெரியார் அடிக்கல் நாட்டினார். 1939 அக்டோபரில் அரசு பதவி நீங்கியும், தமது சம்பளத்தை மட்டும் பெற்று வந்தனர், சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினர்கள். இதைக் கண்டித்துச் சம்பள ஒழிப்புநாள் கொண்டாடினார் பெரியார், மே 15-ஆம் நாள்!
வரலாற்றுப் புகழ் தாங்கிய திருவாரூர் மாநாடு 1940 ஆகஸ்டுத் திங்கள் 24, 25 ஆகிய இரு நாட்களிலும் சிறப்புற நடைபெற்றது. 15-வது நீதிக்கட்சி மாகாண மாநாடு இது. பெரியார் தலைமையில், இளவரசர் முத்தையா திறந்து வைக்க, புச்சிரெட்டிப்பாலம் ராமச்சந்திர ரெட்டியார் கொடி உயர்த்த, செல்வம் நகரில், ஜின்னா மண்டபத்தில் கோலாகலமாகக் கூடியது. திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கம் கட்சியின் தீர்மானமாக மாநாட்டில் இயற்றப்பட்டது மிக முக்கியமானதாகும். கி.ஆ.பெ. விசுவநாதம் காரியதரிசியாகவும், சி.என். அண்ணாதுரை கூட்டுக் காரிய தரிசியாகவும் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.<noinclude></noinclude>
7a2b0xzxqmw330tvfaer9pnxk20vy2l
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/165
250
452347
1433666
2022-07-21T03:18:36Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
164
ஆரிய, இந்து பிடிப்பிலிருந்து நம் மக்கள் விடுபடத் தனி நாடுதான் சிறந்த வழி; தாயைக் கொல்வதா? பசுவை வெட்டுவதா? என்ற மாய்மாலப் பேச்சுகளுக்கெல்லாம் மயங்கிடக்கூடாது. சிலோன், பர்மா முதலிய நாடுகள் இந்தியாவிலிருந்து தனியே பிரிந்ததால்தான் தம் மக்களை வாழவைக்கவும், பிறரை அங்கிருந்து விரட்டவும் முடிந்தது. ஒரு காலத்தில் இங்கிலாந்தில் அந்நியத் துணி அணி வோருக்கு 30 பவுன் அபராதம்: இப்படிச் செய்து சுதேச நெசவுத் தொழிலை வளர்த்தது இங்கிலாந்து - என்றெல்லாம் கணக்கற்ற ஆதாரங்களை அள்ளி வழங்கினார் பெரியார்.
கட்சி இவ்வளவு வளர்ந்ததும், அதிகார பூர்வமான தினசரி ஏடாகிய "விடுதலை" மாதம் 500 ரூபாய் நட்டத்தில் நடக்கிறதே எனப் பெரியார் அங்கலாய்த்தார். இருப்பினும் கலக்கமுறாது தமது பணியினைத் தொடர்ந்தார். சென்னையில் டாக்டர் நாயர் நினைவுநாள். கோகலே மண்டபத்தில், 1940 - ஜூலை 20 ஆம் நாளில் நடைபெற்ற போது அரிய கருத்துக்களை வழங்கினார். டாக்டர் நாயரை திராவிடத்து லெனின் என வர்ணித்தார். அவர் இருபது ஆண்டுகட்கு முன்பே தனித் திராவிட நாடு கருத்துக்கு ஒரு கருவிளைத் தந்தவராம். பதவியில் நமக்கு நாட்டம் இருக்கக்கூடாது: 17-ஆண்டுக்காலம் பதவியிலிருந்தது ஜஸ்டிஸ் கட்சி; ஆனால் அதனால், காங்கிரஸ் தன்னை வளர்த்துக் கொள்ளவே ஏதுவாயிற்று: காங்கிரஸ் 28 மாதம் இப்போது ஆள்வதற்குள், நாம் எவ்வளவு நம்மை வளர்த்துக் கொண்டு விட்டோம்! எனவே நாம் பதவியை நாடாமல், கட்டுப்பாட்டை வளர்ப்போம் - என்றார் பெரியார்.
பெரியாரின் பெருமையினைப் பாராட்ட யங் ஜஸ்டி சைட் லீக் சார்பில் சென்னையில் கன்னிமாரா ஓட்டலில் அக்டோபர் 5-ம் நாள் விருந்தொன்று நடந்தது. பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு பாராட்டினர். அதே திங்கள் 25-ஆம் நாள் சுந்தர வடிவேலு - காந்தம்மா கலப்புத் திருமணம் பதிவு செய்யப்பட்டது; பெரியார் வாழ்த்தோடு!
என்.டி. சுந்தர வடிவேலு எம்.ஏ., எல். டி. கல்வித் துறையில் ஆய்வாளராகத் துவங்கிப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக ஆறாண்டு பணியாற்றும் உயரம் வளர்ந்தவர். பெரியாரின் அன்புக்குரியவர். குஞ்சிதம் குருசாமி அம்மை யாரின் தங்கையான எம்.எஸ்.சி. பட்டதாரி காந்தம் அம்மை யாரைப் பதிவுத் திருமணம் செய்தவர். ஒரே மகன் இளம் அறிவாளன் வள்ளுவன் மறைவால் உள்ளம் பாதிக்கப்படினும், கல்வி வெள்ளம் பாமரனுக்கும் பாய்ந்திட வழிவகுத்த கொடையாளர். காமராசர் காலத்து மதிய உணவு இவரது திட்டமே.<noinclude></noinclude>
4zlmr4h6u070n6mstve8vpfcborzpdk
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/166
250
452348
1433667
2022-07-21T03:19:10Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
165)
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
பாசுதேவ் இவ்வாண்டு நவம்பர் ஆறாம் நாள் சென்னை மேயராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது பெரியாரின் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். 1939 - நவம்பரில், இருந்த பழைய அமைப்பின் உதவியால், சத்தியமூர்த்தி அய்யர் மேயரானதற்குக் காங்கிரஸ் - பார்ப்பன வட்டாரங்கள் குதூகலித்துக் கிடந்தன! சக்கரவர்த்தி இராசகோபாலாச் சாரியார் 1940 நவம்பர் 11-ஆம் நாள் பெரியாரைச் சந்தித்துச் சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு யோசனை கூறினார். பெரியார் இசைய மறுத்தார். இக்காலகட்டத்தில் அண்ணாவின் கட்சிப்பணி உச்ச நிலையிலிருந்தது. சென்னையில் சீர்திருத்தத் தொண்டர்கள் அண்ணா தலைமையில் மாநாடு கூடிப் பெரியார் கருத்துகளுக்கு உரமேற்றினர். பின்னாட்களில் எதிர் முகாம்களுக்குச் சென்றுவிட்ட வேளுக்குடி கா.மு. ஷெரீப், தமது கவிதைகளைக் “குடி அரசு" இதழ்களில் தொடர்ந்து யாத்தளித்து வந்தார். "குடி அரசு”, “விடுதலை" ஆகிய இரண்டு பத்திரிகைகளையும் சென்னையிலிருந்து வெளிக்கொணர ஏற்பாடு செய்யப்போவதாகக் “குடி அரசு” இதழில் டிசம்பர் 29-ல் பெரியார் அறிக்கை வெளியிட்டார். அதே போன்று 1941-சனவரி 4-ஆம் நாள் நிறுத்தப்பட்ட "குடி அரசு" மீண்டும் ஈரோட்டிலிருந்து 1943 அக்டோபர் 16-ஆம்நாள்தான் வெளியாயிற்று! அப்போது கைவல்யம் அவர்கள் “வந்தாயா குடி அரசே?" என்று வாழ்த்தி, வரவேற்றுத் தம் பேனாவை உருவிப் புறப்பட்டார், எதிர்த்தோரைத் தாக்குதலுக்கு!
ரயில்வே நிலையங்களிலுள்ள உணவு விடுதிகளில் - இவ்விடம் பிறாமணாளுக்கு, இவ்விடம் இதராளுக்கு - என்று தனித்தனியே இருவேறு இடங்கள் சாதி அடிப்படையில் இருந்ததைப் பெரியார் வன்மையாகக் கண்டித்து வந்தார். பார்ப்பதற்கு மிக அற்பமானதாக இது தோன்றினாலும் பெரியாருடைய தொலை நோக்குப் பயணத்தில் இதெல்லாம் காலில் இடறும் சிறுகல் எனினும், சமூக இழிவு ஒழிப்பிற்கு, இதனை நீக்குவது அவசியம் எனப் போராடினார். ரயில் வண்டிகளில் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு என்றுதான் இருந்ததே தவிரப் பிராமணாள் வகுப்பு சூத்திராள் வகுப்பு என இருந்ததில்லையே! 20-3-1941-ல் ரயில்வே நிர்வாகத்தின் இணக்கத்தினால் இந்த பேதம் ஒழிக்கப்பட்டது: பெரியாருக்கு வெற்றிதானே? ("விடுதலை" 21-3-41 அன்று பெட்டிச் செய்தி)
சோவியத் ரஷ்யாவில் பொதுவுடைமை இயக்கத் தந்தையான லெனினுடன் தம் இளமைக் காலத்தில் இணைந்து பணியாற்றிய, வங்க வீரர் எம்.என். ராய், பின்னர் இந்தியா திரும்பிக், காங்கிரசில் 4 இருந்து, தமது தீவிரப் போக்கினுக்கு அது ஏற்றதல்ல என விலகி, ரேடிக்கல் டெமக்ரடிக் பார்ட்டி எனும் தீவிர ஜனநாயகக் கட்சியினைத்<noinclude></noinclude>
nul9aj7drzfvll6jmpkpnyov0qryddj
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/167
250
452349
1433668
2022-07-21T03:19:56Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
166
துவக்கினார். பெரியாருக்கு அவரிடத்திலும், அவரது முற்போக்குக் கொள்கையிடத்திலும் மிகுந்த பற்று உண்டு. அவரது கருத்துகளைக் "குடி அரசு" இதழில் மொழி பெயர்த்து வெளியிடச் செய்வார். 1941-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவர் தமது துணைவியாரான ஜெர்மானிய மாதரசி எல்லென்ராயுடன், சென்னைக்கு வருகை தந்து, பெரியாரின் விருந்தினராக இருந்தார். இருவரும் தத்தம் சிந்தனை விருந்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அகில இந்தியக் காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணி ஒன்றை உருவாக்கிக், காங்கிரசல்லாத மந்திரி சபையை முதலில் சென்னையில் அமைத்து, வழிகாட்ட வேண்டும் எனப் பெரியாரை எம்.என். ராய் கேட்டுக் கொண்டார்.
நாடெங்கிலும் திராவிடர் உணர்வு வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது! ஆங்காங்கு ஏற்கனவே இருந்து வந்த பற்பல பார்ப்பனரல்லாதார் சங்கங்களெல்லாம் திராவிடர் கழகங்களாக மாற்றம் பெற்றன. பெரியார் மீண்டும் 1942-ஆம் ஆண்டில் ஒருமுறை வடநாடு சுற்றுப்பயணம் சென்றார். அங்கிருந்து தகவல் தந்து அண்ணாவும் புறப்பட்டார். "குடி அரசு" இதழ் நிறுத்தப்பட்டதால், அங்கிருந்து சில எழுத்துகள், பெட்டிகள், அலமாரிகள் முதலிய அச்சகத்துத் தேவைகளைப் பெரியார் கொடுத்து உதவ, அண்ணா காஞ்சியிலிருந்து "திராவிட நாடு" என்ற வார இதழைத் துவக்கினார். 1942 மார்ச் 8-ஆம் நாள், முதல் இதழ் வெளிவந்தது. "குடி அரசு" இல்லாத குறையை அது போக்குவதாகவும், “திராவிட நாடு" இதழ் வளர்ச்சிக்கு ஆங்காங்கு தோழர்கள் நிதியளிக்க வேண்டுமென்றும் பெரியார் 1-4-1943-ல் அறிக்கை வெளியிட்டார். தாமே நூறு ரூபாய் அளித்தார். காஞ்சியில் திராவிட நடிகர் கழகம் ஏற்படுத்தித், தாம் எழுதிய சந்திரோதயம் என்னும் புரட்சி நாடகத்தில், தாமே மூன்று வேடங்கள் ஏற்று நடித்துத் தமிழ் நாடெங்கும் அந்த நாடகத்தின் வாயிலாகவும் அண்ணா நிதி திரட்டினார். திருவாரூரிலிருந்து மாணவர் மு. கருணாநிதி 1942 ஏப்ரல் 26-ம் தேதியிட்ட "திராவிட நாடு" இதழில் இளமைப் பலி என்ற கட்டுரை தீட்டியிருந்தார். இவர் திருவாரூரில் “முரசொலி" என்ற சிறு ஏடு ஒன்று துவக்கிக் காலணா விலையில் 1942 ஆகஸ்ட் 10-ஆம் நாள் முதல் வெளியிட்டு வந்தார். வேகமும் விவேகமும் மிக்க எழுத்துகளில் பெரியாரின் கருத்துகள் *முரசொலி'யில் மிளிர்ந்தன.
பாரத மாதாவைத் துண்டாடுவதா? என்று பதைத்தவர்கள் தங்கள் பாதையை மாற்றிக் கொண்டனர். இராஜாஜி காங்கிரசிலிருந்து விலய பாக்கிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவு தந்தார். அவருக்காகக் கலக்கப்பட்ட "கல்கி" வார இதழ் பிரிவினைக் கொள்கையைத் தாங்கி எழுதியது. 1942 ஏப்ரல் 23-ஆம் நாள், பெரியார் ஆச்சாரியாரின் பாக்கிஸ்தான் ஆதரவு பற்றிக் குறிப்பிட்டுச் செல்<noinclude></noinclude>
93obf8cno48w0o3qhz3x8bcaml9o3ba
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/168
250
452350
1433669
2022-07-21T03:20:22Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
167
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
நீதிக்கட்சியின் உடன்பாடு பெறாமல் எந்தத் திட்டமும் நிறைவேற்றப் படக்கூடாது - முடியாது என நினைவுறுத்தினார். ஈரோட்டில் பெரியாரின் வீட்டிற்கே வந்து ராஜாஜி, திராவிடநாடு பிரிவினைக்கு ஆதரவு தருவதாகச் சொன்னார். ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இராமசாமி நாயக்கர் கேட்கும் திராவிடஸ்தானையும் திராவிட மக்கள் கேட்டால் பிரித்து விடவேண்டியதுதான் என்று வெளிப்படையாக ஆதரவு தந்ததோடு அதன் அவசியம் பற்றியும் பேசினார். 1942 ஆகஸ்டு சட்ட மறுப்புக் கலவரங்களால் பொது மக்களுக்குத் தொல்லைதான் எனப் பெரியார் கருதினார். இதனால் விலைவாசி ஏற்றம் ஏற்பட்டதை எடுத்துக் காட்டினார். ஆங்காங்கு காங்கிரஸ்காரர்களால் ஏற்பட்ட அழிவு, சேதம், சொத்து நாசம் ஆகிய மோசமான செயல்களைக் கண்டித்தார். இதனால் தான் அடுத்த அக்டோபர் 18-ஆம் நாள் சென்னை மாகாண கவர்னரைச் சந்தித்து, துவக்கத்திலிருந்து தாம் ஆகஸ்டுக் கலவரங்களைக் கண்டனம் செய்ததை எடுத்துக் காட்டி, அரசினர் விதித்த கூட்டு அபராதத் திட்டத் திலிருந்து நீதிக் கட்சியினர்க்கு விலக்களிக்கக் கோரினார், வைசிராய், கவர்னர் இருவருமே 1942-ஆம் ஆண்டில் மீண்டும் வேண்டுகோள் விடுத்தும், பெரியார் சென்னை ஆட்சிப் பொறுப்பை ஏற்க மறுத்தார். பெரியாருக்குச் சிலை ஒன்று நிறுவ வேண்டுமென அண்ணா அக்டோபர் 25 "திராவிட நாடு" இதழில் கருத்தறிவித்தார்.
1942 இறுதித் திங்களில் பெரியாருக்கு உடல் நலமில்லை . சென்னைப் பொது மருத்துவமனையில் சில நாள் இருந்துவிட்டு, ஈரோடு சென்று ஓய்வு எடுத்து வந்தார். ஈரோட்டிலிருந்து விடுதலை" நாளேடு மீண்டும் வெளியாயிற்று. சென்னையில் சர். ஏ. ராமசாமி அவர்களின் மூத்த மகன் டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி (பாரிஸ்டர்) "லிபரேட்டர்" என்ற ஆங்கில நாளேட்டினை 1942 டிசம்பர் 7-ஆம் நாள் துவக்கினார். இது நீதிக் கட்சியின் படைக்கலனாக விளங்கியது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு பட்டமளிப்பு " விழாவில் கலந்து கொண்ட திருவாங்கூர் மகாராணியும், மன்னரும் தமது நல்லெண்ண அறிகுறியாய், சமஸ்கிருத வளர்ச்சிக்கு, ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை தருவதாக அறிவித்தனர். இதைக் கேள்வியுற்ற பெரியார், உள்ளங் கொதித்து, வடமொழி வளர்ச்சிக்கு இந்தப் பணம் செலவிடப்படலாகாது என வலியுறுத்தியும், வற்புறுத்தியும் போராடினார். இறுதியில், மாணவர் விடுதியினை விரிவுபடுத்திட அத்தொகையினை செலவழிப்பதாகப் பல்கலைக் கழக நிர்வாகம் முடிவெடுத்த பின்னரே, பெரியார் ஓய்ந்தார். திருவாங்கூர் அரசர் இதற்கு இணங்காவிடில் பணத்தையே திருப்பித் தந்துவிடலாம் என்றார் பெரியார்
உடல் நிலை சரியானதும், மீண்டும் பெரியாரின் சுற்றுப் பயணங்கள் தொடர்ந்தன. இளைஞர்களைப் பொதுவுடைமைக்<noinclude></noinclude>
91rcrj7rchwnbwoqgkkhhrcdi0rd1t0
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/169
250
452351
1433670
2022-07-21T03:20:46Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
168
கொள்கைகள் பெரிதும் கவர்ந்ததால், அவர்கள் அங்கே ஈர்க்கப் படுவதைத் தடுக்கவே, தாம் 1930-ல் உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கி யதாகக் காந்தியார் உண்மையை ஒப்புக் கொண்டார்; இது காந்தியாரின் சனாதனப் போக்கையே காட்டுகிறது என்று பெரியார் எடுத்துக் காட்டினார். பெங்களூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் பங்கேற்றார்; பின்னர் ஜூலை 1943-ல் உடல் நலிவுற்றுச் சில காலம் சென்னைப் பொது மருத்துவமனையிலிருந்தார். ராஜா அண்ணாமலைச் செட்டியாரால் புதிதாகத் தொடங்கப்பெற்று, முறுக்கோடு பவனி வந்த தமிழிசை இயக்கத்துக்குப் பெரியார் தமது ஆதரவைத் தெரிவித்தார். கொச்சி திவான் ஆர்.கே. ஷண்முகம், சர் ஏ. முத்தையா செட்டியார் முதலியோர் முன்னோடிகளாயிருந்தனர்.
என்னதான் நீதிக்கட்சிக்குத் தலைவராகத் தாம் இருந்த போதிலும், சுயமரியாதை இயக்கத்தில்தான் தமக்கு நாட்டம் அதிகம் எனப் பெரியார் காட்டி வந்தார். நீதிக் கட்சியைப், பெரியாரைத் தவிர இன்னொருவர் கூட நடத்தி விடலாம்; ஆனால் சுயமரியாதை இயக்கத்துக்குப் பெரியார்தான் இருக்க வேண்டும் - என்று “விடுதலை" தலையங்கம் தீட்டியது. மேலும் இயக்கத்துக்குச் சரியான ஒரு வாரிசு வேண்டும் என்பதாகவும் பெரியார் தெரிவித்தார். 1943 - செப்டம்பர் 13-ஆம் நாள் ஏட்டில், பொறுப்பாக இருந்து; கட்சி, பத்திரிகை, பதிப்பகம், அச்சகம் ஆகியவற்றைக் கவனிக்க ஆட்கள் தேவை என்றும், வருகின்றவர் சிறிது காலம் இருப்பதும், திருமணமோ வேறு நிலையோ கிடைத்ததும் அகன்று விடுவது மாயிருக்கிறார்கள். இது இயற்கைதான் என்றாலும், காரியங்கள் நடைபெறத் தடையாகின்றன
மாற்றுவதாக அறிவித்தார். இப்போது "குடி அரசு" துவக்கப்பட்டதால், ஈரோட்டிலிருந்து "விடுதலை" 1943 அக்டோபர் 18-க்குப் பிறகு வெளியாகவில்லை .
1933 - ல் நாகம்மையார் காலமான பிறகு, பெரியாருடைய தனிப்பட்ட தேவைகளைக் கவனிக்க அணுக்கமாக யாருமே யில்லை! அண்ணார் வீட்டிலோ, தங்கை வீட்டிலோ ஈரோட்டிலிருக்கும்போது உணவு கிடைத்துவிடும். ஆனால் இப்போதெல்லாம் பெரியாருக்கு ஓயாத உழைப்பினால், அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அம்மாதிரி நேரங்களில், ஒரு செவிலிப்பெண் அளவிலாவது உடனிருந்து பரிவு காட்ட ஒருவர் தேவையல்லவா? இந்த எண்ணத்தை 1943 அக்டோபர் 23-ஆம் நாள் “குடி அரசு" இதழில் செல்வி கே. அரசியல் மணி அம்மையார் தெரிவித்தார்.
நவம்பர் 19-ம் நாள் ஈரோட்டில் பெரியார் தலைமையில் நடைபெற்ற சந்திரோதயம் நாடகத்தின் வாயிலாக அண்ணாவின் "திராவிடநாடு" வளர்ச்சிக்காக 4000 ரூபாய் கிடைத்தது. இந்த<noinclude></noinclude>
q93esc0i1b86dk318opk26x7ktqcmvv
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/170
250
452352
1433671
2022-07-21T03:21:06Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
169
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
நாடகத்தைக் கண்ணுற்ற பெரியாருக்குக் கலைத் துறையின் மீது அதிக ஆவல் பிறந்தது. நம்மவர்கள் இந்தக் கலைகளை நன்முறையில், வளர்த்திட, நாமும் மூன்று வகையான பிரிவுகளை உண்டாக்க வேண்டும். சினிமா நாடகம் பார்க்கிறவர் கழகம், இசை நுகர்வோர் கழகம், பத்திரிகை படிப்போர் கழகம் - இவை நமக்கு அவசியம் என்றார் பெரியார். திருவையாறு அரசர் கல்லூரியில், விடுதியிலுள்ள பார்ப்பன மாணவர்க்குத் தனி உணவு ஏற்பாடு நடைபெறுவது கேள்விப்பட்டு, "மீண்டும் சேர்மாதேவியா?" எனப் பெரியார் குமுறினார்.
கோவை மாவட்டத்தில் முதலாவதாகத் திராவிடர் கழகம், 1943 நவம்பர் 18-ஆம் நாள் பெரியாரால் ஆரம்பிக்கப்பட்டது. இது ஆங்காங்கு பரவத் தொடங்கியது.
மாயூரத்தை அடுத்த மூவலூரில் பெரியார் பிறந்த நாள் விழாவில் நவம்பர் 21-ஆம் நாள் வ.ரா. நெடுஞ்செழியன் கலந்து கொண்டதாகக் “குடி அரசு" செய்தி ஒன்று வெளியாகியுள்ளது யார் இவர்?
பதினான்கு வயது பள்ளிச் சிறாராயிருந்த போதே 1938 - இந்திப் போரில் திருவாரூரில் கொடி பிடித்துக் கோஷமிட்டவர் மு. கருணாநிதி. 1942-ல் துவக்கிய “முரசொலி" இன்றளவும் நடைபோடுகிறது வெற்றிப் பெருமிதம். 1943-ல் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் துவக்கிப் பின் திராவிட மாணவர் கழகத்துடன் இணைத்தார். சாந்தா அல்லது பழனியப்பன் என்ற நாடகத்தை 1944-ல் எழுதி நடித்துப், பின் நாகை திராவிட நடிகர் கழகத்துக்குத் தந்து, தாமும் விழுப்புரம், புதுவையில் நடித்து வந்தார். 1945 இறுதியில் ஈரோட்டில் பெரியாருடன் தங்கிக் குடி அரசு" உதவி ஆசிரியரானார். 1946-ல் கோவையிலும், பின்னர் சேலத்திலும் திரைப்படக் கதை வசனப் பணியில் தமிழகத்தில் மிக உயர்ந்த இடம் வகித்தவர். 1942 செப்டம்பர் 13-ல் இசைவாணர் சிதம்பரம் ஜெயராமன் தங்கை பத்மாவை மணந்தார். 12-4-48-ல் அவரது அகால மறைவுக்குப் பின், 1948 செப்டம்பர் 15-ல் தயாளு அம்மையாரை மணந்தார். 1951 முதல் சென்னையில் நிரந்தரமாகத் தங்கினார். சென்னை மாநகராட்சியை 1959-ல் தி.மு.க வசமாக்கினார். 1967-ல் தி.மு.க ஆளுங்கட்சியாக அருந்துணை புரிந்தார். 1957 முதல் தொய்வின்றிச் சட்டமன்ற உறுப்பினர். 1969 முதல் 1976 சனவரி முடிய தமிழகத்தில் பொற்காலங்கண்ட முதல் முதலமைச்சர். தனித் தன்மை படைத்த, எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாளர். உணர்ச்சியால் ஊன் உயிரெலாம் உருக்கிடும் ஓங்கு தமிழ்ப்
படைப்பாளர். தமிழகத்தின் ஒரே நம்பிக்கைப் பெருஞ்சூரியன். - 1976-ல் ஏற்பட்ட சோதனையைக் கடந்த நிகழ்ச்சிக்கு, உலக<noinclude></noinclude>
d33xgb9d1feyy40cf2sbh7q7b8o73s1
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/171
250
452353
1433672
2022-07-21T03:21:30Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
170
வரலாற்றிலேயே ஒப்புவமை கிடையாது.1969 - ல் இந்திய ஜனாதிபதியாகும் வாய்ப்பினை ஒதுக்கித் தள்ளித், தாய்த் தமிழக மேன்மைக்குச் சகலத்தையும் தரத்துணியும், தியாகத் தீப்பிழம்பு!
1938-ல் அன்னை நாகம்மையார் மறைவுக்குப் பின்னர் நெருக்கமாயிருந்து, தனிப்பட்ட முறையில் பணிவிடைகள் செய்து, பராமரிக்க யாருமில்லாமலிருந்த பெரியாருக்கு, ஒரு செவிலிப் பெண் தொண்டராக வேலூர் கனகசபை அவர்கள் மகளார் கே. அரசியல்மணி 1943-ல் பெரியாரிடம் வந்து சேர்ந்தார். 1973-ல் பெரியார் மறையும் வரை அவரை விட்டு அகலவேயில்லை ! பக்குவமாய்ப் பத்தியமாய் உணவு சமைத்தல், வேளைதவறாமல் ஒழுங்குடன் உண்ணச் செய்தல், வற்புறுத்திக் குளிப்பாட்டுதல், வலியுறுத்தித் துணி மாற்றுதல், வருவோரை உபசரித்தல், வீட்டில் கணக்கு எழுதுதல் குடி அரசுப் பதிப்பக நூல்களின் சிப்பங்களைச் சுமந்து பெரியாருடன் பயணம் சென்று விற்பனை செய்தல், இயக்கத்தின் கொள்கை களில் முழு நம்பிக்கையோடும் தலைவர் மீது பரிபூரண விசுவாசத்தோடும் தொண்டாற்றுதல், எளிமையா யிருத்தல், இனிமையாய்ப் பழகுதல், இவ்வளவு நற்பண்புகட்கும் உறைவிடமான அரசியல்மணி 1949 ஜூலை 9-ஆம் நாள் ஈ.வெ.ரா மணியம்மை ஆனதில் என்ன தவறு? 64 வயதில் இறந்து போயிருக்க வேண்டிய பெரியாரை 95 வயதுவரை வாழவைத்த பெருமை மணியம்மையாரையே சாரும். இது ஒன்று போதாதா, தமிழ்க்குலம் அம்மையாருக்கு நன்றி பாராட்ட? தலைவரையிழந்தும் கழகத்தைக் கைவிடாமல் இவர் காப்பாற்றி, உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டு மேலும் 5 ஆண்டு வாழ்ந்திருந்தது பெரும் நல்வாய்ப்புத்தானே?
வடகண்டம் ராஜகோபால் நாராயணசாமி பி.ஏ. ஆனர்ஸ், 1943-ல் இளந்தாடி நெடுஞ்செழியன் எம். ஏ. நெடிதுயர்ந்த கவர்ச்சி மிகு உருவம், குற்றால அருவியெனக் கொட்டும் தமிழ்ச் சொல்வளம், மணிக்கணக்கில் கேட்பாரைப் பிணிக்கும் நயம். பெரியாரின் தளபதிகளில் சிறந்தவர். 1948-ல் திருமணத்துக்குப் பின் பேச்சு நடையில் பெருமாற்றம் எனினும் நாளொன்றுக்கு மூன்று வெவ்வேறு ஊர்களில் பேசிடும் ஆற்றல். *மன்றம்" இதழ் வேண்டும் போது வரும், நிற்கும், நடக்கும், ஆழ்ந்த தமிழறிவு, அகலமான உலகறிவு, சுயதலமற்ற பொது நலப்பணியே வாழ்வின் குறிக்கோள். 1948 முதல் அண்ணா எவ்வழி அவ்வழி நாவலர், அதனால்தான் அவர் மறைந்த 1969-ல் சிறு விலகல், பின், சேர்க்கை , அண்ணா , கலைஞர் அமைச்சரவைகளில் இரண்டாம் இடம் இவருக்கே.<noinclude></noinclude>
ikmr996vin7001dzg3oxvgj9lspac0y
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/172
250
452354
1433673
2022-07-21T03:22:09Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
171
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
அண்ணா அமைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிகநாள் பொதுச் செயலாளர் இவரே. பின்னர் சிறிது நாள் மக்கள் முன்னேற்றக் கழகம் கண்டார். இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்.
நீதிக்கட்சியில் இன்னமும் பதவி ஆசை கொண்டவர்களும், முன்னரே பதவியைச் சுவைத்தவர்களும் இருந்து வந்ததை நன்கு உணர்ந்திருந்தார் பெரியார். 1943 ஜூலை 8-ஆம் நாள் வேலூரில் நகரமண்டபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர்களுக்கெல்லாம் நன்கு அறிவுரை புகன்றார். காங்கிரஸ்காரர் பதவிக்குச் சென்றால் ராமராஜ்யம் நிறுவுவோம் என்று துணிவுடன் சொல்கிறார்கள். முஸ்லீம் லீக் சென்றால் இஸ்லாமிய ராஜ்யம் நிறுவுவோம் என்கிறார்கள். நீதிக்கட்சியினர் சென்றால் என்ன செய்யப் போகிறீர்கள்? நமது இன இழிவு ஒழியத் திராவிடநாடு கேட்பீர்களா? சுயமரியாதைப் பகுத்தறிவுக் கருத்துகளை நடைமுறைக்குக் கொண்டு வருவீர்களா? தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் நான் என் சுயமரியாதைக் கருத்துகளைப் பேசினாலே ஓட்டுக்கிடைக்காது என்று பயப்படுகிறீர்களா! - அதனால் நமக்கு வேண்டாம் தேர்தலும் பதவியும் என்று அறுதியிட்டுக் கூறினார் பெரியார்.
விஞ்ஞான மேதை ஆல்பர்ட் அய்ன்ஸ்டீ னுக்கும் பெரியாருக்கும் சமவயதுதான் பெரியார் ஒரு விஞ்ஞானி என்று யாரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஆனால் இதுவரை எந்த விஞ்ஞானியும் தமது அறிவியல் கண்ணோட்டத்தில், தீர்க்கதரிசனத்தோடு, எதிர்காலம் எப்படியிருக்கும் எனக் கணித்துக் கூறியதில்லை . எச்.ஜி. வெல்ஸ் ஒரளவு எடுத்துக் காட்டியுள்ளார். இதெல்லாம் பெரியாருக்குத் தெரியாது. ஆனால் அவரது கூர்த்தமதியால், நுட்பமான பகுத்தறிவின் தொலை நோக்குத் திட்பத்தால், அவருக்கே உரிய சுயசிந்தனை ஆராய்ச்சித்திறத்தால் அவர் எழுதியுள்ள ஒரு இருவாரத் தொடர் கட்டுரை அவரை உலகப் பெரும் விஞ்ஞானிகள் வரிசையில் உயர்த்தி உட்கார வைக்கிறது. "இனிவரும் உலகம்" என்ற தலைப்புத்தந்து அண்ணா தமது "திராவிட நாடு" வார இதழில் 1943 மார்ச் 21, 28 தேதிகளில் இக்கட்டுரையினை வெளியிட்டுள்ளார்கள். டெஸ்ட் டியூப் பேபி எனப்படும் சோதனைக் குழாய்க் குழந்தை, டெலிவிஷன் எனப்படும் தொலைக்காட்சி, உணவு மாத்திரைகள் இன்னம் ஏராளமான கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரும் என்று பெரியார் அன்றே கூறியுள்ளார்.<noinclude></noinclude>
jyjl9tkkwrqxop88inaiw84n8ljurbk
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/176
250
452355
1433674
2022-07-21T03:23:01Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
*
12. விரைந்தார் EைNES
சேலம் மாநாடு - திராவிடர் கழகம் பிறந்தது - வடநாடு பயணம் - கருப்புச் சட்டை - ஆகஸ்டு 15 துக்க நாள். ஜூலை 1 திராவிட நாடு பிரிவினை நான் - மீண்டும் இந்தி எதிர்ப்புப் போர் - தூத்துக்குடி, ஈரோடு மாநாடுகள் - 1944 முதல் 1948 முடிய.
முத்தமிழ்க் கலைஞர்கள் சுயமரியாதைக் கொள்கைகளையும் தத்துவங்களையும் பிரச்சாரம் செய்ய உதவியாகப், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முயற்சி மேற்கொண்டு, சென்னையில் முத்தமிழ் நிலையம் ஒன்றை அமைத்தார். 1944 சனவரி 2-ஆம் நாள் பெரியார் இதனைத் தொடங்கி வைத்தார். பாரதிதாசன் கவிதைகள் "குடி அரசு" வாயிலாக நன்கு விளம்பரம் செய்யப்பட்டு, இதற்குள் மூன்று பதிப்புகள் செலவாகிவிட்டன. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பிப்ரவரி 7-ஆம் நாள் கா. சுப்பிரமணிய பிள்ளை தலைமையில் பெரியார், தமிழிசையும் கிழக்கும் மேற்கும் என்ற தலைப்பின் கீழ், அரியதோர் ஆராய்ச்சிச் சொற்பொழிவு நிகழ்த்தினார். தமிழ் நாட்டில் தமிழன் தன் பொருளைச் செலவழித்துத், தான் நுகரும் இசை, தமிழ் மொழியில் இருக்கவேண்டுமென்று கேட்பது தவறா? இந்த உணர்ச்சி இப்போது வெற்றி பெற்று வருவது பாராட்டற்குரியதுதான் எனினும், நரஸிம்ஹ மூர்த்தியே என்று பாடி வணங்குவதற்குப் பதில் சிங்கமுகக் கடவுளே என்று பாடி வணங்குவதால் என்ன முன்னேற்றம் ஏற்படும்? பஜனை, பக்திப் பாடல்களை எந்த மொழியில் பாடினால் தான் என்ன? அதே போல் புராண நாடகங்களால் என்ன பலன்? நந்தனார் பார்த்தால் தீண்டாமை பெருகும்; கிருஷ்ணலீலா பார்த்தால் விபச்சாரம் பெருகும் - என விளக்கினார். இவைகளை முறியடிக்க எம்.ஆர் ராதா நடத்தி வரும் சீர்திருத்த நாடகங்களைப் பெரியார் ஆதரித்து வந்தார். நாகப்பட்டினத்தில் மார்ச் 10-ஆம் நாள் எம்.ஆர். ராதாவைப் பாராட்டினார்.
நடிகவேள் என்று திருச்சியில் பட்டுக்கோட்டை அழகர்சாமியால் பட்டமளிக்கப்பட்ட எம்.ஆர். ராதா 1943-முதல்<noinclude></noinclude>
c1lalx28h1q20qi7pmrz9mzyvsky235
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/177
250
452356
1433675
2022-07-21T03:23:24Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
176 புரட்சிகரமான சுயமரியாதைக் கருத்துகளை விளக்கி நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் சி.சி. சிற்றரசு எழுதிய போர்வாள், கலைஞர் மு. கருணாநிதி எழுதிய தூக்குமேடை, திருவாரூர் தங்கராசு எழுதிய ரத்தக் கண்ணீர் இவற்றைத் தமிழ்நாடு முழுதும் ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து நடத்தினார். அரசின் அடக்கு முறைக்கு அடிக்கடி ஆளாகிப், போராடி வென்றார். கட்சிக் கட்டுப்பாடு கட்கு ஆட்படாமல் பெரியாரின் உண்மைத் தொண்டராக விளங்கிய அச்சமறியா இயல்பினர், 1967-ல் புரட்சி நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனைச் சுட்டதாக நடந்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றார். விடுதலையாகி வெளிவந்த பின்பும், தனிப்பட்ட முறையில் கொள்கை விளக்கமும் நடிப்பும் தொடர்கிறார்.
சேலம் செவ்வாய்ப் பேட்டையில் கடந்த ஆண்டே துவக்கப் பட்ட திராவிடர் கழக முதலாண்டு விழாவில், சனவரி 16-ஆம் நாள், பெரியார் பங்கேற்றார். பிப்ரவரி 13-ஆம் நாள் சென்னையிலும், 20-ஆம் நாள் திருச்சியிலும் மாவட்ட நீதிக்கட்சி மாநாடுகளைத் திறந்து வைத்தார். சுதந்திரத் திராவிட நாடு பெறவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும், புராண இதிகாசக் கதைகளின் புரட்டுகளை அம்பலப் படுத்தியும் திராவிட மக்களுக்கு எழுச்சியுண்டாக்கினார் பெரியார். தமிழ்ப் புலவர்களும், ஆசிரியர்களும், இளம் மாணாக்கர்க்குப் புராணக் கதைகளைப் பாடமாகப் போதிக்காமல், அறிவு வளர்ச்சிக்கு உகந்த வற்றையே கற்பிக்க வேண்டிப் பெரியார் பல கட்டுரைகள் தீட்டினார்.
1944-ஆம் ஆண்டின் துவக்கமே பெரியாரின் மொழிப்படி நற்குறிகளின் துவக்கமாகத் தென்பட்டது. தென்னகத்தில் பெரியாரின் பெருந்தொண்டால் புதிய எழுச்சி ஒன்று எங்கணும் பரவி வியாபித்தது. ஒன்று கலைத்துறையின் மறுமலர்ச்சி! மாணாக்கர் எழுச்சி மற்றொரு புதுமையாகும். 1942-ஆகஸ்டுக் கலவரங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சார்புடைய மாணவர்கள் பெரும் பங்கு கொண்டனர், அதன் பின்னர் உண்மை உணர்ந்த பார்ப்பனரல்லாத மாணவர்கள், தாம் தவறான பாதையில் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்து, தந்தை பெரியார் காட்டும் பகுத்தறிவு ஒளியில் கவனஞ் செலுத்தத் துவங்கினர். ஆரிய வஞ்சகத்தால் திராவிடர் எதிர்காலம் இருட்டாவதை உணர்ந்தனர். பெரியாரின் குடி அரசு", அண்ணாவின் “திராவிட நாடு" இதழ்கள் உணர்வுத் தீயை மூட்டி விட்டன. மாணவர்கள் நேரடி அரசியலில் ஈடுபடச் சட்டங்கள் தடை செய்தன. அதனால் முதலில் பெரியாரின் சம்பந்தமில்லாது கும்பகோணத்தில் திராவிட மாணவர் முதல் மாநாடு 1944 பிப்ரவரி 19, 20 இரு நாட்களிலும், மிகுந்த எழுச்சிமயமாய் நடைபெற்றது. அண்ணாவும் பிறரும் அரிய சொற்பொழிவுகளை ஆற்றினார்கள். மாணவர் மட்டுமல்லாது<noinclude></noinclude>
8v8cl8kd830vmji260ejvj3henb6qha
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/178
250
452357
1433676
2022-07-21T03:24:02Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
177
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
ஆசிரியரும் பேரெழுச்சி கொண்டனர். கோ. சி. பெரியசாமிப் புலவர், குழந்தையா, நன்னன், நா.மு. மாணிக்கம், ஏ.பி. சனார்த்தனம், க. அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், இரா. தண்டபாணி, க.அ. மதியழகன், பூ. கணேசன், இரா. செழியன், த.மா. திருநாவுக்கரசு, கி. தியாகராசன், ஆகியோரை மாநாட்டில் அறிமுகம் செய்தனர் குடந்தை மாணவர்களான எஸ். தவமணி இராசன், எஸ். கருணானந்தம், இரா. சொக்கப்பா ஆகியோர்.
1943 முதல் "குடி அரசு" இதழில் கட்டுரைகள் தீட்டிவந்த க. அன்பழகன், பச்சையப்பன் கல்லூரியின் தமிழாசிரியராகச் சிலகாலம் பணிபுரிந்தார். தமது வெண்கலக் குரலோசை துணைசெய்யத் தமது ஒல்லியான உருவத்துடன் தமிழகத்தில் அவர் முழங்காத சுய மரியாதை இயக்க மேடையில்லை. அண்ணாவுடன் திராவிட முன்னேற்றக் கழகங் கண்டவர். 21-2-45-ல் பெற்ற வெற்றிச் செல்வி அம்மையாரின் வாழ்க்கைத் துணை நலம் இவருக்குப் பேருதவியாயிருந்தது. சிதம்பரம் கல்யாண சுந்தரனாரின் மூத்தமகனாகிய இவரைப் போலவே அடுத்த இளவல்களும் ஆசிரியர்களாயினும், இயக்கத்துடனேயே இணைந்த குடும்பத்தினராவர். சட்டமன்றப் பேரவை, சட்டமன்ற மேலவை, நாடாளுமன்றம் மூன்றிலும் உறுப்பின ராகப் பணியாற்றியுள்ளார். கலைஞரின் அமைச்சரவையில் நல் வாழ்வுத்துறையின் பொறுப்பிலிருந்தார். பின்னர் கழகம் சோதனைக்குள்ளான போழ்தில், தி.மு.க. பொதுச் செயலாளரா கியுள்ளார். பேராசிரியர் என மக்கள் இவரை அன்பொழுக அழைக்கின்றனர்.
டார்ப்பிடோ சனார்த்தனம் தமிழ் தெலுங்கு ஆங்கிலம் மும்மொழி வல்லுநர். எளிய தோற்றம், வெடிக்கு முன் எரிமலை, பெரியாரின் பெரு விருப்புக்குப் பாத்திரமானவர். சட்டமன்ற மேலவை, மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்துள்ளார். தமிழகத்தில் சுறுசுறுப்புடன் சுற்றிச் சுழன்று, விறுவிறுப்புடன் உரையாற்றியவர். இவர் காணாத ஊரே இல்லை எனலாம். ஆங்கிலத்தில் பத்திரிகை, நூல்களை எழுதியுள்ளார். சிலகாலம் தி.மு. கழகத்திலிருந்தார். இப்போது அ.இ. அ.தி.மு.க. எங்கிருந்தாலும் சுயமரியாதைக் கொள்கை களுக்கும், தந்தை பெரியாருக்கும் இவர் சிந்தையில் முதல் இடம்!
பெரியசாமிப்புலவர், குழந்தையா, திருநாவுக்கரசு ஆகியோர் தொடர்ந்து சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்பி வருவோர். பெரியசாமிப் புலவர் நல்ல பரம்பரையை உருவாக் கியவர், மறைந்து விட்டார். நா.மு. மாணிக்கம், செட்டிநாடு தந்த பகுத்தறிவுப் புலவர். பெருமைக்குரிய “குடி அரசு"<noinclude></noinclude>
p7eralomau5beikzkh2jj975fykk2vq
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/179
250
452358
1433677
2022-07-21T03:24:30Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
178)
அலுவலகத்தில் பெரியாரிடம் பணியாற்றியவர். புலவர் நன்னள் சிலநாள் பெரியாரிடம் வதிந்தவர்; பகுத்தறிவுத் திறங்குன்றாப் பண்பாளர் பேராசிரியராகி, டாக்டர் பட்டமும் சுய முயற்சியால் பெற்றவர்.
இரா. செழியன், நாவலர் நெடுஞ்செழியனின் இளவல், 1957-ல் தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குதித்தார், 1962, 67, 71 ஆண்டுகளில் வென்று நற்பணியாற்றினார். அண்ணாவின் அருந் தோழர், இன்று ஜனதாக் கட்சியின் சார்பில் மாநிலங்களவையினை அலங்கரிக்கிறார்.
பூ. கணேசன் தந்தையார் பூவராகனார் பகுத்தறிவாளர்; எனவே தம் மக்களையும் தம் வழியில் ஈடுபடுத்தியவர். "நிலவு" இதழ் நடத்தி வந்து, "விடுதலை"யில் சில காலம் பணியாற்றிப் பின்னர் குடும்பநலத்துறையில் நீண்டநாள் அரசு அலுவலராக விளங்கி, ஓய்வு காணும் வயதில் உள்ள கணேசன் அமைதி, அடக்கமுடையார்.
இ.ரெ. இளம் வழுதி எனும் தண்டபாணி கடலூரில் சிறந்த வழக்கறிஞர். குறையாயுளில் மறைந்து போனார். கருப்பு இளவரசன் என்ற சிறப்புப் பெயருக்கேற்பத் துவக்க நாட்களில் நன்கு இயக்கப்பணி புரிந்தவர்.
மதியழகன் உருவமோ குள்ளம். உள்ளமோ உயரம். இயக்கப் பணியோ ஏராளம். துவக்க நாட்களில் பெரியார் பாசறையிலிருந்து, பின் அண்ணாவின் நண்பராகி, நல்ல தொண்டாற்றிய முழுநேர அரசியல் வாதி. அண்ணாவின் அமைச்சரவை, கலைஞரின் அமைச்சரவைகளில் உறுப்பின ராகவும், சட்டப் பேரவை, மாநிலத் திட்டக்குழுத் தலைவ ராகவும் விளங்கியவர். அண்ணா தி.மு. கழகத்தில் இணைந்தார். இன்று உடல் நலிவுற்று ஓய்வாக வாழ்கின்றார்.
எஸ். தவமணி இராசன் 1943 - ல் கும்பகோணத்தில் முதன்முதலில் திராவிட மாணவர் கழகம் அமைத்தவர். தோற்றம் கவர்ச்சியற்றது; தொண்டை கணீரென்பது; தொண்டு இவர் உயிர்மூச்சு; தோழமை இவர் நல்லுணவு/ பெரியாரிடமும் அஞ்சாமல் பேசும் வெகுளியான உள்ளம் படைத்தவர். அவரது உண்மையான தொண்டராதலால் என்றும் அன்புடன் நேசிக்கப் பட்டவர். ஓயாது உழைப்பது இவரது இலட்சியம். ஈரோட்டில் திராவிட மாணவர் பயிற்சி முகாம் இவரது தனிச்சிறப்பு, “குடி அரசு" அலுவலகம் இவருக்குக் குடியிருப்பு. குடந்தை திராவிட மாணவர் மாநாட்டை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக ஆக்கியவர் இவரே; இவர் ஒருவரே!<noinclude></noinclude>
drpz7kulnnhewnz6deduprzln4w9jid
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/180
250
452359
1433678
2022-07-21T03:25:03Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
1791
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
1949-ல் ஏற்காட்டிலிருந்து பெரியாரின் பிரதிநிதியாகச் சென்னை "விடுதலை" அலுவலம் வந்தவர், அண்ணாவுடன் சேர்ந்து, கண்ணீர்த்துளியாகிவிட்டார். ஈரோடு வந்தவுடன், பெரியாரிடம் விடை பெற்றுக் கொண்டு, நேரே குன்னூர் நகராட்சி ஆணையாளராயிருந்த தன் தந்தை செந்தில் வேலாயுத நாடார் அவர்களிடம் போய்ச் சேர்ந்தார். ஆயினும் அய்யாவின் மெய்யன்பர். பெரியாரிடம் 'நீ' என்று பேசத் துணிவுள்ள ஒரே மனிதர்.
கும்பகோணம் மாநாடு பெரியாரின் வாழ்த்துச் செய்தி க.அன்பழகனால் படிக்கப்பட்ட அளவோடு முடிந்தது மாணவ உலகுக்குப் பெருத்த ஏமாற்றம். அதனால் மார்ச் 15-ஆம் நாள் செல்வம் நினைவு நாள் பொதுக்கூட்டத்திலும்; பின்னர் பெரு முயற்சியால், ஏப்ரல் முதல் நாள், குடந்தை அரசினர் கல்லூரியிலும் பெரியார் கலந்து கொண்டு, அரியவுரை நிகழ்த்துமாறு செய்து, மாணாக்கர் பெருமிதமும் பூரிப்பும் எய்தினர். கும்பகோணத்திலிருந்து ஈரோடு சென்றதும் பெரியார் புதுத்தென்பு கொண்டார். தம்மிடம் அப்போது தனிச் செயலராக இருந்த கஜேந்திரனை அழைத்தார். கல்லூரிகளுக்கெல்லாம் அனுப்பினார். எங்கெங்கு இயக்கப் பற்றுள்ள மாணவர்கள் உள்ளார் எனக் கண்டறிந்தார். அனைவரையும் ஈரோடு வருமாறு அன்பழைப்பு விடுத்தார். அதிலே பெரு வெற்றியும் பெற்றார்.
வடார்க்காடு திருப்பத்தூர் வழக்கறிஞர் சாமி நாயுடு நீதிக்கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர். அவருடைய முத்தமகன் கஜேந்திரன். மகள் சுலோசனா. கஜேந்திரன் பி.ஏ. பட்டம் பெற்ற பின்னர் பெரியாரிடம் அந்தரங்கச் செயலாளராக வந்து சேர்ந்தார். பின்னர் “குடி அரசு", "ஜஸ்டிசைட்" இதழ்களில் எழுதினார். 1945 மே 24-ஆம் நாள் பெரியார் தலைமையில் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்களின் மூத்த மகள் மிராண்டா பி.ஏ. அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கஜேந்திரன் அரச தலைமைச் செயலகத்தில் அலுவலரானார். மிராண்டா அம்மையார் சென்னை மாநகராட்சிக் கல்வித்துறை அதிகாரியானார். இவர்கட்கு இரு பெண் மக்கள்,
ஈரோட்டில் 1944 ஏப்ரல் 17-ஆம் நாள் நடைபெற்ற திராவிட இளைஞர் மாநாட்டையொட்டி எல்லா மாணவர்களையும் பெரியார் நேரில் பார்த்துக்கொள்ள விரும்பினார். அண்ணா தலைமையில், நெடுஞ்செழியன் திறந்துவைக்க, அன்பழகன கொடிஏற்ற, இம்மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. பழைய கோட்டை இளைய பட்டக்காரர் என். அர்ச்சுனன் வரவேற்புக் கழகத் தலைவர். எஸ். ஆர். சந்தானம் செயலாளர். இதனை ஒட்டியே மாணவர் பிரச்சாரப் பயிற்சி முகாம் நடைபெற்றது. பெரியாருக்குத் திடீரென்று உடல் நலம்குன்றி, நடக்க<noinclude></noinclude>
d7d60zsgyfv6y3n27nzsopioblf4iay
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/181
250
452360
1433679
2022-07-21T03:25:29Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
180 முடியாமல் அவதிப்பட்டார். எனினும் புதிய வரவுகளான மாணவர் களை ஆவலுடன் கண்டு உரையாடிக் களித்தார். இந்த நேரத்தில் சென்னையில் நடைபெற்ற கம்பர் மாநாடு கலவரத்தில் குழப்பமாகி, நடைபெறாமல் நின்று விட்டது. இது சுயமரியாதைப் பிடாரிகளின் அடாத செயலென்று தமிழ்நாட்டின் அக்கிரகாரப் பத்திரிகை உலகம் அவதூறு பொழிந்தது.
கொங்கு வேளாளர் சமுதாயத்தின் மிகப்பெரும் பண்ணைக்காரராகிய பட்டக்காரர் குடும்பத்திலிருந்து கழகத்துக்குக் கிடைத்த நன்முத்து என். அர்ச்சுனன், 20 வயதில் ஈடுபட்டு 23 வயதில் வாழ்வையே முடித்துக்கொண்டார். இந்த மூன்றாண்டுகளில் முப்பதாண்டுப் பொதுப்பணியை அற்புத மாய்ச் செய்து காட்டினார். இந்தக் காலகட்டத்தில் ஏராளமான மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்தியும், பங்கேற்றும் சிறப்பித்தார்.
எஸ்.ஆர். சந்தானம் மாப்பிள்ளை நாயக்கரின் முதல் மகன். நெடுநாள் ஈரோடு நகரமன்ற உறுப்பினர். கோவை மாவட்ட திராவிடர் கழகத் தூண்களில் முக்கியமானவர். பெரியார் நினைத்தவண்ணம் முடித்திடும் ஆற்றலுடையார்.
மாணவர் பயிற்சி பெற்று மாவட்டந்தோறும் இயக்கப் பிரச்சாரம் செய்திடப் புறப்பட்டனர். அந்தக் கோடை விடுமுறையில் தொடங்கிய இவ்வழக்கம், திராவிடர் கழகத்தால் இன்றளவும் கையாளப்படுமாறு, பெரியார் பணித்துவிட்டார். பிரிட்டிஷ் அரசு சிறையிலிருந்த காந்தியாரை விடுதலை செய்துவிட்டு, வெள்ளையனே வெளியேறு என்று 1942 ஆகஸ்டில் செய்த தீர்மானத்தைத் திரும்பப் பெறுமாறு கேட்டது. காந்தியார் விடுதலையால் யாருக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது? இறந்துபோன தம் மனைவியார் பெயரால் கஸ்தூர்பா நிதிவசூலித்து, அடுத்துவரும் பொதுத்தேர்தலில் நிறையச் செலவு செய்ய முனைந்துவிட்டார்களே! என்றார் பெரியார். மே மாத இறுதியில் சென்னை மாநில 3-வது மருத்துவகுல மாநாட்டைச் சென்னையில் திறந்துவைத்துவிட்டுப் பெரியார், ஜூன் முதல்வாரம் ஆந்திரப் பகுதியில் சுற்றுப்பயணம் சென்று வந்தார். பாக்கிஸ்தான் கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்த காந்தியார், இறுதியில் ஜின்னாவைச் சந்திக்க இசைந்ததைக், காந்தியாரின் சரணாகதி எனப் பெரியார் வர்ணித்தார். அவர்கள் பேச்சு முறிந்ததையும் விமர்சித்தார்.
நீதிக்கட்சியின் 16 ஆவது மாகாண மாநாடு சேலத்தில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலையில் கூடியது. பழைமைவாதிகள் சிலர் திட்ட மிட்டுப் பெரியாரின் தலைமைப் பதவியைப் பறித்திடக் கனவு கண்டனர். பெரியாரின் தீவிரப் போக்குக் கண்டு மனங்குமுறும் பதவிப்பித்தர்கள் அவர்கள். ஆனாலும் தமிழகத்தின் எல்லாப்<noinclude></noinclude>
3ge6p1pdgzpkcxoipdpvkmk8j8mjphi
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/182
250
452361
1433680
2022-07-21T03:25:51Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
181
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
பகுதிகளிலிருந்தும் - குறிப்பாகத் தஞ்சை திருச்சி மாவட்டங்களி னின்றும் - சென்றிருந்த பல்லாயிரக்கணக்கான பெரியார் தொண்டர் களின் முயற்சியால் எதிர்ப்பு தலைகாட்டவே முடியவில்லை. ஏற்கனவே சென்னையில் அண்ணா தலைமையில் கூடிய ஒரு மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச்சங்கம் என்ற பெயரைத் திராவிடர் கழகம் என மாற்ற வேண்டிப் பரிந்துரைக்கும் முடிவு
துவமே அண்ணாதுரை தீர்மானந்தான். பெரியாரின் விருப்பத்திற் கிணங்கவே அண்ணா இதனைக் கொணர்ந்து நிறைவேற்றினார். இதன்படி பிரிட்டிஷ் அரசால் அளிக்கப்பட்ட கவுரவப் பட்டங்களான சர், திவான்பகதூர், ராவ்பகதூர், ராவ்சாகிப், கான்பகதூர், கான்சாகிப் போன்றவைகளைக் கட்சியில் உள்ளோர் விட்டு விடவேண்டும். அதேபோலக் கவுரவ நீதிபதி, ஜில்லாபோர்டு, தாலுகாபோர்டு நியமனங்கள், நாமினேஷன், மூலமாகப் பிரிட்டிஷ் அரசால் தரப்பட்ட எல்லாப் பதவிகளையும் விட்டொழிக்க வேண்டும் என்பது. சரிகைக் குல்லாய்க் கட்சி என்ற அவப்பெயர் இத்தீர்மானம் நிறைவேறியதன் வாயிலாக ஒழிந்தது; 1944 ஆகஸ்ட் 27-ஆம் நாளோடு! இங்கு ஒரு தீர்மானத்தின்மீது பேசினார் கடலூர் சிறுவன் வீரமணி.
கடலூர் சி.எஸ். கிருஷ்ணசாமி அவர்களின் பிள்ளைகளை திராவிட இயக்கத்துக்காகவே அவர் பெற்று வளர்த்து ஆளாக்கி விட்டவர். மூத்தவர் கி. கோவிந்தராசன் தி.மு.க. செயலாளர். அடுத்தவர் கி. தண்டபாணி தி.மு.க. சார்பில் நகர்மன்ற உறுப்பினர். மூன்றாவது பிள்ளை பால்யத்திலேயே படுசுட்டியாக இருந்தது.
கடலூர் ஓ.டி., எனப்படும் பழைய பட்டினத்தில் சென்னையைச் சேர்ந்த ஏ. சுப்ரமணியம் பி.ஏ. அலுவல் பார்த்து வந்தார். பெரியாரிடத்தில் ஏகலைவ பக்தி கொண்ட அவர் தமது
வெறியும் சுயமரியாதைக் கொள்கை வெறியும் கொண்டவ ரானார். அவரது அத்யந்த சீடர் 10 வயது கி. வீரமணி; இவர் 2-12-1933-ல் பிறந்தார். கடலூரில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முதன்மை மாணாக்கராக இருந்து முடித்தார். இடையில் சுயமரியாதை உணர்வினை மூச்சோடும் நீரோடும் உணவோடும் உயிர்த்தும் உண்டும் தன் உடலை ஊணை அறிவை வளர்த்து வந்தார். வாயாடித்தன்மை பகுத்தறிவு ஒளி வீச்சாக இருந்தது. 10 வயதில் சராசரி உயரத்தைவிடக் குள்ளமாதலால் மேஜை மீது தூக்கி நிறுத்திப் பேசச் சொல்லிவிட்டால் போதும். நிறுத்துவது தான் கஷ்டம். இந்தப் பத்துவயதுச் சிறுவன் வீரமணி 1944<noinclude></noinclude>
neo2u1jtwlxeajeo77y31qhldujih3z
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/183
250
452362
1433681
2022-07-21T03:26:12Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
182 சேலம் மாநாட்டில் தீர்மானத்தை வழிமொழிந்து பேசியதன் மூலம் இயக்கத்தின் வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டது. வரலாறு படிப்போராக இல்லாமல் திராவிட இயக்க வரலாறு படைப்போராக மாறியது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளா தாரத்தில் முதல் வகுப்பு ஹானர்ஸ் தேர்வு. சட்டக் கல்லூரியில் பி.எல். தேர்வு. கடலூரில் கி. வீரமணி எம். ஏ.பி.எல். வழக்கறிஞராகப் பதிவு. திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்த போதும் பெரியாரைப் பிரியாத பேராண்மை.
பெரியாரையும், திராவிட பாரம்பரியத்தின் வரலாற் றையும், சுயமரியாதை இயக்கத்தின் கோட்பாடுகளையும் அய்யந்திரிபு இன்றி உணர்ந்தமையாலும், அபாரமான நினைவாற்றலாலும், கல்வியின் தேர்ச்சியாலும், பயிற்சியின் சிறப்பினாலும், சொல்லாட்சித் திறத்தாலும் மேடையிலே இவர் வெற்றிகரமான விரைவுப் பேச்சாளராக விளங்குகிறார். பூவாளூர் அ. பொன்னம்பலனார் கூட விரைவாகப் பேசுவார். ஆனால் சில பல சொற்கள் விளங்காமலே போகும். வீரமணியின் விரைவான சொற்பெருக்கிலும் விளங்காத சொல்லடுக்கே விழுவதில்லை. அலங்கார நடையல்ல. ஆனால் அழுத்தமான தெளிவான உறுதியான நடை, ஆழமான அனுபவமிக்க கருத்தோட்டம்.
எழுத்திலும் இவர் இணையற்ற வெற்றி கண்டுள்ளார். "விடுதலை"யில் இவர் பொறுப்பேற்ற பிறகு எழுதப்பட்ட தலையங்கம், துணைத்தலையங்கம் எவையாயினும், வெளியிடப்பட்ட பெட்டிச் செய்திகள், துணுக்குகள், செய்திகள் எவையாயினும் பெரியாரின் அங்கீகாரம் பெற்றவை என்று
"விடுதலை" நடந்த காலத்தில் பெரியாரின் எண்ணத்திற்கு முரணாக எத்தனையோ சங்கதிகள் வெளியானதுண்டு.
பெரியாரின் அனைத்து நற்பண்புகட்கும் உறைவிடமாய், அவர் தீர்மானித்த பெண்மணியை மணந்து, அளவான
தந்த பகுத்தறிவுச் சுடரைப் பாதுகாப்பாய் பத்திரமாய் உயிரினும் மேலாகப் போற்றி வரும் இவர் ஒருவரே தன்மான இயக்கத்தின் நம்பிக்கைப் பேரொளியாய் இன்று திகழ்கின்றார்.
பதவிச் சுகம் அனுபவித்தவர்களால் சும்மாயிருக்க முடியாதே! அவர்கள் சென்னையில் ஒன்று கூடித் தாங்கள்தான் ஜஸ்டிஸ் கட்சி என்று அறிக்கை விட்டனர். பெரியார் அவர்களின் தவறான போக்கைக்<noinclude></noinclude>
htiblqfdfbt8o6n246xz4dunrxutc2m
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/184
250
452363
1433682
2022-07-21T03:26:46Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
183
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
கண்டித்துக் “குடி அரசு" 17-9-1944 இதழில் எழுதினார். அதே போன்று டாக்டர் அம்பேத்கர் சென்னை வந்கபோக. துவருக்கு நீதிக்கட்சியின் சார்பில் என்று சொல்லி, இவர்கள் செப்டம்பர் 22-ஆம் நாள் விருந்தொன்று கொடுத்தனர். உண்மை நிலவரம் உணர்ந்த அம்பேத்கர், இவர்களைக் கண்டித்து உரையாற்றினார். அடுத்த நாளே பெரியார் இல்லத்துக்குத் தாமே வருகை தந்து. நீண்ட நேரம் உரையாடியும் சென்றார். இம்மாதம் 29-ஆம் நாள் திருச்சியில் பெரியார் இடத்துக்கு வந்து, அனைத்திந்திய இந்து மகா சபைத் தலைவர் டாக்டர் மூஞ்சே, பெரியாரைச் சந்தித்துப் பேசினார். அவருடன் தமிழ்நாடு இந்து மகா சபைத் தலைவர் டாக்டர் வரதராசலு நாயுடுவும் வந்திருந்தார். இந்து என்ற சொல்லுக்கே ஆதாரம் இல்லை என வாதாடினார் பெரியார். அனைத்திந்திய திராவிடர் கழகம் அமைத்திட, மூஞ்சே பெரியாரிடம் கேட்டார்.
தஞ்சையில் புரட்சிக் கவிஞர் தலைமையில் நடந்த திராவிட மாணவர் மாநாட்டை 26-ஆம் நாள் பெரியார் திறந்து வைத்தார். கரூரில் 24-ஆம் நாளும், கோவையில் அக்டோபர் முதல் நாளும் நடைபெற்ற கழக மாநாடுகளில் கலந்து கொண்டார். கோவை மாநாட்டில் சென்னை சத்தியவாணிமுத்து பங்கேற்றார்.
சென்னையில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் தோன்றிய சத்தியவாணி, அவர் கணவர் எம்.எஸ். முத்து இருவரும் சிறந்த சமுதாய சீர்திருத்தத் தொண்டர்கள். பெரியார் வழி நின்று சத்தியவாணி சிறந்த பேச்சாளராக விளங்கினார். அண்ணாவுடன் தி.மு.க. அமைப்பில் இருந்து வந்தார். அண்ணா , கலைஞர் அமைச்சரவைகளில் இடம் பெற்றார். அ.இ.அ.தி.மு.க. சார்பில் டெல்லி மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்து, சமூக நலத்துறை அமைச்சராகியுள்ளார்.
சிதம்பரத்தில் நடைபெற்ற வர்ணாசிரம மறுப்புக் கூட்டத்தில் பெரியார் அக்டோபர் 14-ஆம் நாள் பங்கேற்றார். புராணங்கள் கற்பனையானாலும், சைவரும் வைணவரும் ஒருவரைப் பார்த்து மற்றவர் காப்பி அடித்துள்ள வேடிக்கையைப் பெரியார் நன்கு பிரித்துக் காட்டினார். பக்தலீலாமிருதம் வைணவ ஆழ்வார்கள் 82 பேரைப் பற்றி உரைக்கிறது. பெரிய புராணம் 63 சைவ நாயன்மார்களைப் பற்றிப் பேசுகிற. நாயன்மார் நால்வர். ஆழ்வாராதியர் பன்னிருவர். மேலும் பொதுவுடைமைவாதிகளைப் பற்றிச் சொல்லும்போது, இந்தியாவில் தான் சாதியும் வகுப்பும் தனித்தனியே இருக்கின்றன. மேல் நாடுகளில் வகுப்பு பேதம்தான் இருக்கிறது; அதனால் அதை ஒழித்தல் சுலபம். இங்கே முதலில் சாதியை ஒழித்தால்தான் வகுப்பை நீக்க முடியும். சாதியை ஒழிப்பதுதான் சிரமம். அதில் அவர்கள் நுழைய மாட்டார்கள்:<noinclude></noinclude>
nvjhprngy8aswcfqafvaxsvbp6clyic
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/185
250
452364
1433683
2022-07-21T03:27:04Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
134
அதுதான் நமது போராட்டம் - என விளக்கினார். சாதி என்றால் Caste என்றும், வகுப்பு என்றால் Class என்றும் பெரியார் வேறுபாட்டைத் தெரிவித்தார்.
கலையுலகில் மறுமலர்ச்சித் தூதுவராக விளங்கிய என்.எஸ். கிருஷ்ணன் சென்னையில் ஒரு நாடக சபா துவக்கினார். அவரது இழந்த காதல் நாடகத்துக்குப் பெரியார், நவம்பர் முதல் நாளிரவு தலைமை ஏற்றுப் பாராட்டினார். கலையுலகில் அவர் மீதும், எம்.கே. தியாகராச பாகவதர் மீதும் அவதூறுகளைக் கிளப்பி விட்டிருந்தனர் அழுக்காறு படைத்தோர் சிலர். பெரியாரின் ஒத்த வயதினரும் மதிப்புக்குரிய நண்பருமான செ.தெ. நாயகம் 1944 டிசம்பர் 13-ஆம் நாள் மறைந்தது குறித்துப் பெரியார் மிகுந்த வருத்தமுற்றார்.
டிசம்பர் 24-ஆம் நாள் அண்ணாவுடன் புறப்பட்டுப் பெரியார் கல்கத்தா சென்று, அங்கு எம்.என். ராயின் தீவிர ஜனநாயகக் கட்சி மாநாட்டில் 27-ஆம் தேதி உரையாற்றினார். தனது நாத்திக ஆசான் பெரியார் என்றும், அவரளவு நாத்திகத்தைப் பற்றிப் பேசி, எழுதி, நூல் வெளியிட்டவர் உலகில் வேறு எவரும் இலர் என்றும், ராய் புகழ்ந்துரைத்தார். அப்படியே கான்பூர் சென்று, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டுக்குத் தலைமை ஏற்று, 29, 30, 31 மூன்று நாட்களும் ஆங்கிலத்தில் விளக்கமாக உரை நிகழ்த்தினார் பெரியார்.
சேலம் மாநாட்டிற்குப் பிறகு திராவிடர் கழகத்துக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியைத் தீவிரப்படுத்தினார் பெரியார். 1945-ஆம் ஆண்டுத் துவக்கத்தில் உறுப்பினர் எண்ணிக்கை 24,302. அவர்கள் செலுத்திய கட்டணம் ரூ.2619-13-0. மாணவர்கள் புத்தெழுச்சியால் மனம் நெகிழ்ந்த பெரியார் எதிர்காலத்தில் இனி அச்சமில்லை என்ற கருத்தை வெளிப்படுத்தி, ஆரிய திராவிடப் போருக்கு அறைகூவல் என்ற “குடி அரசு" 20-1-45 தேதி இதழில் தலையங்கமே தீட்டினார். தென்னார்க்காடு மாவட்டம் புதுப்பேட்டையில் திராவிட மாணவர் மாநாடு; சிற்றூரிலும் வெற்றிகரமாய் நடக்கும் என எடுத்துக் காட்டாய் லெங்கியது. பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது சிறுத்தையே வெளியில் வா என்று தொடங்கி, இங்கு உன் நாட்டுக்கு இழி கழுதை ஆட்சியா? என்றெல்லாம் ஓடும் கவிதைப் பிரவாகம், புரட்சிக் கவிஞர் இந்த மாநாட்டுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியாகும். ஈ.வெ.கி. சம்பத் இம்மாநாட்டின் தலைவர்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இண்டர் மீடியட் படிப்போடு நிறுத்திய சம்பத், எல்லா வகையிலும் பெரியாரின் வாரிசாக விளங்குத் தகுதி பெற்றிருந்தார். பெரியாரும் தத்து எடுத்துக் கொள்ளப் பத்திரங்கள்கூட வாங்கி வைத்திருந்தார். என்ன அவநம்பிக்கை ஏற்பட்டதோ - பின்னாளில் பெரியாரின்<noinclude></noinclude>
frymved7g1igiqqreha0c2y7hrlnx7y
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/186
250
452365
1433684
2022-07-21T03:27:36Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
185)
பருத்தறிவு LIARள் தந்தை டொரியா
யூகம் சரியானதென நிரூபிக்கப்பட்டது - சம்பத்தைப் பெரியார் தம் வாரிசுப் புதல்வனாக ஏற்றுக் கொள்ளவில்லை. தீர்க்கமான சிந்தனையும் தெளிவான கருத்து ஓட்டமும் வாய்க்கப் பெற்ற சம்பத், சொல்லின் செல்வர் என அன்புடன் அழைக்கப்பட்டார். அண்ணாவின் தனியான கனிவுக்குப் பாத்திரராயிருந்தவர் அதனாலேயே பெரியாராலும் ஒதுக்கப்பட்டவர் - என்ன சபலதி துக்கோ ஆட்பட்டார். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரானவர், தமிழ் தேசியக்கட்சி கண்டார். 1961-ல், பின்னர் காமராசருடன் இணைந்தார். அவரையும் எதிர்த்து, இந்திரா காந்தி முகாமில் இரண்டறக் கலந்தார். எங்கும் எதிலும் வெற்றி பெறாமல் இளமையில் வாழ்வையும் முடித்துக் கொண்டார் 1976-ல், மனைவியும், மகன்களில் இனியனும் இன்று இந்திரா காங்கிரஸ். பெரியாரின் நேர் வாரிசு, தொடர்பின்றிப் போனது!
சுற்றுப் பயணம் தொடர்ந்தார் பெரியார் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில், ஆறறிவு படைத்ததால் மனிதன் சிந்திக்கும் ஆற்றலுள்ளவனாயிருக்கிறான்; அதனால் விலங்குகளைவிட உயர்ந்தவன் - என்ற கருத்தைப் பெரியார் மறுத்து, விளக்கினார். மிருகங்கள்கூடச் சிந்திக்கின்றன. மனிதன் மற்றவர்களுக்கு உதவுவதால் பெரியவன் என்றால், அற்பமான தேனீகூட மனிதனுக்குத் தேன் தருகிறதே; மாடுகூடப் பால் தருகிறதே - ஆனால் மனிதன் எப்போது உயர்ந்தவன் என்றால், தனக்கென்று சுயநலத்துடன் எதையும் செய்து கொள்ளாமல், பொது நலத்துக்கே எப்போதும் பாடுபடுவதால் மதிக்கப்படுவான் - என்றார் பெரியார். அதே போல 32 தர்மங்கள் செய்ய வேண்டும்; அதற்காகத்தான் கடவுள் மனிதனுக்குச் செல்வத்தைத் தந்துள்ளார் என்ற பழங்கொள்கையையும் கண்டித்தார் ஒருவனிடம் செல்வத்தைத் தந்து, அவன் இடுகின்ற பிச்சையைட் பெறுவதற்கென்றே இன்னொருவனை ஏழையாக வைப்பவல் கடவுளாயிருக்க முடியாது - என, வள்ளுவரையும் மேற்கோள் காட்டினார் பெரியார்.
சுற்றுப் பயணத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டது பெரியாருக்கு. செயற்கைப் பல், நாவில் உரசி உரசிப் புண்ணாக்கி விட்டது. 16-3-45 முதல் சென்னை பொது மருத்துவமனையில் பத்து நாள் தங்கிச் சிகிச்சை பெற்றார். அங்கு நாக்கில் புற்று நோய் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை செய்யப் பட்டது. நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவர் என்று சொல்ல ஆத்திகர்க்கு வாய்ப்பில்லாது எல்லாமே குணமாகி விட்டது. முதலில் தமையனாரின் சித்த வைத்தியம் பலிக்கவில்லை. அதன் பிறகு செயற்கைப் பல் செட்டைப் பொருத்தாமலே ஈறுகளால் நன்கு மென்று தின்னப் பழகிக் கொண்டார் பெரியார். முறுக்கும். இறைச்சியும்கூட நொறுக்கப்பட்டன!<noinclude></noinclude>
ka94wwkg72i02m004gr3t0xni84jfs5
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/187
250
452366
1433685
2022-07-21T03:28:33Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
185) மீண்டும் பொதுக்கூட்டங்களுக்குச் சென்றுவிட்டு, ஏற்காட்டில் ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் ஓய்வு எடுத்து வந்தார். அப்போது, சொந்த உபயோகதிற்காகத் தமது சொந்த நிலத்தில் விளைந்த அரிசியைத் தாமும், தமையனார் ஈ.வி.கே.யும், மணியம்மையாரும் எடுத்துச் சென்றதற்காகப், பெருந்தன்மையும் காருண்யமும் மிக்க சர்க்காரால், தலைக்கு 75 ரூபாய் அபராதம் கட்ட நேரிட்டது. ஈரோட்டில் மூன்றாம் முறையாக நடைபெற்ற திராவிட மாணவர் பயிற்சி முகாமுக்கு வந்து, வகுப்புகள் நடத்திவிட்டு, மறுபடியும் ஏற்காடு திரும்பினார் பெரியார்,
இரண்டாம் உலகப் பெரும் போரில் நேசநாடுகள் இறுதியாக வெற்றி பெற்று விட்டன. இதைப் பாராட்டிப் பெரியார் 12-5-1845 அன்று குடி அரசு" தலையங்கம் எழுதினார். இதற்குப்பின் ஜூலையில் நடைபெற்ற சிம்லா மாநாட்டில், வைசிராய் வேவல் கழகத்தை அழைக்காவிடினும், வகுப்புவாரி உரிமைக்கு ஒப்புதல் தந்தனர் என்பது குறித்துப் பெரியார் மகிழ்ச்சி தெரிவித்தார். இத்திங்களில் மணியம்மையார், ஏ.பி. சனார்த்தனம் இவர்களுடன் ஆந்திர நெல்லூர்ப் பகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார். அடுத்த திங்கள் பெங்களூருக்கும் சென்றிருந்தார் பிரச்சாரத்திற்கு.
போலி ஜஸ்டிஸ் கட்சியைத் துவக்க முயன்று தோல்வியுற்ற மாஜிப் பதவியாளர் சிலர், வேறொரு முனையிலிருந்தும் பெரியார் மீது பாணம் தொடுத்துப் பார்த்தனர். இமிடேஷன் சுயமரியாதைச் சங்கம் என்று 14-7-1945 "குடி அரசு" இதனை வர்ணித்தது. தாங்களே மெய்யான சுயமரியாதைச் சங்கம், என ஒன்றைப் பதிவு செய்திட முனைந்தனர். இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறியப் பெரியார் தொண்டர்கள் 19-15-ஆகஸ்ட் 2-ம் நாள் கரூரில் சுயமரியாதை இயக்க மாநாட்டைப் பெரியார் தலைமையில் நடத்தி, உண்மை இதுதான் என நாட்டினர்!
திராவிடர் கழக உறுப்பினர் பதியும் பணி விரைந்து முன்னேறி வந்தது. 1945-ஆகஸ்ட் 18-ஆம் நாள் வரையில் உறுப்பினர் எண்ணிக்கை 33,867; கட்டணத் தொகை ரூ.3367/- ஈரோட்டிலிருந்து பெரியார் "ஜஸ்டிசைட்'" என்ற ஆங்கில வார இதழ் துவக்கினார், 1-9-45 அன்று, பின்னர் செப்டம்பர் 3-ஆம் நாள் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தமிழ் மொழி பற்றிக் கருத்தாழமிக்க ஆய்வுப் பேருரை நிகழ்த்தினார். 17-வது நீதிக்கட்சி மாதாடு திருச்சியில் நடைபெற ஆயத்தமாயிற்று.
1945 - செப்டம்பர் 29-ஆம் நாள் திருச்சி புத்தூர் மைதானத்தில் 17-வது நீதிக்கட்சி மாநாடு பெரியார் தலைமையில் நடைபெற்றது. என். அர்ச்சுனன் திறந்து வைத்தார். தராசுக்கொடி (இங்குதான் கடைசி) மிராண்டா கஜேந்திரன் அம்மையாரால் ஏற்றி வைக்கப்பட்டது. தி.பொ, வேதாசலம் வரவேற்புக் குழுத் தலைவர். அடுத்த நாள் டி. சண்முகம் தலைமையில் 4-வது சு... இயக்க மாநில மாநாடு கே.கே.<noinclude></noinclude>
67hggrdlozr7zu79ynovrwl20vz4z1m
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/188
250
452367
1433686
2022-07-21T03:28:52Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
நீலமேகம் திறந்துவைக்கக், கனகம்மையார் இராமசாமி கொடி யேற்றினார். அண்ணா தான் வரவேற்புக் குழுவின் தலைவர். அழகர்சாமியின் சிறப்புரையும், எம்.ஆர். ராதாவின் நாடகமும் மாநாட்டில் பாராட்டுப் பெற்றன. இந்த மாநாட்டை ஓட்டி நடைபெற்ற ஊர்வலம், திட்டமிட்ட பாதையில் செல்லாதவாறு தடை செய்து. அரசு சிறுமதியைக் காட்டிக் கொண்டது. தொண்டர்கள் உணர்ச்சிமயமாய்க் தடை மீறத் துடித்தனர். பெரியாரோ தமது இயல்புக்கேற்ப, அரசு அனுமதிக்கும் வழியிலேயே செல்வோம் என்று அமைதிப்படுத்தினார். இதேபோல்தான் கடந்த ஜூலை 22-ஆம் நாள் புதுச்சேரியில் பாரதிதாசனால் துவக்கப்பட்ட திராவிடர் கழக விழாவுக்குப் பெரியார் சென்றபோது, அவர் உரை நிகழ்த்திய பின்னர், உள்ளூர்க் கயவர்கள் சிலர் கொடிமரத்தை வீழ்த்திக் கலவரம் செய்தனர். பெரியாரை ஒரு ரிக்ஷாவில் ஏற்றிப் பாதுகாப்பாக அன்பர் இராமலிங்கம் இல்லத்திற்குத் தோழர்கள் அனுப்பினார்கள். தனியே அகப்பட்டுக் கொண்ட மு. கருணாநிதி தையப் புடைக்கப் பட்டார் அங்கு "தொழிலாளர் மித்திரன்" இதழ் நடத்தி வந்த காஞ்சி கல்யாண சுந்தரம் தாக்கப்பட்டார். அப்போதும் பெரியார் அமைதி காத்து, அனை வரையும் ஆறுதல் பெறச் செய்து, அடுத்த நாள்வரை தங்கியிருந்து, பின்னர் ஈரோடு திரும்பினார். -
திருச்சி மாநாட்டில் பாடலாம் என்று பெண்ணாகரம் நடேசன் ஒரு பாடல் இயற்றிக்கொண்டு வந்திருந்தார். இன்னும் என்ன செய்யப் போறிங்க? சொல்லுங்க நீங்க! என்ற அந்தப் பாடலின் சந்தம் பெரியாரைக் கவர்ந்ததால், தாமே மெட்டமைத்துப் பாடிப் பார்த்தார். நன்றாக வந்தது. உடனே மகிழ்ந்து போய், அதில் 10,000 பிரதிகள் அச்சியற்றித் திருச்சி மாநாட்டில் விநியோகம் செய்தார்; பாடலும் பாராட்டுகளை ஏராளமாகப் பெற்றது!
தராசுக்கொடி தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தந்த கொடி, அது புரட்சியின் சின்னமல்ல; மாற்ற வேண்டும் - என்பதாக ஒரு கருத்து திருச்சியில் உதயமாயிற்று. பின்னர் பெரியார் கேட்டுக் கொண்ட வண்ணம், பலரும் டிசைன் அமைக்க முயன்றனர். “குடி அரசு" உதவி ஆசிரியராக அப்போது ஈரோடு வந்திருந்த மு. கருணாநிதி, கருப்பு மையும், தன் விரலின் நுனியிலிருந்து எடுத்த இரத்தமும் கொண்டு, இப்போதுள்ள திராவிடர் கழகக் கொடிக்கு வடிவமைப்பு எழுதித் தந்தார். அதுதான் பின்னர் 27-4-1946-ல் பெரியார் அங்கீகாரம் பெற்றது.
இனி திராவிடர் கழகத்துக்குப் பெரியார்தான் நிரந்தரத் தலைவர் எனத் திருச்சி மாநாடு தீர்மானம் இயற்றியது.
திராவிட விடுதலைப் படை என்பதாக ஒரு தொண்டர் படை திராவிடர் கழகத்துக்குத் தேவை என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பெரியார் ஈரோடு திரும்பியதும், இதைப்பற்றி மேலும்<noinclude></noinclude>
q44mebyaalbciapk3gllcr2jg8y8wne
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/189
250
452368
1433687
2022-07-21T03:29:42Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
188
சிந்தித்து, 1945-செப்டம்பர் 29-ஆம் நாள் "குடி அரசு" இதழில், கருப்புச் சட்டைப் படை அமைப்பு என்பதாக ஓர் அறிவிப்பு வெளியிட்டார். ஈ.வி.கே. சம்பத், எஸ். கருணானந்தம் ஆகிய இருவரும் இதன் தற்காலிக அமைப்பாளர்கள் என்று கூறும் இத்தகைய அறிவிப்பு, 22-12-1945 "குடி அரசு" இதழ் வரையில் தொடர்ந்து வெளியாயிற்று. கருப்புச் சட்டைப் படையின் முதல் தொண்டராக, மு. கருணாநிதி தம்மைப் பதிவுசெய்து கொண்டார் ஈரோட்டில்.
திருச்சி மாநாடு, தனிச் சுதந்திரத் திராவிட நாடு வேண்டும் என்றும், தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் புரட்சிகரமான இரு முடிவுகளையும் மேற்கொண்டது. அடுத்த திங்கள் 11-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பெரியார், தேர்தல் பகிஷ்காரம் ஏன் என விளக்கினார். நமது இழிநிலையை விளக்கிட எப்போதுமே கருப்புச் சட்டை அணியலாம்; பெண்டிரும் புடவை இரவிக்கை அணியலாம்; கூட்டங்களில் இனி மாலைக்குப் பதில் கருப்புத் துணிகளையே போடலாம் என்ற கருத்துகளைப் பெரியார் கூறினார். இந்தியாவில் பிற இடங்களில் ராமதண்டு, அனுமான் சைன்யம், செஞ்சட்டை. நீலச்சட்டை, ஹிந்துஸ்தாள் சேவாதள் ஆகியவை இருப்பது போல, இங்கும் கருப்புச் சட்டைப் படை இருக்கும் - என்றார் பெரியார்.
உடல்நலங் குன்றியதால் பெரியார் நவம்பர் 20-ஆம் நாள் முதல் டிசம்பர் 31 முடிய குற்றாலத்தில் தங்கியிருந்தார். இதற்கு ஒரு காரணம், கடந்த நவம்பர் முதல் நாள் என்.எஸ். கிருஷ்ண ன், எம். கே. தியாகராஜ பாகவதர் இருவருக்கும் 14 ஆண்டு கடின காவல் தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பாகும். பெரியார் இதனால் மனங்குமைந்து போனார். நாடெங்கும் திராவிடர் கழகக் கூட்டங்களில் இவர்களிருவரையும் விடுதலை செய்ய வேண்டிக்கொள்ளும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி, கிருஷ்ணன் நாடக சபா ஒன்று துவக்கியிருந்தார். இதில் டி.வி. நாராயணசாமி, சிவாஜிகணேசன், ஆர்.எம். வீரப்பன், எஸ். எஸ். ராசேந்திரன் ஆகியோர் நடித்து வந்தனர். இந்த நாடக சபா தினந்தோறும் கிருஷ்ணன் - பாகவதர் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையைக் காட்சியாகக் காட்டி வந்தது. பத்திரிகா தர்மத்தின் பாதுகாவலனான மவுண்ட்ரோடு மகா விஷ்ணு, "இந்து" பக்கிரிகை, என்.எஸ்.கே. சம்பந்தமான செய்திகளையே வெளியிடுவ தில்லை . இதனால் மனம் வருந்திய பெரியார், நமக்கு நிதி வசதியும், ஒரு தினசரிப் பத்திரிகையும் தேவை என 1946 சனவரி 5-ஆம் நாள் "குடி அரசு" இதழில் குறிப்பிட்டிருந்தார். கழகப் பிரச்சாரம் செய்யும் தோழர்கள், கூட்டங்களுக்கு ஒத்துக்கொண்டு, போகாமல் தவறி விடும் வழங்கினத்தையும் பெரியார் கண்டித்திருந்தார். யுத்தப் பிரச்சாரத்<noinclude></noinclude>
q3e24j1gemddgah68rl470r32vpku7l
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/190
250
452369
1433688
2022-07-21T03:30:04Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
1891
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
திற்காகத் தரப்பட்ட "விடுதலை" நாளேடு திருப்பித்தரப்பட்டால், நடத்தலாமென விருப்பம் தெரிவித்தார். அதன்படி 1946 ஜூன் 5-ஆம் நாள் முதல் "விடுதலை" நாளேடு மீண்டும் தொடங்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி தொடங்கிய 60-ஆம் ஆண்டு விழா 1946 சனவரியில் எங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காந்தியார் சுற்றுப் பயணம் புறப்பட்டார். பெரியார், காங்கிரஸ் அய்ந்தாம்படை ஸ்தாபனந்தான் என்றாலும் காந்தியார் பகிஷ்காரம் இப்போது வேண்டாம்; காங்கிரசே தேர்தலில் வெற்றி பெறும் என்பதாக எழுதினார். இந்த முற்போக்கான காலத்திலும் சேலத்தில் மார்ச் 9, 10 தேதிகளில் சர் சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் பிராமணர் மகாநாடு நடைபெற்ற அக்கிரமத்தைக் கண்டு பதைத்தார் பெரியார்! திராவிட மாணவர் கழகத்தின் இரண்டாவது மாகாண மாநாடு நீடாமங்கலத்தில் பிப்ரவரி 23, 24 நாட்களில் மிக எழுச்சியுடன் நடை பெற்றது. பெரியார், அண்ணா , ஏ. ராமசாமிக் கவுண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர் உள்ளத்தில் மூண்டிருந்த புரட்சிக்கனல் அணைந்திடாமல் பாதுகாத்தார் பெரியார்
நாடெங்கும் கருப்புச் சட்டை அணிந்தோர் உலா வந்தனர். மதுரையில் கருப்புச் சட்டைப் படையின் முதலாவது மாநாடு குழுமியது. மே திங்களில் 11, 12 நாட்களில் தொடங்கிய கருப்புச் சட்டை மாநாட்டிற்குத் தலைவர் பெரியார், திறப்பாளர் அண்ணா , கொடி உயர்த்தியோர் என். அர்ச்சுனன், “திராவிட நாடு" படத் திறப்பாளர் ஈரோடு எஸ்.ஆர். காந்தி அம்மையார் (மாப்பிள்ளை நாயக்கர் மகளார். சம்பத், பெரியார் விரும்பியவாறு இவரைத் திருமணம் செய்து கொண்டிருந்தால், பெரியாரின் வெறுப்பைச் சம்பாதித்திருக்க மாட்டார்!) அண்ணாவின் அவன்பித்தனா, ராதாவின் போர்வாள் - நாடகங்கள் ஏற்பாடாகியிருந்தன. மதுரை வையையாற்று மணற்பரப்பில் வேயப்பட்டிருந்த மாநாட்டுப் பெரும் பந்தலில் கயவர் நெருப்பிட்டுக் கொளுத்தினர். தங்கியிருந்தோர் திசைமாறி ஓடும்போது, காலிகள் தாக்கினர். இதைத் தொடர்ந்து தமிழ் நாடெங்கும் அமளி கட்டவிழ்த்து விடப்பட்டுக் கழகக் கொடிகளை வீழ்த்துவதும், கலகம் விளைப்பதும் தொடர்ந்தது. ஆனால் அடுத்த வாரமே கும்பகோணத்தில் திராவிடர் மாநாடும், சுய மரியாதை மாநாடும் நடைபெற்றன. இரவில் அண்ணாவின் சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகங்கள். உடல் நலிவோடு அண்ணாவும் இவற்றில் நடித்தார். சிவாஜிகணேசன் சிவாஜியாக வேடம் புனைந்தார். (15-12-1945 அன்று இந்த நாடகம் சென்னையில் அரங்கேறியது. அதுவரை ஸ்தீரி பார்ட்டாக இருந்த நடிகர் வி.சி. கணேசனுக்கு சிவாஜி வேடந்தந்து, தாம் காகபட்டராக நடித்தார் அண்ணா ) ஏ.வி. பி. ஆசைத்தம்பி சுயமரியாதை மாநாட்டுத் தலைமை தாங்கினார்.<noinclude></noinclude>
nub4vyse9v0bys74j3rb3ty597oldvl
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/191
250
452370
1433689
2022-07-21T03:30:32Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
விருதுநகரில் காமராசருக்கு உறவினராயிருந்தும் துவக்க முதல் இறுதிவரை மயங்காத்திண்மை படைத்த சுயமரியாதை வீரராக விளங்கிய ஏ.வி.பி. ஆசைத்தம்பி தமது பள்ளிப் படிப்பு முடிந்த 1943-ஆம் ஆண்டு முதல் இயக்கத்தில் ஈடுபட்டார். 1944-ஆம் ஆண்டு திராவிட மாணவர் மாநாட்டை அங்கே கே. ஆர். சத்தியேந்திரன் (மாவட்ட நீதிபதி அளவுக்குப் பின்னாளில் உயர்ந்தவர். 1976-ல் இந்திரா காந்தியால் பழிவாங்கப்பட்டோரில் முக்கியமானவர்) போன்ற தோழர் களுடன் நடத்தினார். நகரமன்ற உறுப்பினராயிருந்தார். அண்ணாவுடன் தி.மு.சு. அமைப்புக்கு வந்தார். ''காந்தியார் சாந்தியடைய '' என்ற நூலை எழுதியதற்காக 6 மாதக் கடுங்காவல் தண்டனை பெற்றுச் சிறையிலிருந்தபோது, அரசு 1950-ல் இவர் தலையை மொட்டையடித்தது. 1957-ஆம் ஆண்டிலும் 1967 ஆம் ஆண்டிலும் சென்னையில் சட்டமன்ற உறுப்பினரானார். கலைஞர் ஆட்சியில் சுற்றுலா வாரியத் தலைவராயிருந்தார். 1977 ல் வடசென்னை நாடாளுமன்றத் தேர்தலில் வென்றார். 1979 ஏப்ரல் 7-ஆம் நாள் அந்தமானில் திடீரென மறைந்தார். "தனி அரசு" இதழாகவும் காளேடாகவும் நடத்தி - அச்சம் தயை தாட்சண்யமின் எழதினார். தொலைவிலிருந்து கேட்பார்க்குத் தந்தை பெரியார் பேசுவது போலவேயிருக்கும் குரலும் பாணியும் இவர் கொண்டு, சிறந்து விளங்கினார். டாக்சி ஆட்டோரிஷாத் தொழிற்சங்கத் தலைவராக நீண்ட நாள் இருந்தார். இன் சொல்லால் உரையாடும் பண்பாளர்.
குடந்தை கே.கே. நீலமேகம் தஞ்சை மாவட்டத்தில் சுயமரியாதை, திராவிடர் இயக்கப் பெருந்தூண். பெரியாரை விடுத்து அண்ணாவுடன் இவர் தி.மு. கழகத்திற்குச் சென்றது பெரியாருக்கு உட்பட எல்லார்க்குமே வியப்பு. ஓங்கிய குரலால் நீண்ட நேரம் மேடைகளில் பேசுவார். நிறைய சீர்திருத்தத் திருமணங்கள் நடத்தி வைத்துள்ளார்.
சேலம் முனிசிபல் கல்லூரித் தலைவர் ஏ. இராமசாமிக் கவுண்டரும், அவரது துணைவியார் கனகம்மையாரும் திராவிடர் இயக்கத்தில் முழுமூச்சாக ஈடுபட்டார்கள். எந்தக் கூட்டமோ, மாநாடோ, தயங்காமல் பங்கேற்றுப் பணியாற்று வார்கள். அம்மையார் அரசியல் நிகழ்ச்சிகளில் மிகத் துணிவுடன் கலந்து கொள்வார்கள்.
திருவெற்றியூர் சண்முகம் பெரியாரின் அன்பர், இடைவிடாது நீதிக்கட்சிக்காக உழைத்த பெருந்தகையாளர். அண்ணாவிடமும் பெருமதிப்புப் பெற்றார்.<noinclude></noinclude>
7yo6je0u8euziatb0b1xais5polmdbm
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/192
250
452371
1433690
2022-07-21T03:31:01Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
191
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
ஜூன் திங்கள் நடைபெற்ற இரயில்வேத் தொழிலாளர் வேலை நிறுத்தம், சென்னையில் பக்கிங்ஹாம் கர்நாடிக் மில் தொழிலாளர் வேலை நிறுத்தம் இவற்றை வரவேற்றும், வெற்றிபெற வாழ்த்தியும், பார்ப்பனர் சூழ்ச்சிக்கும் - பத்திரிகையாளர் இழி தன்மைக்கும் பலியாகாமல் எச்சரிக்கையாய் நடந்துவர வேண்டுமென்றும் தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறினார் பெரியார்.
கழகத்துக்கு நிதி வசதியே இல்லாததால் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்து உதவ வேண்டும் என்றும், அது சேரும் வரையில் கழகத் தோழர்கள் ஆங்காங்கு மாநாடு கூட்டி நிறையப் பணத்தைச் செலவழிக்க வேண்டாம் என்றும் பெரியார் கேட்டுக் கொண்டார்.
சூலைத் திங்கள் 31-ஆம் நாள் முதல் ஆகஸ்டுத் திங்கள் 8-ஆம் நாள் முடியப் பெரியார் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தார். இதில் புதுமையாக விளம்பரம் ஒன்று செய்யப்பட்டது திருவாரூர் வி.எஸ்.பி. யாகூப் என்னும் சிறந்த அமைப்புத் தொண்டரால். அதாவது, பெரியாருடன் நெடுஞ்செழியனும் வருவார்; ஒலி பெருக்கி அமைக்கப்பட்ட காரில் இருவரும் பயணம் செய்வார்கள் என்பதாக! 1946-ல் இதுவும் ஒரு புதுமை!
பெரியார் குடும்பத்தில் இந்த ஆண்டு இரு திருமணங்கள் நடந்தன. அண்ணாரின் சிறிய மகள் செல்லா என்கிற நாகலட்சுமிக்கும், சேலம் தாதம்பட்டி ராஜுவுக்கும் 19-4-46-ல் திருமணம் நடைபெற்றது. ஈ.வெ.கி. சம்பத் - திருப்பத்தூர் சாமி நாயுடு மகள் சுலோச்சனா இவர்கள் திருமணம் 15-9-1946 அன்று திருப்பத்தூரில் நடைபெற்ற போது பெரியார், பெண்கள் அலங்கார பொம்மைகளா - என்ற தலைப்பில், பெண்டிருக்கு உள்ள நகைப் பைத்தியம் முதலிய பழைமைக் கருத்துகளைச் சாடினார். (பெரியார் வலதுகை மோதிர விரலில் எப்போதும் அணிந்திருக்கும் பெரிய பச்சைக்கல் மோதிரத்தைக் குறும்புடன் பார்த்தனர் மணமகளார்!)
திராவிட மக்களுக்குத் தனியான நெறியில்லை ; ஆரிய மதம் ஆரிய வேதம் ஆரியக் கலை இவைகளையே தமது நெறியாகத் திராவிடர் தவறாகக் கருதுகின்றனர்; ஆதாரமேயில்லாத பரதக் கண்டம் அல்லது பாரத தேசம் தமது நாடு என நினைக்கின்றனர்; யார் நம்மவர், யார் அந்நியர் என்பதும் புரியவில்லை ; திராவிடர் தவிர மற்ற எல்லாருமே நமக்கு அந்நியரே; காங்கிரஸ் ஏற்பட்டது. முஸ்லீம் களிடமிருந்து இந்துக்களைப் பாதுகாக்கவே; எனவே ஆரியம் ஒழிந்த திராவிடமே நமது இலட்சியம் - என்று பெரியார் சென்னையிலும் பிற ஊர்களிலும் நடந்த பொதுக் கூட்டங்களில் விளக்கினார். இந் நிலையில், இந்தியாவில் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில், காங்கிரஸ் போட்டியிட்டு, நூறு சதவீத வெற்றியைத் தேடிக் கொண்டது! வெள்ளையர் வெளியேறுமுன்பே காங்கிரசார் இங்கு<noinclude></noinclude>
gezvd98glgwddz3cbl63ea36sxdojgn
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/193
250
452372
1433691
2022-07-21T03:31:29Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
- 192 பதவியில் அமர்ந்து, அரசியல் சட்டங்களை இயற்றத் தொடங்கினர், முஸ்லிம் லீகும், டாக்டர் அம்பேத்கர் இயக்கமும் நேரடி நடவடிக்கையில் இறங்கின. சர் ஸ்டா போர்டு கிரிப்சும், வைசிராய் வேவலும் திராவிடர்களின் பிரச்சினையைக் கேட்டறிந்தும், காலை வாரிவிட்டனர். பெரியாருக்கு அதிர்ச்சி தரும் வண்ணம், 24 வயது நிரம்பு முன்னர் என். அர்ச்சுனன் மறைந்துவிட்டார் 12-10-46 அன்று.
காங்கிரஸ் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் திட்டவட்டமான கொள்கையில்லாமல் குழம்பிக் கிடந்தனர் மந்திரிகள். மதுவிலக்கில் கட்டுப்பாடில்லாக் காங்கிரஸ் மந்திரிகள் என்று பெரியார் கண்டனம் தெரிவித்து எழுதினார். மேலும், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற தலைப்பிலும் எழுதினார். அதாவது, காங்கிரஸ் இடைக்கால சர்க்கார் அமைத்ததைச் சுட்டிக்காட்டி! முன்பு நீதிக்கட்சி ஆட்சி முடிவுற்றுக், காங்கிரஸ், ஆட்சி அமைக்கத் தயங்கியபோது, 1936-ல், அற்பாயுள் மந்திரிசபையென இடைக்கால மந்திரி சபையைச். காங்கிரசார் வர்ணித்தார்களல்லவா - அதைப் பெரியார் நினைவூட்டினார்.
சென்னையில் டிப்புசுல்தான் நாள் என்பதாக. 1946 நவம்பர் 16-ஆம் நாள் கொண்டாடப்பட்ட ஒரு விழாவில் பெரியார் கலந்து கொண்டு உரையாற்றியிருப்பது புதுமையாகத் தோன்றுகிறது.
சென்னை மாகாணத்தில் பிரகாசம் தலைமையில் காங்கிரஸ் அரசோச்சத் தொடங்கியிருந்தது.
ஈரோட்டில் சண்முக வேலாயுதம், புலியூர் குகநாதன் இருவரும் சேர்ந்து நாதன் கம்பெனி என்ற புத்தக விற்பனை நிலையம் துவங்கினர். "குடி அரசு" இதழ் சில காலம் இவர்கள் பொறுப்பில் நடைபெறப் பெரியார் அனுமதித்திருந்தார். பெரியாரின் சேலம் கல்லூரிச் சொற்பொழிவைத் தொகுத்து "தத்துவ விளக்கம்" என்ற அழகிய நரலையும் இவர்கள் வெளியிட்டனர். பின்பு 1947 சனவரி 22 அன்று துவக்க விழா ஆற்றிய பெரியார், நூல்களைப் பற்றி அரிய கருத்துகளை அங்கு வெளியிட்டார்:- இப்போது நூல் படிப்பவர் தொகை அதிகமாகியிருப்பதால், வெளியீட்டாளர் நூல் விற்குமோ என அஞ்சவேண்டியதில்லை. ஆனால் படித்த கூட்டத்தார், பிறருக்கு உபகாரிகளாக இருப்பதில்லை. பண்டிதர்கள் எவ்வளவோ பெரிய நால்களை எழுதி வெளியிட்டாலும் மூடநம்பிக்கையில்லாத, மானமற்ற தன்மையில்லாத, நூல் ஒன்றேனும் காண முடிவதில்லை. அறிவியக்க நூல்களை வாங்குவோர் மிக அவசியமானவற்றை வைத்துக் கொண்டு மற்ற நூல்களைக் குறைந்த விலைக்கு, உடனே, பிறர்க்கு விற்று, நிறையப் பேர் படிக்க வழி செய்ய வேண்டும் - என்றெல்லாம் பெரியார் சிந்தனைச் செல்வத்தை வாரி வழங்கினார்.<noinclude></noinclude>
2f8p2zde9jt02betjgxkwji9tl4dwoc
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/194
250
452373
1433692
2022-07-21T03:31:54Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
193
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
மார்ச் 18-ஆம் நாள் திருச்சியில் தென்பகுதி ரயில்வே அலுவலர் சங்கத்தார் பெரியாருக்கு 1080 ரூபாய் நிதி வழங்கினார்கள். அவர்கள் குறை போகப் பெரியார் காட்டிய வழிகள், ஆழ்ந்த சிந்தனைக்கு உரியவையாகும். அலுவலர்களைத் தேர்ந்தெடுக்கும் ரயில்வே சர்வீஸ் கமிஷன் உறுப்பினர்கள் அய்ந்து பேரில் ஒருவர் முஸ்லிம்; அவரும் பார்ப்பன மாதை (கே. சந்தானம் அய்யங்காரின் மைத்துனியை) மணந்தவர்; மற்றவர் பார்ப்பனர். நீதி எப்படி நம்மவர்க்குக் கிடைக்கும்? காங்கிரசின் ராமராஜ்யம் நமது சூத்திரர்களுக்கு மட்டுமே தீங்கிழைக்கிறது. முஸ்லீமோ, வெள்ளையரோ, சட்டைக்காரரோ, மதம் மாறுவதாய் மிரட்டும் அம்பேத்காரின் தாழ்த்தப்பட்டவரோ தமக்குரிய கோட்டாவைப் பெறுகிறார்கள். இந்து என்கிற பெயரில் பார்ப்பனர் முழுக் கோட்டாவும் அடித்து விடுகின்றனர். தப்பித்தவறி நம்மவர் யாராவது மேலே வந்தால், கெட்ட பெயர் உண்டாக்கி, ஆளையே அழித்து விடுகிறார்கள். அதனால்தான் நாம் இந்து என்னும் பிடிப்பிலிருந்து விடுபட வேண்டும். நமக்கு அய்ந்தாண்டுகளுக்குப் பின் தாம் இந்துவல்ல என்று சொன்ன அம்பேத்காருக்குச் சலுகை கிடைக்கிறது; நாம் திராவிட நாடு கேட்ட மூன்றாண்டுகட்கு அப்பால் பாக்கிஸ்தான் கேட்ட ஜின்னாவுக்குப் பயப்படுகிறார்கள்; நம்மை மாத்திரம் மதிப்பதில்லை . ஆகையால் நமக்கு இருக்கிற இழிவு ஒழிய நாமெல்லாம் இஸ்லாம் மார்க்கத்தில் சேர்ந்து விடுவதுதான் ஒரேவழி - என்றார் பெரியார்.
பெரியாருக்கு இப்போது மகிழ்ச்சியளித்த ஒரே செய்தி என்.எஸ். கிருஷ்ண ன், தியாகராச பாகவதர் இருவரும் 25-4-47-ல் விடுதலை ஆனதுதான்! அதனால் நோயுற்றிருந்த அவர் பூரித்தெழுந்தார். எடை ஒரு வேளை அதிகரித்ததோ என்னவோ? திருவத்திபுரத்தின் கழகத் தோழர்கள், அடுத்த திங்கள், பெரியாருக்குத் துலா நிறை புகு விழா நடத்திக் களித்தனர்.
1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் வெள்ளையன் வெளியேறினான். காந்தியார் கேட்ட இந்துஸ்தான் சுயராஜ்யம் முழு அளவில் கிடைக்க வில்லை. இந்தியாவைக் கூறுபோட்டுப், பாக்கிஸ்தானைத் | - தனியாக்கிக், குடியேற்ற நாட்டு அந்தஸ்துடன்தான் சுயராஜ்யம் தந்தான். ஆடி, ஆனந்தப் பள்ளுப் பாடினர் காங்கிரசார். “இது நமக்குத் துக்க நாள் வெள்ளையன் வெளியேறினானாலும் வட நாட்டுக் கொள்ளையன் நம்மீது சவாரி செய்கிறானே?” என்றார் பெரியார். திராவிடர் கழகத் தேனிசையில் அபசுரம் ஒலித்தது. அண்ணா எழுதினார் - - இரண்டுபேர் நம் மீது சவாரி செய்தனர்; ஒருவன் ஒழிந்ததில் பாதிச்சுமை குறைந்ததல்லவா? அதனால் ஆகஸ்ட் 15 ( மகிழ்ச்சிக்குரிய நாள்(” என்று. வெளியில் தெரியுமளவுக்குக், கழகம் இரு முகாமாகித், தாக்கிக் கொண்டது. ஏற்கனவே, எல்லாரும்<noinclude></noinclude>
d515xpahjce5aat8zqnho0h0athafut
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/195
250
452374
1433693
2022-07-21T03:32:23Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
194
எப்போதும் கருப்புச் சட்டை அணிய வேண்டும்; வெள்ளைச் சட்டையணியும் குள்ள நரிகள் எனக்கு வேண்டாம் - என்று பெரியார் சொன்னதில், அண்ணாவும் வேறு சிலரும் மனத்தாங்கலுடனிருந்தனர். ஆகஸ்ட் 15 புதிய விரிசலை உண்டாக்கியது.
செப்டம்பர் 14-ஆம் நாள் கடலூரில் நடைபெற்ற திராவிட நாடு பிரிவினை மாநாட்டில், திரு.வி.க. கலந்து கொண்டு திராவிட நாடு திராவிடருக்கே என்று முழங்கிய அற்புத மாறுதலைத் தமிழகம் கண்டது ஆயினும், அண்ணாவின் உள்ளம் அமைதியை இழந்திருந்தது. பெரியார் செயல்களில் அண்ணா ஏதோ குறை உணரத் தொடங்கினார். இதற்கு மேலும் உரமூட்டுவது போல், கரூர் வழக்கு நிதி அமைந்தது. நெசவாளர் போராட்டத்தில் ஈடுபட்ட கரூர் கழகத் தோழர்கள் சுமார் 100 பேர்மீது காங்கிரஸ் அரசு கடுமையான விதிகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து அலைக்கழித்தது. பெரியார். அவர்களை ஆதரித்துக் காப்பாற்றவில்லை என்பதாகக் கூறி அண்ணா , திருச்சியில், தமது நீதி தேவன் மயக்கம் போன்ற நாடகங்கள் வாயிலாய் நிதி திரட்டி உதவினார்.
உடையர்பாளையம் வேலாயுதம் என்கிற ஒரு பள்ளி ஆசிரியர் கழகப் பிரச்சாரம் செய்தார் என்ற காரணத்துக்காகக் கொலை செய்து, தூக்கில் தொங்கவிடப்பட்டது. 1947 நவம்பரில்தான்!
ஏ.பி. சனார்த்தனம் "தோழன்" என்றொரு திங்களிதழ் தொடங்கினார். "அவரை நம்பலாம்" என்று பெரியார் 1-11-47-ல் நற்சான்றிதழ் வழங்கினார். இவர்தாம் பெரியாரில் பெரியார் என்றார் பட்டுக்கோட்டை அழகர்சாமி, அப்போது பெரியாரைப் பற்றி!
வால்மீகி ராமாயணத்தைப் பெரியார் மிக நுணுக்கமாக ஆராய்ந்து தெளிந்தவர். அந்த ஆதி காவியத்தைத் தமிழில் மொழி மாற்றம் செய்த கம்பனுக்கு, என்ன அவசியம் வந்ததோ தெரிய வில்லை - அதில் உள்ள சாமான்ய மனிதர்களையெல்லாம் தெய்வங் களாகப் படைத்து உலவ விட்டான். கம்பராமாயணம் ஒரு சிறந்த இலக்கியம் என்பதால் கிடைத்ததைவிடப், பக்தி மார்க்க நூல் ஆண்டவன் அவதார மகிமை கூறும் இதிகாசம் என்பதால் கிடைக்கும் பெருமையே அதிகம். எனவேதான் கம்பன் தமிழ்க் கவிஞனென்கின்ற தயவு தாட்சண்யம் பாராமல் பெரியார் கண்டித்தார். மேலும், நாடகம், தெருக்கூத்துகள் வாயிலாகவே இராமாயணம் அதிகமாகப் பரவி யிருப்பதால், அதே வழியைக் கையாண்டு, வான்மீகிப் படைப்பின்படி இராமாயணப் பாத்திரத்தைச் சிருஷ்டித்து, நாடகமாக நடத்த விரும்பிய பெரியார், உண்மை இராமாயணம் என்னும் பெயரில், நாடக உருவில், தொடர்ந்து "சடி அரசு" இதழில் எழுதி வந்தார்.<noinclude></noinclude>
rmppjoaz289ddar8rxvx7rqgm4k60zw
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/196
250
452375
1433694
2022-07-21T03:32:53Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
195)
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
சுயராஜ்ய ஆட்சி என்ற பெயரால் கடைந்தெடுத்த முதலாளிகள் ஆட்சிதான் டெல்லியிலும், சென்னையிலும் நடைபெறுகின்றன என்பதைத் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டி, 1948 சனவரித் திங்களில் தாம் சுற்றுப் பயணம் செய்க எல்லா ஊர்களிலும் பெரியார் சொற்பொழிவாற்றுகையில், ஏழைப் பங்காளரான காந்தியார், பிர்ஸா மாளிகையில் தங்குவதும்; பெரும் முதலாளியான ஆர்.கே. சண்முகம் நிதி மந்திரியாக விளங்குவதும் நியாயமா என்று கேட்டார். சுய ஆட்சி என்பதைவிட, நல்ல ஆட்சியையே தாம் விரும்புவதாகக் கூறினார். 100க்கு 88 பேராகவுள்ள பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட் டோருக்குப் பிரதிநிதித்துவம் தரப்படாத கொடுமையை விவரித்தார்.
காந்தியார் படுகொலை நிகழ்ந்து விட்டது! அவரது வர்ணாசிரம தர்ம மோகத்தையே பெரியார் கண்டித்து வந்தார். ஆனால் பார்ப்பனரல்லாதாரான காந்தியார்மீது அளவற்ற பற்றுதல் கொண்டவர் பெரியார். சித்தம் கலங்கிவிட்டார். நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் 1948 பிப்ரவரி 29-ஆம் நாள் காந்தியாருக்காக அனுதாபக் கூட்டங்கள் நடத்திட அறிவித்தார். 31-1-48 “விடுதலை" ஏட்டில், மனம் பதறி அறிக்கை விட்டார். தொடர்ந்து பிப்ரவரிமாதம் முழுவதும் காந்தியாரைப் பற்றியே பேசியும், எழுதியும் வந்தார். காந்தியார் பாலூற்றி வளர்த்து வந்த பார்ப்பனீயப் பாம்பே அவரைத் தீண்டிய நன்றி கொன்ற செயவை வெளிப்படுத்தினார். கோட்சே, பார்ப்பனன் என்பதை மறைத்த, "இந்து", "மித்திரன்" பத்திரிகா தர்மத்தை அம்பலமாக்கினார். “அய் ஹாவ் நோ பிலீஃப் இன் பர்சனல் காட்" என்று சொன்ன காந்தியாரின் சாம்பலை ஊரூராய்க் கரைத்த மூடத் தனத்தைக் கண்டித்தார். காந்தியாருக்கு நினைவுச் சின்னமாக, இந்தியாவுக்கு காந்திஸ்தான் அல்லது காந்தி தேசம் என்றும், இந்து மதத்துக்குக் காந்தி மதம் என்றும், நமது ஆண்டுக் கணக்குக்குக் காந்தி ஆண்டு என்றும், பெயர் மாற்றலாமெனப் பெரியார் ஆலோசனை வழங்கினார். இந்தப் பெருந்தன்மையைப் புரிந்து கொள்ளும் ஆற்றலின்றி, நேரு குழுவும் பட்டேல் குழுவும் தமக்குள் போராடிக் கொண்டிருந்தன, டெல்லிப் பட்டணத்தில்!
எல்லாவற்றுக்குமே கருஞ்சட்டைக்காரர்தான் காரணம் என்று இங்குள்ள பத்திரிகையாளர் தூண்டி விட்டதற்கிணங்க, சென்னை யிலிருந்த ஓமந்தூரார் அரசு, திராவிடர் கழகத்தின் மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டது. கிரிமினல் சட்டத் திருத்தம் 15-ஆவது பிரிவின்கீழ்க் கருப்புச் சட்டைப் படைக்குத் தடை விதிக்கப் பட்டது. கழக அலுவலகங்கள், பத்திரிகை அலுவலகங்கள், கழகத்தார் இல்லங்கள்யாவும் சோதனைக்குள்ளாயின. கருப்புச் சட்டைப்படை என்பதாக ஒரு படை இல்லை என்று எடுத்துக்காட்டியும் கேட்பாரில்லை. ஆகையால் பெரியார் இன்னும் விளக்கமாக - என்னை<noinclude></noinclude>
n8obfw3zog2s3naxrk8npqkc73vktij
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/197
250
452376
1433695
2022-07-21T03:33:22Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
196
அழிக்க நினைத்தால் அது என் இயக்க அழிவல்ல; பிராமண அழிவேயாகும் - என்று 27-3-48 "குடி அரசு" இதழில் எழுதி இடித்துரைத்தார். இனிப் பிராமணாள் என வழங்காமல், இலக்கிய ஆதாரத்தின்படிப், பார்ப்பான் என்றே அழைத்திட ஆணையிட்டார். திராவிடர் கழகம், என்றும் பலாத்காரத்தையோ வன் செயல்களையோ ஆதரிக்காது; ஊரெங்கும் தாக்கப்பட்டும், அடிக்கப்பட்டும் அவதிக்கு ஆளாவதெல்லாம் கழகத்துக்காரரே! வன்செயலை விரும்பாத அகிம்சாவாதியான காந்தியடிகளையே இந்து மத வெறிப் பார்ப்பனன் சுட்டுக் கொன்றது போல, அறவழியில் செல்லும் கழகத்துடன் மோத வேண்டாம் - என எச்சரித்தார் பெரியார். சுயநலமிகளுக்கு மட்டுந்தான் எங்கள் கழகம் விரோதி. மற்ற அனைவர்க்கும் தோழன் - எனவும் விவரித்தார். ஜாதி மதமற்ற - வர்ணாசிரம அடிப்படை ஒழிந்த - சமுதாயம் அமைத்திட இனியாவது பாடுபட்டு ஆவன செய்யுங்கள் என அரசியல் நிர்ணய சபைக்கும், காங்கிரசுக்கும் 1948 ஏப்ரல் 24 -ஆம் நாள் பெரியார் ஆலோசனை வழங்கினார்.
17-4-48-ல் சென்னையில் மறைமலையடிகள் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பாளர் மாநாடு ஒன்றில் பெரியார் கலந்து கொண்டார். அண்ணாவும், திராவிடர் கழகத்தவர் அல்லாத திரு.வி.க., அருணகிரி அடிகள், ம.பொ. சிவஞானம், டி. செங்கல்வராயன், நாரண துரைக்கண்ணன் ஆகியோரும் கட்டாய இந்தியை எதிர்த்துப் பேசினர்.
பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏதாவது அபிப்பிராய பேதம் உண்டா? என வெளிப்படையாகவும், நேரிடையாகவும் தம்மிடம் வினவிய கழகத் தோழர்களிடம் பெரியார் - இம்மாதிரிக் கேட்பதே தவறு. ஒரு கட்சிக்கு ஒரு தலைவர்தான் இருக்க முடியும். மற்றவர், பின்பற்றுவோராகத்தான் இருக்க வேண்டும். அபிப்பிராய பேதம் சொந்தத் தனிப்பட்ட விஷயங்களில் வேண்டுமானால் இருக்கலாம்; கழக விஷயங்களில் இருக்கக்கூடாது! அப்படி ஏதாவது இருப்பதாக வெளிப்படுத்தினால், அது குறுக்கு வழியில் தமக்கு விளம்பரம் தேடும் முறையாகவே கருதப்படும்... என்று திட்ட வட்டமாகவே அறிவித்து விட்டார். இந்நிலையில் "திராவிட நாடு" இதழில் அண்ணா எழுதிவந்த - லேபில் வேண்டாம், உள்ளம் உடையுமுன், ராஜபார்ட் ரங்கதுரை, மரத்துண்டு, இரும்பாரம் போன்ற உருவகக் கதைகள், ஏதோ புயலுக்கு முன்னெச்சரிக்கை போலக் காட்சி தந்தன. அநேகர் எதிர்பார்த்தவாறு அறிஞர் அண்ணா தூத்துக்குடி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை!
அனைத்துலகத் தொழிலாளர் நாளாகிய மே தினத்தைத் , தொழிலாளர்களின் உண்மையான இயக்கமாகிய திராவிடர் கழகம் ஏன் கொண்டாடுகிறது என்பதை விளக்கினார் பெரியார். 1-5-48 “குடி அரசு" தெழில் மே தினமும் திராவிடர் கழகமும் என்று தலையங்கம்
னார். மே திங்கள் 8.- 9 நாட்களில் தூத்துக்குடியில் 18-வது<noinclude></noinclude>
jtm77x098zfw3skdgtk2oq0xp2dwcmi
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/198
250
452377
1433696
2022-07-21T03:42:03Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
197)
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் திராவிடர் கழக மாகாண மாநாடு நடைபெற்றது. பெரியார் தலைமை யேற்று, காந்தியடிகள் படத்தையும் திறந்து வைத்தார்; தி.பொ. வேதாசலம் திறப்பாளர்; கே.கே. நீலமேகம் கருப்பு சிவப்புக் கொடியினை உயர்த்தினார். திராவிடநாடு படத்தை அண்ணா திறக்க வேண்டும்; வரலில்லை! பள்னீர் செல்வம் படத்தை அழகிரியும், தாளமுத்து நடராசன் படத்தை ஏ.பி. சனார்த்தனமும், வ.உ.சி. படத்தைத் திரு.வி.க.வும் திறந்து வைத்தனர். கமகத்தில் கட்டுப்பாடு காக்கப்படவேண்டிய அவசியம் பற்றிப் பெரியார் வலியுறுத்தினார். அண்ணா வராததை எம்.ஆர். ராதா கண்டித்துப் பேசவே, “நடிகவேள் மாநாட்டில் நஞ்சு கலந்தார்" என்றார் மு. கருணாநிதி.
வாழ்வில் ஒன்று சேராத உறவினர்கள்கூடத் தாழ்வில் ஒருங்கிணைவார்களல்லவா? ஓமந்தூரார் ஆட்சி கட்டாய இந்தியை மீண்டும் கொணர்ந்து தலைவரையும் தளபதியையும் இணைத்து வைத்தது!
விபரீதமான வெடி என்று பெரியாரால் வர்ணிக்கப்பட்ட ஒரு தாக்கீது, டெல்லி மத்திய அரசால் மாநிலங்களுக்கு மே இறுதியில் அனுப்பப்பட்டது. பெரியாரின் உயிர் நாடியான கம்யூனல் ஜி.ஓ. கூடாது என்பதே அது! பெரியார் சிலிர்த்தெழுந்து “உடனே அரசியல் நிர்ணய சபையைக் கலைக்க வேண்டும்! வயது வந்தோருக்கு வாக்குரிமை அளித்த பின்பே, அரசியல் சட்டம் நிறைவேற்றுவோம், என்று காங்கிரசார் அளித்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, நாற்றுக்குப் பத்துப்பேர் வாக்கைப் பெற்றுத், தாங்களே விருப்பமான வர்களை நியமித்துக்கொண்டு, இரண்டாண்டுகளாய்ச் செயல்பட்டுப், பல சட்டங்களை உருவாக்கி வரும் அரசியல் நிர்ணய சபையின் அமைப்பு செல்லாது; எங்களையும் கட்டுப்படுத்தாது" என்று இந்தியா விலேயே ஓங்கிக்குரல் கொடுத்த ஒரே ஒரு முழு மனிதர் பெரியார் தான்! திராவிடநாடு பிரச்சினையைக் கேலி பேசிய பிரதமர் பண்டித நேருவுக்கும் பெரியார் விளக்கமுரைத்து, அடுத்த ஜூலை முதல் ஒவ்வோராண்டும் ஜூலை 1-ந் தேதி திராவிடப் பிரிவினை நாள் கொண்டாடுமாறு கழகத்தார்க்கு வேண்டுகோள் விடுத்தார்.
அரசு வாளா இருக்குமா? பாய்ந்தது "விடுதலை" மீது! 19-6-48 அன்று “விடுதலை" ஏட்டுக்கு 2000 ரூபாய் ஜாமீன் கட்ட வேண்டும் என்று, அதன் பதிப்பாசிரியரும் வெளியீட்டாளருமான மணியம்மை யாருக்கு அரசாணை வந்தது. அம்மாதம் 24-ஆம் நாள், திருச்சியில் திராவிடர் கழக நிர்வாகக் குழு கூடி ஆராய்ந்தது.
இந்தி தமிழ் நாட்டில் விருப்பப்பாடமாகவும், கேரள ஆந்திரக் கர்நாடகப் பிரதேசங்களில் கட்டாயப் பாடமாகவும் இருக்குமென்று. ao. 1643 பிரகாரம், 20-6-48 அன்று ஓர் அரசாணை வெளியாயிற்று. பெரியார் இராமசாமிக்கு ஓமந்தூர் இராமசாமி பயப்படலாமா என்று<noinclude></noinclude>
74bk7ubsck0ucm1h10oxczi7xgijha8
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/199
250
452378
1433697
2022-07-21T03:42:42Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
198)
தமிழகத்துப் பார்ப்பன ஏடுகள் சிண்டு முடிந்து விட்டதில், தமிழ் நாட்டிலும் கட்டாயமாக்கினர். உண்மையில் கட்டாயப் பாடந்தான்; ஆனால் சொல்லிக் கொண்டதோ விருப்பப் பாடம் என்று. இதிலடங்கிய சூது, சூட்சுமத்தைப் பெரியார் உணர்ந்து கொண்டதால், 10-8-48 முதல் இரண்டாம் இந்திப் போரைப் பெரியார் துவக்கினார்.
இந்த இரண்டாம் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி துவக்கப்படுமுன்னர் நிகழ்ந்த வற்றைப் பெரியாரே வர்ணிக்கிறார்:- "கிளர்ச்சி துவக்கமானது மாபெரும் அஸ்திவாரத்தின்மீதே துவக்கப்பட்டது. 1948-ஆம் ஆண்டு ஆகஸ்டு 14-ஆம் நாள் இந்தி எதிர்ப்பு மாநாடானது சென்னை செயிண்ட் மேரிஸ் ஹாலில் மறைமலையடிகள் தலைமையில், தெருக்கள் எல்லாம் அடைபடும்படி, 25,000 மக்கள் முன்னிலையில், அந்த ஹாலும் அந்தத் தெருவும் அதுவரை கண்டிராதபடி மகா உற்சாகத்துடன் கூடியது.
அதில் மறைமலையடிகள், தமிழ்ப்பெரியார் திரு.வி.க. அவர்கள் முதல், தோழர்கள் கதர் பிரதிநிதி நாரண துரைக்கண்ணனார், காங்கிரஸ் பிரதிநிதி ம.பொ.சி., கிறிஸ்தவப் பிரதிநிதி ரெவரெண்ட் அருள் தங்கையா, முஸ்லிம் லீக் பிரதிநிதி அப்துல் மஜீத், டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி, வி.வி. ராமசாமி, மாஜி மேயர் ராதாகிருஷ்ணப்பிள்ளை , கே.ஏ.பி. விஸ்வநாதன் முதலிய திராவிடர் கழகத்தினரல்லாதவர்களும், அதன் எதிரிகளும் ஏராளமாக வந்திருந்தனர். இம் மாநாடு தவிர மற்றும் பல மாநாடுகள் - புலவர் மாநாடு, மாணவர் மாநாடு, பெண்கள் மாநாடு முதலிய பல மாநாடுகள் கூடி, இந்தியை எதிர்த்துத் தீர்மானங்கள் செய்ததோடு நேரடிக் கிளர்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமான மக்கள் முன்வந்தார்கள்.
அந்த மாநாட்டுத் தலைவரை ஆதரித்து நான் காலையில் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால் அதற்கு ஓட்டுக் கொடுப்பேன் என்று கூறினேன். சிலர் அதைப் பற்றித் தவறாகவும் எண்ணியிருப்பார்கள். குறிப்பாக ம.பொ. சிவஞானம் அவர்கள், பெரியார் மந்திரியானால் அவ்விதம் செய்ய மாட்டார். ஏதோ பேச்சுக்கு அவ்வாறு கூறினார்' என்று தனது அதிருப்தியைக் காட்டினார். இன்றும் கூறுகிறேன், நாம் ஆங்கிலத்தை வெறுக்கும் புத்தியை வளர்ப்போமானால் என்றுமே விடுதலை அடைய முடியாத அடிமைகளாகவேதான் இருப்போம்.
நான் இரண்டாம் இந்தி எதிர்ப்புக்குத் தேதி குறிப்பிட்டவுடன் 2 நாட்களுக்கு முந்தி தோழர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், முதல் மந்திரி அவர்கள், என்னை நேரில் அழைத்தார். நான் சென்றதும் என்னை அன்பாய் வரவேற்று, துவக்க வாக்கியமாகக் கலக்கத்துடன், "நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன்" என்றார்.<noinclude></noinclude>
ts1ke2k7u1wpeken4if6tqit8iki4n9
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/200
250
452379
1433698
2022-07-21T03:43:03Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
199
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
'இந்த இடத்தில் நான் இருக்க நினைத்தால் இந்த இடம் எனக்கும் கிடைக்காது. உங்களுக்கும் கிடைத்திருக்காது' என்றேன்.
*என்ன இருந்தாலும் நீங்கள் காங்கிரசை விட்டுப்போனது தவறு' என்றார்.
"நான் காங்கிரசில் இருந்திருந்தால், இன்று நீங்கள் செய்கிற அளவு காரியம் கூட நான் செய்ய எனக்கு வாய்ப்புக் கிடைத்திருக்காது' என்றேன், கல்வி மந்திரி அவிநாசிலிங்கம் செட்டியார், இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று அரசாங்கப் பத்திரிகையில் எழுதியதைக் காட்டினேன்.
'என்ன இந்தச் செட்டியாரின் தொல்லை பெரிய வம்பாக இருக்கிறதே' என்று சொன்ன பிறகு சில வார்த்தைகள் பேசிய பின், 'என்ன இப்படிக் கிளர்ச்சி ஆரம்பித்து எனக்கு நீங்கள் வேறு தொல்லை கொடுக்கப் போகிறீர்களே! அய்தராபாத் பிரச்சினைப் போராட்டம் துவக்கப்பட்டால் என்ன செய்வது?' என்றார்.
‘என் நாட்டின் சுதந்திரத்தை முன்னிட்டுச் செய்கிறேன்; அய்தராபாத் போராட்டம் துவக்கப்பட்டால் என் கிளர்ச்சியை நிறுத்திக் கொள்வேன்' என்றேன்.
அதன்மீது அது பற்றிச் சிறு விவாதம் நடந்தது. முடிவாக 'நான் எப்படியோ மாற்றிக் கொள்ள முடியாத நிலையில் இப்போது இருக்கிறேன். என்னைப் பற்றித் தவறாய்க் கருதக் கூடாது' என்றேன், 'கலவரம் ஏதுமின்றி நடத்துங்கள் பார்த்துக் கொள்ளலாம்' என்று சொல்லிப், பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு என்னை வழியனுப்பினார்.
கிளர்ச்சி தொடங்கியதும் அவரும் அவரது கடமையைச் செய்தார். எப்படியோ முடிந்தது!"
நாள்தோறும் மறியல் நடைபெறுவதும், கர்ப்பிணிப் பெண்டிர் உட்பட மறியல் தொண்டர்களைக் கைது செய்து, சிறையில் அடைக்காமல், லாரிகளில் ஏற்றி, நகருக்கு வெளியில் காட்டுப்புறத்தில் இறக்கி வருவதுமாக அரசின் அடக்குமுறை விநோதமாயிருந்தது. போராட்டம் தொடரவே; சிறைத் தண்டனை அடி உதை வலுத்தது. ஊருக்கு ஒருவிதமாகப் போலீஸ் அடக்குமுறை வேட்டை தர்பார் நடந்தது. ஆகஸ்டு 23-ல் சென்னை வரும் ராஜாஜிக்குக் கருப்புக் கொடி காட்ட முடிவு மேற்கொண்டதை ஒட்டி, 22-ஆம் நாளே தலைவர் பெரியாரும், தளபதி அண்ணாவும் கைது செய்யப்பட்டு, 27-ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டனர். 28-8-48 அன்று பாரதிதாசனின் இரணியன் நாடகம் தடைசெய்யப்பட்டது. தடையை மீறிப் பல ஊர்களில் இரணியன் வேடத்தோடு தொண்டர்கள் கைதாயினர்<noinclude></noinclude>
a8j4zezouk49h1cfick2v5kfozmmj9f
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/469
250
452380
1433702
2022-07-21T07:21:06Z
Pollachi Vignesh
11381
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Pollachi Vignesh" /></noinclude>________________
468
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அமெரிக்கரில் நீக்ரோக்கள் 2 கோடி தான். நீக்ரோக்களோடு கலந்தால், தங்கள் குழந்தைகளின் நிறம் மாறி விடுமே என்றுதான் வெள்ளையர் பயப்படுகிறார்களே தவிர, நம்மைப் போல் தீண்டாத சாதியென்று அவர்களை ஒதுக்கி வைக்கவில்லை. அவ்வளவு உரிமை தந்தும், இப்போது தங்கள் தலைவரான மார்ட்டின் லூத்தர் கிங் கொலை செய்யப்பட்டதால், நீக்ரோக்கள் சட்டத்தைத் துச்சமாக மதித்துக் களி நடனம் புரிகிறார்கள் இப்போது அங்கே நீக்ரோ மக்களின் துப்பாக்கியே சட்டம்!" என்று 13ந் தேதியும், “நாம் உயிர்த் தியாகத்துக்குத் துணிய வேண்டும்; அப்போதுதான் பிரிவினை சாத்தியமாகும். காங்கிரஸ்காரர்களைப் போலப் பதவிக்கு அலையக் கூடாது. தேர்தலில் தோற்றார்கள். மந்திரி பதவி பறிபோனது. இப்போது Side Busincss ஆக சி.சுப்ரமணியம், வெங்கட்ராமன், அளகேசன் ஆளுக்கு ஒன்று தேடிக்கொண்டார்கள். கவர்னர் பதவி கிடைக்குமா என்று பக்தவத்சலம் அலைகிறார். இப்படிப்பட்ட அரசியல் காரர்களால்தானே மக்களின் ஒழுக்கம் பாழாகிறது?" என்று 14ந் தேதியும், பெரியார் “விடுதலை” யில் தலையங்கம் தீட்டியுள்ளார்.
தமிழகப் பொதுப்பணி- போக்குவரத்துத் துறை அமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மூத்த மகன் முத்து -கலைஞரின் மைத்துனர் சிதம்பரம் இசைச்சித்தர் சி.எஸ், ஜெயராமன் அவர்களின் மகள் சிவகாம சுந்தரி ஆகியோருக்கும்; கலைஞரின் மகள் செல்வி கலைஞரின் சிறிய தமக்கையார் மகனும் முரசொலி மாறனின் தம்பியுமான செல்வம் ஆகியோருக்கும்; 12.4.68 மாலை 5.30 மணிக்கு, சென்னை ஆபட்ஸ்பரி திறந்த வெளியில், அண்ணா தலைமையில் திருமணம், பெரியாரை அடுத்து அமர்ந்த இராஜாஜி, “நாங்கள் இப்படி அமர்வதே உண்மைத் திருமணம்" என்றார். “இவர்கள் அன்புடன்தான் பழகுகிறார்கள். இதனால் - இன்றைய மணமக்களைத் தமிழ் நாடே வாழ்த்துவதாக அமைகின்றது, நாம்தான் இவர்கள் இருவரையும் பற்றி விவரம் தெரியாமல் விழிக்கிறோம்" என்றார் அண்ணா ! 15.4.68 அன்று அண்ணா அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். வழியில் ரோமில் போப்பைச் சந்தித்தார். பாரீசில் டாக்டர் மால்க்கம் ஆதி சேஷய்யா, வாஷிங்டனில் ஊதாண்ட் ஆகியோரையும் சந்தித்தார் அண்ணா. யேல் பல்கலைக் கழகம் முதல் முறையாக அமெரிக்கரல்லாத ஒருவருக்கு - அண்ணாவுக்குச் - சப் ஃபெல்லோஷிப் வழங்கிச் சிறப்படைந்தது. திரும்பி வரும் போது ஜப்பானில் சேலம் இரும்பாலை பற்றியும் அண்ணா பேச்சு நடத்தி விட்டு வந்தார்.
14.4.68ல் பெரியார் அறிவிப்புக்கிணங்க, சென்னையில் பெரியார் திடலில், டெல்லி ஆதிக்கக் கண்டனநாள் பொதுக் கூட்டத்தில் பெரியார் முழங்கினார். "தமிழர் மான வாழ்வுக்காக சுதந்திரத் தமிழ்நாடு பெற்றே தீருவோம். 3,500 கிலோ மீட்டர் தூரத்துக்கு<noinclude></noinclude>
trhvz9b9b3oykbgsa23rzlgz89gubxw
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/201
250
452381
1433716
2022-07-21T09:28:04Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞா கருணானந்தம்
200 1948-செப்டம்பர் 11-ஆம் நாள் ஜின்னா மறைவு குறித்துப் பெரியார் பெரிதும் மனம் வருந்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்தி எதிர்ப்பு மறியல் தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால் 14-9-48 அன்று அய்தராபாத்தில் இந்தியப் போலீசு நுழைந்த செய்தி கிடைத்தவுடன், அரசுக்கு இந்த நேரத்தில் தொல்லை தரவேண்டாம் என்ற நன்னோக்கத்தில், தற்காலிக மறியல் நிறுத்தம் செய்தார் பெரியார். ஆனால் 15-9-48 ஒருநாள் மட்டும் எல்லா ஊர்களிலும் அடையாள மறியல் செய்யப் பணித்தார். (அன்று திருவாரூரில் தயாளு அம்மையாரை மணந்த மு. கருணாநிதி மணக்கோலத்திலேயே அடையாள மறியலில் பங்கேற்றார்.) “விடுதலை" பத்திரிகைக்கு 2000 ரூபாய் அரசு கேட்ட ஜாமீள் தொகை பறிமுதல் செய்யப்பட்டு, மேலும் 4000 ரூபாய் கேட்கப்படலாம் என்ற சூழ்நிலையில், கழகத் தோழர்கள், ஈடாகப் பதினைந்தாயிரத்துக்கு மேல் நன்கொடைத் தொகை அனுப்பிப், பெரியாரிடம் தங்களுக்கு உள்ள நம்பிக்கையைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
தூத்துக்குடியில் அண்ணா கலந்து கொள்ளாதது ஒரு குறைதாள். அவரை அப்படியே ஒதுங்கிச் செல்ல விடக்கூடாது என்று பெரியாருக்கு அணுக்கமான சில தோழர்கள் - பி. சண்முக வேலாயுதம், தவமணி இராசன், கருணானந்தம் போன்றோர் - கூறிய யோசனையைப் பெரியார் ஏற்றுக்கொண்டு, அண்ணா தலைமையில் ஈரோட்டில் 19-வது மாகாண திராவிடர் கழகத் தனி (ஸ்பெஷல்) மாநாடு 1948 அக்டோபர் 23, 24 தேதிகளில் ஏற்பாடு செய்துவிட்டார். அண்ணாவையும் பிற தலைவர்களையும் இரட்டை மாட்டுச் சாரட்டு வண்டியில் அமர்த்திப், பெரியார் ஊர்வலத்தில் நடந்தே வந்தது கண் கொள்ளாக் காட்சி! கருப்புச் சட்டைபோட்டு, மேல் துண்டை இடுப்பில் கட்டி, வியர்க்க விறுவிறுக்கத் - தூத்துக்குடித் தொண்டர் படைத் தலைவரான கே.வி.கே. சாமி அதிசயிக்கப் - பெரியார் சிங்க ஏறுபோல் ஈரோடு வீதிகளில் நடைபோட்டார்!
மாநாட்டை எஸ். குருசாமி தொடங்கி வைக்க, சென்னை இந்திராணி பாலசுப்ரமணியம் கொடி உயர்த்தினார். திருவள்ளுவர் படத்தைப் பெரியாரும், திராவிட நாடு படத்தைத் திரு.வி. கல்யாண சுந்தரனாரும், காந்தியார் படத்தைக் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், சிங்கார வேலர் படத்தை என்.வி. நடராசனும், தியாகராயர் படத்தைத் தி.பொ. வேதாசலமும், நாகம்மையார் படத்தை அழகிரியும் (அவருக்கு அதுதான் கடைசி மாநாடு) தாளமுத்து நடராசன் படத்தை ஏ.வி.பி. ஆசைத்தம்பியும், பன்னீர் செல்வம் படத்தை ஏ. சித்தையனும், சுந்தரனார் படத்தை இரா. நெடுஞ் செழியனும், என். அர்ச்சுனன் படத்தை என். அர்ச்சுனன படத்தை
சி....... -
சி.டி. டி. அரசுவும் திறந்து வைக்கனர். (உண்மையில் மாநாட்டில் ஒரு படமும் வைக்கப்பட வில்லை. கற்பனையாய்க் காணவேண்டும் என்று பெரியார்<noinclude></noinclude>
lvwg8bhxc9clht5wvi2phl11n21zoyx
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/202
250
452382
1433717
2022-07-21T09:28:27Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
201
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
கூறிவிட்டார். எப்படி சிக்கனம்?) முதல் நாள் இரவில் கே.கே. நீலமேகம் தலைமையில் எம்.ஆர். ராதா நடித்த மகாத்மா தொண்டன் நாடகம். மறுநாள் இரவில் குஞ்சிதம் குருசாமி தலைமையில் மு.கருணாநிதி நடித்த தூக்குமேடை நாடகம். டி.கே. சீனிவாசன் நன்றி நவின்றார்.
ரேஷன் முறை தீவிரமாக அமுலில் இருந்ததால், மாநாட்டுக் கட்டணத்துடன் உணவுக்கும் சேர்த்து வசூலித்து விட்டனர். பெரியார் எதிர்பார்த்ததை விடப் பன்மடங்கு கூட்டம் பெருகி வழிந்ததால், நேரத்தில் உணவளிக்க முடியவில்லை. தோழர்கள் பெரியார் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, வயிற்று உணவை மறந்து, செவி உணவை அருந்தினர்/ ஈரோடு நகரமன்றம் அண்ணா , திரு.வி.க. இருவர்க்கும் வரவேற்பளித்துச் சிறப்பித்தது.
மீண்டும் அடுத்த திங்களே இந்தி எதிர்ப்பு அறப்போர் தொடங்கிவிட்டது. நவம்பர் 2-ஆம் நாள். கும்பகோணத்தில் 144 தடையுத்தரவு பிறக்கப் பட்டதால், அதை மீற வேண்டிய நிர்ப்பந்தம் நேரிட்டது. தினமும் தோழர்கள் மறியல் செய்தனர். பெரியார் தாமே களத்தில் இறங்கிட முடிவு செய்தார்.
1948 டிசம்பர் 18-ஆம் நாள் குடந்தையில் பெரியார் மறியல் செய்து கைதானார். நள்ளிரவு 2.15 மணிக்கு கும்பகோணத்தில் கைதான பெரியாரை, வேனில் ஏற்றி, முதலில் திருச்சிக்குக் கொண்டு சென்று, மீண்டும் தஞ்சை வந்து, பின்னர் ஐய்யம்பேட்டை ரயில் நிலையத்தில் இறக்கி, சென்னை செல்லும் ரயிலில் ஏற்றி அலைக்கழித்தனர். அத்துடன் பத்தாம் முறையாகப் பெரியார் கைதானபோது - “அடக்கு முறை எங்கே நடந்தாலும், எப்படி இருந்தாலும், அதை முகங் கொடுத்துச் சமாளிக்க வேண்டும். அப்போது தான் நமது மானம் காப்பாற்றப்படும். சமாதானத்துக்குப் பங்கமோ, ஒழுங்குத் தவறோ ஏற்படக் கூடாது"- என்று கண்டிப்பான கட்டளை பிறப்பித்தார் பெரியார்.
ஆனால், ஓமந்தூரார் ஆட்சி மறுநாளே வெறியாட்டத் தொடங்கியது. தடியடியால் குடந்தையில் இரத்த ஆறு ஓடிற்று. போலீஸ் அதிகாரியின் கோர தாண்டவத்தை எடுத்துக் காட்டிடப் போர்த்தளபதி அண்ணா , “ஆதித்தன் கனவு" என்று 'திராவிட நாடு 'இதழில் தீட்டினார். பின்னர் டிசம்பர் 26-ஆம் நாள் முதல் அரசின் போக்கில் அமைதி காணப்பட்டது. தடியடியும் கைதும் நிறுத்தப் பட்டன. எனவே 28-ஆம் நாள் திராவிடர் கழகப் போராட்டக் குழு கூடி, அறப்போரை நிறுத்துவதென முடிவெடுத்தது.
59 நாள் அறப்போர் நடைபெற்றது. இந்த இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்!<noinclude></noinclude>
otkn36ftj6t5gnel0nxd15xsydhja9d
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/206
250
452383
1433718
2022-07-21T09:29:12Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
205
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
13 பிரித்தார்
மணியம்மை திருமணம் - கழகம் பிளந்தது - ஜனவரி 26, 1950 துக்க நாள் - "பொன் மொழிகள்" தண்டனை - வகுப்புரிமைக்குத் தீங்கு - “அரசியல் சட்டம் ஒழிக" - சுரண்டல் தடுப்புப் போர் - 1949 முதல் 1951 முடிய,
திருக்குறள் மூடநம்பிக்கை குறைவாக உள்ள பழைய நூல். அதிலுள்ள முதலதிகாரமான கடவுள் வாழ்த்து கூடக் கடவுளுக்கு உருவமோ வடிவமோ கற்பிக்கவில்லை. புராணக் கற்பனைக் கதைகள் அதில் நிறைய இடம் பெற இல்லை. உரையாசிரியர்கள் வேண்டு மானால் பிற்காலத்தில் ஆரியக் கருத்துகளைப் புகுத்தியிருக்கலாம். மூல நூலில் வள்ளுவர் அறிவுக்குப் பொருத்தமாகவே எழுதி உள்ளார். அவர் தமிழனாக இருந்து விட்டதால், அதிலும் அவர் நூல் காலங்கடந்து, சிறப்புடன் பல தடைகளையும் தாண்டி, மங்காப் புகழுடன் விளங்குவதால், அந்த நூலாசிரியர் பார்ப்பானுக்குப் பிறந்தார் என்றும், கதை கட்டிவிட்டார்கள். ஆரிய நச்சுக் கருத்துகளுக்குப் பெரிதும் இடந்தராமல், வள்ளுவர் உயர்ந்து நிற்கிறார். எனினும் வள்ளுவர் குறளைப் புலவர்கள் - பண்டிதர்கள் - தமக்குள் அடக்கிக் கொண்டார்கள். இராமாயணம், பாரதம், பாகவதம், கீதை இவற்றைப் புறக்கணித்துவிட்டுத் தமிழர் திருக்குறளை ஏந்த வேண்டும். ஆரியப் பிடிப்பிலிருந்து விடுபட வேண்டும் - என்ற, தமது இனவுணர்வின் அடிப்படையில் எழுந்த வேட்கைக்குப், பெரியார் 1949 பொங்கல் திருநாள் வாரத்தில் நல்லதொரு விருந்து கண்டார். சென்னையில், சனவரி 15, 16 நாட்களில் வள்ளுவர் குறள் மாநாடு, பெரியார் நடத்தினார். தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், ச. சோமசுந்தர பாரதியார், திரு.வி.க., ஏ. சக்கரவர்த்தி நயினார் போன்ற தமிழறிஞர்கள் பங்கேற்றுப், பாமரர் கையில் குறளை ஒப்படைக்கச் செய்தார் பெரியார். குடி செய்வார்க்கில்லை பருவம்; மடி செய்து, மானம் கருதக் கெடும் என்ற குறள் பெரியாருக்கு மிகமிகப் பிடித்தமானதாகும். மார்ச்<noinclude></noinclude>
9me55xs6bq36olc751not6ple2ndfqw
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/207
250
452384
1433719
2022-07-21T09:29:34Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
மலாகத்
கவிஞர் கருணானந்தம்
206 12-ஆம் நாள் திருச்சிராப்பள்ளி நகராட்சி மன்றமும், மே 24-ஆம் நாள் திருவரங்கம் நகர்மன்றமும் பெரியாருக்கு வரவேற்பளித்துப் பெருமை ஈட்டின.
பட்டுக்கோட்டை கே.வி. அழகர்சாமி 30 ஆண்டு தமிழ் மக்கள் மேன்மைக்குப் பொதுத் தொண்டாற்றி, மேடைதோறும் கதறிப், பணஞ்சேர்க்கத் தெரியாமலும், கிடைத்ததை ஒழுங்குடன் செலவு செய்யத் தெரியாமலும், உடல் மெலிந்து நலிந்து, 1949 மார்ச் 28-ஆம் நாள் தஞ்சையில் உயிர் நீத்தார். பெரியார் பெருந்துன்ப முற்றார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனைக் கொண்டு தஞ்சையில் மே 29-ஆம் நாள் அழகிரி குடும்ப உதவிக்காக 6000 ரூபாய் நிதி வழங்கச் செய்தார். ஒவ்வோராண்டும் மார்ச் 28-ஆம் நாளை அழகிரி நினைவு நாளாகக் கொண்டாடுமாறும் கழகத் தோழர்களைக் கேட்டுக் கொண்டார்.
1948-ல் ராஜாஜி கவர்னர் ஜெனராலாகச் சென்னை வந்தபோது, கருப்புக்கொடி பிடிக்கத் திட்டமிட்ட பெரியார்; 1949 மே 14-ஆம் நாள் ராஜாஜி திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் பாதாளலிங்கக் குகை திறப்பு விழாவுக்கு வந்தபோது, அங்கே சென்று. ராஜாஜி தங்கியிருந்த ரயில் சலூனில், காலை 6.46 முதல் 7.17 வரை சந்தித்துப் பேசினார். பின்னால் விளைந்த சில நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, பெரியார், அவரிடம் ஆலோசனை பெற்றதாக ஓர் எண்ணம் கழகத் தோழர்களிடம் நிலவிற்று. அது உண்மையன்று.
ஓமந்தூர் ரெட்டியாரைப் பெரியார் பாராட்டுகிறார் என்று ராஜாஜியிடம் கோள் மூட்டிய காங்கிரஸ்காரரிடம், "அதுதான் நல்லது! அவர் ஒருவரையாவது நாயக்கர் பாராட்டுகிறாரே! அவருக்கு இடைஞ்சல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்"- என்று அறிவுரை கூறினார். ஆயினும் அது எடுபடாமல், போட்டி ஏற்பட்டு, ஓமந்தூரார் விலகிட, குமாரசாமி ராஜா சென்னை மாகாண முதல் மந்திரியாகப் பொறுப்பேற்றார். மூன்றாண்டுகளுக்கு இவரே நீடித்தார். எப்படியும் ஒரு பார்ப்பனர் வரமுடியவில்லை என்பதால் பெரியார் மகிழ்வு பூண்டார்.
"நம் நாட்டிலுள்ள பார்ப்பனர்களாகிய ஆரியர்கள் ஜெர்மானிய நாட்டு யூதர்களைப் போலத்தான் இருக்கிறார்கள். அவர்களை விரட்டியடிக்க என்னென்ன காரணங்கள் கூறப்படுகின்றனவோ அதே காரணங்கள் இங்குள்ள ஆரியர்களுக்கும் நாம் கூறமுடியும். இந்த நாட்டில் உள்ள ஆங்கிலோ இந்தியர்களைப்போல், நம்மையே கேவலமாக எண்ணிக்கொண்டு, இவர்கள் இங்கே வாழ்கிறார்கள். எனவே இவர்களை வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று பெரியார் விளக்கந்தந்தார்.<noinclude></noinclude>
suhoxue1esvfs7mbb3oim4t573rlptr
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/208
250
452385
1433720
2022-07-21T09:29:58Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
207)
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
கஷ்டப்படும் மக்களின் துன்பத்தை நீக்கி, அவர்கள் அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவற்றை அடைவதற்குள்ள தடைகளை உடைத்து, விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பது தவிரக், கடவுள், மதம் இவைகளைப் பற்றித் தமக்குச் சிறிதும் கவலை யில்லை என்றார் பெரியார். விஞ்ஞான ஆராய்ச்சி வளராத காலத்தில் அறிவுக்கு எட்டாத விஷயங்களைக் கடவுள் செயல் என்று மனிதன் நம்பினான். கடவுள் இல்லை என்று நாத்திகராகிய நாம் கூற முடிகிறதே, இது எப்படி? மதம், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் தரகர்களை ஏற்படுத்தத்தான் உதவிற்று மனிதனுக்குத் தானே சிந்தித்துச் செயல்படும் பகுத்தறிவு மிகுதியாக இருக்கும் போது, ஏன் கடவுள் என்பதாக ஒன்று தேவைப்படுகிறது? ஆத்மாமீது நம்பிக்கை போனால் கடவுள் நம்பிக்கையும் தானாகவே போய் விடுமே! கடவுளை நம்புகிறவர்களைவிட நம்பாதவர்கள் எந்த வகையில் தாழ்ந்தவர்கள்? - என்று இப்படிப்பட்ட உயர்ந்த வகையான பிரகிருதிவாதம், தத்துவ விளக்கங்களையெல்லாம் மிகச் சாதாரணப் படிப்புள்ள படிப்பில்லாத- பாமர மக்களுக்கும் விளங்குமாறு பெரியார் எடுத்து வைத்து உதாரணங்களுடன் உரைத்து வந்தார்.
கோவை மாவட்ட ஏழாவது திராவிடர் கழக மாநாடு 1949 மே 28-ஆம் நாள் கோயமுத்தூரில் நடைபெற்றது. தி. பொ. வேதாசலம் தலைமையில், அண்ணா திறந்து வைக்க, மூவலூர் இராமாமிர்தத் தம்மையார் கொடி உயர்த்தினார். கடந்த ஆண்டு அக்டோபரில், ஈரோடு மாநாட்டில், அண்ணாவிடம் பெட்டிச் சாவி தரப் போவதாகக் கூறினீர்களளே! அப்படியிருக்க, அவருக்கும் தெரியாமல் திருவண்ணா மலையில் ஆச்சாரியாரைச் சந்தித்த மர்மம் என்ன? அங்கு பேசிய ரகசியம் என்ன?" என்று பெரியாரை ஜி.டி. நாயுடு வினவினார். ஆனால் பெரியார் அங்கு எந்த விவரத்தையும் கூற விரும்பவில்லை . ஐயமும், திகைப்பும், ஆத்திரமும் பலருடைய முகங்களில் பிரதி பலித்தன; பலனேதுமில்லை !
ஓமந்தூராருக்குத் தாம் இளைத்தவரில்லை எனக் குமாரசாமி ராஜா காட்டிக் கொண்டார். “திராவிட நாடு" இதழுக்கு ஜாமீனாக மூவாயிரம் ரூபாய் 3.6.49 அன்றும், "விடுதலை"ஏட்டுக்கு ஜாமீனாகப் பத்தாயிரம் ரூபாய் 18.6.49 அன்றும், "குடி அரசு" இதழுக்கு ஜாமீனாக மூவாயிரம் ரூபாய் 2.7.49 அன்றும், கேட்கப்பட்டன!
இயக்கத்தைத் தொடர்ந்து நடத்திடத் தமக்கு நம்பிக்கை யுள்ளவராக ஒரு வாரிசு வேண்டுமென்றும், சொத்துப் பாதுகாப்புக்கும் ஏற்பாடு ஒன்று செய்யப்பட வேண்டும் என்றும், பெரியார் கூறிவந்ததற் கிணங்க, 1949 ஜூன் 9-ஆம் நாள் சென்னை தியாகராய நகர் செ.தெ. நாயகம் இல்லத்தில் மணியம்மையைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தைத் தடுத்து நிறுத்திட கே.கே. நீலமேகம், என்.<noinclude></noinclude>
c0o74ra34f6b2hs5ihot14fkp9zyynd
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/209
250
452386
1433721
2022-07-21T09:30:23Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
208
வி. நடராசன், எஸ். குருசாமி, வேலூர் திருநாவுக்கரசு போபர் முயன்று பார்த்தனர். பெரியார் இணங்கவில்லை. அண்ணா இதைக் கேள்வியுற்றுக் காஞ்சியில் போய்ப் படுத்து விட்டார். தீவிரவாதிகள் சிலர் இயக்கச் சொத்துகளைக் கைப்பற்றுவோம் என்றனர். சுமார் இரண்டு வாரம் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த தோழர்கள், அவரவர் விருப்பத்திற்கேற்ப இரு கூறுகளாகப் பிரிந்தனர். பெரியார் செய்தது சரியே என்று கைவல்ய சாமியார் எழுதினார். சண்முக வேலாயுதம், தி.பொ. வேதாசலம் ஆகியோர் பெரியார் முடிவைப் பாராட்டினர். இதற்கிடையில் யாரோ குறும்பு செய்து, பெரியார், தாம் திருமணம் புரிந்த செயலுக்கு வருந்துவது போல, அவர் கைழுெத்திட்ட வெறுந்தாளின் மேற்புறத்தில், ஓர் அறிக்கை தயாரித்து, வருத்தமும் விஞ்ஞாபனமும் என்ற தலைப்பில், 28-7-49 "விடுதலை" நாளேட்டிலேயே வெளிவரச் செய்தனர். இது 30.7.49 "குடி அரசு" இதழிலும் மறுபதிப்புப் பெற்றது. அண்ணா , அன்பழகன், கருணாநிதி ஆகியோரது நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டு, அவர்கள் பெயர் "விடுதலை"யில் வரக்கூடாது என்று பெரியார் கூறியும், அது நிறைவேறவில்லை . "விடுதலை" அலுவலகத்தில் சம்பத், கணேசன், அரங்கண்ணல், கோலிந்தசாமி ஆகியோர்மீது பெரியாரின் சந்தேகம் படர்ந்தது. தம்மைக்கொல்ல யாரோ சதி செய்கிறார்கள். சம்பத்தும் சூதனாகி விட்டான் - என்று பெரியார் 13.7.49 "விடுதலை"யில் எழுதினார். பெரியார்மீது அண்ணாவும் சம்பத்தும் வழக்குத் தொடுத்தபோது, பெரியார் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டதால், வழக்கைத் திரும்பப் பெற்றனர்.
இராம. அரங்கண்ணல் 1946-ல் திருத்துறைப்பூண்டியில் திராவிட மாணவர் மாநாடும், முதலாவது கருப்புச் சட்டை மாநாடும் நடத்தியவர்களில் ஒருவர். "விடுதலை", "குடி அரசு “இதழ்களில் சில காலம் பணியாற்றிப் பின்னர் காஞ்சியில் 'திராவிட நாடு" அலுவலகத்திலிருந்தார். 1962, 1967-ல் மயிலாப்பூர், 1971-ல் எழும்பூர் தொகுதிகளின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். கலைஞர் ஆட்சியில் குடிசை மாற்று வாரியத் தலைவராக அரும்பணி புரிந்தவர். இன்று அ.இ.அ.தி.மு.க. கழகத்தில் உள்ளார். திருவாரூரில் கலைஞர், தென்னன், பி.எஸ். இளங்கோ , மா.செங்குட்டுவன் ஆகியோர் இவருக்குப் பள்ளித் தோழர்கள்,
பெரியார் மணியம்மை திருமணச் செய்தி வெளியானதும் அண்ணா தந்த அறிக்கையும், பின்னர் திருமணம் ஆனவுடன் தந்த அறிக்கையும் முக்கியமானவை. 3.7.49 அன்று வெளியிடப்பட்டது. பெரியார் மணியம்மை திருமணத்தை இனித் தடுத்து நிறுத்திட முடியாது என்பது உறுதியாகிவிட்ட பின்னர் சென்ற கண்டு நாம் பெரியாரின் 77-வது பிறந்தநாள் கொண்டாடினோம். இந்த<noinclude></noinclude>
rhe795mm2itpixaezaywbc18kqglc1x
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/210
250
452387
1433722
2022-07-21T09:30:44Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
2091
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
ஆண்டு அவர் தமது திருமண வைபவத்தைக் காணும்படி அழைக்கிறார்; இல்லை , அறிவிக்கிறார்... ஐந்தாறு ஆண்டுகளாகப் பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டிலே கள்ளை ஒப்படைத்துக் கொண்டிருந்த மணியம்மையாரைத் தான் பெரியார் பதிவுத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். பெரியாருக்கு வயது 72. மணியம்மையாருக்கு வயது 24.
இதனால் நமக்குக் கோபம், கொதிப்பு ஏற்படலாம் என்று தமது 28.6. 1949 "விடுதலை" அறிக்கையில் பெரியாரே குறிப்பிடுகிறார். அவை மட்டுமா? இந்தச் சேதியாலே ஏற்பட்ட கண்ணீர்! இந்தக் கண்ணீரை அவர் எதிர்பார்த்திருப்பாரா, அல்லது மதிப்பாரா என்பது ஒருபுற மிருக்க, எதற்கும் கலங்கா உள்ளம் படைத்த இளைஞர்கள் இந்தச் சேதிகேட்டுக் கண்ணீர் வடிப்பது போல் வேறு எப்போதும் நடைபெற்ற தில்லை. உலகச் சம்பவங்களிலேயே இதற்கு இணையானதாக வேறு ஒன்றைக் காட்டவும் முடியாது.
நாம் பெரியாரை அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. குடும்பத் தலைவராக வாழ்வுக்கு வழிகாட்டி யென, மானத்தை மீட்டுத் தரும் மகான் என, அடிமை ஒழிக்கும் வீரரென மரியாதையுடனும் அன்புடனும் பேணி வந்தோம். பொருந்தாத் திருமணம் நாட்டுக்கோர் சாபக்கேடு என அவர் ஆயிரமாயிரம் மேடைகளில் முழங்கினார். இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர் தமது 72-ம் வயதில் 26 வயதுள்ள பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால் கண்ணீரைத் காணிக்கையாகத் தருவதைத் தவிர வேறென்ன நிலைமை இருக்கும்.
பொருந்தாத் திருமணம்; புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்! பல நெடிக்கடிகள் ஆபத்துகள் பார்த்திருக்கிறோம். இந்தப் பேரிடியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை; எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்பட வேண்டும்? நாங்கள் செய்த தவறுதான் என்ன? இந்தத் தகாத காரியத்தைத் தாங்கள் செய்து. எங்கள் தன்மானத்தை அறுத்தெறிவது ஏன்? எப்படித் தாங்குவோம் இந்த இழிவை? எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும் இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதோ
"பெரியாரே இப்படி ஒரு பொருந்தாத் திருமணம் செய்து கொள்கிறீர்களே, இது சரியா?" என்று கேட்கிறோம். "போடா போ! நான் திருமணம் மட்டுமா செய்து கொள்ளப் போகிறேன். இயக்கத்தையே மணியம்மையிடம்தான் ஒப்படைக்கப் போகிறேன் என்று கூறுகிறார் அறிக்கையில். நடைபெறப் போவது பொருந்தாத் திருமணம் மட்டுமல்ல; புதிய மகுடாபிஷேகம். ஒரு தவறு இன்னொரு தவறுக்குக் காரணமாகக் காட்டப்படுகிறது. பொருந்தாத்<noinclude></noinclude>
3h1gqsyzf6t1v13v0apjbdyy8xxfgpg
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/211
250
452388
1433723
2022-07-21T09:31:19Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
210
பரமே
திருமணத்தால் ஏற்படும் இழிவையும் பழியையும் நாம் தாங்கிக் கொள்வது மட்டுமல்ல, இந்தத் தகாத முறையினால் தலைவி ஆகப்போகும் மணியம்மையின் கீழிருந்து நாம் எதிர்காலத்தில் பணியாற்றவும் தயாராக வேண்டும். “என் ஆயுள் வரையும், கூடுமான வரை எள் ஆயுளுக்குப் பின்னும், ஒழுங்காக இயக்கத்தை நடத்தும் தகுதி இந்த மணியம்மைக்கு உண்டு” என்று கூறிவிட்டாரோ
ஓர் இயக்கத்துக்கு வாரிசு முறை எதற்கு? ஜனநாயக முறைக்கு ஏற்றதுதானா? நடைமுறையிலே வெற்றி தரக் கூடியதுதானா? "இயக்கத்திலே உள்ள எவரிடமும் எனக்கு நம்பிக்கையில்லை. என் நம்பிக்கைக்கு உரியவர்களாக யாரும் தென்படவில்லை. இயக்கத்தை நடத்திச் செல்லும் தகுதியும் திறமையும் வேறு யாருக்கும் இருப்பதாக நான் எண்ணவில்லை" என்கிறார். ஏதோ கோபத்தால் பேசுகிறார் என்றெண்ணிச் சும்மா இருந்து வந்தோம். இயக்கத்திலுள்ள யாராவது துரோகி, கேடு நினைப்பவன் என்று நிரூபிக்க முடியுமானால், விரட்டி விடலாமே!
நம்மை நம்பாதவரை இனி நாம் எப்படி நம்புவது? "உன்னிடம் நம்பிக்கை அற்றவரிடம் இராதே! அவர் தலைமையில் பணியாற்றாதே! ஓடு ஓடும் என்று விரட்டுகிறதே அவர் அறிக்கை! பொருந்தாத் திருமணம் என்று கேள்வியுற்றும் வெட்கப்பட்டோம். இதற்குப் பெரியாரின் அறிக்கை, நமக்கு வேதனையும் ஊட்டுகிறது. இதோ, விரட்டப்படுகிறோம்! தந்தை மக்களை விரட்டியடிக்கிறார். வீட்டை விட்டு வெளியேறுகிறோம்?"
அண்ணா என்ன எழுதினால் என்ன? எப்படிக் கண்ணீர் சிந்தினால் என்ன? தத்தம் குடும்பத்தோடு பெரியாருக்குத் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட பெரு மக்கள் தமிழகத்தில் நிறையப் பேர் இருந்தனர். நிலக்கிழார்களாகவும், வணிகர்களாகவும் வசதி படைத்தவர்களாகவும் பலர் சுய மரியாதை இயக்கத்தில் பெரியாருக்காக மட்டுமே எதையும் செய்யச் சித்தமாயிருந்தனர். அப்படிப்பட்டோர் மீண்டும் பெரியார்பால் தங்கள் விசுவாசத்தைப் புதுப்பித்துக் கொண்டு, முன்பைவிட ஆழமாகப் பற்றுதல் காட்டத் தொடங்கினர்,
நீடாமங்கலம் அ. ஆறுமுகம், பெண்ணாகரம் எம்.என். நஞ்சையா, திருச்சி டி.டி. வீரப்பா, குடந்தை டி.மாரிமுத்து, பட்டுக் கோட்டை ரத்தினசாமி சகோதரர்கள், சொரக்குடி வாசுதேவன், திருச்சி பிரான்சிஸ், சேலம் குகை கே.ஜெகதீசன், ரொ.சு. அருணாசலம், குனியமுத்தூர் (கோவை) சதாசிவம், மதுரை பழனிவேலு, நெல்லை தியாகராஜன், கன்னியாகுமரி வழக்கறிஞர் கிருஷ்ணன், சிவகங்கை வழக்கறிஞர் இரா. சண்முகநாதன், காரைக்குடி என்.ஆர். சாமி, சிதம்பரம் கு.கிருஷ்ணசாமி, பண்ணுருட்டி நடேசன், திருப்பத்தூர்<noinclude></noinclude>
06xsy0p9oe7l9pyg0sr4veo99yz7ice
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/212
250
452389
1433724
2022-07-21T09:31:40Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
211
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஏ.டி. கோபால், ஆம்பூர் பெருமாள், திருவத்திபுரம் வேல். சோமசுந்தரம், காஞ்சிபுரம், சி.பி. இராஜமாணிக்கம், சென்னை எஸ்.பி. தட்சணாமூர்த்தி, பலராமன், மு.பொ, வீரன், வில்லிவாக்கம் தியாகராஜன், சி.டி.டி. அரசு, பெங்களூர் நாராயணசாமி, கொடையரசன், டி.டி. அரசு, ஜனகம்மாள்... என்று இந்தப் பட்டியல் மிக நீண்டு கொண்டே போகும். உயிருள்ளவரை பெரியாரிடம் காட்டிய அன்பில் இம்மியும் குன்றாத சான்றாண்மையாளர்கள் இவர்கள்.
இவர்கள் மீது வைத்த அசையா நம்பிக்கையினால்தான் பெரியார், அண்ணாவும் பிறரும் சென்றதை வெகுவாகப் பொருட்படுத்தாமல் தன் பயணத்தைத் தொடர்ந்தார்! கட்டுப்பாடு காப்பாற்றாதவர்களைத் தனியே பிரித்தார் பெரியார், என்றும் சிலர் கருதினர்.
"திராவிடநாடு" பெரியாரின் செயலுக்கு வருந்துவோர் பட்டியலை 24.7.49 இதழிலிருந்து, கண்ணீர்த்துளிகள் என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அண்ணாவின் அணியிலும் 'எண்ணிக்கை பெருகியது.
குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைத்த காங்கிரஸ் ஆட்சி, - ஏராளமான கழக நூல்களைத் தடைசெய்தது: நாடகங்களுக்குத்
தடைகள் விதிக்கப்பட்டன. அண்ணாவின் இலட்சிய வரலாறு என்ற - நூல் தடை விதிக்கப்பட்டுப் பறிமுதலும் செய்யப்பட்டது.
10.9.49 "குடி அரசு" இதழில் ஈ.வெ.ரா. மணியம்மை என்று - சட்டப்படிப் பெயர் திருத்தப்பட்ட செய்தி அறிக்கையாக வெளிவந்தது. திருச்சி மாவட்டத் திராவிடர் கழகம், புவனகிரி, நாகை இப்படிப் பல கழகங்கள் பெரியார் பக்கம் இருப்பதைக் காட்டிக் கொண்டன. 5.11.49 அன்று பெரியார், துரோகப்படலம் என்ற தலைப்பில், அண்ணாமீது குற்றச் சாட்டுகளைச் சுமத்திக் கழக நிதி வசூலுக்கு எதிராகப் பாரதிதாசனுக்கு நிதி வசூலித்தது போன்ற பல சம்பவங்களை நினைவு கூர்ந்தார். குடம் குடமாய்க் கண்ணீர் துளிகளை இப்போது சிந்து கிறார்களே - என்றார். தம் நிலையைத் தெளிவுபடுத்த, அண்ணா , டி.எம். பார்த்தசாரதியைக் கொண்டு, “மாலைமணி" நாளேடு, 10.8.49 முதல் துவக்கினார். சென்னையில் செப்படம்பர் 17-ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கினார். ஆலமரத்துக்கு விழுது போல், திராவிடர் கழகத்துக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் விளங்கு மென்றார்.
உடுமலைப்பேட்டையில் 1949 ஏப்ரல் 16-ஆம் நாள் 144 தடையுத்தரவைப் பெரியார் மீறியதாக, அரசு ஒரு வழக்குப் போட்டது. பலமுறை பெரியாரை வரச்சொல்லி, நீதிமன்றம் வழக்கை ஒத்திப் போட்டுக், கடைசியில் 2.8.49 அன்று அந்த வழக்கை, அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. அதாவது, கழகம் பிளவுபடுமுன்னர்<noinclude></noinclude>
azflwjs8u6mmcpfcedggoeevntjy065
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/213
250
452390
1433726
2022-07-21T09:35:38Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
212
தொடரப்பட்ட வழக்கு: பிளந்தபின் முடிந்தது! அதில் பெரியாருடன் வழக்கில் சம்பந்தப்பட்ட உடுமலை நாராயணன், பின்னாளில் தி.மு.க. மாவட்டச் செயலாளரானார். மதியழகனும் தி.மு.க. ஆனார்.
சரியான பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்ல என்று பெரியாரால் துவக்க முதலே எதிர்க்கப்பட்டு வந்த அரசியல் நிர்ணய சபை சுமார் மூன்றாண்டுகள் கூடி, இந்திய அரசியல் சட்டத்தை, 1949 நவம்பர் 26-ஆம் நாள் ஒருவாறாகச் செய்து முடித்திருந்தது. அது அடுத்த ஆண்டு சனவரி 26-ஆம் நாள் அமுலுக்கு வருமென அறிவிக்கப்பட்டது!
"சமஸ்கிருதமாகிய வடமொழி மூலமாக ஆரியக்கலாச்சாரம் தமிழ் நாட்டில் முன்னரே புகுத்தப்பட்டது. திராவிட மக்கள் ஆரியச் சூதினை நல்ல வண்ணம் உணர்ந்து கொண்டார்கள். எனவே வெள்ளையன் வடவரிடம் பேரம் பேசி நம்மை விற்றுவிட்டுப் போய் விட்டதால், இப்போது அரசியலின் பேரால், இந்தி தேசிய மொழி என்ற போர்வையில், மீண்டும் ஆரியக் கலாச்சாரமே நம் மீது திணிக்கப்படுகிறது. இந்தி தேசிய மொழி என்பதையே நாம் மறுக்கிறோம். கட்டாயமில்லை என்பது மாய்மால வார்த்தை.
நாம் நம்பமாட்டோம். எனவே 1950 சனவரி 10-ஆம் நாள் இந்தி எதிர்ப்பு . நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்" என்று சென்னையில் பெரியார் முழங்கினார். அத்துடன், வரவிருக்கும் சனவரி 26-ஆம் நாள் குடியரசு தினமும், நமக்குத் துக்க நாளே என்றும் அறிக்கை விட்டார்.
"புதிய குடி அரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்படுவதால், இராசகோபாலாச்சாரி தமது கவர்னர் ஜெனரல் பதவியை முடித்துக்கொண்டு தென்னாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவது நமக்கு வெற்றிதான். பார்ப்பனரானாலும் கூடத் தென்னாட்டுக்காரர் தேவையில்லை வடநாட்டார்க்கு, என நிரூபிக்கப் படுகிறதல்லவா? மேலும், விரைவில் சுமையை இறக்கி வைத்து விட்டு இங்கே வந்து விடுவதாக ஆச்சாரியார் முன்பே கூறிச் சென்றாராம். வந்தபின் நமக்குப் பயன்படுகிறாரா பார்க்கலாம்! ஏனென்றால் பார்ப்பனர் நமக்கு அந்நியரல்லவே " என்றார் பெரியார். சிதம்பரத்தில் பேசும்போது. நாம் சுயமரியாதைக் கொள்கைகளில் ஒன்றைக் கூடக் கைவிடவில்லை. நீதிக்கட்சியின் கொள்கைகள் தாம் சில நமது சு.ம. இயக்கக் கொள்கைகளோடு இணைந்துள்ளன! திராவிட நாட்டின் எல்லை இப்போதுள்ள சென்னை மாகாணத்தோடு நின்று விடாது; மேலும் வடக்கு நோக்கி வளரும். இத்தோடு அடங்காது!- என்றும் பெரியார் சொன்னார்.
சனவரி இறுதி வாரத்தில் சென்னையின் பல பகுதிகளில் பெரியார் சொற்பொழிவாற்றினார். ஆரிய-திராவிடப் போராட்டம்<noinclude></noinclude>
0vu5asifl7390e93zxhbbze7v9ylk57
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/214
250
452391
1433727
2022-07-21T09:35:58Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
213
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
நீண்ட காலமாக நடக்கிறது. ஆரியக் கலாச்சாரத்தைப் பவுத்தர்கள் முயன்றும் அழிக்க முடியவில்லை ; மொகலாயர் முயன்றும் முடிய வில்லை; இந்தக் கழகத்தாரால்தானா முடியப் போகிறது? என்று மமதையுடன் ஆரியம் மார் தட்டுகிறது! இளைஞர்கள் எழுச்சியினால் கழகம் கட்டாயம் செய்து காட்டும் என்றார். மேலும், குடி அரசு நாள் பற்றிப் பேசுகையில், இது வெள்ளையனுக்கு லஞ்சம் கொடுத்து, அவன் சுரண்டலுக்கு நிரந்தர வசதி செய்து கொடுத்துத், தங்கள் பேருக்கு மாற்றிக் கொள்ளப்பட்ட மேடோவர் ஆட்சிதான் - என்றும் குறிப்பிட்டார் பெரியார்.
கான்பூரில் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டுக்குப் பெரியார் அழைக்கப்பட்டிருந்தார். உடல் நிலை இடந்தராததால் செல்ல இயலவில்லை . அன்று 29.1.50-ல் கடலூரில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, சனவரி 26, தடியாட்சி நாள் என்பதுதான் உண்மை , என்பதாக ஆதாரங்களுடன் விளக்கினார்.
1950 பிப்ரவரி 4-ஆம் நாள் பெரியாரின் தமையனார் ஈ. வெ. கிருஷ்ணசாமி - வைத்திய வள்ளல் - தமது 74-ஆவது வயதில் காலமானார். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனுதாபக் கூட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு, அவர் தமது தமையனார் என்பதற்காகவோ, செல்வந்தர் என்பதற்காகவோ அல்லாமல்; தமக்கென வாழாமல் சித்த மருத்துவம் இலவசமாகத் தினம் 100, 150 பேருக்குக் குறையாமல் செய்தும், பொதுத் தொண்டில் ஈடுபட்டும், வாழ்ந்து வந்ததால்தான். இன்று பலராலும் பாராட்டப்படுகிறார் என்பதைச் சுட்டிக் காட்டினார் பெரியார். பம்பாய் சென்று 11, 12 தேதிகளில் அங்கு திராவிடர் கழக இரண்டாவது மாநாட்டில் பெரியார் கலந்து கொண்டார்.
இச்சமயத்தில் கம்யூனிஸ்டுக் கட்சியினை அடக்கி ஒடுக்கிட அரசு மிகத் தீவிர நடவடிக்கையில் இறங்கியிருந்தது. முக்கிய மானவர்கள் தலைமறைவானதால், கிடைத்தவர்களைச் சிறையி லடைத்துச் சித்திரவதை செய்தனர்; பலரை வேட்டையாடி ஒழித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயத் தோழர்கள் மிகக் கடுமையான அடக்கு முறைக்கு ஆளாயினர். “தஞ்சை மாவட்டத்தில் தடியடி ஆட்சி" என்று பெரியார் “விடுதலை"யில் ஒரு தலையங்கமே எழுதினார். மேலும், தமிழகத்தையே உலுக்கி விட்ட கொலை வெறியாட்டம் அரசுக்கு மிகுந்த அவப்பெயரைத் தேடித் தந்தது. அதாவது, சேலம் மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்டுக் கைதிகளை, உள்ளே வைத்தவாறே. 15.2.50 அன்று, போலீசார் துப்பாக்கியால் சுட்டு, 22 பேர் மரணமடையவும், 100 பேர் படுகாயமடையவும் நேரிட்டது. மார்ச் 5-ஆம் நாளன்று இதற்குத் திராவிடர் கழகம் கண்டன நாள் கொண்டாடுமாறு பெரியார் கேட்டுக் கொண்டார்.<noinclude></noinclude>
hpwp1lspa929l3iptb6o94royoacgb4
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/215
250
452392
1433728
2022-07-21T09:36:24Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
கவிஞர் கருணானந்தம்
214
"விடுதலை" ஏட்டின் மீது தொடரப்பட்ட வழக்கில், 9.3.50 அன்று வாதம் தொடங்கி, 24ந் தேதி பாதகமான தீர்ப்பு வழங்கப் பட்டது! ஒவ்வொரு மாதமும் 10-ந்தேதி இந்தி எதிர்ப்பு நாள் கொண்டாடி,, இன்னும் கட்டாய இந்தி ரத்து செய்யப்படாததைப் பெரியார் நினைவூட்டி வந்தார். கடைசியில் 18-ந்தேதி, கட்டாய இந்தித் தொல்லை ஒழிந்தது என்று 1950 ஜூலை 20-ம்நாள் "விடுதலை"யில் பெரியார் தலையங்கம் எழுதி மகிழ்ந்தார்.
மார்ச் 18, 19 நாட்களில் சென்னை மாவட்ட திராவிடர் கழக 15-ஆவது மாநாடு சென்னையில் நடைபெற்றது. பெரியாருடன் தி.பொ. வேதாசலம், ஏ.பி. சனார்த்தனம், எஸ். குருசாமி, சி.இலக்குவனார், எம்.ஆர். ராதா, திருவாரூர் தங்கராசு ஆகியோர் பங்கு பெற்றனர். ஏப்ரல், மே மாதங்களில் பெரியார் தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று, கட்டாய இந்தி, திராவிட நாட்டுப் பிரிவினை, வகுப்புவாரி உரிமை, காங்கிரசின் கொடுமை ஆகிய பொருள்கள் குறித்து நாட்டு மக்களுக்கு நல்ல வண்ணம் விளக்கி வந்தார். ஜூன் 22-ஆம் நாள் காய்ச்சலால் தாக்குண்டு, திருச்சியில் சில நாள் ஓய்வெடுக்க நேரிட்டது. பிறகு சென்னை சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டார் பெரியார். உடல் சிறிது நலம் பெற்றதும் புறப்பட்டு விட்டார். திருப்பூரில் இந்தி எதிர்ப்பு நாளில் கலந்து கொண்டார் பெரியார். நாம் பொதுவான சங்கதிகளில் மட்டும் காலத்துக்கேற்ற மாறுதல்களை ஒப்புக் கொள்கிறோம்; ஆனால் ஆத்மார்த்த, சமுதாயக் காரியங்களில் இன்னும் காட்டுமிராண்டிக் காலத்தில்தான் இருந்து வருகிறோம் - என்று பெரியார் தக்க மேற்கோளுடன் விரித்துரைத்து வந்தார். இந்த நேரத்தில் பஞ்சாபில் மாஸ்டர் தாராசிங் சீக்கிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு கேட்கத் துவங்கியதைப் பெரியார் வரவேற்று ஆதரித்தார். கவர்னர் ஜெனரல் பதவியிலிருந்து திரும்பி, பென்ஷன் பெற்று வந்த ராஜாஜி, மீண்டும் டெல்லி சென்று, இலாக்கா இல்லாத மந்திரியாக, நேரு மந்திரி சபையில் இணைந்தார்.
பெரியார் பொன் மொழிகள் என்ற நூல் ஆட்சேபகரமானது என்று மார்ச் மாதம் பெரியார் மீது தொடரப்பட்ட வழக்கு, 10 முறை ஒத்திப் போடப்பட்டு வந்தது. 22.7.50 அன்று கடைசியாக வாய்தா தந்தார்கள். அரசியலில் தமக்கு நாட்டம் எப்போதுமில்லை , சமுதாய இழிவு ஒழிப்பே முக்கியம் என்பதை அன்று ஈரோட்டில் பெரியார் வலயறுத்தினார். அரசின் சில துறைகளில் கட்டாயம் கதர் உடைகள் வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவை மாற்றிக் கைத்தறி உடைகளோ, மில்துணி உடைகளோ வழங்கலாம் என்ற நிலையைப் பெரியார் வரவேற்றார்.
சென்னை மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் பார்ப்ப னர் 2.7 சதவீதம் பேர்தான். ஆனால், 1949-50-ஆம் கல்வி<noinclude></noinclude>
dlkilwsmbonwdcykaxvqpdgm4x8y4ju
பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/216
250
452393
1433729
2022-07-21T09:36:45Z
Neyakkoo
7836
வருடல்
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>________________
215)
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஆண்டில் உயர்நிலைக் கல்லூரிக் கல்வியில் அவர்கள் எத்தனை சதவீதம் பெற்றிருந்தார்கள்? இண்டர்மீடியட் 33.சி சதவீதம்; பிஏ., பி.காம். 33.6 சதவீதம்; பி.எஸ்.சி. 46.6 சதவீதம்; பி.ஏ. ஆனாஸ் 18.5 சதவீதம். கல்வித் துறையிலும் உத்தியோகத் துறையிலும் (இங்குள்ள மத்திய சர்க்கார் அலுவலகங்களில் உட்பட) மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாசாரப்படி இவை மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றுதானே பெரியார் தமது அரசியல் வாழ்வு துவங்கிய நாள் முதல் போராடி வருகிறார்! திராவிடரின் உரிமைச் சாசனமான இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவைச் செல்லாமல் செய்திட ஆரியம் கச்சை கட்டி இறங்கிவிட்டது. 1950-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவக் கல்லூரியிலும், பொறியியற் கல்லூரிகளிலும் இடங் கிடைக்கப் பெறாத இரு மாணவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தொடுத்தனர். சென்னை மாகாண அரசு நடைமுறைப்படுத்தி வரும் வகுப்பு வாரி இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சட்டத்துக்கே முரணானது என 28.7.1950 அன்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. ஆலமரத்தின் ஆணிவேரில் வீழ்ந்த அரிவாள் வெட்டாக இது தோன்றியது. சென்னை மாகாண அரசு டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அரசுக்கு எதிராக, அந்த மாணவர்களைப் பாதுகாத்திட முனைந்து எழுந்து நின்றவர் யார் தெரியுமா? அரசியல் நிர்ணயசபை உறுப்பினரும், இந்திய அரசியல் சட்டத்தைச் செய்திடத் தென்னாட்டின் பிரதி நிதியாகச் சென்றவர்களில் ஒருவருமாகிய சர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வழக்குத் தொடுத்த இரு மாணவரில் ஒருவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் எழுத்து மூலமாகக்கூட மனுதாக்கல் செய்யவில்லை எனினும், அவருக்காக அல்லாடி மல்லாடினார் என்ற கில்லாடி அரசியல் மோசடி பின்னரே வெளியாயிற்று! சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மாத்திரம் எப்படியிருக்கும்? இது அரசியல் சட்த்திற்கு முரணானதுதான் என்றே உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. இதனால் வகுப்பு வாரி உத்தரவை மாகாண அரசு நடைமுறைப் படுத்தக் கூடாது எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது; 1950 செப்டம்பர் திங்களிலேயே
பெரியார் சீறி எழுந்தார். சிங்க ஏறுபோல் கர்ச்சனை புரிந்தார். தமது ஜீவ நாடியே போய்விட்டதாகச் சினந்து பொங்கினார். 1921-ல் உருவாக்கப்பட்டு 1922ஆம் ஆண்டும், 1924-ஆம் ஆண்டும் உறுதி செய்யப்பட்டு, 1929-முதல் அமுலில் இருந்து வந்த பெருஞ்சலுகை ஒரு சிறிய தீர்ப்பின் மூலம் தூள் தூளாவதா? இதன் கர்த்தாவான எஸ். முத்தையா முதலியார் பெரியார் பக்கம் நின்று, அநியாயத்தை எடுத்துரைத்தார். பாதிக்கப்பட்ட சமுதாயமான மாணாக்கர்கள் கல்லூரிகளுக்குச் செல்லாமல் ஊர்வலமாகச் சென்று முழங்கினர். திருச்சியில் “தொண்டு" ஆசிரியர் வீராசாமி துவக்கிய அம்பேத்கர்<noinclude></noinclude>
cojtsn8bbom9vsdnnnjsamc0do0c86y